Showing posts with label சாம்பிராணி. Show all posts
Showing posts with label சாம்பிராணி. Show all posts

Sunday, May 31, 2020

தெய்வீக ரகசியத்தை அறிந்துக்கொள்ளனுமா?! - ஐஞ்சுவை அவியல்

மாமா! இந்த மாசம் மளிகை லிஸ்ட்ல ரெடிமேட் சாம்பிராணி எழுத மறந்துட்டேன். அதையும் சேர்த்து வாங்கி வாங்க!

ஏன், தூபக்காலில் நெருப்பை வச்சு, அதில் சாம்பிராணி தூவி வீடு முழுக்க காட்டுறதுக்கென்ன?!

முன்னலாம் விறகு அடுப்பில் சமைச்சாங்க. அதனால் நெருப்பு இருந்தது. அதில் சாம்பிராணி புகை போட்டாங்க. இப்பலாம் கேஸ்ல சமைக்குறதால் நான் நெருப்புக்கு எங்க போவேன்?!

தேங்காய் ஓடும், தேங்காய் நாறும் இருக்கே. அதை வச்சு நெருப்பு கங்கை உருவாக்க முடியாது. மனமிருந்தால் மார்க்கமுண்டுன்னு நீ கேள்விப்பட்டதில்லையா?! 

இந்த ஈர வெங்காயமெல்லாம் எனக்கும் தெரியும். இப்ப ரெடிமேட் சாம்பிராணி ஏத்தி வீடு முழுக்க காட்டுறதுல உனக்கென்ன  குறைஞ்சு போகுது?!

அடியேய்! நான் சொல்லுற மாதிரி சாம்பிராணி புகையை காட்டுறதால எத்தனை நன்மை இருக்கு தெரியுமா?! சிவன் கோவிலில் தினத்துக்கும் குங்கிலியம் கொண்டு புகை போடுறாங்களோ அவர்களுக்கு தெய்வீக ரகசியம் தெரியவருமென அகத்தியர் தன்னோட வாத காவியம்ன்ற நூலில் சொல்லி இருக்கிறார்.  இப்படி தெய்வீக ரகசியத்தினை தெரிஞ்சுக்கிட்டவங்களுக்கு எமதூதர்களிடமிருந்து விடுதலை பெறும் சக்தி கிடைக்கும். அதாவது மரணத்தை வெல்லும் சக்தி கிடைக்குமாம். அப்படி சக்தி கிடைச்சவங்க தான் மட்டுமல்லாம மத்தவங்களையும் காப்பாத்துவாங்க. இது சித்தர்களின் வழிபாட்டு முறைகளில் ஒன்றூ. அதனால்தான் சித்தர்களால் மற்றவங்களை மரணத்திலிருந்து காப்பாத்த முடிஞ்சது. அதை நாம பல கதைகளில் கேட்டிருக்கோம். 

தென்னிந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலைகளிலும், வட இந்தியாவில் இமயமலை அடிவாரம் மாதிரியான சில காடுகளில் விளையக்கூடிய கருமருதுன்ற மரத்தினை கீறி, அதிலிருந்து வடியும் பிசினை சேகரிச்சு காயவச்சால் கிடைக்குறதுக்கு பேருதான் குங்கிலியம். இதைதான் நாம சாம்பிராணின்னு சொல்றோம்.  இந்த சாம்பிராணி புகை இந்துக்கள் வழிபாட்டில் மட்டுமல்லாமல் மதங்களை கடந்து எல்லா எல்லா மதத்தின் வழிபாட்டிலும் இடம்பெறுகிறது.

இப்படி மதங்களை கடந்து எல்லோரும் சாம்பிராணி புகை போட இறை நம்பிக்கை மட்டுமல்லாம  வாசனைக்காகவும்,  காற்றில் கலந்து வரும் நச்சுக்கிருமிகளை அழிக்கவும் வீடு, கடைன்னு எல்லா இடத்திலும் சாம்பிராணி புகை  போடும் வழக்கம் உண்டானது.  முன்னலாம் குழந்தைகள், பெண்கள் அதிலும் முக்கியமா கர்ப்பிணி பெண்கள், புதுசா பிரசவிச்ச தாய்மார்களுக்கு வாரமொரு முறை எண்ணெய் தேய்த்து தலைக்கு ஊற்றி, சாம்பிராணி புகை காட்டுவது வழக்கம்.  சாம்பிராணி புகையை தலையில் காட்டுவதோடு புகையை சுவாசிக்கவும் செய்வாங்க. இதனால் கருப்பை சார்ந்த பிரச்சனைகள், தலைவலி,  தலையில் நீர் கோர்த்தல் மாதிரியான  வியாதிகள் தீரும். இளநரை, முடி கொட்டுதல், பொடுகு மாதிரியான தலைமுடி சார்ந்த பிரச்சனைகள் வராமல் இந்த சாம்பிராணி புகை தடுத்தது. 

சாம்பிராணி புகை  ஆஸ்த்துமா, வீசிங்க் பிராப்ளம் மாதிரியான சுவாசக்கோளாறுகளையும் போக்கியது.  சாம்பிராணி புகையில் புற்றுநோயை உருவாக்கும் காரணிகளை மட்டுப்படுத்தும் ஆற்றல் இருக்குறதாகவும் இப்பத்தைய ஆய்வுகள் சொல்லுது.  சுத்தமான குங்கிலியம் கொண்டு போடும் சாம்பிராணி புகையால் பாதிப்பு ஏதுமில்லை. ஆனா, நீ சொல்லும் ரெடிமேட் சாம்பிராணி புகையால் மூச்சடைப்பு, அலர்ஜி மாதிரியான தொல்லைகள் உண்டாகுவதை நாமே பார்த்திருக்கோம்..

ஆமா மாமா, ரெடிமேட் சாம்பிராணி ஏத்தினாலே என் பாட்டி மூச்சடைக்குதுன்னு வெளில போய்ட்டு கொஞ்ச நேரம் கழிச்சுதான் உள்ள வருவாங்க. 


ம்ம் அந்த ரெடிமேட் சாம்பிராணியில் சேர்க்கப்படும் செயற்கை ரசாயாண பொருட்களும், வாசனை பொருட்களும்தான் இதற்கு காரணம்.    முன்னலாம் மழைக்காலத்தில் சாம்பிராணி புகையுடன், காய்ந்த வேப்பிலை சருகு, நொச்சி இலை சருகையும் போட்டு மாலைவேளையில் வீடு முழுக்க காட்டுவாங்க. இதனால் கொசு தொந்தரவு இருக்காது.  மழைக்காலத்தில் உருவாகும் நோய்க்கிருமிகள் தொற்றிலிருந்து நம்மை காக்கும்.  சுத்தமான குங்கிலியம் பர்வதமலை, கொல்லிமலை, கஞ்சமலை, சதுரகிரிமலை, அத்ரிமலை பகுதிகளில் கிடைக்கும். இப்பலாம் அங்கும் கலப்படம் நடக்குது. தெரிஞ்சவங்கக்கிட்ட சொல்லி வச்சு வாங்குறது நல்லது. 

சரி இனி பார்த்து வாங்குறேன். காலையில் எழுந்து அரக்க பரக்க சமைச்சு டப்பா கட்டும் வேலையில்லை. காலெஜ் லீவுங்குறதால் பாப்பா இருக்குறதால் வேலையே இல்லாத மாதிரி இருக்குன்னு சொன்னது குத்தம்ன்னு அப்பு இந்த கணக்கை நேர் பண்ணுன்னு சொல்லிட்டு போறான். இதுல 8767458998 அரிசி இருக்கு வேணும்ன்னா எண்ணிக்கன்னு மொக்கை ஜோக் சொல்லக்கூடாதுன்னு கண்டிஷன் வேற!
 
தேவையா உனக்கு?! வாய வச்சிக்கிட்டு சும்மா இல்லாம...

நான் அவனை எப்படியெல்லாம் வளர்த்தேன் தெரியுமா மாமா!? இப்படி என்னையை நக்கல் அடிக்குறான்.

இதுக்கும் வடிவேலு காமெடி மாதிரி எதும் சொல்லிடப்போறான். சின்ன வயசில் இப்படி எதாவது அவனை வெறுப்பேத்தி இருப்பே! அதான் உன்னைய இப்ப அவன் ரிவெஞ்ச் எடுக்குறான்... 

அப்படித்தான் போல!   சில கடுப்பேத்தும் வீடியோக்களால் எனக்கு டிக்டாக்ன்னாலே பிடிக்காது. ஆனா, நல்லா இருக்குன்னு யாராவது பகிர்ந்தால் பார்ப்பேன். அப்படி பார்த்ததில் இந்த வீடியோ பிடிச்சது.  உலக அழகியாக ஐஸ்வரியா ராய் தேர்வானபோது,  இந்தியாவே அவர் அழகை கொண்டாடிச்சு. அப்ப எங்க சார் ஒருத்தர் சொன்னாரு. ஐஸ்வர்யா ராயின் உடல் வாகு, அறிவுத்திறனோடு, உயரம், எடையோடு ஒத்துப்போகும் மொத்தத்தில் ஐஸ்வரியா ராயைவிடவும் அழகான பெண் எங்கோ காடு மேடுகளில் வெளிச்சத்துக்கு வராமல் இருக்கலாம். அதனால் ஐஸ்வரியா ராய் அழகான பெண்களில் ஒருத்திதானே தவிர, அவளே அழகானவள் இல்லைன்னு சொல்வார். 

அதுமாதிரி, பயிற்சி எடுத்துக்கிட்டு அசரவைக்குற மாதிரி ஆடும் ஆட்கள் எத்தனையோ பேர் இருக்காங்க. ஆனா, எந்த பயிற்சியும் செய்யாம, எங்கோ ஒரு மூலையில் நேர்த்தியுடனும்,அசர வைக்கும்படியாகவும் ஆட்களுக் இருக்கத்தான் செய்றாங்கன்னு இந்த வீடியோ பார்த்ததும் தெரிஞ்சுக்கிட்டேன். அதனாலோ என்னமோ எனக்கு பிடிச்சு போச்சு. நீ இந்த வீடியோவை பார்த்துக்கிட்டு இரு. நான் போய் சமைக்கும் வேலையை பார்க்கிறேன்...


நன்றியுடன்,
ராஜி

Monday, April 29, 2019

தாய்க்கு பின் தாரம்ன்னு சொல்வது ஏன்?! - ஐஞ்சுவை அவியல்

மாமோய்!

சும்மா சும்மா மாமா மாமான்னு கூப்பிட்டு உசுரை வாங்காத!

ம்க்கும். உன்னை டிசைன் பண்ணும்போதே உன் கடவுள், உனக்கு லவ்ன்ற சப்ஜெக்டே இல்லாம படைச்சுட்டானா?! எப்பப்பாரு இஞ்சி தின்ன மாதிரி மூஞ்சிய வச்சிக்கிட்டு... கணவன், மனைவின்னா எப்படி இருக்கனும்ன்னு  இந்த வீடியோ பார்த்து தெரிஞ்சுக்கோ. சின்ன சின்ன விசயங்கள்தான் வாழ்க்கையை அழகாக்குது.  ஆனா, வாழ்க்கையை வாழ்வதென்பது சின்ன விசயங்கள் இல்லைன்னு தெரிஞ்சுக்க...


ம்ம்ம்  இப்படி ஒருத்தருக்கு ஒருத்தர் கேர் எடுத்திக்கிட்டு இருக்குறதாலதான் சண்டை சச்சரவு இல்லாம வீடு மகிழ்ச்சியாய் சகல செல்வமும் பெற்று இருக்கும். அதனால்தான் தாய்க்குப் பின் தாரம்ன்னு சொல்றாங்க.  Wifeக்கு தமிழில் பொண்டாட்டி, மனைவி, துணைவி, இல்லாள், தாரம்ன்னு எத்தனையோ பேர் இருக்க  தாய்க்கு பின் தாரம்ன்னு எதுக்கு சொல்றாங்கன்னு தெரியுமா மாமா?! 

இதென்ன கேள்வி?! தாய்... தாரம்.....ன்னு ரைமிங்கா இருக்கட்டுமேன்னுதான் தாய்க்கு பின் தாரம்ன்னு சொல்லி இருப்பாங்க.  

பொன்மொழிக்கு ரைமிங் மட்டும் போதுமா?! அர்த்தம் வேண்டாமோ!!??  "தாரம்'ன்ற வார்த்தைக்கு "மகிழ்ச்சி'ன்னு அர்த்தம். தாய்க்குப் பின் மகிழ்ச்சியைத் தருபவள் மனைவி என்பதே இதுக்கு அர்த்தம்.  அனுபவமொழியில் இப்படி ஒரு அர்த்தம் இருக்குதுன்னா, ஆன்மீகரீதியாகவும் ஒரு அர்த்தம் வருது. அது என்னன்னா,  மந்திரம் சொல்லும்போதெல்லாம்  "ஓம்' என்னும் பிரணவ மந்திரத்தை உச்சரிக்கிறோம். அந்த ஓம்ன்ற வார்த்தையை "தாரம்'ன்னும் சொல்வாங்க.  இந்த மந்திரத்தை உச்சரிப்போர், பிறவி என்னும் தளையில் இருந்து மீண்டு பிறப்பற்ற நிலை என்னும் முக்தியை அடைவர். ஆன்மிகத்தில் முக்தியே உயர்ந்த சந்தோஷமாகும். ஒரு சன்னியாசி பெரிதும் மதிப்பது தாய்.. அவளுக்கு அடுத்து பிரணவ மந்திரத்தினைதான். அதனாலும்தான் தாய்க்கு பின் தாரம்ன்னு சொல்றாங்க மாமா. 

ம்ம்ம் இப்படியே பொண்டாட்டிக்கு சாம்பிராணி போட்டுக்கிட்டிருந்தால் வாழ்க்கையில் உருப்படுவது எப்படியாம்?!
Image may contain: one or more people, cloud and outdoor

சாம்பிராணி போடுறதுன்னு எகத்தாளமா சொல்லிட்டே!!  சாம்பிராணி புகை போடுவது எல்லா மதச்சடங்கிலும் இருக்கு. அதில்லாம முன்னலாம் தலைக்கு குளிச்சதும் சாம்பிராணி புகை போடுவது வழக்கம். சாம்பிராணியில் பல மருத்துவ குணங்கள் இருக்கு, இந்த சாம்பிராணி எதிலிருந்து கிடைக்குதுன்னு தெரியுமா?!    இந்த சாம்பிராணி பாஸ்வெல்லியா செர்ராட்ட(Boswellia serrata)எனப்படும் தாவரகுடும்பத்தை சேர்ந்த ஃபிரங்கின்சென்ஸ்(Frankincense) எனப்படும் மரத்திலிருந்து வடியும் பால்தான் ஆகும். இது மெல்ல மெல்ல கடினமாகி ஒளிபுகும் தன்மையும் எளிதில் எரியும் தன்மையுடைய சாம்பிராணியாக மாறுது. இவையை எரித்தால் மனதுக்கு இதமான வாசணையை பரப்பும்.  ஃபிரங்கின்சென்ஸ்(Frankincense) மரங்கள் மேற்கத்திய நாடுகள் மற்றும் இந்தியாவில் குஜராத்,அஸ்ஸாம்,ராஜஸ்தான்,பீகார், ஒடிசா, மற்றும் தமிழ்நாட்டில் அதிமாக காணப்படுது. தமிழ்நாட்டில் குறிப்பாக கல்வராயன், சேர்வராயன் மலைச்சரிவுகளில் 500 மீ – 700 மீ உயரத்தில் இந்த மரம் இருக்குது. இந்த  மரம் உறுதியானது, அதேவேளையில்  எளிதில் அறுக்கவும்,  இழைக்கவும் முடியும்.  இவ்வகை மரங்கள்தான் தீக்குச்சிகள் தயாரிக்க உதவுது.  இந்த மரத்தில் நவம்பர் மாதம் முதல் ஜூலை வரையிலான காலங்களில் பால் வடியும். பால் அதிகமாக வடியும் ஒரு மரத்திலிருந்து ஆண்டு ஒன்றிற்க்கு 1 கி.கி வரையில்தான் சாம்பிராணி பெற முடியும். மாவீரன் மகா அலெக்ஸான்டர் சிறு வயதில் தன்னுடைய ஆசிரியர் அரிஸ்ட்டாட்டில்கிட்ட படிக்கும்போது தன்னுடைய ஆசிரியருக்கு சாம்பிராணி தேவைப்பட்டதை உணர்ந்தார் பின்பு மாவீரனாக உலகை வெல்ல ஆரம்பித்த நேரத்தில் மேற்கத்திய நாடுகளின் படையெடுப்பின்போது மூட்டை மூட்டையாக சாம்பிராணியை தன்னுடைய ஆசிரியர் அரிஸ்ட்டாட்டிலுக்கு அனுப்பி வைத்தார்.
Image may contain: food

பாறைப்போல் இறுகிக்கிடக்கும் சாம்பிராணிக் கட்டிகள், தீயில் பட்டவுடன் புகையாக வெளிப்படும். அதுபோல், நம்முன் பூதாகரமாக, மிகக் கடினமாகக் கிடக்கும் துன்பங்கள் எல்லாம், அக்னி உருவாக உள்ள இறைவனின் அருள் கடாட்சம் கிட்டியவுடன் புகையைப் போன்று லேசாகி விலகிவிடும் என்பது நம்பிக்கை. சாம்பிராணி ஆன்மீகத்தில், மட்டுமில்லாம மருந்தாகவும் பயன்படுது. ஃபிரங்கின்சென்ஸ்(Frankincense) மரத்திலிருந்து கோந்தும் கிடைக்குது. அந்த  கோந்தை நீருடன் சேர்த்து பெண்டோஸ் சர்க்கரைகள் தயாரிக்கப்படுகிறது இது இருமல், காமாலை, நாள்பட்டபுண்கள், சொறி, சிரங்கு ,படர்தாமரை போன்றவற்றிற்க்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. சாம்பிராணியை ஆவியாக்கி போஸ்வெல்யா எண்ணெய், டர்பெண்டைன் எண்ணெய்போல எண்ணெய் எடுக்கிறார்கள். இதிலிருந்துதான் வார்னிஷ் தயாரிக்கப்படுகிறது . சாம்பிராணி எண்ணெய்  சோப்பு தயாரித்தலிலும் பயன்படுது... 

சாம்பிராணின்னு கிண்டல் அடிக்கும் விசயத்தில் இத்தனை இருக்கா?!

ஆமாம். ஆனா, இதுலாம் மடசாம்பிராணியான உனக்கு இது தெரியாது. 

எனக்கு தெரியாதா?! எனக்கும் சில விசயங்கள் தெரியும். ரோட்டுக்கு நடுவில் வெள்ளைக்கோடுகளை பார்த்திருக்கியா?! அதுக்கு அர்த்தம் தெரியுமா?! தெரியலைன்னா இந்த படத்தை பார்த்து தெரிஞ்சுக்க. 
கார் ஓட்டுற உன் பிள்ளைக்கிட்ட இதை காட்டு. 

இதுலாம் வாட்ஸ் அப்ல வந்துச்சா மாமா?! அதே வாட்ஸ் அப்ல வந்த இன்னொரு படத்தை காட்டுறேன் பாரு.. மனுசன் எத்தனை கொடிய மிருகம்ன்னு...

மனுசனுக்கு தன்னோட சுயநலம்தான் முக்கியம். அவனை தவிர வேறெந்த உயிரினமும் இன்னொரு உயிரினத்தை அடிமைப்படுத்துவதில்லை, கொடுமைப்படுத்துவதுமில்லை. 

ஆமாம் புள்ள! யானையை பார்க்க பாவமாய் இருக்கு...   மனுசன் எப்பதான் திருந்துவான்னு தெரில..

நன்றியுடன்,
ராஜி