Thursday, June 28, 2012

பிரிவோம்..., சந்திப்போம்...,

ஆனந்தத்தின் உச்சியில் அமர்ந்து ஏகாந்திருந்த வேளையில் நன்பனின் தோழியாய் அறிமுகமானாய்...,
 
ஏதோ சில பொழுதுகளில் சந்தித்த போது ஒரு சில வார்த்தைகளில் கருத்துகளை பரிமாறி கொண்டோம்...,

என்னை வீழ்த்த நான்கு  திக்கிலுமிருந்து  அம்புகள் பறந்து வந்து தாக்கிய போது, என்னை காயத்திலிருந்து மருந்திட்டு  காப்பாற்றியவள் நீ....

சோக மேகம் மீண்டும் சூழாமல் என்னை தாயென தாங்கியவள் நீ அந்த நன்றியை என்றும் மறவேன்...,

என் கருத்துக்களை முகம் சுளிக்காமல் கேட்டு...,  நிறை குறைகளை எடுத்து சொல்லி பாராட்டி, என் தகுதிக்கும் மீறிய இடம் அளித்தவள் நீ...,

என் கிறுக்கல்களுக்கு காமதேனுவாய்  நினைத்து கூட பார்த்திராத  இடங்களிலிருந்து,  முகம் தெரியா பல உன்னத உறவுகளை எனக்கு பரிசளித்தாய்...,

மீண்டும் அதே போல் எட்டு திக்கிலிருந்தும் ஒரு தாக்குதல்...,


ஆறுதல் தேடி உன்னிடம் வரலாம் என்றால், என் விரக்தியினால் வரும் வார்த்தைகள் உன்னை காயப்படுத்தி நம் நட்பை உடைக்கலாம்..,

சோகத்திலும், கோபத்திலும் வார்த்தைகள் தடிக்கும் என்பது நான் கண்கூடாக கண்டது..., தேவையா அந்த விசப்பரிட்சை?! 

எனவே, சில காலம் பிரிந்திருப்போம்...,  கால ஓட்டத்தில் என் காயம் ஆறும்... அப்போது சந்திப்போம்...,

மீண்டும் சந்திக்கும் வரை விடை பெறுகிறேன்  என் பதிவுலக தோழியே!