Showing posts with label எலுமிச்சை. Show all posts
Showing posts with label எலுமிச்சை. Show all posts

Saturday, June 20, 2020

லெமனே இங்கு சிவனாய்.. -சுட்ட படம்

பக்கம் பக்கமாய் படிக்கும் இம்சையிலிருந்து இன்னிக்கு விடுதலை.. இணையத்தில் பார்த்து ரசித்தவற்றின் தொகுப்பு இது.. முன்னாடியே பார்த்திருந்தால் மன்னிச்சு...

Thursday, March 21, 2019

இதுலாம்கூட கைவண்ணத்துல சேரும்தானே?! - கைவண்ணம்

இந்த வாரம் ரொம்ப பிசி. அதனால், ஒரே ஒரு டேபிள்மேட் மட்டும்தான் முடிக்க முடிஞ்சுது. டேபிள் மேட்ங்குறதால குஞ்சலம்லாம் வைக்கல...  நாலு நாளில் ஒரு மேட் போட்டு முடிச்சு கொடுத்தாச்சு. விலை 175ரூபா சொன்னேன். வாங்கிக்கிட்டாங்க. பேசாம, உங்களைலாம் நம்பி!!! பேஸ்புக்ல ஒரு பேஜ் ஓப்பன் பண்ணிடலாமான்னு இருக்கேன்!!

 வுல்லன்ல ஒரு ரோஸ்....

 டேபிள் மேட் நடுவால வச்சு தச்சாச்சு.....
நல்லா வந்திருக்குறதா எனக்கு தோணுச்சு! உங்களுக்கு?!

கைவண்ணம்ங்குறது வெரும் பின்னுறது, ஒட்டுறது, வெட்டுறது, தைக்குறது மட்டும்தானா?!

 பொங்கல் குழம்பு வைக்க துவரை, அவரை, கொண்டைக்கடலை, மொச்சைலாம்  வாங்கி வந்ததில் எல்லாத்துலயும் சில விதைகளை நட்டு வச்சேன். அதுல துவரையும், அவரையும் பிழைச்சுட்டுது. அவரை ரெண்டு கிலோவுக்கு காய்ச்சிருக்கும். துவரை ஒரு கிலோவுக்கு காய்ச்சுது. துவரை மட்டும் காம்பவுண்டுக்கு வெளிய இருக்குறதால ஆடு, மாடு மேய்ஞ்சு அதில் தப்பி, வீதியில் போவோர், வருவார் பார்வைக்கும், கைக்கும் தப்பியது இது...

 காய்கறி தோலை செடிகளில் கொட்டுவது வழக்கம். அதுப்படி கெட்டுப்போன தக்காளியை போட்டதுல விளைஞ்சது....  பதிவுக்காக ஒரு வாரம் சேமிச்சு வச்சது... 
என் அத்தை வீட்டில் கிட்டத்தட்ட கமலா பழம் அளவுக்கு எலுமிச்சை காய்க்கும். அதில் சிலதை எனக்கு கொடுத்தனுப்ப, அதன் விதைகளை வீட்டை சுத்தி போட்டதுல 3 செடி முளைச்சு காய்ச்சிருக்கு. முதல்முறை கொஞ்சமாதான் காய்க்குமாம். அம்மா சொன்னாங்க. 
வீடு கட்டும்போது காம்பவுண்ட் உட்பட்ட பகுதிகளில்கூட எல்லா இடத்துலயும் சிமெண்ட் பூசி மெழுக ஒன்றரை ஜல்லி கலந்து போட்டாச்சு.  ரெண்டு நாள் கழிச்சு போனபோதுதான் இந்தமாதிரி ஏற்பாடு தெரிஞ்சுது. இங்கெல்லாம் மண்ணா இருந்தால் வீடு முழுக்க மண் ஆகும்ன்னு எல்லாரும் எனக்கு புத்திமதி சொல்ல, சரி கொஞ்சமாச்சும் செடி வைக்க இடம் கொடுங்கன்னு காம்பவுண்ட் ஓரம் ஓரடி அகலத்துல கொஞ்சம் இடம் விட்டாங்க.  அதுல, துளசி, பொன்னாங்கன்னி, மல்லி, ரோஜா, வாழை, முருங்கை, அவரை, கத்தாழை, தக்காளி, மாதுளைன்னு வைக்க, கீழ ஜல்லி இருக்குறதால் வேர் ஆழமா போகாம செடிலாம் சவலை குழந்தைமாதிரி வளர்ச்சி குறைவாதான் இருக்கும்.

 முருங்கை செடி வச்சு கிட்டத்தட்ட மூணு வருசம் ஆச்சு. ஒவ்வொரு மழைக்கும் ஒடிஞ்சு விழுந்துடும்,. கீரைக்காச்சுன்னு மனசு தேத்திக்குவேன். இந்த வருச மழைக்குதான் தப்பி முருங்கைக்காய் வச்சிருக்கு. நீளமான காய் காய்க்கும் மரத்து கிளைதான் வச்சேன். ஆனா, சத்து இல்லாததால் குட்டையா காய்ச்சிருக்கு. 
மல்லிகை செடியில் இந்த வருசத்துக்கான முதல் பூ, கூடவே சாமந்தியும்...  என் அம்மாவும், என் பையனும் காய்ந்த செடி வச்சாலும் துளிர்க்கும். ஆனா, என் கைராசி அப்படி இல்ல. என் அம்மா, பையனுக்கு செடி வளர்ப்பதில் ஆர்வம் அதிகம். ரெண்டு பேரும் எதாவது வெட்ட, நட,விதைக்கன்னு இருப்பாங்க. என் பங்குக்கு அவங்க நட்ட செடிகளுக்கு  தண்ணி சுத்தம் செய்து வெளியாகும் உப்பு தண்ணிய சிரமம் பார்க்காம குடத்துல பிடிச்சு வந்து செடிக்கு ஊத்துவேன். இலை, தழை சேராம பார்த்துப்பேன். இதுலாம்கூட கைவண்ணத்துல சேரும்தானே?!

நன்றியுடன்,
ராஜி.

Sunday, November 13, 2016

ஜூஸ் கார்னர் கவனிக்க வேண்டிய விஷயம் - ஆரோக்கியம்

இப்ப எல்லாம்  ஜூஸ் குடிக்கிறது ,மருத்துவத்திற்காகவும் பேஷன்- -னாகவும் போய்டுச்சு,ஆனாஒரு சிலருக்கு பழங்களாக கூட சாப்பிட நேரமில்லாமல்ஜூஸாக குடிப்பதையே விரும்புகின்றனர். உண்மையில் நார்சத்து அதிகம் இருக்கும் பழங்களை அதன் இயல்பு நிலையில் அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது.அவைகளை ஜூஸ்ஸாக குடிக்கும் போது,அந்த நார்சத்து  எல்லாம் குறைந்து விடும். அதிக வேலை செய்பவர்கள்,விளையாடுபவர்கள்மலை ஏறுபவர்கள்,மட்டுமே  ஜூஸாக குடிப்பது நல்லது ஏன்னா,அது அவர்களுக்கு தண்ணீர் இழப்பை சமன் செய்யும். மற்றபடி இருப்பவர்கள் பழமாக சாப்பிடுவது நலம்..இல்லை சிலருக்கு ஜூஸ்களாக குடிப்பதே பிடிக்கும் என்றால் அந்த ஜூஸ்களை குடிப்பதற்கு முன் நாம் கவனிக்க வேண்டிய, கடைபிடிக்க வேண்டிய சில விஷயங்களை நம்முடைய ஆரோக்கியம் பகுதியில் இன்று பார்க்கலாம். 


பொதுவாக கொளுத்தும் வெயிலில்கோடை வெம்மையை தணிக்கபெரும்பாலும் மக்கள் நாடுவது தெருவோர கடைகளையும்மோர் ,பழச்சாறு மற்றும் கூழ் போன்றவற்றை விற்கும் திடீர் கடைகளை நோக்கித்தான்.இதன் மூலம் இவர்களது தாகம் உடனடியாக தணிந்துவிடும்ஒரு புத்துணர்ச்சியும் கிடைக்கும். ஆனால்,அதன் பின்னனியில் நமக்கு கிடைப்பது,ஆபத்து தான் பொதுவாக வெயிலில் நீண்டநேரம் வைக்கப்படும் எல்லா விதமான உணவுகளிலும் கெட்டுப்போகும் தன்மை விரைவாக நடைபெறும்.அவைகளை அவர்கள் ஒப்புக்கு ஒரு கம்பிவலை மூலம் மூடிவைத்தாலும் ,அவைகளை பொதுவாகவே ஈக்கள் மொய்க்கும் தன்மை அதிகமாக இருக்க வாய்புகள் அதிகம் உண்டு.சிலர் பேப்பரால் மூடி வைத்தாலும்.பெரும்பான்மையான இடங்களில் திறந்தே இருக்கும்.    
தள்ளுவண்டியில் ஜூஸ்,ஐஸ்கிரீம் ,லஸ்ஸி போன்றவற்றை விற்பனை செய்பவர்கள் அதிக விலை கொடுத்து கேன்வாட்டர் வாங்கி உபயோக படுத்துவது இல்லை.தெருக்குழாய் மற்றும் லாரிகளில் கொண்டுவரும் தண்ணீரையே உபயோக படுத்துவார்கள்.சிலர் தெருவோரம்இல்லை சாலை ஓரங்களில் இருக்கும் பெரிய பிளாஸ்டிக் டாங்குகளில் இருக்கும் தண்ணீரை கூட பயன்படுத்துவார்கள்.அதுபோல ஜூஸ் பிழிய பயன்படுத்தும் கத்தி போன்றவற்றை ஒவ்வருமுறையும் கழுவ வேண்டும். ஆனால் அவர்கள் அப்படி செய்வது  இல்லை.
 ஜூஸ்லஸ்ஸி தயாரிக்க பயன்படுத்துகின்ற மிக்ஸிபழங்களை அறுக்கிற கத்தி போன்றவற்றை ஒவ்வொரு தடவையும் நன்றாக தண்ணீரில் கழுவ வேண்டும். ஆப்பிள்திராட்சை போன்ற பழங்களை மிக்ஸியில் போட்டு அரைக்கும் முன் சுத்தமான நீரில் நன்றாக கழுவ வேண்டும். கேழ்வரகுக் கூழ்ஜூஸ் ஆகியவற்றை ஊற்றி கொடுக்கும் டம்ளர் போன்ற பாத்திரங்களை சுத்தமாக கழுவிய பின்னரேஅடுத்த முறை பயன்படுத்த வேண்டும். பெரும்பாலானோர் அவ்வாறு செய்வது கிடையாது. மிக்ஸிடம்ளர் போன்றவற்றை திறந்தவெளியில் வைப்பதால்அவற்றில் வாகனங்களில் இருந்து வெளிப்படும் புகைதூசுநோயைப் பரப்புகின்ற கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் போன்றவை நிரந்தரமாக தங்ககூடிய வாய்ப்புகள் அதிகம்.
இதேபோல் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் ரோட்டு ஓர கடைகளில் இருக்கும் ஜூஸ் ,மற்றும் மிக்சட் புரூட் ஜூஸ் போன்றவை அவர்கள் காலையிலயே வெட்டி அதை ஒரு ஒரு கலனில் கலக்கி வைப்பார்கள்.பொதுவாக வெட்டப்பட்டு வெகுநேரமான பழங்களில் பாக்டீரியா போன்ற நுண்கிருமிகள் உற்பத்தியாகிவிடும்.இதனால்  தொற்று நோய்கள் வர கூட வாய்ப்புகள் அதிகம் .ஆகவே முடிந்தவரை அவற்றை தவிர்ப்பது நலம்.
அதுபோல பழங்களுடன் சேர்த்து மில்க் ஷேக் குடிப்பதையும் தவிர்க்கவேண்டும். பொதுவாக பார்த்தோம்னா , எல்லா ஜூஸ் கடைகளிலும் ,ஜூஸ் அடிப்பதற்கு முன்பு பால் கலக்குவார்கள் .மேலும் எல்லா விதமான பழங்களுடன் சேர்த்து மில்க் ஷேக் தயாரிக்கிறார்கள். இது தவறு. பாலில் எலுமிச்சை கலந்தால் என்னாகும். திரிந்துவிடும்தானே? அப்படிதான் சிலவகை பழங்கள் அவைகளில் இருக்கும் அமிலங்கள் பாலை திரிய வைத்துவிடும் தன்மை கொண்டவை ,அவை நம்முடைய வயிறுக்கு நல்லதல்ல.. மிகவும் இனிப்பான பழுத்த பழங்களுடன் பால் கலந்து ஜூஸ் தயாரிக்கலாமே தவிர  மற்ற பழங்களுக்கு தேவை இல்லை .உதாரணமாக மாம்பழம், ஆப்பிள் போன்றவற்றில் பால்கலந்து குடிக்கலாம். ஆனால் திராட்சை, ஆரஞ்சு, மாதுளை போன்றவற்றில் குடிக்கக் கூடாது. ஸ்ட்ரா பெர்ரி போன்ற பெர்ரி பழங்கள் இனிப்பாக இருந்தாலும் அவற்றில் புளிப்பு சுவையும் உள்ளது. 
ஆகவே ஸ்ட்ரா பெர்ரி, அன்னாசி ஆகியவை பாலுடன் கலந்து குடிக்கக் கூடாது..அப்படியே மில்க் நிறைய இருந்தா கொஞ்சம் முகத்திலயும் தேய்ச்சுகிட்டா முகமும் பளப்பாகிவிடும்.
எந்த விதமான பழசாறுகளோ ,இல்லை காய்கறி போன்றவற்றில் சாறு தயாரிக்கும் போதோ ,அவைகளை நன்றாக கழுவி உபயோகிக்கவேண்டும். .ஏன்னா பழங்களை தாக்குகிற பூச்சிகளை கொல்கிறதுக்கும்,தடுக்கிறதுக்கும் .அடிக்கப்படுகிற மருந்து மற்றும் இரசாயனங்களும்,பழங்கள் பழக்க வைப்பதற்கு பயன்படுத்தும் இரசாயன கலவைகளும் ,அவற்றின் மேல் காணப்படுவதால் அவற்றை நன்றாக கழுவி உபயோகிக்க வேண்டும் .இல்லையெனில் அவை உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருளாக மாறிவிடும் .
காய்கறி ஜூஸ் குடிக்கும்போது எல்லா காய்களையும் அப்படியே பச்சையாக ஜூஸ் தயாரிக்கக் கூடாது. சில காய்களை வேக வைத்த பின்னே ஜூஸ் தயாரிக்க வேண்டும். புருக்கோலி, காலிஃப்ளவர் ஆகியவை வேக வைத்த பின்னே ஜூஸ் தயாரிக்கலாம். தக்காளி, கேரட், வெள்ளரி ஆகியவற்றை அப்படியே தயாரிக்கலாம்..பீட்ருட் சாறு பச்சையாக குடிப்பதால் கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தலாம் .மேலும் எலுமிச்சை ஜூஸில் சிறிது தேன் கலந்து,அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் உடலில் மெட்டபாலிசம் அதிகரித்து உடல் எடை குறையவும் வாய்ப்புக்கள் அதிகம் .இப்படி ஒவ்வரு காய்கறியிலையும் ஒவ்வொரு வைகையான சத்துக்கள் உள்ளன அவைகள் யாவையும் இங்கே தொகுத்து அளித்தால் நமது பதிவின் நீளம் அதிகரித்துவிடும்.இனி உலகில் உள்ளசில  வினோதமான உணவு பழக்கவழங்களை நமது ஆரோகியம் பகுதியில் அடுத்தவாரம்  பார்க்கலாம். நன்றி.