சாமி! என் பொண்ணு ராஜி ஒரு வாரமா, ரொம்ப மகிழ்ச்சியா இருக்கா. சிரிச்சுக்கிட்டேயும் இருக்கா.
ஐயோ சாமி! சந்தோசமா இருக்குறது தப்பில்ல. சகோன்னு சொல்றா. கமெண்ட்ன்னு சொல்றா. எங்க உறவுகள்ல இல்லாத பேர்களை சொல்லி அண்ணா, அம்மா, தாத்தான்னுலாம் சொல்றா. அதான் பயமா இருக்கு என்னன்னு பார்த்து சொல்லுங்க சாமி.
ம் ம் ம் புது புது பேர் சொல்லி புலம்புறங்களா? இது ஏதோ காத்து கருப்போட வேலைதான். அதை நான் ஓட்டிடுறேன் நீங்க பயப்படாதீங்கம்மா.
காளி, நீலி, சூலி யாரு நீயி? எந்த ஊரு? ஏன் இந்த பொண்ணை பிடிச்சு இருக்கே? ஒழுங்கு மரியாதையா சொல்லிடு. இல்லாட்டி உன்னை,,,,,
ம் சொல்லிடுறேன்.என் பேரு பிளாக். நாந்தான் ராஜி உடம்புல இருக்கேன்.
இன்னாடா இது? ஒரு பொண்ணு உடம்புல செத்துப்போனவங்க ஆவி புகுந்துக்கும் இல்லாட்டி முனீஸ்வரன், காட்டேரி இதெல்லாம் புடிச்சு இருக்கு. நானும் ஓட்டியிருக்கேன். இதென்னது “பிளாக்”ன்னு புதுசா இருக்கே. விவரமா சொல்லு.
நான் கூகுள் வயத்துல பொறந்தவ. என் பேரு “பிளாக்”.
நான் ஒரு நோட்டு புத்தகம் போல, என்ன வேணும்னாலும் எழுதலாம், அரசியல், கதை, கவிதைன்னு எது வேணும்னாலும் எழுதலாம்.
ம்ம் நான் எங்கெங்கோ சுத்திட்டு தமிழ்நாட்டுக்கு வந்து பலப்பேரை பிடிச்சு இருக்கேன்.ராஜியையும் பிடிச்சுக்கிட்டேன். அந்த பலபேருல சென்னையில வசிக்குறவங்கலாம் ஒரு மீட்டிங்க் போட்டு, தமிழ்ல யார்லாம் பிளாக் எழுதுறாங்களோ, அவ்ங்கலாம் சந்திக்கலாம்ன்னு முடிவு பண்ணி போன ஞாயிற்றுக்கிழமை சந்திச்சுக்கிட்டாங்க. அதுல ராஜியும் கலந்துக்கிட்டா. அங்க பார்த்த சில காமெடியான விசயங்களை பார்த்துதான் சிரிச்சுக்கிட்டே இருக்கா.
ஓ அப்பிடியா?! என்ன நடந்துச்சுன்னு சொல்லு இல்லை உன்னை பாட்டில்ல அடைச்சு வச்சு கடல்ல தூக்கி போட்டுடுவேன்.
முதல்ல ”தூரிகையின் தூறல்” மதுமதியை ஒரு பாடலாசிரியர் போல தமிழ்த்தாய் வாழ்த்து பாட சொன்னா, நடிகர் போல பாட்டுக்கு நடிச்சு காட்டுறார். மோட்டுவளையை நிமிர்ந்து பார்க்குறதையும், கைகட்டி கன்னத்தை தாங்குறதையும் பார்த்து அமைதியா வாழ்த்துப்பா பாட வேண்டிய நேரத்துலயும் ராஜி சிரிச்சதையும்,
வரவேற்புரையை நிகழ்த்த மண்டபத்துல இருக்குற சகோ “வீடு திரும்பல்” மோகன் குமாரை கூப்பிட சொன்னா, சந்திப்புக்கு வரவே வராத சகோ “வீடு”சுரேஷ்குமாரை கூப்பிட்டு, தனக்கு தானே பல்ப் கொடுத்துக்கிட்ட சகோ மதுமதியை நினைச்சும்...,
”சென்னை பித்தன்” ஐயாவை பத்தி பேச, மாங்கு மாங்குன்னு உக்காந்து, இத்தனை நாளா யூஸ் பண்ணாத மூளையை யூஸ் பண்ணி எழுதி குடுத்தா, என்னமோ ஸ்கூல்ல மனப்பாடப்பகுதி ஒப்புக்கிற மாதிரி, ஏற்ற இறக்கம் இல்லாம, பெரியங்கலாம் இருக்காங்கன்ற பதட்டத்துல, ஒப்பிச்சுட்டு வந்த தூயவை நினைச்சும்...,
புலவர் ராமானுஜம் ஐயாவை பற்றி சௌந்தர், குறிப்புரை வாசிக்கும்போது, ஒரு நந்தவனத்தை அறிமுகப்படுத்த, ஒற்றை ரோஜா வந்திருக்குன்னு சௌந்தர் சொல்ல, “ஒற்றை ரோஜா, அதுத்வும் கருப்பு ரோஜா”ன்னு சொன்னா இன்னும் நச்சுன்னு இருக்கும் அங்கிள்ன்னு தூயா அடிச்ச கமெண்டை கேட்டு ராஜியால் சிரிப்பை அடக்க முடியாம சிரிச்சதையும்..
கவிதை வாசிப்புக்குன்னு மதியத்துக்கு மேல நேரம் ஒதுக்கியும், அடமா, கவிதைப்போல ஏதோ ஒண்ணை வாசிச்சு , ராஜி போல அறிவிலிகளுக்கு புரியாமலே சுய அறிமுகம் செஞ்சுக்கிட்ட “வசந்த மண்ட்பம்” மகேந்திரனை நினைச்சும் சிரிப்பை அடக்க முடியலை.
என்ன புடவை கட்டுறது? மேட்சிங்கா என்ன ஜுவல்ஸ் போடுறதுன்னும், மேடையில் சுய அறிமுகத்தின் போது எப்படிலாம் பேச போறேன்னு டிரையல் பார்க்குறேன்னு ஒரு வாரமா பிள்ளைகளை கொலையா கொண்ணும், மேடையில போய் நிண்ணு மைக்கை கையில வாங்கி என் பேர் ராஜி, என் பிளாக் பேரு “காணாமல போன கனவுகள்”ன்னு சொல்லி மேற்கொண்டு என்ன பேசறதுன்னு தெரியாம “ஙே”ன்னு முழிச்சுக்கிட்டு நின்னதையும்,
என்னதான் விழாக்குழுவுல மெம்பரா இருந்தாலும், ரெண்டு இலையில் சாப்பிட்ட “கவிதைவீதி” சௌந்தரையும் (இல்லைன்னு சகோதரர் மறுக்கலாம். அதுக்கு ஆதாரம் இருக்கு. தூயா தன் மொபைல்ல படம் எடுத்திருக்கா. அவ வீட்டுக்கு வந்ததும் வெளியிடப்படும்),
பொதுவா கவியரங்கம்ன்னா சமூக அவலங்களை, வரதட்சனை, காதல், பிரிவு, நட்பை வெச்சு கவிதை எழுதுவாங்க. ஆனா முதல் முறையா, செலவே இல்லாம கல்யாண இன்விடேஷனை ”கவிதை”ன்ற பேருல வாசிச்சு, எல்லாரையும் இன்வைட் பண்ணிட்டு போன மயிலனை பற்றியும்தான் நினைச்சு சிரிச்சுக்கிட்டு இருக்கா .
ஓ ஓ இவ்வளவு நடந்திருக்கா? அப்ப சிரிக்க வேண்டியதுதான். சரி நீ எப்போ ராஜியை விட்டு போவே? மட்டன் பிரியாணி தரவா? சிக்கன் சுக்கா தரவா?
ம்ஹூம் போக மாட்டேன்?
என்னாது போக மாட்டியா?! ஏன்? திரட்டிகள்ல முதல்ல வந்தா போவியா? இல்ல லட்சம் ஹிட்ஸ் குடுத்தா போய்டுவியா?
ம்ஹூம் அப்பவும் போக மாட்டேன். வருசத்தொரு முறை இதுப்போல நடத்துறோன்னு விழாக்குழுவினர்லாம் வந்து கற்பூரம் அடிச்சு சத்தியம் செய்ய சொல்லு. அப்போதான் போவேன்.
அவ்வ்வ்வ்வ்வ் ஏன் இப்படி என்னை சதாய்க்குறே?! அது என் கையில இல்லியே , விழா குழுவினர்தான் இதுக்கு பதில் சொல்லனும்...,