Showing posts with label லட்சுமி. Show all posts
Showing posts with label லட்சுமி. Show all posts

Wednesday, April 18, 2018

மகிழ்வித்து மகிழவேண்டிய அட்சய திருதியை நன்னாள் - அறிவோம் ஆன்மீகம்

நம்ம ஊர்ல ஏப்ரல் மாசம் பொறந்தாலே போதும் அட்சய திருதியை ஜுரம் வந்திரும். அட்சய திருதியை அன்னிக்கு நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதும் . கடன் பட்டாவது எதாவது நகை வாங்க துடிப்பாங்க நம்ம ஊர் பொண்ணுங்க. இந்த மாதிரி சடங்கு சம்பிராயத்துல நம்பிக்கை இல்லாதவங்க ஏன்?! எதுக்கு இப்படி நகை வாங்குறீங்கன்னு கேட்டால், அட்சயதிருதியை அன்னிக்கு வாங்கி நகை வாங்கினால் தங்கமா சேரும். அதனாலதான் நகை வாங்கப்போறோம்ன்னு பதில் சொல்வாங்க.  இப்படி கடன்பட்டு நகை வாங்கி பெட்டில வச்சா தங்கமழை வீட்டில் பொழியுமா?! 

இறைவனை வழிபாடு செய்யவும், தானதர்மம் செய்யவும் நல்ல நாள், நேரம் பார்க்க தேவையில்லைதான். அதுலாம் எப்போதும் நல்வழியில் செல்பவர்களுக்கு.... ஆனா தீய வழியில் செல்பவர்களுக்கு நாள், கிழமைன்னு ஒதுக்கி வெச்சாலாவது நல்வழியில் செல்வாங்கன்னுதான் விரதநாட்கள் உண்டாச்சு. ஆனா, அந்த நாட்கள் எதுக்கு உருவாச்சுன்னே அரைகுறையா புரிஞ்சுக்கிட்டு கொண்டாடப்படும் விரதநாட்களில் ’அட்சய திரிதியை’க்கு முக்கிய இடமுண்டு.

சயம் ன்னா குறைதல், தேய்தல்ன்னு அர்த்தம். அட்சயம் என்ற சொல்லுக்கு வளர்தல் என்று பொருள். அன்றைய தினம் செய்யப்படும் எல்லா விசயமும் பல்கிப்பெருகும் என்பது ஐதீகம். அதனால, அன்னிக்கு என்ன நல்ல விசயம் செய்யலாம்ன்னு யோசிக்குறதை விட்டுட் என்ன பொருள் வாங்கலாம்ன்னு கடைகளை நோக்கி சில வருசங்களாய் படையெடுக்குது இன்றைய சமுதாயம். தங்கம் விலை தாறுமாறாய் இருக்கும் இக்காலகட்டத்தில் கடன் வாங்கியாவது தங்கம் வாங்க துடிக்குறாங்க நம் மக்கள். சரி, அப்ப அட்சய திருதியை அன்னிக்கு என்ன வாங்கனும், ஏன் இந்த நாளில் என்ன செய்யனும், எப்படி இந்த நாள் உருவானதுன்னு பார்க்கலாம்.. வாங்க...
சித்திரை வளர்பிறையின் மூன்றாவது நாளும் திருதியை நட்சத்திரமும் இணைந்து வரும் நாள் மிகப்புனிதமானது. அன்று செய்யும் எந்த வேலையும் விருத்தியாகும் என்பதால் வேதகாலங்களில் சான்றோர்கள் அட்சயத் திருதியை அன்று யாகங்கள் செய்யவும், பூஜைகள் செய்வதுமென கடவுள் வழிபாட்டில் மனம் லயிக்க, தான தருமங்கள் செய்து இந்நாளை கழித்தனர். அட்சய திருதியை நாளில் செய்யும் பூஜைகளில் பலன், பன்மடங்கு அதிகரித்து, அதனால் நமக்கும் நம் சந்ததியினருக்கும் கடவுளின் ஆசி பரிபூரணமாய் கிடைக்கும் என்பதுதான் பெரியோர்களின் கருத்து. ஒரே நாளில் நகைக்கடைக்காரகளின் விற்பனையை தாறுமாறாய் உயர்த்த எந்த வேதத்திலும், எந்த கடவுளும் சொல்லல.

கேரளாவின் ’காலடி’யில் பிறந்து ஆர்யாம்பாள்-சிவகுரு தம்பதிக்கு மகனாக பிறந்தவர் ஆதிசங்கரர்.  சிறுவயதிலேயே குருகுலத்தில் சேர்ந்து வேதங்களை கற்று பண்டிதர் ஆனார்.  குருகுலத்து விதிப்படி யாசகம் கேட்டு, ஊருக்குள் சென்றார். அவர் யாசிக்க சென்ற வீடு மிக ஏழ்மையானது. பவத் பிட்சாந்தேஹி’ என யாசித்து நின்றார். உள்ளிருந்த வெளிவந்த பெண், ஐயா! தங்களுக்கு கொடூக்க எங்கள் வீட்டில் ஏதுமில்லை. இந்த காய்ந்த நெல்லிக்காயை தவிர்த்து.. எனக்கூறி மனதார ஆதிசங்கரருக்கு பிட்சை இட்டாள். ஏழ்மை நிலையிலும் தன்னிடமிருந்த நெல்லிக்கனியை கொடுத்த பெண்ணின் இரக்கக்குணத்தை கண்டு நெகிழ்ந்த ஆதிசங்கரர், அவள் வறுமையை போக்க, கனகதாரா ஸ்தோத்திரம் பாடி  மகாலட்சுமியை மனதில் இறுத்தி தியானித்தார். அப்பெண்ணின் வீட்டில் தங்க நெல்லிக்கனி, மழையாய் பொழிந்து அவளது வறுமை நீங்கியது. அப்படி ஏழைப்பெண்ணின் ஏழ்மை நீங்கிய நாள் அட்சயதிருதியை. 

அட்சய திருதியை அன்று ஆதிசங்கரரின் பிறந்த ஊரில் இருக்கும் கிருஷ்ணர் கோவிலில், 32 நம்பூதிரிகளைக்கொண்டு, 1008முறை கனகதாரா ஸ்தோத்திரம் பாடி, தங்க, வெள்ளி நெல்லிக்கனிகளை வைத்து பண்ணப்படும்  கனகதாரா யாகம் செய்கின்றனர். இடுப்பில் கைவைத்தபடி ஒரு கையில் வெண்ணெயுடன் கிருஷ்ணர் காட்சியளிக்கும் கருவறைக்கு பெயர் க்ருஷ்ண அம்பலம். இச்சன்னிதியின் வலப்புறம்  சிவனும், இடப்புறம் சாரதாம்பிகைக்கும், சக்தி வினாயகருக்கும் கோவில் உண்டு. 

பாஞ்சால நாட்டில் பூரியசஸ் என்ற அரசன் இருந்தான். வேற்று நாட்டு அரசனிடம் தன் நாட்டை இழந்து தன் மனைவி சிகிநீயுடன் காட்டிற்கு சென்று முப்பது ஆண்டுகள் படாதபாடுபட்டான். அவ்வழியே, தற்செயலாய் சென்ற யாஜகர், உபயாகர் என்ற முனிவர்கள் அவ்வழியே சென்றனர். அவர்களை கண்டதும் காலில் விழுந்து வணங்கி பணிவிடை செய்து தன் நிலையை எடுத்து சொன்னான். ராஜாதிராஜன் இன்று குடிசையில் வாழும் காரணத்தை தங்கள் ஞானத்திருஷ்டியில் கண்டனர். மன்னா! பத்து தலைமுறைகள் நீ வேடனாய் இருந்து பத்தாவது பிறவியில் கௌட தேசத்தின் காட்டில் இருக்கும்போது வழிப்பறியில் ஈடுபட்டும், முனிவர்களை இம்சித்தும் பல கொடுமைகளை செய்து வந்ததன் பலனை இப்போது அனுபவிக்கிறாய். இவ்வளவு கொடுமை செய்தும் எப்படி மன்னனாய் பிறந்தேன் என வினவி நின்றான் பூரியசஸ்.
BHAGAVAD GITA {5.21 } बाह्यस्पर्शेष्वसक्तात्मा विन्दत्यात्मनि यत्सुखम्‌ ।  स ब्रह्मयोगयुक्तात्मा सुखमक्षयमश्नुते ॥ 21॥ Such a person who is in union with the Supreme Being becomes unattached to external sensual pleasures by discov­ering the joy of the Self through contemplation and enjoys transcendental bliss. (5.21):
ஒருநாள் அவ்வழியே சென்ற இரண்டு வைசியர்கள் மற்றும் ஒரு அந்தணரையும் நீ அடித்து துன்புறுத்தி அவர்களிடம் கொள்ளையடிக்க பார்த்தாய். அந்தணர் கொண்டு வந்த செல்வங்களோடு ஓடி விட்டார். பொருட்கள் மீதான ஆசையினால் அந்தணருக்கு மூர்ச்சை தெளிவிக்கும் பொருட்டு அவருக்கு தண்ணீர் கொடுத்தாய். அனறைய தினம் சித்திரை மாதம் திருதியை நட்சத்திரம். அன்றைய தினம் நீ அறியாமல் செய்த நீர்தானமே உன்னை ராஜாதிராஜனாய் பிறக்க வைத்தது என்றனர்.

தெரியாமல் செய்த தானத்திற்கே இத்தனை பலனா என்று யோசித்த மன்னன் விஷ்ணுவை வணங்கியபடி வெயிலில் வருவோருக்கு நிழலும், நீரும் தந்து வந்தான். சிலநாட்களில் அவனுக்கு உதவ அவனின் உறவினர்கள் முன்வந்தது உதவினர். அவன் நாடும் அவனுக்கு திரும்ப கிடைத்து பதினாறு செல்வங்களோடு நல்லாட்சி புரியும்போது விஷ்ணுபகவான் அவன்முன் தோன்றி என்ன வரம் வேண்டுமென கேட்க, உன்னை மறவாத மனமும், மாறாத பக்தியும் வேண்டுமென வேண்டி நின்றான். அவ்வாறே வரமளித்து மன்னனுக்கு வைகுண்ட பதவி அளித்த நன்நாள் வைகாசி மாதம் மூன்றாம் நாளான அட்சய திருதியை நாள்.


அட்சய திருதியையின் சிறப்புகள்...
கௌரி என்றழைக்கப்படும் பார்வதிதேவி தனது பிறந்த வீட்டுக்கு வந்தது இந்த நாளில்.
அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரத்தை சூரியபகவானிடமிருந்து பாண்டவர்கள் பெற்றது இந்நாளில்....

Tripura Sundari - Shri Vidya:
க்ருஷ்ணரின் ஆறாவது அவதாரமான பரசுராமர் அவதரித்தது இப்புண்ணிய நாளில்...இந்நாளில்தான் கிருத யுகம் உருவானது...
Parashuram. the 6th Avatar of Vishnu was born to end the atrocities on earth. His axe is well known and mentioned in Ramayana too.:
ஏழ்மையில் வாடிய தன் பால்ய நண்பனின் வறுமையை, ஒருபிடி அவலில் போக்கிய நாளும் இதுவே....ன்றைய தினத்தில்தான் மகாலட்சுமி மகாவிஷ்ணு மார்பில் வாசம் செய்ய வரம் வாங்கினாள்....
மனிதர்களின் பாவத்தை போக்கும் கங்காதேவி பூமியில் உருவான நாளும் இந்நாளே....
Akhilandeshvari — The Goddess Never-Not-Broken:
பிரம்மனின் தலையை கொய்த சிவனின் பாவம் தீர, பிட்சானனாய் உலகை வலம் வந்த வேளையில் அன்னப்பூரணி மாளிகையின் முன் பிட்சை கேட்க... அன்னையானவள் பிட்சை இடஇட உணவு குறைந்துகொண்டே வருவதைக்கண்டு வேதனையுற்று தன் சகோதரனான விஷ்ணுவிடம் உதவிக்கேட்க மகாலட்சுமியின் அருளால் கிடைத்த பாத்திரத்தை அட்சயம் என்று சொல்லி தொட, அது அள்ள அள்ள குறையாத அட்சயபாத்திரமானது. அட்சய பாத்திரம் உருவான நாளும் இதுவே.

செல்வத்துக்கு அதிபதியான குபேரன் தன் செல்வம் என்றென்றும் நிலைத்து நிற்க மகாலட்சுமியை பூஜை செய்யும் நாளும் இதுவே! இந்நாளில்தான் திருப்பதி வெங்கடாசலபதி, பத்மாவதியை மணக்கும்பொருட்டு, குபேரனிடம் கடன் வாங்கினார். இன்றைய தினம் வரை அசலை கட்டாமல் வட்டிமட்டுமே ஏழுமலையான் கட்டிட்டு வந்தாலும், தனது பக்தர்களின் பொருளாதார நெருக்கடியை தீர்த்து வைக்கிறார். தங்களது திருமணத்துக்கு உதவியதாலாயே மகாலட்சுமியின் கடைக்கண் பார்வை குபேரன்மீது எப்போதும் உண்டு.

தேய்ந்து வளரும் சாபத்தால் அவதிப்பட்ட சந்திரன், சிவனை சரணாகதி அடைய சிவனின் ஜடாமுடியில் மூன்றாம் பிறையாக இடம்பெற்றதும் இந்நாளே...

அட்சயதிருதியை அன்று செய்ய வேண்டியது...
மறைந்த முன்னோர்களுக்கு நீத்தார் கடன் செய்யலாம். முன் ஜென்ம வினைகள் தீரும். சுமங்கலி பெண்கள் பூஜை செய்து ஆடைகள் தானம் செய்யலாம். வஸ்திரதானம் செய்தால் பதவி உயர்வு கிடைக்கும். பசுக்களுக்கு ஒரு பிடி புல் கொடுக்கலாம். தங்கம்தான் வாங்கனும்ன்னு இல்ல. அரிசி, சர்க்கரை, உப்பு, மஞ்சளும் வாங்கலாம். உப்பில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பது நம் நம்பிக்கை.

அட்சய திருதியை அன்று செய்யப்படும் பூஜைக்கு சத்யநாராயண பூஜைன்னு பேரு. அன்றைய தினம், அதிகாலையில் நீராடி, வீடு துடைத்து பூஜை அறையில் கோலமிட்டு அதன்மேல் மனைப்பலகை போட்டு அதன்மேல் வாழையிலை வைத்து, இலையில் பச்சரிசி சிறிது பரப்பி ஒரு செம்பில் நீர் நிரப்பி மாவிலை வைத்து மஞ்சள் தடவிய தேங்காயை வைத்து கும்பம் தயாரிக்கவேண்டும். கும்பத்தினில் காசுகள் போடலாம் அல்லது பச்சரிசியில் காசுகள் போடலாம்.


குத்துவிளக்கு ஏற்றி வைத்து, மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைக்க வேண்டும். கலசத்தின் அருகில் படியில் அல்லது உழக்கு அல்லது டம்ப்ளரில் நெல் நிரப்பி வைத்து பூ பொட்டு . இன்றைய தினம் லட்சுமி, குபேரன், மகாவிஷ்ணு மூல மந்திரங்களை சொல்லி வழிப்படுதல் நலம். குசேலர் கதையினை படித்தலும் நலம் சேர்க்கும்.
அட்சயதிருதியை அன்று அன்னதானம் செய்தால் ஆயுள் பெருகும். இனிப்புகள் தானம் செய்தால் திருமணத்தடை நீங்கும், தானியங்களை தானம் செய்தால் விபத்துகளிலிருந்து காப்பாற்றும், கால்நடைகளுக்கு உணவளித்தால் வாழ்வு வளம்பெறும். படிக்க வசதியின்றி தவிக்கும் மாணவர்களுக்கு உதவலாம். ஆதரவின்றி தவிக்கும் முதியோருக்கு உதவலாம்.
தங்கத்தை வாங்கி பெட்டிக்குள் பூட்டி வைப்பதால் அது வளர்ந்துடாது. இந்நாளில் தங்கத்தை தானம் செய்யனும். இன்னிக்கு தங்கம் விக்கும் விலையில் இது சாத்தியமில்லை. அதனால, முடிஞ்சளவுக்கு அரிசி, கோதுமை, மஞ்சள், அன்னம் என தானம் செய்வோம். மொத்தத்தில் மகிழ்வித்து மகிழ்வோம்!!

நன்றியுடன்,
ராஜி.

Tuesday, August 08, 2017

எல்லா மதத்தினரும் சொல்லக்கூடிய காயத்திரி மந்திரம்

Goddess Gayatri - "Gayatri has five faces, they are the five life principles. She has nine descriptions, they are ‘Om, Bhur, Bhuvah, Swah, Tat, Savitur, Vareñyaṃ, Bhargo, Devasya’." [‘My Dear Students’, Vol 3, Ch 2, Mar 19, 1998]
நம் வீட்டை சுத்தப்படுத்த ஆயிரம் வழி இருக்கு. அதேமாதிரி நம் உடலின் ஒவ்வொரு பாகத்தையும்  சுத்தம் பண்ணவும் தனித்தனியா ஆயிரம் வழி இருக்கு. ஆனா, மனசை சுத்தம் பண்ண!? அதுக்கு காயத்ரி மந்திரம் இருக்கு.. காலங்களில் நான் வசந்தம், மாதங்களில் நான் மார்கழின்னு சொன்ன க்ருஷ்ணபரமாத்மா காயட்ரி மந்திரமா இருக்கேன்னு சொல்றார்ன்னா காயத்ரி மந்திரம் எத்தனை புனிதமானதுன்னு தெரிஞ்சுக்கலாம். 


ஞானம் பெற விரும்பிய முனிவர்கள் வேதக்கடலை கடைந்தபோது த்ரயி என்ற வேதாச்சாரம் கிடைத்தது. அதனை காணமதி என்ற மத்தினால் கடைந்தபோது காயத்ரி தேவியின் வடிவம் கிடைத்தது. வேதத்தின் மூலாதாரமாக காயத்ரி மந்திரம் விளங்குகிறது.    பிரணவ மந்திரமான "ஓம்" என்ற வார்த்தைக்கு அடுத்தபடி இந்தக் காயத்ரி மந்திரம்தான் என சொல்லப்படுகிறது.
கௌசிகன் என்ற மன்னன் , தன்னுடைய நாட்டில் வந்த பஞ்சத்தை போக்க வசிஷ்ட மகரிஷியிடம் இருந்த காமதேனு பசுவின் தங்கையான நந்தினி பசுவை கேட்கிறார். வசிஷ்டர் தரமறுக்கிறார். அதனால் கோபங்கொண்ட கௌசிகன் வசிஷ்டர்மேல் போர்தொடுத்து தோற்றுப்போகிறான். தோற்றுப்போன அவமானம் ஒருபக்கம், பிரம்மரிஷிகளின் பேச்சுக்கு மட்டுமே காமதேனுவும், நந்தினியும் கட்டுப்படுமென்பதால், நாடு, நகரம், அரசு, செல்வம், ராஜபோக வாழ்க்கையை துறந்து,  பிரம்மரிஷி பட்டம் வேண்டி கடும் தவமிருக்கிறான்.   ஒரு சத்திரியனால் பிரம்மரிஷி பட்டம் வாங்கமுடியாதென வசிஷ்டர் எள்ளி நகையாட, பிரம்மரிஷி பட்டம் வாங்கிக்காட்டுவதாக சவால் விட்டு கள்ளிச்செடியின்மீது தவம் புரிகிறார்.


கௌசிகனின் கடுந்தவத்தை கண்ட, அன்னை பார்வதிதேவி, கௌசிகன் முன்தோன்றி ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் உள்ள பஞ்சமுக விளக்கை ஏற்றினால் உன் நோக்கம் நிறைவேறும் எனக்கூறி  மறைந்தார். கௌசிகன் காட்டிலிருந்து ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு வந்து பஞ்சமுக தீபத்தை ஏற்ற திரி தருமாறு சிவ பூதக்கணங்களை   வேண்டினார். ஆனால், பூதக்கணங்கள் திரி கர மறுத்துவிட்டன. சற்றும் யோசியாமல் விளக்கின்மீதேறிப்படுத்து தலை, இரு கைகள், இரு கால்கள் என விளக்கின் ஒவ்வொரு முகத்துக்கும் ஒவ்வொரு பாகத்தை வைத்து விளக்கேற்றினார். இதைக்கண்ட அம்மையும், அப்பனும் கௌசிகன் முன் தோன்றி பிரம்மரிஷி பட்டம் கொடுக்கின்றனர். பிரம்மரிஷி பட்டம் கிடைத்த மகிழ்ச்சியில் கௌசிகன் புதுமந்திரத்தை ஜெபிக்கின்றார். உடம்பை திரியாக்கி எரித்து மந்திரம் உருவாக்கியதால் இதற்கு, காயத்திரி மந்திரம் என்று பெயர் உண்டானது. காயம்ன்னா உடம்புன்னு ஒரு பொருள் உண்டு.  
காயத்திரி மந்திரத்தில் கா- நீர்த்தத்துவமாகிய கண்களுக்கும் புலப்படும் ஸ்தூலத்தை குறிப்பது. இதற்கு அதிபதி பிரம்மன். - என்பது வாயு தத்துவமாகிய சூட்சுமத்தை குறிப்பது. இதற்கு அதிதேவதை விஷ்ணு. - என்பது காரணதேகம். இதன் அதிபதி ருத்திரன். த்ரீ என்பது இந்த மூவரும் நம்மை காப்பாற்றி அருள்வது என்பதாகும். இந்த காயத்ரி மந்திரத்தின் பொருள் எவர் நமது அறிவைத் தூண்டிப் பிரகாசிக்கச் செய்கிறாரோ, அந்த ஜோதிமயமான இறைவனைத் தியானிப்போமாக!” என்பதாகும். எல்லாத் தெய்வங்கட்கும் தனித்தனியான காயத்ரி மந்திரம்  உள்ளது. எல்லாக் காயத்ரி மந்திரங்கட்கும் பொதுவாக அமைந்தது மேற்கண்ட பிரம்ம காயத்திரி மந்திரம்  ஆகும்.

பரம்பிரம்மத்தின் ஸ்வரூபமான இந்த மந்திரத்தின் அதிதேவதையான காயதிரிதேவி, மூன்று தேவியரும், மும்மூர்த்திகளும் சேர்ந்த உருவமாக போற்றப்படுகிறாள். இவள் லட்சுமிதேவியின் அம்சம் என்பதால் செந்தாமரை பூவில் வீற்றிருக்கும் காயத்திரிதேவி செல்வத்துக்கும் அதிபதியாக கருதப்படுகிறாள். ஐந்து தலையுடனும், பத்து கண்களுடனும் எட்டு திசைகள், ஆகாயத்தில் உதிக்கும் சூரிய, சந்திரர், பூமி உள்ளிட்ட ஈரேழு லோகங்களையும் பார்க்கும் விதமாக காயத்திரிதேவியின் உருவ அமைப்பு கொண்டது. அவளின் பத்து கரங்களும் அந்த விஷ்ணுவின் பத்து அவதாரங்களை குறிக்கும். சங்கு, சக்கரம், கதை, அங்குசம், கபாலம்,கசை, ஏடு , சாட்டை, பொற்கிண்ணம் ஏந்தி அபய,வரத முத்திரையோடு அருள்பாலிக்கிறாள். இவள் சரஸ்வதியின் அம்சம் என்பதால் வெண்ணிற அன்னம் இவளது வாகனமாகும். 
Goddess Gayatri
காயத்ரி தேவியின் ஐந்து முகங்களும் சிவபெருமான் நிகழ்த்துகின்ற படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்து செயல்களை நினைவூட்டும் வகையில் சரஸ்வதி, லட்சுமி, பார்வதி, மகேஸ்வரி, மனோன்மணி என்ற ஐந்து தேவதைகளின் ஐந்து முகங்களைக் குறிப்பதாகவும் கருதப்படுகிறது. ஒவ்வொரு முகமும் மூன்று கண்களோடு தேவி சித்தரிக்கப்படுகிறாள். படைப்புக் கடவுளான பிரம்மாவின் தேவியான சரஸ்வதி, காக்கும் கடவுளான விஷ்ணுவின் தேவியான மகாலட்சுமி, அழிக்கும் கடவுளான சிவனின் தேவியான பார்வதி ஆகிய மூவரும் ஓர் உருவமாகக் காயத்ரி தேவியாக விளங்கி நமக்கு ஞானத்தையும், வைராக்கியத்தையும் அருளகிறார்கள். ஐந்து தேவதைகளைக் குறிக்கின்ற வகையில் சிவப்பு, முத்து நிறம், மஞ்சள், நீலம், வெண்மை ஆகிய ஐந்து நிறங்களில் காயத்ரி தேவியின் ஐந்து முகங்கள் பிரகாசிக்கின்றன.  காயத்ரி தேவியின் இருபுறங்களிலும் மகாலட்சுமியும், சரஸ்வதியும் அமர்ந்திருப்பது போலக் காட்டப்படுவது உண்டு. இந்த மந்திரம் காலையில் காயத்திரிக்காகவும் நடுப்பகலில் சாவித்ரிக்காகவும், மாலை சந்தியா வந்தனத்தில் சரஸ்வதிக்காகவும் ஜபிக்கப்படுகிறது.
Gayatri | ... Religious Painting "Goddess Gayatri" of Goddess painting depicts

பெண்கள் காயத்ரி மந்திரத்தை  சொல்லக்கூடாது என்பார்கள். காயத்ரிதேவியே பெண்தான். ஆகவே பெண்களும் காயத்ரி மந்திரத்தை சொல்லலாம்.  இந்த காயத்ரி மந்திரத்தை சொல்பவர்கள், குளிர்சியான மோர், குளிர்ச்சியான உணவுகளை சாப்பிட வேண்டும். காயத்ரி மந்திரம் உஷ்ணத்தன்மை கொண்டது என்கிறது சாஸ்திரம். அந்த மூன்று நாட்களில் மந்திரத்தை உச்சரிப்பதை தவிர்த்தல் நலம். உஷ்ணத்தன்மை கொண்டதால் இம்மந்திரம் உச்சரிக்கும் பெண்களுக்கு வெள்ளைப்பாடு உண்டாகும் வாய்ப்பு அதிகம்.  காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பவர்களை கண்திருஷ்டி நெருங்காது. துஷ்ட சக்திகளை,துஷ்ட எண்ணம் கொண்டு பழகுபவர்களை பொசுக்கும் சக்தி கொண்டது.  தெரிந்தும், தெரியாமல் செய்த பாவங்கள் தீரூம். முன் ஜென்ம வினைகள் தீரும்.  காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பவர்கள் நலமும் வளமும் பெற்று வாழ்வார்கள்.
Gayatri | Your Are Here → Home → Gayatri Devi → gayatri devi water color ...
காயத்ரி மந்திரம் எந்தவொரு தெய்வத்தையும் முன்னிறுத்தி உண்டானதில்லை. எல்லா கடவுளுக்கும் மேலான பரம்பொருளை குறித்து எழுதப்பட்டதாகும். அறிவியலின்படி உயிர், உலகம் உருவாக காரணமான சூரியனை நோக்கு எழுதப்பட்டதாகும். எனவே, இந்த மந்திரத்தை யார் வேண்டுமானாலும், எந்த மதத்தினரும் உச்சரிக்கலாம். இதுவரை, காயத்திரி மந்திரத்தை சொல்லாதவர்கள் இன்றிலிருந்து சொல்ல தொடங்கலாம். மனம் ஒருமுகப்படுத்தாம நூறு, ஆயிரம், லட்சக்கணக்கில் இம்மந்திரத்தை சொல்லி பலனில்லை. நிலையான மனதோடு இருபத்தி ஏழு முறை உச்சரித்தாலே போதும். காலை, மாலை குளித்து, சூரியன் இருக்கும் திசை நோக்கி இம்மந்திரத்தை உச்சரித்தல் வேண்டும்.  மனதை ஒருநிலைப்படுத்த காயத்ரி மந்திரம் சிறந்தது. அதனால் மாணவர்களும் இம்மந்திரத்தை உச்சரித்து பலன் பெறலாம். பௌர்ணமி, அமாவாசை தினங்களில் இம்மந்திரத்தை உச்சரித்தால் நல்ல பலன் கிடைக்கும். 

காயத்திரி மந்திரத்தை சரியான உச்சரிப்பில் சொல்வது மிக முக்கியம்.... துளசி தண்ணீர் அல்லது தண்ணீர் அருகில் வைத்துக்கொண்டு , ஒரு விரிப்பை விரித்து அதன்மேல் அமர்ந்து சூரியன் இருக்கும் திசை நோக்கி இம்மந்திரத்தை சொல்ல வேண்டும். இம்மந்திரத்தை சொல்லி முடித்ததும் அருகிலிருக்கும் தண்ணீரை குடிக்க வேண்டும்.  
தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1468764
Great Goddess
நன்றியுடன்,
ராஜி.

Friday, February 21, 2014

ஸ்ரீலட்சுமி நரசிம்மபெருமாள் திருக்கோவில் - புண்ணியம் தேடி ஒரு பயணம்

புண்ணியம் தேடிப் போற பயணத்துல நாம இன்னிக்குப் பார்க்கப் போறது விழுப்புரம் மாவட்டத்திலுள்ள தென் அகோபிலம் எனக் கூறப்படுகிற பூவரசன் குப்பம் என்னும் ஊரில் எழுந்தருளியிருக்கும்  ஸ்ரீலட்சுமி நரசிம்மபெருமாள் திருக்கோவில்.

இந்தக்கோவில் விழுப்புரம், புதுச்சேரிச் சாலையில் உள்ள சிறுவந்தாடு என்னும் ஊரில் இருக்கு. இந்த ஊர் பட்டுநூலுக்குப் பிரசத்திப் பெற்ற இடம். இங்கிருந்து பூவரசன் குப்பம்  2 கி.மீ. தொலைவில் இருக்கு. அப்படி இல்லாட்டி விழுப்புரம் பண்ருட்டி சாலையில் உள்ள கள்ளிப்பட்டியில் இறங்கினால் இத்தலம் மூன்று கி.மீ. தொலைவில் இருக்கு. விழுப்புரத்தில் இருந்து நேரடி பஸ் வசதியும் இருக்கு. சரி, இனி கோவிலுக்குள் செல்லலாம்ம் வாங்க!

தீமையை அழித்து அறத்தைக் காக்க திருமால் எடுத்த வடிவங்களே தசாவதாரங்கள் எனச் சொல்கிறோம்  மற்ற அவதாரங்கள் ஒரு குறிக்கோளுடன் திட்டமிடப்பட்டுபிறந்து, வளர்ந்து தக்கத் தருணத்தில் தீமையை அழிக்க எடுக்கப்பட்ட அவதாரங்களாகும். ஆனால் நரசிம்ம அவதாரமோ ஒரு நொடியில் தோன்றி, அசுரவதம் செய்துப் பக்தனைக் காத்த அவதாரமாகும். பக்தர்களுக்கு ஒரு துயரென்றால் நான் நேரம் காலம் பாராமல் ஓடி வருவேன் என சொல்லாமல் இறைவன் சொல்கிறார்.


 இதுதான் திருக்கோவில் மூலவர் சன்னதி முன்னால் இருக்கும் கொடிமரமும் அதன் முன் இருக்கும் பலிபீடமும்.   கொடிமரத்தின் முன்னே கருடாழ்வார் சன்னதி மூலவரை நோக்கிய வண்ணம் இருக்கிறது. இந்த ஸ்தலத்தின் விஷேசம் என்னனா, மற்ற இடங்களில் பயங்கரமான உருவில் காட்சியளிக்கும் நரசிம்மர் இங்கே, தம்பதியர் சமேதராய் சாந்தமாய் காட்சியளிக்கிறார். தாயாரின் ஒரு கண் நரசிம்மரைப் பார்த்துக் கொண்டிருக்க, மற்றோர் கண் நம்மை நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறது.

இனி இந்த திருக்கோவிலின் வரலாற்றை பிரகார வலம் வந்துக்கொண்டே பார்க்கலாம். இங்க நேரேத் தெரிவது அமிர்தவல்லி தாயார் சன்னதி.  

ஆடி ஆடி அகம் கரைந்து
இசை பாடி பாடி கண்ணீர் மல்கி
எங்கும் நாடி நாடி நரசிங்காவென்று
வாடி வாடும் இவ்வானுதலே

என்னும் பதிகத்தை பாடியபடி வலம் வருவோம். சர்வலோக சரண்யனான ஸ்ரீமன்நாராயணன் எடுத்த, பத்து அவதாரங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது இந்த நரசிம்ம அவதாரம். அகோபிலத்தில், பிரகலாதனுக்காக அவன் நினைத்த நேரத்தில், நினைத்த இடத்தில ஒரு நொடி கூட தாமதிக்காது அவதரித்து இரண்யனை சம்காரம் செய்த மூர்த்தி  இந்த நரசிம்மபெருமாள். இரண்யனுக்கு அஞ்சி வேறு பகுதிகளில் ஒளிந்து வாழ்ந்த முனிவர்கள், இரண்ய வதத்திற்குப்பின் பகவானிடம் நரசிம்மத் திருக்கோலத்தைத் தங்களுக்குக் காட்டியருள வேண்டும் என்று வேண்டினர். அதற்கிசைந்த பெருமாள் அவ்வண்ணமே முனிவர்களுக்குக் காட்சி தந்தார். அவ்வாறு காட்சித் தந்தத் தலங்கள் தமிழகத்தில் எட்டு இடங்களில் உள்ளன.

அப்படி நரசிம்மனாக முனிவர்களுக்குக் காட்சிக் கொடுத்தபோது அவரது ஆக்ரோசஷத்தைத் தாங்க முடியாத முனிவர்களும், சப்த ரிஷிகளும் அத்ரி, பரத்வாஜர், வசிஷ்டர், ஜமதக்னி, கௌதமர், காச்யபர், கௌசிகர் ஆகியவர்களே அந்த ஏழு ரிஷிகள். மகாலக்ஷ்மியை வேண்டினார்கள்.  ஸ்ரீலக்ஷ்மியானவள் நரசிம்மரின் மடியில் அமர்ந்து ஒரு கண்ணால் நரசிம்மரையும், ஒரு கண்ணால் சப்த ரிஷிகளையும் பார்த்தபோது நரசிம்மர் கோபம் தணிந்தது, அப்பொழுது நரசிம்மர் கோபம் தணிந்து சாந்தரூபியாக காட்சியளித்தார் அவர்களுக்காக.

திருமால் காட்சிக் கொடுத்த இடம்தான் பூவரசன்குப்பம். .இப்பூவுலகில் வேறு எங்கும் காணாதக் காட்சியாக நரசிம்மர் சாந்த சொருபனாக காட்யளித்ததால் இன்று முதல் நீங்கள் இருவரும் இவ்வாறே பக்தர்களுக்கு காட்யளிக்க வேண்டும் என சப்தரிஷிகள் வேண்ட அவ்வாறே இருக்குமாறு வரமளித்தாரம் இந்த லக்ஷ்மிநரசிம்மர்.

இது  பிரகாரத்தில் இருக்கும் ஆண்டாள் சன்னதி. இங்க செவி வழியாகவும் சில வரலாறுகள் சொல்லபடுகின்றன. இங்க உள்ள பெரியவர் ஒருவரிடம் இந்த கோவில்பற்றி கேட்டபோது அவர் சொன்னது...,நரசிம்மர் தூணிலிருந்து தோன்றியதால் ஒரு தூணையே நரசிம்மராக 3 ம் நூற்றாண்டில் வழிபாடு செய்து வந்துள்ளார்கள்.அதன் பின்  பல்லவர்கள்தான் நரசிம்மருக்கு கோயில் கட்டி சிலை பிரதிஷ்டை செய்தார்கள்.

அதை பற்றிய செவிவழிக்கதை....., முன்காலத்தில் தமிழகத்தில் சமண ஆதிக்கம் நிலவி வந்தது. இந்த இடத்தை ஆண்ட பல்லவ மன்னன் சமண சமயத்தைச் சேர்ந்தவனாக இருந்தான். திருநீறும், திருமண்ணும் துவேஷத்தோடு பார்க்கப்பட்டன. கோயில்கள் பரமசிவனுடையதாக இருந்தாலும், சரி பரந்தாமனுடையதாக இருந்தாலும் சரி இடிக்கப்பட்டன. பல்லவனின் கொடுமையை எதிர்த்துக் குரல் கொடுத்தார் நரஹரி என்ற வைணவ ரிஷி. அவரைக் கொல்ல ஆணையிட்டான் மன்னன். வெகுண்டாராம்  நரஹரி. என்னைக் கொல்ல ஆணையிட்ட உனக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடிக்கட்டும். உன் உடல் அழுகட்டும் என்று சாபமிட்டுக் காற்றோடு கரைந்தாராம் நரஹரி. மன்னனை பிரம்மஹத்தி தோஷம் பிடிக்க, உடல் வேதனையால் துடிக்க, மன்னனின் கெட்ட காலம் ஆரம்பித்தது. மன்னன் பைத்தியம் பிடித்தவன் போலானான்.

சாபவிமோசனம் பெற நரஹரியை நாடெங்கும் தேடினான் மன்னன். ஆனால் அவர் கிடைக்கவில்லை. நோய் முற்றி புழுக்கள் உடலில் நெளியவே மன்னனின் மனைவி மக்கள் கூட அவனை வெறுத்து ஒதுக்கினார்கள். நாட்டை விட்டே வெளியேறிய மன்னன் ஒரு நாள்... தென்பெண்ணையாற்றின் வடகரையில் ஒரு பூவரச மரத்தடியில் களைப்புடன் விதியை நொந்தபடி படுத்திருந்தான். அவன் ஆணவம் அழிந்து ஆதிக்க வெறியில் தான் செய்த பாவங்களுக்காகக் கண்ணீர் விட்டு கலங்கி சோர்ந்து அப்படியே தூங்கி விட்டான். திடீரென்று விழித்தபோது, அவன் மேல் ஒரு பூவரச இலை விழுந்திருந்தது.

இது மூலவர் சன்னதிக்குள் போகும் வழியில் இருக்கும்  சிற்பம் இவரையும் வணகிவிட்டு ஸ்தல புராணத்தை தொடர்வோம் .. 


கீழே விழுந்த அந்த இலையின் அதிர்வைக்கூட அவனால் தாங்க முடியாமல் அந்த இலையை நகர்த்த எண்ணி அதைக் கையில் எடுத்தான். அதில் லட்சுமி நரசிம்மர் உருவம் தெரிந்தது. பூவரச இலையில் பூத்த முறுவலுடன் நரசிம்மர் அன்னையுடன் சேர்ந்து இருப்பதைக் கண்டான். அவனையும் அறியாமல் கைகள் கூப்பின. கண்ணீர் பெருகியது. அப்போது வானிலிருந்து ஒரு அசரீரி ஒலித்தது.


 மன்னா, கோயில் கட்டுவதாக நினைத்தாலே கோடி புண்ணியம் உண்டாகும். நீ எத்தனை கோயில்களை இடித்திருக்கிறாய். அதற்குப் பிராயச்சித்தம் செய்தே ஆக வேண்டும். இந்தப் பூவரச மரத்தடியிலேயே லட்சுமி நரசிம்மருக்கு கோவில் எழுப்பு. அதுவே பூவரசமங்கலம் எனப் பெயர் பெறும் என்றும்,  மேலும் இந்தக் கோயில் கட்ட வேண்டும் என்ற எண்ணம் உன் மனத்தில் எழுந்த மறுகணமே உனக்கு விடிவு காலம் பிறக்கும்` எனசொல்லியதாம்.


 மன்னன் கோயில் கட்ட நினைத்த மறுகணமே அவன் உடலில் தெம்பு வந்தது. உடனே கோயில் கட்டும் வேலையில் ஈடுபட்டான். மனம் மாறவே, மதமும் மறைந்தது. மன்னன் மறுபடியும் மாமன்னன் ஆனான்.பூவரச மங்கலத்தில் லட்சுமி நரசிம்மப் பெருமாளின் அருளாட்சியும் தொடங்கியது எனவும் செவி வழி கதை சொல்லபடுகிறது.

 இதுதான் மூலவர் திருமேனி. நீண்ட ஒரு வழியோடு சென்றால் கருவறையில் அழகு சொரூபமாக நரசிம்ம மூர்த்தியும், அமிர்தவல்லி தாயாரும் அருள் பாலிக்கின்றனர். இத்திருக்கோவிலில் இருக்கும் தாயார் அமிர்தத்திற்கு இணையான பலனை கொடுக்கவல்லவள். இதனால் அமுதவல்லி என திருநாமம் கொண்டு அழைக்கபடுகிறாள்.
கருவறையில் லட்சுமி நரசிம்மர் நான்கு கரங்களுடன் காணப்படுகிறார். இரண்டு கரங்களில் சங்கும் சக்கரமும் காணப்படுகின்றன. ஒரு கையால் லட்சுமியை (அமிர்தவல்லித் தாயாரை) அனைத்துக்கொண்டிருக்கிறார். வலது கை அருள் காட்டுகிறது. இடது காலை மடக்கி வைத்து அதில் லட்சுமியை அமர்த்தியுள்ளார். நரசிம்மருடைய மடியில் பெருமிதத்துடன் தாயார் அமர்ந்திருக்கிறார். வலக்கரம் அன்புக்கரமாக அண்ணலைத் தழுவிக் கொண்டிருக்கிறது. ஒரு கண் அண்ணலை நோக்குகின்றது. மற்றொரு கண் பக்தர்களை நோக்கியுள்ளது. இது போன்ற அமைப்பு இந்த பூவுலகில் வேறு எங்கும் இல்லை.

உள்பிரகாரம் வலம் வந்த பின் இந்த வழியாகதாகவும் வெளியே வரலாம். 
இதற்கும் ஒரு வரலாறு உண்டு. முனிவர்களின் வேண்டுகோளுக்கிணங்க நரசிம்மர் இத்தலத்தில் மகாலட்சுமியை தன் இடது மடியில் அமர்த்தி காட்சி அளித்தார். அப்போது லட்சுமி முனிவர்களை பார்க்காமல் நரசிம்மரையே பார்த்தார். உடனே  நரசிம்மர், ""நீ முனிவர்களை பார்த்து அருள்பாலிக்காமல் என்னை மட்டும் ஏன் பார்த்து கொண்டிருக்கிறாய்' என்றார். அதற்கு லட்சுமி,"" கோபமாக உள்ள நீங்கள் உங்களது வெப்பத்தை, தரிசிக்க வரும் பக்தர்களிடம் காட்டக்கூடாது. எனவே தான் நான் உங்களையே பார்த்து கொண்டிருக்கிறேன்' என்றார். அதன் பின் நரசிம்மரின் கட்டளைக்கிணங்க லட்சுமி ஒரு கண்ணால் நரசிம்மரையும், மற்றொரு கண்ணால் பக்தர்களையும் பார்த்து அருள்பாலித்து வருகிறாள். 


பூவரசன்குப்பத்தில் சப்தரிஷிகளுக்கும், முனிவர்களுக்கும் காட்சித் தந்த நரசிம்மபெருமாள்  இவற்றில் பூவரசன்குப்பம் நடுவில் இருக்க, இதைச்சுற்றி சோளிங்கர்நரசிம்மர், நாமக்கல்நரசிம்மர், அந்திலிநரசிம்மர், சிங்கப்பெருமாள்கோவில் (தென்அகோபிலம்), பரிக்கல்நரசிம்மர், சிங்கிரி கோவில்லட்சுமிநரசிம்மர், சித்தனைவாடிநரசிம்மர் ஆகியதலங்கள் அமைந்துள்ளன.  இதில் பூவரசன்குப்பம், பரிக்கல், சிங்கிரிகோவில் ஆகிய மூன்று தலங்களும் ஒரே நேர்க்கோட்டில்அமைந்துள்ளன. இதுமட்டும் இல்லாம இன்னும் நிறைய தலங்களில் நரசிம்மர் கோவில் கொண்டுள்ளார். நாம் முந்தைய பதிவில் பார்த்த ஆப்பூர் நித்யகல்யாண நரசிம்மர் திருக்கோவில் இதுபோல் பல கோவில்கள் இருக்கு.

 திருமால் ஸ்ரீதேவியை மடியில் அமர்த்திக்கொண்டு காட்சியளிக்கும் திருக்கோலம் லக்ஷ்மி நாராயணசுவாமி என அழைக்கபடுகிறார். அதேப்போல் லக்ஷ்மிதேவியை மடியில் அமர்த்திக்கொண்டு காட்சிதரும் நரசிம்மமூர்த்தி, ”லக்ஷ்மி நரசிம்மமூர்த்தி” என அழைக்கபடுகிறார். பிரகாரத்தினுள் ஆண்டாள் சன்னதியின் அடுத்து வேணுகோபால் சன்னதி இருக்கு. அடுத்து ஆஞ்சநேயர் சன்னதியும் இருக்கு. மேலும், இதேபோல் அமைப்பு  ஆந்திர மாநிலத்தில் கிருஷ்ணாநதிக்கரையில்- நாகார்ஜுனா அணைக்கும் விஜயவாடா நீர்த்தேக்கத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் மங்களகிரி லட்சுமிநரசிம்மர், வாடப்பள்ளி நரசிம்மர், வேதாத்திடை யோகநரசிம்மர், மட்டப்பள்ளி லட்சுமிநரசிம்மர், ஜ்வாலா நரசிம்மர் எனபுகழ் பெற்ற ஐந்துநரசிம்மர் ஆலயங்கள் இருக்கிறது. 

திருக்கோவில் பிரகாரத்தினுள் இராமானுஜரும் நாகசன்னதியும் இருக்கிறது.  மேலும் இந்த லக்ஷ்மி நரசிம்மபெருமாளை 48 நாட்கள் விரதமிருந்து உள்ளன்போடு வழிபட்டால் கடன்தொல்லைகள் தீரும். பதவி உயர்வு வந்து சேரும் மற்றும் எதிரிகள் எல்லாம் இல்லாமல் நண்பர்களாகி விடுகிறார்கள் எனபது ஐதீகம்.  இந்த திருக்கோவிலில் பஞ்சராதிர ஆகமப்படி இரண்டு காலபூஜைகள் நடக்கின்றன. இதில் மற்றுமொரு சிறப்பு சித்திரை மாதம் நடக்கும் நரசிம்ம ஜெயந்தியன்று சகஸ்ரகலச திருமஞ்சனம் இந்த விழா இங்கு சிறப்பாக கொண்டாடபடும்.

ஸ்ரீலட்சுமி நரசிம்மபெருமாளை வேண்டினால்  கடன் தொல்லை தீரும், பொருள்கள்  குவியும், இங்கே உற்சவர் வரதராஜ பெருமாள் இவர் ஸ்ரீதேவி பூதேவி சமேத காட்சி தருகிறார்.  இதுதான் சுவாதி மண்டபம் தினமும் இங்கே அன்னதானம் நடைபெறுகிறது. சுவாதி நட்சத்திரத்தன்று விசேஷ வழிபாடுகள் மற்றும் பூஜைகள் உண்டு 


அதுபற்றிய சிறப்புதகவல்களை இந்த திருக்கோவில் பட்டர்களான பார்த்தசாரதி ( 95851 78444) மற்றும் நரசிம்மன் (97518 77555) ஆகியோர்களை தொடர்புக் கொண்டு தகவல்களை பெறலாம்.  மீண்டும் அடுத்தவாரம் புண்ணியம் தேடி பயணத்தில் வேறொரு திருக்கோவிலில் இருந்து சந்திக்கலாம்.

நன்றி! வணக்கம்!

இறைவியிடம் ராஜி வாங்கிய வரத்தினை இங்கு போய் படிச்சுப் பாருங்க.