Tuesday, September 15, 2015

பதினேழு வயதினிலே ...பர்த் டே ஸ்பெஷல்

பண்பான பதினேழில்
அடியெடுத்து வைக்கும்
என் அருமை மகளே!!  
பல்லாண்டு நீ வாழ்க!

பெரியோர்களின் ஆசியுடன் தரும்
அறிவுரையை மதித்து, நடந்து
இன்று முதல் தொடங்கு
உன் ஏற்றமிகு வாழ்வை......,

பாச வலையில் எங்களை 
சிறைப்படுத்திக் கொண்டவளே!
சாதனை பல குவித்து
நீ வாழும் வகைக் கண்டு
பூரிக்க அன்பான கூட்டம் உண்டு.

அழகில் மயிலாய்,
நடையில் அன்னமாய்,
பண்பில் பாட்டியையும்,
குணத்தில் பாட்டனையும் கொண்டு...

நல்லவை கொண்டு, தீயதை தள்ளி...
மனித நேயமும்,உண்மையும்,நெஞ்சுறுதியும் கொண்டு
வாழ்வின் எல்லா உயரங்களுக்கும்
 நீ செல்ல நீ ஏறும் படிக்கட்டாய்   நானிருப்பேன்...,
எந்நாளும் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்.
    வாழ்க நீ பல்லாண்டு...