என்ற பதிவுக்கு ராஜி வரல, நாம ஏன் ராஜி பதிவுக்கு போகனும்ன்னு இதுவரை நீங்க யாரும் நினைச்சதே இல்ல. கொஞ்சம் கேப் விட்டு வரும்போது உங்க வீட்டு பொண்ணா நினைச்சு என் பதிவுக்கு எல்லாரும் வந்திருக்கீங்க. அதுப்போல இனியும் வரனும். மகளுக்கு பேறுகாலம் நெருங்குது.. எறும்பு சேகரிப்பதுப்போல அவளுக்கும், வரப்போகும் சின்னஞ்சிறு உயிருக்கும் தேவையானதை சேகரிக்கும் பிசியில் இருப்பதால் நேரம் கிடைக்கும்போது வந்து போடும் பதிவுகளுக்கு ஆதரவு கொடுக்கனும்ன்ற நிபந்தனையோடு இன்றைய பதிவுக்குள் போகலாம்..
தழுவியமகாதேவர் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு பழையாற்றின் கரையோரமாக அடுத்த கோவிலுக்கு போகும்போது பழையாற்றுக்குப்பின் இருக்கும் வரலாற்றை பகிர்ந்துக்கொண்டே சென்றோம்.