Showing posts with label வலைப்பதிவு. Show all posts
Showing posts with label வலைப்பதிவு. Show all posts

Tuesday, July 23, 2013

மதுரை மாணவர்கள் இப்படியா?! ஐஞ்சுவை அவியல்

ஏய்  புள்ள! 


இங்க  வா,  கொஞ்சம் மஞ்சள் பொடி கொண்டு வா. காலில் அடிப்பட்டுச்சு. வலிக்குது...., ஆ, அம்மா! உயிர் போகுதே!

ஐயோ ! என்னங்க ஆச்சு?!   

கதவுல கால் மாட்டிக்கிச்சு. நகம் பேர்ந்து வந்துடும் போல இருக்கு, ரத்தம் வருகுது பாரு.

ம்க்கும். நானும் என்னமோ! ஏதோன்னு நினைச்சு ஓடி வந்தேன். இந்த சின்ன காயத்துக்கு இப்படி அலறுறீங்களே! நீங்கலாம் பொண்ணா பொறந்திருக்கணும்!!

நானே வலில துடிச்சிக்கிட்டு இருக்குறேன். நீ என்னடான்னா, இப்போ போய் பொம்பளைங்க பெருமை பத்தி பேசுறியே!!

அதுக்கில்ல மாமா! நம்ம மனுசங்க உடம்பு  45 யூனிட் வரை உள்ள வலியை மட்டுமே உணருமாம். ஆனா, பிரசவத்தின் போது ஒரு பெண் 57 யூனிட் வலியை உணருகிறாளாம். இது, ஒரே நேரத்தில், 20 எலும்புகள் உடையும் போது வர்ற வலிக்கு சமமாம்!!

ஓ அப்படியா! சரி உன் ப்ரெண்ட் ராஜி தன் பொண்ணை பார்க்க சென்னை போனாளே என்ன சொன்னா?! தூயா நல்லா இருக்காளா?!

ம்ம் நல்லா இருக்காளாம். ஜூலை 19 அவளுக்கு பொறந்த நாள் அதனால ராஜி தூயாக்கு ஒரு ஆண்ட்ராய்டு மொபைல் போன் வாங்கி தந்திருக்கா. KFCல போய் கிரில் சிக்கன் சாப்பிட்டு வந்திருக்கா. அப்படி இருக்கு, இப்படி இருக்குன்னு ஒரே பெருமைதான். நாமளும் ஒரு தரம் நம்ம சின்ன மண்டையனை கூட்டி போய்சாப்பிட்டு வரணும் மாமா!

உன் ஃப்ரெண்ட் தான் லூசு போல கண்டதையும் சாப்பிட்டு உடம்பை பாழ் பண்ணிக்கிட்டா நாமளும் பண்ணிக்கனுமா?!  வெளிநாட்டுல இருந்த இந்தக்கடைங்க இப்போ நம்ம இந்தியாவுல பெரிய பெரிய டவுன்ல லாம் வந்துடுச்சு. பெரு நகரங்கள்ல இப்போ இருக்குற இளசுகள்ல முக்காவாசி பேர்  KFCல சிக்கன் சாப்பிட்டலைன்னா தன்னை யாரும் மதிக்க மாட்டாங்கன்னு நினைச்சுக்கிட்டு ஃப்ரெண்ட்ஸ், பார்ட்டி, லவ்வர்ஸ்ன்னு அங்கதான் போய் குமியறாங்க. இப்போ, ஓரளவுக்கு நடுத்தர வர்க்கத்து ஆளுங்க கூட போக ஆரம்பிச்சுட்டாங்க. 

ஹாம்ப்சயர்ன்ற யூனிவர்சிட்டில ஒரு ஆய்வு நடத்தி இருக்காங்க. அதுல
KFC பத்தி அதிர்ச்சியான பல விசயங்கள் வெளி வந்திருக்கு.  

KFCகாரங்க, நாம சாப்புடுற பிராய்லர் கோழியை யூஸ் பண்ணுறதில்லை!!   மரபணு மாற்றம் செய்யப்பட்ட கோழியைதான் யூஸ் பண்றாங்க. ஆனா, அதை கோழின்னு சொல்ல முடியாதாம். ஏன்னா, இவங்க ஸ்பெஷலா வளர்க்குற கோழிகளுக்க்கு அலகு, இறக்கை, கால்கள் கொஞ்சமதான் இருக்குமாம். கறி அதிகமா வேணும்ங்குறதுக்காக எலும்பு மெல்லிசா இருக்குற மாதிரி இந்த கோழிலாம் மாற்றம் செஞ்சிருக்காங்க.  




அந்த கோழியோட உடம்புல ஃபிக்ஸ் பண்ணி இருக்குற டியூப் வழியாதான் கோழிக்கு தேவையான சத்துலாம் போகுதாம். இந்த மாதிரி வளர்க்க செலவும் கம்மியாதான் ஆகுதாம். 

இந்த கோழிகள் முட்டையிட்டு குஞ்சு பொறிக்காது. இறகுகள் இல்லாததால சூரிய வெளிச்சம்லாம் இதுக்கு ஆகாதாம்!! சீக்கிரம் தொத்து நோய்களுக்கு ஆளாகிடுமாம்!!. அதனால, இதை  அமெரிக்க உணவு கட்டுப்பாட்டுக்கழகம்  ”கோழி” ன்னு சொல்லக்கூடாதுன்னு எச்சரிக்கை விட்டிருக்காங்களாம். இப்படி ஆபத்தான KFC சிக்கனை சாப்பிடதான் வேணுமா புள்ள?!

வேணவே வேணாம் மாமா!  நம்ம வீட்டுல வளர்க்குற கோழியைவே அடிச்சு சாப்பிட்டுக்கலாம். சரி மாமா!  ஏனுங்க மாமா! உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமா?! பக்கத்து வீட்டு பையன் 6வது தான் படிக்குறான். அவன் அப்பாவோட லேப்டாப்புல ஏதோ பார்க்க கூடாத படத்தை பார்த்துட்டானாம். அதுக்கு அவன் அப்பா, பெல்ட் எடுத்து வாங்கி எடுத்துட்டாரு,

ஐயோ பாவம்! அந்த குழந்தை மேல தப்பில்ல புள்ள! இப்போ பெரும்பாலும் எல்லார் வீட்டுலயும் கம்ப்யூட்டர் இல்லாட்டி லேப்டாப் இருக்கு. அவங்கலாம்  பல தகவல்களை Google ல  தேடும் போது யதேச்சைவோ இல்லாட்டி  ஸ்பெல்லிங் மிஸ்டேக்குனாலயோ இதுப்போல  ஆபாசமான தகவல்கள், மற்றும் படங்கள்  வந்து தர்ம சங்கடத்தை குடுத்துடுது. பெரியவங்க இது தப்புன்னு ஒதுங்கி வந்துடுறோம். ஆனா, குழந்தைகள் ஏதோ ஒரு ஆர்வத்துல அதை பார்க்குறாங்க. அதனால நாம் வூட்டுல  இல்லாத போது குழந்தைகள் இதெல்லாம்  பார்க்காம இருக்க 

 முதல்ல  கூகிள்க்குள்ள போய்  நம்ம  User name, password கொடுத்து Login செஞ்சுக்கனும். அப்புறம்,  settings ல போய் search settings click பண்ணனும் இல்லாட்டி   http://www.google.com/preferences ஓபன் பண்ணி, Safe serrch Filtering போய் நமக்கு  தேவையானதை  நிறுவிக்கனும்.

அடுத்து Safe SearchFiltering கீழே உள்ள Lock safe search கிளிக் செஞ்சுக்கனும். Locking Process நடக்கும். அப்புறமா  Safe search Locked ன்னு அரும்.  சரியா Lock ஆகலைன்னா மறுபடியும்  ஒரு முறை சென்று Lock safe search கொடுங்க. அவ்வளவுதான் இனி ஆபாசம் சம்மந்தமான எந்த தகவலும் நமக்கு வராது. இதுக்கு பிறகு google search பக்கத்துல நீங்க Lock செய்த அடையாளமா வண்ண பந்துகள் அடையாளமா இருக்கும் . நீங்க இதனை Unlock செய்ய மீண்டும் Search setting போய் unlock ன்னு மாத்திட்டா போதும் புள்ள.
       
இவ்வளவு வசதி இருக்கா. நான் கூட அந்த பையனை தப்பா நினைச்சுட்டேன் மாமா!
                         

இந்த காலத்து பிள்ளைங்கலாம் சூட்டிகை. அவங்களை நல்ல வழிக்கு கூட்டி போறதும், கெட்ட வழிக்கு கூட்டி போறதும் நம்ம கைலதான் இருக்கு. கிழிஞ்ச ஜீன்ஸ், செல்போன், சூயிங்கம்ன்னு அரட்டை அடிக்குற நம்ம ஊரு பிள்ளைகளுக்கு மத்தியில் மதிரை மாவட்டத்துல இருக்குற  டி.கல்லுப்பட்டின்ற ஊருல  காந்தி நிகேதன் மேல்நிலைப் பள்ளில படிக்குற பசங்களோட யூனிஃபார்ம். வேட்டி சட்டை தான் ! இந்த இஸ்கோலு இந்தியா சுதந்திரம் வாங்குறதுக்கு 4 நாள் முன்னாடி ஆரம்பிச்சிருக்காங்க. இந்த இஸ்கோலு பசங்கலாம் போறதும் வர்றதையும் பார்க்குறதுக்கு எதோ அரசியல் கட்சி ஊர்வலம் போல இருக்கு. 

அந்த வேட்டி சட்டைகூட ஏதோ  சாரதி வேட்டியோ, பாலியெஸ்டர் வேட்டியோ இல்ல!! கதர் வேட்டிதான்.  வேட்டிகளைத் துவைக்க கதர் சோப் செய்யுற  முறையையும் பள்ளியிலேயே கத்துக்குடுக்குறாங்க, பள்ளியில் ஆசிரியைகளை 'அக்கா’ன்னும்,ஆசிரியர்களை 'ஐயா’ - ன்னு உறவு சொல்லிதான் பசங்க கூப்பிடுறாங்க. பசங்க வேட்டி சட்டை போல பொண்ணுங்களுக்கு தாவணிதான் யூனிஃபார்ம். சின்ன குழந்தைகள் கூட வாரத்துல மூணு நாளைக்கு கதர் துணிதான் போட்டுக்குறாங்க.

திங்கள் கிழமைல நடக்கும் கொடி வணக்கத்தின்போது, பல்வேறு தேச பக்திப் பாடல்களை பசங்க பாடுறாங்க .புதன்கிழமைல நடக்கும் சர்வ சமயப் பிரார்த்தனைக் கூட்டத்துல பைபிள், பகவத் கீதை, குர்ஆன், திருக்குறளையும் போன்ற நூல்களை வாசிச்சு அர்த்தம் சொல்லுறாங்களாம்!! ஒழுக்கத்துக்குப் பேர் போன பள்ளியாம் இது காலாண்டு, அரையாண்டுப பரிட்சையின் போது பசங்களை கண்காணிக்கவே தேவை இல்லியாம். காப்பி அடிக்காமல் சுய ஒழுங்கைக் கடைப்பிடிப்பாங்களாம்.

ஓ இப்படி கூட ஒரு இஸ்கோலு இருக்காமா!? நம்ம சின்ன மண்டையனை அங்க போய் சேர்த்துடலாமா மாமா?!


ஏன் புள்ள!? அவன் இங்கயே இருக்கட்டுமே! அவனோட வீட்டு பாடத்தையெல்லாம் நான் சொல்லி குடுக்குறேனே. மதுரைல கொண்டு போய் விட்டுட்டா எப்படி?!

ம்க்கும் உங்க லட்சணம் என்னன்னு தெரியாதா எனக்கு?!   நாலும் எட்டும் எத்தனைன்னு கேட்டா  கூட்டி சொல்ல ஒரு வாரமாகுமே!

ஏய்! என்னை பத்தி என்னடி நினச்சுக்கிட்டு இருக்கே?! அன்னிக்கு எதோ யோசனையில இருந்துட்டேன். அதனால பதில் சொல்ல முடியலை. சரி, இப்போ எதாவது கேளு டான்ன்னு பதில் சொல்றேனா பாரு?! இல்லாட்டி ஒரு பக்கத்து மீசையை எடுத்துடுறேன்.

ஓ சவாலா?! ஒரு ராஜாவின் அரண்மனையில் ஒரே மாதிரியான 24 செம்பு காசுகள்ல ஒரு தங்க காசு கலந்துட்டது.  அதை எப்படி  பிரிச்சு எடுக்குறது?! ன்னு  ராஜாவுக்கு குழப்பம்.  ராஜாகிட்ட  ஒரு தராசு மட்டும் தான் இருக்கு . அமைச்சர் உடனே விடை சொல்லிட்டார் அந்த விடை என்னன்னு நீங்க சொல்லுங்க பார்க்கலாம்!! 

ஹா! ஹா! ப்ப்ப்ப்ப்ப்பூ இவ்வளவுதானே! இரு இந்த ஃபோன் காலை அட்டெண்ட் பண்ணிட்டு வந்து சொல்லுறேன்.

பதில் சொல்லாட்டி ஒரு பக்கத்து மீசையை எடுக்கலைன்னா என் பேரை மாத்திக்குறேனுங்க மாமோய்!!