Showing posts with label உயிர். Show all posts
Showing posts with label உயிர். Show all posts

Monday, December 03, 2012

மரணத்தை வென்றது...


விழி மூடும் மெல்லிசையில்...,
உதட்டோரப் புன்னகையி..,ல்
மென்மையாய் வருடிச் செல்லும்
உன் நினைவுகள்....,

என் மரணத்தோடு 
மடிந்துவிடுவதில்லை நம் காதல்!!??
என் மரணம் தாண்டியும்...,
 அது வாழும்!!

உன்னையும், என்னையும் போல்....,
எத்தனையோ ஜீவன்கள்....,
நிஜத்தையே காணமுடியாத
நிழல்களாய் போனாலும்....,

நினைவுகளின் உயிர் குடித்தபடி
வாழ்வதால்தான்.......,
வாழ்கிறது
வாழ்வும்,உலகமும் .....,

Tuesday, October 30, 2012

சொன்னதை செய்யும் கிளிப்பிள்ளை





மழை பெய்யும்போது
அதில் நனைந்து பார்
என் கண்ணீர்
துளிகள் அதில் கலந்திருக்கும்..,
உன்னை பிரிந்திருக்கும்
சோகம் எனக்கு
இப்போது இல்லை??!!
ஆனால், தயவு செய்து
என் கனவில்
வருவதை மட்டும்
நிறுத்திவிடாதே.!

இமைக்காமல் பார்க்கும் உன் கண்கள்
எனக்கு வேண்டும்,.. என் உயிரை
எடுத்துக் கொள், உன் கண்ணில் நான்
இருக்கும்போது இந்த உடல் எதற்கு?


நான்  என்ன சொன்னாலும்.....,
 நீ கேட்பாய் என்று தெரியும்!!!. 
ஆனால், இந்த அளவிற்கு!
கேட்பாய் என்று தெரியாது!!,

ஏதோ கோபத்தில் வாய் தவறி
”என்னை மறந்துவிடு"
 என்று சொன்னால்...,
 இப்படி ஒரேயடியாகவா
மறந்துவிடுவது??!!


Friday, February 17, 2012

உன் வீட்டு சுவற்றில் புகைப்படமாய்.......

                      
   என் மௌனத்தின்
அர்த்தங்களே உன் பார்வைகளாய்
உன் விழி(கள்) பார்க்கும்
தூரங்களே என் வாழ்க்கைப்
பயணங்களாய்...,

கண்ணீரை என் விழிகள்
அறியும் முன்னே – துடைத்து விட
நீளும் உன் கரங்களே
கானலாய் போனது....,

இத்தனையும் ஓர்
இரவின் மௌனத்தைக் கிழித்து
கொண்டு விசும்பலாய் உன் குரல்
கேட்கும் துடைக்க முடியா....,

தூரத்தில் நான் உயிரில்லா
நிழற்படமாய்
உன் வீட்டு
சுவரில்.