Wednesday, May 20, 2015

மரி கனிவே என்னும் வாணி விலாஸ்ச சாகரா அணைக்கட்டு

மௌன சாட்சிகளில் மிகவும் பழமை வாய்ந்த இடங்கள் நிகழ்வுகள் எல்லாம் பார்த்து வருகிறோம். இந்த வாரம் நாம் பார்க்கபோவது, மாநிலம் தாண்டி வரலாற்று சிறப்புமிக்க ஒரு பொறியியல் நுணுக்கம் நிறைத்த ஒரு டேம்.
சித்திரதுர்க்கா மாவட்டம்,இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 27 மாவட்டங்கள்ல ஒண்ணு.இந்த மாவட்டத்தின் தலைநகரம் சித்திரதுர்க்கா டவுன்ல இருக்கு,இந்த மாவட்டத்தின் அமைவிடம் பார்த்தோம்னா தென்கிழக்கிலும், தெற்கிலும் தும்கூர் மாவட்டத்தையும்,தென்மேற்கில் சிக்மகளூர் மாவட்டத்தையும்,மேற்கில் தாவண்கரே மாவட்டத்தையும், வடக்கில் பெல்லாரி மாவட்டத்தையும்,கிழக்கில் ஆந்திர மாநிலத்தின் அனந்தபூர் மாவட்டத்தையும் எல்லைகளாக இருக்கு.இந்த தாவண்கரே மாவட்டமும் முன்னர் சித்திரதுர்க்கா மாவட்டத்தின் ஒரு பகுதியாகவே இருந்திருகிறது.இந்த மாவட்டத்தில் தான் புகழ் பெற்ற வேதவதி, துங்கபத்திரை ஆகிய நதிகள் ஓடுகின்றன.இவ்வுளவு சிறப்பு மிக்க இந்த மாவட்டதில இருக்கிற ஹிரியூர் தாலுக்காவில வேதவதி நதியில் கட்டப்பட்டுள்ள மிகவும் பழமை வாய்ந்த வாணி விலாச சாகரா என்னும்  அணைகட்டைதான் நாம இன்னிக்கு மௌன சாட்சிகளில் பரர்க்கபோறோம்.
இதுதான் அணைக்கட்டின் முகப்பு வாயில், இந்த இடத்திற்கு செல்லும் வழியினை பற்றி பார்க்கலாம். இது ஒருமுக்கியமான சாலை என்பதாலும் அதிகாலை பொழுதில் பனிமூட்டம் இருப்பதாலும் மிக கவனமாக வண்டி ஒட்டி செல்லவேண்டும். நமது பயணம் பெங்களூரில் இருந்து தொடங்கிய போது அதிகாலை நான்குமணி பற்களெல்லாம் நர்த்தனம் ஆடும் அளவு குளிர். ஊரெல்லாம் ஏசி போட்டதுபோல் இருந்துச்சு வண்டி வேகமாக பெங்களூர் மும்பை NH4 நாற்கர சாலையில் அமைதியா சென்றது ரோடு எல்லாம் அகலமா, இருபக்கமும் பச்சை பசேலென செடி கொடிகளும் நல்ல உயரமான  தென்னைமரங்களும் மலைகளும் என பார்ப்பதற்கு கண்களுக்கு குளிர்ச்சியாகவும் மனதுக்கு சந்தோசமாகவும் இருந்தது .காலை 7 மணியளவில் ஹிரியூரை நெருங்கி கொண்டு இருந்த சமயம் சாலையோர ஹோட்டல் ஒன்று தென்பட்டது உள்ளே சென்ற போது காமதேனு எஅழகான பெயர்பலகை இருந்தது.சாப்பிட இட்லி கேட்டபோது ஒரு பெரிய தட்டுநிறைய சாம்பாரும் இரண்டு டீஸ்பூனும் கொடுத்தார்கள். இட்லி எங்கே என்று சர்வரிடம் கேட்டபோது, கூட வந்தவர்கள் சத்தம்போடதே சாம்பாரில் இரண்டு இட்லிகள் மிதக்கிறது பார், என சொன்னபோதுதான் சம்பரையே கவனித்தேன் அதை அங்கே உள்ளவர்கள் லாவகமாக இரண்டு டீஸ்பூன்கொண்டு வெட்டி வெட்டி சாப்பிடும் முறையை பார்த்து அதேபோல் 2 இட்லியையும், சூடா ஒருகப் காப்பியையும், குடித்து விட்டு பயணம் தொடர்ந்தது.ஒருவழியாக அணைக்கட்டினை அடைந்தோம்
இதுதான் அணையின் முகப்பு வாயிலை தாண்டி உள்பக்கமாக செல்லும் வழி. நேர்த்தியான படிக்கட்டுகள் மூலம் மண்டபம், போன்று அமைக்கப்பட்டு இருக்கு. இதில் அணையினுடைய கொள்ளளவு அதன் பரபளவு பற்றி எழுதபட்டு  இருக்கு, சரி இந்த இடத்திற்கு எப்படி போகணும்னா பெங்களூர்ல இருந்து நேரடியாக ஹிரியூர் வந்து அங்கிருந்து இடப்பக்கமாக செல்லும் வழியாக செல்லலாம் இல்ல பெங்களூர் ல இருந்து தும்கூர் வழியாக சிரா வந்து அங்கிருந்து ஹிரியூர் செல்லலாம்
இது அணையினை பற்றிய ஒரு சிறு குறிப்பு அடங்கிய கல்மண்டபம்.இந்திய சுதந்திர போராட்டத்திற்கு முன்பே கட்டப்பட்டது இந்த அணை, இது 1898 ல் ஆரம்பிக்கபட்டு 1907 ல் கட்டி முடிக்கப்பட்டதாகும். மைசூர் மகாராஜா ஸ்ரீ நான்காம் கிருஷ்ணராஜா உடையார் ஆணைப்படி சர் விஸ்வஸ்வரையா மற்றும் தரசந்ததலால் என்பவர்களால் கட்டிமுடிக்கப்பட்டது  என்று சொல்லபட்டாலும் சம்மராஜா உடையார் என்ற மன்னர் மறைந்த பிறகு ஆட்சி பொறுப்பு ஏற்ற அவரது மனைவியால் தான்  முதன்முதலாக தொடங்கப்பட்டது.மக்கள் மற்றும், சமூகப்பணிகளில் ராணி மிகவும் அக்கறை கொண்டவர் என அங்கே உள்ள மக்களால் சொல்லபடுகிறது. அணைகட்டுவதற்கு நிதிபற்றாக்குறை வந்த சமயம் தங்களுடைய அரசு கருவுலங்களில் இருந்து பாரம்பரிய நகைகளை கொடுத்து உதவினாராம் மகராணி,இதன் காரணமாகவே இந்த அணைக்கு வாணி விலாஸ்ச  சகாரா என பெயரிடப்பட்டது என்று சொல்கிறார்கள். மேலும் மைசூர் மன்னரின் கடைசி மகளான வாணி விலாஸ்ச  என்பவரது பெயரில் இது அழைக்கப்பட்டது எனவும் சொல்லபடுவது உண்டு.இந்த மரிகநிவே அணை மிகவும் பழமையான மற்றும் மிகப்பெரிய அணைக்கட்டு என்ற சிறப்புகளை உடையது அதேசமயம் மைசூர் KRS அணையைவிட அதிக நீர் தேக்க சக்தி கொண்டதாகும்.
இதுதான் அந்த கல்மண்டபத்தின் தூரத்து காட்சி சரசெனிக் (ஹரப்பா )முறை கட்டிடகலையில் கட்டப்பட்டுள்ள இந்த அணை 62 ft. X 1300 ft. அளவு கொண்டது.இந்த அணை உள்ளூர் மற்றும் சித்ரதுர்கா மாவட்டத்தின் உள்நாட்டு நீர் ஆதாரமாக உள்ளது. இது வலது மற்றும் இடது வங்கி கால்வாய்கள் மூலம் உள்ளூர் மற்றும் சள்லகேரே தாலுகாக்களில் உள்ள 100 க்கும் மேற்பட்ட சதுர கிமீ நிலங்களுக்கு பாசன வசதி கொடுக்கிறது. இந்த இடம் பெங்களூரில் இருந்து 160 கிமி தொலைவிலும் சித்திரதுர்கா விலிருந்து 40 கிமி தொலைவிலும் ஹிரியூரிலிருந்து சுமார் 20 கிமி தொலைவில் இருக்கிறது.
இவைகள் என்ன வென்று தெரியவில்லை மதகுகளாக இருக்கலாம் அவை ஓரமாக இருப்பதாய் பார்க்கும் போது அதிகபடியான தண்ணீரை வெளியேற்றும் அமைப்புகளா, என்னவென்று தெரியவில்லை.ஏதோ நுணுக்கமான பொறியியல் அமைப்பு என்பதால் இதையும் இங்கே பதிவிடுகிறேன்.
இந்த அணை இபொழுது இருக்கிற மார்டன் உபகரங்கள் இல்லாத காலங்களில் கட்டப்பட்டதாகும். அவ்வுளவு நுணுக்கமாக கட்டப்பட்டுள்ள ஒரு பொறியியல், அற்புதம்ன்னே சொல்லலாம்.மிகவும் நேர்த்தியாக கட்டபட்டு இருக்கு, உலகின் தலைசிறந்த கட்டிட கலைகளுள் ஒன்றாகவும் இந்த அணை கருதபடுகிறது.இந்த வாணி விலாஸ்ச சாகரா அணை மைசூர்  மன்னர்களால் செயற்கையாக அமைக்கபட்ட மிகப்பெரிய நீர்த்தேக்கம் அல்லது ஏரின்னே சொல்லலாம்.
மத்திய கர்நாடக டெக்கான் பகுதியில் இருக்கும்  நகரங்கள் கிராமங்கள் தண்ணீர் வசதி இல்லாத இடங்கள், மற்றும் விளைநிலகளுக்கு இந்த அணைக்கட்டு ஒரு வரபிரசாதமாக இருக்கிறது.
மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து உற்பத்தியாகும் வேதவதி நதியின் குறுக்கே கட்டப்பட்ட அணையாகும். இந்த அணையை கட்டியவர்களின் பொறியியல் திறனை கண்டு மிகவும் வியந்து போனோம். இந்த அணையின் சுவர் இரு மலைகளை இடையில் கட்டப்பட்டு அவைகளை இணைப்பதாக உள்ளது அதன் உறுதியை ஒப்பிடும் போ து மலைகளிபோல் உறுதியாக இருக்கிறது.
இந்த அணையின் நடுபக்கத்தில் நின்று பார்க்கும் போது  நீல வானமும் நீல நிற நீர்தேக்கமும் வானத்தின் அடிவாரம் வரை இருப்பது போல்  இருக்கிறது, இதை பார்க்கும் போது மனதில் ஒரு மகிழ்ச்சி கண்களுக்கு ஒரு குளிர்ச்சி, இயற்கையின் எழிலை விவரிப்பதற்கு வார்த்தைகளே இல்லை.
போட்டோ எடுப்பதில் நாட்டம் உள்ளவர்களுக்கு, இது ஒரு சிறந்த தலமாகும் .மேலும், இங்குள்ள நீர்நிலைகள் மிகவும் ஆழமானவை அபாயகரமானவை முதலைகள் கூட இருப்பதாக சொல்கிறார்கள், அதனால் நீர்நிலைகளில் இறங்க வேண்டாம் என அறிவுறுத்த படுகிறது.புதிய இடங்களுக்கு சுற்றுலா செல்பவர்கள் இந்த இடத்திற்கு செல்லலாம் அவ்வுளவு அருமையாக உள்ளது .
இந்த அணை முக்கியமான சுற்றுலாதலமாக  இருந்தாலும், பார்வையாளர்கள் மிகவும் குறைவாகவே வருகின்றனர்.ஆனால் எந்த ஊருக்கு போனாலும் எந்த மாநிலம் ஆனாலும் காதல் ஜோடிகளுக்கு மட்டும் சுற்றுலா தலங்கள் ஈடன் கார்டனாகவே இருக்கிறது.ஆனால் இபொழுது சுற்றுலாதுறையும், காட்டுஇலாகா துறையும் இந்த இடத்தை ஒரு நல்ல சுற்றுலா தலமாக மேம்படுத்தி உள்ளனர். மலையின் மீது ஒரு அரசினர் விருந்தினர்  மாளிகையும் இருக்கு.
இந்த வாணி விலாச சகரா அணை  மரிகநிவே என்றும் அழைக்க படுகிறது. காரணம், இந்த அணையின் அடிவாரத்தில் வரலாற்று முக்கியம் வாய்ந்த கனிவே மாராம்மா என்னும் கோவிலும், அதை ஒட்டி அழகான பூங்காவும் அமைந்துள்ளது இதனாலேயே இந்த இடத்திற்கு மரி கனிவே ன்னும் பெயர் வந்தது.
அக்டோபரில் இருந்து ஜனவரி வரை உள்ள காலம் இந்த அணைக்கட்டினை பரர்க்க சிறந்த காலங்கள் என சொல்லபடுகிறது .ஏன்னா, கனிவே மாரம்மா கோவிலில் ஆண்டின் ஒவ்வொரு, நவம்பர் மாதமும் திருவிழா கொண்டாடப்படும். அந்த சமயத்தில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் திருவிழா கொண்டாத்திற்காக இந்த இடத்திற்கு வருவாங்க, அபொழுது மக்கள் இந்த அணைகட்டை பார்வையிட  திரளாக வருவாங்களாம் .   
இதைவிட முக்கியமான விஷயம் என்னன்னா இந்த இடத்தை சுற்றிலும் நிறைய தமிழ் ஆட்கள் பெரிய  விவாசாய விளை நிலங்களோட வசிக்கிறாங்க. கர்நாடகாவின் மத்திய பகுதியில் இவர்கள் எப்படி வந்தார்கள் என்று யோசிக்கும் போது, கூட்டத்தில் இருக்கும் பெரியவர் ஒருவர் சொன்னார் இந்த அணையை கட்டுவதற்கு தமிழ்நாட்டில் இருந்து நிறைய ஆட்களை கொண்டுவந்து கட்டிமுடித்தார்களாம், ஆண்டு கணக்கில் கட்டிட பணிகள் நடந்ததினால் அவர்கள் இங்கே குடும்ப சகிதம் தங்கிவிட்டனராம், அணைக்கட்டு பணிகள் முடிந்த பிறகு, அவர்களது பரம்பரையினர் இங்கே விவசாயம் செய்து இங்கேயே தங்கி கர்நாட்டக குடிமக்கள் ஆகிவிட்டார்கள் என்று சொன்னார் .
ஒரு அருமையான பழமை வாய்ந்த பொறியியல் நுட்பம் நிறைந்த ஒரு அணைக்கட்டை பார்த்த நினைவுகளுடன் பயணம் இனியதாக அமைந்தது, இங்கே செல்பவர்கள் தண்ணீரின் ஆழம் தெரியாமல் தயவு செய்து இறங்கவேண்டாம் ,அதுபோல உண்வு பொட்டலங்களை முடிந்தால் கொண்டு செல்லுங்கள், ஏனெனில் இங்கே எந்த ஹோட்டலும் கிடையாது. முக்கியமாக, தூய்மையான இந்த இடத்தை நாம் கொண்டு செல்லும் உணவு பண்டங்களால் அசுத்தம் செய்யாமல் இருக்கவேண்டும்..நன்றி, மீண்டும் அடுத்தவாரம் மௌன சாட்சிகளில் பழம் பெருமை வாய்ந்த வேறு ஒரு இடத்திலிருந்து சந்திக்கலாம் .

Monday, May 18, 2015

இராமர் பாலத்தைப் பற்றிய ஆச்சர்யமூட்டும் தகவல்கள்! - தெரிந்த கதை தெரியாத உண்மை

இன்று நமது தெரிந்த கதை தெரியாத உண்மையில்,இராமர் பாலம் பற்றிய சில உண்மைகளையும், ஆச்சர்யமூட்டும் தகவல்களையும் ,பார்க்கபோகிறோம் இராமர் பாலம் என்று ஒரு பாலம் இருந்ததா?இல்லையா? என பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன,அது உண்மையா? பொய்யா?என நாம் இங்கே விவாதங்கள் செய்ய இந்தபதிவினை தொடரவில்லை,சில மரபுவழி   கதைகளையும், சில வரலாற்று ரீதியான உண்மைகளையும் அதற்கான ஆதாரங்களையும் மட்டும் தான் இங்கே பார்க்க போகிறோம்.
இராமர் பாலம் தோன்ற காரணமாயிருந்தது ராவணன் சீதையை தூக்கி சென்றதினால் தான், அதனால் தான் சீதையை மீட்க ராம, ராவண யுத்தம் தொடங்கியது.சீதாபிராட்டியை  ராவணன் தூக்கி செல்லும் போது ஜடாயு என்ற பறவை ராவணை வழிமறித்தது.ஜடாயுவுக்கு மட்டும் ஏன்? ராமன் மீது அவ்வுளவு பாசம்.அங்கேயும் ஓரு சிறிய கதை உண்டு கருடனை நம் எல்லோருக்கும் தெரியும்.அந்த கருடனின் அண்ணன் அருணன்.இந்த அருணனுக்கு இரண்டு மகன்கள், மூத்தவன் சம்பாதி, இளையவன் ஜடாயு, ஒருமுறை சம்பாதிக்கும் ஜடாயுவுக்கும் இடையில் ஒரு போட்டி,இருவரில் யார் உயரப் பறப்பது என்று. ஜடாயு ஆர்வத்தில் சூரியனின் மிக அருகில் செல்ல,அவனைத் தடுத்து சம்பாதி தன் சிறகுகளை விரித்து தன் தமையனை காத்தான்.அப்போது, சூரிய வெப்பத்தால் சம்பாதியின்  சிறகுகள் கருகின .முடிவில் இராம நாமம் ஜெபித்து சம்பாதிக்கு சிறகுகள் மீண்டும் முளைக்கின்றன.ஆகையால்,இருவருக்கும் ராமனின் மீது தீராத பக்தி உண்டு
இராவணன் சீதையை தூக்கி செல்லும் போது பராக்கிரமம் மிக்க ஜடாயு இராவணன் மேல் பாய்ந்து தாக்கினான் ராவணன், தன்னுடைய கொடிய வேலை ஜடாயுவின் மீது எறிந்தான் அந்த வேலினால் ஜடாயுவை ஒன்றும் செய்ய முடியவில்லை.மேலும் ஜடாயு இராவணனின் மார்பிலும் தோள்களிலும் தன் சிறகுகளால் ஓங்கி அடித்தான்.அதனால் வலிமை இழந்து கீழே விழுந்து மூர்ச்சையான இராவணன் தலை சாய்த்துக் கிடந்தான். ஜாடயுவை எந்த ஆயுத்தாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆகையால், சிவபெருமான் தனக்கு அளித்த சந்திரகாசம் என்னும் வாளினை கொண்டு ஜடாயுவை வெட்டி வீழ்த்தினான்.இந்த சந்திரகாசம் என்னும் வாளுக்கு தனிகதை உண்டு இராவணன் பலமுறை பலரிடம் தோற்று போனான் வாலியிடம் ஒருமுறை நேருக்குநேர் யுத்தத்திலும் கார்த்தவீரியார்ஜுனன் என்பவனிடமும் தோற்று போனான்.மேலும் கைலாயத்தில் சென்று தன்னுடைய பராக்கிரமத்தை காட்டவே சிவபெருமானின் கால் கட்டைவிரலால் அழுந்தபட்டு மலையின் கீழ் நசுங்கி கிடந்தான்.அப்பொழுது, தன் உடம்பிலிருந்து எடுத்த நரம்பின் மூலம் வீணை செய்து அதன் மூலம் கானம் இசைத்து சிவனின் அருளை பெற்றான்.சிவன் அளித்த ஆயுதமே சந்திரகாசம், என்னும் வாள். இந்த சந்திரகாசமானது இந்திரனின் வஜ்ராயுதத்தை விடவும் பலம் பொருந்தியது இந்திரனின் வஜ்ராயுதம் மலைகளைப் பிளக்கும் வல்லமை கொண்டது அதனால் தான் ஜடாயு வீழ்ந்தபோது மலை வீழ்ந்த மாதிரி வீழ்ந்தான் எனவும் சொல்லப்படுவதுண்டு.
ஜடாயு கூறியதை வைத்து சீதா பிராட்டியை தூக்கி சென்ற இலங்கேஸ்வரனான இராவணனை வதம் செய்ய ஸ்ரீ ராமர் தலைமையில், ஹனுமன் அமைத்த பாலமே, இது என்று சொல்லும் இலங்கை வாழ் மக்கள், இதை ஹனுமன், பாலம் என்றும் சொல்வதுண்டு,இந்த இராமர் பாலத்தின் கட்டுமானத்தின் பின் உள்ள பல வியக்கத்தக்க விஷயங்களையும் அதிசயங்களையும் நாசா அண்மையில் தனது செயக்கைக்கோளை பயன்படுத்தி எடுத்த புகைப்படபடங்களை கொண்டு செய்த ஆராய்ச்சியின் மூலமாக தெளிவாக ஒரு செய்தியை வெளியிட்டது. இராமர் பாலம் உண்மைதான் இன்றைய காலகட்டத்தில் உள்ள உயர்தரமான பொறியியல் தொழில்நுட்பங்களை வைத்து கூட இப்படி ஒரு பாலத்தை கட்டமுடியாது,என கூறியது. மேலும் இராமர் பாலம் வெறும் மணல் திட்டுகள் அல்ல,மற்றும் இது வெறும் கற்களை தூக்கி வீசி கட்டியவாறு இல்லை. மேலும்,இந்த பாலம் கடல் அலைகளால் உருவாக்கப்படவில்லை இதன் முனைகள் உறுதியாக  மிக சரியாக திட்டமிட்டு கட்டிமுடிக்கப்பட்ட கட்டுமானம் என தெளிவாக தெரிகிறது என ஒரு அறிக்கயை வெளியிட்டது.
இராமர் பாலம் எனபது வரலாற்று தொன்மைமிக்க பாலம் என்பதற்கு மாற்று கருத்து  இல்லை. இந்தியாவை இலங்கையுடன் இணைக்கும் இந்த ராமர் பாலம் கடலுக்கடியில் இந்தியாவின் இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி கடற்கரையிலிருந்து துவங்கி இலங்கை வரை இராமாயணத்தில் சொல்லப்பட்டுள்ளதை போலவே மிக சரியான இடத்தில் அமைந்திருகிறது.மேலும் திருமறைக்காடு என்னும் வேதாரண்ய கடற்கரையில் பல 'ஸ்ரீ ராமர் பாத ' சிறு கோவில்கள் இதற்கு சான்று. இதனால் இராமாயணம் சொல்வது உண்மைதான்..பாக் நீரிணைப்பில் உள்ள இப்பாலத்தின் மீது மணல் குவிந்துள்ளதால், சில இடங்களில் மட்டும் இப்பாலம் வெளிப்படுகிறது.இவற்றை திட்டு என்றும் குட்டித் தீவு என்றும் மீனவர்கள் அழைக்கின்றனர்.இப்பாலம், கோரல் ரீப் என்றழைக்கப்படும் பவளப்பாறைகளைக் கொண்டது. இப்பவளப்பாறை படுகையில் மீன்கள் மற்றும் கடல்வாழ் ஊயிரினங்கள் பல வசிக்கின்றன.இப்பாலத்தின் மீது இப்போதும் சிலர் நடந்து செல்கின்றனர்.கடலுக்கடியில் மூழ்கியுள்ள பாலத்தின் மீது நடந்து சென்றால் ,முழங்கால் ஆளவுக்கு மட்டும் கடல்நீர் உள்ளது. 5 கி.மீ. தூரம் வரை நடந்தே செல்லலாம் என சொல்லபடுகிறது. 1964 வரை தினசரி வழிபாடு அங்கு நடைபெற்று வந்துள்ளது.ராமர் பாலத்தில் தற்போது தீவுகளாய் விளங்கும் திட்டைகளில் 8 வது திட்டை ராமர் திட்டைஎன்றே அழைக்கப்பட்டு அங்கு மக்கள் வசித்து வந்துள்ளனர்.இன்றும் பாலத்தை கடந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் ஸ்ரீராமர் பாலத்திற்கு நீராட்டல்எனும் பூஜை செய்துதான் அதைக் கடந்து செல்லுகிறார்கள்.மேலும் படகுகள் கரையிலிருந்து நடுக்கடலுக்கு செல்ல இப்பாலத்தில் சில இடங்களில் உடைப்பை மீனவர்கள் ஏற்படுத்தியுள்ளனர். சிங்களத்தீவினுக்கோர் பாலம் அமைப்போம், சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம் என்று பாரதியார் இப்பாலத்தைப் பற்றி பாடியுள்ளார்.ராமேஸ்வரம் தீவை, தமிழகத்துடன் தரை வழியில் இணைக்க பாம்பன் பாலம் கட்டியது கேமன் இந்தியா என்ற நிறுவனம், இந்த ராமர் பாலத்தை பயன்படுத்தி இலங்கைக்கு தரைவழிப் பாலம் அமைக்கலாம் என்று மத்திய அரசுக்கு ஏற்கெனவே ஆலோசனை வழங்கியிருந்தது. 
அகழ்வாராய்ச்சியாளர்களின் கூற்றின் படி, இராம சேது பாலம் கட்டிமுடிக்கப்பட்டு ஏறத்தாழ 17 லட்சம் ஆண்டுகளுக்கு மேல் இருக்கலாம் என கூறப்படுகிறது.கி.பி .1480 வில் கடலில் ஏற்பட்ட ஒரு பிரளயத்தால்  இராம சேது பாலம் அழிந்துவிட்டதாக அறிவியல் கூற்றுகள் கூறுகின்றன. எனவே, 1480 முன்பு வரை இராம சேது பயன்பாட்டில் தான் இருந்திருகிறது. அதை மக்கள் நடப்பதற்கு உபயோகப்படுத்தியுள்ளனர்.இந்துக்காலக்கணக்குப்படி முதல் யுகமான திரேதாயுகத்தின் முடிவில் இராமாயணம் நடைபெற்றது. ராமாயணத்தின் இறுதிக்கட்டத்தில் தான் இந்த ராமர் பாலம் கட்டப்பட்டது. கி மு 1450 வாக்கில்  இலங்கையை ஆண்ட மன்னன் தினமும் குதிரைவீரர்களிடம் இராமேஸ்வரம் இராமநாதசுவாமிக்கு அபிஷேகம் செய்வதற்கு பால் கொடுத்து அனுப்பியுள்ளதாகவும் .அந்த குதிரைவீரர்கள் இந்த ராமர் பாலம் வழியாக இலங்கையிலிருந்து தினமும் இராமேஸ்வரத்திற்கு வந்து சென்றுள்ளதாகவும் சில கல்வெட்டு செய்திகள் கூறுகின்றன அதை சிலர் மரபுவழி செய்தியாகவும் சொல்வதுண்டு.
இந்த இராமர் பாலத்தின் முக்கிய அம்சமே மிதக்கும் கற்கள் பற்றிய செய்திகள்தான். இது நிலன் மற்றும் நளன் இவர்களின் கைங்கரியத்தால் தான் கற்கள் மிதக்கின்றன என சிலர் புராணங்களில் கூறியுள்ளனர். ஆனால், கடந்த முறை சுனாமியின் சீற்றத்தின் போது கடலில் சிலர் அந்த மிதக்கும் கற்களை கண்டதாகவும். அவை இன்னும் கூட இருப்பதாகவும் கூறுகின்றனர். செங்கல்பட்டு புதிய பஸ் நிலையத்திற்கு அருகே ஒரு ராமர் கோவில் இருந்தது அங்கே சுமார் 5 வருடங்களுக்கு முன்பு இதுபோல ராமர் பாலத்தில் இருந்து எடுத்து வந்த ஒருகல்லை காட்சிக்கு வைத்திருந்தனர் அங்கு வைத்திருந்த தண்ணீர் தொட்டியில் அந்த கற்கள் மிதந்ததை நான் பார்த்து இருக்கிறேன்.
இராம சேது பாலம் தனுஷ்கோடியின் பாம்பன் தீவில் தொடங்கி இலங்கையின் மன்னார் தீவு வரை நீள்கிறது. இந்த பகுத்தியில் கடல் மிகவும் ஆழமற்று காணப்படுகிறது. கிட்டதட்ட 1௦ மீட்டர் ஆழம் மட்டுமே உள்ளது இராம சேது பாலத்தினை வடிவமைக்க மிதக்கும் கற்களை பயன்படுத்தியுள்ளனர்.கிட்டத்தட்ட 30 கி.மீ நீளமும், 3 கி.மீ அகலமும் கொண்டது இந்த இராம சேது என கூறப்படுகிறது. இதை வெரும் ஐந்து நாட்களில் ஒரு கோடி வானரங்களின் உதவியோடு, நளன் என்ற தலைமை வானரத்தின் கட்டுமான திட்டத்தின் படி  கட்டிமுடிக்கப்பட்டது, என சொல்லபடுவதுண்டு.இராம சேது இதை பற்றிய குறிப்புகள் கதைகள் நம்முடைய இதிகாசங்களில் இருக்கின்றன. இராவணனின் ஒற்றன் ஷார்துலா என்பவன் அக்கரையில் முகாம் கொண்டிருக்கும் வானர சேனைகளை பார்த்து பயந்து, இராவணனுக்கு எச்சரிக்கை செய்தி ஒன்றை அனுப்பினான். உடனே இராவணன் வானரர்களால் தானே இராமனுக்கு பலம் என அறிந்து தன்னுடைய ராஜ தந்திரங்களை பிரயோகித்தான். சுகா என்ற தன்னுடைய பிரதிநிதியை, சுக்ரீவனிடம் அனுப்பி வாலிக்கும் தனக்கும் நல்ல நட்பு இருந்ததாகவும்,  தான் சுக்ரீவனை உடன் பிறவா சகோதரனாக மதிப்பதாகவும் சொல்லி, தூது அனுப்பினான். மேலும், சுக்ரீவன் இராமனை விட்டுவிட்டு தன் பக்கம் வருமாறும் அழைப்பு விடுத்த ஓலையை வானரர்களின் முகாமிற்கு எடுத்து சென்ற போது காவலர்களால் பிடிக்கப்பட்டு அவையின் முன்னே நிறுத்தபட்டான் சுகா. வானரர்கள் அவனை கொல்ல பாய்ந்தனர் .சுகா தன் உயிருக்குப் பயந்து அலறவே அதைகேட்டு வந்த இராமர் எதிரியின் பிரதிநிதியாக வந்திருப்பவரை துன்புறுத்துவது தவறு எனகூறி அவனை விடுவிக்க சொன்னார்.
சுகா இலங்கைக்கு திரும்ம்பி செல்ல ஆயத்தமான போது அவன் வானரர்களின் பலம் மற்றும் அவர்கள் பாலம் கட்ட எடுக்கும் முயற்சியையும் இராவணனிடம் தெரிவித்துவிட்டால் நம்முடைய பலம் மற்றும் பலவீனம் எதிரிக்கு தெரிந்து விடகூடும்m எனகருதி அவனை கைது செய்து காவலில் வைக்க ஆணையிட்டான் அங்கதான். வானரர்கள் பாலம் கட்டி முடித்து வெற்றிகரமாக கடலை கடந்து அக்கரைக்கு சென்ற பிறகு தான் சுகாவை விடுவித்தனர். இதை விட சுவராஷ்யமான கதை ஒன்று உண்டு பாலம் கட்டுமான பணிகள் தொடங்கியாகிவிட்டன. அபொழுது, கட்டுமான பணிசெய்யும் வானரங்களுக்கு தலைமை நளன் என்னும் வானரம். அவர் ஆஞ்சநேயர் கொடுக்கும் பாறைகளை வலக்கையில் தாங்கி வைத்திருப்பதால் அடுத்தடுத்து ஹனுமன் கொடுக்கும் பாறைகளை, இடக்கையால் வாங்கி பாலத்தில் சேர்த்தார் நளன், அதற்கு ஹனுமன், நான் கொடுக்கும் பாறைகளை அலட்சியமாக இடக்கையில் வாங்குகிறானே இந்த நளன், முதலமைச்சரான என்னை மதிக்கவில்லை, என்று எண்ணி தானே அணையில் பாறைகளை சேர்க்க தொடங்கினார். ஆனால், அந்த பாறைகள் அனைத்தும் கட்டுமானத்திற்குள் சேராமல் கடலில் மூழ்கி விட்டன. இதை தொலைவில் இருந்து பார்த்துகொண்டு இருந்தார் நம் இராமச்சந்திர மூர்த்தி, உடனே ஆஞ்சநேயரை பார்த்து ஆஞ்சநேயா தொழில் துறையில் பெரியவர் சிறியவர் என்று பார்க்க கூடாது, நீ மலைகளை நளன் மூலமாகவே அணையில் சேர்பாயாக" என்றார்.
இதை பார்த்து கொண்டிருந்த இளவல் இலட்சுமணர் இராமரைப் பார்த்து "அண்ணா நளன் கையால் சேர்க்கின்ற பாறைகள் நீரில் அமுந்தாமல் மிதக்கின்றன.ஹனுமான் சேர்க்கின்ற பாறைகள் நீரில் அழுந்தி விடுகின்றன. ஏன்?"என்று கேட்டார்.அதற்க்கு ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி தம்பி இலட்சுமணா, சூர்ய கிரகணம். நடக்கும் கிரகண காலத்தில் தெய்வத்தினை, குறித்து ஜபம் செய்தால் ஒன்றுக்கு ஆயிரமாகப் பலன் உண்டாகும்.அதைவிட தண்ணீரில் மூழ்கி மந்திர ஜபம் செய்தால் ஒன்றுக்கு லட்சமாகப் பலன் அதிகமாகும் அதனால் தான் மாதவேந்திரர் என்ற மகரிஷி,ஒருமுறை, ஒரு கானகத்தினுள் சூர்ய கிரகணம் அன்று நீரில் ழுழுகி தவம் செய்து கொண்டிருந்தார்.அபொழுது இந்த நளன் என்னும் வானரம் குட்டி குரங்காக இருந்தது. குரங்குகளுக்குச் சேட்டை செய்வது எனபது பிடித்தமான ஒன்று. அது நீரில் தவம் செய்து கொண்டிருந்த முனிவர் மீது கற்களை எறிந்து விளையாடி கொண்டிருந்தது முனிவர் தவத்தை விட்டு எழுந்து வந்து குரங்குகளை விரட்டி விட்டு மீண்டும் நீரில் முழுகி தவம் செய்தார்.
மாதவேந்திரர் பலமுறை அந்த குட்டி குரங்கை விரட்டியும் நளன் என்ற அந்த குட்டி குரங்கு கல்லை விட்டு எறிந்து கொண்டே தான் இருந்தது, ஜபம் செய்யும் பொழுது கோபம் கொண்டு சாபம் விட்டால் ஜபசக்தி குறைந்து விடும். அதனால் அம்முனிவர் குரங்குக்கு சாபம் கொடுக்காமல், "இக்குரங்கு எரியும் கற்கள் தண்ணீருக்குள் மூழுகாமல் மிதக்க கடவன" என்று கூறிக்கொண்டு தண்ணீருக்குள் நின்று கொண்டு ஜபம்செய்ய தொடங்கினார். குரங்கு தான் எறியும் கற்கள் முழுகாமல் மிதப்பதினால் விளையாட்டின் ஆர்வம் இல்லாமல், அங்கிருந்து சென்று விட்டது. அந்த ஜபத்தின் நன்மையால் தான், இந்த நளன் இடுகிற கற்கள் தண்ணீர்ல் அழுந்தாமல் மிதக்கின்றன என்றரர், ஸ்ரீ ராமர் .அதனால் நளன் மூலமாக தான் நாம் இந்த அணையை கட்ட வேண்டும் என ஸ்ரீ ராமச்சதிர மூர்த்தி லட்சுமணிடம் கூறினார். இவ்வாறாக வானரங்கள் இரவு பகலாக பணி செய்து ஐந்து நாட்களில் அணையை கட்டி முடித்தன.அந்த அணையின் அழகைக் கண்டு இராமர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அதற்கு பரிசாக நளனை கௌரவிக்கும் விதமாக வருணபகவான்  தனக்கு முன் கொடுத்த நவரத்தின மாலையை நளனுக்குப் பரிசாக வழங்கினார்.
இந்த இராம சேது பாலத்தை ஆதாம் பாலம் எனவும் சிலர் குறிப்பிடுகின்றனர். அதற்கு பல்வேறு கதைகள் சொல்லபடுகிறது. இலங்கையில் இறக்கி விடப்பட்ட உலகின் முதல் மனிதரான ஆதாம், இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு வர இப்பாலத்தைப் பயன்படுத்தியாகவும்,ஆதாம், ஏவாளுக்கு பிறந்த குழந்தைகளான, ஆபில், ஹாபில் ஆகிய இருவரில் ஓருவரின் சமாதி இராமேஸ்வரம் ரயில் நிலையம் அருகே உள்ளது எனவும்.ஒரு இஸ்லாமிய குடும்பத்தினரால் பராமரிக்கப்படும் ஹாபில் தர்ஹாவுக்கு செல்வோரிடம், ஆதம் பாலம் என்பது ஆதாம் நடந்த உலகின் முதற் பாலம் ஏன்று விவரிக்கின்றனர்.ஆகவே இப்பாலத்துக்கு ஆதம் பாலம் என பெயரிடப்பட்டதாவும் கதைகள் உண்டு. ஆனால், உண்மை என்னவென்று அடுத்துவரும் ஆராய்ச்சி கட்டுரைகள்  மூலமாக பார்க்கலாம். மேலும் இதிலும் சிறப்பு என்னவென்றால் புத்தர் இந்த பாலத்தின் மீது நடந்து சென்றதாகவும் வரலாறு உண்டு.
இந்த ராமர் பாலம் எவ்வாறு ஆதம் பாலம் என மாற்றி அழைக்கப்பட்டது என பார்ர்க்கலாம். உலக புகழ் பெற்ற இந்திய சரித்திர ஆராய்ச்சியாளர் டாக்டர் எஸ் கல்யாணராமன் இதுபற்றி தெளிவாக விளக்கியுள்ளார்.ஆங்கிலேயர் காலத்தில் எடுக்க பட்ட ஆய்வுகள், அறிக்கையாக சமர்பிக்கப்பட்டன. அதில் 1747 ல்  நெதர்லாந்த் நாட்டில் உள்ள ஒரு அறிக்கையில் தனுஷ்கோடிக்கு முன்னே ஒரு கோவில் இருந்ததாகவும் தெளிவாக இந்த இராமர் பாலத்தை, இராமர் பிரிட்ஜ் என்றே குரிபிடுகின்றனர். அவர்கர் (டச்சுகாரர்கள் )அந்த சமயத்தில் இந்தோனேஷியா தீவுகளையும் ஆக்கிரமித்து கொண்டு இருந்தார்கள்.
மேலும் 1788 ல் ஆஸ்திரேலியாவில் இருந்து வந்த ஜோசப் பார்க்ஸ் என்ற   தாவரவியல் ஆராய்ச்சியாளர் இராமர் கோவிலை பார்த்து, இராமர் கோவில் என்று எழுதி தனுஷ்கோடியையும் தலைமன்னாரையும் இணைக்க கூடிய அந்த பாலத்திற்கு இராமர் பாலம் என தெளிவாக விளக்கியுள்ளார்.அந்த வரைபடம் முகலாய சக்ரவர்த்திகளின் ஹிந்துஸ்தான் வரைபடங்கள் (Hindhusthaan  Map of Mohal Empaires ) என்ற நூலில் 5 X  6 அடி வரைபடமாக தஞ்சை சரஸ்வதி மகாலில் இன்னமும் இருக்கிறது.
இது பிரிடிஷ்காரர்கள் காலத்தில் எடுக்கப்பட்ட ஆய்வு அறிக்கை கி பி 1799 ல எடுக்கப்பட்டது அவற்றில் கூட இராமர் பிரிஜ் .இராமர் பிரிஜ் இ ராமர் பிரிஜ் என்றுதான் வரிக்கு வரி சொல்லப்பட்டு இருக்கிறது. இவ்வறிக்கை மேலும் சிங்கள தீவிற்கும் பாரதத்திற்கும் நடுவில் இருக்க கூடிய ஒரு பாலம் இதில் நடந்து கொண்டு இருக்கிறார்கள், இது நடை பாதை,இங்கு மக்களும் இதில் இருக்கும் திட்டுகளில் வாழ்கிறார்கள், என்று கூறுகிறது.ஆனால், அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கத்தால் முதல் புவியல் ஜெனரலாக நியமிக்கப்பட்ட ஜேம்ஸ் ரன்னல் என்னும் ஆங்கிலேயே அதிகாரி இந்த இராமர் பாலத்தை ஆடம் பிரிட்ஜ், என 1804 ம் ஆண்டு மாற்றி எழுதினார். அதிலிருந்து 1804 க்கு பிறகு வந்த வரைபடங்களில், இராமர் பாலம் ஆதாம் பாலமாக மாற்றி எழுதபட்டது.
இதைவிட வேறு நிறைய ஆதாரங்களும் வரைபடங்களும் இது இராம சேது என்று அழைக்கபட்டதிற்கு சாட்சிகளாக இருகின்றன நம்முடைய இதிகாசங்களில் சொல்லப்பட்ட கருத்துக்களை எடுத்.துக்கொண்டு சிக்காகோ பல்கலைகழகத்தில்( university of chicago)  ஸ்வார்ட்பெர்க்(Schwartzberg ) என்பவர் தெற்கு ஆசியா வரைபடங்கள் என கி.பி. 8 ம் நூற்றாண்டு முதல் 12 ம் நூற்றாண்டு வரை உள்ள நூற்றுக்கணக்கான வரைபடங்கள் தயாரித்துள்ளார். அதில் கூட அவர் சில குறிப்புகளை மேற்கோள் காட்டி, இந்த பாலத்தை சேது என குறிப்பிடுவதாக சொல்லி இருக்கிறார். இபொழுது அதை ஆதாம் பாலம் என்றும் குறிபிடுவார்கள் எனவும் தெளிவாக குறிபிட்டுள்ளார். இராமேஸ்வரத்திற்கும் மகாதீர்தத்திர்க்கும் நடுவிலே, இராமேஸ்வரத்தில் ஒரு சிவன் கோவில், மகா தீர்த்தத்தில் ஒரு சிவன் கோவில், இடையில் ஒரு சிவன்கோவில் உண்டு எனவும் குறிபிட்டுள்ளார். எப்படி இராமாயணத்தில் குறிபிடபட்டுள்ளதோ அதேபோல சிவன் கோவில் ஒருபக்கத்தில் இருக்கிறது. மறுபக்கத்திலும் சிவன்கோவில் இருக்கிறது.நடுவிலும் சிவன் கோவில் இருந்திருக்கவேண்டும் அதை ஆராயபடவெண்டும் எனவும் குறிபிட்டுள்ளார்.
அதேபோல அல்-பிருனி (Abū al-Rayhān Muhammad ibn Ahmad al-Bīrūn known as Al-Biruni )என்ற இஸ்லாம் அறிஞர், இவரது காலம் 4 அல்லது 5 செப்டம்பர் 973 முதல் 13 டிசம்பர் 1048 வரை, இவர் கூட இந்த இராமர் பாலத்தை பற்றி குறிபிடுகிறார். அதை சேது பந்து என குறிபிடுகிறார். இராமேஸ்வரத்திர்கும், அஹ்னா என்ற இடத்தையும் (ஸ்ரீலங்காவில் இருக்க கூடிய ஒரு கிராமத்தின் பெயர்) அதை இரமேஸ்வரத்தோடு இணைக்க கூடிய பாலத்தின் பெயர் சேதுபந்து என குறிபிடுகிறார். மேலே இருக்கும் வரைபடத்தை தெளிவாக பார்த்தல் இது புரியும்.
புராணங்களில் பண்ண்டிய மன்னர்களது காலங்களில், குமரி கண்டம் இருந்த போது, பாண்டிய நாட்டையும் சிங்கள நாட்டையும் இணைப்பது சேதுகா எனப்படும் இந்த ராம சேதுவாகும்.
நமது வேதங்களில் குரிபிடபட்டுள்ளதை போல ,தாமிரபரணி கபாடபுரத்தில் இருந்து ஸ்ரீ லங்காவுக்கு செல்லும் வழி இந்த இராமர் சேது வழியாக செல்லும் என குறிபிடப்பட்டுள்ளது.
அதேபோல 1903 ள் மெட்ராஸ் பிரசிடென்சி அட்மினிஸ்ட்ரேட்டிவ் அறிக்கையில் இதைபற்றி சொல்லி இருக்கிறார்கள்.ஆதாம் பாலம் என்று குறிபிடுவது இராமர் பாலம் என்றும் சொல்லபடுகிறது எனவும் 1480 வரையிலும் பாரத்தையும் சிங்களத்தையும் இணைத்து இது ஒரு பாலமாக இருந்தது அந்தபாலம் அபொழுது ஏற்பட்ட ஒரு கடல்சீற்றத்தினால் பாதிக்கப்பட்டு தண்ணீர் உள்ளே புகுந்து தனிதனி திட்டுகளாக மாறிவிட்டன என்றும்,அப்படி தண்ணீருக்குள் மூழ்கிய பாலமானது தண்ணீருக்கடியில் 4 அடியில் இருந்து 10 அடிவரை மூழ்கியது எனவும் சொல்லப்பட்டது..மேலும், 1744 ல அலெக்சாண்டர் ஹமில்டன் என்பவர் நான் சிங்கள நாட்டிற்கு இந்த பாலத்தின் வழியாக நடந்து சென்றேன் என்று எழுதி இருக்கிறார்.
நம் புராணங்களில் நம் இதிகாசங்களில் இராமர் பாலம் பற்றிய குறிப்புகள் நிறைய இடங்களில் சொல்லபடுகிறது. இராமாயணத்தில் வால்மீகி சொல்கிறார், மகாபாரதத்தில் வியாசர் சொல்லுகிறார், மேலும் இரண்டாம் புரவரசேனா என்னும் ராஜா (கி பி 550-600), அவர் சேது பந்தனம் என்ற காவியமே எழுதி இருக்கிறார்.அதேபோல தாமோதர சேனா சேதுபந்தன காவியம் என்று ஒன்றையும் எழுதி இருக்கிறார். எல்லா புராணங்களிலும் இந்த ராம சேது என்னும் இராமர் பாலம் ஸ்ரீராமனால் கட்டப்பட்டது அது ஒரு புண்ணியஸ்தலம் அங்கு சென்று நீராடினால் புண்ணியம் கிடைக்கும் என்றும் சொல்லப்பட்டு இருக்கிறது .

இதை விஞ்னான பூர்வமாக நிருபித்தும் உள்ளனர்.  டாக்டர் பத்ரிநாராயணன் என்பவர் ஒரு ஜியாலோஜிஸ்ட் தேசிய கடல் தொழில்நுட்ப கழகம்  சென்னை. (National Institute of Ocean Technology)அவர் 2007 மே 12 ம் தியதி நடந்த ஒரு கருத்தரங்கில் (seminar ) ஒரு ஆய்வு அறிக்கையை (Presentation)சமர்பித்தார். அவர்களுடைய குழு இராம சேதுவில் 10 இடங்களில் ஆழ்துளை கிணறுகள் மாதிரி வடிவங்களில் துளையிட்டுள்ளனர். அதன் மாதிரிகளை எடுத்து பார்த்தபோது அற்புதம்மான ஒரு உண்மை புலப்பட்டுள்ளது சமுதிரதிற்க்கு அடியில் மணல் திடல், அதற்குமேல் கற்கள், அதற்குமேல் மணல்திடல் ,அதற்குமேல் கற்கள், என்னமாதிரி கற்கள் என்றால் Coral rocks  பவள பாறைகள் கடலில் கிடைக்கும் சங்கு அவை கல்லாக மாறியிருக்கும்  அவை கடலில் மிதக்கும் ஆனாலும் எடைகளையும் தாங்கும் அந்தமாதிரியான கற்களை கொண்டு இதை நிர்மாணித்திருகிறார்கள்,என்று கண்டுபிடித்து ஆய்வு அறிக்கையை  தெளிவாக சமர்ப்பித்துள்ளனர்.
இந்த பாலம் திட்டமிடப்பட்டு  செய்யபட்டது  ,என்று அந்த ஆய்வின் மூலம் தெரியபடுதபட்டுள்ளது .இந்த அமைப்பில் பவளப்பாறைகள் இந்த இடத்தில இருக்க வாய்ப்புகள் இல்லை எனவும்,  பவளப்பாறைகள் இந்தமாதிரி, அமைப்பில் மாற வாய்ப்பு இல்லை எனவும்,அவை வெளியில் இருந்து கொண்டு வந்திருக்கவேண்டும் என்றும் இதற்கான ஆதாரம் இராமேஸ்வரத்திலும் சரி, மகா தீர்த்தத்திலும் சரி,  ஸ்ரீ லங்கா  பகுதிகளிலும் சரி, கற்களால் ஆன ஆயுதங்களை உபயோக படுத்தியதற்கான தடயங்கள் கிடைத்துள்ளன. அந்த ஆயுதங்களினால் பவளபாறைகள் செதுக்கபட்டிருக்க வேண்டும் எனவும் தெரிய வந்துள்ளது,என ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர் .

மார்ச் 2007 ல நம்முடைய அரசாங்கமும் இதைபற்றிய தெளிவான அறிக்கைகளை கொடுத்துள்ளது. பதிவின் நீளம் கருதி அந்த  படத்தை இடமுடியவில்லை. மேலும், சில கல்வெட்டுகளின் மூலம், கிருஷ்ண தேவராயர் 1508 ல் எழுதிய சாசனத்தில் என்னுடைய சாம்ராஜ்யம் இராமர் சேது அதாவது இராமர் பாலம் வரையிலும் இருந்கிறது .நான் மேருவிர்கும் சென்று வந்திருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்.

சோழ மன்னர்களில் ஒருவரான பராந்தக சோழன் 1000 ம் வருடங்களுக்கு முன்னால் வேலாம்சேரி செப்பு  தகட்டில், அவர் சேது தீர்த்தத்திற்கு சென்றதும், துலாபாரம் கொடுத்ததையும் பொறித்துள்ளார். இதைதவிர ஆயிரகணக்கான நாணயங்கள் கிடைத்துள்ளன. இவற்றிற்கு சேது காசுகள் என்றும் ஆரிய சக்ரவர்த்தி காசுகள் என்றும் அழைக்கப்பட்டன. இதில் சேது என்று அழகாக தமிழில் எழுதபட்டு இருக்கிறது  இதற்க்கு மேலும் நிறைய ஆதராங்கள் இருகின்றன அவற்றை எல்லாம் இங்கே ஆதாரத்துடன் விளக்க ஆரம்பித்தால் பிறகு நம்முடைய பதிவு ஹனுமன் வால் போல் நீண்டு கொண்டுதான் செல்லும். இவ்வுவளவு, ஆதாரங்களையும் படிக்காமல் ஒருவர் இராமர் பாலம் ஒன்று இல்லவே இல்லை என்று சொன்னால் அவர்கள் வரலாற்றை படிக்கவில்லை வரலாற்றை புரிந்து கொள்ளவில்லை என்றுதான் அர்த்தம்.மீண்டும் இராமாயண தொடர்புள்ள ஒரு கதையான இராவணனின் மனைவி மண்டோதரியின் சுவாரஸ்யமான கதையுடன் அடுத்தவாரம் தெரிந்த கதை தெரியாத உண்மையில் பார்க்கலாம் நன்றி.

Monday, May 11, 2015

தெரிந்த கதை தெரியாத உண்மை - ராமாயண காலத்திற்கு பிறகு வானர படைகளின் நிலைமை

நம்ம எல்லோருக்கும் இந்தியாவின் இரு பெரும் இதிகாசங்களான ராமாயணம் மற்றும் மகாபாரதம் பற்றி தெரியும் அதில் நமக்கு மேலோட்டமான கதைகளையே சொல்லி கொடுத்திருப்பங்க ஆனா அதற்குள்ளேயும் நிறைய உட்கதைகள் இருக்கு அதில் நமக்கு தெரியாத பல விஷயங்கள் மறைந்து இருக்கிறது அது பற்றிய சில உண்மைகளை தான் இபொழுது பார்க்க போகிறோம் கடந்த வாரம் லக்ஷ்மணனது முடிவினை பார்த்தோம் பார்க்காதவங்க இங்கே போய் பார்த்துவிட்டு வந்திடுங்க அப்பத்தான் இந்த கதை புரியும்
வானர சேனை என சொல்லபடுவது வானர அரசன் வாலியின் தலைமையில் கிஸ்கிந்தாவில் அரசாட்சி புரிந்த பராக்கிரமம் மிக்க வானர அரசன் அவன் தம்பி சுக்ரீவன் அவரது நண்பனும் மந்திரியுமாய் இருந்தவர் அனுமன் இதில் வாலி வதம் அதன் பிறகு சுக்ரீவன் அரசாட்சி ஏற்றுகொண்டது இவை எல்லாமே நமக்கு தெரிந்த கதைகள்தாம் அதன் பிறகு சுக்ரீவன் அனுமன் மற்றும் அங்கதன் தலைமையில் வானர படைகள் ராம -ராவண யுத்தத்தில் பங்கு கொண்டு  கையில் கிடைத்த மரங்கள் பாறைகள் சிறு கற்கள் எல்லவற்றையும் ஆயுதமாக கொண்டு இலங்கேஸ்வரனின் படைகளை அனுமனின் உதவியுடன் துவம்சம் செய்து யுத்தத்தில் வெற்றி வாகை சூடி கொடுத்த வானர படைகள் ராமாயண காலத்திற்கு பிறகு என்ன ஆயிற்று அது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை அது பற்றிதான் நாம இன்று தெரிந்த கதை தெரியாத உண்மையில் பார்க்க போகிறோம்
ராமாயணத்தில் மொத்தம் ஆறு காண்டங்கள் உள்ளன அதில் ஏழாவது காண்டமான உத்திர காண்டத்தில் வானரங்கள் என்ன ஆயின அவர்களின் விதி எவ்வாறு முடிந்தது எனபது பற்றி தெளிவாக  விவரிக்கப்பட்டு உள்ளது அவதாரமான ராமன் தன்னுடைய கடமை பூமியில் ஏகதேசம் முடித்துவிட்ட நிலையில் அவரது திருஉடலை விட்டு பூமியில் இருந்து விடைபெறும் போது யமதர்மராஜனை அழைத்து தான் சரயு நதிக்கரையில் தன்னுடைய பூலோக வாழ்கையை முடித்து கொள்கிறேன் என சொல்கின்றார் ராமனின்  நிழலாக இருந்த  லக்ஷ்மணனும்  பிரிந்து விட்டான்.உடனே வசிஷ்டாதி முனிவர்கள் , ரிஷிகள்  அமைச்சர்கள்  யாவரையும் ராமர்  அழைத்தார்.பரதனுக்கு முடிசூட்டினார்.நானும்  லக்ஷ்மனனைத் தொடர்ந்து இந்த பூவுலகை விட்டு செல்கிறேன் என்ன்று பரதனிடம் கூறுகிறார் ராமர் துக்கம் தாளாமல் பரதன் மயங்கி கீழே விழுகிறான் அனைவரும் கண்ணீர்மல்க ராமனை பார்கின்றனர்
அண்ணா நீங்கள் இல்லாத இந்த ராஜ்ஜியம் என்னக்கு வேண்டாம் உங்கள் மேல் ஆணையாக சொல்கிறேன் லவனையும் குசனையும் அரியணையில் அமரசெய்யுங்கள்  லவன் கோசலத்தை ஆளட்டும் குசன் வடபகுதிக்கு அதிபதியாக இருக்கட்டும் நானும் உங்களுடனே வந்து விடுகிறேன் என அழுது புலம்புகின்றான் ராமர் சத்ருக்னனை அழைத்தார் அயோத்தியே வருத்தத்தில் ஆழ்ந்தது இதைக்கண்ட வஷிஸ்டர் ராமா மக்கள் எல்லோரும் துக்கத்தில் இருகின்றனர் அவர்களுக்கு ஆறுதல் கூறு என  வேண்டுகோள் விடுத்தார் அதனால் ராமர் தன்னுடைய மக்களை சந்தித்தார் அவர்கள் அனைவருமே ஒன்றாக சேர்ந்து பிரபோ எம்பிரானே நீ இல்லாத அயோத்தி எங்களுக்கு வேண்டாம் நாங்களும் குடும்பத்தோடு உன்னுடன் வருகிறோம் என கண்ணீர் மல்கி நின்றனர்
இதை கேள்விபட்டவுடன் சுக்ரீவன் உடனே தன்னுடைய அண்ணன் வாலியின் மகன் அங்கதனுக்கு கிஷ்கிந்தையின் மன்னனாக முடி சூடிவிட்டு தானும் தன்னுடைய வானர சேனையின் ஒரு பகுதியினரும் ராமரின் இறுதி யாத்திரையில் கலந்து கொள்வதற்காக அயோத்தி நோக்கி செல்கின்றனர் அவரது வானர சேனையுடன் ஜாம்பவான் தலைமையில் கரடி சேனைகளும் ராக்ஷசர்களும் ராமர் வைகுண்டம் செலும் போது தங்களுடைய பிறப்பின் கடமையை  முடித்துக்கொண்டு ஸ்ரீராம பிரானுடன் இணைந்து செல்ல புறப்பட்டு அயோத்தி நோக்கி பயண பட்டார்கள் அயோத்தியை வந்தடைந்தவுடனே அவர்கள் ராமரை வணங்கி நின்றனர் அப்பொழுது சுக்ரீவன் ஹேராமா எங்களுகெல்லாம் சக்ரவர்த்தியே ராமச்சந்திர மூர்த்தியே உன்னுடன் நின்று பல போர்களை வெற்றி கண்டுவிட்டோம் அதேபோல் எமனின் பாசக்கயிருக்கு முன்னே நங்கள் தோற்று விடகூடாது அங்கதனுக்கு முடிசூட்டிவிட்டேன் என் கடமை எல்லாம் முடிந்துவிட்டது நாங்களும் உன்னுடன் வருகிறோம் என கண்ணீர் மல்க நின்றான்

சுக்ரீவனின் வேண்டுகோளை ஏற்று வானரபடைகளை அவரது இறுதி யாத்திரையில் அழைத்துசெல்ல அருள்பாலித்தார் ராமர் மேலும் என்னுடைய வரலாறு நீண்டநாள் இந்த பூஉலகில்  பேசப்படும் அதுவரையில் என்னுடன் உங்களையும் சேர்த்து உங்கள் புகழும் மக்கள்  பாடிதுதிப்பார்கள் என்ற வரத்தையும் கொடுத்தார் ராமர் ஹனுமனை தன்னருகே வரவழைத்து அனுமனை ஆரதழுவி மாருதி நீ சிரஞ்சீவியாக நீண்டகாலம் இந்த பூவுலகில் வாழ்வாயாக என் நாமம் ஒன்றே உன் மூச்சாக இருக்க வேண்டும் என்று நீ வேண்டிய வரத்தையும் உனக்கு அளித்தேன் என் நாமம் உச்சரிக்கும் இடத்தில நீ இருப்பாய் என வரமளித்தார் உடனே அனுமன் தன்னுடைய வானர சேனைகளுக்கு ஒரு உறுதி அளிக்கிறார் பகவான் ராமபிரானின் ஆசிகளுடனும் சுக்ரீவன் மற்றும் போரில் ஈடுபட்ட தன்னுடைய வானர சேனைகளுடனும் ராமனுடன் வைகுண்டத்தில் ஐக்கியமாவர்கள் இதன் பிறகு இந்த நீண்ட கலிகாலம் முடியும் வரை ஜாம்பவான் முந்தன் ,துவிதன் நிலன் மற்றும் நளன் (இந்த நளன் என்ற வானரம் ராமர் இலங்கைக்கு செல்வதற்கு பாலம் கட்டியபோது அதில் முக்கியபங்கு ஆற்றியது )ஆகிய ஐந்து வானாரங்களை சிரஞ்சீவீயாக இருக்கும் வரத்தையும் பகவான் கொடுத்தார் அவர்கள் இன்றும் இருப்பதாக ஐதீகம்  

காலதேவன் ராமரிடம் கூறியது படி அவருடைய கடமை முடிந்து புறப்பட தயாராக வேண்டும் என்ற செயலுக்கு ஆயத்தமானர் பரதனின் அறிவுரைப்படி லவனையும் குசனையும் கோசலத்திற்கும் வடபகுதிக்கும் அதிபதியாகினார் இதற்கிடையில் ராமனின் தூதுவர்கள் சத்ருக்னனிடம் சென்று காலதேவனின் வருகை துர்வாசமுநிவரின் சாபம்  லக்ஷ்மணன்னின் மறைவு ராமனின் முடிவு பற்றி எடுத்து சொல்லியதால் சத்ருக்னன் உடனே அயோத்தி திரும்பினான் ராமரை கண்டு அவரது திருவடிகளில் வீழ்ந்து அண்ணா நானும் தங்களுடன் வருகிறேன் என்றான் சத்ருக்னனின் எண்ணத்தை புரிந்து கொண்ட ராமர் தம்பி சத்ருக்னா பிற்பகல் புறப்பட தயாராக இரு என  அறிவுரை கூறினார் எல்லா வானரர்களும் ராட்ஷர்களும் கரடிகளும் தங்கள்  பழைய உருவமான தேவர்களாகவும், ரிஷிகளாகவும், முனிவர்களாகவும் விண்ணுலகத்தாராகவும்  மாறி ”ஸ்ரீ  ராமா,  உங்களை விட்டு பிரிந்து இருப்பது என்பது  கனவிலும்  நடக்காத  ஒன்றுநாங்களும்  உங்களைத் தொடர்வோம்”   என்று ராமனின் எதிரே நின்றனர்.
ராமர் வீபீஷணனை அழைத்து சகோதரனே இந்த பூமி இருக்கும் காலம் வரை நான் கூறிய அறவழியில் ஆட்சி செய்து வருவாய் என கூறி வீபீஷணனுக்கு சிரஞ்சீவி வரமளித்தார் தன்னை வணங்கி நின்ற ஜாம்பவானை பார்த்து ஜாம்பவான் நீ துவாபரயுகம் முடியும் வரை பூமியில் இருப்பாய் ஒரு காரணத்தை முன்னிட்டு என்னுடன் யுத்தம் புரிந்து என்னை வந்து சேர்வாய் என்ன அருள்பாலித்தார் ஸ்ரீ ராமர்  மீதி உள்ளவர்கள் எல்லோரும் என்னுடன் வரலாம் என அவர்களுக்கு வரமளித்தார்
மறுநாள் காலையில் சூரியன் அரைமனதோடு உதித்தான் ராமர் வசிஷ்டரிடம் அக்னிஹோத்ரா அக்னிகள்  மூன்றும்  எனக்கு  முன்னே செல்லட்டும் என்றார்.வசிஷ்டர் மகா பிரயாணத்துக்குரிய  சடங்குகளை  ஸாஸ்த்ரப்ரகாரம் துவங்கி முடித்தார்  பட்டாடை, பவித்ரம்  அணிந்து, ராமர் அயோத்தியிலிருந்து வெளியேறினார். அவருக்கு  இடது புறம்  லக்ஷ்மி  தேவி வலது பக்கம்  பூமா தேவியும்  சென்றார்கள்.  சகல சாஸ்திரங்களும் வில் அம்புகளாக இருந்தவை உருவம் பெற்று அவருக்கு முன்னதாக சென்றன.  வேதங்களும் அவ்வாறே உருவம்  தாங்கி முன்பாக  சென்றன.  தேவ ரிஷிகள் உடன்  நடந்தார்கள். பிரணவம், வேதமாதா  காயத்ரி ஆகியோர் வ்யாஹ்ருதிகளோடு  ஹரியுடன் நடந்தார்கள். மந்திர கோஷம்  எங்கும் ஒலித்தது. 
ராமருடைய ராஜ்யத்தில் மிகுந்த சந்தோசத்தோடு இருந்த நகர மக்கள் தங்கள் குடும்பத்தினரோடு ராமனை பின் தொடர்ந்தனர் ராமரும் பட்டாடைகள தரித்து அரசருக்குரிய அணைத்து ஆபரணங்களையும் அணிந்து அரண்மனையில் இருந்து பரதன் சத்ருக்னன் இருவரோடும் மற்றும் குடும்பத்தினரோடும் பணியாட்கள் சேவகர்கள் கண்ணுக்கு புலனாகாத பூத கணங்களோடும் யாத்திரையை தொடங்கினார் தூரத்தில் சரயு நதி அமைதியாக ஓடிக்கொண்டு இருந்தது அந்த சரயு நதிக்கரையில் பிரம்மா மற்றும் கோடானு கோடி தேவர்கள் ரிஷிகள் சித்தர்கள் ராமனை வரவேற்க காத்திருந்தனர் ஆகாயத்தில் எண்ணற்ற புஷ்பக விமானங்கள் நறுமணம் மிக்க பூக்களை ராமரின் மீதும் அவருடன் சென்றவர்கள் மீதும் தூவின தேவர்கள்  மற்றும் கின்னர கிம்புருஷர்கள் காந்தர்வர்கள்  இசைபாடி நின்றார்கள் 
ஸ்ரீ  ராமர்  சரயுவில்  இறங்கி ஆத்ம பிரதக்ஷணம் செய்தார். பிரம்மா  ராமரை வணங்கி  ”பரமாத்மா, தங்கள் சகோதரர்களோடு ஆதி வடிவமான விஷ்ணுவாக   தோன்றி வைகுண்டம் வந்து எங்களைக் காத்தருளுங்கள் என வேண்டி நின்றார் சரயு  நதியில் மூழ்கி எழுந்த ராமர் சங்கு சக்ர தாரியாக சதுர் ஹஸ்த நாராயணனாக வெளித்தோன்றினார் லக்ஷ்மணன் ஆதிசேஷனாகி பரத சத்ருக்னர்கள் சக்கரமும் சங்குமாக  காட்சியளித்தார்கள். விஷ்ணுவின் வைகுந்த பிரவேசம்  இந்த்ராதி தேவர்களை மகிழச்செய்தது.இப்படியாக தேவர்களும் முனிவர்களும் விண்ணுலகத்தவரும்  ஸ்ரீ ராமருக்கு உதவுவதற்காக வானர படைகளாக பிறப்பெடுததும் ஸ்ரீராமரது அவதாரம் முடிந்த பிறகு அவர்களும் தங்கள் உண்மையான உருவெடுத்து சொர்க்கம் சென்றுவிட்டனர்அயோத்தி நகர மக்கள்  விலங்குகள்  யாவும் எளிய முறையில் கிடைத்தற்கரிய மோக்ஷ பதவி அடைந்தனர்.
அதன் பிறகு வானர படைகளிலே மிகவும் பிரசித்தி பெற்ற சிரஞ்சீவி அனுமன் தான் பல யுகங்கள் கடந்து சிரஞ்சீவியாக வாழ்ந்து வந்தாகவும் மகாபரதகதைகளில் கூட காந்தமாடன மலையில் பூக்கும்  சுகந்திகா மலரை பறிக்க செல்லுகையில் பீமனை சந்தித்ததாக கதைகள் உண்டு அதை மீண்டும் ஒரு பதிவில் பார்க்கலாம்  அதே போல் அர்ஜுனனும் அனுமனை சந்தித்ததாக வரலாறு உண்டு  ராமேஸ்வரத்தில் ஆணவம் கொண்டு அர்ஜுனன் கட்டிய அம்பு பாலத்தை உடைத்து எறிந்த கதைகளில் திரேதாயுகத்தில் இராமபிரான் கூறிய சில வார்த்தைகள் அனுமனுக்கு ஞாபகம் வந்தன. துவாபரயுகத்தில் நான் உனக்குக் கண்ணனாகவும் காட்சி தருவேன் என்று பகவான் கூறி இருந்தார். இந்த நினைவு வந்தவுடன் இராமபிரான் கண்ணனாக மாறி ஆஞ்சநேயருக்குக் காட்சி தந்தார் இதுபற்றிய கதைகளை கூட நாம் விரிவாக பார்க்கலாம்
வானர படைகளில் மற்றுமொரு முக்கியமான  வீ ரதீர செயல்களுக்காக அறியப்பட்டவர் ஜாம்பவான் ராமர் இந்த பூவுலகை விட்டு செல்லும் போது ஜாம்பவான் நீ துவாபரயுகம் முடியும் வரை பூமியில் இருப்பாய் ஒரு காரணத்தை முன்னிட்டு என்னுடன் யுத்தம் புரிந்து என்னை வந்து சேர்வாய் என்ன அருள்பாலித்தார் ஸ்ரீ ராமர் அதை மெய்யாகும் சம்பவமாக மகாபாரதத்தில் ஒரு கதை உண்டு சத்வதனின் வம்சத்தில் தோன்றியவன் சத்ரஜித். அவன் சூரிய பகவானிடம் தவம் செய்து சியமந்தக மணியை பெற்று கொண்டான் அந்த மணி தினமும்  எட்டு பாரம் (எடையளவு) அளவு தங்கம் சுரந்து கொண்டேயிருக்கும்.இவ்வுளவு சக்திமிக்க அந்த மணியை தன்னுடைய மாளிகையில் வைத்துக்கொள்கிறேன் என பாதுகாப்பு காரங்களுக்காக சத்ரஜித்திடம் கூறினார் ஸ்ரீகிரூஷ்ணர்
ஆனால் சத்ரஜித் தவறாக புரிந்து கொண்டு அந்த மணியை கிருஷ்ணர் அபகரிப்பதாக நினைத்துகொண்டு தன் தம்பி பிரசேனன்  என்பவனிடம்  கொடுத்தான் அந்த மணிக்கு ஒரு தன்மை உண்டு தினசரி மணிக்குரிய பூஜை முறைகள் செய்யாமலோ சுத்தம் இல்லாமல் இருந்தாலோ அந்த மணி வைத்திருப்பவரை கொன்று விடும் அதனால் பிரசேனன் காட்டில் ஒரு சிங்கத்தால் கொல்லபடுகிரான் அந்த சிங்கத்தின் கழுத்தில் இருந்த மணியின் பிரகாசத்தை கண்ட அந்தவழியாக சென்ற நமது ராமாயண கால ஜாம்பவான் அந்த சிங்கத்தை கொன்று மணியை எடுத்து கொள்கிறார் இங்கே பிரசேனனை கொன்று மணியை எடுத்துகொண்டதாக கிருஷ்ணர் மேல் பழிவர பிரசேனனை தேடி காட்டுக்கு வருகிறார் கிருஷ்ண பரமாத்மா அங்கேபிரசேனனனும் அருகே சிங்கமும் இறந்து கிடப்பதை காண்கிறார் அங்கே கரடியின் காலடித்தடம் இருப்பதை கண்டு அதை பின் தொடர்ந்து சென்றார் அது நேராக ஜாம்பவான் மாளிகைக்குச் கொண்டு சென்றது சியமந்தக மணி அங்கிருப்பதை கிருஷ்ணர் கண்டார்.ஜாம்பவானுக்கும் கிருஷ்ணருக்கும் சண்டை மூண்டது. சமபலம் கொண்ட இருவரும் மோதிக் கொண்டதால் 21 நாட்கள் சண்டை நடந்தது. ஜாம்பவான் மிகவும் களைப்படைந்து, தன் எதிரி சாதாரணமானவன் அல்ல; பகவானே என்றுணர்ந்து அவர் காலில் விழுந்து வணங்கினான் பின்னர் தன்னுடைய மகளையும் ஸ்ரீ கிருஷ்ணருக்கு மணம்செய்து கொடுத்தான் இப்படியாய வானர படையின் முக்கிய பிரதிநிதி ஜாம்பவானுடைய கதையும் முடிவுற்றது இந்த கதையையும் வேறு பதிவில் விரிவாக பார்க்கலாம்
 மகாபாரதத்திலும் வானர சேனைகளில் முக்கியமான துவிதன் மற்றும் முந்தன் இவர்களை பற்றி குறிப்பு வருகிறது யுதிஷ்டிரர் ராஜசூய யாகம் செய்கிறார் அபொழுது பொழுது வடக்கு பகுதிக்கு அர்ஜுனன் தலைமையிலான சேனையை அனுப்பினார். பீமனை கிழக்கு பகுதிக்கும் நகுலனை மேற்கு பகுதிக்கும் படை நடத்தி செல்ல ஆணை இடுகிறார் சகாதேவன் தெற்கில் பெரும்படையுடன் சென்றான் அபொழுது சகாதேவன் கிஷ்கிந்தை ராஜ்யத்தை எதிர்கொள்ளுகிறான் அங்கே ராமயண காலத்தில் ராமராவண யுத்தத்தில் அதிபராகிரம சாலிகளாக போரிட்ட முந்தன், துவிந்தாவுடன் வாரகணக்கில் போர் நடக்கிறது இதில் கிஷ்கிந்தையின் குகைகளுக்குள் போர் பயங்கரமாக நடக்கிறது சளைக்காத சகாதேவன் படை ஏழு நாட்கள் கழித்து கிஷ்கிந்தையின் அராசாட்சியை கைபற்றியது அவர்கள் தருமரின் யாகத்திற்கு தங்கள் கட்டுபடுகிறோம் என அறிவித்தனர் அப்படியாக முந்தனின் ஆதிக்கமும் முடிவுற்றது
இனி வானரபடைகளில் உள்ள முக்கியமான நபர்களில் துவிதனும் ஒருவன் அவன் கதை எப்படி ஆயிற்று என பாப்போம் இந்த துவிதன் அதிபராகிரமசாலி ஆயிரம் யானைகள் பலம் கொண்டவனாம் அவன் நரகாசுரனின் நண்பனும் ஆவான் நரகாசுர வதத்திற்கு பிறகு இந்திரனால்தான் இந்த  செயல் நடந்தது எனஎண்ணி முனிவர்களை கொடுமைபடுத்தி அவர்களை யாகம் செய்ய விடாமல் துன்புறுத்தினான் அங்கே இருக்கிற மக்களுக்கும் முனிவர்களுக்கும் தொல்லை கொடுத்து வந்தான் அவன் மிகப்பெரிய உருவம் எடுக்கும் பராகிரமசாலி என்பதால் பெரிய உருவம் எடுத்து பயிர்களைஎல்லாம் சேதம் செய்தான் அப்படி இருக்கையில் ஒரு நாள் பலராமர் ரைவதம் என்ற மலையிலுள்ள வனத்தில் கக்குத்மி அரசனின் மகளும் பலராமரின் மனைவியும் ஆகிய ரேவதி மற்றும் பணிப்பெண்களுடன்  ஓய்வெடுக்க  வந்த நேரத்தில் அங்கே இருக்கும் இளம்பெண்களிடம் முறைகேடாக நடந்து கொண்டான் துவிதன் மேலும் அவன் பலராமருக்கு இடஞ்சல் செய்து சண்டைக்கு அழைத்தான் அதில் கோபம்கொண்ட பலராமர் தன முஷ்டியினால் குரங்கின் தலையில் ஓங்கி அடித்து கொன்றார் பின்னர் அவனுக்கு காட்சி கொடுத்து அவனுக்கு விமோசனம் கொடுத்தார் அப்படியாக துவிதனின் கதையும் முடிந்தது இதுபற்றிய விரிவான பதிவு கூட பிறகு பார்க்கலாம்
இப்படியாய திரேதா யுகத்தில் இருந்து துவாபர யுகம்வரை வானரர படைகளின் சாம்ராஜ்யம் தொடர்ந்தது பூமி உள்ள காலம்வரை இருப்பீர்கள் என ஸ்ரீ ராமரால் ஆசிர்வதிக்கப்பட்ட சில பராக்கிரமம் மிக்க வானர முக்கியத்துவம் பெற்றவர்கள் இந்த கலியுகத்திலும் நம்மை சுற்றி இருகிறார்களா .அதற்கும் ஒருவிடை கிடைத்தது
சுமார் இரண்டு  வருடங்களுக்குமுன்பு வந்த செய்தி  ஒன்று இமயமலைக்கு யாத்திரை செய்த ஒருபக்தர் வழிதவறி ஒரு குகைக்குள் சென்றுவிட்டதாகவும் அங்கே  சாட்சாத் அனுமன் திவ்ய சொருபத்துடன் இருந்ததையும் கண்டாராம் உடனே அவர் மலையில் இருந்து இறங்கிவந்து நண்பர்களுடனும் மனைவியுடனும் தான் அனுமனை தரிசித்ததாகவும் அவர் தன்னை ஆசிர்வதிததையும் கூறினாராம் அன்று இரவு தூங்கபோனவர் மிகுந்த சந்தோஷமாக இருந்தாராம் அதன் பிறகு அவர் காலையில் எழவே இல்லை இறந்துவிட்டார் என பத்திரிகைகளிலும் டிவிகளிலும் சொல்லப்பட்டது அபொழுது அதை நானும் படித்தேன் அபொழுது அதை பெரியதாக எடுத்து கொள்ளவில்லை  அந்த செய்தியை  தெளிவாக ஆதாரத்துடன் எழுத தேடிய போது அதைபற்றிய தகவல் கிடைக்கவில்லை ஆனால்அந்த செய்தி மூலம் அனுமனுக்கு ராமர் சிரஞ்சீவியாக இருக்க வரம் கொடுத்ததை தான் நினைவு கூற வேண்டியது இருக்கிறது ஏன்னா இந்த கலியுகத்தில் நம்பிக்கையின் அடிபடையில் எதுவும் இயங்குவதில்லை எல்லாவற்றிகும் ஆதாரம் தேவைபடுகிறது ஆகையால் சில விஷயங்கள் நம்மால் தெளிவுபடுத்த முடியாது அதற்கு காலம்தான் பதில் சொல்லவேண்டும் மீண்டும் நமது தெரிந்த கதை தெரியாத உண்மையில் இராமர் பாலத்தைப் பற்றிய சில நம்பிக்கைகளையும் நாசாவின் ஆராய்ச்சிகளையும் பற்றி பார்க்கலாம்