Showing posts with label மகாலட்சுமி. Show all posts
Showing posts with label மகாலட்சுமி. Show all posts

Friday, August 09, 2019

இந்தியாவின் ஹஸ்பண்ட் டேன்னு வரலட்சுமி விரதத்தை சொல்லலாமா?!


கல்யாணத்தப்போ என் கால்ல விழுந்தது. அதுக்கப்புறம் என் பொண்டாட்டி என் கால்ல விழவே இல்லன்னு  புலம்பும் ஆண்கள் நிறைய உண்டு. ஆனா, ஒருசில சமுகத்தாருக்கு இந்த ஏக்கம் வருடத்துக்கு ஒருமுறை தீரும். ஒரு சில ஆண்களின் ஏக்கத்தை தீர்க்கும் நாள் வரலட்சுமி விரதமாகும்.  இன்றைய தினம் , வீட்டுக்காரர், குழந்தை, குடும்பம்லாம் நல்லா இருக்கனும்ன்னு வேண்டிக்கிட்டு விரதமிருந்து அம்பாளை கும்பிட்டு வீட்டுக்காரர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கும் நன்னாளே இந்நாள். வெள்ளைக்காரன் பாதர்ஸ் டே, வுமன்ஸ் டேன்னு கொண்டாடுனா கிண்டல் பண்ணுறோம். ஆனா, நாம புருசனுக்காக கொண்டாடும் இந்த பண்டிகையை கிண்டல் செய்யமாட்டோம். வரலட்சுமி நோன்பை இந்தியாவின் ஹஸ்பண்ட் டேன்னு சொல்லலாமோ?!
Raja Ravi Varma - Collections - Google+

பத்ரச்வரஸ்ன்ற மன்னன் சிறந்த விஷ்ணுபக்தன். அவன் மனைவி சுரசந்திரிகா, இவர்களின் மகள் சியாமபாலா. தங்கள் மகளை சக்கரவர்த்தியான மாலாதரன் என்பவருக்கு மணமுடித்து கொடுத்தனர். காலங்கள் ஓடின.   ஒருநாள் வயது முதிர்ந்த ஒரு சுமங்கலி மூதாட்டி பத்ரச்ரவசின் அரண்மனைக்கு வந்தாள். மூதாட்டியின் வடிவெடுத்து வந்தது அந்த மகாலட்சுமி தேவியே. வரலட்சுமி விரதத்தின் அருமை, பெருமைகளை சொன்ன மூதாட்டி, அந்த விரதத்தை கடைபிடிக்குமாறு சுரசந்திரிகாவிடம் சொன்னாள். வந்திருப்பது லட்சுமிதேவி என்பது அவளுக்கு தெரியவில்லை. ஏதோ பிச்சை கேட்க வந்த கிழவி உளறுவதாக கருதி அவமானப்படுத்தி விரட்டினாள் சுரசந்திரிகா. லட்சுமி தேவி ஒரு இடத்திற்கு வருவது சாமான்ய காரியமல்ல. அரண்மனையை தேடி வந்தவளை விரட்டினாள் அங்கு இருப்பாளா? அந்த இடத்தை விட்டு அகன்றாள் லட்சுமி தேவி. விளைவு? மணி மகுடத்தையும், செல்வச் செழிப்பையும் இழந்தாள் சுரசந்திரிகா.
சுரசந்திரிகா அரண்மனையை  விட்டு அகன்ற மகாலட்சுமி நேராய் அரசியின் மகள் சியாமபாலாவிடம் சென்றாள். வரலட்சுமி விரதத்தின் பலன்கள் பற்றி அவளிடமும் சொன்னாள். தாயைப்போல உதாசீனப்படுத்தாமல்  கர்ம சிரத்தையுடன் கேட்டு, பயபக்தியுடன் வரலட்சுமி பூஜையை செய்து வழிப்பட்டாள். விரதத்தின் மகிமையால் மலைப்போல செல்வம் குவிய துவங்கியது.. பெற்றோர் வறுமையில் இருப்பதை அறிந்த சியாமபாலா ஒரு செப்பு பானை நிறைய தங்கத்தை நிரப்பி அனுப்பித்தாள்.  அவள் அனுப்பி வைத்தாலும் அதை அனுபவிப்பதற்கு யோகம் இருக்க வேண்டுமே! அவர்களை சூழ்ந்திருந்த தரித்திரம்,  அந்த வாய்ப்பை தடுத்துவிட்டது. அவர்களிடம் வந்ததுமே   ஒரு பானை தங்கமும் கரியாக மாறி விட்டது!! இதை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்த சியாமபாலா, வீடு தேடி வந்த லட்சுமிதேவியை அவமானப்படுத்தி அனுப்பியதாலேயே அவர்களுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது என்பதை புரிந்துகொண்டாள். வரலட்சுமி விரதத்தின் மகிமைகளை தாய்க்கு எடுத்து சொன்னாள். தாங்கள் செய்த தவறுகளை மன்னித்து, அகம்பாவத்தை போக்குமாறு மகாலட்சுமியை மனமுருக வேண்டினாள் சுரசந்திரிகாவரலட்சுமி விரதம் மேற்கொண்டு பூஜை, வழிபாடு செய்து பிரார்த்தனை செய்தாள். இதனால் இழந்த செல்வங்களை மட்டுமின்றி ஆட்சி, அதிகாரமும் அவர்களை வந்தடைந்ததாக புராணங்கள் கூறுகின்றது.

முன் ஜென்ம கர்ம, பாவ வினைகளால் உண்டாகும் தடைகள், தோஷங்கள், பிணிகள்,  நீங்கி நாம் நலமோடு வாழ தெய்வ திருவருள் பெறுவதற்கு வழிபாடுகள், விரதங்கள் பெரிதும் துணை புரிகின்றன. ஆயுள், ஆரோக்யம், புத்திர சம்பத்து, மாங்கல்ய பலம், சவுபாக்ய யோகம் கிடைக்கவும் மன அமைதி, சந்தோஷம் ஏற்படவும் பூஜை, புனஸ்காரங்கள் இருக்கின்றன. அந்த வகையில் செல்வத்துக்கு அதிபதியான ஸ்ரீமகாலட்சுமியின் அருள் வேண்டி செய்யும் விரத பூஜையே வரலட்சுமி பூஜை அல்லது வரலட்சுமி நோன்பாகும். வேதம் படிப்பதால் கிடைக்கும் அத்தனை ஞானமும், நலனும், வளமும் விரதங்களால் கிடைக்கின்றன என்று புராணங்கள் கூறுகின்றன. மகாலட்சுமியின் அவதார நாள் துவாதசி வெள்ளிக்கிழமை என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த நாளில் செய்யும் . ஒவ்வொரு ஆண்டும் ஆடி அல்லது ஆவணி மாத பவுர்ணமிக்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமை வரலட்சுமி பூஜை நோன்பு நாளாகும்.
வீடு வாசலை சுத்தம் செய்து, வீட்டின் தென்கிழக்கு மூலையில் ஒரு மண்டபம் அமைத்து, ஒரு மனையில் கோலம் போட்டு,  லட்சுமி சிலை அல்லது லட்சுமி படம்  வைத்து மலர் மாலை, கதம்ப பூக்களால் அலங்கரிக்க வேண்டும். சில வீடுகளில் தங்கம் அல்லது வெள்ளியில் வரலட்சுமி உருவம் வைத்திருப்பார்கள். கலசத்தின் மீது இதை வைத்து பூஜை செய்வார்கள். அவ்வாறு வைத்திருந்தால் கலசம் வைத்து அதன்மேல் தேங்காய் வைத்து பட்டுத்துணி, பூக்கள் கொண்டு அலங்கரிக்க வேண்டும். கலசத்தின் உள்ளே நீர்விட்டு ஏலக்காய், பச்சை கற்பூரம், வாசனை திரவியங்கள் சேர்க்க வேண்டும் அல்லது கலசத்தில் அரிசி, பருப்பு நிரப்பியும் செய்யலாம். அந்த தேங்காயில் வரலட்சுமி உருவத்தை பொருத்தி அவரவர் குடும்ப வழக்கப்படி பூஜை செய்யலாம். வசதிக்கேற்ப அப்பம், வடை, பொங்கல், சுண்டல், கேசரி போன்ற நைவேத்யங்கள் படைத்து கும்பத்தில் மஞ்சள் நோன்பு கயிறுகள் வைத்து பூஜை செய்ய வேண்டும்.
ஒருமுறை பார்வதியும், பரமசிவனும் சொக்கட்டான் விளையாடி கொண்டிருந்தனர். அவ்விளையாட்டுக்கு பரமசிவனின் பணிப்பெண்ணான சித்திரநேமி என்ற தேவர்குலப்பெண் நடுவராய் இருந்தாள். ஆட்டத்தின் முடிவில் பரமசிவன் வெற்றி பெற்றதாய் அறிவித்தாள். தன் எஜமானுக்கு சாதகமாய் சிவன் வெற்றி பெற்றதாய் சித்திரநேமி மீது கோவம் கொண்ட பார்வதிதேவி, சித்திரநேமிக்கு தொழுநோய் வருமாறு சபித்தாள். தன்மீதுள்ள பாசத்தால் சித்திரநேமி அப்படி நடந்துகொண்டாள், அவளுக்கு சாபவிமோசனம் கொடு என பரமசிவன் பார்வதிதேவியை சாந்தப்படுத்தியபின், தேவ கன்னிகைகள், எப்போது குளக்கரையில் வரலட்சுமி விரதமிருப்பார்களோ, அப்போது உன் சாபம் நீங்குமென சொன்னாள். சித்திரநேமி பூமிக்கு வந்து, யாருமில்லாத ஒரு குளக்கரையில் தன் வாழ்நாளை கழித்து வந்தாள். அக்குளக்கரைக்கு தேவக்குல பெண்கள் வரலட்சுமி விரதமிருக்க வந்தனர். அவர்கள் வரலட்சுமி விரதமிருப்பதை கண்டதும் சித்திரநேமியின் சாபம் நீங்கியது. அன்றிலிருந்து சித்திரநேமியும் வரலட்சுமி விரதத்தை கடைப்பிடிக்கலானாள். 

உற்றார், உறவினர்கள், அக்கம் பக்கம் இருக்கும் சுமங்கலி பெண்கள், குழந்தைகளை பூஜைக்கு அழைக்கலாம். அனைவரும் சேர்ந்து லட்சுமி அஷ்டோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், சகலகலா வல்லி மாலை, லலிதா சகஸ்ர நாமம், லட்சுமி காயத்ரி போன்றவற்றை சொல்லி விரதம் முடிக்கலாம். தீபாராதனை முடிந்ததும் வந்திருக்கும் பெண்கள் அனைவருக்கும் நோன்பு கயிறு, முழு தேங்காய், பூ, பழம், குங்குமம் கொடுத்து உபசரித்து நைவேத்ய பிரசாதங்களை வழங்க வேண்டும்.

பக்தியோடு  நோன்பிருந்து வரலட்சுமி பூஜையை செய்வதாலும், பங்கேற்பதாலும், ஆயுள், ஆரோக்யம், மாங்கல்ய பலம் கிட்டும். கன்னி பெண்களுக்கு திருமண பிராப்தம் கூடி வரும். குழந்தை பாக்ய தடைகள் நீங்கி புத்திர பாக்கியம் உண்டாகும். ஜாதகத்தில் சுக்கிர தோஷம், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் நீங்கும். கணவன்-மனைவி இடையே மனகசப்புகள், கருத்து வேறுபாடுகள் மறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும். பிரிந்திருக்கும் தம்பதிகள் ஒன்று சேர்வார்கள். இந்த நன்னாளில் வீடுகளுக்கு அருகில் இருக்கும் அம்மன், அம்பாள், ஆண்டாள் கோயில்களுக்கு சென்று நெய்தீபம் ஏற்றி வணங்கி பக்தர்களுக்கு தயிர்சாதம், சர்க்கரை பொங்கல் மாதிரியான அன்னதானம் செய்யலாம். . எளியோருக்கு ஆடை, போர்வைகள் தானம் செய்ய புண்ணிய பலன்கள் அதிகரிக்கும். வரலட்சுமி விரதமிருந்து, மகாலட்சுமியை வழிபட்டு அவள் அருளால் சகல ஐஸ்வர்யங்களும் பெறுவோம்.

மகத நாட்டைச் சேர்ந்த தெய்வ பக்தி நிறைந்த பெண் சாருமதி. இவள், தனது கணவன், மாமனார், மாமியார் ஆகியோரை சாதாரண மனிதர்கள்போல் கருதாமல், இறைவனே அவர்களது வடிவில் எழுந்தருளி இருப்பதாக கருதி, அவர்களுக்கு பணிவிடை செய்து வந்தாள். அவளது மனப்பான்மை மகாலட்சுமிக்கு மகிழ்ச்சியை தர, சாருமதி கனவில் தோன்றி, வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்க அறிவுறுத்தினாள். இறை வழிப்பாட்டோடு, கணவனையும், மாமனாரையும், மாமியாரையும் சேர்த்து வணங்கி நீண்ட ஆயுளோடு, செல்வ செழிப்புடனும், சுமங்கலியாய் வாழ்ந்தாள். சாருமதியின் செயல்பாட்டை பொருத்தே இன்றும் விரதமிருப்பவர்கள்  கணவன், மாமியார், மாமனார் காலில் விழுந்து வணங்கி ஆசிர்வாதம் பெறுவதும் உண்டானது..

வெறும் செல்வச்செழிப்புக்கு மட்டுமில்லாம மாமனார், மாமியார் உறவு மேம்படவும் இவ்விரதம் வழிவகை செய்யுது.  ஆன்மீக காரணங்களுக்காகவும், செல்வத்துக்காகவும் நோன்பு இருக்கோமோ இல்லியோ! மாமியார், மாமனார் மனசு மகிழவும், புகுந்த வீட்டாரின் அன்பு கிடைக்கவும், கணவன் நெஞ்சில் நீங்கா இடம்பிடிக்கவும் விரதம் இருக்கலாமே!

நன்றியுடன்,
ராஜி.

Wednesday, February 06, 2019

மகாலட்சுமி பொருட்செல்வம் மட்டும் தருபவளா?! தெரிந்த கதை... தெரியாத தகவல்

Manjari Sharma’s Darshan. Named for a Sanskrit word which means “sight”, “vision” or “view, Manjari’s new project seeks to photographically recreate nine classical images of Hindu Gods and Goddesses. These icons are deeply connected to Sharma’s spiritual upbringing. By melding them with her reverence and devotion to photography, she is creating altars of her own.
பொதுவா மகாலட்சுமின்னாலே பணம், நகை, தங்கம்ன்னு வாரிக்கொடுக்கும் செல்வத்துக்கு அதிபதின்னு மட்டும்தான் நினைச்சுக்கிட்டிருக்கோம். ஆனா லட்சுமி தேவி  வெறும் பணம், தங்கம், வைரம், வைடூரியத்தை வழங்குபவள் இல்லை. தனம்,  தனம், தான்யம், சந்தானம், சௌபாக்யம், தைர்யம், வைராக்யம், வெற்றி, மனச்சாந்தி என அனைத்து செல்வத்தையும் வழங்குபவளே  மகாலட்சுமி.  பணம் படைத்தவர்களையே   'லட்சுமி கடாட்சம் பெற்றவர்கள்’ ன்னு சொல்றோம். ஆனால், பெற்றோர், உற்றார், நட்பு, மனைவி, குழந்தை, பசு, வயல்வெளியோடு மகிழ்ச்சியோடு இருப்பவனை அப்படி சொல்வதில்லை.  அதுசரி, எது மகிழ்ச்சி தரும்ன்னு அறியாத  ஆட்கள்தானே நாம! அது தெரிஞ்சா நாம ஏன் இப்படி கஷ்டப்படுறோம்.

இப்படிலாம் நாம பணம் சார்ந்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் தந்து பூஜைகள் செய்வோம்ன்னுதான் ஒரு திருவிளையாடலே நடந்திருக்கு.  மகாலட்சுமிக்கு செல்வத்தை அள்ளித் தரும் சக்தி மட்டும்தான் உண்டா?ன்னு இன்றைய தெரிந்த கதை, தெரியாத தகவல் தொடரில் பார்க்கப்போறோம்.!!
OM SRE DHANA LAKSHMI DEVIE NAMO NAMAHA

ஆதிபராசக்தி தன்னிலிருந்து தன்னைப் போலவே சக்திகள் கொண்ட இரு தேவிகளை உருவாக்கினார். ஆதிபராசக்தியின் இடபாகத்திலிருந்து தோன்றியவள் ரமாதேவி. ஆதிபராக்தியின் வலபாகத்திலிருந்து தோன்றியவள் ராதா தேவி'ரமா’ ன்ற சொல்லுக்கு மிகவும் அழகானவள் எனப்பொருள். ரமாதேவியை ஆதிபராசக்தி 'மகாலட்சுமி’ எனப் பெயரிட்டு அழைத்து, அவளை மகாவிஷ்ணுவிடம் மனைவியாக ஒப்படைத்தார். மகாலட்சுமி செல்வத்தின் நாயகியாகச் செயல்படுவாள் என அப்போது தேவி பாகவதத்தில் எதும் குறிப்பில்லை.  அவள் அன்பின் வடிவம்,  விஷ்ணு பத்தினி,  விஷ்ணுவுக்கு சேவை செய்யும் தேவி என்று மட்டுமே தேவி பாகவதம் கூறுகிறது.
Lakshmi ~ Hindu Goddess of Beauty and Light. Manifestation of Abundance in all forms ~ Love, Light, Peace, Joy, Health, Wealth, Creativity and on and on... She knows the secret key and wants to share it with all ❤
துர்வாச மகரிஷியின் சாபத்தால் தேவேந்திரன் முதலான தேவர்கள் தங்கள் பதவிகளை இழந்தனர். தேவலோக செல்வங்கள்ன்னு சொல்லப்படும் வலம்புரி சங்கு, காமதேனு என அனைத்தும்  மறைந்தன. தேவலோக ஐஸ்வர்யங்களுக்கு ஆதாரமான சுவர்க்க லட்சுமியும் தேவலோகத்தைத் துறந்து மகாலட்சுமியுடன் ஐக்கியமானாள். பாதிக்கப்பட்ட தேவர்கள் அனைவரும் வைகுண்டம் சென்று, காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவை நோக்கி தவமிருந்தனர். அவர்கள்முன் காட்சியளித்த விஷ்ணுபகவானிடம்  தங்கள் இளமை, ஆயுள், இழந்த அனைத்துச் செல்வங்கள் ஆகியவற்றை மீட்டுத் தந்து, மீண்டும் தேவலோகம் உருவாக அருள்புரியுமாறு பிரார்த்தனை செய்தனர். 

காக்கும் கடவுளான விஷ்ணு மனமிரங்கி  ''நீங்கள் இழந்த செல்வங்களைப் பெற மகாலட்சுமி ஒரு அவதாரம் எடுப்பாள். அதற்காக,  நீங்கள் பாற்கடலைக் கடைய வேண்டும். அதில் தோன்றும் அமிர்தம் உங்களுக்கு நிரந்தர இளமையையும், மரணமில்லாப் பெருவாழ்வையும் கொடுக்கும்.  பாற்கடலில் தோன்றும் மகாலட்சுமி, நீங்கள் இழந்த சௌபாக்யங்களையும், செல்வங்களையும் பெற அருள்புரிவாள்' என மகாவிஷ்ணு தேவர்களுக்கு வரமளித்தார். 
Image may contain: cloud, outdoor and water

பாற்கடலைக் கடைவதென்பது அத்தனை சுலபமா? மகாவிஷ்ணுவே இதற்கு வழி கூறினார். ''மந்தார மலையை மத்தாக்கி, வாசுகி எனும் பாம்பைக் கயிறாக்கி, தேவர்கள் ஒருபுறமும், அசுரர்கள் மறுபுறமும் கயிறை இழுத்துப் பாற்கடலைக் கடைந்தால், மகாலட்சுமி தோன்றி உங்கள் கோரிக்கை நிறைவேறுமென  என வாக்களித்தார். 
Image may contain: 2 people
பாற்கடலைக் கடையும் பணி தொடங்கியது. முதலில், ஆலகால விஷம் தோன்றியது. அனைவரும் என்ன செய்வதென்று புரியாமல் திகைத்து சிவனாரை வேண்ட, சிவபெருமான் தோன்றி விஷத்தை அருந்தி, தேவர்களையும் அசுரர்களையும் காப்பாற்றினார். பாற்கடலைக் கடையும் பணி மீண்டும் தொடர்ந்தது. 
Image may contain: 1 person
பாற்கடலிலிருந்து வலம்புரி சங்கு, காமதேனும், ஐராவதம், ரம்பை, ஊர்வசி, மேனகை உள்ளிட்ட 60,000 பெண்கள், மூதேவி எனப்படும் மூத்த தேவி,  மாதிரியான அபூர்வமான பல அரியவைகள் தோன்றின. முடிவில், ஒளிமயமான ரூப லாவண்யத்துடன் தேவி மகாலட்சுமி தோன்றினாள். தேவியைக் கண்டதுமே அனைத்து தேவர்களும் அசுரர்களும், அவள் அழகைக் கண்டு மயங்கி, அவளை அடைய விரும்பினார்கள். அப்போது மகாலட்சுமி, ''என்னை அடைய வேண்டுமென்று விரும்பும் எவரையும் நான் தேர்ந்தெடுக்கப்போவதில்லை. என்னைக் கண்டு எந்தச் சலனமும் இல்லாமல் இருக்கும் ஒருவரையே நான் சரணடைவேன்'' எனக்கூறினாள். 
LAKSHMI NARAYANA
அதன்படி, எதனாலும் பாதிக்கப்படாமல் யோக நித்திரையிலிருந்த மகாவிஷ்ணுவின் பாதங்களைச் சரணடைந்தாள்.  ''எந்தெந்த இடங்களில் தர்மம், நியாயம், நீதி, நேர்மை, நல்லொழுக்கம் ஆகியவை நிலைத்திருக்கிறதோ, அங்கெல்லாம் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். செய்வாள் என பிரம்மதேவரே சொல்வதாய் தேவி பாகவத்தில் சொல்லப்பட்டிருக்கு.  எனவே, தேவர்கள் தர்மத்தையும், ஒழுக்கத்தையும் நிலைநாட்டி வாழ உறுதி பூண்டால், மகாலட்சுமி தேவலோகச் செல்வங்கள் அனைத்தையும் மீண்டும் அளிப்பாள்'' எனவும், ''மகாலட்சுமி திருப்தியையும், மனச்சாந்தியையும் வழங்கும் கருணைமிக்க தேவியாவாள். வெறும் பொருட்செல்வங்களை மட்டும் விரும்பி அவளை வழிபடுபவர்கள் ஏமாற்றம்தான் அடைவார்கள்'' எனவும் பிரம்மதேவன் தேவர்களிடம் கூறினார்.
மகாலட்சுமியின் பெருமையை அறிந்த தேவர்கள், அவளை பக்தியோடு சரணடைந்தார்கள். அப்போது, அவளிடமிருந்து வெளிப்பட்ட சுவர்க்க லட்சுமி மீண்டும் தேவலோகத்தை அடைந்தாள். தேவலோகம் மீண்டும் தெய்வீகச் செல்வங்களோடு ஒளிவீசியது.  மகாலட்சுமி துதி பாடி அவளை தேவர்கள் வணங்கினர்.
திசைக்காவல் புரியும் அஷ்டதிக் பாலகர்களில் ஒருவர் குபேரன். அவர் வடதிசைக் காவலன். சிறந்த சிவபக்தரும்கூட! தேவலோகச் செல்வங்கள் அனைத்தையும் பாதுகாத்து, தகுதியானவர்களுக்குச் சரியான தருணத்தில் அந்தச் செல்வங்களை வழங்கும் அதிகாரம் அவருக்குத் தரப்பட்டது. மகாலட்சுமி கடாட்சம் பெற்றவர்களுக்கு நவநிதியையும் வழங்குகிறார் குபேரன். 

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களால் கிடைக்கும் செல்வங்கள் அனைத்தும் நவநிதியில் அடங்கும். மகாலட்சுமியின் அருட்பார்வை பெற்றவர்களுக்கு உலகியல் செல்வங்களோடு நிம்மதியும், சாந்தியும் கிடைக்க குபேரன் வழிசெய்கிறார். பேராசையும் அதர்மமும்மிக்க மனிதர்கள் சிலருக்கும் பொருட்செல்வங்கள் இருக்கலாம். அது, அவர்கள் பூர்வஜென்ம புண்ணியத்தின் பலனாக இருக்கலாம். ஆனால், சத்யமும் நேர்மையும் இல்லாதவர்கள் பெற்ற செல்வத்தால் அவர்களுக்கு நிம்மதி கிடைப்பதில்லை. 
மணிராஜ்: அஷ்டலட்சுமி கடாட்சம் அருளும் அட்சயதிருதியை
மகாலட்சுமி என்பவள் பொருட்செல்வத்தை மட்டும் தருபவள் அல்ல.  மனித வாழ்க்கைக்குத் தேவையான எட்டுவகைச் செல்வங்களையும் அளிப்பவள்.
Adi Lakshmi
ஆதி லட்சுமி: இவளுக்கு 'ரமணா’ன்ற பேரும் உண்டு. மகிழ்ச்சியையும் ஆனந்தத்தையும் தரக்கூடியவள் இவள். 
SHRI KAMALA LAKSHMI DEVI ॐ
தான்ய லட்சுமி: உயிர் வாழும் ஜந்துக்கள் அனைத்துக்கும் உணவு அவசியம். அந்த உணவை வழங்குபவள். விவசாயத்தை வளப்படுத்தும் இவளே, பசித்தவனுக்கு உணவு கிடைக்கச் செய்யும் கருணைத் தாயாகவும் திகழ்கிறாள்.
SHRI LAKSHMI DEVI
தனலட்சுமி: உணவுக்கு அடுத்தபடியாக மனித வாழ்க்கைக்குத் தேவையானது உடை, இருப்பிடம். இவற்றை அடைய வழி செய்வது 'தனம்’ எனப்படுகிறது.  தனம்ன்னா பொருள் செல்வம். இன்னிக்கு நாம பரவலா கும்பிடும் லட்சுமிதேவி இவள்தான். அந்த தனத்தைத் தந்தருளுபவள் இவள்.
Image result for சந்தான லட்சுமி
சந்தான லட்சுமி: குழந்தை செல்வம் இல்லன்னா எத்தனை செல்வமும் பெற்றிருந்து பலனில்லை. துணை இல்லாமல் குழந்தை இல்லை. சிறந்த வாழ்க்கைத்துணையையும்,  குழந்தைச்செல்வத்தையும் அளிப்பவள் இவளே!
Image may contain: 1 person
கஜ லட்சுமி: லட்சுமிக்கு 'க்ஷீராப்தி தனயை’ ன்னு இன்னொரு பெயருண்டு. இதற்கு பாற்கடலில் தோன்றியவள் என அர்த்தம்.  பாற்கடலில் மகாலட்சுமி தோன்றியபோது இரண்டு யானைகள் தோன்றி, தங்கள் தும்பிக்கையில் தாங்கிய பொற்குடத்தால் தேவிக்குப் பாலாபிஷேகம் செய்தன. இருபுறங்களிலும் யானைகள் நின்றதால், அவள் கஜலட்சுமி எனப்பட்டாள். இன்றும் ஆலய கர்ப்பக்கிர வாயிலிலும், வீடுகளின் வாசற்படி நிலையிலும் கஜலட்சுமி சிற்பம் இருக்கும். மனத்தூய்மையையும், மனஅமைதியையும் தருபவள் இவள்.
Image may contain: 1 person
வித்யாலட்சுமி: அறிவாற்றல் இல்லையென்றால், எத்தனைச் செல்வங்கள் இருந்தாலும் பயனிருக்காது. அறிவாற்றல் வளர ஆதாரமாக விளங்குபவள் வித்யாலட்சுமி. உயரிய ஞானத்தை அடைய வழி செய்பவளும் இவளே! இவள் சரஸ்வதியின் அம்சம். 
Maa Chandika - Hindu Posters (Reprint on Glazed Paper - Unframed)
விஜய லட்சுமி: கடுமையான முயற்சியும், உழைப்பும் நிச்சயமாக வெற்றி தரும். அந்த உழைப்புக்குரிய சக்தியைத் தந்து வெற்றியோடு வாழ அருள்புரிபவள் விஜயலட்சுமி. வெற்றிக்கு அதிபதி  இந்த தேவி. 
Jai Maa
தைரிய லட்சுமி: கல்வி, செல்வம், குழந்தை, மனைவி, வீடு, வாசல் மட்டும் இருந்தால்போதுமா?!  அதை கட்டிக்காக்க தீயவர்களோடு தைரியம் வேணுமே! தர்மநெறியில் நினைத்ததைச் செய்து முடிக்க மனோபலமும், உடல்பலம், வைராக்யம், தைரியம் இவற்றை தருபவள் இந்த தைரியலட்சுமி.
அஷ்டலட்சுமிகளில் யார் பெரியவர் என போட்டி எழுந்ததாம். அதனை நீருபிக்க பணக்காரனான ஒருவனது வாழ்வில் திடீரெனத் துன்பங்கள் சூழ்ந்தது. பணம், வீடு, வாசல், குடும்பம் ஆகியவற்றை அவன் ஒவ்வொன்றாய் இழக்க நேரிட்டது. நொந்துபோன அவன், தனது பிரமாண்டமான வீட்டின் வெளிவாசலருகே கொஞ்ச நேரம் உட்கார்ந்தான். ஒவ்வொரு லட்சுமியாக அவன் வீட்டைவிட்டு வெளியேறிக்கொண்டிருந்தனர். தான்யலட்சுமி வெளியேறினாள். வீட்டில் சாப்பிட ஏதுமில்லாமல் ஆயிற்று. அதன்பின், தனலட்சுமி வெளியேறினாள். வீட்டில் உள்ள பணமும், பொன்னும், பொருளும் போயின. சந்தானலட்சுமி வெளியேறியதும் அவன் மனைவி மக்கள் அவனைத் தனியே விட்டுச் சென்றனர். தொடர்ந்து கஜலட்சுமி, விஜயலட்சுமி, ஆதிலட்சுமி ஆகியோரும் வெளியேறினர். அவர்கள் தன்னை விட்டுப் போவதை அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தான் அந்தப் பணக்காரன். கடைசியாக தைரியலட்சுமி அவனை விட்டுக் கிளம்ப முற்பட்டாள். அவள் வெளியேறும்போது அவன் ஓடிச்சென்று அவள் பாதங்களில் விழுந்து, ''தாயே! தயவுசெய்து நீங்கள் மட்டும் என்னை விட்டுப் போய்விடாதீர்கள்!'' எனக் கதறினான். அவனது வேண்டுகோளுக்கிணங்க தைரியலட்சுமி வெளியேறாமல் அவனோடு இருந்தாள். அதன்பின், வெளியே சென்ற மற்ற லட்சுமிகளும் ஒவ்வொருவராக வீட்டுக்குள் வந்தனர். இழந்த செல்வங்கள் அனைத்தையும் மீண்டும் பெற்றான் அந்தப் பணக்காரன்.
அதனால் எதை இழந்தாலும் தைரியத்தை இழக்காமல் இருந்தால் எல்லாவற்றையும் போராடி பெற்றிடலாம். தர்மத்தைக் கடைப்பிடித்து ஒழுக்கத்துடன் வாழ்பவர்கள் வீட்டில் அஷ்டலட்சுமிகளும் வீற்றிருந்து அருள்புரிவார்கள் என சாஸ்திரம் சொல்கிறது. இதையேதான் மகாலட்சுமியும் சொன்னாள். வாழ்வில் எல்லா செல்வமும் கிடைக்க மகாலட்சுமி அருள்புரியட்டும்..
நன்றியுடன்,
ராஜி

Wednesday, September 27, 2017

எது அழகென்று உணராத மகாலட்சுமி... அதை உணர வைத்தை மகாவிஷ்ணு.....

நவராத்திரியின் ஏழாவது நாள் நாம் வணங்க வேண்டியது மகாலட்சுமியை. மகாலட்சுமியை பத்தி தெரியாதவங்க யாரும் இருக்க மாட்டாங்க.  விஷ்ணுவின் பத்தினி, செல்வத்துக்கு அதிபதி. அழகு நிறைந்தவள்.  கையில் ஜெபமாலை, கோடரி, கதை, அம்பு, வில், கத்தி, கேடயம், சூலம், பாசம், தண்டாயுதம், சக்தி ஆயுதம், வஜ்ராயுதம், சங்கு, சக்கரம், மணி, மதுக்கலயம், தாமரை, கமண்டலம் ஆகியவற்றைக் கொண்டிருப்பவள். பவளம் போன்ற சிவந்த நிறத்தையுடையவள். தாமரை ஆசனத்தில் அமர்ந்து சகல ஐஸ்வரியங்களையும் தருபவள். இந்த அன்னையை வேண்டினால் அனைத்து செல்வங்களும் வந்து சேரும்.  இப்படி நாம் இத்தனை நாள் நினைத்திருக்க, மகாலட்சுமி விஷ்ணுவின் பத்தினி, அவருக்கு சேவை செய்ய பிறந்தவள், அழகும், அன்பும் நிறைந்தவள் என்று மட்டுமே தேவி பாகவதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.  


ஆதிபராசக்தி தன்னிடமிருந்து தன்னைப்போலவே சக்திகள் கொண்ட இரு தேவிகளை உருவாக்கினார். அவரது இடது பாகத்திலிருந்து தோன்றியவள் ரமாதேவி,  வலது பாகத்திலிருந்து தோன்றியவள் ராதா தேவி. ‘ரமா’  என்றால் மிகவும் அழகானவள் என்று பொருள். ரமா தேவியை ஆதிபராசக்தி ‘மகா லட்சுமி’ என்று பெயரிட்டு அழைத்து, அவளை மகாவிஷ்ணுவிடம் மனைவியாக ஒப்படைத்தார். 



ஒருமுறை  துர்வாச மகரிஷியின் சாபத்தால் தேவேந்திரன் முதலான தேவர்கள் தங்கள் பதவிகளை இழந்தனர். தேவலோகச் செல்வங்கள் யாவும் மறைந்தன. தேவலோக ஐஸ்வர்யங்களுக்கு ஆதாரமான ஸ்வர்க்க லட்சுமியும் தேவலோகத்தைத் துறந்து மகாலட்சுமியுடன் ஐக்கியமானாள். பாதிக்கப்பட்ட தேவர்கள் அனைவரும் வைகுண்டம் சென்று, காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவைக் குறித்துத் தவம் இயற்றினர். தங்கள் இளமை, ஆயுள், இழந்த அனைத்துச் செல்வங்கள் ஆகியவற்றை மீட்டுத் தந்து, மீண்டும் தேவலோகம் உருவாக அருள்புரியுமாறு பிரார்த்தனை செய்தனர். காக்கும் கடவுளான விஷ்ணு மனமிரங்கி வரமளித்தார். ‘’நீங்கள் இழந்த செல்வங்களைப் பெற மகாலட்சுமி ஒரு அவதாரம் எடுப்பாள். அதற்கு வழிகோல நீங்கள் பாற்கடலைக் கடைய வேண்டும். அதிலே தோன்றும் அமிர்தம் உங்களுக்கு நிரந்தர இளமையையும், மரணமில்லாப் பெருவாழ்வையும் கொடுக்கும். பாற்கடலில் தோன்றும் மகாலட்சுமி, நீங்கள் இழந்த செல்வங்களை பெற அருள்புரிவாள்’’ என்று மகா விஷ்ணு தேவர்களுக்கு வாக்களித்து ஆசி கூறினார்.


இதையடுத்து பாற்கடலைக் கடையும் பணி தொடங்கியது. முதலில்,ஆலகால விஷம் தோன்றியது. அனைவரும் என்ன செய்வதென்று புரியாமல் திகைத்து சிவனாரை வேண்ட, சிவபெருமான் தோன்றி விஷத்தை அருந்தி, தேவர்களையும் அசுரர்களையும் காப்பாற்றினார். பாற்கடலைக் கடையும் பணி மீண்டும் தொடர்ந்தது. பாற்கடலிலிருந்து அபூர்வமான பல வஸ்துக்களும், ஜந்துக்களும் தோன்றின. முடிவில், ஒளிமயமான சௌந்தர்ய லாவண்யத்துடன் தேவி மகாலட்சுமி தோன்றினாள். தேவியைக் கண்டதுமே அனைத்து தேவர்களும் அசுரர்களும் அவள் அழகைக் கண்டு மயங்கி, அவளை அடைய விரும்பினார்கள். அப்போது மகாலட்சுமி, ‘’என்னை அடைய வேண்டும் என்று விரும்பும் எவரையும் நான் தேர்ந்தெடுக்கப்போவதில்லை. என் தோற்றத்தைக் கண்டு எந்தச் சலனமும் இல்லாமல் இருக்கும் ஒருவரையே நான் சரணடைவேன்’’ என்று கூறினாள்.

அதன்படி, யோக நித்திரையில் இருந்த மகாவிஷ்ணுவின் பாதங்களைச் சரணடைந்தாள். மகாலட்சுமியின் பெருமையை அறிந்த தேவர்கள், அவளை பக்தியோடு சரணடைந்தார்கள். அப்போது, அவளிடமிருந்து வெளிப்பட்ட ஸ்வர்க்க லட்சுமி தேவலோகத்தை அடைந்தாள். தேவலோகம் மீண்டும் தெய்வீகச் செல்வங்களோடு ஒளிவீசியது. தேவர்கள் அவள் துதிப்பாடி மகிழ்ந்தனர். சத்யமும் நேர்மையும் இல்லாதவர்கள் பெற்ற செல்வத்தால் அவர்களுக்கு நிம்மதி கிடைப்பதில்லை. மகாலட்சுமி என்பவள் உலகியல் செல்வத்தை மட்டும் தருபவள் அல்ல; மனித வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து வகைச் செல்வங்களையும் அளிப்பவள்.


ஒருமுறை வைகுண்டத்தில் மகாவிஷ்ணுவும், மகாலட்சுமியும் வீற்றிருந்தனர். அவர்கள் பூலோக மக்கள் பற்றியும், அவர்களின் இன்ப– துன்பங்கள் பற்றியும் பேசிக்கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் அவர்களின் பேச்சு அழகு பக்கம் திசைமாறியது. அப்போது மகாலட்சுமி, ‘நான் அழகாக இருக்கிறேன். அதனால்தான் பூலோகத்தில் இருப்பவர்கள், நான் அவர்கள் வீட்டிற்கு வரவேண்டும் என்றும், அந்த வீட்டில் நான் நிரந்தரமாகத் தங்க வேண்டும் என்றும் வேண்டுகின்றனர்’ என்று தன் அழகைப் பற்றிப் பெருமையாகப் பேசினார்.  அதைக் கேட்ட மகாவிஷ்ணு, ‘தேவி! பூலோகத்தில் இருப்பவர்களுக்கு அகத்தில் இருப்பதுதான் அழகு, புறத்தில் இருக்கும் அழகு மாயையில் சுழல வைப்பது என்று தெரிவதில்லை. பூலோகத்தில் இருக்கும் மனிதர்களில் பலரும் பணம் ஒன்றுதான் வாழ்க்கை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பணமில்லாதவர்கள் பூலோகத்தில் வாழத் தகுதியற்றவர்கள் என்பதுபோல் ஒரு மாயத் தோற்றம் அவர்களை ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கிறது. பணம் ஒரு மாயை என்பதை உணராமல், அதை அதிகமாகச் சேர்க்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்’ என்றார்.  இப்படியே வாக்குவாதம் வலுத்தது. 


‘சுவாமி! என்னுடைய அழகையும், பூலோகத்தில் எனக்குக் கிடைக்கும் மதிப்பையும் பாராட்ட மனமில்லாமல் பேசிக்கொண்டிருக்கிறீர்கள். கருமையாக இருக்கும் உங்களைப் போன்றவர்களுக்கு அழகைப்பற்றி என்ன தெரியும்? என்னைப் போன்று அழகாக இருப்பவர்களைக் குறை சொல்ல மட்டுமே தெரியும்’ என்று விஷ்ணுவின் கருமை நிறத்தைச் சுட்டிக் காட்டி பேசினார் மகாலட்சுமி. தன் நிறத்தைப் பற்றி பேசியும் மகாவிஷ்ணு கோபம் கொள்ளாமல், ‘தேவி! பூலோகத்தில் இருப்பவர்கள், பெண்களுக்கு முகத்தை வைத்தும், ஆண்களுக்கு உடலமைப்பை வைத்தும் அழகைத் தவறாக மதிப்பிட்டு வருகின்றனர். பொலிவான முகம், பெரிய கண்கள், மெலிதான புருவங்கள், சிறிய மூக்கு, சிவந்த உதடுகள் போன்ற முக அமைப்புடைய பெண்கள்தான் உடல்நலத்துடன், அதிகமான குழந்தைகளை அளிப்பார்கள் என்கிற எண்ணத்தில் ஆண்கள் அவர்களை விரும்பினார்கள். காலப்போக்கில் இந்த விருப்பமே பெண்களின் அழகு என்றாகிவிட்டது. இதேபோல் பெண்கள், தங்களுக்குக் கணவனாக வருபவன் உடல் பலத்துடன் இருந்தால்தான் காட்டிற்குச் சென்று, வேட்டையாடித் தங்கள் குடும்பத்தைக் காப்பாற்ற முடியும் என்று நினைத்தனர். இதனால், ஆண்களுக்கு உடல் பலமே அழகு என்றாகி விட்டது.  ஆனால் உண்மையில், பிறருக்குத் தீங்கிழைக்காத நல்ல மனமும், தம்மைத் தேடி வருபவர்களுக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணமும்தான் உண்மையான அழகு என்பதை அனைவரும் மறந்து போய்விட்டனர்’ என்றார்.



மகாலட்சுமியோ, ‘இறைவா! மகாலட்சுமி என்ற எனது பெயருக்குப் பேரழகு என்று பொருள் என்று உங்களுக்குத் தெரியும். இருப்பினும் அழகு, செல்வம், மகிழ்ச்சி, அன்பு, கருணை, அமைதி என்று அனைத்துச் செல்வங்களின் தேவதையாக இருக்கும் என்னைப் பற்றிக் குறை சொல்கிறீர்கள். அழகு வெளிப்படும் இடங்களிலெல்லாம் திருமகளாக நான் இருக்கிறேன் என்பதைத் தாங்கள் அறிந்திருந்தும், என்னை அவமதிக்கும் நோக்கத்திலேயே பேசுகிறீர்கள். செல்வத்துடன் சேர்ந்திருக்கும் என்னுடைய அழகிற்கு, நீங்கள் சொல்லும் எந்த அழகும் இணையானதில்லை’ என்றார் கோபத்துடன். இதைக் கேட்டு கோபமடைந்த மகாவிஷ்ணு, ‘ஒரு பெண்ணுக்கு உடல் அழகு தேவையாக இருக்கலாம், ஆனால் அந்த அழகு மீது கர்வம் கொண்டு, உண்மையான அழகினை மறந்துவிடக் கூடாது. எந்த உடல் அழகு மீது நீ அளவு கடந்த பற்று கொண்டு, என்னை எதிர்த்துப் பேசினாயோ, அந்த அழகு கொண்ட உடல் இல்லாமல், உருவமில்லாதவளாகப் (அரூபம்) போவாய்’ என்று மகாலட்சுமிக்கு சாபம் கொடுத்தார். 



சாபம் கொடுத்த பிறகுதான் மகாலட்சுமிக்கு சுய உணர்வே வந்தது. ‘இறைவா! என் தவறை மன்னித்து எனக்கு சாப விமோசனம் தந்தருள வேண்டும்’ என்று வேண்டினார். அவர் மீது இரக்கம் கொண்ட மகாவிஷ்ணு, ‘தேவி! பூமியில் ஒரு முறை செய்யும் தவத்திற்கு, ஒரு கோடி முறை தவம் செய்த பலன் எங்கு கிடைக்குமோ, அங்கு சென்று என்னை நோக்கித் தவம் செய்தால் உனது சாபத்திற்கு விமோசனம் கிடைக்கும்’ என்றார். உருவம் இல்லாதவளாகப் பூலோகம் வந்து சேர்ந்தார் மகாலட்சுமி. சிவனின் கண்களை மூடியதால் சாபம் பெற்ற பார்வதி தேவி, அந்த சாபத்தில் இருந்து மீள ஏகாம்பரேஸ்வரரை வணங்கிய இடமே, தனக்கும் சாப விமோசனமளிக்கும் இடமாக இருக்கும் என்று எண்ணினார். எனவே அந்த இடத்திற்கு வந்த மகாலட்சுமி, விஷ்ணுவை நினைத்து தவம் இயற்றத் தொடங்கினார். அவருடைய தவத்தின் பயனாக, ஒவ்வொரு நாளும் மகாலட்சுமியின் உருவம் சிறிது சிறிதாகக் கண்களுக்குத் தெரியத் தொடங்கியது. தொடர் வேண்டுதலில், அவரது உருவம் முழுமையாக பிறர் கண்ணுக்குத் தெரியத் தொடங்கியது. தவத்தின் வலிமையால் முன்பு இருந்ததைவிட அதிகமான அழகு சேர்ந்து ஒளி வீசத் தொடங்கியது. 



தன்னை விட்டுப் பிரிந்து சென்ற மகாலட்சுமியை, வைகுண்டம் அழைத்து வருவதற்கு சரியான நாளை எதிர்பார்த்திருந்தார் விஷ்ணு. இந்த நிலையில் விஷ்ணு வரத் தாமதமானதால், மகாலட்சுமிக்கு கவலை அதிகரித்தது.  இந்நிலையில் ஒருநாள், அந்த இடத்திலிருக்கும் பஞ்சதீர்த்தக் கரையில் பார்வதி தேவியை மகாலட்சுமி சந்தித்தார். அவரிடம், தனக்கு முழு உருவம் கிடைத்தும், விஷ்ணு தன்னை அழைத்துச் செல்லாதது பற்றி வருத்தப்பட்டார். அப்போது விஷ்ணு, மகாலட்சுமி முன்பை விட எவ்வளவு அழகாக இருக்கிறார் என்பதைப் பார்க்க வேண்டும் என்கிற ஆசையில், மறைவான ஒரு இடத்தில் இருந்து எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார். இதைக் கவனித்த பார்வதிதேவி, அவரைக் ‘கள்வன்’ என்று அழைத்தார். பார்வதி கள்வனென்று யாரைச் சொல்கிறார் என்று மகாலட்சுமியும் திரும்பிப் பார்த்தார். அங்கு மகாவிஷ்ணு நின்று கொண்டிருப்பதைப் பார்த்து வெட்கப்பட்டுத் தலை குனிந்தார். 



மறைவில் இருந்து வெளியே வந்த விஷ்ணு, ‘தேவி! இந்தப் பூமியில் உன் அழகைப் பெருமைப்படுத்தும் விதமாக, ஹரிணி (பசுமையான உடல் அழகைப் பெற்றவள்), சூர்யா (கதிரவனுக்கு நிகரான ஒளியுடையவள்), ஹிரண்மயி (பொன்னிறமானவள்), ஹிரண்ச வர்ணா (பொன்னிற உடலுடையவள்), சந்திரா (நிலவுக்கு நிகரான முகமுடையாள்), ஆர்த்திரா (நீரில் தோன்றியவள்), பத்ம ஸ்திதா (தாமரையை இருப்பிடமாகக் கொண்டவள்), பத்ம வர்ணா (தாமரை நிறமுடையவள்), ஆதித்ய வர்ணா (சூரியகாந்தி தோற்றமுடையவள்), கரிஷிணி (பெருகும் பசுச் செல்வமானவள்), பிங்கள (செம்மை நிறம் கொண்டவள்) என்று பல பெயர்கள் உனக்குக் கிடைக்கும். இத்திருத்தலத்திற்கு வந்து உன்னை வணங்கி வழிபடுபவர்களுக்கு அழகின் மீதிருக்கும் மோகம் குறையும்” என்று சொல்லி அவரைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு வைகுண்டம் திரும்பினார்.   உடலின் நிறம், பலம் போன்றவைகளால் கிடைக்கும் அழகு காலமாற்றத்தால் மாற்றமடையக் கூடியது. உடலின் அழகு நிலையானதில்லை. பிறருக்குத் தீங்கிழைக்காத மனமும், எந்த எதிர்பார்ப்புகளுமில்லாமல் பிறருக்கு உதவும் குணமும்தான் உண்மையான அழகு என்பதை உணர்த்தும் விதமாக மகாலட்சுமி பெற்ற சாபமும், விமோசனமும் நமக்கு உணர்த்துகின்றன....

பதிவின் நீளம் கருதி, சென்னை அஷ்டலட்சுமி கோவில் பதிவோட லிங்க்...... 


தமிழ்மணம் ஓட்டுப்பட்டை....
நன்றியுடன்,.
ராஜி. 

Friday, July 21, 2017

தங்க மழை பொழிய சொர்ணாம்பிகை வழிபாடு -ஆடி முதல் வெள்ளி


சுப பலன்களை அள்ளி அள்ளி கொடுக்கும் சுக்கிர பகவானை வழிபட ஏத்த கிழமை வெள்ளிக்கிழமையாகும்.  வெள்ளி அம்பிகை வழிபாட்டுக்கும் உகந்தது. அனைத்து செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் அனைத்துமே மங்களகரமானது. இந்நாள் எல்லா அம்பிகைக்கும் உகந்த நாள். அதிலும் ஆடி மாதம் செவ்வாய், வெள்ளிக்கிழமைன்னா இன்னமும் சிறப்பு வாய்ந்தது. கூழ் வார்த்தல், பால்குடம் ஏந்துதல், தீமிதித்தல்ன்னு அனைத்து அம்மன் கோவில்களிலும் திருவிழாக்கோலமா இருக்கும். பார்வதியின் தவத்தை மெச்சிய பரமசிவன், ஆடி மாதம் அம்மன் மாதமாக இருக்க வேண்டும் என வரம் கொடுத்தார்.  சிவனுடைய சக்தியைவிட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும். ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள்  அடக்கமாகி விடுகிறார் என்பது ஐதீகம்.

பூமாதேவி அம்மனாக அவதரித்தது இந்த ஆடி மாதத்தில் என்பதால்தான் இம்மாதம் அத்தனை சிறப்புகள் வாய்ந்தது. திருமணமாகாத பெண்கள் ஆடி செவ்வாய், வெள்ளிகளில் விரதமிருந்து அம்மனை வழிப்பட்டால் நல்ல கணவன் அமைவான். வீடுகளில் கூழ்வார்த்து அம்பிகையை வழிப்பட்டால் ஆண்டு முழுவதும் அம்மனை வணங்கியதன் பலன் கிடைக்கும். குடும்பத்தில் அமைதி பிறக்கும்.  ஆடிமாதங்களில் அம்மனுக்கு நடக்கும் வளைகாப்பு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு அம்மனுக்கு அணிவித்த வளையலை அணிந்தால் விரைவில் குழந்தை பாக்கியம் கிட்டுமென்பது ஐதீகம்.

காற்றும், மழையும் ஆடிமாதத்தில் அதிகம். காற்றை காளியும், மழையை மாரியம்மனும் கட்டுப்படுத்துகின்றனர். அதற்கு நன்றிக்கடன் செலுத்தும்விதமாக இந்த மாதங்களில் கூழ்வார்த்து வழிபடுகின்றனர்.  அம்மை நோய் என்பது கடும் வெயில் காலமான சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய மாதங்கள் முடிந்து அடுத்த பருவ காலம் தொடங்குகிற ஆடியில்தான் அதிகமாகக் காணப்படும். அதற்குக் காரணம் அதீத வெப்பம் மற்றும் வறட்சியான காற்று. வெப்பம் மற்றும் வறட்சியால் ஏற்படுகிற அந்த நோய், மழை பெய்து மண் குளிர்ந்தால்தான் குறையும். காற்றின் வேகம் குறையவும், மழை வேண்டியும் இத்திருவிழாக்களை நடத்துகின்றனர்.  
சமூக காரணம்....
அதுமட்டுமில்லாம சித்திரையில் அறுவடை முடிந்து  வைகாசி, ஆனிமாதம் வரை தானியங்கள் இருப்பு இருக்கும். ஆடி மாதத்தில் கையிருப்பு குறைய ஆரம்பித்து ஏழைத்தொழிலாளர்கள் உணவுக்கு தடுமாறும் நிலை ஏற்பட்டு பஞ்சமும் ஏற்படும். அப்படி பஞ்சம் ஏற்படாம இருக்கவும் இவ்வழிபாடு உதவும். அப்பத்திய மனிதர்களின் பிரதான தானியம் கேழ்வரகுதான். கேழ்வரகுக்கு பின்தான் அரிசி, கம்புலாம்... பஞ்சக்காலங்களில் ஏழைகளுக்கு கூழ் காய்ச்சி கொடுக்கலாம்ன்னு சொன்னா எல்லாருக்கும் மனசு வராது. அதனாலதான் அம்மன் பேர்சொல்லி கூழ்வார்த்து ஏழைகளுக்கு பகிர்ந்தளித்தனர். இப்ப மாதிரி வெறும் கேழ்வரகு மாவும், அரிசியும் கொண்டு கூழ் காய்ச்சுவதில்லை.  அதிமதுரம், சீரகம், திப்பிலி, சின்ன வெங்காயம், திரிகடுகு, குன்னி வேர், உழிஞ்சை வேர், சீற்றாமுட்டி, கடலாடி வேர்லாம் அரைகுறையாய் ஒரு வெள்ளைத்துணியில் மூட்டையாய் கட்டிக்கனும். அரிசியை கஞ்சியாய் காய்ச்சனும். அப்படி காய்ச்சும்போது மூலிகை மூட்டையை போட்டு 15 நிமிடம் விட்டு அந்த மூட்டையை எடுத்திடனும். அதில் புளிச்ச கேழ்வரகு மாவுக்கரைசலை ஊற்றி கிளறி இறக்கி அம்மனுக்கு கூழ் வார்த்தனர். இந்த கூழ் இருமல், காய்ச்சல், காலரா, அம்மைகள் மாதிரியான வெம்மை நோய்களுக்கு நல்ல மருந்தாகும்.
இனி ஆன்மீக காரணம்...
ஜமத்கனி முனிவர்ன்னு ஒருத்தர் இருந்தார். சகல கலைகளும் கைவரப்பட்டு, சிறந்த சிவபக்தராகவும், அழகும், சிறந்த குணவதியான ரேணுகாம்பாளை மனைவியாய் கொண்டும், தந்தை சொல் தவறாத பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாய் வாழ்வதை கண்டு அவர்பால் பொறாமைக்கொண்ட கார்த்த வீரியாச்சுனனின் மகன்கள் ஜமத்கனி முனிவரை கொன்றுவிடுகின்றனர்.  இந்த துக்கம் தாளாமல் அவர் மனைவி ரேணுகா தேவி தீயை மூட்டி  உயிரைவிட  அதில் இறங்கினார்.  அப்போது இந்திரன் மழையாய் மாறி அத்தீயை அணைத்தான். தீ அணைந்தாலும் ரேணுகாதேவி உடல் முழுக்க தீக்காயம் ஏற்பட்டது. தன் வெற்றுடலை மறைக்கவும், தீக்காயத்தின் சீற்றம் குறையவும் அருகிலிருந்த வேப்பமரத்தின் இலைகளை பறித்து ஆடையாய் அணிந்துக்கொண்டார். 
 ரேணுகாதேவிக்கு பசி அதிகமாக அருகிலிருந்த வீடுகளுக்கு சென்று உணவு கேட்டார். அது ஏழை குடியானவங்க வீடு என்பதால் தங்களிடமிருந்த பச்சரிசிமாவும், வெல்லமும்,இளநீரும் கொடுத்தனர். அவற்றைக்கொண்டு கூழ் காய்ச்சி பருகி பசியாறினார் ரேணுகாதேவி. அப்போது சிவப்பெருமான் தோன்றி, உலக மக்கள் வெம்மை நோய் நீங்க நீ ஆடையாய் அணிந்த வேப்பிலையே சிறந்த மருந்தாகும். நீ குடித்த கூழே சிறந்த உணவாகும். இளநீர் சிறந்த நீராகாரமாகும் என வரமளித்து மறைந்தார்.  இந்த சம்பவத்தினை முன்னிட்டே அம்மனுக்கு கூழ்வார்த்தல் தொடங்கியது. 
ஆடி வெள்ளியின் சிறப்புகள்...

ஆடி மாதம் வெள்ளிக்கிழமைகள் அனைத்துமே விசேஷமானது. பொதுவா ஒரு மாசத்துக்கு நாலு வெள்ளி வரும். சில சமயம் அஞ்சு வெள்ளிக்கிழமை வரும்.  ஆடி முதல் வெள்ளி சொர்ணாம்பிகைக்கும், இரண்டாவது வெள்ளி அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கும், மூன்றாவது காளிகாம்பாளுக்கும், நாலாவது வெள்ளி காமாட்சி அம்மனுக்கும் உகந்தது. ஒருவேளை அஞ்சாவது வெள்ளிக்கிழமை அமைந்தால் அன்று வரலட்சுமிக்கு உகந்த நாள். அன்றைய தினம் எந்த அம்மனுக்கு உகந்ததோ அந்த அம்மனை ஆவாகணம் செய்து வழிப்படுதல் கூடுதல் நலம்.....
சொர்ணாம்பிகை
சிவனை தரிசிக்க 16 வருடங்கள் கடுந்தவம் புரிந்தார் காகபுஜண்டர். அவரின் தவத்தினை மெச்சி 16 முகங்களோடு சிவப்பெருமான் காட்சியளித்தார். என்ன வரம் வேண்டுமென கேட்டபோது எனக்கு காட்சியளித்த இத்தலத்தில் தாங்கள் எழுந்தருளி மக்களுக்கு பொன், பொருள்ன்னு அனைத்து செல்வங்களையும் அள்ளித்தருமாறு வேண்டினார். அவ்வாறே வரமளித்த இறைவன் அங்கேயே எழுந்தருளினார். அங்கு அவருக்கு பெயர் சுவர்ணபுரீச்வரர் என்றும், அம்மனுக்கு சொர்ணாம்பிகைன்னும், சிவனின் காவல்தெய்வமான காலபைரவருக்கு சுவர்ண பைரவர் என்றும் பெயர். சகல செல்வங்களையும் அள்ளித்தரும் இந்த ஆலயம் பொன்பரப்பின்ற ஊரில் இருக்கு. அந்த அம்மனைதான் இன்று நம் இல்லங்களில் ஆவகணப்படுத்தி வழிப்பட வேண்டும்.  
இன்றைய தினம் வீடு வாசலை சுத்தப்படுத்தி, கோலமிட்டு, பூஜை அறையில் குத்துவிளக்கை அம்பாளய் பாவித்து, அதற்கு புதுத்துணி அணிவித்து வீட்டிலிருக்கும் நகைகளை பூட்டி அழகுப்படுத்தி, மஞ்சள் பொடியால் கோலமிட்டு, அதன்மீது பச்சரிசி பரப்பி அதன்மீது குத்துவிளக்கை வைத்து அம்பாளாய் ஆவகனப்படுத்த வேண்டும்.  சிறு பெண்குழந்தைகளை அம்மனாய் பாவித்து வணங்கி சர்க்கரை பொங்கல் அல்லது பால்பாயாசம் நைவேத்தியம் செய்து வழிப்பட்டு சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், தாலிச்சரடு, வளையல் , சீப்பு, ஜாக்கட் துணி, கண்ணாடி... என அவரவர் வசதிக்கேற்ப தானமாய் தரலாம். 
சொர்ணாம்பிகையின் மூலமந்திரம். 
வேதாந்த வேத்யை விதுசேகராயை
வித்யுத் ஸஹஸ்ர கோடி ரவி ப்ரகாஸிகாயை
ஸுகவன ஷேத்ர நிவாஸிகாயை
ஜெய ஜெய ஸ்ரீ மாதா சொர்ணாம்பிகாயை ! ,


 இதன் பொருள்..
வேதாந்தத்தின் வேரென விளங்கும் வேத பொருளானவளும் ,  அமிர்த மயமான சந்திரனை சிரசில் சூடிக்கொண்டவளும் , ஆயிரம் கோடி சூரியர்கள் ஒன்றாய் சேர்ந்த மின்னல் வெட்டு போல் ஒளிர்பவளும் , சுகவன ஷேத்ரத்தை வாசஸ்தலமாக கொண்டவளுமான
அன்னை ஸ்ரீ சொர்ணாம்பிகைக்கு வெற்றி உண்டாவதாக!

சொர்ணாம்பிகையை வழிப்படுவோம்... அனைத்து நலனும் பெறுவோம். 


தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1467037
Mangalya Dosha Nivarthi :  Official Website of Arulmigu Devi Karumariamman Temple, Thiruverkadu
நன்றியுடன்,
ராஜி.