Showing posts with label பாரதியார். Show all posts
Showing posts with label பாரதியார். Show all posts

Saturday, October 27, 2018

சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?!


காகத்துக்கு அடுத்தபடியா மனிதனுக்கு தெரிஞ்ச பறவைன்னு சொல்லப்பட்டது  ”சிட்டுக்குருவி”. இதுக்கு வீட்டுக்குருவி, அடைக்கலக்குருவி, ஊர்க்குருவி, தவிட்டுக்குருவின்னுலாம் பேரு. மனிதர்களோடு வாழ்ந்தாலும் கிளி, புறா மாதிரி மனிதர்களோடு பழகுவதில்லை. சின்னஞ்சிறிய உடல்,  குட்டியான இரு கால்கள், குட்டியூண்டு அலகோடு பழுப்பு சாம்பல், மங்கலான வெள்ளைன்னு இருக்கும் ஆண்குருவி.   சராசரியா 40லிருந்து 50 கிராமுக்குள் இருக்கும். மேற்பாகம் தவிட்டு நிறத்திலும், மஞ்சளும் கறுப்பும் கலந்த கோடுகளோடு இருக்கும் பெண்குருவி. 

ஆசியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பா கண்டத்துலலாம் குருவி இனம் இருக்கு. சராசரியா 13 ஆண்டுகாலம் வாழும் இது. மரத்தில், வீடுகளில் மறைவான இடத்தில் கூடுகட்டி நம் கண்பார்வையிலே வாழ்ந்தாலும் இதை செல்லபிராணியா வளர்க்கமுடியாது. ஏன்னா அதுக்குலாம் இது செட்டாகாது. கிண்ண மாதிரியான வடிவத்தில் கூடு கட்டி வாழ்ந்தாலும் குளிர்காலத்தில் கூட்டமா  இருந்து குளிரை சமாளிக்கும்.  புழு, பூச்சி, நெல், கம்பு மாதிரியான தானியங்களை உண்டு வாழும்.  ஒரு நேரத்தில் 3லிருந்து 5 முட்டை வரை இட்டு குஞ்சு பொரிக்கும். பச்சை கலந்த வெள்ளை நிறத்துல இருக்கும். முட்டையை அடைக்காத்து குஞ்சுகள் பெருசாகி பறக்கும்வரை அவைகளை பாதுகாப்பது தாய், தந்தை குருவியை சாரும்.  பறக்க ஆரம்பிச்சுட்டா அது ஃப்ரீ பேர்ட்தான். அம்மா அப்பா பேச்சை கேட்கனும்ன்னு இல்ல. 

மெல்லிய கோடுகளைக் கொண்டது புல்வெளிக் குருவிகள், மாலைச் சிட்டுகள், காட்டில் வாழும் நரிச் சிட்டுகள், வெண்கொண்டையும் வெண்மையான தொண்டையும் கொண்ட குருவிகள், கறுப்புச் சிட்டுகள், வெள்ளைக் கோடுகள் உடைய கொண்டையை கொண்ட குருவின்னு விதம் விதமா இருக்கு. இனப்பெருக்க காலம் வந்ததும், தனக்கு பிடிச்ச மாதிரியான பெண்குருவியை  தேர்ந்தெடுக்கும். 

தன்னோட லவ்வை சொல்லி, அந்த பெண்குருவிக்காக கூடு கட்டும்.  வைக்கோல், புல், குச்சிகளை கொண்டு கிண்ணம் மாதிரி கூடு கட்டி, உள்ள, களிமண்ணால் மொழுகி படுக்கையை ரெடி பண்ணும். வெளிச்சத்துக்கு மின்மிணி பூச்சியை கொண்டு வந்து கூட்டுக்குள் வைக்கும். இப்படி பக்காவா கூட்டை ரெடி செஞ்சு பெண்குருவியை கொண்டு வந்து காட்டும். கூடு  பெண்குருவிக்கு பிடிச்சிருந்தா மட்டுமே டும்டும்டும்தான், பாலும் பழமும்தான்., குவாகுவாதான். இல்லன்னா தேவதாசும் நானும் ஒரு ஜாதிதானடின்னு பாடிக்கிட்டு திரியவேண்டியதுதான். கூடு கட்டிக்கிட்டிருக்கும்போது எதிர்பாராத விதமா அந்த கூடு கீழ விழுந்துட்டா, அதை எடுத்து வச்சு மீண்டும் கூடு கட்டாது.
வளர்ப்பு பறவையை தவிர வேறெந்த பறவையும் வீட்டுக்குள் வரத்தயங்கும். ஆனா, சிட்டுக்குருவி அப்படியில்லை. சர்வசாதாரணமாய் வீட்டுக்குள் வலம் வரும். புழு, பூச்சியை சாப்பிட்டாலும் அதோட முழுமையான உணவு கம்பு, சோளம், நெல் மாதிரியான தானியங்கள்தான்.  அப்படின்னா வயல்வெளிகளில்தானே இருக்கனும்ன்னு நினைக்கலாம். வருடத்தின் அத்தனை நாளும் தானியம் விளையாதே! ஆனா, வீடுகள் அப்படியில்லை. சதாசர்வகாலமும் தானியங்கள் புழங்கும்.
ஒரு இருபது வருடங்களுக்கு முன்னலாம் தானியங்கள்  அறுவடையாகி வீட்டுக்கு வருவதும், அதை காய வைக்க, தோல் நீக்க, புடைக்க, குத்த, அரைக்கன்னு பல வேலைகள் தினத்துக்கும் நடக்கும்.  அப்ப சிந்துனது, சிதறுனதை சாப்பிடவே குருவிகள் வீட்டுக்கு வரும். ஆனா, இப்ப அப்படி இல்ல.  சூப்பர் மார்க்கெட்ல இருந்து டைரக்டா பாக்கெட்ல இருந்து வாங்கி வந்து பயன்படுத்துறோம். உணவில்லாதபோது குருவி எப்படி வீட்டுக்கு வருமாம்?! சரி, வயல்வெளிகளில் உண்டு கழிக்கலாம்ன்னு பார்த்தா, நாமதான் அதையெல்லாம் ரியல் எஸ்டேட்டாக்கி பாழ்படுத்திட்டோமே!

அப்படியே அங்கொன்னும், இங்கொன்னுமா நடக்கும் விவசாயம்கூட, கம்பு, கேழ்வரகு, சோளம்ன்னு விளைவிக்காம கரும்பு, சவுக்கு, கத்திரி, வெண்டை, தக்காளின்னு ஆகிட்டுது.  அப்படியே, கம்பு, சோளம்ன்னு பயிரிட்டாலும் கை அறுவடை இல்லாம, மெஷின் அறுவடைன்னு கதிர் அடிக்க, தூத்தன்னு எல்லா வேலையும் முடிஞ்சு ஒரு மணிகூட சிந்தாம சிதறாம அப்படியே வீட்டுக்கு கொண்டு வந்துடுறாங்க.  இதுல விவசாயிக்கு லாபம்ன்னு சந்தோசப்பட்டாலும், அவனை அண்டி வாழும் சின்னஞ்சிறிய உயிர்களான எலி, குருவி மாதிரியான உயிர்கள் பட்டினி.. பின்னர் அதோடு இனமும் அழிஞ்சுக்கிட்டு வருது. தான் மட்டுமே வாழனும்ன்ற சுயநலமே இதுக்கு காரணம். 

மனுசன் சல்லிப்பயன்னு புரிஞ்சதாலோ என்னமோ அவனை நம்பி இருக்கும் ஜீவன்களாலேயே அவன் உயிரை எடுக்கும் வேலையை இயற்கை செய்யுது. முன்னலாம் சாமி படங்கள் உட்பட அனைத்து படங்களும், கண்ணாடிலாம் ஒரு 50டிகிரி சாய்மானத்துல சாய்ச்சு வச்சு சுவத்துல ஆணியோடு ஒரு கம்பி வச்சி இணைச்சிருப்பாங்க. ஆனா, இப்பலாம் லேமினேஷன் பண்ணப்பட்ட படங்கள். அதேப்போல, பெண்டுலம் வச்ச கடிகாரம் இருக்கும். அதுமேலயும் கூடு கட்டும். அதில்லாம, ஓட்டு வீட்டு கூரையில் கட்டும், தாழ்வாரம்ன்னு கொஞ்சம் மறைவான இடத்துல கட்டும். இப்பலாம் அதுலாம் இல்லாததால் அதுக்கு கூடு கட்ட வாய்ப்பே இல்ல. 
சிட்டுக்குருவி இனம் அழிய செல்போன் டவர் காரணம்ன்னு சொல்லப்பட்டாலும் இன்னமும் விஞ்ஞானரீதியா அது நிரூபிக்கப்படலை. சிட்டுக்குருவி இனம் அழிய பல காரணங்கள் உண்டு. வருசத்துக்கு மூன்று முறைதான் இது முட்டை இடும். ஒருமுறை 3 லிருந்து 5 வரை முட்டையிடும். அத்தனை முட்டையும் குஞ்சு பொரிக்க தகுதியானதில்லை. சில கூமுட்டைகளும் உண்டு. அப்படியே தகுதியான முட்டைகள் கூட்டிலிருந்தாலும் காகம் அந்த முட்டைகளை கீழ தள்ளிடும். மிச்சம்மீதி குஞ்சு பொரிச்சாலும் பாம்பு, காகம் மாதிரியான பிராணிகளுக்கு உணவாகிடுது.  எப்படியோ தப்பித்தவறி உசுரு பொழைச்சாலும், தாய்க்குருவி கொடுக்கும் உணவு நஞ்சாகிடும். அது எப்படின்னா, நாமதான் பூச்சி மருந்துகளை வயலுக்கு தெளிக்குறோமே! அதான் காரணம்.
சரி, தானியம் வேணாம்ன்னுட்டு புழு பூச்சி சாப்பிட்டு உசுர் வாழலாம்ன்னு பார்த்தா, வாகனங்கள், தொழிற்சாலைன்னு வெளியிடும்  மெத்தைல் நைட்ரேட்  என்னும் நச்சு புகை புழு, பூச்சிகளை கொன்னுடுது.  அப்புறம் எப்படி அது உயிர்வாழுமாம்?! அப்படியே வாழ்ந்து வந்தாலும் அடுத்த ஒரு ஆபத்து அதை நோக்கி இருக்கு. அது ஆண்களின் ஆண்மையை அதிகரிக்கும் சிட்டுக்குருவி லேகியம் வடிவில்... 
குறிப்பிட்ட 15க்கும் மேற்பட்ட மூலிகைகளை இடித்து, குடல், இறகுலாம் சுத்தம் செய்யப்பட்ட குருவியின் வயிற்றில் இந்த மூலிகை பொடியினை வைத்து தைத்து,  மண்சட்டியில் பசுநெய்யில் இந்த குருவியை வறுத்தெடுத்து, நூலினை நீக்கி, உரலில் விட்டு இடிச்சு வரும் மருந்தோடு சரிக்கு சமமா பனங்கற்கண்டு சேர்த்து, அரைலிட்டர் பால் கொதிச்சதும்,  இதை போட்டு சரியான பதம் வந்ததும், குருவியை பொறிச்ச மிச்ச நெய்யும், தேனும் சேர்த்து கிளறினா சிட்டுக்குருவி லேகியம் தயார்.  மனுச குலம் தழைக்க குருவி குலத்தை அழிச்சிக்கிட்டிருக்கோம். காக்கையும், குருவியும் எங்கள் சாதின்னு பாரதி பாடினான். நாமதான் நம்ம சாதிக்காரன் பொழச்சு வந்தாலே வயிறு எரியும் ஆட்களாச்சே! அப்புறம் குருவி, காக்கையையா வாழவிட்ருவோம்?!
விட்டு  விடுதலை யாகிநிற் பாயிந்தச்

Wednesday, December 18, 2013

தீக்குள் விரலை விட்டால்...., பாரதியார் இல்லம் - மௌனச்சாட்சிகள்

மாகாகவி பாரதியார் தன் இறுதிகாலத்தில் வாழ்ந்த திருவல்லிகேணி பாரதியார் இல்லத்தைதான் இந்தவாரம் மௌன சாட்சிகளில் நாம பார்க்கப் போறோம்.  கண்ணன் மேல் தீராத காதல் கொண்ட வீர கவிஞனின் வாழ்ந்த இடத்தில் நிற்கிறோம்ன்ற நினைவே நம்மை இனம்புரியா உணர்ச்சிகள் மனசுல கரைப் புரண்டோடுது.

வீட்டுக்குள் நுழைந்ததும் 
தேடி சோறு நிதம் தின்று
பலசின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம்வாடி துன்பம் மிக உழன்று
பிறர்வாட பல செயல்கள் செய்து
நரைகூடி கிழப் பருவம் எய்தி -
கொடும்கூற்றுக்கு இரையென மாயும்
பலவேடிக்கை மனிதரை போலே
நான்வீழ்வேனென்று நினைத்தாயோ?ன்னு 
பாரதி பாடியது காதோரம் கேட்டது பிரமையா!? இல்ல நிஜமா!? பெண்களின் விடுதலைக்கு அன்றே அஸ்திவாரம் போட்ட முதல் கவிஞன் இந்த பாரதி தான். இந்த பாடல் எழுதப்பட்ட சூழ்நிலையை பத்தி எங்க தமிழ் சார் அழகாக சொல்லுவார். அந்த நாட்களில் பாரதி தன் மனைவி  செல்லம்மாவின் தோளில் கையை போட்டுக்கொண்டுதான் தெருவில் அழைத்துச் செல்வாராம். அப்படி செல்லும்  போது, பெண்களை அடுக்களையில் வைத்து இருந்த அந்த காலத்தில், இப்படி செய்கிறாரே! என ஊரில் உள்ளவர்கள் "பைத்தியங்கள் ஊர் சுற்ற கிளம்பி விட்டன"ன்னு பரிகாசம் செய்வார்களாம். 

அப்படி செய்பவர்களை பார்த்து செல்லம்மாள் வருத்தப்படுவாராம். தன்னால் தானே தன் கணவருக்கு இந்த அவமரியாதை  என. அவளை சமாதானப்படுத்த பாடப்பட்ட பாடல்தானாம்  இது. என்ன அற்புதமான புதுமை சிந்தனையை கொண்டவன் இந்த பாரதி. வாங்க அவருடைய  நினைவு இல்லத்தின் உள்ளே போலாம்.  இங்க ஒரு நூலகமும் இயங்குது .
இந்த வீட்டுல அவரது மார்பளவு உருவச் சிலை ஒண்ணி வைக்கப்பட்டிருக்கு.  மேலும் வீடு புதுப்பிக்கும் வேலைலாம் நடக்குறதால சில இடங்களை மட்டுமே பார்க்கமுடியும்.  அங்க இருபவர்கள் புகைப்படம் ஃபோட்டோ எடுக்க பெர்மிஷன் கொடுக்க தயங்குறாங்க.  அங்க ஒரு தற்காலிக அலுவலகமும் இயங்குது.

நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல் - பாரதி 
இதுதான் அவர் ஃபோட்டோ,  அவர் எழுதிய நூல்கள் அவருடைய வாழ்க்கை வரலாறு அடங்கிய தொகுப்புகள் வைத்திருக்கும் அறைக்கு செல்லும் முகப்பு.  அங்க அவரது கையெழுத்துடன் கூடிய ஒரு போட்டோ இருக்கு. அதுல காம்பீரமா இருக்கிறார் நம் மீசைகவிஞன்

கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன்வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன்அவனே கவி - பாரதி.

இங்கே நிறைய ஃபோட்டோக்கள் இருக்கு. அவர் கையெழுத்துடன் கூடிய போடோஸ் இருக்கு அதில் சில போடோஸ் பத்தி பார்க்கலாம்   
அவரது கையெழுத்துடன் கூடிய ஒரு அகராதி பிரதியுடன் போட்டோ கோப்பி வச்சு இருக்காங்க.


எட்டயப்புரத்தில் சின்னச்சாமி, லட்சுமி அம்மாளுக்கு 11.12.1882 அன்று பிறந்தார். தனோட 14 வது வயதில் 7வயது செல்லம்மாவை மணந்தார். சிறு வயதிலேயே தாய், தந்தையை இழந்து அத்தையின் ஆதரவோடு காசியில் கல்விச் செல்வத்தை பெற்றார்.

தன்னோட 11 வயதில் எட்டயப்புரத்து சமஸ்தானத்துல பெரிய பெரிய புலவர்களால் சோதனைக்குட்பட்ட பாரதி புடம் போட்ட தங்கமாய் வெளி உலகத்திற்கு ஒளி வீசினார்.




இந்த வீட்டின் பழைய புகைபடம் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் திருவல்லிக்கேணியில் வசித்த வீட்டை, தற்பொழுது தமிழக அரசு பராமரித்து வருது. சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதற்காக பிரிட்டிஷ் அரசால் 1908ம் ஆண்டு தேடப்பட்டு வந்தார். அப்ப பாரதியார் புதுச்சேரியில் இருந்தார்.

பின்னர் 1920ம் ஆண்டு,பாரதி சென்னைக்கு வந்து சுதேசமித்திரன் பத்திரிகையில் பணியாற்றினார். அப்போது, திருவல்லிக்கேணியில் ஒரு அறை, மற்றும் சமையலறை கொண்ட சிறிய வீட்டில் தமது மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வந்தார்.
 
தன் வீட்டிலிருந்து தினமும் கோவிலுக்கு சென்று இறைவனை தரிசிப்பது பாரதியின் வழக்கம். அப்படி ஒருநாள் இறைவனை தரிசிக்க செல்லும்போது தினமும் வாழைப்பழம் கொடுத்து தன் அன்புக்கு பாத்திரமான கோவில் யானையால் தூக்கி எறியப்பட்டு சில் நாள் உடல் நலிவாயிருந்து 12.9.1921 அன்று நள்ளிரவு தனது 39 வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.

பாரதியாரின் ஆயுட்காலம் போலவே என்னோட கேமரா ஆயுட்காலமும் (அதாங்க பேட்டரி) சீக்கிரமே முடிஞ்சுட்டுதால, நிறைய புகைப்படங்கள் எடுக்க முடியலை. 

நிறைய படங்களோட வேற ஒரு இடத்திலிருந்து மௌனச்சாட்சிகள் பகுதிக்காக சந்திக்கலாம்.கடைசி படம் நெட்டுல சுட்டது.