Showing posts with label ராமர். Show all posts
Showing posts with label ராமர். Show all posts

Wednesday, May 29, 2019

ராமர் பாலம் உண்மையா?! பொய்யா?! - தெரிந்த கதை.. தெரியாத உண்மை

இன்று நமது தெரிந்த கதை தெரியாத உண்மையில்,இராமர் பாலம் பற்றிய சில உண்மைகளையும், ஆச்சர்யமூட்டும் தகவல்களையும் பார்க்கபோகிறோம்.   இராமர் பாலம் என்று ஒரு பாலம் இருந்ததா?இல்லையா? என பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்ற வேளையில் அது உண்மையா? பொய்யா?என நாம் இங்கே விவாதங்கள் செய்ய இந்தபதிவினை தொடரவில்லை. சில மரபுவழி   கதைகளையும், சில வரலாற்றுரீதியான உண்மைகளையும் அதற்கான ஆதாரங்களையும் மட்டும்தான் இங்க பார்க்க போகிறோம்.
 ராவணன் சீதையை தூக்கி சென்றதினால்தான்  இராமர் பாலம் தோன்ற காரணமாயிருந்தது. அதனால்தான் சீதையை மீட்க ராம, ராவண யுத்தம் தொடங்கியது. சீதாபிராட்டியை  ராவணன் தூக்கி செல்லும்போது ஜடாயு என்ற பறவை ராவணை வழிமறித்தது. ஜடாயுவுக்கு மட்டும் ஏன்? ராமன்மீது அவ்வளவு  பாசம்.  அந்த பாசத்தின் பின்னும்
ஒரு சிறிய கதை உண்டு கருடனை நம் எல்லோருக்கும் தெரியும். அந்த கருடனின் அண்ணன் அருணன்.இந்த அருணனுக்கு இரண்டு மகன்கள், மூத்தவன் சம்பாதி, இளையவன் ஜடாயு, ஒருமுறை சம்பாதிக்கும் ஜடாயுவுக்கும் இடையில் ஒரு போட்டி, இருவரில் யார் உயரப் பறப்பது என்று. ஜடாயு ஆர்வத்தில் சூரியனின் மிக அருகில் செல்ல, அவனைத் தடுத்து சம்பாதி தன் சிறகுகளை விரித்து தன் தமையனை காத்தான்.அப்போது, சூரிய வெப்பத்தால் சம்பாதியின்  சிறகுகள் கருகின. முடிவில் இராம நாமம் ஜெபித்து சம்பாதிக்கு சிறகுகள் மீண்டும் முளைக்கின்றன. ஆகையால்,இருவருக்கும் ராமன்மீது தீராத பக்தி உண்டு
இராவணன் சீதையை தூக்கி செல்லும்போது பராக்கிரமம்மிக்க ஜடாயு இராவணன்மேல் பாய்ந்து தாக்கினான் ராவணன், தன்னுடைய கொடிய வேலை ஜடாயுவின்மீது எறிந்தான் அந்த வேலினால் ஜடாயுவை ஒன்றும் செய்ய முடியவில்லை.மேலும் ஜடாயு இராவணனின் மார்பிலும் தோள்களிலும் தன் சிறகுகளால் ஓங்கி அடித்தான்.அதனால் வலிமை இழந்து கீழே விழுந்து மூர்ச்சையான இராவணன் தலை சாய்த்துக் கிடந்தான். ஜாடயுவை எந்த ஆயுத்தாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆகையால், சிவபெருமான் தனக்கு அளித்த சந்திரகாசம் என்னும் வாளினை கொண்டு ஜடாயுவை வெட்டி வீழ்த்தினான்.இந்த சந்திரகாசம் என்னும் வாளுக்கும்் ஒரு தனிக்கதை உண்டு.

 இராவணன் பலமுறை பலரிடம் தோற்றதினால் துவண்டு போயிருந்தான்.  வாலியிடம் ஒருமுறை நேருக்குநேர் யுத்தத்திலும் கார்த்தவீரியார்ஜுனன் என்பவனிடமும் தோற்று போனான்.மேலும் கைலாயத்தில் சென்று தன்னுடைய பராக்கிரமத்தை காட்டவே சிவபெருமானின் கால் கட்டைவிரலால் அழுந்தபட்டு மலையின் கீழ் நசுங்கி கிடந்தான்.அப்பொழுது, தன் உடம்பிலிருந்து எடுத்த நரம்பின் மூலம் வீணை செய்து அதன் மூலம் கானம் இசைத்து சிவனின் அருளை பெற்றான்.சிவன் அளித்த ஆயுதமே சந்திரகாசம், என்னும் வாள். இந்த சந்திரகாசமானது இந்திரனின் வஜ்ராயுதத்தை விடவும் பலம் பொருந்தியது இந்திரனின் வஜ்ராயுதம் மலைகளைப் பிளக்கும் வல்லமை கொண்டது அதனால் தான் ஜடாயு வீழ்ந்தபோது மலை வீழ்ந்த மாதிரி வீழ்ந்தான் எனவும் சொல்லப்படுவதுண்டு.
ஜடாயு கூறியதை வைத்து சீதா பிராட்டியை தூக்கி சென்ற இலங்கேஸ்வரனான இராவணனை வதம் செய்ய ஸ்ரீ ராமர் தலைமையில், ஹனுமன் அமைத்த பாலமே, இது என்று சொல்லும் இலங்கை வாழ் மக்கள், இதை ஹனுமன், பாலம் என்றும் சொல்வதுண்டு,இந்த இராமர் பாலத்தின் கட்டுமானத்தின் பின் உள்ள பல வியக்கத்தக்க விஷயங்களையும் அதிசயங்களையும் நாசா அண்மையில் தனது செயக்கைக்கோளை பயன்படுத்தி எடுத்த புகைப்படபடங்களை கொண்டு செய்த ஆராய்ச்சியின் மூலமாக தெளிவாக ஒரு செய்தியை வெளியிட்டது. இராமர் பாலம் உண்மைதான் இன்றைய காலகட்டத்தில் உள்ள உயர்தரமான பொறியியல் தொழில்நுட்பங்களை வைத்து கூட இப்படி ஒரு பாலத்தை கட்டமுடியாது,என கூறியது. மேலும் இராமர் பாலம் வெறும் மணல் திட்டுகள் அல்ல,மற்றும் இது வெறும் கற்களை தூக்கி வீசி கட்டியவாறு இல்லை. மேலும்,இந்த பாலம் கடல் அலைகளால் உருவாக்கப்படவில்லை இதன் முனைகள் உறுதியாக  மிக சரியாக திட்டமிட்டு கட்டிமுடிக்கப்பட்ட கட்டுமானம் என தெளிவாக தெரிகிறது என ஒரு அறிக்கயை வெளியிட்டது.
இராமர் பாலம் எனபது வரலாற்று தொன்மைமிக்க பாலம் என்பதற்கு மாற்று கருத்து  இல்லை. இந்தியாவை இலங்கையுடன் இணைக்கும் இந்த ராமர் பாலம் கடலுக்கடியில் இந்தியாவின் இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி கடற்கரையிலிருந்து துவங்கி இலங்கை வரை இராமாயணத்தில் சொல்லப்பட்டுள்ளதை போலவே மிக சரியான இடத்தில் அமைந்திருகிறது.மேலும் திருமறைக்காடு என்னும் வேதாரண்ய கடற்கரையில் பல 'ஸ்ரீ ராமர் பாத ' சிறு கோவில்கள் இதற்கு சான்று. இதனால் இராமாயணம் சொல்வது உண்மைதான்..பாக் நீரிணைப்பில் உள்ள இப்பாலத்தின் மீது மணல் குவிந்துள்ளதால், சில இடங்களில் மட்டும் இப்பாலம் வெளிப்படுகிறது.இவற்றை திட்டு என்றும் குட்டித் தீவு என்றும் மீனவர்கள் அழைக்கின்றனர்.இப்பாலம், கோரல் ரீப் என்றழைக்கப்படும் பவளப்பாறைகளைக் கொண்டது. இப்பவளப்பாறை படுகையில் மீன்கள் மற்றும் கடல்வாழ் ஊயிரினங்கள் பல வசிக்கின்றன.இப்பாலத்தின் மீது இப்போதும் சிலர் நடந்து செல்கின்றனர்.கடலுக்கடியில் மூழ்கியுள்ள பாலத்தின் மீது நடந்து சென்றால் ,முழங்கால் ஆளவுக்கு மட்டும் கடல்நீர் உள்ளது. 5 கி.மீ. தூரம் வரை நடந்தே செல்லலாம் என சொல்லபடுகிறது. 1964 வரை தினசரி வழிபாடு அங்கு நடைபெற்று வந்துள்ளது.ராமர் பாலத்தில் தற்போது தீவுகளாய் விளங்கும் திட்டைகளில் வது திட்டை ராமர் திட்டை’ என்றே அழைக்கப்பட்டு அங்கு மக்கள் வசித்து வந்துள்ளனர்.இன்றும் பாலத்தை கடந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் ஸ்ரீராமர் பாலத்திற்கு நீராட்டல்” எனும் பூஜை செய்துதான் அதைக் கடந்து செல்லுகிறார்கள்.மேலும் படகுகள் கரையிலிருந்து நடுக்கடலுக்கு செல்ல இப்பாலத்தில் சில இடங்களில் உடைப்பை மீனவர்கள் ஏற்படுத்தியுள்ளனர். சிங்களத்தீவினுக்கோர் பாலம் அமைப்போம்சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம் என்று பாரதியார் இப்பாலத்தைப் பற்றி பாடியுள்ளார்.ராமேஸ்வரம் தீவைதமிழகத்துடன் தரை வழியில் இணைக்க பாம்பன் பாலம் கட்டியது கேமன் இந்தியா என்ற நிறுவனம்இந்த ராமர் பாலத்தை பயன்படுத்தி இலங்கைக்கு தரைவழிப் பாலம் அமைக்கலாம் என்று மத்திய அரசுக்கு ஏற்கெனவே ஆலோசனை வழங்கியிருந்தது. 
அகழ்வாராய்ச்சியாளர்களின் கூற்றின் படி, இராம சேது பாலம் கட்டிமுடிக்கப்பட்டு ஏறத்தாழ 17 லட்சம் ஆண்டுகளுக்கு மேல் இருக்கலாம் என கூறப்படுகிறது.கி.பி .1480 வில் கடலில் ஏற்பட்ட ஒரு பிரளயத்தால்  இராம சேது பாலம் அழிந்துவிட்டதாக அறிவியல் கூற்றுகள் கூறுகின்றன. எனவே, 1480 முன்பு வரை இராம சேது பயன்பாட்டில் தான் இருந்திருகிறது. அதை மக்கள் நடப்பதற்கு உபயோகப்படுத்தியுள்ளனர்.இந்துக்காலக்கணக்குப்படி முதல் யுகமான திரேதாயுகத்தின் முடிவில் இராமாயணம் நடைபெற்றது. ராமாயணத்தின் இறுதிக்கட்டத்தில் தான் இந்த ராமர் பாலம் கட்டப்பட்டது. கி மு 1450 வாக்கில்  இலங்கையை ஆண்ட மன்னன் தினமும் குதிரைவீரர்களிடம் இராமேஸ்வரம் இராமநாதசுவாமிக்கு அபிஷேகம் செய்வதற்கு பால் கொடுத்து அனுப்பியுள்ளதாகவும் .அந்த குதிரைவீரர்கள் இந்த ராமர் பாலம் வழியாக இலங்கையிலிருந்து தினமும் இராமேஸ்வரத்திற்கு வந்து சென்றுள்ளதாகவும் சில கல்வெட்டு செய்திகள் கூறுகின்றன அதை சிலர் மரபுவழி செய்தியாகவும் சொல்வதுண்டு.
இந்த இராமர் பாலத்தின் முக்கிய அம்சமே மிதக்கும் கற்கள் பற்றிய செய்திகள்தான். இது நிலன் மற்றும் நளன் இவர்களின் கைங்கரியத்தால் தான் கற்கள் மிதக்கின்றன என சிலர் புராணங்களில் கூறியுள்ளனர். ஆனால், கடந்த முறை சுனாமியின் சீற்றத்தின் போது கடலில் சிலர் அந்த மிதக்கும் கற்களை கண்டதாகவும். அவை இன்னும் கூட இருப்பதாகவும் கூறுகின்றனர். செங்கல்பட்டு புதிய பஸ் நிலையத்திற்கு அருகே ஒரு ராமர் கோவில் இருந்தது அங்கே சுமார் 5 வருடங்களுக்கு முன்பு இதுபோல ராமர் பாலத்தில் இருந்து எடுத்து வந்த ஒருகல்லை காட்சிக்கு வைத்திருந்தனர் அங்கு வைத்திருந்த தண்ணீர் தொட்டியில் அந்த கற்கள் மிதந்ததை நான் பார்த்து இருக்கிறேன்.
இராம சேது பாலம் தனுஷ்கோடியின் பாம்பன் தீவில் தொடங்கி இலங்கையின் மன்னார் தீவு வரை நீள்கிறது. இந்த பகுத்தியில் கடல் மிகவும் ஆழமற்று காணப்படுகிறது. கிட்டதட்ட 1௦ மீட்டர் ஆழம் மட்டுமே உள்ளது இராம சேது பாலத்தினை வடிவமைக்க மிதக்கும் கற்களை பயன்படுத்தியுள்ளனர்.கிட்டத்தட்ட 30 கி.மீ நீளமும், 3 கி.மீ அகலமும் கொண்டது இந்த இராம சேது என கூறப்படுகிறது. இதை வெரும் ஐந்து நாட்களில் ஒரு கோடி வானரங்களின் உதவியோடு, நளன் என்ற தலைமை வானரத்தின் கட்டுமான திட்டத்தின் படி  கட்டிமுடிக்கப்பட்டது, என சொல்லபடுவதுண்டு.இராம சேது இதை பற்றிய குறிப்புகள் கதைகள் நம்முடைய இதிகாசங்களில் இருக்கின்றன. இராவணனின் ஒற்றன் ஷார்துலா என்பவன் அக்கரையில் முகாம் கொண்டிருக்கும் வானர சேனைகளை பார்த்து பயந்து, இராவணனுக்கு எச்சரிக்கை செய்தி ஒன்றை அனுப்பினான். உடனே இராவணன் வானரர்களால் தானே இராமனுக்கு பலம் என அறிந்து தன்னுடைய ராஜ தந்திரங்களை பிரயோகித்தான். சுகா என்ற தன்னுடைய பிரதிநிதியை, சுக்ரீவனிடம் அனுப்பி வாலிக்கும் தனக்கும் நல்ல நட்பு இருந்ததாகவும்,  தான் சுக்ரீவனை உடன் பிறவா சகோதரனாக மதிப்பதாகவும் சொல்லி, தூது அனுப்பினான். மேலும், சுக்ரீவன் இராமனை விட்டுவிட்டு தன் பக்கம் வருமாறும் அழைப்பு விடுத்த ஓலையை வானரர்களின் முகாமிற்கு எடுத்து சென்ற போது காவலர்களால் பிடிக்கப்பட்டு அவையின் முன்னே நிறுத்தபட்டான் சுகா. வானரர்கள் அவனை கொல்ல பாய்ந்தனர் .சுகா தன் உயிருக்குப் பயந்து அலறவே அதைகேட்டு வந்த இராமர் எதிரியின் பிரதிநிதியாக வந்திருப்பவரை துன்புறுத்துவது தவறு எனகூறி அவனை விடுவிக்க சொன்னார்.
சுகா இலங்கைக்கு திரும்ம்பி செல்ல ஆயத்தமான போது அவன் வானரர்களின் பலம் மற்றும் அவர்கள் பாலம் கட்ட எடுக்கும் முயற்சியையும் இராவணனிடம் தெரிவித்துவிட்டால் நம்முடைய பலம் மற்றும் பலவீனம் எதிரிக்கு தெரிந்து விடகூடும்m எனகருதி அவனை கைது செய்து காவலில் வைக்க ஆணையிட்டான் அங்கதான். வானரர்கள் பாலம் கட்டி முடித்து வெற்றிகரமாக கடலை கடந்து அக்கரைக்கு சென்ற பிறகு தான் சுகாவை விடுவித்தனர். இதை விட சுவராஷ்யமான கதை ஒன்று உண்டு பாலம் கட்டுமான பணிகள் தொடங்கியாகிவிட்டன. அபொழுது, கட்டுமான பணிசெய்யும் வானரங்களுக்கு தலைமை நளன் என்னும் வானரம். அவர் ஆஞ்சநேயர் கொடுக்கும் பாறைகளை வலக்கையில் தாங்கி வைத்திருப்பதால் அடுத்தடுத்து ஹனுமன் கொடுக்கும் பாறைகளை, இடக்கையால் வாங்கி பாலத்தில் சேர்த்தார் நளன், அதற்கு ஹனுமன், நான் கொடுக்கும் பாறைகளை அலட்சியமாக இடக்கையில் வாங்குகிறானே இந்த நளன், முதலமைச்சரான என்னை மதிக்கவில்லை, என்று எண்ணி தானே அணையில் பாறைகளை சேர்க்க தொடங்கினார். ஆனால், அந்த பாறைகள் அனைத்தும் கட்டுமானத்திற்குள் சேராமல் கடலில் மூழ்கி விட்டன. இதை தொலைவில் இருந்து பார்த்துகொண்டு இருந்தார் நம் இராமச்சந்திர மூர்த்தி, உடனே ஆஞ்சநேயரை பார்த்து ஆஞ்சநேயா தொழில் துறையில் பெரியவர் சிறியவர் என்று பார்க்க கூடாது, நீ மலைகளை நளன் மூலமாகவே அணையில் சேர்பாயாக" என்றார்.
இதை பார்த்து கொண்டிருந்த இளவல் இலட்சுமணர் இராமரைப் பார்த்து "அண்ணா நளன் கையால் சேர்க்கின்ற பாறைகள் நீரில் அமுந்தாமல் மிதக்கின்றன.ஹனுமான் சேர்க்கின்ற பாறைகள் நீரில் அழுந்தி விடுகின்றன. ஏன்?"என்று கேட்டார்.அதற்க்கு ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி தம்பி இலட்சுமணா, சூர்ய கிரகணம். நடக்கும் கிரகண காலத்தில் தெய்வத்தினை, குறித்து ஜபம் செய்தால் ஒன்றுக்கு ஆயிரமாகப் பலன் உண்டாகும்.அதைவிட தண்ணீரில் மூழ்கி மந்திர ஜபம் செய்தால் ஒன்றுக்கு லட்சமாகப் பலன் அதிகமாகும் அதனால் தான் மாதவேந்திரர் என்ற மகரிஷி,ஒருமுறை, ஒரு கானகத்தினுள் சூர்ய கிரகணம் அன்று நீரில் ழுழுகி தவம் செய்து கொண்டிருந்தார்.அபொழுது இந்த நளன் என்னும் வானரம் குட்டி குரங்காக இருந்தது. குரங்குகளுக்குச் சேட்டை செய்வது எனபது பிடித்தமான ஒன்று. அது நீரில் தவம் செய்து கொண்டிருந்த முனிவர் மீது கற்களை எறிந்து விளையாடி கொண்டிருந்தது முனிவர் தவத்தை விட்டு எழுந்து வந்து குரங்குகளை விரட்டி விட்டு மீண்டும் நீரில் முழுகி தவம் செய்தார்.
மாதவேந்திரர் பலமுறை அந்த குட்டி குரங்கை விரட்டியும் நளன் என்ற அந்த குட்டி குரங்கு கல்லை விட்டு எறிந்து கொண்டே தான் இருந்தது, ஜபம் செய்யும் பொழுது கோபம் கொண்டு சாபம் விட்டால் ஜபசக்தி குறைந்து விடும். அதனால் அம்முனிவர் குரங்குக்கு சாபம் கொடுக்காமல், "இக்குரங்கு எரியும் கற்கள் தண்ணீருக்குள் மூழுகாமல் மிதக்க கடவன" என்று கூறிக்கொண்டு தண்ணீருக்குள் நின்று கொண்டு ஜபம்செய்ய தொடங்கினார். குரங்கு தான் எறியும் கற்கள் முழுகாமல் மிதப்பதினால் விளையாட்டின் ஆர்வம் இல்லாமல், அங்கிருந்து சென்று விட்டது. அந்த ஜபத்தின் நன்மையால் தான், இந்த நளன் இடுகிற கற்கள் தண்ணீர்ல் அழுந்தாமல் மிதக்கின்றன என்றரர், ஸ்ரீ ராமர் .அதனால் நளன் மூலமாக தான் நாம் இந்த அணையை கட்ட வேண்டும் என ஸ்ரீ ராமச்சதிர மூர்த்தி லட்சுமணிடம் கூறினார். இவ்வாறாக வானரங்கள் இரவு பகலாக பணி செய்து ஐந்து நாட்களில் அணையை கட்டி முடித்தன.அந்த அணையின் அழகைக் கண்டு இராமர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அதற்கு பரிசாக நளனை கௌரவிக்கும் விதமாக வருணபகவான்  தனக்கு முன் கொடுத்த நவரத்தின மாலையை நளனுக்குப் பரிசாக வழங்கினார்.
இந்த இராம சேது பாலத்தை ஆதாம் பாலம் எனவும் சிலர் குறிப்பிடுகின்றனர். அதற்கு பல்வேறு கதைகள் சொல்லபடுகிறது. இலங்கையில் இறக்கி விடப்பட்ட உலகின் முதல் மனிதரான ஆதாம், இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு வர இப்பாலத்தைப் பயன்படுத்தியாகவும்,ஆதாம், ஏவாளுக்கு பிறந்த குழந்தைகளான, ஆபில், ஹாபில் ஆகிய இருவரில் ஓருவரின் சமாதி இராமேஸ்வரம் ரயில் நிலையம் அருகே உள்ளது எனவும்.ஒரு இஸ்லாமிய குடும்பத்தினரால் பராமரிக்கப்படும் ஹாபில் தர்ஹாவுக்கு செல்வோரிடம், ஆதம் பாலம் என்பது ஆதாம் நடந்த உலகின் முதற் பாலம் ஏன்று விவரிக்கின்றனர்.ஆகவே இப்பாலத்துக்கு ஆதம் பாலம் என பெயரிடப்பட்டதாவும் கதைகள் உண்டு. ஆனால், உண்மை என்னவென்று அடுத்துவரும் ஆராய்ச்சி கட்டுரைகள்  மூலமாக பார்க்கலாம். மேலும் இதிலும் சிறப்பு என்னவென்றால் புத்தர் இந்த பாலத்தின் மீது நடந்து சென்றதாகவும் வரலாறு உண்டு.
இந்த ராமர் பாலம் எவ்வாறு ஆதம் பாலம் என மாற்றி அழைக்கப்பட்டது என பார்ர்க்கலாம். உலக புகழ் பெற்ற இந்திய சரித்திர ஆராய்ச்சியாளர் டாக்டர் எஸ் கல்யாணராமன் இதுபற்றி தெளிவாக விளக்கியுள்ளார்.ஆங்கிலேயர் காலத்தில் எடுக்க பட்ட ஆய்வுகள், அறிக்கையாக சமர்பிக்கப்பட்டன. அதில் 1747 ல்  நெதர்லாந்த் நாட்டில் உள்ள ஒரு அறிக்கையில் தனுஷ்கோடிக்கு முன்னே ஒரு கோவில் இருந்ததாகவும் தெளிவாக இந்த இராமர் பாலத்தை, இராமர் பிரிட்ஜ் என்றே குரிபிடுகின்றனர். அவர்கர் (டச்சுகாரர்கள் )அந்த சமயத்தில் இந்தோனேஷியா தீவுகளையும் ஆக்கிரமித்து கொண்டு இருந்தார்கள்.
மேலும் 1788 ல் ஆஸ்திரேலியாவில் இருந்து வந்த ஜோசப் பார்க்ஸ் என்ற   தாவரவியல் ஆராய்ச்சியாளர் இராமர் கோவிலை பார்த்து, இராமர் கோவில் என்று எழுதி தனுஷ்கோடியையும் தலைமன்னாரையும் இணைக்க கூடிய அந்த பாலத்திற்கு இராமர் பாலம் என தெளிவாக விளக்கியுள்ளார்.அந்த வரைபடம் முகலாய சக்ரவர்த்திகளின் ஹிந்துஸ்தான் வரைபடங்கள் (Hindhusthaan  Map of Mohal Empaires ) என்ற நூலில் 5 X  6 அடி வரைபடமாக தஞ்சை சரஸ்வதி மகாலில் இன்னமும் இருக்கிறது.
இது பிரிடிஷ்காரர்கள் காலத்தில் எடுக்கப்பட்ட ஆய்வு அறிக்கை கி பி 1799 ல எடுக்கப்பட்டது அவற்றில் கூட இராமர் பிரிஜ் .இராமர் பிரிஜ் இ ராமர் பிரிஜ் என்றுதான் வரிக்கு வரி சொல்லப்பட்டு இருக்கிறது. இவ்வறிக்கை மேலும் சிங்கள தீவிற்கும் பாரதத்திற்கும் நடுவில் இருக்க கூடிய ஒரு பாலம் இதில் நடந்து கொண்டு இருக்கிறார்கள், இது நடை பாதை,இங்கு மக்களும் இதில் இருக்கும் திட்டுகளில் வாழ்கிறார்கள், என்று கூறுகிறது.ஆனால், அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கத்தால் முதல் புவியல் ஜெனரலாக நியமிக்கப்பட்ட ஜேம்ஸ் ரன்னல் என்னும் ஆங்கிலேயே அதிகாரி இந்த இராமர் பாலத்தை ஆடம் பிரிட்ஜ், என 1804 ம் ஆண்டு மாற்றி எழுதினார். அதிலிருந்து 1804 க்கு பிறகு வந்த வரைபடங்களில், இராமர் பாலம் ஆதாம் பாலமாக மாற்றி எழுதபட்டது.
இதைவிட வேறு நிறைய ஆதாரங்களும் வரைபடங்களும் இது இராம சேது என்று அழைக்கபட்டதிற்கு சாட்சிகளாக இருகின்றன நம்முடைய இதிகாசங்களில் சொல்லப்பட்ட கருத்துக்களை எடுத்.துக்கொண்டு சிக்காகோ பல்கலைகழகத்தில்( university of chicago)  ஸ்வார்ட்பெர்க்(Schwartzberg ) என்பவர் தெற்கு ஆசியா வரைபடங்கள் என கி.பி. 8 ம் நூற்றாண்டு முதல் 12 ம் நூற்றாண்டு வரை உள்ள நூற்றுக்கணக்கான வரைபடங்கள் தயாரித்துள்ளார். அதில் கூட அவர் சில குறிப்புகளை மேற்கோள் காட்டி, இந்த பாலத்தை சேது என குறிப்பிடுவதாக சொல்லி இருக்கிறார். இபொழுது அதை ஆதாம் பாலம் என்றும் குறிபிடுவார்கள் எனவும் தெளிவாக குறிபிட்டுள்ளார். இராமேஸ்வரத்திற்கும் மகாதீர்தத்திர்க்கும் நடுவிலே, இராமேஸ்வரத்தில் ஒரு சிவன் கோவில், மகா தீர்த்தத்தில் ஒரு சிவன் கோவில், இடையில் ஒரு சிவன்கோவில் உண்டு எனவும் குறிபிட்டுள்ளார். எப்படி இராமாயணத்தில் குறிபிடபட்டுள்ளதோ அதேபோல சிவன் கோவில் ஒருபக்கத்தில் இருக்கிறது. மறுபக்கத்திலும் சிவன்கோவில் இருக்கிறது.நடுவிலும் சிவன் கோவில் இருந்திருக்கவேண்டும் அதை ஆராயபடவெண்டும் எனவும் குறிபிட்டுள்ளார்.
அதேபோல அல்-பிருனி (Abū al-Rayhān Muhammad ibn Ahmad al-Bīrūn known as Al-Biruni )என்ற இஸ்லாம் அறிஞர், இவரது காலம் 4 அல்லது 5 செப்டம்பர் 973 முதல் 13 டிசம்பர் 1048 வரை, இவர் கூட இந்த இராமர் பாலத்தை பற்றி குறிபிடுகிறார். அதை சேது பந்து என குறிபிடுகிறார். இராமேஸ்வரத்திர்கும், அஹ்னா என்ற இடத்தையும் (ஸ்ரீலங்காவில் இருக்க கூடிய ஒரு கிராமத்தின் பெயர்) அதை இரமேஸ்வரத்தோடு இணைக்க கூடிய பாலத்தின் பெயர் சேதுபந்து என குறிபிடுகிறார். மேலே இருக்கும் வரைபடத்தை தெளிவாக பார்த்தல் இது புரியும்.
புராணங்களில் பண்ண்டிய மன்னர்களது காலங்களில், குமரி கண்டம் இருந்த போது, பாண்டிய நாட்டையும் சிங்கள நாட்டையும் இணைப்பது சேதுகா எனப்படும் இந்த ராம சேதுவாகும்.
நமது வேதங்களில் குரிபிடபட்டுள்ளதை போல ,தாமிரபரணி கபாடபுரத்தில் இருந்து ஸ்ரீ லங்காவுக்கு செல்லும் வழி இந்த இராமர் சேது வழியாக செல்லும் என குறிபிடப்பட்டுள்ளது.
அதேபோல 1903 ள் மெட்ராஸ் பிரசிடென்சி அட்மினிஸ்ட்ரேட்டிவ் அறிக்கையில் இதைபற்றி சொல்லி இருக்கிறார்கள்.ஆதாம் பாலம் என்று குறிபிடுவது இராமர் பாலம் என்றும் சொல்லபடுகிறது எனவும் 1480 வரையிலும் பாரத்தையும் சிங்களத்தையும் இணைத்து இது ஒரு பாலமாக இருந்தது அந்தபாலம் அபொழுது ஏற்பட்ட ஒரு கடல்சீற்றத்தினால் பாதிக்கப்பட்டு தண்ணீர் உள்ளே புகுந்து தனிதனி திட்டுகளாக மாறிவிட்டன என்றும்,அப்படி தண்ணீருக்குள் மூழ்கிய பாலமானது தண்ணீருக்கடியில் 4 அடியில் இருந்து 10 அடிவரை மூழ்கியது எனவும் சொல்லப்பட்டது..மேலும், 1744 ல அலெக்சாண்டர் ஹமில்டன் என்பவர் நான் சிங்கள நாட்டிற்கு இந்த பாலத்தின் வழியாக நடந்து சென்றேன் என்று எழுதி இருக்கிறார்.
நம் புராணங்களில் நம் இதிகாசங்களில் இராமர் பாலம் பற்றிய குறிப்புகள் நிறைய இடங்களில் சொல்லபடுகிறது. இராமாயணத்தில் வால்மீகி சொல்கிறார், மகாபாரதத்தில் வியாசர் சொல்லுகிறார், மேலும் இரண்டாம் புரவரசேனா என்னும் ராஜா (கி பி 550-600), அவர் சேது பந்தனம் என்ற காவியமே எழுதி இருக்கிறார்.அதேபோல தாமோதர சேனா சேதுபந்தன காவியம் என்று ஒன்றையும் எழுதி இருக்கிறார். எல்லா புராணங்களிலும் இந்த ராம சேது என்னும் இராமர் பாலம் ஸ்ரீராமனால் கட்டப்பட்டது அது ஒரு புண்ணியஸ்தலம் அங்கு சென்று நீராடினால் புண்ணியம் கிடைக்கும் என்றும் சொல்லப்பட்டு இருக்கிறது .

இதை விஞ்னான பூர்வமாக நிருபித்தும் உள்ளனர்.  டாக்டர் பத்ரிநாராயணன் என்பவர் ஒரு ஜியாலோஜிஸ்ட் தேசிய கடல் தொழில்நுட்ப கழகம்  சென்னை. (National Institute of Ocean Technology)அவர் 2007 மே 12 ம் தியதி நடந்த ஒரு கருத்தரங்கில் (seminar ) ஒரு ஆய்வு அறிக்கையை (Presentation)சமர்பித்தார். அவர்களுடைய குழு இராம சேதுவில் 10 இடங்களில் ஆழ்துளை கிணறுகள் மாதிரி வடிவங்களில் துளையிட்டுள்ளனர். அதன் மாதிரிகளை எடுத்து பார்த்தபோது அற்புதம்மான ஒரு உண்மை புலப்பட்டுள்ளது சமுதிரதிற்க்கு அடியில் மணல் திடல், அதற்குமேல் கற்கள், அதற்குமேல் மணல்திடல் ,அதற்குமேல் கற்கள், என்னமாதிரி கற்கள் என்றால் Coral rocks  பவள பாறைகள் கடலில் கிடைக்கும் சங்கு அவை கல்லாக மாறியிருக்கும்  அவை கடலில் மிதக்கும் ஆனாலும் எடைகளையும் தாங்கும் அந்தமாதிரியான கற்களை கொண்டு இதை நிர்மாணித்திருகிறார்கள்,என்று கண்டுபிடித்து ஆய்வு அறிக்கையை  தெளிவாக சமர்ப்பித்துள்ளனர்.
இந்த பாலம் திட்டமிடப்பட்டு  செய்யபட்டது  ,என்று அந்த ஆய்வின் மூலம் தெரியபடுதபட்டுள்ளது .இந்த அமைப்பில் பவளப்பாறைகள் இந்த இடத்தில இருக்க வாய்ப்புகள் இல்லை எனவும்,  பவளப்பாறைகள் இந்தமாதிரி, அமைப்பில் மாற வாய்ப்பு இல்லை எனவும்,அவை வெளியில் இருந்து கொண்டு வந்திருக்கவேண்டும் என்றும் இதற்கான ஆதாரம் இராமேஸ்வரத்திலும் சரி, மகா தீர்த்தத்திலும் சரி,  ஸ்ரீ லங்கா  பகுதிகளிலும் சரி, கற்களால் ஆன ஆயுதங்களை உபயோக படுத்தியதற்கான தடயங்கள் கிடைத்துள்ளன. அந்த ஆயுதங்களினால் பவளபாறைகள் செதுக்கபட்டிருக்க வேண்டும் எனவும் தெரிய வந்துள்ளது,என ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர் .

மார்ச் 2007 ல நம்முடைய அரசாங்கமும் இதைபற்றிய தெளிவான அறிக்கைகளை கொடுத்துள்ளது. பதிவின் நீளம் கருதி அந்த  படத்தை இடமுடியவில்லை. மேலும், சில கல்வெட்டுகளின் மூலம், கிருஷ்ண தேவராயர் 1508 ல் எழுதிய சாசனத்தில் என்னுடைய சாம்ராஜ்யம் இராமர் சேது அதாவது இராமர் பாலம் வரையிலும் இருந்கிறது .நான் மேருவிர்கும் சென்று வந்திருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்.

சோழ மன்னர்களில் ஒருவரான பராந்தக சோழன் 1000 ம் வருடங்களுக்கு முன்னால் வேலாம்சேரி செப்பு  தகட்டில், அவர் சேது தீர்த்தத்திற்கு சென்றதும், துலாபாரம் கொடுத்ததையும் பொறித்துள்ளார். இதைதவிர ஆயிரகணக்கான நாணயங்கள் கிடைத்துள்ளன. இவற்றிற்கு சேது காசுகள் என்றும் ஆரிய சக்ரவர்த்தி காசுகள் என்றும் அழைக்கப்பட்டன. இதில் சேது என்று அழகாக தமிழில் எழுதபட்டு இருக்கிறது  இதற்க்கு மேலும் நிறைய ஆதராங்கள் இருகின்றன அவற்றை எல்லாம் இங்கே ஆதாரத்துடன் விளக்க ஆரம்பித்தால் பிறகு நம்முடைய பதிவு ஹனுமன் வால் போல் நீண்டு கொண்டுதான் செல்லும். இவ்வுவளவு, ஆதாரங்களையும் படிக்காமல் ஒருவர் இராமர் பாலம் ஒன்று இல்லவே இல்லை என்று சொன்னால் அவர்கள் வரலாற்றை படிக்கவில்லை வரலாற்றை புரிந்து கொள்ளவில்லை என்றுதான் அர்த்தம். மீண்டும் சுவாரஸ்யமான கதையுடன் அடுத்தவாரம் தெரிந்த கதை தெரியாத உண்மையில் பார்க்கலாம்..
மீள்பதிவு..
 நன்றியுடன்,
ராஜி

Friday, December 07, 2018

சீதாஹரன்-லட்சுமணன் ரேகா(கை) -ஷீரடி பயணம்

நாம  பஞ்சவடியையும், அதைச்சுத்தி நிறைய கோவில்களை பார்த்துட்டோம். இன்னும் சில இடங்கள் மீதி இருக்கு.  தகவலுக்காக நாங்க தேடித்தேடி அலைஞ்சமாதிரி புதுசா போகும் யாரும் அவச்தைப்படக்கூடாதுன்னுதான் இந்த பதிவு. போனவாரம் காலாராம் மந்திர், லட்சுமணன் சேஷ்நாக் அவதார் பத்தி பார்த்துட்டோம். இந்தவாரம் சீதாஹரன்ங்கிற இடத்திலிருந்து நம்ம பயணத்தை தொடங்கப்போறோம். மாரீசன் மாயமான் உருக்கொண்டு ராம, லட்சுமணரை காட்டுக்குள் வெகுதூரம் திசைமாற்றி இழுத்துச்சென்று அன்னை சீதாதேவி கடத்தப்பட்ட சம்பவம் நடந்த இடம் இதுதான்னு  சொல்லப்படுது .
காட்டுக்குள் சென்ற இராமனை மாரீசன் போக்குக்காட்டி நேரத்தை கடத்த... அண்ணன் சென்று வெகுநேரமானதால் கவலைகொண்ட இளவல் சீதாதேவியின் ஆணைப்படி அண்ணனை தேடி செல்கிறான். சீதாதேவியின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் அன்னை சீதாதேவி இருக்கும் குடிலை சுற்றி ஒரு பாதுகாப்பு கோட்டை கிழித்து, எக்காரணங்கொண்டும் இந்த கோட்டை தாண்டவேண்டாம் என எச்சரித்துவிட்டு அண்ணனை தேடி இளவல் சென்றான் .
இராமர், சீதை, லட்சுமணன் இவர்கள் மூவரைத்தவிர யார் இந்த பாதுகாப்பு கோட்டை தாண்டினாலும், அக்னிஜுவாலை அவர்களை அழிக்குமாறு ஏற்பாடு ஒன்றினை செய்துவிட்டு லட்சுமணன் சென்றதும், இராவணன் பிட்சை எடுக்கும் சந்நியாசி மாதிரி வேடந்தரித்து சீதாப்பிராட்டியாரிடம் யாசகம் கேட்கிறான். யாசகம் கொடுப்பவர், வாங்குபவரிடையே எந்த தடையோ அல்லது அரணோ இருக்கக்கூடாதெனச்சொல்லி, சீதாதேவியை கோட்டைத்தாண்டி வந்து பிட்சை போடும்படி சொல்கிறான். எந்தவித சந்தேகமுமில்லாமல், பிட்சை போட சீதாப்பிராட்டியார் கோட்டை தாண்டுகிறாள். உடனே, சீதாதேவியை இராவணன் அபகரித்து செல்கிறான். இதுமாதிரியான  சீதாதேவியை இராவணன் கடத்தப்பட்ட சம்பவத்தை நினைவுக்கூறும்  பல சிலைகளை இங்க வச்சிருக்காங்க .
லட்சுமணன் கோடு கிழித்த நிகழ்ச்சி ஆனந்த இராமாணயத்தில் கூறப்பட்டுள்ளது: அதாவது சீதை ஆசைப்பட்டு கேட்ட, புள்ளிமானை துரத்திக்கொண்டு வெகுதூரம் சென்ற ராமரின் குரல்போல ஓர் குரல் கேட்டதும், லட்சுமணனை அவ்விடத்திற்கு சென்று பார்த்து வருமாறு சீதை அனுப்புகிறாள். ஆனால் லெக்ஷ்மணன் அது ராமரின் குரல் இல்லையென லட்சுமணன் எவ்வளவோ எடுத்துக்கூறியும், அதைக்கேட்காமல் சீதை அவனை கடிந்து பேசுகிறாள், அதனால் ராமனைத்தேடி புறப்பட லட்சுமணன் ஆயத்தமானான். தன்னுடைய வில்லின் நுனியினால், தரையில் மூன்று கோடுகளைக் கிழித்து, “எக்காரணங்கொண்டும் இக்கோடுகளைத்தாண்ட வேண்டாமென சீதையிடம் கூறிச்செல்கிறான். இராவணன் சந்நியாசி வேடத்தில் வந்தபோது, அவனுக்கு பிட்சையிட சீதை அந்தக்கோட்டை தாண்டியபோதுதான், இராவணனால் கடத்தப்பட்டாள் என்று ஆனந்த ராமாயணம் கூறுகிறது. வால்மீகி, கம்பர், துளசிதாசர் ஆகிய மூவரில் ஒருவர்கூட இதுபற்றி எதுவும் சொல்லவில்லை. ஆனந்த ராமாயணத்தில்தான் லட்சுமணன் கோடு கிழித்த நிகழ்ச்சி சொல்லப்படுது. இந்த முரண்பாட்டை அசைப்போட்டவாறே லட்சுமணன் ரேகா(கை)வுக்கு அருகில் சென்றோம்.
எங்களுக்கு ஒரே அதிர்ச்சி... அங்கிருப்பதுதான் லட்சுமணன் வரைந்த கோடென்றால் இராம, லட்சுமணர் எவ்வளவு பெரிய உருவமாக இருந்திருப்பார்கள். மேலிருக்கும் படத்திலிருக்கும் ஒரு வாய்க்கால் மாதிரியான அமைப்பே லட்சுமணன்ரேகா(கை).  லட்சுமணன் கிழிச்ச கோடுன்னு சொல்லி கூட்டிட்டு வந்து வாய்க்காலை காட்டுறாங்களேன்னு ஆச்சர்யமும், நம்பிக்கையின்மையும் ஒருசேர ஆட்கொண்டது. அந்த வாய்க்காலை போன்ற இடத்தினுள் ஒரு சிறிய குடில் ஒன்னு வச்சிருக்காங்க.  லட்சுமணன்ரேகா(கை) என்பது  ஒரு கோடில்லை. அந்தக்குடிலில் சீதாதேவியின் சிறிய சிலை ஒன்னும் இருக்குது. குறுங்கனவாயைத்தாண்டி இராவணனின் மண்ணாலான சுதைச்சிற்பம் ஒன்னு இருக்கு. 
அதுலாம் பார்த்துட்டு மிகமுக்கியமான இடமான பஞ்சவடியின் மிகவும் சிறப்பு பெற்ற  தபோவனத்திற்கு வந்து சேர்ந்தோம். இந்த தண்டகாருண்ய வனத்தின் மகிமைகளைப் பற்றி நமது கடந்த பதிவுகளில் பார்த்துட்டோம். கபிலமுனிவர் தவம் செய்த இந்த இடத்தின் மகிமையை சொல்லவும் வேண்டுமா?! இந்த இடத்தில்தான் கபில -கோதாவரி நதிகள் சங்கமம் ஆகுது. இங்க, மிகவும் சிறப்புமிக்க  பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வர குண்ட் இருக்குது. இது, சீதாதேவி நீராட பயன்படுத்திய குண்டம்ன்னும், அதேசமயம் சீதாதேவி அக்னிப் பிரவேசம் செய்த இடம்ன்னும் சொல்றாங்க .
இங்க நமக்கு விவரித்து சொல்ல அந்தந்த குடிலுக்கு பக்கத்துல சில பண்டிட்கள் இருக்காங்க. ஆனா, மராத்தி, இந்திலதான் சொல்றாங்க. கொஞ்சநாளாய் வடநாட்டில் சுத்தியதால் இந்தி இந்தி தோடா தோடா மாலும். அதனால்,  அவங்க சொல்லுறது தெளிவா புரியுது. அவர் சொன்னது இந்த இடத்தில்தான் சீதாதேவி குளிக்க பயன்ப்படுத்திய குண்டம் இருக்குதுன்னு  இறங்கி காட்டினார். ஒரு ஆள் உள்ள போனால்  உள்ள ஆள் இருப்பது வெளிய இருக்கவுங்களுக்கு தெரியவே தெரியாது. இங்க ராமர், லட்சுமணர், சீதாதேவி என தனித்தனியாய் எல்லோருக்கும்  குண்டங்கள் இருந்ததாகவும், இங்கதான் சூர்ப்பனகையின் மூக்கை அறுத்ததாகவும், பிற்காலத்தில் நாம நம்ம பதிவில் தரிசித்த அந்த இடத்தில் கொண்டுபோய் லட்சுமணன் கோவிலை உருவாக்கிவிட்டனரென்றும் கூறினார். அடுத்து சீதாமாதா அக்னிகுண்ட் என இன்னொரு இடத்தை காட்டினார் .
இந்த இடத்தில்தான் சீதாதேவி அக்னிபிரவேசம் செய்தார் எனக்கூறினார். இங்க,  பிரம்மா, விஷ்ணு, மகேஷ் தின்குண்ட் என்று சில இடங்களையும் காட்டினார் அவர் சொன்னதுலாம் படா, படாவா இருந்ததால் எனக்கு அதன் பொருள்  சரியாக விளங்கலை(ஸ்ஸ்ஸ் அபா! எப்படிலாம் சமாளிக்க வேண்டியிருக்கு). தெரிந்தவர்கள் இங்கே பதிவிடலாம். கோதாவரி நதி மிகவும் வேகமா ஓடுது.  இதுவும் சுற்றுலா தலமாக இருப்பதால் இங்கும் ,வழக்கமான ஜூஸ் கடைகளும், குதிரை ஏற்றம், ஊசி பாசி மணி மாலை கடைகளும்  இருக்கு. 
வாழ்க்கையில் சந்தர்ப்பம் கிடைத்தால் ஒவ்வொருவரும் சென்று பார்க்கவேண்டிய இடங்கள் இவை. இராமாயண காவியத்தை நாம் கதைகளிலும், டிவியிலும் மட்டுமே பார்த்திருக்கோம்.  ஆனா அந்தந்த பாத்திரங்கள் நேரடியாக வாழ்ந்த இடங்களை நாமும் பார்க்க கொடுப்பினை இருந்ததோடு அவர்கள் காலடிப்பட்ட இடங்களில் நாமும் நிற்கின்றோம் என நினைக்கும்போது அந்த இறைவனுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும்.  மாலைநேரம் நெருங்கி மெல்ல இருட்ட தொடங்கியது. தபோவனத்தை விட்டு சூரியன் மெல்ல மெல்ல மறைந்துகொண்டிருந்தான் .
நேரமின்மையால் ஸ்ரீராம் பரண்குடிக்கு செல்லமுடியாமல் போனது அடுத்தமுறை இங்க வரனும். விடுபட்ட இடங்களை தரிசித்து அதுபத்தி  விரிவா எழுதனும். அதற்கு அந்த இறைவன்தான் துணைபுரியவேண்டுமென வேண்டுகோள் வைத்து நாங்களும் ,அடுத்த கோவிலுக்கு பயணமானோம்....
இந்தக்கோவில் லட்சுமிநாராயண் மந்திர். இராமாயணத்திற்கும் இந்த இடத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை. இது பிற்காலத்தில் தோன்றியதென சொல்லப்படுது. இந்தக்கோவில் மிகப்பெரிய வளாகத்தை கொண்டுள்ளது இங்க மார்பிள் கற்களான லட்சுமிநாராயணன், விநாயகர், அனுமான், சிவன் இராம லட்சுமணர்,  சீதாதேவியின் சிலாரூபங்கள் இருக்கு. இங்க நிறைய பசுக்கள் பராமரிக்கப்படுகின்றன. நாம் நமது கையால் அவைகளுக்கு உணவு வழங்கலாமாம்!! ஆனா  மாலை மங்கி இருள் சூழந்ததால் அங்கயும்  போகமுடியலை. கோவில் வளாகம் மிகதூய்மையாகவும், அழகாகவும் பராமரிக்கப்படுது.  விருப்பம் இருக்கவுங்க பசுக்களுக்கும், கோவில் அன்னதானத்திற்கும் டொனேஷன் கொடுக்கலாம். எங்களோடு வந்தவங்களும் அப்படி கொடுத்தாங்க. ஒருவழியாக அன்றைய தரிசனம் முடிச்சாச்சுது.  இனி அடுத்தவாரம் மிகவும் பிரசித்திப்பெற்ற 12  ஜோதிர்லிங்கங்களுள் ஒன்றான திரியம்பகேஸ்வரர் கோவிலிலிருந்து சந்திக்கலாம் .
நட்புடன்
ராஜி 

Friday, November 30, 2018

சூர்ப்பனகையின் மூக்கை லட்சுமணன் அறுத்த இடம், காலாராம் மந்திர் - ஷீரடி பயணம்

அப்பாவின் உடல்நிலை, பண்டிகைன்னு வந்த  காரணத்தால் தடைப்பட்டுப்போன தொடர்பதிவான  ஷீரடி பயணத்தை தொடரலாம் வாங்க!! பஞ்சவடி யாத்திரையில் நாம இப்ப பார்க்கபோறது பழமை வாய்ந்த காலாராம் மந்திர். இங்கிருக்கும் இராமர் இலட்சுமணன் மற்றும் சீதாதேவி, அனுமன் ஆகியோரது சிலைகள் மற்றும் கோவில் எல்லாமே கருப்பு மார்பிள் கற்களால் கட்டப்பட்டவை. நாங்கள் சென்ற தினம் ஏதோ விசேஷ தினம் போல!   எல்லா இடத்திலும் கூட்டம் கூட்டமா வரிசையில் போய்க்கிட்டு இருந்தாங்க. இந்த கோவிலை பத்தி சொல்லணும்ன்னா கோதாவரி கரையில் அமைந்துள்ள ஒரு பழமையான ஆலயம். நாசிக்கிலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் இருக்குது.  இந்த கோவிலை சர்தார்  ராணாராவ்  தாத்தா என்பவர்தான் 1782-ல்  முதலில் புணரமைத்து விரிவாக கட்டினார்ன்னு சொல்லப்படுது. அதற்கு காரணம் ஒருமுறை இராமர் இவருடைய கனவில் வந்து,  தான் கோதாவரி ஆற்றில் மூழ்கி இருப்பதாகவும் தன்னை வெளியில் எடுத்து கோவிலை விரிவாக்கம் செய் என சொன்னதாகவும் சொல்லப்படுது. பின்னர் அவர் சிலையை கண்டெடுத்து கோவிலை பெரியதாக கட்டினார் எனச் சொல்லப்படுது.
மேலும் ஒரு சிலரோ, நாதசைவ முனிவர்கள் பழங்காலத்தில் இங்கு தங்கிருந்தாக சொல்லப்படுகிறது. நாத சைவம்  என்பது சித்த சித்தாந்தம் என்றும் அழைக்கப்படும்  சைவ சமயத்தின் பிரிவுகளில் ஒன்று. நாஸ்தம், கோரக்க பந்தம், சித்தயோகி செம்பெருந்தாயம், ஆதிநாத செம்பெருந்தாயம், நாத மதம், சித்த மார்க்கம் என்றும் இதை சொல்லுவார்கள். கோரக்கர், மச்சேந்திரர் ஆகியோர் இந்த குரு பரம்பரையில் இருக்கிறார்கள். இது திருக்கயிலையிலிருந்து நந்திநாதரிடம் கற்ற எட்டுச் சீடர்களின் வழியே பரப்பப்பட்ட மூலசைவத்தின் இன்னொரு வடிவம் என்றும் சொல்லப்படுது. ஆதிநாதனான சிவனை குருவாகக்கொண்டுதான் சித்தர்கள் வந்தார்கள் அவர்கள் மூலமாக வந்ததுதான் இந்த நாத சைவஞானம் எனவும்,  இறுதியில் கோரக்கர் மற்றும் மச்சேந்திரர் ஆகியோர் மூலம், நவநாத சித்தர்கள் எனும் ஒன்பதுபேரால்  உலகுக்கு சொல்லப்பட்டதாக நம்பப்படுது .
எதுக்கு இதுலாம் சொல்றேன்னா  முக்திதாம் கோவிலில் பார்த்த நவசித்தர்கள் சிலைகளான மச்சேந்திர நாதர், கோரக்க நாதர், சலந்தர நாதர், இரேவண நாதர், நாகநாதர், ககினிநாதர், கனிபநாதர், சரபதிநாதர் என்னும் இந்த ஒன்பது பேர்கள்தான். நம்மூரில் பாம்பாட்டி சித்தர், போகன், காகபுஜண்டர் மாதிரி வடஇந்தியாவில் இவர்கள் பிரபலமான சித்தர்கள். கோரக்கரையும் மச்சமுனிவரையும், "மகாசித்தர்"ன்ற பெயரில் திபெத்திய மற்றும் பௌத்தர்கள் வணங்குகின்றனர் என்பதும் கவனிக்கவேண்டிய விஷயம். இந்த சித்த புருஷர்கள் அருணா-வருணா நதியிலிருந்து இங்கிருக்கும் இராம, லட்சுமண, சீதாதேவியரின் சிலைகளை கண்டெடுத்ததாகவும், முன்பு இது மரத்திலான கோவிலாக இருந்ததாகவும் அங்க வைத்து வழிபட்டதாகவும் சொல்லப்படுது. பின்னர் 1780ம் ஆண்டு மாதவ்ராவ் என்னும் பேஷ்வாவின் தாயாரான கோபக்காபாய் அந்த காலத்தின் மதிப்புபடி 23 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பித்ததாக சொல்லப்படுது.
இந்த கோவில் முழுக்க முழுக்க கருப்பு மார்பிள் கற்களால் கட்டப்பட்டு பார்க்க ரொம்ப அழகா இருக்குது. இந்த கோவிலை கட்ட உபயோகப்படுத்தப்பட்ட கற்களை பாலில் கொதிக்கவைத்து அதன் உறுதித்தன்மையை பரிசோதித்து கட்டினார்களாம்!! இந்தக் கோவில் சுமார் 75 மீ நீளமும், 34 மீ அகலமும், 70 மீ உயரமும் கொண்டதாக இருக்குது.  மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மாதிரி நான்கு திசைகளுக்கும் நான்கு வாசல்கள் இருக்கு. கோபுர கலசங்கள் தங்கத்தால் ஆனவைன்னு  சொல்றாங்க. இங்க இருக்கும் முன்புற மண்டபம் 12 அடி உயரம் உள்ள 40 தூண்களால் அமைக்கப்பட்டிருக்கு. இங்க இராமநவமி மிகவும் விசேஷமாக கொண்டப்படும் .
இந்த கோவிலின் இன்னொரு  விசேஷம் என்னன்னா, சத்யயுகத்தில் ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி வனவாசம் செய்த 14 வருடங்களில் இரண்டரை வருடம் இந்த தண்டகாரண்ய வனத்தில் இப்ப இந்த காலாராம் கோவில்  இருக்கும் இடத்தில்தான் குடிலிட்டு வசித்து வந்ததா சொல்றாங்க. வால்மீகி இராமாயணத்தில் இந்த நாசிக் பகுதியை பற்றி குறிப்பிடும்போது, மிகவும் அமைதியான அனைத்து விலங்குகளும் வசித்துவந்த ஒரு அற்புதமான வனமாக இது  இருந்திருக்கு. இங்க வசித்து வந்த அனைத்து உயிர்களின் தேவைகளையும் இந்த வனம் தீர்த்தது எனச்சொல்லி இருக்கிறார் முனிவர்களுக்கு சிறந்த தபோவனமாகவும், வேடர்களுக்கு வேட்டைக்களமாகவும், விலங்கினகளுக்கு வாழ்வாதாரமாகவும் செழிப்புற்று இந்த வனம் இருந்தது என இந்த இடத்தை பத்தி விவரிக்கின்றார் .
மேலும் இந்த வனத்தில் மிகக்கொடிய அசுரர்களும், பிரம்மராட்சதர்களும் இருந்தார்களாம்.  அவர்கள் அங்கு தவம் செய்துக்கொண்டிருந்த முனிவர்களுக்கு பலவித தொல்லைகளை தந்து அவர்களை பயமுறுத்தி தவத்தை கலைக்கவும் செய்தனராம். அந்தச்சமயத்தில்தான் அவர்கள் ஸ்ரீராமச்சந்திரமூர்த்தியை நினைத்து தியானித்தனர். முனிவர்களின் கோரிக்கையை ஏற்று அந்த வனத்திற்கு வந்த இராமர் தன்னுடைய உருவத்தை மிகப்பெரிய கருப்பு உருவமாக மாற்றி அந்த ராட்சதர்களுடன் சண்டை இட்டாராம்.  அதனால்தான் இங்கிருக்கும் இராமர் மட்டும் கருப்பு வண்ணத்தில் அங்கிருந்த முனிவர்களால் வணங்கப்பட்டது என்றும் சொல்லப்படுது .
கோவிலின் உள்பக்க மணடபத்தை தாண்டித்தான் மூலவர் இருக்கும் கோவிலுக்கு போகனும். மாலையானதும் அங்கிருக்கும் வேலையாட்கள்  பைப் மூலம் தண்ணீர் தெளித்து சுத்தப்படுத்துவாங்க. கோவிலை மிகவும் சுத்தமாக வைத்துள்ளனர். பக்தர்கள் எல்லோரும் கோவிலுக்குள் போக ஆரம்பித்தவுடன் நாங்களும் உள்ள போனோம். சில படிக்கட்டுகள் ஏறித்தான் கருவறைக்குள் போகனும். நாம் வாசலிலிருந்து உள்ள போகும்போதே உள்ள பிரகாசமான ஒளியில் காலாராம் சீதாதேவி சமேத இலட்சுமணன் துணையுடன் ராமர் கம்பீரமாக காட்சிகொடுத்து கொடுத்துக்கொண்டிருந்தார் . 
எல்லா கோவில்களையும்போல் இங்கயும் போட்டோ எடுக்காதீர் என்ற போர்ட் இருக்குதுதான். ஆனா, நமக்குதான் அட்வைஸ் பண்ணா பிடிக்காதே! அதையும்மீறி சிலர் படம்  எடுத்துக்கிட்டுதான் இருந்தாங்க.  உண்மையில் விளக்கொளியில் அழகான அலங்காரத்தில் காலாராம் காட்சிகொடுத்தார் இந்த விக்கிரகம் சுயம்புவாக தோன்றியது எனவும் சொல்லப்படுது. விசேஷ  தினங்களிலும், விடுமுறை தினங்களிலும் இங்க செல்வதை தவிர்க்கலாம் கூட்டம் அதிகமாக இருக்கும். அதனால், நின்று நிதானமா தரிசனம் செய்யமுடியாது.  கூட்டத்திற்குள் போக  பயந்து சிலர் வெளியில் நின்றே கும்பிட்டு போவாங்கன்னு அங்க இருக்கவுங்க சொன்னாங்க. .
அலங்கார ரூபத்தில் ஸ்ரீராமர்,  தம்பி லட்சுமணன், சீதா தேவியுடனும் அழகாக காட்சியளித்தார். நம்மூர்போல் அர்ச்சனை செய்ய புரோகிதர் யாருமில்லை. நம் பாட்டுக்கு போய் கும்பிட்டுக்கவேண்டியதுதான். அதேப்போல் சத்திரபதி சிவாஜியின் அரசியல் ஆலோசகரும் ,ஆன்மீக குருவுமான சுவாமி ராம்தாஸ் ராமபிரானின் தீவிர பக்தராம். அவர் 1620 முதல் 1632வரை நாசிக் வந்து 12 வருடங்கள் தவம் செய்தாராம். அப்பொழுது தினமும் காலை, மாலை  இந்த கோவிலுக்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்தாராம். அவர் இங்கிருக்கும் இராமரின் தரிசனமும் அருளும் கிடைக்கப்பெற்றவர் எனச் சொல்லப்படுது.
உள்ளே சிலர் ஸ்ரீராம்!! ஜெய்ராம்!! ஜெய் ஜெய் ராம்!! எனச் சொல்லி பக்திப்பரவசத்துடன்  சொல்லிக்கிட்டிருந்தாங்க. இந்த தண்டகாருண்ய வனத்தில்தான், தபசு செய்யும் முனிவர்களும், ரிஷிகளும் செய்யும் யாகத்திற்கு இடைஞ்சல் செய்த  14000 எண்ணிக்கையிலான ஆட்களைக்கொண்ட  ராட்சசபடைகளையும், அசுரர்களையும் இராமர் வதம் செய்து, அவர்களுக்கு அருள் செய்தார். எல்லா சம்பவங்களும் நடந்த இந்த இடத்தில்தான் கோவில் எழுப்பப்பட்டுள்ளது எனவும் சொல்லப்படுது. சாமி தரிசனம் முடித்ததும் தஞ்சை பெரியகோவில் மாதிரி  பக்கவாட்டு வாசல் வழியேதான் வெளியே வரனும் .
காலையில் 5:30க்கு நடைதிறந்தது முதல் பூஜை ஆரம்பிக்கப்படும் முடிந்தவுடன் மதியம் 11 மணிக்கு உச்சிக்கால பூஜைகள் நடைபெறும். ஏகாதசி ராமநவமி போன்றவைலாம் இங்க சிறப்பாக கொண்டாடப்படும் விழாக்களாகும். இங்க போகனும்ன்னு ஆசைப்படுறவங்க இந்த திருக்கோவிலின் பூஜை விவரங்களையும் தெரிஞ்சுகோங்க . காலையில் நடைதிறந்ததும் அதிகாலை 5:30 தொடக்கி  6::30 வரை ஆரத்தி... காலை 7:00 மணியிலிருந்து 8:00 சனி வதன் மற்றும் பூப்பலி.. காலை 8:00 ல இருந்து 10:00 வரை மக்களை ஆரத்தி.. முற்பகல்10:30 ல இருந்து 1:00 மணிவரை மகனாஜ் பூஜை மற்றும் மகா ஆரத்தி பிற்பகல்3:00 மணிக்கு தொடக்கி மாலை 5:00 மணிவரை பஜனை மற்றும் சிறப்பு வழிபாடு.. மாலை7:00 ல் இருந்து இரவு 8:00 வரை மீண்டும் ஆரத்தி . இரவு 8:00 ல இருந்து 10 மணிவரை ராம நாம கீர்த்தனைகள் பஜனைகள் பாடப்படும் .
ஒருவழியாக காலாராம் மந்திர் போயிட்டு நல்ல சாமிதரிசனம் செய்திட்டு வந்தாச்சு. இனி,  ட்சுமணன் சூர்ப்பனகையின் மூக்கை அறுத்த இடம்.  இதில் யுகம் யுகமாக நிற்கும் ஆலமரத்தின் கீழ்தான் ட்சுமணனுக்கு கோவில் எழுப்பப்பட்டுள்ளது. இந்த ஆலமரத்தின்கீழ் அதற்கான  குறிப்பும் வச்சிருக்காங்க.  இந்த கோவிலுக்கு செல்லும்போது முதலில் ஒரு கலர் புல் கணபதி வீற்றிருக்கிறார். அவரை தரிசனம் செய்துட்டுதான் படியேறிப்போகனும் இந்த ட்சுமணன் கோவிலுக்கு.....
இங்கேதான் ட்சுமணன், சூர்ப்பனகையின் மூக்கை அறுத்த இடம். அதுக்கு சாட்சியா யுகம் யுகமாக ஆனாலும் யாதொரு பழுதுமின்றி  நிற்கும் ஆலமரம் இருக்குது. அதனடியில் ட்சுமணன் சூர்ப்பனகையின் மூக்கை அறுத்த சிலையும் வைக்கப்பட்டிருக்கு. இந்த இடத்தில ட்சுமணனது சிலை தனியா வைக்கப்பட்டிருக்கு. அங்க லட்சுமண்சேஷ் நாக் அவதார்ன்னு போர்டு வச்சிருக்காங்க. அதனருகில் சிவபெருமானின் சன்னதியும் தனிச்சன்னதியாக இருக்குது. இங்கிருக்கும் ஆலமரம் யுகங்கள்பல  கண்டதுன்னு  சொல்றாங்க.
விநாயகரை தரிசனம் செய்துவிட்டு இந்த படிகள் வழியாகதான் மேலே ஏறி லட்சுமணன் கோயிலுக்கு போகனும். நாம் உள்ள போனதும் மிக பிரம்மாண்டமான  சிலை ஒன்று காணப்படுது.   அதில் லட்சுமணன் சூர்ப்பனகையின் மூக்கை அறுத்த சிற்பம்  இருக்குது.  அதை சுற்றிவந்தால் யுகங்களை கண்ட அந்த புனிதமான அந்த மரம் தென்படுது. .அதையும் தொட்டு வணங்கி நின்றோம்.  இராமனும், லட்சுமணனும்  சீதையும் ஒரு யுகத்திலே இந்த மரத்தின் கீழ் ஓய்வெடுத்தனர், அந்த இடத்திலேதான் நாம இப்ப இருக்கோம்ன்னு நினைக்கும்போதே தேகம் சிலிர்த்தது. இந்த மரத்தின் கீழதான் இளவல் சூர்ப்பனகையின் மூக்கை அறுத்ததாக ஐதீகம் .
அம்மரத்தை  கடந்து சுற்றி வந்து பயபக்தியுடன் வணங்கினோம்.  இங்க லட்சுமணனுக்கு தனி சன்னதி இருக்குது. இங்க லட்சுமணன் சேஷ்நாக் அவதார்ன்னு எழுதி இருக்காங்க.  பக்கத்தில சிவன் சன்னதிஒன்று  இருக்கு இங்கே, எல்லா  கோவிலையுமே மிகவும் சுத்தமாகவும் பரமரிக்கிறாங்க. தூரத்திலிருக்கும் அந்த இராமாயணகாலத்து மரத்தில் ஏதோ எழுத்திருக்கிறாங்க.   வாங்க! போய் பார்க்கலாம் . உனக்குதான் இந்தி தெரியாதேன்னு நீங்க சொல்லலாம். ஆனா, வெங்கட் அண்ணாக்குதான் இந்தி தெரியுமே! அவர் படிச்சு எனக்கு சொல்வாரு. சொல்வீங்கதானேண்ணே!!!???
 ஒருவழியாக கோவிலை தரிசனம் செய்து அடுத்து எங்கே போறோம்ன்னு எங்களை வழிநடத்தி சென்றவரிடம் கேட்டேன். அதற்கு அவர்  கபில கோதாவரி சங்கமத்திற்கு போகிறோம்ன்னு சொன்னாரு. அங்க என்ன விசேஷம்ண்ணான்னு கேட்டதுக்கு,  இந்த இடத்தை தபோவனம்ன்னுசொல்லுவாங்க. இந்தியில்  இதுக்கு தபோவன்ன்னு பேரு.  ராமாயணத்தில் இது  மிக முக்கியமான இடம். பண்டையகாலத்தில் இந்த தபோவனமான தண்டகாரண்ய வனத்தில் ரிஷிகளும், முனிவர்களும் தவம்  செய்துவந்திருக்கின்றனர்.  இங்க நாம பார்க்கவேண்டிய இடங்கள்ன்னு ஒரு லிஸ்ட் கொடுத்தார் .
அதில் முக்கியமாக 
Lakshman Sheshnag Avatar .. லக்ஷ்மன் சேஷ்நாக் அவதார் நாம பார்த்தாச்சு.  இனி 
Sitha Haran .. சீதாஹரன்
Lakshmana Rekha .. லக்ஷ்மன்ரேகா
Lambe Hanuman .. லம்பேஹனுமான்
LakshmiNarayan Mandhir .. லக்ஷ்மிநாராயன் மந்திர்
Surpanaka Nak Kati .. சூர்ப்பனகை நாக் கடி
Lakshman Tapsya Mandhir .. லக்ஷ்மன் தபஸ்ய மந்திர்
Kapila Godavari Sangham .. கபில கோதாவரி சங்கமம்
Brahma Vishnu Mahesh Dhinkunt .. பிரம்மா விஷ்ணு மகேஷ் தின்குண்ட்
SitaMatha Agnikunt .. சீதாமாதா அக்னிகுண்ட்
Sriram Parankuti .. ஸ்ரீராம் பரண்குடி
தூரத்தில் கோதாவரி சங்கமத்தில் நதிகளில் தண்ணீர் வேகமாக ஓடிக்கொண்டு இருந்தது. .ஆற்றுகரைகள்ல்லாம் பச்சைபசேலென பார்க்கவே அழகா இருந்துச்சு. தூரத்தில் இராம லட்சுமண மற்றும்  சீதா உருவங்கள் இரும்பினால் ஆன தகடுகளினால் பிரமாண்டமாக மலையின்மேல் வைத்திருந்தனர்.  இனி மீதி இருக்கிற இடங்களை கபில கோதாவரி நதிகளின் சங்கமத்திலிருந்து  அடுத்தவாரம் பார்க்கலாம்....

நன்றியுடன் ,
ராஜி .