Tuesday, May 30, 2017

கடவுளை நம்ம வீட்டுக்கே வரவைக்கும் கோவில் புளி சாதம் - கிச்சன் கார்னர்




உணவில் புளிப்பு சுவை கூட்ட தக்காளி, எலுமிச்சைன்னு பயன்படுத்தினாலும் புளியம்பழத்தைதான் அதிகம் பயன்படுத்துறோம். அதிலும் தென்னிந்திய சமையலில் புளியம்பழம் அதிகம் இடம்பெறுது. இந்த புளியம்பழம் பேபேசி இனத்து முடிச்சு மரமாகும்.    நம்மூர்ல தேவை அதிகமிருக்குறதால அதிகமா பயிரிடப்படுதா இல்ல அதிகம் பயிரிடப்படுறதால நாம அதிகமா பயன்படுத்துறோமான்னு தெரில. தமிழகத்துல பரவலா இது விளையுது. அதிகம் நீரும், கவனமும் தேவை இல்லை. 

புளிய மரத்தின் கீழ் எந்த தாவரமும் வளராது. இரவில் புளிய மரத்தின்கீழ் உறங்கக்கூடாது. ஆடு, மாடுகளைக்கூட கிராமங்களில் கட்ட மாட்டாங்க. ஏன்னா, புளியமரம் தன் சுற்றுப்புறத்தை சூடாக்கும் தன்மைக்கொண்டது.   பொங்கும் காலம் புளி, மங்கும் காலம் மாங்காய்ன்னு சொல்வாங்க. புளி அதிகம் விளைந்தால் அந்த வருடம் மாங்காய் விளைச்சல் குறைச்சலா இருக்கும். புளி விளைச்சல் குறைவா இருந்தா மாங்காய் விளைச்சல் அதிகமாய் இருக்கும்.  புளி அதிகம் விளைஞ்சா அந்த வருசம் சுபிட்ஷமா இருக்கும். 


ஒன்னா இருந்தாலும் ஒட்டாத உறவை புளியம்பழமும் ஓடும்... போலன்னு உதாரணம் சொல்வாங்க.  என்னதான் பிசுபிசுப்பா இருந்தாலும் புளி அதன் ஓட்டோடு ஒட்டுவதில்லை, அதுப்போல என்னதான் அன்பா இருந்தாலும் சில உறவுகள் நம்மோடு ஒட்டாமயே இருக்கும். 


புளியிலிருக்கும் சத்துகள்..
இதில் அதிகளவு இரும்பு சத்தும்,  கால்சியம், வைட்டமின் பி, சி, பாஸ்பரஸ், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட்,   தாது உப்புகளும் இருக்கு.  புளியங்கொட்டையில் மாவுச்சத்தும், ஆல்புமினும், கொழுப்பு சத்தும் உண்டு.  புளியங்கொட்டையை வறுத்து தோல் நீக்கி உப்பு தண்ணில ஊற வெச்சு சாப்பிடுவோம். சின்ன வயசு ஸ்னாக்ஸ்ல இதும் ஒன்னு.


புளிய இலையின் பயன்கள்...
இது வயிற்றை சுத்தப்படுத்தும் கிருமிநாசினியா செயல்படுது. புளிய இலை சித்த மருத்துவத்தில் மருத்துவ பயன்பாட்டுக்கு பயன்படுது. இரைப்பை பிரச்சனை, செரிமான பிரச்சனைக்கும் இதயத்துடிப்பை பாதுகாக்கவும் இவ்விலை பயன்படுது. புளிய இலையை தேனீராக்கி குடித்தால் மலேரியா காய்ச்சலை குணப்படுத்தலாம்.  புளிய இலைகளை காஃபி கொட்டையோடு சேர்த்து கொதிக்க வைத்து குடிக்க மஞ்சள் காமாலை குணமாகும். இந்த காபி குழந்தைகளின் வயிற்றிலுள்ள பூச்சியை அழிக்கும். புளியங்கொழுந்துடன் துவரம்பருப்பு சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டால் உடல் பலம் பெறும்.


புளியின் பயன்பாடு...
உணவுக்கு ருசியூட்டும் அதேவேளையில்  மலமிலக்கியாகவும் பயன்படுது.  கெட்டியாக கரைத்த புளிதண்ணியில் உப்பு, செம்மண் சேர்த்து பற்றுப்போட ரத்தக்கட்டு கரையும். புளித்தண்ணியோடு சுண்ணாம்பு கலந்து குழப்பி இளம்சூடாய் பற்றுப்போட தேள் விசம் இறங்கும்.  புளியம்பூக்களை துவையல் செய்து சாப்பிட்டால் மயக்கம், தலைச்சுற்றல் தீரும். 


நல்லதுலயும் ஒரு கெட்டது...
அளவுக்கு மிஞ்சினா அமிர்தமும் நஞ்சு என்பதைப்போல என்னதான் மருத்துவ குணம் அதிகமிருந்தாலும் வயிற்றில் அமிலத்தன்மையை சுரக்க வைக்கும் கெட்ட குணமும் இதற்குண்டு.  ரத்தத்தை சுண்ட வச்சிடும்ன்னு எங்கூர் பக்கம் சொல்வாக. அதனால புளிப்பு தூக்கலா இல்லாம பார்த்துக்கோங்க.   இப்ப நாம யூஸ் பண்ணுற புளிய விட குடம் புளி நல்லது. இதைதான் கேரள மக்கள் அதிகம் யூஸ் பண்ணுவாங்க.

முன்னலாம் எங்காவது ஊர்பயணம் போகும்போது எடுத்துக்குற சோத்துமூட்டைல புளிசாதம்தான் முதல்ல இருக்கும். இதுக்கு மிக்சர், சிப்ஸ், அப்பளம்லாம் தொட்டுக்கிட்டா செம.  இது எதுமே இல்லாட்டி புளிசாதத்துல இருக்கும் மிளகாயை கடிச்சுக்கிட்டாலும் செமயா இருக்கும். மூணுவேளை தின்னாலும் உடம்புக்கு ஒன்னும் பண்ணாது. 


என்னதான் நம்ம வீட்டுல  புளிசாதம் செஞ்சு சாப்பிட்டாலும் கோவில்ல கொடுக்கும் புளிசாதத்துக்கு தனி ருசி அதிகம். அது சாமி பிரசாதம்ங்குறதாலன்னு நினைச்சிட்டிருந்தேன். அப்புறம்தான் இதன் செய்முறைய தெரிஞ்சு செஞ்சபோது கோவில் டேஸ்ட் வீட்டுலயே.... 

இனி கோவில் புளிசாதம் செய்யும் முறையை பார்க்கலாம்...

தேவையான பொருட்கள்..
புளி,
எண்ணெய்,
கடுகு,
கடலைப்பருப்பு,
உளுத்தம்பருப்பு, 
தனியா,
மிளகு,
வெந்தயம்,
எள்,
காய்ந்த மிளகாய்,
உப்பு,
பெருங்காயம்,
மஞ்சப்பொடி,
வெல்லம்.
உப்பு சேர்த்து உதிர் உதிரா வடிச்சு ஆற வெச்ச சாதம்.


புளியை ஊற வச்சுக்கோங்க... புதுப்புளியா இல்லாம பழைய புளியா இருந்தா நல்லது.  புளி ஊறினதும் கரைச்சு ஓடு, நார் இல்லாம வடிகட்டிக்கோங்க..


வெறும் வாணலி சூடானதும் எண்ணெய் இல்லாம ஒரு டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு டேபிள்ஸ்பூன் உளுத்தம்பருப்பை வறுத்து எடுத்துக்கோங்க. 


அடுத்து தனியாவையும் வறுத்து எடுத்துக்கோங்க.


அடுத்து மிளகை வறுத்துக்கோங்க....


அடுத்து மிளகாயை வறுத்து எடுத்துக்கோங்க..  அப்படியே எள்ளையும் வறுத்தெடுத்துக்கொங்க. நான் படமெடுக்க மறந்துட்டேன். நீங்க மறந்துடாதீக.

வறுத்த பொருட்கள்லாம் ஆறினதும் பெருங்காயம் சேர்த்து கொஞ்சம் கொரகொரப்பா தூளாக்கிக்கோங்க...


வாணலில எண்ணெய் ஊத்தி காய்ஞ்சதும் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வேர்க்கடலையை வறுத்துக்கோங்க. வசதி இருக்கவங்க முந்திரிப்பருப்பு சேர்த்துக்கலாம்.


வாணலி சூடானதும் எண்ணெய் ஊத்திக்கோங்க. 



கடுகு போட்டு வெடிக்க விடுங்க...


கடுகு வெடிஞ்சதும் காய்ஞ்ச மிளகாயை போடுங்க...


மிளகாய் சிவந்ததும் கறிவேப்பிலை போடுங்க...


கரைச்சு வெச்ச புளியை ஊத்துங்க...


மஞ்சப்பொடி சேருங்க..


உப்பு சேருங்க...


பெருங்காயம் சேர்த்து நல்லா கொதிக்க விடுங்க...


மாமியார் மாமனார்க்கிட்ட கோவிச்சுக்கிட்டு தனிக்குடித்தனம் போகும் பொண்ணுபோல எண்ணெய் பிரிஞ்சு வரும் நேரத்துல வெல்லத்தை சேர்த்து இறக்கிடுங்க. வெளில இருந்தாலும் பத்து நாள் வரை இந்த குழம்பு தாங்கும். பொடி ரெண்டு மூணு மாசம் வரை தாங்கும். 


ஆறின சாதத்துல முதல்ல வறுத்த பருப்புகளை சேர்த்து எல்லா இடத்துலயும் இருக்குற மாதிரி கிளறுங்க.  அடுத்து பொடி சேர்த்து எல்லா இடத்துயும் இருக்குற மாதிரி கிளறி கடைசியா புளிக்குழம்பை ஊத்தி கிளறுங்க.. தேவைப்பட்டா கொஞ்சம் ந. எண்ணெய் சேர்த்துக்கலாம். எண்ணெயை சூடு செய்யனும்ன்னு அவசியமில்ல. 


கமகமக்கும் கோவில் புளிசாதம் ரெடி. இந்த வாசத்துக்கு கடவுளே நம்ம வீட்டுக்கு வருவார். அப்படியும் வரலியா?! நாலு பேருக்கு இந்த சாதத்தை கொடுங்க. அப்ப கண்டிப்பா வருவாரு..

வருவார்தானே?!

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை தெரியாதவங்களுக்காக..
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1461680

நன்றியுடன்,
ராஜி.

27 comments:

  1. புளியமரம் பற்றி நிறைய விடயம் அறிந்தேன் நன்றி

    த.ம. இணைப்பு தவறாக இருக்கிறது இருப்பினும் தம"னா போட்டு விட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. திருத்திட்டேன்ண்ணே.

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

      Delete
  2. நான் ருசித்து உண்பனவற்றில் முதலிடம் பெறுவது புளி சாதமே.

    ReplyDelete
    Replies
    1. எல்லாருக்குமே புளி சாதம் பிடிச்ச உணவுப்பா

      Delete
  3. Thangal eluthela kadavulai vara vaithu vitergal vaalthukal.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

      Delete
  4. எடுத்துக்கொண்ட காரியத்தை முழுமையாய்ச் செய்து முடிக்கணும்கிற உங்களின் பொறுப்புணர்வு நீங்கள் எழுதும் பதிவுகளில் பட்டவர்த்தனமாய்த் தெரியுது. மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. நீங்க ஒருத்தங்கதான்பா என்னை புகழ்ந்திருக்கீங்க. மத்தவங்களாம் கழுவி கழுவி ஊத்துவாங்க... அக்கறை இல்ல... பொறுப்பில்லைன்னு...

      Delete
  5. அருமையான செயல்முறை ராஜி. தனித்தனியாக சிறுகுழந்தைக்கும் புரிவது போல அழகாக பதிவாக்கி இருக்கின்றீர்கள். நன்று

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க நிஷாக்கா.

      Delete
  6. மதுரைக்கு வரும் போது எங்க வீட்டுக்கு வாங்க ,சூப்பரான புளியோதரை சாப்பிடலாம் !
    #கடவுளை நம்ம வீட்டுக்கே வரவைக்கும் கோவில் புளி சாதம்#
    ஜைனர்கள் புளியை அறவே சேர்த்துக்கொள்ள மாட்டார்கள் ,உங்கள் கூற்றின்படி, அவர்கள் எல்லாம் நாத்திகர்களா :)

    ReplyDelete
    Replies
    1. அதெப்படிண்ணே நான் எது சொன்னாலும் ஏட்டிக்கு போட்டியா சண்டைக்கு வர்றீங்க?!

      Delete
    2. மதுரையில சாப்பிட வேண்டிய அயிட்டம் நிறைய இருக்கு. காலேஜ் ஹவுஸ் ஓட்டல் ஐஸ்க்ரீம், ரயில்வே ஸ்டேசன் அருகிலிருக்கும் பிரேமா விலாஸ் அல்வா, இட்லி கருவாட்டு குழம்புன்னு என் பட்டியல் நீளும்ண்ணே. என்னை பத்தி தெரியாம வீட்டுக்கு கூப்பிட்டுடாதீக. அப்புறம் உங்க பர்ஸ் டயட்ல இல்லாமயும், ஜிம்முக்கு போகாமயே எடை குறைஞ்சிடும்.

      Delete
    3. புளியோதரை மட்டும் சாப்பிடத்தான் அழைத்தேன் ,அப்புறம் ஒண்ணை மறந்துட்டீங்களே ....ஜிகர்தண்டா :)

      Delete
  7. விளக்கங்களும் படங்களும் அருமை ஒருமுறை http://kavithaigal0510.blogspot.com பக்கம் கண் வையுங்களேன்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க சகோ.

      அவசியம் உங்க தளத்துக்கு வரேன்

      Delete
  8. புளியின் முழு விவரங்களையும் சொல்லி
    பின் புளிசாதம் செய்முறை குறித்து
    படங்களுடன் பகிர்ந்த விதம் அருமை
    இரண்டு நாள் தாங்கக்கூடிய அளவு கூட
    அது கெடாமல் இருப்பதால் பயணத்திற்கு
    புளிசாதமே பெஸ்ட்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா. புளிசாதம் எல்லாருக்குமே பிடிக்கும்ப்பா

      Delete
  9. படம் எல்லாம் நல்லா தான் இருக்கு அப்படியே எனக்கு ஒரு புளிசாதம் பார்சல் தோழி

    ReplyDelete
    Replies
    1. எந்த ஊருன்னு சொல்லுங்க . சமைச்சு கொடுக்குறேன்.

      Delete
  10. புளிசாதம் என்று கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர சாப்பிட்டது கிடையாது. எனக்கும் சமையலுக்கும் எட்டா தூரம் :)

    ReplyDelete
    Replies
    1. புளிசாதம் சாப்பிட்டதில்லையா?! இதுலாம் டூ இல்ல ட்வெண்டி மச்.

      Delete
  11. புளியின் உபயோகம் பற்றிய குறிப்புகள் அருமை. தம வாக்கு போலத் தப்பாமல் போட்டாச்சு.

    நாங்கள் பெருங்காயம் கொஞ்சம் வருத்தும் சேர்ப்போம். அப்படியேயும் சேர்ப்போம். சில கோவில்கலீல் பட்டை மிளகாய் சேர்க்காமல் மிளகு சேர்த்துச் செய்வதுண்டு.

    புளியோதரை ஆசையைத் தூண்டி விட்டீர்கள்!

    ReplyDelete
    Replies
    1. பெருங்காயத்தை எண்ணெய்ல வறுக்கக்கூடாதாம் சகோ. நானும் மிளகாய் சேர்த்துருக்கேன் சகோ.

      Delete
    2. மிளகாய் இல்லை மிளகு. பெருங்காயத்தை எண்ணெயில் வறுக்கக் கூடாது. வெறும் வாணலியில் புரட்ட வேண்டும்.

      Delete
  12. வாவ் ..டைகர் ரைஸ் நல்லாருக்கே ..செய்து பார்க்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. செமயா இருக்கும் செஞ்சு பாருங்க

      Delete