Tuesday, August 30, 2011

வெற்றி நிச்சயம் எனக்கே..., அதுல உனக்கென்ன சந்தேகம்?

என் நன்பர் ஒருவர் மின்னஞ்சலில் சில  புகைப்படங்கள் அனுப்பி இருந்தார். அதை பார்த்துக் கொண்டு இருக்கும்போது  கூடவே என் இளைய மகள் இனியாவும் பார்த்து கொண்டு இருந்தாள். ஒவ்வொன்றிற்கும் எதாவது அதற்கு பொருந்துமாறு கமெண்டிக் கொண்டிருந்தாள். அப்புகைப்படமும், அவள் கமெண்டும் சேர்ந்து, இந்த பதிவு...,  


 
(குளிருது.., குளிருது....,)


(ஹலோ, ஐயாம் கமிங் ஃப்ரம் சைனா.)

 
(நிலவில் முதல் காலடி வைத்த நீல் ஆம்ஸ்ட்ராங்க் நாந்தானுங்கோ ) 
    (வெற்றி நிச்சயம் எனக்கே...,)

 (தீக்குள் விரலை விட்டால் நந்தலாலா.., நிந்தன் கரிய நிறம் தோன்றுதடா நந்தலாலா...,)
 
(hai, Mcdonald Welcomes U ) 
(பல்லவா! என்னை வெல்லவா!..,)
 
(பூந்தோட்ட காவல்காரன்..)
 
(கல்யாண  சீசன் இது.  ஓசி சாப்பாடு சாப்பிட்டு,  சாப்பிட்டு நான் இப்படி ஆகிட்டேன். அவ்வவ்வ்வ்வ். ..,)
 
(ராஜியோட பதிவிலலாம்  என் போட்டோ  வருதே! அதுக்கு பதிலா  நான் தூக்குலே தொங்கிடுறேன்...,)


 (ஷ் ஷ் அப்பாடா. தொடர்ந்து ரெண்டு நாள் லீவ்  வருது ! ரெண்டு நாள் நிம்மதியா ரெஸ்ட்  எடுக்கலாம்) 


(மாப்பு..., வச்சுட்டான்யா ஆப்பு..,)
  (டேய்  யாருடா அது?அங்க திருட்டு தம்மடிக்குறது?)

(அய்யய்யோ! தெரியாம   ராஜி பதிவை படிச்சுட்டேனே! ஸ்பைடர் மேன் என்னை காப்பாத்து....., ஃப்ளீஸ் )




 ( கஸ்தூரில நம்ம   கஸ்தூரி படுற பாடு இருக்கே. பாவ‌ம்டி அவ .
ஆமாம்க்கா. எனக்கும் அவளை நினைச்சா.., அழுகையா வருது..,)



  ( ஒளியிலே தெரிவது தேவதையா? ..., உயிரிலே கலந்தது நீயில்லையா?) 


 (கண்கள் இரண்டால்.., உன் கண்கள் இரண்டால்...,)
 
    (கண்ணா! பன்னிங்கதான் கூட்டமா இருக்கும். சிங்கம், எப்பவும் சிங்கிளாத்தான் இருக்கும்.)


 (நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்கோ..,)
 
(குடி குடியை கெடுக்கும்ன்னு சொன்னா எவன் கேக்குறான்...  )
கழுதைப் பாலில் குளித்தால்.., கிளியோபாட்ரா போல அழகாயிடலாம்னு புக்ல படிச்சேன். அதான் இப்படி பாலில் குளிக்குறேன் ஹி ஹி..,)


Wednesday, August 24, 2011

கனவாய் தொடர்கிறேன் வாழ்க்கையை..




நீ என்னை பிரிந்துவிட்டாய்
என்று தெரிந்த பின்னும்
உயிருடன் இருக்கிறேன் நான்..

உன்னுடன்தான் வாழ முடியவில்லை..
உன் நினைவுகளை சுமந்து கொண்டு வாழலாம் என்று..

பிரிவு,  சுமையாக இருந்தாலும்!..
அதுவும் சுகம்தான்..
சுமையை தந்தவன்  நீ என்பதால்..
உன்னுடன் எப்படி வாழலாம் என்று
கனா கண்டேன் அன்று..

அது முடியும் முன்னே முடிந்து போனது
காதல் கனா இன்று..

இறைவனின் சதியா?? - இல்லை
இது தான் விதியா??

விதியை மாற்றிட.. வழி தேடும் மதியா??
இறைவனும் பூமிக்கு வந்தால்.. - இது தான் கதியா?

வாழ்வே கனவாகி போனதால்..
கனவாய் தொடர்கிறேன் வாழ்க்கையை..

Tuesday, August 02, 2011

பிரபல பதிவர்களின் கிடைத்தற்கரிய சிறு வயது புகைப்படம்



 விளையும் பயிர் முளையிலேயே தெரியும் னு நம்ம பெரியவங்க சொல்வாங்க. அந்த பழமொழி  உண்மைன்னா நம்ம சகப் பதிவர்களெல்லாம் எப்படி இருந்திருப்பாங்கன்னு ஒரு சின்ன கற்பனை.


 
 இது யாருன்னு உங்களுக்கு நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.    பார்த்த உடனே தெரிஞ்சிருக்கும். தம்பி   சிரிப்பு போலீஸ் ரமேஷ்தான் இது.

  
 இதுகத்தி, அருவா, பிச்சுவாக்கத்தி, பிளேடுன்னு கமென்ட் போடுற சகோதரர்  
 நாஞ்சில் மனோதான் இது. 

 
வியட்நாம் போர், நான் இந்தியா பார்டர்ல இருந்துக்கிட்டு இந்தியாவிற்காக போரிட்டவன்  என பதிவுகளில் சொல்லும் விக்கியின் அகட விகடங்கள்!சகோதரர்  விக்கி அவர்கள் 
தமிழ் சினிமாவை உலகத் தரத்திற்கு உயர்த்த சினிமா எடுக்கப் போறேன்னு  சொல்லி, ஒரு மொக்கைப் படம் கூட விடாமல் பார்த்து  விமர்சனம் போடும்
அட்ரா சக்கை சிபிசார்தான். 
 
சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!னு சொல்லி சொல்லியே, தான் வாங்குன பல்பையெல்லாம் பதிவா போட்டு நம்மளை சோகத்துல ஆழ்த்துற
 
கோகுலத்தில் சூரியன் வெங்கட் சார்தான் இது

(என்னடா வெங்கட் சார் போட்டோ காணோமேன்னு பார்க்குறீங்களா? அது ஒண்ணுமில்லை வெங்கட் சார் கமெண்ட் மாட்ரேசன் போல போட்டோவுக்கும் மாட்ரேசன் வச்சிருக்கார். அவர் அப்ரூவல் பண்ற ஆளுங்க?!  கண்ணுங்களுக்கு மட்டும்தான் தெரிவார்)