Wednesday, January 02, 2019

ஆங்கில புத்தாண்டின் வளர்ச்சி - மௌன சாட்சிகள்

ஆங்கிலேயர்கிட்ட அடிமைப்பட்டு கிடப்பதை கௌரவக்குறைச்சலா நினைச்சு அவனை விரட்டியடிச்சுட்டு, அவன் விட்டுப்போன கொண்டாட்டங்களை மட்டும் விமர்சையா கொண்டாடிக்கிட்டிருக்கோம்ஆங்கில புத்தாண்டு இப்ப எல்லா இடத்திலும் களைக்கட்ட ஆரம்பிச்சாச்சு! வாணிப நிறுவனங்கள்லாம் போட்டி போட்டுக்கிட்டு தங்களுக்குள் ஆஃபர்களை போட்டு கல்லா கட்டுறாங்க.

அதுப்போல பெருநகரங்கள்ல புத்தாண்டுக் கொண்டாட்டம் விதம்விதமா களைக்கட்டுது. நேற்றைய தினம் மட்டும் 327 சாலை விபத்துகள் நடந்திருக்கு. இது சென்னையில் மட்டுமே! கிட்டத்தட்ட  2கோடி ரூபாய்க்குமேல டாஸ்மாக் வருமானம் வந்திருக்கு. இது வேலூரில் மட்டுமே!  சென்னை, மும்பை மாதிரியான பெருநகரங்களில் நள்ளிரவு கொண்டாட்டம்ன்ற பேரில் நடந்தேறிய வேண்டாத வேலைகள்லாம் இப்ப சின்னச்சின்ன நகரங்களில் தலைக்காட்ட ஆரம்பிச்சிருக்கு. வீதிக்கு வீதி நள்ளிரவில் கேக் வெட்டுறதும், பைக் ரேஸ்ன்னு வீணாய் திரியுதுங்க. எதுக்கு இந்த தேவையில்லாத ஆடம்பரம்!? பொது இடத்தில் அதிகாலைவரை கும்மாளம்!? இதெல்லாம் கொண்டாடுறோமே ஆங்கில புத்தாண்டுக் கொண்டாட்டம் எப்படி வந்ததுன்னு தெரிஞ்சுக்கலாம்ன்னு மெனக்கெட்டதுல வந்த பதிவுதான் இது.

மேல இருக்கும் படத்தில் இருப்பது எகிப்து காலெண்டர். உலகின் பல்வேறு வகையான நாடுகளுக்கு, பல்வேறு வகையான மொழிகளுக்கு, பல்வேறு வகையான இனங்களுக்குன்னு தனித்தனியா காலண்டர்கள் இருக்கு. இன்றைய வருடம் 2019ஐ ஒப்பிடும்போது ஆசிரியன் காலண்டர் 6762 ஆண்டுகள் கொண்டது.  புத்தமத காலண்டர் 2557 வருடங்கள் கொண்டது சைனீஸ் காலண்டர் டிராகன் மற்றும் பாம்பு காலண்டர்கள் 4609 வருடங்கள் கொண்டது. ஹீப்ரு காலண்டர் 5774 ஆண்டுகள் கொண்டது ஹோலோசியன் காலண்டர் 12013 வருடங்கள் கொண்டது. கொரியம் 4346 வருடங்கள் கொண்டது. எகிப்த் காலண்டர் 4236 B.C.,ஆண்டுகள் கொண்டது.

மேல முதலில் இருப்பது சைனீஸ் காலெண்டர். அடுத்து பல்கேரியன். அதனையடுத்து பாபிலோனியன் காலண்டர்கள் குறித்த படங்கள் இவை. இந்த புதுவருட கொண்டாட்டங்கள்லாம் இயேசு கிறிஸ்து பிறப்பதற்குமுன் பழைய காலங்களில் எல்லாம் வசந்தகால தொடக்கமான மார்ச் மாதத்தில்தான் கொண்டப்பட்டு வந்தன.  இயேசு கிறிஸ்து பிறப்பதற்குமுன் இருந்த சுமார் 2000 முற்பட்ட  மெசப்படோமியா நாகரிகத்தில் மார்ச்மாத மத்தியில்தான் கொண்டாடப்பட்டதாம். அப்பதான் வசந்தகாலம் தொடங்கும் சமயம். முற்கால  ரோமானியர்கள்கூட மார்ச் 1ம் தேதியைத்தான் புத்தாண்டின் முதல்நாளாக கொண்டாடினார்கள். அதுவும் அந்த காலண்டரில் வெறும் பத்து மாதங்கள் கொண்டவையாகத்தான் இருந்ததாம்.

அவர்கள் மாதங்களை அந்தந்த எண்களுடனே தொடர்புப்படுத்தி இருப்பதாகவே காலண்டர்களை வடிவமைத்தனர்.   லத்தின்   மொழியில் 
Septemன்னா seven என்பதையும்Oct ன்னா eight என்பதையும், Novem என்றால்  nine என்பதையும்.decem என்றால் ten  என்பதையும்   குறிப்பதாகவும் வடிவமைத்தனர்.




முதன்முதலில் கி.மு 153 ம் வருடத்தில்தான் ஜனவரி1 வருடத்தின் முதல்நாளாக கொண்டாடப்பட்டதாம்.  கி.மு 700 முன்புவரை ஜனவரி அவங்க காலண்டரில் இல்லையாம். அதன்பிறகு ரோமனின் 2வது அரசன் நுமாபண்டிளியஸ் ஜனவரியையும், பிப்ரவரியையும் சேர்த்தாராம். அதன் பிறகுகூட சிலசமயங்களில் மார்ச் 1ம் தேதிகளில் புதுவருட கொண்டாட்டாங்கள் கொண்டாடபட்டதாம். அதன்பிறகு  கி.மு 46ல் இருந்த ரோமானிய அரசன் ஜூலியஸ் சீசர் சூரியமண்டலத்தை அடிப்படையாகக் ண்ட ஒரு புதிய ஜூலியன் காலண்டரை உருவாகினாராம். ஜூலியன்  நாட்காட்டி என்பது கிமு 46 இல் ஜூலியஸ் சீசரினால் அறிமுகப்படுத்தப்பட்டு கிமு 45இல் பயன்பாட்டுக்கு வந்த நாட்காட்டியாகும். இது ரோமில் பயன்பாட்டில் இருந்த நாட்காட்டி முறையில் காணப்பட்ட குறைபாடுகள் காரணமாக வானியல் அறிஞர் அலெக்சாந்திரியாவின் சொசிசெனசு என்பவரின் கருத்துக்கமைய சராசரி வெப்ப வலய சூரிய ஆண்டுக்கேத்தவாறு அமைக்கப்பட்டது. அது 12 மாதங்களையும், 365 நாட்களையும் கொண்ட சாதாரண ஆண்டையும், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை பிப்ரவரியில் மேலதிக ஒரு நாளைக் கொண்ட லீஃப் ஆண்டாக வடிவமைக்கப்பட்டது. 

இந்த ஜூலியன் சராசரி ஆண்டு 365.25 நாட்களாகும். வெப்ப வலய சூரிய ஆண்டு உண்மையில் 365.25 நாட்களை விட 11 நிமிடங்கள் குறைவானதாகும். ஜூலியன் நாட்காட்டியில் இந்த  மேலதிகமான 11 நிமிடங்கள் ஒவ்வொரு நான்கு நூற்றாண்டுகளிலும் நாட்களை அதிகமாகத் தருகிறது. இந்த நாள் பிரச்சினையைத் தீர்ப்பதற்காககிபி 16ம் நூற்றாண்டளவில்சில நாட்காட்டி நாட்கள் அகற்றப்பட்டு கிரெகோரியன் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம்கிரெகோரியன் நாட்காட்டியில் நான்கு நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை மூன்று நெட்டாண்டு நாட்கள் அகற்றப்பட்டன. 20ம் நூற்றாண்டு வரை யூலியன் நாட்காட்டி சில நாடுகளில் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. ஆனாலும் தற்போது அனேகமாக அனைத்து நாடுகளிலும் கிரெகோரியின் நாட்காட்டியே பயன்படுத்தப்பட்டு வருது. ரோமன் கத்தோலிக்கத் திருச்சபைகீழைத்தேய கத்தோலிக்கத் திருச்சபைகள் மற்றும் சீர்திருத்தத் திருச்சபைகள் கிரெகோரியன் நாட்காட்டியைப் பயன்படுத்துகின்றன. ஆனாலும்கிழக்கு மரபுவழி திருச்சபை உயிர்த்த ஞாயிறு போன்ற புனித நாட்களை கணக்கிடுவதற்கு  ஜூலியன் நாட்காட்டியையேப் பயன்படுத்துகின்றது. வட ஆப்பிரிக்காவின் பெர்பெர் மக்கள் ஜூலியன் நாட்காட்டியையே தற்போதும் பயன்படுத்துகின்றனராம் .
அதன்பிறகு வந்த கிரிகோரியன் காலெண்டர் இயேசுவின் விருத்த சேதன விழா நாளும் இந்நாளிலேயே கிறிஸ்துவ  தேவாலயங்களை  சேர்ந்தவர்களால் கொண்டாடப்படுது. இந்நாட்களில் பல உலக நாடுகளும் கிரிகோரிய நாட்காட்டியையே தங்களது பொதுவான நாட்காட்டியாகப் பயன்படுத்துகின்றனர். மேலும்இந்தப் புத்தாண்டு நாளே உலகின் அதிகமாகக் கொண்டாடப்படும் நாளாகும். 

எங்கப்பா காலத்துலலாம் காலையில் எழுந்து குளிச்சு கோவிலுக்கு போய் அறுசுவை உணவு சாப்பிடுவாங்க. அன்னிக்கு கண்டிப்பா இன்ப்போடு துவர்ப்பு சுவை உணவும், கசப்பு சுவை சேர்ந்த உணவும் சேர்த்துக்குவாங்க. சொந்தக்காரங்களோடு சந்தோசமா இருப்பாங்களாம். இதுலாம் தமிழ்  புத்தாண்டுக்கு மட்டுமே. ஆங்கில புத்தாண்டுலாம் மற்றொரு நாளே! .


நான் சின்னப் புள்ளையா இருந்தப்போ, ஒரு வாரத்துக்கு முந்தியே க்ரீட்டிங்க்ஸ் வாங்கி ஃப்ரெண்ட்ஸ், சொந்தக்காரங்களுக்கு அனுப்பிட்டு  பார்த்து, நைட் 12 மணி வரை முழிச்சிருந்து, தெருவிலிருக்குறவங்களுக்கும், தெரு அக்காக்களை சைட்டடிக்க வரும் அண்ணன்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துச் சொல்லி, புத்தாண்டு அன்னிக்கு கோவிலுக்கு போய் இறைவனை தரிசித்து வடை, பாயாசத்தோடு விருந்து சாப்பிட்டு, ஹாயா தூங்கி எழுந்து, மாலை நேரத்துல பொதிகை சேனல்ல போடும் சிறப்பு நிகழ்ச்சிகளை  கொண்டாடினோம்.

சில வருடத்துக்கு முந்திவரைகூட நைட் 12 வரை டிவியில் ஒரு நோட்டமும், கம்ப்யூட்டர், லேப்டாப், மெயிலும், க்ரீட்டிங்க்ஸ் அனுப்பிக்கிட்டும் வாழ்த்துச் சொல்லி, புத்தாண்டுக் கொண்டாடி இனிப்போடு, பிரியாணி, கொழம்புன்னு வெளுத்துக் கட்டி, மொபைல்ல எல்லோருக்கும் வாழ்த்துச் சொல்லி, டிவில படம் பார்த்து வந்த கூட்டம், இப்ப மெல்ல மெல்ல இரவு கொண்டாட்டம், அவுட்டிங்க், பிக்னிக்ன்னு போக ஆரம்பிச்சாச்சு. புதுவருச கொண்டாட்ட சாவுகள், விபத்துகள், பாலியல் அத்துமீறல்கள்ன்னு செய்திதாள்களில் படிக்கும்போது மனசு கனக்குது. இதுவா வளர்ச்சி?!


மீள்பதிவு
நன்றியுடன்.,
ராஜி

6 comments:

  1. நிறைய தகவல்கள்.

    நானும் ஜஸ்ட் க்ரீட்டிங்க் தான் செய்து அனுப்பியதுண்டு. அதுக்கு அப்புறம் அது விட்டுப் போச்சு அப்புறம் வாழ்த்து சொல்லுவதும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது...அதாவது நானாகச் சொல்லுவது...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நான் அதும் சொல்வதில்லை கீதாக்கா. வலைப்பூவில் மட்டுமே வாழ்த்துவதுலாம்..
      இந்த நாளும் மற்றொரு நாளேன்னு பக்குவப்பட்டாச்சு

      Delete
  2. நிறைய தகவல்கள் ராஜி க்கா...

    நாங்க நல்லா சமைச்சு சாப்பிட்டு , தூங்கி, tv பார்ப்போம் ..அவ்வொலோ தான்

    ஆன வெளியில் பார்க்கும் போது புது வருட கொண்டாட்டம் எல்லாம் எங்கயோ போகுது ..கொஞ்சம் பக்கு ன்னு தான் இருக்கு ...

    ReplyDelete
    Replies
    1. பாரதக்கண்டம் பாழ்பட ஆரம்பிச்சாச்சு

      Delete
  3. அருமையான பதிவு........எங்கினையோ படிச்சிருக்கேன்.... நீங்க தான் எழுதினீங்களோ தெரியல....... நன்றி பதிவுக்கு...தங்கச்சி....

    ReplyDelete
    Replies
    1. 2014ல போட்ட பதிவு. மீள்பதிவுன்னு போட்டிருக்கேனே பார்க்கலியா?!
      https://rajiyinkanavugal.blogspot.com/2014/01/blog-post.html

      Delete