Monday, February 10, 2020

காதல் என்னவெல்லாம் செய்யும்?!- பாட்டு புத்தகம்


ஒரு பாட்டு என்னவெல்லாம் செய்யும்?! பாட்டு யோசிக்க வைக்கும், அழ வைக்கும், திருந்த வைக்கும், கண்மூடி தூங்க வைக்கும், எரிச்சல்பட வைக்கும், சங்கடப்பட வைக்கும்.... இன்னும் சொல்லப்போனா அதனுடனே வாழவைக்கும் என இந்த பாட்டை கேட்டப்பின் தான் உணர்ந்தேன். காதல்ன்னா என்ன?! அது மனசுல இருக்கா?! இல்ல மூளையில் இருக்கா?! அதோட பலம் எது?! பலவீனம் எதுன்னு அரிதான தமிழ் வார்த்தைகளை வச்சு அற்புதமா வந்திருக்கும் பாட்டு இது,

எப்பயும்போல ரொம்பவே லேட் நான்.. அதான் இந்த பாட்டை இப்போதான் கேட்க நேர்ந்தது.வசீகரமான இசைதான். ஆனா, சிலருக்கு இரைச்சலாகூட இருக்கலாம்.  நாசர் பன்முக கலைஞர்ன்னு தெரியும் ஆனா, காதலை பற்றி எளிமையாய் இப்படி புரிய வைப்பார்ன்னு தெரியாது. பாடலின் பிற்பாதியில் வரும் ம்ம் தேடவேண்டாம் என தொடங்கும் காதலை பற்றிய வர்ணனையில் நவரசத்தையும் குரலில் காட்டி இருப்பார். 

காதலை கொண்டாடும் இந்த வாரத்தில் காதலை பத்தின பாட்டை கேட்டு பாருங்க..



பேரன்பே காதல்..
 உள்நோக்கி ஆடுகின்ற ஆடல்
சதா…
ஆறாத ஆவல்

 ஏதேதோ சாயல் ஏற்று
திரியும் காதல்
 பிரத்யேக தேடல்

 தீயில் தீராத காற்றில்
புல் பூண்டில் புழுவில்
உளதில் இளதில்

 தானே எல்லாமும் ஆகி
நாம் காணும் அருவமே

 இத்யாதி காதல்
இல்லாத போதும்
தேடும் தேடல்
சதா…
மாறாது காதல்
மன்றாடும் போதும்
மாற்று கருத்தில் மோதும்
மாளாது ஊடல்


 நாம் இந்த தீயில்
வீடு கட்டும் தீக்குச்சி
நாம் இந்த காற்றில்
ஊஞ்சல் கட்டும் தூசி

நாம் இந்த நீரில்
வாழ்க்கை ஊட்டும் நீர் பூச்சி
நாம் இந்த காம்பில்
காமத்தின் ருசி

 காதல் கண்ணீரில் சிலந்தி
காதல் விண்மீனின் மெகந்தி
காதல் மெய்யான வதந்தி
காலம் தோறும் தொடரும் டைரி

காதல் தெய்வீக எதிரி
காதல் சாத்தானின் விசிறி
காதல் ஆன்மாவின் புலரி
வாழ்ந்து பெற்ற டிகிரி

 ஓர்… விடைக்குள்ளே…
வினாவெல்லாம்… பதுங்குதே…
நாம்… கரைந்ததே…
மறைந்ததே… முடிந்ததே…

கொஞ்சும் பூரணமே வா
நீ… கொஞ்சும் எழிலிசையே
பஞ்ச வர்ண பூதம்
நெஞ்சம் நிறையுதே
காண்பதெல்லாம்… காதலடி…

 காதலே காதலே
தனி பெருந்துணையே
கூட வா கூட வா
போதும் போதும்

காதலே காதலே
வாழ்வின் நீளம்
போகலாம் போக வா
நீ... 

திகம்பரி…
வலம்புரி…
சுயம்பு நீ...
நீ…


பிரகாரம் நீ...
பிரபாபம் நீ...
பிரவாகம் நீ...
நீ…

ஆ ஆ...
சிருங்காரம் நீ…
ஆங்காரம் நீ…
ஓங்காரம் நீ...
நீ…

நீ…
அந்தாதி நீ…
அந்தாதி நீ…
அந்தாதி நீ…
நீ…

காதல் என்னவெல்லாம் செய்யும்?!

 ம்ம்…
தேட வேண்டாம்
முன் அறிவிப்பின்றி வரும்..
அதன் வருகையை
இதயம் உரக்க சொல்லும்..

காதல்…
காதல் 11ஒரு நாள் உங்களையும்
வந்தடையும்
அதை அள்ளி அணைத்துக் கொள்ளுங்கள்...
அன்பாக பார்த்துக் கொள்ளுங்கள்...
காதல் தங்கும்...
காதல் தயங்கும்...
காதல் சிரிக்கும்...
காதல் இனிக்கும்...

காதல், கவிதைகள் வரையும்...
காதல் கலங்கும் ...
காதல் குழம்பும்..
காதல் ஓரளவுக்கு புரியும்..
காதல் விலகும்..
காதல் பிரியும்..

கதவுகளை மூடாமல்
வழி அனுப்புங்கள்..
காத்திருங்கள்..
ஒரு வேளை காதல் திரும்பினால்?!
தூரத்தில் தயங்கி நின்றால்?!
அருகில் செல்லுங்கள்!!
அன்புடன் பேசுங்கள்...

போதும்…
காதல் உங்கள் வசம்..
உள்ளம் காதல் வசம்..
மாற்றங்கள் வினா
மாற்றங்களே விடை
காதல்…
படம்:  96
இசை: கோவிந்த் வசந்தா
எழுதியவர்: கார்த்திக் நேத்தா 
பாடியவர்: சின்மயி, கோவிந்த் வசந்தா, பத்ரா ராஜின், நாசர் 
நடிப்பு: திரிசா, விஜய் சேதுபதி

நன்றியுடன்,
ராஜி.

3 comments:

  1. படம் பார்க்கும்போது ஃபார்வேர்ட் செய்து விடுவேன் என்பதால் கேட்டதில்லை!  இனிதான் கேட்டுப்பார்க்க வேண்டும்!

    ReplyDelete