தீபாவளின்னாலே சின்னதுல இருந்து பெருசு
வரைக்கும் உற்சாகம் பிச்சுக்கும். எல்லா கடைகள்ல தீபாவளி ஆபர் போடுவாங்க.
இனிப்புக்கடைல புதுப்புது இனிப்புகள் தயாராகும்.. புதுப்புது பட்டாசுகள்
உருவாகும். தெரியுதோ தெரியலியோ பெண்கள் வீட்டுல இனிப்புகள் செய்றேன்ன்னு புருசன்மார்களை
டெஸ்ட் எலியாக்குவாங்க... பிள்ளைங்க துணி வாங்க, ஆல்ட்ரேசன்ன்ன்னு கடையிலேயே பழியா கிடைப்பாங்க...
எல்லாம் சரி, இந்த தீபாவளிய ஏன் கொண்டாடுறோம்ன்னு தெரிஞ்சுக்கலாமே!
'தீபம் ' ன்னா 'விளக்கு '. 'ஆவளி' ன்னா 'வரிசை '.அதாவது இந்த நாளில் விளக்குகளை வீட்டில் வரிசை வரிசையாய் அடுக்கி
விளக்கேற்றி , இருண்டு இருக்கும் வீட்டை பிரகாசமாக
வைக்குறதாகும். இப்படி செய்யுறதால,
நம்ம மனசுல இருக்கும் அகங்காரம் , கோபம், பொறாமை போன்ற கெட்ட குணங்களை எரிச்சுடனும் என்பதையும்
குறிக்குது. அதனால்தான் இதற்கு "தீபாவளி"ன்னு பேர் வந்துச்சு..
தீபாவளி கொண்டாடுறதுக்கு நிறைய காரணங்ளை நம் இந்து புராணங்கள் கூறுகின்றன. அதுல சிலதைப்
பார்க்கலாம் !!!
நரகாசுரன் என்ற ஒரு அரக்கன் இருந்தான்.
அவன் தேவர்களுக்கும் மக்களுக்கும் பல்வேறு துன்பங்களை கொடுத்து வந்தான். இதை
அறிந்த மகா விஷ்ணு அவனை கொல்ல நினைத்தார். ஆனால் அவன் பூமி தாய்க்கு பிறந்தவன்.
அவன் தன் தாயை தவிர வேறு யாராலும் கொல்லப்பட முடியாத வரம் பெற்றிருந்தான். எனவே
மகா விஷ்ணு ஒரு தந்திரம் செய்தார். நரகாசுரனுடன் போரிட்டார்.
அவன் மகா விஷ்ணு மீது அம்பு எய்தினான்.
இந்த அம்பு பட்டு அவர் மயக்கம் அடைவது போல் கீழே விழுந்தார். இதை பார்த்த சத்தய
பாமா கோபம் அடைந்து நரகாசுரனை போருக்கு அழைத்தார். சத்திய பாமா பூமியின் அவதாரம்
என்று உணராமல் அவரோடு போர் செய்தான். அன்னையின் அம்புக்கு பலியாகி விழுந்தான்.
அப்போதுதான் அவனுக்கு சத்யபாமா தனது
தாய் என்று தெரிந்தது. அப்போது அவரிடம், அம்மா, நான் மறைந்த இந்நாள் மக்கள் மனதில் நிற்க வேண்டும். என்னுடைய
பிடியிலிருந்து விடுபட்ட தேவர்களும் மக்களும் இந்த நாளை இனிப்பு வழங்கி வெடி
போட்டு கொண்டாட வேண்டும் என்று வேண்டினான்.
மகாவிஷ்ணுவும் சத்யபாமாவும் அவனுக்கு
வரம் கொடுத்தார்கள். இதையொட்டி நரகாசுரன் மறைந்து மகிழ்ச்சி பொங்கிய நாள் தீபாவளி
பண்டிகையாக கொண்டாடப்படுகிறது,
இனி மற்ற காரணங்களை பார்க்கலாம்....
சக்தியின் 21 நாள் விரதமான கேதாரகெளரி விரதம் முடிவுற்றதும், அந்த நாளன்று சிவன் சக்தியை தனது பாதியாக ஏற்றுக்கொண்டு, 'அர்த்தநாரீஸ்வரர்' ஆக உருவெடுத்த நாள் தீபாவளியாக கொண்டாடப்படுவதாக , ஸ்கந்த புராணம் சொல்லுது..
உடனே அவர், சிவபெருமானின் சீடரான சனாதன முனிவரிடம் சென்று கேட்டார். முனிவரே,
புனிதமான எள்ளில் இருந்து எடுக்கப்படும்
எண்ணெயில் மகாலட்சுமி இருக்கிறாள். அரப்புப் பொடியில் சரஸ்வதி வாசம் செய்கிறாள்.
வாசனை நிறைந்த சந்தனத்தில் பூமா தேவியும்; மஞ்சள் கலந்த
குங்குமத்தில் கவுரிதேவியும் நிறைந்திருக்கிறார்கள்.
சீக்கியர்களின் தீபாவளி
1577- இல் இத்தினத்தில் , தங்கக் கோயில் கட்டுமான பணிகள் துவங்கியதையே சீக்கியர்கள் இந்நாளில்
கொண்டாடுகின்றனர் .
சமணர்களின் தீமாவளி
சமணர்களின் தீபாவளி சமணர்கள் மகாவீரர்
முக்தி அடைந்த புனித தினத்தை நினைவுபடுத்தும் நாளே தீபாவளி.
தீபாவளி அன்று அனைவரும் அதிகாலையில்
எழுவர் . இல்லத்தின் மூத்தஉறுப்பினர் ஒவ்வொருவர் காலிலும் நலங்கு ( மஞ்சளும்
சுண்ணாம்பும் கலந்த கலவை ) இட்டுமகிழ்வர் . தீபாவளி அன்று வெந்நீரில் குளிக்க
வேண்டும்.
வெந்நீரில் கங்கையிருப்பதாக நம்பிக்கை.
கங்கை நம் பாவங்களை போக்குவாள்.தீபாவளி அன்று எண்ணை தேய்த்து தான் குளிக்க
வேண்டும். நல்லெண்ணெயில் ஓமம் மற்றும் மிளகு போட்டுக் காய்ச்சுவது சிலரது வழக்கம்
. மக்கள் புத்தாடை உடுத்தியும் பட்டாசுகள் வெடித்தும் மகிழ்வர். ஏன் என்றால் நரகாசுரனின்
நினைவு நாள் அதனால் தீட்டு கழிக்கிறோம்.
சகோதரிகளுக்கு பரிசு:
தமிழகத்தில், சிறுவீட்டுப் பொங்கலின் போது, நீர்நிலைகளில் தீபம் விடும் வழக்கம் இருக்கிறது. வெற்றிலையில்
கற்பூரம் ஏற்றி வைத்து மிதக்க விடுவார்கள். வடமாநிலங்களில் தீபாவளியை ஐந்து
நாட்கள் கொண்டாடுகின்றனர். இதில் ஐந்தாவது நாள் எமதர்ம வழிபாடு நடக்கும். எமனுக்கு
யமுனை என்ற தங்கை இருந்தாள். எமன் தன் தங்கைக்கு தீபாவளியன்று பரிசுப் பொருள்களை
வழங்கி மகிழ்ந்தான்.
தங்கை யமுனையும் தன் அண்ணனுக்கு
விருந்து உபசரித்து நன்றி தெரிவித்தாள். இவ்வழக்கம் இன்றும் தொடர்கிறது.
வடமாநிலங்களில் தங்கள் சகோதரிகளுக்கு தீபாவளிப் பரிசுப் பொருட்களை சகோதரர்கள்
வழங்குவார்கள். பெண்களும் சகோதரர்களுக்கு விருந்து அளித்து மரியாதை செய்கிறார்கள்.
அன்றைய தினம் பெண்கள் தீபங்களை ஆற்றில் மிதக்க விடுவார்கள். அந்த தீபங்கள் எரிந்து
முடியும் வரை நீரில் அமிழ்ந்து விடாமலும், அணைந்து
போகாமலும் பார்த்துக் கொள்வார்கள். தீபங்கள் நன்கு பிரகாசித்தால் அந்த வருடம்
முழுவதும் சுபிட்சமாக அமையும் என்று நம்புகிறார்கள்.
பொதுவாக தீபாவளி அன்று பாரம்பரிய
உடைகளை அணியவே பெரும்பாலான தென்னிந்திய மக்கள் விரும்புகின்றனர் . அன்று அநேக
பெண்கள் புடவையும் ( குறிப்பாக பட்டுப்புடவை ) ஆண்கள் வேட்டியும் உடுப்பர் .
தீபாவளி அன்று ஒவ்வொரு இல்லத்திலும் மங்கள இசையான நாதசுவரம் ஒலிக்கும் .
அன்று இனிப்புக்கள் நிறைய செய்து
ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வர் .
பரிசுகள் தந்து மகிழ்வர் . பெரியோரை
வணங்கி வாழ்த்து பெறுவர் .
தீபாவளி இலேகியம் ( செரிமானத்திற்கு
உகந்தது ) அருந்துவதும் மரபு .
தீபாவளியன்று நீராடுவதை மட்டும் புனித
நீராடல் என்று சொல்வதற்கு
காரணம் , அன்றைய தினம் , அதிகாலையில் எல்லா இடங்களிலும் ,
தண்ணீரில் கங்கையும் , எண்ணெயில் லட்சுமியும் அரப்பில் சரஸ்வதியும் , குங்குமத்தில் கௌரியும் , சந்தனத்தில் பூமாதேவியும் , புத்தாடைகளில் மஹாவிஷ்ணுவும் வசிப்பதாக கருதப்படுவதேயாகும்
அந்த நீராடலைத்தான் ” கங்கா ஸ்நானம் ஆச்சா ” என்று
ஒருவருக்கொருவர் விசாரிப்பர் . அன்றைய தினம் , எல்லா நதிகள் , ஏரிகள் , குளங்கள் , கிணறுகளிலும் , நீர்நிலைகளும் ” கங்கா தேவி ” வியாபித்து இருப்பதாக ஐதீகம் . அடிப்படையில் இந்துப் பண்டிகையாய்
இருந்தாலும் , சாதி மத வேறுபாடின்றி அனைவரும்
ஒற்றுமையாய் கொண்டாடும் பண்டிகை தீபாவளி.
தலை தீபாவளி கொண்டாடுபவர்களுக்கும்....
தலைக்கு தேய்த்து குளித்து தீபாவளி
கொண்டாடுபவர்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..
இனிய தீபாவளி வாழ்த்துகள்
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்
ReplyDeletebeautiful pictures...with excellent narration...
ReplyDeletedeepawali wishes to you...
Thank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
ReplyDeletethermocouple with head & terminal | ph meter lcd model | multipoint temperature indicator
Manufactures of Automatic water level controller and Indicator in Chennai and Tamilnadu, wireless water tank level indicator and wireless water level controller in Chennai, OMR, Anna Nagar, Velachery
ReplyDeleteThanks for the article…
Top manufacturer of water level controllers inChennai
automatic water level controller manufacturer in India
water tank level indicator in chennai
simple water level indicator with a buzzer
water tank level indicator in chennai.
Dry run timer. double motor sequential timer
advantages of the product | LED indication
Dry run protection | Adjustable sensor