Showing posts with label சக்தி. Show all posts
Showing posts with label சக்தி. Show all posts

Friday, April 05, 2019

வேலுண்டு வினையில்லை- 16 வகை வேலாயுதத்தின் பெயர்கள்

முருகனை குழந்தையாய், ஆண்டியாய், ராஜனாய், குடும்பஸ்தனாய், தீமைகளை சம்ஹாரம் செய்பவனாய் ... இப்படி பலகோலத்தில் ரசித்து வழிபட்டிருப்போம். ஆனால், அவன் கையிலிருக்கும் வேலை எத்தனை விதமாய் ரசித்திருப்போம்?! வேல்ல கூரிய முனை, இரும்பினால் அல்லது தங்கம் அல்லது வெள்ளி, கல் பதித்தது.. இப்படிதான் பார்த்திருக்கோம். அதை தாண்டி முருகன் கையிலிருக்கும் வேலில் ரசிக்க என்ன இருக்கு?!ன்னு யோசிப்பவர்களுக்குதான் இந்த பதிவு..



இவ்வகையில் அசுரனை அழிக்க தனது சக்திகளையெல்லாம் ஒன்று திரட்டி வேலினை படைத்து முருகனுக்கு கொடுத்ததாகவும், இந்த வேலின் துணையுடனேதான் சூரபதுமனை வீழ்த்தியதாகவும் கந்த புராணம் சொல்கிறது. அதன் அமைப்பை ஒட்டி சக்திவேல், வஜ்ரவேல், இலைவேல், நெடுவேல் என்ற பெயர்களைப் பெற்றுள்ளது. சக்திவேல் சக்தியின் வடிவாகவும், வஜ்ரவேல் வைரம் பதித்ததாகவும் இருக்கும்.
cbsimmons:  The spear in front of the Subrahmanya temple in Tiruttani.

சில வேல்களின் இலைப்பகுதியில் மந்திரங்கள் எழுதப்பட்டிருக்கும். இப்படி அமைக்கப்படும் மந்திரச் சக்கரங்கள், மந்திர வடிவங்களையொட்டி அது மந்திரவேல் எனப்படுகிறது. உயர்ந்த ரத்தினங்கள் இழைக்கப்பட்டு செய்யப்பட்ட வேல் நவரத்தினவேல் என்றும், மாணிக்கம் பதித்த வேல் மாணிக்கவேல் என்றும், வைரக்கற்களைக் கொண்டு இழைத்த வேல் வைரவேல் என்றும், தங்கத்தால் செய்யப்பட்ட வேல் தங்கவேல் என்றும், முத்துக்கள் பதிக்கப்பட்ட வேல் முத்துவேல் என்றும் அழைக்கப்படும்.

வேலின் பல்வேறு வடிவங்களில் ஒன்று சக்தி வேலாயுதம். மூன்று முக்கோணங்கள் ஒன்றின்மேல் ஒன்றாக அமைந்தது போன்றதே இதன் அமைப்பு.. முருகன் நாற்கரங்களோடு திகழ்கையில், சக்தியாயுதத்தைத் தனது இடது மேற்கரத்தில் ஏந்துவார். சக்திவேல் என்பது சக்தி ஆயுதத்தை நீண்ட தண்டின் முனையில் பொருத்தி அமைக்கப்பட்டதாகும். வேலாயுதத்தைப் போலவே சக்தி வேலாயுதமும் தனிச்சிறப்புடன் போற்றப்படுகிறது. சக்தி ஆயுதம் அக்னிக்குரிய அடையாளமாகும். அதையொட்டிேய அக்னியில் உதித்தவரான முருகன் சக்திவேலை ஏந்துகின்றார்.
தணிகை முருகன் சக்தி ஆயுதத்தை ஏந்தியிருப்பதால், ஞானசக்திரர், சக்திரர் என்றே அழைக்கப்படுகின்றார். சிக்கல் சிங்காரேவலர், சுவாமிமலை சுவாமிநாதன், வைத்தீஸ்வரன் கோயில் முத்துக்குமார சுவாமி போன்ற முருகன் வடிவங்களுக்கு, உயர்ந்த கல்லிழைத்த சக்தி வேலாயுதம் சாத்தப்படுகிறது. முருகன் மேற்கரங்களில் வஜ்ரம், சக்தி ஆகிய இரண்டையும் தாங்கியுள்ளார் என்றாலும் அவற்றுடன் சக்திவேலையும் தாங்குகின்றார். வேலாயுதத்தை முருகப்பெருமானாகவே கொண்டாடுவதால் அதைப் படைக்கலமாக அமைக்காமல் அதனையொத்த சக்தி ஆயுதத்தைப் படைக்கல வழிபாட்டிற்கு வைத்துள்ளனர். 

 
பொதுவான நிலையில் வேலின் மையத்தில் ஒரு வட்டத்தை வரைந்து அதனுள் அறுகோணத்தை இட்டு அதன் மையத்தில் ஓம் எனும் பிரணவத்தையும், சுற்றியுள்ள ஆறு முக்கோணங்களில் ச, ர, வ, ண, ப, வ என்னும் ஆறு எழுத்துகளையும் எழுதி வழிபடுகின்றனர். மேலும், சடாட்சர சக்கரம், சத்ரு சம்ஹார சக்கரம், சக்தி நிலைய சக்கரம் போன்ற சிறப்பு நிலையில் அமைந்த சக்கரங்களையும் வேல் வழிபாட்டில் பார்க்கலாம்.

உத்தண்ட வேல்
நீண்ட ஒரு தடியை தண்டம் என்பர். தீயவரைத் தண்டித்து உயர்ந்தவரைக் காப்பதால், வேலுக்கும் தண்டம் என்பது பெயர் வந்தது. வேலைச் சிறப்பித்துக் காட்டும் வகையில் உத்தண்ட வேலன் என்றும் அழைக்கப்படுகிறார். பழனி முருகனுக்குத் தண்டாயுதபாணி என்ற பெயர் வழங்குகிறது. சக்திவேல், வஜ்ரவேல் போன்று உத்தண்ட வேல் என்பது வேலின் வடிவங்களில் ஒன்றாகும். நீண்ட தண்டாயுதமே உத்தண்ட வேல் எனப்படுகிறது.

முத்துவேல்
முத்துக்கள் பதித்த வேல், முத்துவேல். முத்து என்ற வார்த்தைக்கு  உயர்ந்த, தரமான, அழகானஎன பொருளாகும். முத்துவேல் என்பது மனதைக் கவரும் அழகு படைத்ததும், உயர்ந்ததும், ஆற்றல் மிக்கதுமான வேல் என்ற பொருளைத் தருகிறது. 

மந்திரவேல்
முருகன் ஏந்தும் வேல்களில் மந்திரவேலும் ஒன்றாகும். கல்லாடம் எனும் நூல் வேலாயுதத்தை, ‘உள்ளத்திருளும் இடைபுகுந்து இருள் துடைத்த மந்திரத் திருவேல்’ என்று போற்றுகிறது. மந்திரம் என்பதற்கு நீங்காது உடனிருந்து காப்பது என பொருள். தன்னை வணங்கும் அன்பர்களை விட்டு நீங்காது காத்து அருள்புரிவதால் இந்த வேலுக்கு மந்திரவேல் எனப்பேர் வந்ததா, . ‘வேலும் மயிலும் துணை’ என்பது மகாமந்திரம். கந்தர்சஷ்டி கவசத்தில் ‘மந்திர வடிவேல் வருக வருக’ என்று பாலதேவராயர் வேலை அழைப்பதைக் காண்கிறோம். 
ரத்தினவேல்
ரத்தினவேல்  நவரத்தினங்களில் உயர்ந்ததான ரத்தினத்தை பதித்த வேல் என்பதால் இதற்கு ரத்தினவேல் எனப்பேர் வந்தது.  நவரத்தினங்களால் ஆன வேலாயுதங்களை முருகனின் தம்பியரான நவவீரர்கள் ஏந்துகின்றனர். இவர்கள் அன்னை பராசக்தியின் பிரதி பிம்பத்திலிருந்து தோன்றிய நவரத்தின மங்கையராகிய 1) மாணிக்கவல்லி 2) முத்துவல்லி 3) புஷ்பராகவல்லி 4) கோமேதகவல்லி 5) வைடூர்யவல்லி 6) வைரவல்லி 7) மரகத வல்லி, 8 ) பவள வல்லி 9) நீலவல்லி ஆகிய ஒன்பதின்மரின் குமாரர்களாவர். முருகன் தன் தாயிடமிருந்து வேலாயுதத்தைப் பெற்றதைப் போலவே இவர்களும் தத்தம் தாயிடமிருந்து வேலாயுதங்களைப் பெற்றனர். அவையே நவரத்தினவேல்களாகும் - மாணிக்க வேல், முத்தவேல், புஷ்பராக வேல், கோமேதக வே, வைடூர்ய வேல், வைர வேல், மரகத வேல், பவள வேல், நீல வேல். இந்த ஒன்பதின்மரும் தமக்குரிய வேலுடன் முருகனோடு விளையாடி மகிழ்ந்தனர். இதற்கு பழைய கால ஓவியங்களே சாட்சி.  மக்கள் முத்துேவல், மரகதேவல், மாணிக்கவேல், மற்றும் பொதுவாக ரத்தினவேல் என்று பெயர்களை வைப்பது வழக்கம்.
 .
வஜ்ர வேல்
வஜ்ரம் என்பது இந்திரனின் ஆயுதம். இது இரண்டு சூலங்கள் தம்முன் இணைந்ததுபோல் இருப்பது. வஜ்ரம் என்பதற்கு அறுக்க முடியாதது, துளைக்க முடியாத, உடைக்க முடியாத  எதனாலும் சேதப்படுத்த முடியாதது என பொருள். எளிதில் வெல்ல முடியாததும், அழிக்க முடியாததுமான உறுதிமிக்க ஆயுதமாக மேல் இருப்பதால் இதற்கு வஜ்ரவேல் எனப்பெயர் வந்தது. மற்ற வேலினைப்போல் வெளித்தோற்றத்தினை வைத்து பெயரிடாமல்,  உறுதி, திண்மை, திறமையின் காரணமாக வேலுக்கு இந்த பெயர் அமைந்தது. 
தங்கவேல்
தங்கத்தால் செய்த வேலினையும்,  அன்பர்களின் வாழ்வில் செல்வ நலன்கள், வளம், மேன்மை போன்றவற்றை எந்நாளும் தங்கி இருக்கும்படி அருள்புரிவதாலும் இரு காரணங்களுக்காக வேலுக்கு தங்கவேல் எனப்பெயர் வந்தது. ஆலயங்களில் தங்கத்தால் ஆன வேலாயுதத்தைச் செய்து முருகனுக்குச் சாத்தியுள்னர். அதில் மேலும் அழகூட்ட உயர்ந்த ஜாதி வண்ணக் கற்களைப் பொருத்தியுள்ளனர். வேல் வழிபாடு மனதில் மகிழ்ச்சியைத் தங்க வைக்கும் வழிபாடாக இருக்கிறது.

வெள்ளி வேல்
வெள்ளி தூய்மையான உலோகம். அதனாலேதான் வெள்ளியினைக் கொண்டு பூஜைப்பொருட்களைச் செய்கின்றனர். பெரும்பாலான ஆலயங்களில் வெள்ளியால் செய்த வேலாயுதமும் சேவற்கொடியும் முருகனுக்குச் சாத்தப்படுகின்றன. அன்பர்கள் வெள்ளி வேலை காணிக்கையாகச் செலுத்தி மகிழ்கின்றனர். 

எஃகு வேல்
என்னதான் தங்கம், வெள்ளி, ரத்தினம், முத்துக்கள் விலை உயர்ந்தவையாக இருந்தாலும்,  அனைத்து தொழிலுக்கும் உதவும் ஆயுதங்களாகச் செய்து பயன்படுத்தத் தகுதியற்றவை. அவை கவர்ச்சியும், மதிப்பும் மிக்க அணிகலன்களைச் செய்ய மட்டுமே பயனாகும். இரும்பு எளிய உலோகமாக இருந்தாலும், வாழ்விற்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் உருவாக்குவதற்குத் தேவையான கருவிகளைச் செய்வதற்கு ஏற்ற உலோகமாக இருக்கிறது. எஃகு இரும்பு உறுதியும், எளிதில் வளையாததும், கூர் மழுங்காததும், துருப்பிடிக்காததுமான தன்மைகளைக் கொண்டது.  அதனால் போர்த்தளவாடங்களை எஃகினால் மட்டுமே செய்வர். குறிப்பாக, விரைந்து சென்று இலக்கைத் தாக்கும் வேலாயுதங்களை எஃகால் செய்தனர். அதனால் வேலுக்கே எஃகம் என்பது பெயராயிற்று. ஆதியில் திருப்படைக் கோயில் எனப்படும் வேல் கோயில்களில் அமைத்து வழிபடப்பட்ட வேல்கள் யாவும் எஃகினால் செய்யப்பட்டவையே.

வேலுண்டு வினையில்ல என்ற வார்த்தை வெறுமனே ஏற்பட்டதில்லை. வேலின் மகத்துவத்தினை உணர்ந்து வழிபடுவோம். வாழ்வில் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ்வோம்.
நன்றியுடன், 
ராஜி

Thursday, September 21, 2017

படிப்படியாய் முன்னேற்றம் தரும் நவராத்திரி விரதம்


கணவனான சிவனுக்கு ஒரு இரவு.. அண்ணனான பரந்தாமனுக்கும் ஒரே ஒரு இரவு. ஆனா, அனைத்து உயிர்களுக்கும் படியளிக்கும் அன்னையான பராசக்திக்கு ஒன்பது இரவுகள். அதுதான் நவராத்திரி விழாவாகும். பெண் தெய்வங்களை முன்னிறுத்தி பல விழாக்கள் நம்மூர்ல கொண்டாடப்படுது. அதுல முக்கியமானது நவராத்திரி  விழாவாகும். முழுக்க முழுக்க பெண்களால், பெண்களுக்காக, பெண் தெய்வங்களை முன்னிறுத்தி கொண்டாடப்படுது இந்த விழா...  புரட்டாசி மாதத்தின் பிரதமை திதியிலிருந்து தசமி திதி வரை கொண்டாடப்படுது.  சித்திரையும், புரட்டாசி ஆகிய இரண்டு மாதங்கள் எமனின் கோரப்பற்கள்ன்னு சொல்லப்படுது. இந்த மாசத்துல நோய்த்தொற்று அதிகமா இருக்கும்.  அதனை போக்கவே உடலுக்கு சக்தி கொடுக்க வேண்டி சக்திதேவியை வழிப்படுகிறோம். சித்திரை மாசத்தில் வசந்த நவராத்திரியும், புரட்டாசி மாதத்தில் சாரதா நவராத்திரியும் கொண்டாடப்படுது.


ஒருசில கோவில்களில்  பிரம்மோற்சவ விழான்னு பத்து நாள் கொண்டாடப்படுது. அதேமாதிரி வீட்டுல கொண்டாடும் இந்த பத்து நாள் திருவிழாவை வீட்டின் பிரம்மோற்சவம்ன்னு சொல்லுறதுல தப்பே இல்ல. இந்த நவராத்திரி விழா இந்தியா முழுக்கவும், இந்தியர்கள் இருக்கும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் கொண்டாடப்படுது. இந்த விரதத்தை வயசு வித்தியாசமில்லாம எல்லா பெண்களும் கொண்டாடுவர்.  இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால்  திருமணப்பேறும், குழந்தைப்பேரும், வீட்டில் சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்.

ஒருமுறை தேவர்களுக்கு பெரிய அளவில் துன்பங்கள் கொடுத்து வந்த மகிஷாசுரன் என்ற அரக்கனை கொல்ல சக்திவாய்ந்த தெய்வத்தை உருவாக்க சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளும் முடிவு செய்தனர். மூன்று கடவுள்களின் வாயில் இருந்தும் வெளிப்பட்டது ஒரு அற்புதமான பெண் உருவம். அதற்கு 10 கைகள், ஆக்ரோஷமான முகம் கொண்டதாக இருந்தது. அந்த பெண் தெய்வம்தான் துர்க்கை. சிவபெருமானின் துணைவி பார்வதிதேவியின் ஒரு வடிவம். அந்த துர்க்கையிடம் அனைத்து கடவுளர்களும் தங்களின் விருப்பமான ஆயுதங்களையும், கவசங்களையும் அளித்தனர்.


துர்க்காதேவி உலகையே அச்சுறுத்தி வந்த மகிஷாசுரனை வதம் செய்ததன் நினைவாக கொண்டாடப்படுவதே நவராத்திரி மற்றும் விஜயதசமி பண்டிகை. மைசூர் சாமுண்டீஸ்வரி மலையில் மகிஷாசுரனை துர்க்கை அழிப்பதுபோன்ற பண்டையகால சிற்பம் இன்றும் காணப்படுகிறது. துர்காதேவி, லட்சுமி, சரஸ்வதி என வெவ்வேறு வடிவங்களில் போற்றப்பட்டு பக்தர்களால் வணங்கப்படுகிறார். மகாபாரதத்தில் 12 ஆண்டுகள் காட்டில் திரிந்த பாண்டவர்கள் மாறுவேடத்தில் ஒரு ஆண்டை கழிக்க தங்கள் ஆயுதங்களை படையலிட்டு தங்களின் அடையாளத்தை அறிவித்தனர். அந்த நாள்தான் விஜயதசமின்னும் சொல்லப்படுது.

லட்சுமிதேவி, அலர்மேலுமங்கையாய் அவதரித்து திருப்பதி வெங்கடேசப்பெருமாளை அடையும்பொருட்டு இந்த விரதத்தை மேற்கொண்டதாகவும் ஒரு கதை சொல்லப்படுது.

சுரதா என்ற மன்னன்  தன் எதிரிகளை அழிப்பதற்காக வேண்டி தன் குருவின் ஆலோசனைப்படி காளியின் உருவத்தை தூய களிமண்ணால் செய்து உண்ணாவிரதமிருந்து  அம்பாளை வேண்டிக்கொள்ள,  அதன் பலனாக எதிரிகளை அழித்து  ஒரு புது யுகத்தையே உண்டு பண்ணினான் என்பது நம்பிக்கை.  ஐம்பூதங்களிலான சிற்பங்களைக்கொண்டு தன்னை வழிப்படுவோர் அனைத்து பாக்கியங்களையும் பெறுவர் என தேவிப்புராணத்தில் சொல்லப்படுது.  நவராத்திரியின் சிறப்பம்சம் கொலு வைப்பதாகும்.  கொலு என்பது படிப்படியாக படிகளை அமைத்து ஐம்பூதங்களால் ஆன பொம்மைகளை வைத்து வழிப்படுவதாகும்.  ஒன்பது படிகளை கொண்ட அமைக்கவேண்டியது என்பது விதின்னாலும், அவரவர் வசதிக்கேற்ப கொலுப்படிகள் அமைக்கலாம்.

கொலுவின் கீழிருந்து முதல்படியில் புல், பூண்டு மாதிரியான ஓரறிவு ஜீவன்களையும், இரண்டாம் படியில் நத்தை, சங்கு மாதிரியான ஈரறிவு ஜீவன்களையும், மூன்றாவது படியில் கறையான், எறும்பு மாதிரியான மூவறிவு கொண்ட ஜீவன்களையும், நாலாவது படியில் நண்டு, வண்டு மாதிரியான நாலறிவு கொண்ட ஜீவன்களையும், ஐந்தாம் படியில்  மிருகங்கள், பறவைகள் மாதிரியான ஐந்தறிவு ஜீவன்களையும், ஆறாவது படியில் மனிதர் உருவில் வாழ்ந்த மகான்களையும், மனிதர்கள்ன்னு ஆறரிவுக்கொண்ட ஜீவன்களையும்,  ஏழாவது படியில் சித்தர்கள், ரிஷிகள்மாதிரியானவர்களையும், எட்டாம் படியில் இந்திரன், தேவர்கள், நவக்கிரங்கங்கள் மாதிரியானவர்களையும், ஒன்பதாம் படியில்  பிரம்மா, விஷணு, சிவன், முருகன், அம்பிகைன்னு தெய்வங்களின் உருவ பொம்மைகளையும் வைத்து வழிப்பட வேண்டும்.


நவராத்திரியின் முதல்நாளில் சக்தியை சாமுண்டியாகவும், இரண்டாவது நாள் வராகி தேவியாகவும் , மூன்றாவது நாளில் இந்திராணியாகவும், நான்காம் நாள் வைஷ்ணவிதேவியாகவும், ஐந்தாம் நாள் மகேஸ்வரியாகவும்,  ஆறாம் நாள்  கவுமாரி அம்மனாகவும்,  ஏழாம் நாள் மகாலட்சுமியாகவும், எட்டாம்நாள்  நரசிம்மகியாகவும், ஒன்பதாம்நாள் பிராக்மியாகவும் நினைத்து வழிப்படவேண்டும். 


நவராத்திரி கொலுவில் கீழே உள்ள மூன்று படிகளில் வைக்கப்படும் அரிசி, பருப்பு, பாத்திரம் போன்றவை, தாமச குணத்தைக் குறிக்கும். அடுத்த மூன்று படிகளில் வைக்கப்படும் அரசர், ராணி, மந்திரி போன்றவை, ரஜோ குணத்தைக் காட்டும்; மற்ற மூன்று படிகளில் வைக்கப்படும் தெய்வ உருவங்கள் சத்துவ குணத்தை அடையும் வழியை நமக்குக் காட்டுகின்றன. நவராத்திரியின் ஒன்பது நாளும் துர்க்கையை ஒன்பது வடிவாக வழிபட வேண்டும். வந்ஹி துர்கா, வன துர்கா, ஜல துர்கா, ஸ்தூல துர்கா, விஷ்ணு துர்கா, பிரம்ம துர்கா, ருத்ர துர்கா, மகா துர்கா, சூலினி துர்கா போன்ற அன்னைகளின் சக்திகளை ஒவ்வொரு உயிரும் வாழ்வில் பெற்றிருக்கும். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு நவராத்திரி விழாவில் தேவதைகளைச் சிறப்பிக்க வேண்டும். நவராத்திரி பூஜை செய்வதால் கடன் நிவாரணம், மன அமைதி பெறலாம். அறிவு பெருகும். இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி என மூன்று சக்திகளைப் பெறலாம். நவராத்திரி பண்டிகையின் போது ஒவ்வொரு ராத்திரிக்கும் ஒவ்வொரு நவதானியமாக ஒன்பது வகை சுண்டல் செய்து கடவுளுக்குப் படைத்து வழிபடுவர்.


கோதுமை, பச்சரிசி,  துவரை,  பச்சைப்பயறு,  கடலை,  மொச்சை,  எள்ளு,  உளுந்து,  கொள்ளுவினால் ஆன சுண்டலை தினத்துக்கொன்றாக வைத்து நைவேத்தியம் செய்ய வேண்டும்.  கொலு பார்க்க வரும் பெண்களுக்கு வெற்றிலை, பாக்கு, பழம் பாக்கு, தேங்காய், வளையல், சீப்பு, தட்டு மாதிரியான பொருட்களை கொடுத்து அனுப்புவர். சிறுமிகளை அந்தந்த நாளுக்குரிய அம்பாள் வடிவத்தில் அலங்கரித்து  வணங்குவர்.

இனிவரும் நாட்களில் நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் அந்தந்த அம்மனை பத்திய பதிவு வரும்.   அம்பிகையை வழிப்படுவோம். அனைத்து நலன்களும் பெறுவோம்.

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1472330

நன்றியுடன்,
ராஜி.

Sunday, October 30, 2016

கேதார கௌரி விரதம் - பக்தி

தந்தனத்தோம் என்று சொல்லியே வில்லினில் பாட ஆமா வில்லினில் பாட..............வந்தருள்வாய் பூமித்தாயே................

அதாகப்பட்டது என்னானா..... இன்னிக்கு நம்ப பொம்மனாட்டாகள்லாம் "கேதார கௌரி விரதம்" இருக்காங்க... அது எதுக்குன்னு சொல்லப்போறேன்..

 கணவனும் மனைவியும் ஓருயிர், ஈருடல் என்பதை உணர்த்தும் விரதம்தான் கேதார கௌரி விரதம்.

ஆயுள் முழுக்க ஆதர்ச தம்பதிகளாக வாழ்வதுதான் கணவன், மனைவியின் லட்சியமாக இருக்கும். அப்படி இருக்க நினைக்குறவங்க இந்த விரதமிருந்தா... சிவன் அர்த்தநாரீஸ்வரரா அவதாரம் எடுத்துப்போல உங்க ஆம்படையானும் தங்களை தன்னில் பாதியா ஏத்துப்பார்ன்னு நம்புறாங்க... 

"கேதாரம்" என்னும் இமயமலைச்சாரலில் சக்திதேவி  "கௌரி" என்னும் அவதாரமெடுத்து சிவனின் இடப்பாகத்தை பெற்றதால இதுக்கு "கேதார கௌரி விரதம்"ன்னு பேரு...

இந்த விரதமிருந்தா கணவன், மனைவி பிரிஞ்சிருந்தா ஒண்ணு சேர்வாங்க. அவங்களுக்குள் அன்பு பலப்படும்.. குடும்பம் நல்லாயிருக்கும்ன்னு ஐதீகம்.

சக்தி தேவி ஏன் இந்த விதமிருந்தாங்கன்னு அதுக்கொரு கதையிருக்கு...


தீவிர சிவபக்தரான பிருகு முனிவர், சிவனையல்லாது எத்தெய்வத்தையும்   வணங்கமாட்டார்.  இதனால் , நாரதர் கலகத்தால்... முனிவர் வரும் வேளையில் சக்தி தேவி, சிவன் அருகில் மிக நெருக்கமா உக்காந்திருந்தார்.  இதைக்கண்ட பிருகு முனிவர், வண்டாய் மாறி.. சிவனை மட்டும் வணங்கி சென்றார்... தன்னை பிருகு முனிவரும், சிவனும் அவமானப்படுத்தியதாக எண்ணி கோவத்துடன்  பூலோகம் வந்தார்.


சிவனுடன் தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்டால்தான் தானும் சிவனும் ஒன்றாவோம் என நினைத்து.. வயல்வெளி நிறைந்த கேதாரம் என்ற இடத்தில் கடுந்தவமிருந்து சிவனிடம் சரிபாதி உடலை வாங்கி... அர்த்தநாரீஸ்வரராக அவதாரமெடுத்தனர்..
கேதார கௌரி விரதம் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் சுக்ல பட்ட தசமியில் ஆரம்பிக்க வேண்டும்.

அம்பாளின் வேண்டுகோளிற்கு இணங்க ஆசுதோஷியாகிய சிவன் மிக விரைவாகவே வரம் கொடுத்து விடுவார் என்பது நம் ஐதீகம்

சிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்களுள் கேதார கௌரி விரதமும் ஒண்ணு.


இந்நாளில் விரதமிருப்பவர்கள், வீட்டை சுத்தம் செய்து, தலை குளித்து நாள் முழுக்க எச்சில்கூட விழுங்காமல்  உபவாசமிருந்து, அரிசி, வெல்லத்தினால் செய்த அதிரசம், 21 எண்ணிக்கையில் வெற்றிலை, பாக்கு, மஞ்சள் கிழங்கு, நோன்புக்கயிறு, அதிரசம், பழுத்த செவ்வரளி இலை, செவ்வரளி மொட்டு வைத்து கோவிலுக்கு சென்று அர்த்தநாரீஸ்வரரை வணங்கிவீட்டில் வடை, கொழுக்கட்டை, சுய்யம், சாப்பாடு என படையல் போட்டு ஓம் நமசிவாய மந்திரம் ஜபித்து, அர்த்தநாரீஸ்வரராய், சிவசக்தி சொரூபனாய் முக்கண் முதல்வனை, முப்புரம் எரித்தானை, முத்தலை சூலம் ஏந்தினானை மனதில் தியானம் செய்து மாலை பிரதோஷ காலத்தில் நோன்பை முடிக்க வேண்டும்.
சிறப்பு வாய்ந்த இந்த விரதத்தினை திருமால் அனுஷ்டித்து வைகுந்த பதவியைப் பெற்றதுடன் பிரம்மன் அனுஷ்டித்து உலகைப் படைக்கும் உயர் பதவியினைப் பெற்றார்.

இந்திரன் அனுஷ்டித்து பொன்னுலகை ஆண்டு வெள்ளை யானையினையும் வாகனமாகக் கொண்டார் என ஐதீகம்.

இந்த பூலோகத்தில் கேதார கௌரி விரதத்தை மனப்பூர்வமாய் விரும்பி அனுஷ்டிப்பவர்களுக்கு அந்த பரமேஸ்வரன் சகல செல்வங்களையும் அளிப்பார் எனக்கூறி


வந்தனமாம் வந்தனம் வந்த சனத்துக்கு நன்றியாம்