இந்த பாடலை இரவுப்பயணத்தில் கேட்க பிடிக்கும்... காதல் பாடல் ,மாதிரி தெரிந்தாலும், மெல்லிய சோகம் இந்த பாட்டில் இழையோடும்..
வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா?!
பேசும் கண்ணுக்கு என்னை புரியாதா?!
அன்பே உந்தன் பேரைத்தானே விரும்பி கேட்கிறேன்..
போகும் பாதை எங்கும் உன்னை திரும்பி பார்கிறேன்..
வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா?!
பேசும் கண்ணுக்கு என்னை புரியாதா?!
என்னையே திறந்தவள் யார் அவளோ?!
உயிரிலே நுழைந்தவள் யார் அவளோ?!
வழியை மறித்தாள் மலரை கொடுத்தாள்!!
மொழியை பறித்தாள் மௌனம் கொடுத்தாள்!!
மேகமே மேகமே அருகினில் வா...
தாகத்தில் மூழ்கினேன் பருகிட வா..
வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா?!
பேசும் கண்ணுக்கு என்னை புரியாதா?!
சிரிக்கிறேன் இதழ்களில் மலருகிறாய்!
அழுகிறேன் துளிகளாய் நழுவுகிறாய்!
விழிகள் முழுதும் விரலா இருளா!
வாழ்கை பயணம் முதலா முடிவா?!
சருகென உதிர்கிறேன் தனிமையிலே...
மௌனமாய் எரிகிறேன் காதலிலே...
மேகம் போலே என் வானில் வந்தவளே!
யாரோ அவளுக்கு நீதான் என்னவளே!
மேக மேக மேக கூட்டம் நெஞ்சில் கூடுதே!
உந்தன் பேரை சொல்லி சொல்லி மின்னல் ஓடுதே!
வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா
பேசும் கண்ணுக்கு என்னை புரியாதா
படம் : உல்லாசம்
இசை : கார்த்திக் ராஜா
பாடலாசிரியர்: பழனி பாரதி
பாடியவர் : ஹரிஹரன்
இசை : கார்த்திக் ராஜா
பாடலாசிரியர்: பழனி பாரதி
பாடியவர் : ஹரிஹரன்
பாட்டு கேட்டது உண்டு. அத்தனை ரசித்ததில்லை.
ReplyDeleteகேட்டிருக்கிறேன்.
ReplyDeleteஇசையும் தாலாட்டும்...
ReplyDeleteசுகமான பாடல் ..
ReplyDelete