Wednesday, August 30, 2017

காக்கை சிறகினிலே நந்தலாலா... நிந்தன் கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா - மௌன சாட்சிகள்

மாகாகவி பாரதியார் தன் இறுதிகாலத்தில் வாழ்ந்த திருவல்லிகேணி பாரதியார் இல்லத்தைதான் இந்தவாரம் மௌன சாட்சிகளில் நாம பார்க்கப் போறோம்.  கண்ணன் மேல் தீராத காதல் கொண்ட வீர கவிஞனின் வாழ்ந்த இடத்தில் நிற்கிறோம்ன்ற நினைவே நம்மை இனம்புரியா உணர்ச்சிகள் மனசுல கரைப் புரண்டோடுது.

வீட்டுக்குள் நுழைந்ததும் 
தேடி சோறு நிதம் தின்று
பலசின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம்வாடி துன்பம் மிக உழன்று
பிறர்வாட பல செயல்கள் செய்து
நரைகூடி கிழப் பருவம் எய்தி -
கொடும்கூற்றுக்கு இரையென மாயும்
பலவேடிக்கை மனிதரை போலே
நான்வீழ்வேனென்று நினைத்தாயோ?ன்னு 
பாரதி பாடியது காதோரம் கேட்டது பிரமையா!? இல்ல நிஜமா!? பெண்களின் விடுதலைக்கு அன்றே அஸ்திவாரம் போட்ட முதல் கவிஞன் இந்த பாரதி தான். இந்த பாடல் எழுதப்பட்ட சூழ்நிலையை பத்தி எங்க தமிழ் சார் அழகாக சொல்லுவார். அந்த நாட்களில் பாரதி தன் மனைவி  செல்லம்மாவின் தோளில் கையை போட்டுக்கொண்டுதான் தெருவில் அழைத்துச் செல்வாராம். அப்படி செல்லும்  போதுபெண்களை அடுக்களையில் வைத்து இருந்த அந்த காலத்தில்இப்படி செய்கிறாரே! என ஊரில் உள்ளவர்கள் "பைத்தியங்கள் ஊர் சுற்ற கிளம்பி விட்டன"ன்னு பரிகாசம் செய்வார்களாம். 

அப்படி செய்பவர்களை பார்த்து செல்லம்மாள் வருத்தப்படுவாராம். தன்னால் தானே தன் கணவருக்கு இந்த அவமரியாதை  என. அவளை சமாதானப்படுத்த பாடப்பட்ட பாடல்தானாம்  இது. என்ன அற்புதமான புதுமை சிந்தனையை கொண்டவன் இந்த பாரதி. வாங்க அவருடைய  நினைவு இல்லத்தின் உள்ளே போலாம்.  இங்க ஒரு நூலகமும் இயங்குது .
இந்த வீட்டுல அவரது மார்பளவு உருவச் சிலை ஒண்ணி வைக்கப்பட்டிருக்கு.  மேலும் வீடு புதுப்பிக்கும் வேலைலாம் நடக்குறதால சில இடங்களை மட்டுமே பார்க்கமுடியும்.  அங்க இருபவர்கள் புகைப்படம் ஃபோட்டோ எடுக்க பெர்மிஷன் கொடுக்க தயங்குறாங்க.  அங்க ஒரு தற்காலிக அலுவலகமும் இயங்குது.

நமக்குத் தொழில் கவிதைநாட்டிற்கு உழைத்தல்இமைப்பொழுதும் சோராதிருத்தல் - பாரதி 
இதுதான் அவர் ஃபோட்டோ,  அவர் எழுதிய நூல்கள் அவருடைய வாழ்க்கை வரலாறு அடங்கிய தொகுப்புகள் வைத்திருக்கும் அறைக்கு செல்லும் முகப்பு.  அங்க அவரது கையெழுத்துடன் கூடிய ஒரு போட்டோ இருக்கு. அதுல காம்பீரமா இருக்கிறார் நம் மீசைகவிஞன்

கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன்வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன்அவனே கவி - பாரதி.

இங்கே நிறைய ஃபோட்டோக்கள் இருக்கு. அவர் கையெழுத்துடன் கூடிய போடோஸ் இருக்கு அதில் சில போடோஸ் பத்தி பார்க்கலாம்   
அவரது கையெழுத்துடன் கூடிய ஒரு அகராதி பிரதியுடன் போட்டோ கோப்பி வச்சு இருக்காங்க.


எட்டயப்புரத்தில் சின்னச்சாமி, லட்சுமி அம்மாளுக்கு 11.12.1882 அன்று பிறந்தார். தனோட 14 வது வயதில் 7வயது செல்லம்மாவை மணந்தார். சிறு வயதிலேயே தாய், தந்தையை இழந்து அத்தையின் ஆதரவோடு காசியில் கல்விச் செல்வத்தை பெற்றார்.

தன்னோட 11 வயதில் எட்டயப்புரத்து சமஸ்தானத்துல பெரிய பெரிய புலவர்களால் சோதனைக்குட்பட்ட பாரதி புடம் போட்ட தங்கமாய் வெளி உலகத்திற்கு ஒளி வீசினார்.




இந்த வீட்டின் பழைய புகைபடம் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் திருவல்லிக்கேணியில் வசித்த வீட்டை, தற்பொழுது தமிழக அரசு பராமரித்து வருது. சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதற்காக பிரிட்டிஷ் அரசால் 1908ம் ஆண்டு தேடப்பட்டு வந்தார். அப்ப பாரதியார் புதுச்சேரியில் இருந்தார்.

பின்னர் 1920ம் ஆண்டு,பாரதி சென்னைக்கு வந்து சுதேசமித்திரன் பத்திரிகையில் பணியாற்றினார். அப்போது, திருவல்லிக்கேணியில் ஒரு அறை, மற்றும் சமையலறை கொண்ட சிறிய வீட்டில் தமது மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வந்தார்.
 
தன் வீட்டிலிருந்து தினமும் கோவிலுக்கு சென்று இறைவனை தரிசிப்பது பாரதியின் வழக்கம். அப்படி ஒருநாள் இறைவனை தரிசிக்க செல்லும்போது தினமும் வாழைப்பழம் கொடுத்து தன் அன்புக்கு பாத்திரமான கோவில் யானையால் தூக்கி எறியப்பட்டு சில் நாள் உடல் நலிவாயிருந்து 12.9.1921 அன்று நள்ளிரவு தனது 39 வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.

பாரதியாரின் ஆயுட்காலம் போலவே என்னோட கேமரா ஆயுட்காலமும் (அதாங்க பேட்டரி) சீக்கிரமே முடிஞ்சுட்டுதால, நிறைய புகைப்படங்கள் எடுக்க முடியலை.

காக்கை சிறகினிலே நந்தலாலா
நின்றன் கரிய நிறம் தோனுதையே நந்தலாலா

காக்கை சிறகினிலே நந்தலாலா
நின்றன் கரிய நிறம் தோனுதையே நந்தலாலா

பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா
நின்றன் பச்சைநிறம் தோன்றுதையே நந்தலாலா
பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா
நின்றன் பச்சைநிறம் தோன்றுதையே நந்தலாலா

கேட்க்கும் ஒலியிலெல்லாம் நந்தலாலா
நின்றன் கீதமிசைக்குதடா நந்தலாலா
காக்கை சிறகினிலே நந்தலாலா
நின்றன் கரிய நிறம் தோனுதையே நந்தலாலா

தீக்குள் விரலை வைத்தாய் நந்தலாலா
நின்னை தீண்டுமின்பம் தோன்றுதடா நந்தலாலா
நந்தலாலா நந்தலாலா

நிறைய படங்களோட வேற ஒரு இடத்திலிருந்து மௌனச்சாட்சிகள் பகுதிக்காக சந்திக்கலாம்.கடைசி படம் நெட்டுல சுட்டது.

இது ஒரு மீள் பதிவு....

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1470625


நன்றியுடன்,
ராஜி.

Tuesday, August 29, 2017

சத்தான முருங்கக்கீரை, கேழ்வரகு அடை - கிச்சன் கார்னர்

சிப்ஸ், கேக், பானிப்பூரி, பிஸ்ஸா, பர்கர்,சாக்லேட்ஸ் நான் சின்ன புள்ளையா இருந்தபோதுலாம் இவ்வளவு நொறுக்குத்தீனி இருந்துச்சான்னு தெரியலை. சம்பளத் தினத்தன்னிக்கு இனிப்பும், காரமும் வாங்கி வருவார். எப்பவாவது வீட்டுக்கு வரும் விருந்தாளிங்க இனிப்புலயும் காரத்துலயும் கால் கிலோவும் வாங்கி வருவாங்க. யாருக்காவது கல்யாணம் ஆனா, காராசேவு, மோட்டாசேவு, லட்டு, பாதுசா, ஜாங்கிரி,மிக்சர், அதிரசத்துல நம்ம அதிர்ஷ்டத்துக்கு ஏத்த மாதிரி கிடைக்கும்.

அப்பா கொடுக்கும் கைச்செலவு காசுல பொம்மை பிஸ்கட், தேன் மிட்டாய், கலர் அப்பளம், கொய்யாப்பழம், ஐஸ் இதெல்லாம் வாங்கலாம். எதாவது பண்டிகைன்னா முறுக்கு, தட்டைன்னு அம்மா செஞ்சு  கொடுப்பாங்க.  அது தவிர ஸ்கூல்ல இருந்து வந்ததும் தட்டுல சாதம் போட்டு தருவாங்க. மழை நேரத்துல எதாவது செஞ்சுத் தருவாங்க. அதுல உப்புமா, கோதுமை வடை, கேழ்வரகு அடை, கேழ்வரகு புட்டுன்னு எதாவது இருக்கும்.

நாம சின்ன வயசுல சாப்பிட்ட கேழ்வரகு அடை எப்படி செய்யுறதுன்னு இன்னிக்கு கிச்சன் கார்னர்ல பார்க்கலாம்.

தேவையானப் பொருட்கள்:
கேழ்வரகு மாவு : ஒரு டம்ப்ளர்
முருங்கைக் கீரை - ஒரு இணுக்கு
காய்ஞ்ச மிளகாய் -2
பூண்டு - பத்து பல்
பெரிய வெங்காயம் - 1
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் -தேவையான அளவு
ஒரு பாத்திரத்துல கேழ்வரகு மாவை நல்லா சலிச்சுக்கிட்டு, அதுல சுத்தம் செஞ்ச முருங்கைக்கீரையை போடுங்க.
கழுவி பொடியா நறுக்கின வெங்காயத்தைப் போடுங்க. 
பூண்டையும், மிளகாயையும் மிக்ஸில போட்டு அரைச்சு சேருங்க.
தேவையான அளவு உப்பு சேருங்க.
கொஞ்சம், கொஞ்சமா தண்ணி சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு மாவு பிசைஞ்சுக்கோங்க.
ஒரு பிளாஸ்டிக் பேப்பர்ல லேசா எண்ணெய் தடவி, பிசைஞ்சு வச்சிருக்கும் மாவுல கொஞ்சம் எடுத்து வட்டமா தட்டிக்கோங்க. மாவு தண்ணியா இருக்குற மாதிரி இருந்தா துணில தட்டிக்கலாம். நான் துணிலதான் தட்டிக்கிட்டேன்.

அடுப்புல, தோசைக்கல் சூடானதும், வட்டமா தட்டின மாவைப் போட்டு லேசா எண்ணெய் ஊத்தி ரெண்டுப் பக்கமும் சிவக்க விட்டு எடுங்க.
கேழ்வரகு அடை ரெடி! சூடான அடைக்கு வெல்லம் சேர்த்துக்கிட்டா நல்லா இருக்கும். சிலர், கடலைப் பருப்பு, உளுத்தம்பருப்பு போட்டு வெங்காயம், கீரைலாம் லேசா வதக்கியும் சேர்ப்பாங்க. ப.மிளகாய் கூட சேர்த்துக்கலாம்.

மாலை நேரத்துல அதிகம் எண்ணெய் சேர்க்காத பாரம்பரிய உணவு சாப்பிட்ட மாதிரியும் ஆச்சு. வெல்லத்தில் இருக்கும் இரும்பு சத்து ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும்,  முருங்கைக் கீரையில் இருக்கும்  வைட்டமின் ஏ, பி, சி சத்துக்களும், சுண்ணாம்புச்சத்து, புரதம், இரும்பு, கந்தகம், குளோரின், தாமிரம், கால்சியம், மெக்னீஷியம், தாது உப்புகளும் உடம்பில் சேர்ந்த மாதிரியும் ஆச்சு!

கேழ்வரகு அடையை ஸ்கூல்ல இருந்து வந்ததும் என் பசங்க விரும்பி சாப்பிடுவாங்க. மாசம் ஒரு தரமோ இல்ல ரெண்டு தரமோ செஞ்சுக் கொடுப்போம். 

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...

நன்றியுடன்
ராஜி. 

Monday, August 28, 2017

இலவு காத்த கிளிக்கும் இன்றைய அரசியலுக்கும் சம்பந்தமுண்டா?! - ஐஞ்சுவை அவியல்

எங்கெங்கோ சுத்தி வந்த கிளி ஒண்ணு ஒரு பறவைல வந்து உக்காந்துச்சாம்... அங்க இருக்கும் புழு, பூச்சிலாம் தின்னு பசியாறிக்கிட்டு இருந்துச்சாம்.. கொஞ்ச நாள்ல அந்த மரத்துல பூ வச்சுச்சாம்... கிளிக்கு ரொம்ப கொண்டாட்டம். அடடா! பூ காயாகும், காய் கனியாகும்.. நாம சாப்பிடலாம்ன்னு காத்திக்கிட்டிருந்துச்சாம்.. அது நினைச்ச மாதிரியே, பூ காயாச்சாம்... சரி சீக்கிரத்துல பழுத்துரும், நாம பசியாறலாம்ன்னு  கத்தி, ஸ்பூன், தண்ணி, தட்டுலாம் எடுத்து வச்சிக்கிட்டு காயையே பார்த்துக்கிட்டிருந்துச்சாம்.  எத்தனையோ காத்திருந்தும் காய் கனியவே இல்லியாம். ஆனா, காத்திருக்குறதையும் கிளி விடலியாம்.. ஒருநாள் காய் வெடிச்சு பஞ்சாய் மறந்து போச்சாம். அப்பதான் கிளிக்கு தான் ஏமாந்த கதை தெரிஞ்சுச்சாம்... இந்த கதையை இன்றைய அரசியலோடு ஒப்பிட்டு பார்க்காதீங்க ப்ளீஸ்....
குருஷேத்திரப்போர் முடிந்தபின்   மரணப்படுக்கையில் இருந்த பீஷ்மரை  பார்க்க பாண்டவர்கள், கிருஷ்ணர், திரௌபதி சூழ எல்லாரும்  வந்தாங்க.   க்ருஷ்ணர் தருமரிடம் , தருமா! அஸ்தினாபுரத்தின் அரியணையில் அமரப்போகிறாய். உங்கள் குலத்தின் அத்தனை பெரியவர்களும் போரில் மாண்டதால் உனக்கு ஆலோசனை யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, பீஷ்மரிடம் ஒரு மன்னன் எப்படி இருக்கவேண்டுமென கேட்டு தெரிந்துக்கொள் என கூறினான். தருமனும் அவ்வாறே வேண்டி நிற்க, மன்னன் கடைப்பிடிக்க வேண்டியவைகளை பீஷ்மர் கூறிக்கொண்டே வந்தார். திரௌபதி நகைப்பதை கண்டு ஏன் மகளே! நகைக்கிறாய் என பீஷ்மர் வினவினார். இத்தனை நியாய, அநியாயம் பேசும் நீங்கள், அத்தனை பேரும் நிறைந்திருந்த ராஜ்ஜிய சபையில் என் துகில் உரியப்படும்போது துரியோதனனை எதிர்த்து குரல் கொடுக்காதது ஏன் என கேட்டாள். மகளே! அப்போது நான் துரியோதன் ஆட்சியில் இருந்தேன். அவன் அளித்த உணவை உண்டேன். அதனால், அவன் குணம் என் உடலிலும் இருந்திருக்கும்,  அதனால, அநீதியை கண்டு அமைதியா இருந்தேன்., இப்ப அர்ஜுனன் எய்த அம்பு என்னுடலில் இருந்த அத்தனை ரத்தத்தை வெளியேத்திடுச்சு, அதான் என் நிலைக்கு திரும்பிட்டேன்.  அதுமிட்டுமில்லாம உப்பிட்டவருக்கு எதிராய் நடப்பதும் பாவம்ன்னு சொன்னாராம்... இந்த கதைக்கும் இன்றைய அரசியலுக்கும் சம்பந்தமில்லைன்னு நான் சொன்னா நீங்க நம்பிதான் ஆகனும்....

பார்த்ததில் வருந்தியது..
பார்த்ததில் யோசித்தது...

நம்ம பொழப்பு இப்படியாகிட்டுதே!

பெயர்: செவ்வாய் ,
ஊர்: கேலக்சி
தொழில்
படித்ததில் பிடித்தது...
-முகநூலில் படித்ததும் சிரித்தது.

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை..
ராஜி.

Sunday, August 27, 2017

ஊருப்பேருக்காக கோவிலா?! இல்ல கோவிலுக்காக ஊர்ப்பேரா - ஆவணி ஞாயிறு



நில அமைப்புபடி நாம் வாழும் நிலத்தை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலைன்னு ஐந்தா பிரிச்சிருக்காங்க நம் முன்னோர்கள்.   எல்லா  ஊரும் எதாவதொரு கேட்டகிரில வந்திரும். ஒருசில ஊர்கள் மட்டும் ஓரிரு நில அமைப்புல இருக்கும். ஆனா கன்னியாக்குமரி  மட்டு ஐந்து நில அமைப்புலயும் வரும். மலைகள், மணல், விளைநிலம், கடல், காடுன்னு எல்லா நில அமைப்பும் சேர்ந்த அழகானதொரு ஊர் கன்யாக்குமரி.  கன்யாக்குமரி மட்டுமில்ல அந்த மாவட்டமே அழகானதாதான் இருக்கும். இந்த அழகான மாவட்டத்துலதான் நாகர்கோவில் ஊர் இருக்கு.

மதுரை, கும்பக்கோணம், காஞ்சிபுரத்துலதான் கோவில் அதிகம். இவைகளைதான் கோவில்நகரம்ன்னு சொல்வாங்க. ஆனா இந்த ஊர்களுக்குலாம் இல்லாத சிறப்பு ஊர்ப்பெயரின் பின்னாடி கோவில் இருக்குறது. இதுமாதிரி கோவில்ன்னு ஊர்பெயரோடு பிற்பாதில இருக்குறது ஒருசில ஊர்களே. அதுல இந்த நாகர்கோவிலும் உண்டு. அதே மாதிரி இந்த ஊர்ல எந்த தெய்வத்தோட கோவில் இருக்கோ அது ஊரோட முற்பாதில இருக்கு, இந்த ஊரோட தெய்வம் நாகர்... நாகர் குடிக்கொண்டிருக்கும் கோவிலை கொண்டதால இந்த ஊருக்கு நாகர்கோவில்ன்னு பேர் வந்திருக்கும் போல... பேருக்காக கோவில் வந்துச்சா இல்லை கோவில் இருக்குறதால பேர் வந்துச்சான்னு ஒரு  பட்டிமன்றம் சன் டிவில வைக்கனும்.  நான் முன்ன எப்பயோ போனது இக்கோவிலுக்கு.. அதை வச்சு இந்த பதிவை தேத்துறேன். படங்கள் மட்டும் கீதாக்கா, துளசி சாருக்கு அன்பளிப்பா.... 


கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான கோட்டாறுதான் இப்ப நாகர்கோவில்ன்னு அழைக்கப்படுது (விவரம் சரியா கீதாக்கா, துளசி சார்) நாகர்கோவில்ன்னு பேரு வரக்காரணமான இந்த  நாகராஜார்  கோவிலில் இரண்டு பிரதானமான சன்னிதிகள் உள்ளன. அதுல ஒன்னு ஓலைக் கூரையிலமைந்திருக்கும் சன்னிதியில் நாகக் கற்சிலை உள்ளது. மற்றொரு சன்னிதி, கருங்கற்களால் விமான வடிவில் அமைக்கப்பட்டுள்ள நாகராஜா சன்னிதியாகும். இச்சன்னிதியில், தலைக்குமேல் ஐந்தலை நாகப்படத்துடன் கூடிய ஆண் தெய்வத்தின் சிற்பம், இரு தேவியரின் சிற்பங்களுடன் காணப்படுகிறது.
இந்தியாவில் பாம்பையே ­மூலவராகக் கொண்ட ஒரே கோயில் நாகர்கோவில் நாகராஜா கோயில்தான்.  மற்ற கோயில்களில் நாகராஜா சிலைகள் தனிச்சன்னிதியில் இருக்கும். தனிச்சன்னிதியில் இருப்பதற்கும் மூலவராய் இருப்பதற்கும் நிறைய வித்தியாசமுண்டு.  நாக பிரதிஷ்டையும், சர்ப்பக்காவும் கேரளாவிற்கு மட்டுமே உரிய சிறப்பமாகும். ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் கேரளாவில் 15 ஆயிரம் சர்ப்பக்காவுகள் இருந்தன.  இன்று மன்னார்சாலை, வெட்டுக்காடு, பாம்பன் மேக்கோடு ஆகியவை பிரசித்தி பெற்ற சர்ப்பக்காவுகளாகும். மன்னார்சாலையில் ஒரு பெண் தன் வாழ்நாள் முழுவதும் கன்னியாகவே இருந்து நாகபூஜை செய்யும் வழக்கம் தற்போதும் வழக்கத்தில் உள்ளது.  தமிழ்நாட்டில் திருவேற்காட்டில் எழுந்தருளியுள்ள கருமாரியம்மன் கருநாகமாக தோன்றினார் என்று தலபுராண வரலாறு கூறுகிறது. இங்கு கருமாரியம்மன் ஐந்து தலை நாகத்தின் குடை நிழலில் அமர்ந்து காட்சி தருகிறார். திருச்செங்கோடு மலைச்சரிவில் 60 அடி நீளத்தில் பாம்பு புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இங்கு பக்தர்கள் பொங்கல் இட்டு வழிபாடுநடத்துகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில்  ஒரு சமுதாயத்தினர் நாகத்தை குலதெய்வமாக கொண்டு ஒடுப்பறை என்ற இடத்தில் கோயில் கட்டி வழிபடுகின்றனர். இப்படி நாக வழிபாட்டுக்காக பல கோயில்கள் இருந்தாலும் நாகர்கோவில் நாகராஜா கோயில் சிறப்பு மிக்கதாக கருதப்படுகிறது. 

இந்த கோயிலின் பெயரை கொண்டுதான் மாவட்ட தலைநகரான நாகர்கோவில் விளங்குகிறது. மிக பழமையான இந்த கோயில் எப்போது யாரால் கட்டுன்துன்னு தெரியாது. இங்கிருக்கும் நாகராஜர் சுயம்புமூர்த்தி. கோயில் இருக்கும் இடம் ஒருகாலத்தி  புல்லும், புதரும் நிறைந்த இடமாக இருந்தது.
இங்கு இளம்பெண் ஒருவர் புல் அறுத்து கொண்டிருந்தபோது அவரது அரிவாள் ஐந்து தலை நாகத்தின் தலையில் பட்டு ரத்தம் பெருக்கெடுத்து ஓடியது.  இதைக்கண்டு பயந்துப்போன அந்தப்பெண் அருகிலிருக்கும் ஊருக்குள் சென்று ஆட்களை  அழைத்து வந்து இடத்தை காட்டினாள். மக்கள் உடனே அங்கு, தங்களிடமிருந்த ஓலைகளால் கோயில் கட்டி வணங்கியதாகவும், பிற்காலத்தில், உதய மார்த்தாண்டவர்மா மன்னர்  இக்கோவிலை புதுப்பித்து கொண்டிருந்தபோது, ஒரு நாள் மன்னர் கனவில் நாகராஜர் தோன்றி, "ஓலைக்கூரையாலான இருப்பிடத்தையே நான் மிகவும்  விரும்புகிறேன். முதன் முதலில் அக்கூரையினடியில் தான் வாசம் செய்தேன்.  ஆதலால் அதை  மாற்ற வேண்டாம்'' ன்னு சொன்னதால அந்த திட்டம் கைவிடப்பட்டு மூலவரின் கருவறை மட்டும் இன்றுவரை ஓலைக்கூரையின்கீழ் உள்ளது.
இந்த கோயிலின் உள்ளே போகும்போது உள்வாசலின் இருபுறமும் அமைந்திருக்கும் ந்து தலை நாகத்தின் படம் எடுக்கும் வடிவிலான சிலை அனைவரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. இவை தர்னேந்திரன் என்ற நாகராஜனும்பத்மாவதி என்ற நாகராணியும் ஆகும்.   இந்த கோயிலின் கருவறை இன்றும் ஓலை கூரையின் கீழ்தான் இருக்கு.  இந்த கூரையில் ஒரு பாம்பு காவல் புரிவதாக நம்பப்படுகிறது. இந்த ஓலைக்கூரை மாற்றி கட்டும் போது ஒரு பாம்பு வருவது வழக்கமாக இருக்கு.
  மூலவர் அமர்ந்துள்ள இடம் எப்போதும் ஈரமாக இருக்கும். ­மூலவர் இங்கு தண்ணீரில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். அந்த தண்ணீர் ஊற்றில் இருந்து எடுக்கப்படும் மண்தான் இக்கோயிலின் முக்கிய பிரசாதமாக கொடுக்கப்படுகிறது. இது ஆறு மாதகாலம் கறுப்பாகவும், ஆறு மாதகாலம் வெள்ளையாகவும் காட்சி தருகிறது. இங்கிருந்து மண் எடுக்க எடுக்க குறையாமல் இருப்பது அதிசயமாகும். திருமணம் நடக்க வேண்டியும், குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டியும்  பெண்கள் இங்கு நாகருக்கு பால் அபிஷேகம் நடத்துகின்றனர்.  

பால் பாயாச வழிபாடு இங்குள்ள முக்கிய வழிபாடு ஆகும். பால், உப்பு, நல்லமிளகு, மரப்பொம்மைகள் போன்றவற்றையும் பக்தர்கள் இங்கு காணிக்கையாக வழங்குகின்றனர்.  ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு பெண்கள் கூட்டம் அலை மோதும். ஆயிரக்கணக்கான பெண்கள் வரிசையாக நன்று நாகருக்கு பால் ஊற்றுவதைகாணமுடியும்.  ஆண்டு தோறும் தை மாதம் பத்து நாட்கள் திருவிழா நடக்கிறது. எல்லா மாதமும் ஆயில்ய நாளில் விசேஷ பூஜைகள் நடக்கிறது. ஞாயிற்றுக்கிழமை நாகராஜனுக்கு பால் வார்ப்பது புனிதமாக கருதப்படுகிறது.  திருக்கார்த்திகை அன்று சொக்கப்பனை விழாவும், கந்தசஷ்டி விழாவும் இங்கு நடக்கும் இதர முக்கிய விழாக்களாகும்.

இந்த ஆலயத்திற்கு தொடர்ந்து

காளிகேசம் போகும் வழி கீதாக்கா...

இந்த கோவில்ல இருக்கும்  துர்க்கை சிலை, இங்க இருக்கும் நாக தீர்த்தத்தில் கிடைச்சதால "தீர்த்த துர்க்கை"  ன்னு சொல்றாங்க.  துர்க்கை அம்மன் கிடைத்த நாக தீர்த்தத்தில் செவ்வாய்க்கிழமை  அன்று ராகு காலத்தில் நீராடி பால் அபிஷேகம் செய்து, நெய் தீபம் மற்றும் எலுமிச்சைப் பழ தீபம்  ஏற்றி வழிபட்டால் நாக தோஷங்கள்  உடனே அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 
கடுக்கரை...
வட்டக்கோட்டை...

மாத்தூர் தொட்டிப்பாலம்...
மைலாடி குகைப்பாலம்...
வள்ளியூர் பைபாஸ்
 இந்த இடத்தோட  பேர் மறந்துப்போச்சே....

1905ல எடுத்த புத்தேரி படம்...
புத்தேரி....

 வடச்சேரி பஸ்ஸ்டாப்
ரோடு மேல ஆறு.. வில்லுக்குறி.

படங்கள் போதுமா கீதாக்கா?!

தமிழ்மணம் ஓட்டு
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1470401

   
நன்றியுடன், 
ராஜி.

Saturday, August 26, 2017

பெண்களினால் ஏற்பட்ட சாபம் போக - ரிஷி பஞ்சமி

இந்துக்களின் வழிப்பாட்டில் எத்தனையோ விதம் இருக்கு, அதுல ஒன்னுதான் ரிஷிகள் வழிபாடு. காஷ்யபா,அத்ரி, பாரத்வாஜ முனிவர்கள், விஸ்வாமித்திரர், ஜமதக்னி,மற்றும் வஷிஷ்டர்ன்ற எழுவரே சப்தரிஷிகளாகும். சப்த என்றால் ஏழுன்னு அர்த்தம். சூரியனுக்கே சக்தியை அருளும் இவர்களை சூரியன் அனுதினமும் தொழுது வானவீதியில் வலம் வருகிறான். இவர்களை வழிபட்டால் நமக்கும் வலிவும் பொலிவும் ஆரோக்கியமும் ஆயுளும் வளரும் என்பதோடு செய்த பாவங்கள் எல்லாம் உடனே அகலும் என்பதுதான் புராணம் கூறும் ரகசியம்! சப்தரிஷிகளை நம் நாட்டில் ரிஷி பஞ்சமி அன்னிக்கு கும்பிடுகிறோம். அந்த ரிஷி பஞ்சமி தினம் இன்று. 
சப்த ரிஷிகளில் ஒருவரான வசிஷ்ட முனிவரது மனைவியான அருந்ததியையும் தெரியாதவர் யாருமே இருக்க முடியாது. வைதீக முறைப்படி நடக்கும் திருமணங்களில் அம்மி மிதித்து அருந்ததி பார்க்கும் சடங்கு மிக முக்கியமானது. பழைய காலத்தில் நான்கு நாட்கள் நடந்த திருமண வைபவம் அவசர கதியில் ஒன்றரை நாட்களாகச் சுருங்கிய விபரீதத்தின் விளைவு இந்த அருந்ததி பார்க்கும் வைபவம் பகல் நேரத்திலேயே அருந்ததியை நிஜமாகப் பார்க்காமலேயே கல்யாண மண்டபத்திற்குள்ளேயே முடிஞ்சிடுது.  பழைய காலத்தில் இந்த பரிதாபம் இல்லை. திருமணம் நடந்த அன்று இரவு நிஜமாகவே துருவ நட்சத்திரத்தையும் அருந்ததியையும் பார்க்கும் பழக்கம் தவறாமல் அனுஷ்டிக்கப்பட்டது.
துருவனையும் அருந்ததியையும் பார்க்கும் போது கூறும் மந்திரத்தின் அர்த்தமாவது... “ஓ! துருவ! நீர் அழிவில்லா பதவி பெற்றவர். ஸத்யத்திற்கு காரணமானவர். ஸ்திரமாக இருப்பதற்கு நீரே காரணம். த்ருவம் என்ற பெயரைப் பெற்றீர். சுற்றுகின்ற நட்சத்திரங்களுக்கு நீர் கட்டுத்தறி போல இருக்கிறீர். அத்தகைய நீர் சத்ருக்களின் உபாதை இல்லாமல் இவளை ஸ்திரமாக இருக்கச் செய்யும்” என்பதாகும்.
சப்த ரிஷிகள் மனைவிகளுக்கு க்ருத்திகா என்று பெயர். அவர்களுள் சிறந்தவள் அருந்ததி. இவளை மற்ற பத்தினிகள், பெண்களுக்கே உண்டான பொறாமை இன்றி  “இவளே எங்களுள் மிக உத்தமி” என ஏற்றுக் கொண்டனர். அத்தகைய பெருமை வாய்ந்த அருந்ததியின் தரிசனத்தால் இவள் எட்டாவது கிருத்திகை போல கற்பினாலும் பாக்கியத்தினாலும் விருத்தி அடையட்டும்.”
தாரணமாக வானவியல் தெரியாதவர்கள் கூட இந்தக் காலத்திலும் சப்தரிஷி மண்டலத்தைத் தெரிந்து அதை வானில் ஒருவருக்கு ஒருவர் சுட்டிக் காட்டி மகிழ்கின்றனர். இது மேலை நாட்டில் ‘க்ரேட் பேர்’ அல்லது ‘ஊர்ஸா மேஜர்’ என  சொல்லப்படுது. மக நட்சத்திரத்திற்கும் சுவாதிக்குமுள்ள தூரத்திற்கு நேர் வடக்காக ஏழு ஒளி பொருந்திய நட்சத்திரங்கள்  ஏர்க்கால் போன்று ஒரு முனை கிழக்காக இருக்குமாறு காணப்படுகிறது. இதையே பண்டைய காலம் தொட்டு சப்தரிஷி மண்டலம் என சொல்றோம். மேற்கில் உள்ள இரண்டு நட்சத்திரங்களைச் சேர்த்து சுமார் 7 பங்கு தூரம் வடக்கே நீட்டினால் துருவ நட்சத்திரத்தில் முடியும். ஆகவே திசையைக் காட்டும் நட்சத்திரங்களான இந்த இரண்டை மட்டும் மாலுமிகள் திசைகாட்டி என அழைத்தனர். இந்த சப்த ரிஷி மண்டலம் சூரிய வீதியில் இல்லாததால் 27 நட்சத்திரங்கள் பட்டியலில் சேரவில்லை. பிரம்ம சித்தாந்தம் என்னும் நூலில் சகலர் என்னும் ரிஷி சப்த ரிஷிகள் மற்றும் அருந்ததி எங்கே உள்ளனர் என்பதை விரிவாக விளக்குகிறார். ரிக் வேதம் (9-114-3) “தேவா: ஆதித்யா: யே சப்த” என்று இந்த ஏழு பேரும் ஏழு தெய்வங்கள் என முழங்குகிறது.மஹாபாரதமோ இவர்களை சித்ர சிகண்டி ( மயில் வடிவம்)என்று 12-336ம் அத்தியாயத்தில் விளக்குகிறது!
உண்மையில் சூரியனுக்கு பலமும் ஒளியும் தருபவர்கள் இவர்களே என வேதங்கள் சொல்லுது.  ரிஷி யாஸ்கர் சூரியனின் ஏழு கிரணங்களே சப்த ரிஷிகள் என்ற ரகசியத்தை (நிருக்தா I-1.5யில் உள்ள) ‘சப்த ரிஷயஹ சப்த ஆதித்ய ரஷ்மயஹ இதி வதந்தி நைருகாதாஹா’ என்ற வாக்கியத்தின் மூலம் உணர்த்துகிறார்! இவர்களிடமிருந்து தன் சக்தியைப் பெறுவதால்தான் சூரியன் சற்று கீழே தாழ்ந்து இவர்களை அன்றாடம்  தொழுது தன் பவனியைத் தொடர்கிறான் என்பதை குமார சம்பவத்தில் (7-7) மகாகவி காளிதாஸர் “அவர்கள் தொடர்ந்து தரும் ஆதரவால் அந்த ரிஷிகள் வானில் உதிக்கும் போது  சூரியன் தனது அஸ்தமன சமயத்தில் தன் கொடியைக் கீழே தாழ்த்தி பயபக்தியுடன் அவர்களைப் பார்க்கிறான்” என்கிறார். சூரியனே தொழுது சக்தி பெறும் போது நாம் தொழுது சக்தி பெறலாம் என்பதே நாம் உணர வேண்டிய ரகசியம்!இது மட்டுமின்றி இன்னொரு ரகசியத்தை அதர்வண வேதம் உரைக்கிறது. இவர்களே பஞ்சபூதங்களை உருவாக்கினர்!(சப்தரிஷய: பூதக்ருதா: தேI அதர்வண வேதம் VI -108-4)  ஏழு ரிஷிகளையும் நாம் பிதரஹ (தந்தைமார்) எனக் குறிப்பிட்டு வணங்குகிறோம். இவர்களுக்கு மேலே பிரம்ம லோகத்தில் உள்ள பிரம்மா இவர்களுக்குத் தந்தை ஆதலால் நாம் பிரம்மாவை பிதாமஹ என்று கூறி வணங்குகிறோம்.
விநாயகசதுர்த்தியைத் ரிஷி பஞ்சமி என சொல்லப்படுது. இந்த நாளில் அனைவரும் சப்த ரிஷிகளையும் வணங்கித் தங்கள் பாவங்களைப் போக்கிக் கொண்டு புதிய வலிவும் பொலிவும் ஆரோக்கியமும் தீர்க்க ஆயுளும் பெற்றுத் தம் வாழ்க்கையைத் தொடர்வது வழக்கம். குறிப்பாகப் பெண்கள் நேபாளத்திலிருந்து காவேரி தீரம் வரை  ஒரு மரத்தட்டில் ஏழு ரிஷிகளையும் எழுந்தருளச் செய்து அறிந்தோ அறியாமலோ தாங்கள் மாதவிலக்குக் காலத்தில் செய்த பாவச் செயல்கள் உள்ளிட்ட அனைத்துப் பாவங்களையும் ஒரு கணத்தில் போக்கிக் கொள்கின்றனர்.
தொடர்ந்து அடுத்த நாளாக வரும் பஞ்சமி தினம்

சப்தரிஷிகளின் 1600 முறை பயணமே ஒரு மஹாயுக காலம். ஆரிய பட்டரும் வராஹமிஹிரரும் (பிருஹத் சம்ஹிதா 13ம் அத்தியாயத்தில் வராஹமிஹிரர் கூறுகிறார்) இந்த சப்தரிஷிகள் 1600 முறை புறப்பட்ட இடத்திலிருந்து மீண்டும் அங்கேயே வந்து சேர்ந்தால் ஒரு மஹாயுகம் ஆகும் என்று கணக்கிட்டுச் சொல்லி உள்ளனர். அதாவது இப்படிப்பட்ட 1600 முறை சுழற்சி முடிய 43,20,000 வருடங்கள் ஆகின்றன! ரிக் வேதம்,மஹாபாரதம், ராமாயணம்.18 புராணங்கள், மற்றும் பின்னால் வந்த இலக்கியங்கள் அனைத்திலும் சப்தரிஷிகளின் ரகசியங்கள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.
மாயவரத்தின் அருகில் கொல்லுமாங்குடியிலிருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சிறுபுலியூர் உள்ளிட்ட ஏராளமான ஸ்தலங்கள் தென்னாட்டிலும் வசிஷ்டர் தவம் செய்து வசித்த வசிஷ்ட குகை போன்ற பல புண்ணிய இடங்கள் வட நாட்டிலும் சப்தரிஷிகளின் ஏராளமான வரலாறுகளை உள்ளடக்கிய பெரும் ஸ்தலங்களாக அமைந்துள்ளன

ரிஷி பூஜைக்கு முன்பாக யமுனா பூஜை செய்ய வேண்டும். பூஜை அறையில் கலசத்தை வைத்து, நெய் விளக்கு ஏற்றி விநாயகர் பூஜையை முதலில் செய்யனும். அடுத்ததாக ராஜஜேஸ்வரி ஸ்லோகத்தோடு பூஜை முடித்த பிறகு நிவேதனம் செய்த சித்ரான்னங்களை பிரசாதமாக தந்து விட்டு உபவாசம் இருக்க வேண்டும். 
அந்திமாலை அல்லது இரவில் ரிஷி பஞ்சதி விரத பூஜையை ஆரம்பிக்கலாம். இதில் யமுனர் விரத பூஜைக்கு பயன்படுத்திய அதே கலசத்தை பூஜிக்கலாம். புதிதாக மலர்ச்சரங்கள் சாத்திய அக்கலசத்தை சப்த ரிஷிகளாக பாவித்து இந்த பூஜை செய்யப்பட வேண்டும்.  இதில் நிவேதனமாக தேன்- பசும்பாலுடன் அனைத்து வகை கனிகளையும் படைத்தல் அவசியம். ரிஷி பஞ்சமி விரத பூஜையை சப்தரிஷி விரத பூஜை என்பார்கள். பகலில் யமுனா பூஜை நடத்தியவர்கள் மட்டுமே ரிஷி பஞ்சமி விரத பூஜையில் பங்கேற்க வேண்டும்.  ரிஷி பஞ்சமி பூஜையில் ஆண்கள் கலந்துக்கொண்டு விரதம் இருந்து வழிபடலாம். ஆனால் பூஜை நடத்தும் உரிமை பெண்களுக்கு மட்டுமே.
ஒருமுறை தருமர் கிருஷ்ணரிடம் சென்று, எங்கள் பெண்களினால் ஏற்பட்டு உள்ள சாபம் விலக ஏதாவது பரிகாரம் கூற வேண்டும் எனக் கேட்டாராம். ( திரௌபதியும் பாண்டவர்களின் மனைவியாகப் பிறந்ததும் ஒரு பெண்ணின் சாபத்தின் விளைவினால்தான்).அதற்குக் கிருஷ்ணர் கூறிய கதை இது. “இந்தியாவின் மத்தியப் பகுதியில் உள்ளது விதர்பா எனும் இடம். அந்த இடத்தை ஸ்னேயஜித் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவன் இராஜ்ஜியத்தில் நல்ல நடத்தையும், நற்குணங்களும் கொண்டு நியாயம் மற்றும் உண்மையை கடை பிடித்த வண்ணம் சுமித்தரா என்ற அந்தணன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு ஜெயஸ்ரீ என்ற மனைவி இருந்தாள். அவளும் கணவரைப் போன்றே அனைத்து நற்குணமும் கொண்டவள். மிகவும் ஆசாரபூர்வமான குடும்பம் அது. ஒரு முறை அவன் வீட்டு விலகாகிய நேரத்தில் வீட்டில் அவர்களை அறியாமலேயே தீட்டு பட்டுவிட்டது. அது அவர்களுக்குத் தெரியாது. அடுத்து சில தினங்களில் அவர்கள் இருவரும் மரணம் அடைந்து கணவன் நாயாகவும், மனைவி ஒரு மாடாகவும் பிறந்து அவர்களைப் போலவே வேறு ஜென்மம் எடுத்துப் பிறந்திருந்த அவர்களுடைய பிள்ளையின் வீட்டிலேயே வளர வேண்டியதாயிற்று. சுமித்தராவுக்கும் ஜெயஸ்ரீக்கும் தாம் யார் என்பதும் யார் வீட்டில் பிறந்து உள்ளோம் என்பதும் தெரியும். ஆனால் பிள்ளைக்கு அந்த மிருகங்கள் யார் என்பது தெரியாது. 
ஒரு நாள் சிரார்த தினம். அன்று அவர்கள் வீட்டில் சமைத்து வைத்திருந்த பாயஸத்தை பாம்பு ஒன்று வந்து சாப்பிட முயன்றது. ஆனால் அது தனது வாயை வைக்க முடியாமல் சூடு தாக்கிவிட அதுவும் சூட்டினால் அதனுள் விஷத்தை உமிழ்ந்து விட்டுச் சென்றது. அதை தற்செயலாக நாயாகப் பிறந்து இருந்த ஜெயஸ்ரீ பார்த்து விட அந்த விஷம் கலந்த பாயஸத்தை யாராவது உண்டு மடிந்து விடக் கூடாதே, அதனால் தன் மகனுக்கு சாபம் ஏற்பட்டு விடக் கூடாதே என்ற கவலையில் அந்தப் பாயஸ பாத்திரத்தை தள்ளி அதை கீழே கொட்டி விட அதை கவனித்து விட்ட சமையல்காரப் பெண்மணி அதை முதுகெலும்பே முறியும் அளவுக்கு அடித்துத் துரத்தினாள். அதற்கு பதிலாக வேறு பாயஸம் செய்து வைத்தாள். அடிப்பட்ட நாயும் வலி தாங்காமல் அழுது கொண்டே மாடாக இருந்த கணவனிடம் தன் நிலையை எடுத்துக் கூறி அழ அவளை மாடு உருவில் இருந்த கணவன் தேற்றினான். 

னைத்து சாஸ்திரமும் நன்கு படித்திருந்த அந்த அந்தணணின் மகன் அந்த விலங்குகள் பேசியதைக் கேட்டார். அவருக்கு விலங்குகள் பாஷையும் புரியும். ஆஹா……தவறு நடந்து விட்டதே, பூர்வ ஜென்மத்தில் நம் தாய் தந்தையாக இருந்தவர்கள் அல்லவா மாடாகவும் நாயாகவும் தற்போது பிறந்து நம்முடன் இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டான். எந்த தந்தையின் மரணத்திற்கு இன்று திவசம் செய்கிறோமோ அவர் மனதை அல்லவா வருத்தப்பட வைத்து விட்டோம் என எண்ணிக் கலங்கி அந்த இரு விலங்குகளையும் உள்ளே அழைத்து வந்து நன்கு குளிப்பாட்டி அவற்றை வணங்கியப் பின் அவற்றையும் அழைத்துக் கொண்டு ஒரு முனிவரிடம் சென்று அதற்கு பரிகாரம் கேட்டான். அவரும் ரிஷி பஞ்சமி விரதத்தின் மகிமையை எடுத்துக் கூறி அதை செய்தால் அவனுடைய பெற்றோர்களுக்கு மோட்சம் கிடைக்கும் எனவும் கூற அவனும் அதை செய்து தன் பெற்றோர்களுக்கு மோட்சத்தை அடைய வழி செய்தார். இந்தக் கதையை தருமரிடம் கூறிய கிருஷ்ணர் எந்த ஒருவன் ரிஷி பஞ்சமி விரதத்தை சரியாகக் கடைபிடித்தச் செய்கிறானோ அவனுடைய குடும்பத்துக்கு பெண்களினால் ஏற்பட்ட சாபம் விலகும் என்று கூறி அவருக்கு ஒரு வழி காட்டினார். 
பூர்வ ஜென்ம பாபங்களை விலக்கிக் கொள்ள விதர்பாவை ஆண்டு வந்த சிதாஷ்வ எனும் மன்னன் பிரும்மாவிடம் ஒரு விரதத்தை தமக்கு அருளுமாறு வேண்டிக் கொண்டபோது அவர் இந்தக் கதையை கூறியதாகவும் இன்னொரு செய்தி உள்ளது. ஆனாலும் இந்த விரதமே பூர்வ ஜென்ம பாபங்களை விலக்குகின்றது என்பது வட நாடுகளில் ஐதீகமாக உள்ளது.

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை..
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1470337   

நன்றியுடன்,
ராஜி.