Showing posts with label முதன் முதலாக. Show all posts
Showing posts with label முதன் முதலாக. Show all posts

Thursday, May 03, 2018

முதன்முதலாக,,,,, பாகம் 2


முதன் முதலில் மாவட்ட ஆட்சித் தலைவர்களை(கலெக்டர்) நியமித்தவர் ஆங்கில கவர்னர் வாரன் ஹோஸ்டிங்ஸ் ...,
சென்னை நகரின் வரலாற்றை முதன் முதலில் வெளியிட்டவர் எ.எஸ்.சீனிவாச சாஸ்திரி ....,
ஜெய் ஜவான்,ஜெய் கிஷான் என்று முழங்கியவர் லால்பகதூர் சாஸ்திரி ....,
தஞ்சாவூரில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பள்ளி(1784)தான் இந்தியாவில் ஆங்கிலம் கற்றுக்கொடுத்த முதல் பள்ளி by Frederick C.Schwartz ....

ஆஸ்டெக் இனத்தவர்கள்தான் முதன்முதலில் தக்காளியை பயிர் செய்தனர்.
மருத்துவத்தை பத்தி முதன்முதலாய் வெளிவந்த புத்தகம் ’சுசுருத சம்ஹிதை’.
கிரேக்கர்கள்தான் முதன்முதலா காந்தத்தை பத்தி அறிந்தவர்கள்...
இந்தியாவில் முதல் பாதாள ரயில் ஓடியது கொல்கொத்தாவில்தான்...
ரத்த ஓட்டத்தை கண்டுபிடித்தவர் டாக்டர் வில்லியம்ஸ் ஹார்வி.


1989ல் வெளியான இளையராஜா இசையில் உருவான மணிரத்னத்தின் "அஞ்சலி " படப்பாடல்கள்தான் முதன் முதலா    Compact disc எனப்படும் சி.டி. வழியாக  வெளியானது. இந்தியாவில், தமிழகத்தில் சிடியில் வெளியான முதல் படப்பாடல் இதுதான்.  இப்படம் இசைஞானியின் 500வது படம்.. பாடல்களை சி.டியில் வெளியிட்ட பெருமைக்கு உரியவர்.. மணிரத்ணத்தின் அண்ணனும், சினிமா தயாரிப்பாளருமான மறைந்த ஜி.வெங்கடேசன் அவர்கள்.. இதைத்தொடர்ந்து தளபதியும் சிடியில் வெளியானது. 
மைசூரை சேர்ந்த திம்மையா என்பவரால், 1939ம் ஆண்டு வேலூரின் முதல் திரையரங்கை கட்டினார். இதன் பெயர் ‘அபேரா’. இப்ப இது அண்ணா கலையரங்கம்ன்ற பேரில் இயங்குது. அரசாங்கம் நிர்ணயிக்கும் கட்டணமே வசூலிப்பாங்க.  நகரின் மையத்தில் இருந்தாலும் பழமையின் காரணமா இந்த அரங்கத்தில் கூட்டம் வருவதில்லை. அதனால, இப்ப படம் திரையிடுவது நிறுத்தப்பட்டு கலை நிகழ்ச்சிகள் மட்டுமே நடைப்பெறுது. 





1966ம் ஆண்டில் தமிழகத்தின் முதள் நகராட்சியாக வாலாஜாப்பேட்டை அறிவிக்கப்பட்டது. அதேப்போல,  சென்னை ராயப்புரம் - வாலாஜாப்பேட்டைக்கு இடையில்தான் தமிழகத்தின் முதல் ரயில்பாதை அமைப்பட்டது. வேலூர் மாவட்டத்தில், ஆற்காடுக்கு அடுத்து வாலாஜாப்பேட்டை இருக்கு. வாலாஜான்னு சுருக்கமா அழைக்கப்படும் வாலாஜாப்பேட்டையின் ரயில் நிறுத்தத்துக்கு மட்டும் வாலாஜா ரோடுன்னு பேரு. 

முதன்முதலாக....... தொடரும்...
நன்றியுடன்,
ராஜி 

Saturday, April 07, 2018

முதன் முதலாக...... பாகம் 1


முதல் காதல், முதல் முத்தம், முதல் அழுகை, முதல் ஸ்பரிசம், முதல் பரிசு என முதன்முதலாய் வாய்த்தவைகள் என்றும் மறக்கலாகாது. அதுமாதிரி, முதன்முதலாய் நிகழ்ந்த நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவகளின் சிலவற்றை இந்த பதிவில் பார்ப்போம். 
இன்னிக்கு சோனி (sony)ன்ற பேரை கேட்டதும் நமக்கு டிவிதான் நினைவுக்கு வரும். ஆனா, சோனி கம்பெனில முதன்முதலா தயாரிச்ச பொருள் ரைஸ்குக்கராகும்...  அதேமாதிரி, டயர் தயாரிப்பில் பேர்போன எம். ஆர் . எப். (MRF) கம்பனி தயாரிச்சது ஒரு பலூனை.... ரிலையன்ஸ் தன்னோட வியாபாரத்தை ஆரம்பிச்சது விமல்ன்ற துணிகள்மூலம்தான். அதேப்போல, விப்ரோ கம்பனி வனஸ்பதியையும், பானசானிக் கம்பனி பல்பு ஸ்டாண்டுகளையும், நோக்கியா பேப்பர் மில்ன்னுதான் தன்னோட பயணத்தை ஆரம்பிச்சாங்க.  

இந்திய அளவில் ஒரு லட்சம் சம்பளம் வாங்குன முதல் நடிகை கே.பி.சுந்தராம்பாள் அம்மா. சட்டமன்ற மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்ணும், முதல் நடிகையும் இவங்கதான். காந்தியடிகளே நேரில் வந்து சுதந்திர போராட்டாத்தில் தங்கள் பங்களிப்பு வேணும்ன்னு சொல்லி கூப்பிட்ட முதலும் கடைசியுமான நடிகை இவங்கதான். 

முழுக்க முழுக்க இந்தியர்களாலயே தோற்றுவிக்கப்பட்ட வங்கி பஞ்சாப் நேசனல் பேங்க்.  தமிழகத்தின், இந்தியாவின் முதல் மாநகராட்சின்ற பெருமை சென்னையையே சேரும். சென்னை மாநகராட்சியின் முதல் தலைவர்  சர்.பி.டி. தியாகராயர்,   சென்னை மாநகராட்சியின் முதல் மேயர் சர்.ராஜா முத்தையா செட்டியார், . சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயர்,  தாரா செரியன் என பதவியை அலங்கரித்தனர். 



சென்னையில் முதன்முதலாக கட்டிய சினிமா தியேட்டர் ‘கெயிட்டி’. இது ஆந்திராக்காரரான ஆர். வெங்கய்யா. இவர்தான் ஊமைப்படத்துக்கு பிண்ணனி இசை சேர்த்து, சினிமாவை பேச வைத்தவர், இந்த தியேட்டர் கட்டுறதுக்கு முன்,  எக்மோர் பக்கத்துல இருக்கும் விக்டோரியா ஹால்லதான் நாடகம், மௌன படங்கள்லாம் காட்டப்பட்டது. தமிழில் வெளிவந்த முதல் படம் கீசகவதம். 1916l இப்படம் வெளியானது.  நடராஜ முதலியார்  இயக்கியிருந்தார். இவரே தமிழ்த் திரையுலகின் முதல் இயக்குனரும் ஆவார். தமிழில் வெளியான இரட்டைவேடம் கொண்ட படம் உத்தமபுத்திரன். பி.யு. சின்னப்பா ஹீரோவா நடிச்சிருந்தார்.  ஏ.வி. எம் நிறுவனத்தால் எடுக்கப்பட்ட முதல் படம் அல்லி அர்சுனா. 1935ல வெளியானது. 

முதன்முதலாக ... அடுத்த பாகமும் வரும்...

நன்றியுடன்,
ராஜி