Wednesday, November 10, 2010

பிறந்த தின வாழ்த்துகள்



பறக்க முடியா
பாட்டாம்பூச்சியாய் அலைமோதும்
நேசங்களைக் காற்றலையில்
உனக்காய்த் தூதனுப்பினேன்...

கவிதைச்
சுமக்கும் மௌனங்கூட
மொழியில்லா சின்னச் சின்ன
மழைத்துளி அர்ச்சனைகள்தான்...


விடிகின்ற உன் எல்லாப்
பொழுதும் சுகங்களை
மட்டும் ஆசிவதிக்கட்டும்...

இன்று துடிகிற இதயமும் கூட
உன்னை மட்டுமே
வாழ்த்திப் பாடட்டும்...


காற்றின் இடைவெளியை
அதிகரித்து வான
எல்லையையும் தாண்டி
இதய வழி வாழ்த்துகிறேன்...

இனிய பிறந்த தின வாழ்த்துகள்!!!!

நன்றி
ninaivellaam.blogspot.com


No comments:

Post a Comment