Showing posts with label காமராஜர். Show all posts
Showing posts with label காமராஜர். Show all posts

Wednesday, December 12, 2018

தொட்டிப்பாலமா?! தொட்டில்பாலமா?! - மௌனச்சாட்சிகள்

கோட்டைகள், புகழ்பெற்ற கட்டிடங்கள், இடிஞ்சுபோன வரலாற்று சின்னங்கள், சமாதிகள்ன்னு மௌனசாட்சிகளில் பார்த்திருக்கோம். கலை, அறிவியல், பண்பாடு, கலாச்சாரத்துல மட்டுமில்ல நம்மாளுங்க நீர் மேலாண்மைல வெளுத்து வாங்கி இருக்காங்கன்னு நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?! எல்லாம் தெரியும். முல்லை பெரியாறு அணை, சாத்தனூர் அணைன்னு நீயே பதிவு போட்டிருக்கே ராஜின்னு நீங்க எதிர்வாதம் செய்யலாம்.  காசும், இடமும், வசதி வாய்ப்பும் இருந்தால் இன்னிக்கு எத்தனையோ அணைகளை கட்டமுடியும். ஏன்னா இன்னிக்கு அறிவியல் அந்தளவுக்கு வளர்ந்திருக்கு. ஆனா, அந்த காலத்தில் அந்தரத்தில் ஒரு பாலத்தை கட்டுறதே அதிசயம். அந்த பாலத்துல தண்ணி ஓடுதுன்னா?! எத்தனை பாராட்டுக்குரிய விசயம்?! நான் எந்த இடத்தை சொல்ல வரேன்னு இந்நேரத்துக்கு பலர் யூகிச்சிருப்பீங்க. எஸ் அதே இடம்தான். குமரி மாவட்டத்தின் மாத்தூர் தொட்டிபாலம்தான்.
செங்கோட்டை டூ கொல்லம் ரயில்பாதை
வருசா வருசமும் மலைக்கு போய்வரும் அப்பா ஒருவாரத்துக்கு தான் போய் வந்த இடங்கள் பத்தி கதைகதையாய் சொல்வார். அந்த கதைகளில் தவறாமல் இடம்பெறும் இடங்களில் முக்கியமானது குற்றாலம் செங்கோட்டையிலிருக்கும் ஒரு ஓடையும், செங்கோட்டை டூ கொல்லம்  ரயில்பாலமும்( இந்த பாலம் நிறைய சினிமாவில் வந்திருக்கு)......  மாத்தூர் தொட்டிப்பாலமும்....  என் அப்பா ஒவ்வொரு இடமா  சிலாகிச்சு சொல்லச்சொல்ல  நேரில் பார்த்தமாதிரியே இருக்கும். கூடவே, அந்த இடங்களுக்குலாம் போகனும்ன்னு ஆசை வரும். 
குமரி மாவட்டத்திலிருக்கும் மாத்தூர் தொட்டிப்பாலம் ஆசியாவிலேயே மிகப்பெரிய தொட்டிப்பாலம். கேரள-தமிழக எல்லையில் இருப்பதால் இந்த இடம் கேரளத்தின் சாயலில் இருக்கும். தொட்டி மாதிரி அமைப்புள்ள பல பகுதிகளையும் இணைச்சு பாலமாக்குனதால தொட்டிப்பாலம்ன்னும், இரு மலைகளுக்குமிடையே ஒரு தொட்டில்மாதிரி இந்த பாலம் இருக்குறதால தொட்டில்பாலம்ன்னு பேர் வந்து இப்ப தொட்டிப்பாலம்ன்னு ஆகிடுச்சு. இதுக்கு பேர் வந்துச்சு.  
மலையும் மலை சார்ந்த இடமுமாய் இருந்த மாத்தூர் பகுதியிலிருக்கும்  கணியான்பாறைன்ற மலையையும் கூட்டுவாயுப்பாறைன்ற  மலையையும்  இணைச்சு, பறளியாற்று நீரை கொண்டுச்செல்ல கட்டப்பட்ட பாலமிது.  இரண்டு மலைகளை இணைச்சு கட்டப்பட்டிருக்கும் இந்த பாலத்தின் நீளம் 1204 அடி, தரைமட்டத்திலிருந்து 104அடி உயரத்தில் கட்டப்பட்டிருக்குது. 
இந்த பாலம் பெரியப்பெரிய தொட்டியா  கட்டி, அவைகள் தொகுக்கப்பட்டு தண்ணீர் செல்லும்  பாலமா மாறி இருக்கு. அந்த பகுதிகள் ஏழு அடி அகலமும், ஏழு அடி உயரமென கட்டப்பட்டிருக்கு.   இந்த பாலத்தை தாங்க மொத்தம் 28தூண்கள் கட்டப்பட்டிருக்கு.  ஒவ்வொரு தூணின் சுற்றளவும் 32 அடியாகும்.  இந்த பாலத்தின் நடுப்பக்கத்திலிருந்து கீழ பார்த்தா, ஆத்து தண்ணியும், அதைக்கடக்க ஒரு சாலையுமென அழகா காட்சியளிக்கும் இந்த இடம்.  

இந்தப் பாலத்தின் வழியா போகும் தண்ணி குமரி மாவட்டத்தின் கல்குளம், விளவங்கோடு வட்டத்திலிருக்கும் ஊர்களின் நீர்ப்பாசனத்துக்கு உதவுது. அணையிலிருந்து வரும் தண்ணி முதலில் மாத்தூர் பாலத்திற்கும் அதன்பின் செங்கோடி, வடக்குநாட்டு பாலங்கள் வழியா தேங்காய்ப்பட்டணம், அதைச் சுற்றியுள்ள கிராமத்திற்கும் பாயுது.

ஒரு டூவீலர்ல சமாளிச்சு ஓட்டுமளவுக்கு  இந்த பாலத்தின் அகலத்தில் குறுகிய பாதையில் பாலத்தின் இந்த முனையிலிருந்து அந்த முனைவரை செல்லலாம். இரு மலைகளுக்கிடையே, மேலிருக்கும் நீலவானம், பறந்து செல்லும் மேகம், கீழிருக்கும் அடர்ந்திருக்கும் தென்னை, ரப்பர் மரங்கள்,   சலசலத்து ஓடும் ஆறு என இயற்கை எழிலை கண்டு ரசிக்கலாம்.  என்னை மாதிரியான உயரத்தை கண்டு பயப்படுறவங்க இந்த இடத்தை தவிர்த்துடலாம். அதனால்தானோ என்னமோ என்னால் இதுவரை இந்த இடத்துக்கு போகமுடில.     
என்னைமாதிரி பயந்தாங்கொள்ளிங்களும், கால்வலி எடுத்தவங்களும் பாதியிலேயே கீழிறங்க, பாலத்தின் பக்கத்திலிருக்கும் படிக்கட்டுக்களால் கீழ வரலாம்.   பாலத்துக்கடியில் நதிக்கரையில் குழந்தைகள் விளையாட சின்னதா ஒரு பூங்கா இருக்கு.  கன்னியாக்குமரியின் விளவன்கோடு, கல்குளம், அதைச்சுற்றியுள்ள பகுதிகள்லாம் ஒருகாலத்தில் வறண்டிருந்தது. அப்பகுதிகளுக்கென நீர்ப்பாசன வசதிகளை செம்மைப்படுத்தினால் விவசாயம் நடந்து இப்பகுதி வளம்படும்ன்னு எண்ணிய பெருந்தலைவர் காமராஜர்  முயற்சியால் இந்த பாலம் 1962ல கட்ட ஆரம்பிச்சு,  1966ம் ஆண்டு கட்டப்பட்டது. மாத்தூர் தொட்டிப்பாலத்தின் பயனாக பல ஹெக்டர் விவசாய நிலங்கள் பயன்பெற ஆரம்பிச்சு கன்னியாக்குமரி மாவட்டம் விவசாயத்தில் தன்னிறைவு அடைஞ்சுது.
இந்த பாலம் திருவட்டாறிலிருந்து 3கிமீலும், கன்னியாக்குமரிலிருந்து 60கிமீலும், நாகர்கோவிலிலிருந்து 45கிமீ தூரத்திலும் இருக்கு.  சாலைமார்க்கமாவும், ரயில் மார்க்கமாவும் போகலாம். ஆகாயமார்க்கமா போகனும்ன்னா திருவனந்தபுரம்வரை போயிட்டு அங்கிருந்து சாலை மார்க்கமா 70கிமீ பயணிச்சா இந்த பாலம் வரும். எல்லாரும் ஒருக்கா போய் பார்க்கவேண்டிய இடம்ன்னு  அப்பா சொல்வார். எனக்குதான் இதுவரை அமையவே இல்ல. 

நம் பாட்டனின் கட்டிடக்கலை, நிர்வாகத்திறன், திட்டமிடுதல், நீர்மேலாண்மை, விவசாயத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவம்ன்னு பலவிசயங்களை இன்றைய தலைமுறைக்கு எடுத்துக்காட்டும் விதமா மௌனமாய் நின்றுக்கொண்டிருக்கிறது இந்த மாத்தூர் தொட்டிப்பாலம்.

படங்கள்லாம் நெட்ல சுட்டது....

நன்றியுடன்,
ராஜி

Monday, August 19, 2013

மனைவி பிறந்த நாளை மறக்காம இருக்கனும்ன்னா என்ன செய்யனும்?! -ஐஞ்சுவை அவியல்


ஏனுங்க மாமா! என்ன ஃபோட்டோவை அப்படி பார்த்துட்டு இருக்கீக. எதாவது சின்னபய மவளை பார்த்துட்டு இருக்கியா?!


ம்க்கும் உன் ஒருத்தியை கட்டிக்கிட்டு படுற பாட்டுக்கே ஏழேழு ஜென்மத்துக்கும் பெண்ணாசை வராது. இதுல இந்த ஜென்மத்துல இன்னொருத்தியா?! என் உடம்பு தாங்காது புள்ள!

ம்க்கும் எதுக்கெடுத்தாலும் ஒரு கிண்டல் பேச்சு!!

இப்படி நான் எது சீரியசா சொன்னாலும் விளையாட்டுத்தனமா எடுத்துக்குறதுனாலதான் என்  பொழப்பு கொஞ்சமாவது ஓடுது.

வெட்டி பேச்சு பேசாம அந்த போட்டோ என்னன்னு சொல்லுங்க மாமா!! தர்ம புரில “மல்லிகார்ஜுனர்” கோவில்ல இருக்குற “நவாங்க” மண்டபத்துல நூறு தூண்கள் இருக்காம். அதுல, ரெண்டு தூண்களோட அடிப்பகுதி பூமில நாலு பக்கமும் முழுசா படியாம மூணு பக்கம் மட்டும்தான் படிஞ்சு இருக்காம்!! அதுல மெல்லிய குச்சி இல்லாட்டி துணியை இந்த பக்கம் நுழைச்சு அந்த பக்கம் எடுக்கலாமாம். ஒரு பக்கம் படியாம இருந்தாலும் 2 இல்ல 3 டன் வெயிட் இருக்குமாம் இந்த தூண். நம்ம முன்னோர்கள் எவ்வளவு அழகா நுட்பமா சிற்ப வேலை செஞ்சு இருக்காங்கன்னு ஆச்சர்யமா பார்த்துக்கிட்டு இருக்கேன்.

அப்படியா!! இதே மாதிரி ஒரு தூண் கர்நாடகா மாநிலத்துல இருக்குற ”பேளுர்”ன்ற ஊர்ல இருக்கு. நான் பார்த்திருக்கேன். ம்ம்ம் நான் ஒரு ஆச்சர்யமான விசயம் சொல்லவா?!

ம் ம்ம் சொல்லு பார்க்கலாம்!!



காமராஜரை நாம படிக்காத மேதைன்னு சொல்லுறோம். அவர் ஸ்கூலுக்கு போகாதவர்! இங்கிலீசு பேசத் தெரியாதுன்னு சொல்லுறோம். ஆனா, அது உண்மையில்லைன்னு புரிய வச்ச ஒரு நிகழ்ச்சிதான் சொல்ல வரேன்.

ஒரு தரம் நேரு மாமா, சென்னைக்கு வந்து டெல்லிக்கு திரும்புற நேரம். ஏரோப்பிளேன் படிக்கட்டுல ஏறும்போதுதான் , முக்கியமான ஃபைல் சிலது மறந்துட்டு வந்தது ஞாபகம் வர, திரும்பி பார்த்தார். அப்போ காமராஜர் அந்த ஃபைல்களை எடுத்துக்கிட்டு கீழ நின்னபடியே படிக்கட்டுல இருந்த நேருக்கிட்ட கொடுத்தார்.

குனிந்து ஃபைல்களை வாங்கிய நேரு, You are so tall"ன்னு சொன்னார். அதாவது நீங்க உயர்ந்தவர் கூடவே உயரமானவர்ன்னு இரு பொருள் படுற மாதிரி சொல்லி இருக்கார். உடனே, அதுக்கு பதில் சொல்லும் விதமா காமராஜர்..., நீங்கள் என்னைவிட உயர்ந்தவர்ன்னு பொருள் வர்ற மாதிரியும் கூடவே நேரு ஏரோப்பிளேன் படிக்கட்டு உயரத்துல நிற்குறதையும் சேர்த்து   "But not to your level"ன்னு ஒரே வ்அரியில் சொன்னாராம். காமராஜர் படிக்காத மேதைங்குறதுக்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டுன்னு ஒரு புக்குல படிச்சேன் மாமா!! 




 
மாமா! நம்ம வூட்டுல இருக்குற தென்னை மரத்துல பூ விட்டுருக்கு மாமா!! அதுக்கு சடங்கு செய்யனும் மாமா! அதுக்கு கட்ட ஒரு புது சீலை வாங்கி வாங்க மாமா!!


ம்ம்ம் சரி புள்ள! நான் நல்ல நாள் பார்த்து வரேன். நீ புட்டு, வடை செஞ்சு வை. தென்னையும், பொண்ணும் ஒண்ணு. பொண்ண்ங்க சடங்காகுற மாதிரிதான் தென்னை மரம் பூ பூக்குறது. தேங்காய்க்கும் தமிழருக்கும் அவ்வளவு பொருத்தம். ஒவ்வொரு நாளும் எதாவது ரூபத்துல தேங்காயை யூஸ் பண்ணிட்டுதான் இருக்காங்க. காது குத்து தொடங்கி சாவு கருமாதி வரைக்கும் இந்த தேங்காய் தமிழர் வாழ்வுல இருக்கு. 



நம்ம சாப்பாட்டுல கூட சட்னி, துவையல், குருமான்னு பல ரூபத்துல தேங்கா கலந்து இருக்கும். அந்த தேங்காயில பல முக்கியமான சத்துகள் இருக்கு.உடம்புக்கு பலத்தை கொடுக்க கூடிய  வைட்டமின்கள், தாதுக்கள் இதுல நிறைய இருக்கு. நானூறு கிராம் தேங்காயை சாப்பிட்டு தண்ணி குடிச்சா நாந்வெஜ் சாப்பிட்டதுக்குண்டான அளவு கலோரி கிடைக்குதாம். அன்னிக்கு ஃபுல்லா நாம வேலை செய்வதற்குண்டான, தாது உப்புகள், வைட்டமின்கள்லாம் கிடைச்சுடுதாம்.

தேங்காயில அதிகமான கொழுப்பு சத்தும், புரத சத்தும் இருக்காம். 100 கிராம் தேங்காய் பருப்பில் 354 கலோரிகள் தருதாம்.  'லாவுரிக் ஆசிட்' ன்ற  கொழுப்பு அமிலம் தேங்காயில இருக்காம். இது ரத்தத்துல உடலுக்குதேவையான எச்.டி.எல். வகை கொழுப்புகளை ரத்தத்தில் அதிகரிக்கச் செய்யுதாம். எச்.டி.எல். கொழுப்புகள் ரத்தத்தைஎடுத்துச் செல்லும் கரோனரி தமனியில் தடை ஏற்படுவதை தடுக்கும் ஆற்றலும் கொண்டதாம்.



இளநீர்ல ஒற்றைச் சர்க்கரை, எலக்ட்ரோலைட்டுகள், தாது உப்புக்கள் மற்றும்  சைட்டோகைனைன் லாம் கூட இருக்காம். பாஸ்படேஸ், கேட்டலேஸ், டீகைட்ரோஜனேஸ், பெராக்சைடேஸ், பாலிமரேஸ் போன்ற நொதிக் காரணிகளும் இளநீரில் இருக்குதாம் இவை ஜீரணம் மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தில்பங்கெடுக்குதாம்.  தேங்காய் எண்ணை சமைக்குறதுக்கும், கூந்தல் உறுதிக்கும், மருந்து தயாரிக்குறதுலயும் பயன்படுதாம்.


இளநீரில் இருக்குற சைட்டோகைனைன், முதுமையை தள்ளி போடுமாம்.  மேலும் ரத்தக் கட்டிகள் மற்றும் புற்றுக் கட்டிகளுக்கு எதிராக செயல்படும் ஆற்றல் கொண்டதாம்.  தேங்காய் பருப்பில் தாமிரம், கால்சியம், இரும்பு, மாங்கனீசு, மக்னீசியம் மற்றும் துத்தநாகம் போன்ற அத்தியாவசிய தாது உப்புக்கள் உள்ளன.  பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்களான போலேட், ரிபோ பிளேவின், நியாசின், தயாமின், பைரிடாக்சின்ன்னு நிறைய சத்துகள் இருக்காம்.

அதனால, நம்ம வூட்டுல காய்க்குற தேங்காய்களை அக்கம் பக்கம் இருக்குறவங்களுக்கு கொடுத்து மீதம் இருக்குறதை வேச்ட் பண்ணாம சமைச்சு யூஸ் பண்ணு புள்ள!

சரிங்க மாமா! இத்தனை சத்துகள் இதுல இருந்தா நான் ஏன் வேஸ்ட் பண்ண போறேன். ?!

உங்களுக்கு ஒரு யோசனை சொல்லவா?! உங்களுக்குதான் பொண்டாட்டியை தாக்கி வர்றதையெல்லாம் ரசிச்சு படிப்பீங்களே!

ம்ம்ம் புரிஞ்சுக்கிட்டா சரி! ஆம்புளைங்க படும் பாடு அப்படி!! அதனாலதான், அதுப்போல துணுக்குகளை ரசிக்கிறோம்.

மனைவியோட பொறந்த நாளை மறக்காம இருக்க என்ன செய்யனும்ன்னா!! ஒரே ஒரு முறை அவங்க பொறந்த நாளை மறந்து பாருங்க. அப்புறம் ஈரேழு ஜென்மத்துக்கும் மறக்க முடியாம செய்துடுவாங்க.

ம்ம்ம் கரெக்ட்தான்!! சின்ன விசயத்தை கூட பெரிசாக்கி இம்சிப்பீங்களே நீங்கதான். அது போகட்டும். ஒரு குழந்தை தானா பத்தி எரியுதே!! உனக்கு தெரியுமா? நியூஸ்ல லாம் போட்டு காட்டுனாங்களே!



ம்ம் பார்த்தேன். அதுக்கு பக்கத்து வீட்டு பூவாயி சொல்லுறா மாமா! அந்த குழந்தை இப்படி பொறந்ததால இந்த பூமி அழிய போற நேரம் வந்துட்டுதாம்!! அதான் இப்படி சாமி குறிப்பால சொல்லுதாம்!!

ம்க்கும் சாமியும், இல்ல பூதமும் இல்ல புள்ளா முழுசா சொல்லுறென் கேளு, விழுப்புரம் மாவட்டம் திண்டிவணம் அருகே உள்ள பரங்குனி கிராமத்தை சேர்ந்த கர்ணம், ராஜேஸ்வரி தம்பதியினருக்கு போன மே மாசம் 22 ஆம் தேதி ரெண்டாவது பிறந்தது. குழந்தை பிறந்த ஒன்பதாம் நாள் அக்குழந்தை திடீரென்னு தானா தீப்பற்றி எரிஞ்சுதாம். எதாவது ஆக்சிடெண்ட் போல இருக்கும்ன்னு அப்போதைக்கு தேடி பார்த்து சமாதானம் ஆனாங்க. ஆனா, மறுபடியும்  13 ஆம் நாள், 30 ஆம் நாள் ன்னு திரும்ப திரும்ப அந்த குழந்தையின் உடல் தானா தீப்பற்றி எரிஞ்சுது, 

ஐயோ பாவம்!! அந்த பாப்பாக்கு என்னதான் ஆச்சு?!

அதனால பாப்பாவோட உடம்புல தீக்காயம் வந்துச்சாம். இது ஏதோ பில்லி சூனிய வேலையான்னு இருக்கும், மந்திரித்து தாயத்து கட்டுங்கன்னு சொன்னதை நம்பி அதுப்போல செஞ்சு இருக்காங்க. அப்படியும் சரியாகம போகவே ஹாஸ்பிட்டலுக்கு போய் இருக்காங்க.



அங்க போய் டெஸ்ட் பண்ணி பார்த்து அதிகப்படியான பாஸ்பரஸும், நீர்பற்றாக்குறையும் தான் இம்மாதிரி உடல் தானா பத்தி எரிய காரணம் ன்னு சொல்றாங்க.  இல்ல, இது ஏதோ சாத்தானோட வேலைதான்னு சொல்ற ஆளுங்களும் இருக்கத்தான் செய்யுறாங்க.


என்னமோ இது மாதிரி புரியாத அறியாத வியாதிலாம் வசதி இல்லாதவங்களுக்குதான் வருது. எது எப்படியோ!! அந்த பாப்பா நல்ல படியா பொழச்சு ஆரோக்கியமா இருக்கனும்ன்னு சாமிக்கிட்ட வேண்டிக்கலாம் மாமா!!

ம்ம்ம் கரெக்ட்தான்.  சரி, நான் கொஞ்சம் வயக்காடு வரை போய் வரேன். நீ வேலையை பாரு புள்ள!