Thursday, November 10, 2011

நீ பிறந்த காலம்..., அழகுக்காலம்....,

மழைக் காலம், கார்காலம், வசந்த காலமெல்லாம்,     எந்த மாதமென்று எனக்குத் தெரியாது ஆனால்.    நீ பிறந்த இந்த மாதம் எனக்கு அழகுக்காலம்!!..,
ஒரு வேளை, கால எந்திரம் மட்டும் எனக்கு கிடைத்தால் நீ பிறந்தபொழுது,     நான் என்ன செய்து கொண்டிருந்தேன்?     எனப் பார்க்க ஆசை!  அழுகையோடு பிறந்தாயா?    அழகோடு பிறந்தாயா? இல்லை என்னை காண ஆவலோடு பிறந்தாயா?
உன் தாய்க்குதான் நீ பிறந்தாய். ஆனால், என் தாய்க்குப் பின்..., என் தாய் ஆனாய். உன் பிறப்பில் தான்    கண்டுகொண்டேன்…    கவிதைக்கும் உயிருண்டென...,!     
ஒவ்வொரு பிறந்த நாளிலும்...,  ஒரு  வயதோடு, கொஞ்சம் அழகையும்    ஏற்றிக் கொள்கிறாய் நீ! உன் பிறந்த நாளன்று     உன்னை வாழ்த்துவதா?இல்லை,   நீ பிறந்த இந்த நாளை வாழ்த்துவதா? புரியாமல் விழித்து நிற்கிறேன். எப்பொழுதும் போல்!!
பிறந்தநாளை எப்போதும்    ஆங்கிலத் தேதியில் கொண்டாடுகிறாய்…    என்ன பாவம் செய்தது, தமிழ் தேதி மட்டும்?  ஒருநாளுக்காக ஓராண்டு காத்திருக்க முடியவில்லை என்னால்!?.    உன் பிறந்தநாளை மாதம்தோறும்…    இல்லையில்லை,நீ பிறந்தகிழமையன்று    வாரம் தோறும் கொண்டாடுவோமா? இல்லையெனில், மணித்துளிகள்தோறும் கொண்டாடுவோமா?
 

உன் பிறந்த நாளை    தேவதைகள் தினமாய்க் கொண்டாட..,    தேவதைகளே தீர்மானித்திருப்பது     உனக்குத் தெரியுமா?! உன் பெயரில் நடக்கும்     பிறந்தநாள் அர்ச்சனையை ஏற்றுக்கொள்ள     தவம் கிடக்கின்றன…    எல்லாத் தெய்வங்களும்! நீ பிறந்த அன்றிலிருந்து     தன் சாதனைப் பட்டியலில்     உன் பிறப்பை முதன்மையாய்க்    குறித்து வைத்திருப்பான் பிரம்மன்!
ஒருமுறைதான் பிறந்தாய்,    உன்னைப் பார்க்கும்     ஒவ்வொரு முறையும் பிறக்கிறேன் நான்.., உன் பிறப்பு     உன் தாய்க்குத் தாய்மையையும்,    எனக்கு வாழ்வையும் தந்தது! உன் அறிமுகமில்லயேல், நான் என்னவாகியிருப்பேனோ?! தெரியாது.

விந்தையான உலகம்…….!
விளங்கமுடியா மானிடம்……!
நொந்துபோய் வீழாமல்…….
சிந்தனைவேண்டும்.
சீரியதாய் நேரியதாய்

வாழக்கிடைத்த பயன்
நான்மட்டும் வாழ்வதல்ல
நாம்வாழ நான்வாழ
சுற்றமே வாழவேண்டும்
இவ்வுண்மை புரிதல்வேண்டும்

நீவீர் சிரித்து
இன் நிலத்தைச் சிரிக்கவைத்து
நீர் வாழும் வாழ்வை
நினைத்துப் பார்க்கின்றேன்
இதுதான் வாழ்கை

வருடங்கள் வருவதிலும்
போவதிலும் என்னபயன்?
செய்யும் செயல்களால்த்தான்
செயல்களுக்கும் பயன்

இன்னுமோர் ஆண்டு
இனிதாய் மலர்ந்திருக்கு
புதிதாய் பெரிதாய்
நிறைவாய் உயர்வாய்
வாழ வாழ்த்துகிறேன்…!
       டிஸ்கி:எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்து நட்பென்னும் ஓர் புள்ளியில் இணைந்து, ஒரே அலைவரிசையில் பயணித்து, வாழ்வாதாரத்திற்காக, என்னை பிரிந்து, தூரதேசத்தில் வாழும் என் தோழமைக்கு இன்று பிறந்த நாள்.

                                                                       

                                                      

18 comments:

  1. உங்கள் தோழமைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. நல்லா எழுதியிருக்கீங்க... இன்று பிறந்த அந்த தோழமை படித்தால் சந்தோஷப்படுவார்...

    ReplyDelete
  3. அருமையான கவிதை எழுதிய உங்களுக்கும் ,இன்று பிறந்த நாள் கொண்டாடும் உங்கள் தோழமைக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. நல்ல பகிர்வு... உங்கள் தோழமைக்கு எங்களது சார்பிலும் வாழ்த்துகள் சொல்லி விடுங்கள்...

    ReplyDelete
  5. "ஹாப்பி பர்த்டே" - எங்க சார்புலயும் சொல்லிக்கிறோம்.. நீங்க சொல்லிடுங்க அவங்களுக்கு..

    ReplyDelete
  6. உங்கள் தோழமைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  7. என் சார்பாகவும் வாழ்த்துகளை சொல்லி விடுங்க

    ReplyDelete
  8. எங்கோ இருக்கும் உங்கள் தோழமைக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி இருக்கிறீர்கள். அவர் இதை படிக்க வேண்டும். உங்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும்.


    நம்ம தளத்தில்:
    வாசகர்கள், பதிவுலக நண்பர்கள் மற்றும் அனைத்து நல்உள்ளங்களுக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  9. அருமை அருமை எழுத்தில் தாய்மையின் அன்பு ஆயிரம் கதை சொல்லுகிறது...!!!

    எனது பிறந்தநாள் வாழ்த்தையும் சேர்த்து சொல்லிருங்க ராஜி....

    ReplyDelete
  10. >>>>>டிஸ்கி:எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்து நட்பென்னும் ஓர் புள்ளியில் இணைந்து, ஒரே அலைவரிசையில் பயணித்து, வாழ்வாதாரத்திற்காக, என்னை பிரிந்து, தூரதேசத்தில் வாழும் என் தோழமைக்கு இன்று பிறந்த நாள்.



    வாழ்வாதாரமா? வாழ்வாதாயமா? நான் தமிழ்ல கொஞ்சம் வீக்

    ReplyDelete
  11. >...>>>>>11.10.2011


    ஒரு மாசம் பேக்ல இருக்கு போல உங்க பிளாக்கின் டைம் அட்ஜஸ்மெண்ட் ஹா ஹா

    ReplyDelete
  12. உங்களோடு சேர்ந்து நானும் சொல்லிக்கொள்கிறேன்
    பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    த.ம 7

    http://thulithuliyaai.blogspot.com/2011/11/blog-post_10.html

    ReplyDelete
  13. Ungal kavithai pena samooga avalangalaiyum paadumanal makizhchi adaiven.

    ReplyDelete
  14. பிந்திய எனது வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் .சிறப்பான ஆக்கத்தை வெளியிட்ட தங்களுக்கு நன்றி சகோ .....

    ReplyDelete
  15. அருமையான பதிவு
    அழகான வாழ்த்துப்பா
    உங்கள் தோழமைக்கு எனது இனிய மனம் கனிந்த
    பிறந்த நாள் வாழ்த்துக்கள்
    த.ம 10

    ReplyDelete
  16. உன் பிறந்தநாளை மாதம்தோறும்… இல்லையில்லை,நீ பிறந்தகிழமையன்று வாரம் தோறும் கொண்டாடுவோமா? இல்லையெனில், மணித்துளிகள்தோறும் கொண்டாடுவோமா?

    அன்பு மிகுந்த சிந்தனை, பெருகட்டும் உங்கள் அன்பு வாழ்த்துக்கள்!

    ReplyDelete