Saturday, May 14, 2022
1400 வருட பழமையான லஷ்மி நரசிம்மர் ஆலயம்- சிங்கிரி- புண்ணியம் தேடி
Friday, January 22, 2021
நாகதோஷம் போக்கும் 60 அடி நாகர், திருச்செங்கோடு - புண்ணியம் தேடி
Friday, December 18, 2020
உலகத்திலேயே ஒரே அர்த்தநாரீஸ்வரர் ஆலயம் - திருச்செங்கோடு- புண்ணியம் தேடி
Thursday, November 05, 2020
அருள்மிகு ஸ்ரீஅமிர்தாம்பிகை சமேத ஸ்ரீசந்திரசேகரர் சுவாமி -காமக்கூர் - புண்ணியம் தேடி
மன அமைதிக்குதான் கோவிலுக்கு போறதே! புகழ்பெற்ற கோவிலுக்கு போகும்போது நேரம், பயணக்களைப்பு, கோவில் நடைமுறை, கூட்டம் என பல காரணங்களால் கசப்பான அனுபவத்தை பலர் அனுபவித்திருப்போம்.. ஆனா, அதிக பிரபலமாகாத கோவில்களுக்கு போனால், கசப்பான அனுபவம் நேராது. அதேநேரத்தில் மன அமைதியும் கிட்டும். உள்ளூர் கோவில் என்றால் நேரம், பணம், உடல் உழைப்பு மிச்சமாகி புண்ணியத்தோடு நல்லதொரு அனுபவமும், நம்ம வட்டாரத்துல இவ்வளவு பிரபலமான கோவில் இருக்கான்னு ஆச்சர்யமும் ஏற்படும்.
Friday, September 04, 2020
ஒரே கோவிலில் ஒன்பது பெருமாள் அவதாரங்களை தரிசிக்கனுமா?! - புண்ணியம் தேடி..
Friday, June 26, 2020
அருள்மிகு சோழராஜா திருக்கோவில், ஒழுகினசேரி-புண்ணியம் தேடி ஒருபயணம்.
லாங்க்.. லாங்க்.. அகோ.. ஒன்ஸ் அப்பான் எ டைம்.. கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் கோவில்களை பற்றிய தொடர் ஒன்றை பதிஞ்சது உங்களுக்கு நினைவிருக்கலாம். இப்ப லாக் டவுன் காரணமா எங்கும் போகமுடியாத சூழல். ஆடின காலும், பாடின வாயும் மட்டுமல்ல ஊர்சுற்றி எஞ்சாய் பண்ணினதை பதிவாக்கின மனசும் சும்மா இருக்காது. பதிவாக்காக எங்காவது போகலாம்ன்னா முடியல. எதையாவது மீள் பதிவா போட்டுக்கலாம்ன்னு முடிவு பண்ணியாச்சுது. சரி, எருமைமாடு அசை போடுற மாதிரி டூர் போய் வந்த போட்டோக்களை பார்த்துக்கிட்டே வரும்போது சில கோவில்களை பதிவாக்காம இருந்தது தெரியவர லாஸ்ட் பாலில் சிக்ஸர் அடிச்சு ஜெயிச்ச மாதிரி ஒரு பீல் வந்துச்சு.. உடனே இன்னிக்கு அதை பதிவாகவும் போட்டாச்சுது.
Friday, June 12, 2020
ராகு-கேது தோஷம் நீக்கும் திருப்பாம்புரம்- புண்ணியம் தேடி
Friday, January 31, 2020
சாக்லேட் மாலை அணியும் முருகன் - புண்ணியம் தேடி.....
நான் சொன்னா, நம்ப மாட்டீங்க. கேரள மாநிலம், ஆலப்புழாவில் இருக்கும் செம்மோத் ஸ்ரீசுப்ரம்ணய ஸ்வாமி திருக்கோவிலுக்கு ஒரு எட்டு போய் பார்த்தீங்கன்னா நான் சொல்றது உண்மைன்னு தெரியும். முருகன் பாலகனாய் இங்கு காட்சி தருகிறார். இந்தக்கால பாலகர்களுக்கு மன்ச் சாக்லேட்ன்னா ரொம்ப இஷ்டம்ன்னு நான் சொல்லித்தான் தெரியனுமா?! நம்ப பிள்ளைகளைப்போல முருகனுக்கும் மன்ச் சாக்லேட்டை பிடிச்சு போக ரெண்டு மூணு கதை சொல்றாங்க.
படங்கள் கூகுள்ல சுட்டது...
நன்றியுடன்,
ராஜி.
Friday, August 02, 2019
கந்தர் சஷ்டி அரங்கேறிய தலம்- புண்ணியம் தேடி....



ஒரு இந்தியன் தனக்கு ஈடாக இங்கிலீஷில் பேசுவதை பொறுக்காத அதிகாரி, கோபத்துடன் “மரத்தை வெட்டறதுமில்லாம, திமிரா பேசும் இவனை மரத்தில் கட்டி வைங்க என உத்திரவிட்டான். அவரது உத்தரவை செயல்படுத்த தயங்கிய ஊழியர்கள், சார்! இவர் பெரிய மகான், இவரை தண்டிச்சா நமக்குதான் ஆபத்து, என தாங்கள் பயப்படும் காரணத்தை சொன்னாங்களாம்.







சென்னிமலையில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த ஒருவன், தன் பசுமாடு ஒன்று, ஓரிடத்தில் பால் தானாய் சுரப்பதை கண்டார். தினமும் அதே இடத்தில் அந்த பசுமாடு பால் சொரிவதை கண்டு, என்னவாய் இருக்குமென அந்த இடத்தை தோண்டி பார்க்க, அழகிய முருகன் சிலை ஒன்று இருப்பதை கண்டார். மேலும் தோண்டி அதை வெளியில் எடுக்க தோண்டும்பொழுது, ரத்தம் பீறிட்டு வந்ததாம். பயந்து, மலையிலிருந்த சரவணமாமுனிவரை கேட்க, இப்படியே காட்சி தர முருகன் விரும்புகிறான் போல! அதனால், மேலும் தோண்டவேண்டாம் என சொல்ல, மேலும் தோண்டாமல் நிறுத்திவிட, அன்றிலிருந்து இன்றுவரை அச்சிலை அப்படியே பூர்த்தி செய்யப்படாமல் இருக்கின்றது.








இக்கோவிலுக்கு ஈரோட்டிலிருந்து பெருந்துறைக்கு செல்லும் வழியில் போனால் 33 கிமீ. பெருந்துறையில் இருந்து 14 கி.மீ. தொலைவில் சென்னிமலை இருக்கு. தினமும் காலை 6 மணி டூ 11 மணி வரையிலும், மாலை 4 மணி டூ இரவு 8 மணி வரையிலும் கோவில் திறந்து இருக்கும். கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், உள்ளிட்ட முருகனுக்கு உண்டான அத்தனை பண்டிகைகளும் இங்கு விசேசமாய் கொண்டாடப்படுது.
நன்றியுடன்,
ராஜி

































