Showing posts with label வாழ்க்கை பயணம். Show all posts
Showing posts with label வாழ்க்கை பயணம். Show all posts

Saturday, October 27, 2012

உன்னை அறிந்தால்.....,


                                                      
கண்ணில் காண்பதெல்லாம்!!
கனவென்று நம்பாதே...,
காணாத கனவுகளும்!!
நனவாகிப் போகலாம்...,



நிகழ்கால நிழலில்,
 மட்டும் ஓய்வெடுக்க எண்ணாதே...,
எதிர்கால மர நிழலில்,
 மட்டும் ஓய்வெடுக்க எண்ணாதே...,
இறந்தக் கால தென்றல் காற்றின்...,
இதமான அரவணைப்பில் ஓய்வெடு....,



கண்களை மூடித் திறக்குமுன்..,
உன் கற்பனைகளை திறந்து விடு...,
பூக்களின் வாசனையை நுகர்வது தப்பில்லை..., 
அதிலுள்ள முட்களின் வேதனையை புரிந்துக் கொள்...,


புன்னைகையே மட்டுமே 
வாழ்க்கையல்ல...,
பூகம்பமும் வரும்..,
 எதிர் கொள்ள தயராகு!!


நீ விதைத்ததை...,
 நீயே அறுவடை செய்துக் கொள்ள்ள வேண்டும்...,
அன்று கொல்லாவிடினும்..., 
நின்றாவது கொல்லும்..., 
மாற்றான் துயரம் மட்டுமல்ல!!??
மதுவும், மாதுவும் கூடத்தான்.....,


மற்றவர் கண்களில் தெரிவது,
 கண்ணீரென்று மட்டும் எண்ணாதே...,
விஷமாவும், கேலியாகவும், 
விஷமமாகவும்..., ஏன்? உனக்கென
தோண்டப்பட்ட புதை குழியாவும் கூட இருக்கலாம்...,

உனக்கென ஒரு பாதை.....,
 உனக்கென ஒரு பயணம் .....,
உன்னோடு சில பயணிகள்....,
தேர்வு உன் கையில்!!??


இது நீ ”பிறந்த நாள்” அல்ல..,
உன்னை நீ நன்கு உணர்ந்த நாள்”,  ஆயின்...,
உன்னை எண்ணி பூரிப்பதில் 
தோழி நானும் ஒருத்தி உண்டு...,
  
பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்களுடன்...,