Showing posts with label சிரிப்பு ஆன்மீகம். Show all posts
Showing posts with label சிரிப்பு ஆன்மீகம். Show all posts

Monday, April 23, 2012

கழுதையாக மாறிய ஹீரோ - ஐஞ்சுவை அவியல்

சிவனின் அம்சம்...,                
புதனுடைய அம்சமாக, அதாவது சிவனுடைய அம்சமாக கருதப்படுவது ருத்ராட்சம். சிவனின் அங்கத்திலிருந்து விழக்கூடிய வேர்வை என்றெல்லாம் சில புராணங்கள் சொல்கின்றன.


ருத்ராட்சத்திற்கு இயல்பாகவே மருத்துவ குணங்கள் நிறைய உண்டு. ருத்ராட்சத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம். சிலரெல்லாம் போகம் செய்யும் போது இருக்கக்கூடாது என்றெல்லாம் சொல்வார்கள். அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது, போகிக்கும் போது கூட இருக்கலாம். தீட்டு என்பது கிடையாது.


ஆனால், ருத்ராட்சத்தை தங்கம் அல்லது வெள்ளியில் கட்டி அணியும் போது, மந்த்ரா உபதேசம் பெற்று, குருநாதர் கையில் இருந்து வாங்கி அணியும் போதெல்லாம் மிகவும் நேமமிஷ்டையுடன் இருக்க வேண்டும். அதாவது தீட்சையாக தரும் ருத்ராட்சத்தை பெற்றுக்கொண்டு தவறான செயல்கள், பேச்சுவார்த்தைகளில் ஈடுபடக் கூடாது.


ஆண், பெண் என இருபாலருமே ருத்ராட்சத்தை அணியலாம். பெண்களுக்கு இருக்கக்கூடிய இயல்பான இடர்பாடான நாட்களில் கூட அணிந்திருக்கலாம். அது ஒன்றும் குரோதம் கிடையாது. வட இந்தியப் பெண்கள் சிலர் தலையில் போடும் கிளிப்புகளில் கூட ருத்ராட்சத்தை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தக்கூடிய சக்தியும், மன அழுத்தத்தை குறைக்கும் சக்தியும் ருத்ராட்சத்திற்கு உண்டு. பக்கவாதத்திற்கு முந்தைய காலகட்டத்தில் ருத்ராட்ச மாலையை உடம்பு முழுவதும் தேய்த்துவிடும் போது அது சரியாகிறது.


இன்றைக்கும் தரமான, பழமைவாய்ந்த சித்த வைத்தியர்கள் கால் முடக்கம், கை முடக்கம் இதற்கெல்லாம் மருந்தும் கொடுத்து, ருத்ராட்ச மாலையால் கை, கால்களை உருவி மருத்துவம் அளிக்கும் வழக்கமெல்லாம் இன்றைக்கும் இருக்கிறது.


சீரான இரத்த ஓட்டங்கள், கால் மறத்துப் போகாமல் இருப்பதற்கு போன்றவற்றிற்கும் ருத்ராட்சம் பயன்படும். ருத்ராட்சத்தின் சிறு துளியை இழைத்து உள்ளுக்கு சாப்பிடும் போது நோய் எதிர்ப்புச் சக்தியெல்லாம் அதிகரிக்கிறது. உடலிற்கு ஒரு மினுமினுப்பைக் கொடுக்கும். இதுபோன்ற மருத்துவக் குணங்கள் ருத்ராட்சத்திற்கு உண்டு. அதனால் யார் வேண்டுமானாலும் அணியலாம்.
                               
கழுதையாக மாறிய ஹீரோ...
டைரக்டர்: ஹீரோ சொந்த குரல்ல பாடியே தீருவேன்னு அடம் பிடிக்கிறாரு சார்!  
ப்ரொடியூசர்: சரி ஆம்பத்திலேயே ஒரு மந்திரவாதி வந்து அவரை கழுதையா மாத்திடறது மாதிரி எடுத்திடலாம். 
                                 
கணக்கு போடலாம் வாங்க...,
ஒரு பையில் 175 காசுகள் உள்ளன. அவை ரூ 1, 50காசு, 25 காசுகளாக உள்ளன. அவை ஒரே மாதிரியான தொகையை கொடுக்க கூடியவை. பையில் எத்தனை எத்தனை காசுகளாக இருந்தது. பையிலிருந்த மொத்த பணமிருந்தது?
விடை வழக்கம் போல் அடுத்த பதிவில்....,  
எப்படிலாம் யோசிக்குறான்!? 
சமீபத்துல என் பொண்ணு தூயா படிப்பு விசயமா வேலூர்ல இருக்குற இன்ஜினியரிங் காலேஜுக்கு நான், தூயா, என் பையன் அப்பு மூணு பேரும் போனோம்.  அப்போ எதாவது சாப்பிடலாமேன்னு அங்கிருக்கும்  கேண்டீனுக்கு போனோம். 
ஜூஸ் கார்னர்ல போய் என்ன ஜூஸ் இருக்குன்னு கேட்டோம். அவங்க ஜூஸ் பேரை சொல்லிக்கிட்டே வந்தாங்க. JAVA green juice, JAVA Blue juice,  JAVA Orange juicen ன்னும்,  அது புதுசா இருக்கவே JAVA green juice ஒண்ணு வாங்கி வந்து குடிக்க ஆரம்பிச்சவன் திடீர்ன்னு...,
 ஏம்மா, இது  இன்ஜினியரிங் காலேஜ் அதனால ஜூஸுக்கு JAVAன்னு பேர் வச்சிருக்காங்க. இதுவே மெடிக்கல் காலேஜா இருந்தா, tablet, injection, pshiyoன்னு பேர் வைப்பாங்களான்னு கேட்டான். அதை கேட்டு அங்க இருந்த ஸ்டூடண்ட்ஸ்லாம் எப்படிலாம் யோசிக்குறடான்னு கிண்டல் பண்ண, அவன் அசடு வழிய நின்னான்.
செஞ்சுதான் பாருங்களேன்..., 
பக்கோடா செய்யும் போது சிறிது ரவை கலந்து செய்தால், மொறுமொறுவென்று சுவையாக இருக்கும். இதில் ரவைக்கு பதில் வேர்க்கடலையை பொடி செய்து கலந்தும் பக்கோடா செய்யலாம். வேப்பம் பூவை நெய்யில் வறுத்து சிறிது உப்பு சேர்த்து சாதத்தில் பிசைந்து பயன்படுத்தினால் ஜுரம், வரவே வராது. வேப்பம்பூவிற்கு எங்கே போவது என நினைக்க வேண்டாம். கடைகளில் கிடைக்கிறது. மாங்கொட்டையின் உள்ளே உள்ள பருப்பை வெதுவெதுப் பான நீரில் சிறிது நேரம் ஊற வைத்து பித்தளை பாத்திரங்களை துலக்கினால், அவை பளிச்சிடும்.
 

Monday, March 12, 2012

எட்டு வகையான சொர்க்கம்- ஐஞ்சுவை அவியல்


                               
                          
நமக்கு தெரிஞ்சவங்க வீட்டு விசேஷம் வருது. நாம என்ன பண்ணுவோம்..., அவங்களோட தராதரத்துக்கு ஏத்தவாறு, நம்மோட வசதிக்கு தகுந்தவாறு எளிமையாவோ இல்ல ஆடம்பரமாவோ பரிசளிப்போம். சாதாரணப்பட்ட நம்மளே இவ்வளவு யோசிக்கும்போது! நமது தகுதிக்கேற்ப  எல்லாம்வல்ல இறைவன் கொடுக்கும்  வெகுமதி எவ்வளவு உயர்ந்ததாய் இருக்கும் என்று யோசித்து பாருங்கள்.... அத்தகைய  இறைவன் தனது நல்லடியார்களுக்கு தரும் வெகுமதிதான், “சொர்க்கம்” இறைவன் தன் திருமறையில் கூறி இருக்கிறான்: அவர்கள் செய்த நற்காரியங்களுக்கு கூலியாக, மறைத்து வைக்கப்பட்டிருக்கும், கண்கள் குளிரக்கூடிய சன்மானத்தை எவரும் அறிந்து கொள்ள முடியாது’(திருக்குர் ஆன் 32:17)

மனிதனாகப் பிறந்தவனுக்கு ஆசைகள் பலவிதம் உண்டு, எல்லா ஆசைகளையும், மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்ற வட்டத்துக்குள் அடைத்துவிடலாம். இந்த ஆசைகளை அனுபவிக்க இந்த பூமி சரியான இடமல்ல . மறுமையில் இந்த ஆசைகளை ஒருவன் பூரணமாக அனுபவிக்க முடியும் என்கிறார்.
அந்த எட்டு விதமான சொர்க்கத்தை ஒருவன் அடைய வேண்டுமென்றால் அவனிடம் ஐந்து விதமான தன்மைகள் இருக்க வேண்டுமாம். அவை...,
1. உலக வாழ்க்கையின் போது அனைத்து வகையான தீமையான காரியங்களில் இருந்தும் தன்னை தடுத்து கொள்ள வேண்டும்.
2. தனது வருமானம் குறைவாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொண்டு அதற்குள் தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் தீய வழிகளில் பொருளீட்டக் கூடாது.
 3. இறைவனை வணங்கி வழிபாடு செய்வதில் பேராசை கொள்ள வேண்டுமே தவிர பிற பொருட்கள் மீதல்ல. ஒருவேளை அப்படி ஆசைப்பட நேர்ந்தால் இறைவனிடம் பாவ மன்னிப்பு பெறவும், இறைவனின் அன்பை பெறவும் முயற்சிக்கவும் வேண்டும்..,
4. நல்லவர்களுடன் தோழமையை அதிகரிக்க வேண்டும். அவர்களுடன் சேர்ந்து நல்லவற்றையே செய்ய வேண்டும். 
5. மரணம் என்பது வலி வேதனை இன்றி அமைதியானதாக இருக்க வேண்டும். யாருக்கும் பாரமாக தொந்தரவாக நமது மரணம் அமைய கூடாது. அத்தகைய மரணத்தை தருமாறு இறைவனை கேட்க வேண்டும். அதோடு நமது பாவங்களை எல்லாம் மன்னித்து சொர்க்கத்தை தருமாறு இறைவனை மன்றாடிக் கேட்டுக்கொள்ளவேண்டும். இவற்றை பின்பற்றினால் கீழ்க்காணும் எட்டுவிதமான சொர்க்கம் நமக்கு கிட்டும் என திருக்குர் ஆன் சொல்கிறது.

அந்த எட்டு விதமான சொர்க்கம்:
தாருல் ஜலால்: வெண்முத்து, பவளம் ஆகியவற்றால் கட்டப்பட்ட மாளிகை...,
 தாருஸ் ஸலாம்: சிகப்பு மரகத கற்களால் கட்டப்பட்ட மாளிகை....,
ஜன்னத்துல் மஃவா: பச்சை நிற மரகத கற்களால் கட்டப்பட்ட மாளிகை...,
ஜன்னத்துல் குல்த்:  மஞ்சள் நிற மரகத கற்களால் கட்டப்பட்ட மாளிகை...,
 ஜன்னத்துல் நயீம்: பளபளக்கும் வெள்ளியால கட்டப்பட்ட மாளிகை...,
தாருல் கரார்: சிவந்த நிறமுடைய தங்கத்தால் கட்டப்பட்ட மாளிகை...,
ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ்: எல்லா விதமான விலை உயர்ந்த கற்களல் கட்டப்பட்ட மாளிகை, இதனுள் கஸ்தூரி வாசம் நிரம்பி வழியும்
ஜன்னத்துல் அத்ன்: தங்கம் வெள்ளி ஆகியவற்றால் கட்டப்பட்ட மாளிகை

நன்றி: தினத்தந்தி, ஆன்மீக மலர்...., 
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
சிரிப்பு வருது...,

                               
 மனைவி: நம்ம பையன் என்னவாக வரணும்னு ஆசைப்படுறீங்க?
கணவன்: அவன் என்ன வேணும்னாலும் ஆகட்டும்…ஆனா யாருக்கும் புருஷனா மட்டும் ஆகக்கூடாது… நான் பட்ட கஷ்டம் என்னோட போகட்டும்…!!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
சமாளிஃபிகேஷன்:
என் சின்ன பொண்ணு இனியாக்கு அப்போ வயசு 3.ஸ்கூலுக்கு போக ஆரம்பிக்கலை.  என் பெரிய மகளுக்கும் சின்ன மகளுக்கும் 4 வயசு வித்தியாசம்.  பெரியவளின் நோட், புக், அசைன்மெண்ட் எல்லாத்தையும் எழுதுறேன்னு எடுத்து பிரித்துப் பிச்சிடுவா. அன்னிக்கும் அதேப்போல..., “ அம்மா என் அசைண்ட்மெண்ட்ல பாப்பா தண்ணியை கொட்டிட்டான்னு பெரியவ, தூயா அழுதுக்கிட்டே வந்தா. சின்னது இனியாவை கூப்பிட்டு “ஏன், எப்ப பார்த்தாலும் அக்காவை வம்புக்கு இழுக்குற? இனி அக்காக்கிட்ட இருந்து உன்னை பத்தி கம்ப்ளெயிண்ட் வரக்கூடாது” வந்தால் அடிச்சுடுவேன்னு கோவமா சொன்னேன். 
உடனே அவள்., அக்கா நல்லா கேட்டுக்கோ, நீ என்னை கம்பெளெயிண்ட் பண்றது அம்மாக்கு பிடிக்கலை. இனிமே அம்மாக்கிட்ட கம்ப்ளெயிண்ட் பண்ணாத, ஓக்கே?!வான்னு அப்பாவியாச் சொல்ல கோவம் மறந்து சிரிச்சுட்டேன்.  
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

யோசிங்க....,                                    
                                    

1. ஒரு கூடையில 6 முட்டைகள் இருக்கு.. 6 பேர் 6 முட்டைகளை எடுத்துக்கறாங்க.. ஆனால் ஒரு முட்டை மட்டும் கூடையிலயே இருக்கு அது எப்படி?
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
ஒழுங்கா சமைக்க...,
டீ போடும் போது, டீத்தூளுடன் சர்க்கரையை சேர்த்து கொதிக்க விடாதீர்கள் டீயின் சுவை குறைந்து விடும்.  கீரை மசியல் செய்ய கீரையை கடையும் போது
அதனுடன் கால் ஸ்பூன் சர்க்கரையை சேர்த்து கடைய கீரை தனி சுவையுடன் இருக்கும். ரசம் இறக்கி வைத்ததும், ஒரு துளி நெய் சேர்த்து பச்சை கொத்தமல்லியை பொடிப் பொடியாக நறுக்கிப் போடுங்கள் மணமும் ருசியும் எடுப்பாய் இருக்கும்.