Showing posts with label தர்பூசணி. Show all posts
Showing posts with label தர்பூசணி. Show all posts

Saturday, March 23, 2019

காதுக்குத்திக்க யாராவது அடம்பிடிப்பாங்களா!? கிராமத்து வாழ்க்கை

இன்னிக்கு பக்கம் பக்கமா படிக்கும் இம்சைல இருந்து விடுதலை... விடுதலை...

சிங்கப்பூரிலிருந்து வந்த அப்பாவின் நண்பர் ஒருவர்  ஒரு உண்டியல் பொம்மையை எனக்கு கொடுத்தார். . இந்த பொம்மையின் கதவின் வெளிய பைசாவை வச்சா உள்ளிருந்து ஒரு நாய்  பைசாவை உள்ளிழுத்துக்கும். எனக்கப்புறம் என் எதிர்வீட்டு குழந்தைக்கு அதை அப்பா கொடுத்துட்டார்.  பிள்ளைங்க பிறந்தபின் நிறைய இடத்தில் தேடியும் கிடைக்கல. வேலூர் பர்மா பஜார்ல கிடைச்சது. 

கோவை இலையுடன், அடுப்புக்கரியை அரைச்சு ஸ்கூல் போர்ட், ஸ்லேட்டுக்குலாம் தடவினா புதுசு மாதிரி ஆகிடும். அப்படி கோவை இலை கிள்ள போகும்போதுலாம் கோவைப்பழத்தை பசங்க சாப்பிடுவாங்க. நான் சாப்பிட்டதில்லை.


திருத்தணில குடியிருந்தபோது, பாட்டி வீட்டுக்கு வரனும்ன்னா திருத்தணில பஸ் ஏறினால் காஞ்சிபுரத்துல இறங்கி,  ஆரணிக்கு பஸ் பிடிச்சு வரனும். ரிட்டர்னும் அப்படியே! ஆரணி டூ காஞ்சிபுரம், காஞ்சிபுரம் டூ திருத்தணி. காஞ்சிபுரத்துல ஒரு கடையில் அம்மா பன்னீர் சோடா வாங்கி தருவாங்க. கோலிசோடாவை குடிக்க துப்பில்லாத வயசு. கண்ணாடி டம்ப்ளர்ல ஊத்தி தருவாங்க.  பெயிண்டிங்க் பண்ண அந்த டம்ப்ளரை அம்புட்டு பிடிக்கும். பெருசானால் நிறைய வாங்கி வைக்கனும்ன்னு ஆசைப்பட்டேன். ஆனா, கண்ணாடி டம்ப்ளர் இருந்தாலும் நான் ஆசைப்பட்ட மாதிரி ஒன்னுக்கூட  கிடைக்கல :-(

Image may contain: one or more people and text

படிச்சு பெரிய ஆராய்ச்சியாளரா வருவேன்னு  அப்பா படிக்க வாங்கிக்கொடுத்த பொருளை வச்சு இப்படிதான் ஆராய்ச்சி நடந்துச்சு :-)


எதாவது எலக்ட்ரானிக் பொருள் வாங்கி வந்தால் வீட்டுக்கு ஒரு பொருள் வந்துச்சுன்னு அம்மா, அப்பாக்கு சந்தோசம், நம்ம சந்தோசம்லாம் இந்த பப்பிள்சை உடைக்குறதுலயே இருந்துச்சு. இப்ப என்னோடு போட்டி போட்டுக்கிட்டு நான் பெத்ததுங்களும் உடைக்குதுங்க. 
Image may contain: one or more people, fruit and food
 பழத்துல இருக்கும் விதையை சாப்பிட்டா வயித்துல செடி முளைச்சு காது, மூக்குல இலை வரும்ன்னு பயமுறுத்தியதால் தர்பூசணியை சாப்பிடவே மாட்டேன். ஏன்னா, இதுல விதையும் சிறுசு. அதிகமாவும் இருக்கும். ஆனா, கொய்யாப்பழத்துல இம்புட்டு விதை இருக்கே! இது முளைக்காதான்னு  கேட்க தோணலை. ஏன்னா, இப்ப மாதிரிலாம் அப்ப அம்புட்டு அறிவுலாம் கிடையாது!!! பாருங்க.  இப்ப மட்டும் இருக்குதான்னு யாரும் கேட்கப்படாது. அப்புறம் அழுதுடுவேன்.
இந்த பாப்பா எத்தனை சமர்த்தா காது குத்திக்குது!! நான்லாம் காது குத்திக்க பண்ணின அட்டூழியத்தை அம்மா கதை கதையா சொல்வாங்க. அப்பா, அம்மா, அண்ணா, மற்றும் பலர்லாம் பிடிச்சு அமுக்கி காது குத்தினாங்களாம். இந்த களேபரத்துல என் மாமாக்கு அடிப்பட்டதுதான் ஹைலைட்டே. 

மீண்டும் ஒரு நினைவு மீட்டலோடு வரேன்...

நன்றியுடன்,
ராஜி

Thursday, October 10, 2013

காய்கறிகள் சமைக்க மட்டும்தானா!?

பறங்கிக்காயில் மஞ்சள் குருவி.

கேரட்டில் செய்த பூ...,

கேரட், பீட்ரூட், கோஸ் ரோஸ்...,

கேரட், ,முள்ளங்கி, வெள்ளரி பூங்கொத்து

என்ன காய்ன்னு தெரியல, ஆனா, அழகான் பூங்கொத்து


கேரட், தர்பூசனி பூ..,

சிவப்பு முள்ளங்கி பூ...,

தர்பூசனி அன்னப்பறவை...,

கேரட் சங்கு...,


பச்சை, சிவப்பு ஆப்பிள். திராட்சை பூ..,

 தர்பூசணி மயில்..,

தர்பூசணி பாப்பா..,

 தர்பூசணி, கேரட் விநாயகர்...,


தர்பூசணி குருவி...,
இதெல்லாம் நானே செஞ்சதுன்னு சொன்னா நம்பவா போறீங்க. இதெல்லாம் வச்சு ஒரு சாம்பார், பொறியல், வறுவல் செய்ய தெரியாத உனக்கு இப்படிலாம் செய்ய தெரியுமா!?ன்னு நீங்க கேக்குறது தெரியுது. இதெல்லாம் கூகுள்ள சுட்டதுன்னு உண்மையை சொல்லிட்டு நான் எஸ்கேப்பிக்குறேன்.