உன் கன்னம் லட்டு,
உன் இதழ்கள் அல்வா,
உன் மனம் மல்லிகை,
என்று நான் வர்ணிக்க..,
இந்தா திருப்பதி லட்டு,
பிடிச்சுக்கோ திருநெல்வேலி அல்வா,
என்று காதுல மதுரை மல்லியை சுத்திட்டு,
எனக்கு கல்தா கொடுத்துட்டு போய்டாளே......
உவமைக்கும், காதலுக்கும் காத தூரம்;
உண்மைக்கும், காதலுக்கும் தூரம், தூரமே.