கடந்த ஞாயிற்று கிழமை நாங்க சென்னைக்கு போகலாம்ன்னு முடிவு பண்ணதை எப்படியோ தெரிஞ்சுக்கிட்ட விஐபிலாம் அப்பாய்ண்ட்மெண்ட் கேட்டு ஒரே தொந்தரவு. அதனால, சென்னைக்குள் நுழைஞ்ச உடனே எங்க செல்போன்லாம் ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வச்சிட்டோம்.
நாங்க எங்கெல்லாம் போவோம்ன்னு அவங்களாவே கெஸ் பண்ணி, ஈவினிங்க் பீச்சுக்கு போவோம்ன்னு முடிவு பண்ணி எங்களுக்கு முன்னாடி அந்த விஐபிலாம் வந்து எங்களுக்காக காத்திருந்தாங்க.
கலைஞர் ஐயா, நடிகர் பருத்தி வீரன் கார்த்தி, நடிகர் தனுஷ், நடிகர் விஜய், நடிகர் சரத்குமார், நடிகர் சிம்பு, தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, நடிகை காஜல் அகர்வால், நடிகை சினேகா, நடிகை அஞ்சலி, நடிகை நயன்தாரா, நடிகை அசின் கூட மறைந்த தலைவர் எம்.ஜி.ஆர்கூட தேவலோகத்திலிருந்து வந்திருந்தார்.
இவங்களோடு காட்டிலிருந்து ஒரு புலியும் வந்துடுச்சு. நாங்கலாம் பயப்படமாட்டோம். ஆனா பீச்சுல இருக்குறவங்கலாம் பயப்படுவாங்களேன்னு போக சொல்லிட்டோம்.
எல்லாரும் என்கூட போட்டோ எடுத்துக்கோங்கன்னு என் மகனை ரொம்ப விரும்பி கேட்டுக்கிட்டாங்க. ஆனா, எங்களுக்குதான் இந்த பப்ளிசிட்டி பிடிக்காதே!? அதனால,முடியாதுன்னு சொன்னோம்.. இருந்தாலும் ரொம்ப கேட்டுக்கிட்டதால ரெண்டே ரெண்டு குரூப் போட்டோ மட்டும் எடுத்துக்கிட்டான்.
டிஸ்கி: படத்துல இருப்பது வருங்கால தமிழகத்தின் சூப்பர் ஹீரோ என் மகன் அப்பு. படம் எடுத்தது சின்ன பொண்ணு இனியா.