Friday, September 13, 2019

ஹேய்!! ஹோய்! டுடே நவரச நாயகன் கார்த்திக் பர்த்டே



1990களில்  திருத்தணில நாங்க குடியிருந்த தெருவில் கல்யாணம், திருவிழாக்களுக்கு மைக்செட், சீரியல் பல்ப் செட் போடும் கடை இருந்ததால் எல்லா புதுப்பாட்டும் புல் சவுண்ட்ல போடுவாங்க.  1989ல  சோலைக்குயில் படத்து கண்ணுல நிக்குது.. நெஞ்சுல சொக்குது மானே... பாட்டு கேட்க நேர என்னை ஈர்த்துச்சு...  மனசுக்குள் எப்பயும் அந்த பாட்டுதான் ரிவைண்டிங்... , ஸ்கூல் டான்ஸ்ல கங்கைக்கரை மன்னனடி... பாட்டுக்கு ஆட.. அப்பாவை கேசட் வாங்கி வரச்சொல்லும்போது அதுல, வருசம் 16, சோலைக்குயில் படமும் சேர்ந்து வர கேசட் கதறி கதறி அழுது கெஞ்சுற அளவுக்கு அதே பாட்டுதான். பாட்டு ஈர்த்ததே தவிர யார் நடிச்சாங்கன்னுலாம் தெரிஞ்சுக்க விரும்பல.  

இத்தனைக்கும் 1988ல நடந்த அக்கா கல்யாணத்துலயே கார்த்திக் நடிச்ச என் ஜீவன் பாடுது படம் பார்த்திருக்கேன். அப்பலாம் சின்ன பிள்ளைன்றதால   நடிகர்கள்மீது பெருசா ஈர்ப்பில்லை.  பிடித்தது காலப்போக்கில் பிடிக்காம போற அதிசயம்  நிகழும் ஈ லோகத்தில்,  இத்தனை காலமும் மாறாம இருக்குறது கார்த்திக் மீதான ரசனை மட்டுமே! அவர் ஈர்த்த அளவுக்கு எந்த நடிகரும் இன்னியவரைக்கும் இந்தளவுக்கு ஈர்த்ததில்லை....  அதுக்கப்புறம்,  எப்பயும் கார்த்திக்.. கார்த்திக்.. கார்த்திக்தான்.... 
 13/9/1960ல பிறந்திருக்கார் என் சின்ன பொண்ணை கருவுற்றிருக்கும்போது செப்.15 டெலிவரி டேட் கொடுத்தாங்க. ஆனா, செப் 13லயே அவ பிறந்திடனும்ன்னு சாமிக்கிட்டலாம் வேண்டிக்கிட்டேன். நாம கேட்டதைலாம் என்னிக்கு சாமி செஞ்சிருக்கு?! . 1981 அலைகள் ஓய்வதில்லை படம் வந்திச்சு.  எப்படி நடிப்பாரோன்னு பயந்துக்கிட்டிருந்த அவர் அப்பா முத்துராமனுக்கு  அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டுன்னுகூட  தெரியாது.  படம் வெளில வரும் முன்னயே முத்துராமன் நெஞ்சுவலியில் இறந்துட்டாரு. ஆலோசனை சொல்லி, கைக்கொடுக்க ஆளில்லாம  கொஞ்சம் வருசங்களுக்கு சரியான படம்  தேர்ந்தெடுக்க தெரியாம பெருசா எதும் ஹிட் கொடுக்கவே இல்ல. ரஜினி, ராதிகா நடிச்ச நல்லவனுக்கு நல்லவன் படத்துல, கிட்டத்தட்ட  வில்லன் வேஷம்ன்னு சொல்லி ஏ.வி.எம். நிறுவனத்தார் கேட்க வில்லன் வேஷமான்னு யோசிச்ச கார்த்திக்கை எங்க நிறுவனத்தின் அடுத்த படத்துல நீங்கதான் ஹீரோன்னு வாக்களிச்ச பின் நடிச்சதா ஏ.வி.எம் சரவணனே சொல்லி இருக்கார்...
கார்த்திக்கின் பொன்னுமணி, ரஜினியின்  எஜமான் படப்பிடிப்பும் ஒரே தளத்தில் நடந்தபோது எடுத்த படம்...

ஆவரேஜ் ஹீரோவா இருந்த கார்த்திக்கை நவரசநாயகனா காட்டுனது மௌனராகம் படத்துலதான்... மிஸ்டர் சந்திரமௌலீஈஈஈஈஈஈஈஈஈன்னு கூவி அதிகபட்சம் கால்மணிக்கூர் படத்துல வந்தாலும் காதல், குறும்பு, சோகம், கோபம்ன்னு அத்தனை அம்சத்தையும் காட்டி நடிச்சிருப்பார். படத்தின் நாயகன் மோகன்னாலும் படத்து பேரை கேட்டதும் நினைவுக்கு வர்றது கார்த்திக்தான். அந்த படத்துக்கப்புறம் கார்த்திக் கேரியர் டாப் கியர்ல போச்சு.. அக்னி நட்சத்திரம், வருசம் பதினாறு, கண் சிமிட்டும் நேரம், பாண்டி நாட்டு தங்கம், கிழக்கு வாசல், பொண்ணுமனி, முத்துக்காளைன்னு போய்க்கிட்டிருந்த கார்த்திக் கிராஃப்ல மீண்டும் ஒரு சறுக்கல்... எல்லாமே சொதப்பிக்கிட்டு வந்துச்சு...
ஆகாய கங்கை படத்துக்காக  கார்த்திக், சுகாசினி
மௌனராகத்துக்குபின் அக்னிநட்சத்திரத்தில் கார்த்திக்கை வச்சு இயக்கினார் மணிரத்தினம். பிரபு இன்னொரு நாயகன்.  பிரபு பெரிய வீட்டு பிள்ளையாய், போலீசாய் முறுக்கி காட்டி வருவார். காதல் காட்சியிலயும் அந்த ரஃப்னெஸ் தெரியும்.  ஆனா கார்த்திக் சாக்லேட் பாயா வந்து எல்லாரையும் கட்டிபோட்டார். நான் அந்த படத்துக்காக உடம்பை ஏத்தி கஷ்டப்பட்டு நடிச்சு வராத பேரை சும்மா கேமரா முன்னாடி நின்னு பேர் வாங்கிட்டு போயிட்டான் கார்த்திக்ன்னு பிரபுவே சொல்லி இருக்கார். 
அலைகள் ஓய்வதில்லை படத்துக்கான போட்டோ ஷூட்டிங்குக்கு வந்தபோது...

மணிரத்தினத்தின் தளபதி படத்துல கலெக்டர் வேசத்துக்கும், ரோஜா படத்து ஹீரோவாகவும் கார்த்திக்தான் முதல்ல நினைவுக்கு வந்திருக்கார். முதல்ல தளபதி படத்துக்காக போய் கேட்டபோது, என்ன நினைச்சாரோ தெரியல, அந்த படத்தை தவிர்க்க அதிக சம்பளம் கேட்டிருக்கார் கார்த்திக் அதனால் அந்த ரெண்டு படத்தையும் நடிக்க தவறவிட்டிருக்கார். பலவருசங்கழிச்சு ராவணன் படத்துலதான் மீண்டும் ரெண்டு பேரும் கைக்கோர்த்திருக்காங்க. பிரபு, விக்ரம், ஐஸ்வர்யா ராய் என்ட்ரிக்கு பறக்காத விசில் கார்த்திக் என்ட்ரிக்கு பறந்துச்சாம். கார்த்திக்குண்டான இடம் இன்னும் சினிமாவில் நிரப்பப்படாமயே இருக்குன்னு மணிரத்தினமே ராவணன் படத்து புரமோஷன்ல சொன்னார். 

மிஸ்டர் சந்திரமௌலி... மிஸ்டர் சந்திரமௌலி... வசனத்தை எதாவது ஒரு சந்தர்ப்பத்தில் சொல்லி நடிக்காத நடிகரும், மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்டும் இதுவரை இல்லை. மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்டுக்கு கார்த்திக் குரல்ன்னா அல்வா சாப்பிடுறமாதிரி... கார்த்திக் ஹே.. ஹேய்..ன்னு சொல்லி கைகாலை ஆட்டி, குழைஞ்சு பேசி ஓவர் ஆக்டிங்க் செய்ய மட்டுமே தெரியும்ன்னு சொன்னவங்க வாய மூடுற மாதிரி உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்... படத்துலயும், ஆனந்தபூங்காற்றே... படத்துலயும் நடிச்சு அசத்தி இருப்பார். ஹீரோவா நடிச்சிட்டிருக்கும்போதே அஜீத், பிரபுதேவா, விஜயகாந்த்... மாதிரியான நடிகர்கள் படத்துல கெஸ்ட்ரோல்லயும் நடிச்சிருக்கார். ஆறு பாடல்களை பாடி இருக்கார். 

பொதுவா எல்லா நடிகர், நடிகைகளுக்கும் ரீ எண்ட்ரிங்குறது ஒருமுறைதான் வரும். ஆனா கார்த்திக்குக்கு ரெண்டாவது முறையும் வந்துச்சு..  சுந்தர் சி இயக்கத்துல 1995ல உள்ளத்தை அள்ளித்தா படத்துமூலமா மீண்டும் பிசியானார் கார்த்திக். பூவரசன், மேட்டுக்குடி, பிஸ்தா, கோகுலத்தில் சீதைன்னு அவர் கொடுத்த ஹிட்டுகள் ஏராளம். கோகுலத்தில் சீதை படத்துல கார்த்திக் ரிஷியாவே வாழ்ந்திருப்பார். அந்த படத்து சாயலும் எல்லா நடிகர்கள்கிட்டயும் பார்க்கலாம்.  இதுக்கிடையில், கார்த்திக்கின் கவனம் அரசியல் பக்கமும் பார்வை போனது ...  அரசியல்ல மூழ்கி முத்தெடுத்தவங்க வெகுசிலரே! மூழ்கி காணாம போனது நிறைய பேரு. ஆனானப்பட்ட சிவாஜியே அரசியல்ல ஜெயிக்க முடியாதபோது தான் எம்மாத்திரம்ன்னு கார்த்திக் நினைச்சிருக்கனும்.. சரியான வழிக்காட்டுதல் இல்லாததால் அரசியல்ல இறங்கி சினிமாவை இழந்துதான் மிச்சம்...
தனக்கு தம்பியா, வில்லனா நடிச்ச சக நடிகரான முத்துராமன் தன்னோட மகனின் வளர்ச்சியை பார்க்க உடனில்லையேன்னு எம்.ஜி.ஆர் கலங்கினது படத்துலயே தெரியும்.

பொதுவா, நீச்சல் தெரியாம நீரில் முங்குறவங்களை,  ரெண்டு முறை வெளித்தள்ளி காப்பாத்த பார்க்குமாம். அதுல தப்பிச்சுக்கலைன்னா மூணாவது முறை முங்கிதான் போகனும். ஆனா, கார்த்திக் விசயத்துல இந்த விதி உடைக்கப்பட்டிருக்கு...  மாஞ்சா வேலு படத்துல கெஸ்ட்ரோலும், அனேகன் படத்துல வில்லனாவும் மீண்டும் கைக்கொடுத்து அவருக்குன்னு இன்னும் ரசிக பட்டாளம் இருக்குங்குறதை  அவருக்கு உணர்த்தி இருக்கனும்.  சூர்யாவோடு ‘ இது தானா சேர்ந்த கூட்டம்’ படத்துல வில்லனா வந்தார்(இன்னமும் நான் படம் பார்க்கலை :( ). 

இப்ப சமீபத்துல வெளிவந்த மிஸ்டர்.சந்திரமௌலி படத்துல ஃபர்ஸ்ட் ஹீரோ கார்த்திக்தான். அவரோடு சேர்ந்து அவர் மகனும் நடிச்சிருக்கார். அப்பாவோடு சேர்ந்து நடிக்க கொடுத்து வைக்காத எனக்கு என் மகனோடு சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைச்சிருக்குன்னு ஆடியோ ரிலீஸ்ல கண்கலங்கினார்.  தன் மகள் வயதுடைய வரலட்சுமி சரத்குமாருக்கு பத்து பொருத்தமும் பக்காவா பொருந்தி போனார்.  

அக்னி நட்சத்திரம், வருசம் 16, கிழக்குவாசல், பொன்னுமணி  படத்துக்காக நான்கு முறை பிலிம்பேர் விருதையும், அலைகள் ஓய்வதில்லை, அக்னி நட்சத்திரம், கிழக்குவாசல், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்(1998)& பூவேலி(1998) படத்துக்காக நான்கு முறை தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதையும், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படத்துக்காக சினிமா எக்ஸ்பிரஸ் விருதும்,  அபிநந்தனான்ற தெலுங்கு படத்துக்காக நந்தி விருதையும், அதுமட்டுமில்லாம கலைமாமணி பட்டமும் வாங்கி இருக்கார்.  சுயமரியாதை, அமரன், சின்ன ஜமீன், சிஷ்யா, பிஸ்தா, அரிச்சந்திரான்னு ஆறு படத்தில் சொந்தகுரலில் பாட்டு பாடி நடிச்சிருக்கார்.
 பல தடவை தவறவிட்டும் மீண்டும் கலை உலகில் இன்னொரு வாய்ப்பு வந்திருக்கு. பிரபு, சத்யராஜ் மாதிரி இந்த வாய்ப்பையாவது தக்க வச்சுப்பாரான்னு பொறுத்திருந்துதான் பார்க்கனும்..... உங்களுக்கு கைக்கொடுக்காத அரசியலை விட்டு, உங்களுக்குன்னு இன்னமும் இருக்கும் ரசிகர் பட்டாளத்தை கவனிங்க கார்த்திக் சார். 

காதல் மன்னன், காதல் இளவரசன், நடிகர் திலகம்ன்னு எத்தனை நட்சத்திரங்கள் இருந்தாலும் எல்லாரும் உணர்ச்சிகளை வெளிக்கொணர கொஞ்சம் மெனக்கெடனும்... உங்களுக்கு அதுலாம் வேண்டவே வேண்டாம். தானாவே வரும். நவரச நாயகன்ங்குற பட்டம் உங்களுக்கு மட்டுமே பொருந்தும்.  அந்த பட்டம் மௌனமாய் ராகம் பாடியப்படி... உங்கள் நடிப்பு திறமைக்கு மௌனச் சாட்சியாய் என்னிக்கும் உங்களுக்காகவே இருக்கும்... 


 இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்  கார்த்திக் சார்... 

மீள்பதிவு

நன்றியுடன்,
ராஜி. 

10 comments:

  1. கார்த்திக் பிறந்த நாளா இன்று?  அவரை ரசிக்காதவர்கள் இருக்க முடியாது. இவரோடேயே அறிமுகமான சுரேஷ் எல்லாம் காணாமல் போய்விட்டார்.

    ReplyDelete
  2. எனக்கும் கார்த்திக்குக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறலாம்னு எண்ணம் ஆனால் எனது பிறந்தநாளுக்கு கார்த்திக் சொல்லவில்லையே...

    எம்பூட்டு விசயம் தெரிஞ்சு சொல்லி இருக்கீங்க... சகோ ஆனால் கார்த்திக் வாழ்க்கையில் போட்ட ஆட்டத்தால் நஷ்டமாகி கடனாலியாகி கடைசியில் தனது சமூகத்து மக்களை காப்பாற்றப் போவதாக பீலாவிட இதையும் நம்பிய அவரது சமூக மக்கள் அவரிடம் படையெடுப்பதை கண்ட ஜெய... கூப்பிட்டு கடனை அடைத்து விட்டு தன்னுடன் சேர்த்து டம்மி பீஸாக்கி விடவும் அட்ரஸ் தொலைந்து மீண்டும் சினிமாவை நோக்கி ஓட.....

    மேலும் (மாமனாரின் ஊட்டி எஸ்டேட்களை முழுமையாக கைப்பற்ற) கொழுந்தியாளையும் திருமணம் செய்ய முயன்று தோற்றதை நான் சொல்ல விரும்பவில்லை சகோ.

    சரி... இவரது சமூக மக்களை முன்னேற்ற வில்லையா ? இதுதான் நடிகர்களின் உண்மை முகம் சகோ.

    கார்த்திக் எனக்கு எதிரியும் அல்ல நண்பனும் அல்ல இருப்பினும் நலம் வாழட்டும் நல்ல மனமாக இருந்தால்...

    ReplyDelete
    Replies
    1. அவரும் மனிதர்தான்... மனிதனிடம் பலம் பலவீனம் இரண்டும் உண்டு... எந்த மனிதனும் உத்தமன் கிடையாது..
      அவருடைய சொந்த வாழ்க்கை பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை... ராகினி மற்றும் ரதியே இதைப்பற்றி கவலைப்படாதபோது நமக்கென்ன....
      அனைவருக்கும் சிறந்த நண்பனாக இருக்கும் நவரச நாயகன் நலத்துடன் வளத்துடன் பல்லாண்டு காலம் மனநிறைவுடன் வாழ்வார்.

      Delete
    2. அவரும் மனிதர்தான்... மனிதனிடம் பலம் பலவீனம் இரண்டும் உண்டு... எந்த மனிதனும் உத்தமன் கிடையாது..
      அவருடைய சொந்த வாழ்க்கை பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை... ராகினி மற்றும் ரதியே இதைப்பற்றி கவலைப்படாதபோது நமக்கென்ன....
      அனைவருக்கும் சிறந்த நண்பனாக இருக்கும் நவரச நாயகன் நலத்துடன் வளத்துடன் பல்லாண்டு காலம் மனநிறைவுடன் வாழ்வார்.

      Delete
  3. எனக்கு மிக மிக மிக.......

    பிடித்த படம் :-

    கோகுலத்தில் சீதை...

    ReplyDelete
  4. கிழக்கு வாசல் கார்த்திக் - மறக்க முடியாத ஒன்று...

    எனது அம்மா, அவரைப் போல நெற்றியில் நீளமாக திலகமிட்டு... நான் ஆட்டத்துடன் பாட்டு பாடி... ம்... நினைவு கண்ணீர் வர வைக்கிறது...

    ReplyDelete
  5. எத்தனை விவரங்கள்.... :)

    ReplyDelete
  6. அருமையான தகவல்

    ReplyDelete
  7. படிக்க மறக்காதீர்கள்
    நீங்களும் திருக்குறள் எழுதலாம்!
    http://www.ypvnpubs.com/2019/09/blog-post_13.html

    ReplyDelete