நொறுக்குத்தீனிகள் எத்தனை இருந்தாலும் பக்கோடாவுக்கு ஈடு இணை கிடையாது... மாலை நேரத்தில் ரோட்டோர கடையில் கொதிக்கும் எண்ணெயிலிருந்து மினுமினுப்போடு எடுக்கும் பக்கோடாவை, அதே சூட்டோடு மந்தார இலையில் பொட்டலமா கட்டி வாங்கிக்கிட்டு வேலையிலிருந்து வரும் அப்பாவுக்காக காத்திருந்த தருணம் அலாதியானது. வீட்டுக்கு வந்ததும் மந்தார இலையின் வாசத்தோடும் இளஞ்சூட்டோடும் இருக்கும் பக்கோடாவை சாப்பிட்டதுலாம் பொற்காலம்...