குளிருக்கு இதமாய்
போர்வைக்குள் சுருண்டிருந்த அதிகாலை...,
மொட்டுகள் மலர்ந்து மனம் வீச
காத்திருக்கும் வேளையில்,
காத்திருந்தேன். என் கண்ணம்மாவுக்காக!!
முத்தம் தருவாள்!
வாழ்வை வசந்தமாக்குவாள்!
என கற்பனையில் மிதந்தேன்.
அதோ, வந்தே விட்டாள் என்னவள்!
தேவதையும் தோற்கும் விதமான அழகோடு!!
அன்ன நடை பின்ன,
குயிலிசை தோற்கடிக்கும்
குரலோடு,என்னைக்
கொஞ்சியவள் நெற்றியோ
மூன்றாம் பிறை!!
கிளிக்கு போட்டியிடும் சிவந்த
அதரங்கள், ஆப்பிள் கன்னம்,
கூர் நாசி, கேள்விக்குறியென
வளைந்த காது!! அவள் முகமன்றி,
மற்றவையெல்லாம், அவுட் ஆஃப் ஃபோகஸ்!!
காதோரம் என்னவோ கேட்டவள்,
என் பதில்லாமல் போகவே,
மெல்ல குட்டியவள் கைகள்
அத்தனை மிருது!!
மிருதுவான கைகளுக்கு இவ்வளவு
வலிமையா!? மண்டை ”வின்”னென்றது!!
கண் விழித்து பார்த்தேன். அருகினில்
நிற்பவளின் முகத்தை!!
ஆ! என் மனைவி!!
பூரிக்கட்டை ஆயுதமேந்தி,
காளி அவதாரம் கொண்டு....,





