Showing posts with label கரும்பு. Show all posts
Showing posts with label கரும்பு. Show all posts

Saturday, February 02, 2019

சந்தைக்கு போகலாமா?! - கிராமத்து வாழ்க்கை 6

எப்பவோ வீட்டுக்கு வரும் விருந்தாளிகள் தரும் ஊர்க்காசு, அப்பா, அம்மா  எப்பவோ ஒருதரம் தரும் அஞ்சு பைசாவும், பத்து பைசாவும் தேவைகளை தீர்த்த காலம் பொற்காலம்.  இப்ப, எல்.கே.ஜி பையன்கூட சாக்லேட் வாங்க பத்து ரூபா கேக்குது.  காசில்லைன்னாலும் மகிழ்ச்சியுடன் இருந்த காலக்கட்டம் அது. ஆனா, இப்ப ஐநூறும் ரெண்டாயிரம் ரூபாய் நோட்டாய் கையில் புரண்டாலும் திருப்தி இல்லை. அன்றைய நாளில் உயிர்ப்போடு இருந்தோம். இந்நாளில் உயிரோடு இருக்கோம். அம்புட்டுதான். நினைவுகளை மீட்டெடுக்கும் ஒரு சின்ன முயற்சியான கிராமத்து வாழ்க்கையின் ஆறாவது பாகம். 

Image may contain: 1 person
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு கிழமையில் சந்தை போடுவாங்க.  நாங்க சின்ன வயசில் குடியிருந்த ஊரில் திங்கட்கிழமையில் சந்தை போடுவாங்க. ஆடு, மாடு, கோழி முதற்கொண்டு, கருவாடு, விதைகள், பொம்மை, ஊசி, பாசிமணி, சொம்பு, தட்டு,  கோலப்பொடி, மண்பானைன்னு சகலமும் கிடைக்கும் திறந்தவெளி சூப்பர் மார்க்கெட். ஒருவாரத்துக்கு தேவையான காய்கறிகளை வாங்கிட்டு வந்து வச்சுப்பாங்க. பக்கத்து நிலத்தில் விளைஞ்சதை சந்தைக்கு விவசாயிகளே கொண்டுவந்து விற்பதால், இடைத்தரகர்கள் இல்லாததால் விலைலாம் குறைச்சலா இருக்கும். இப்பயும் எங்காவது போகும்போது சந்தை இருந்தால் வீட்டுக்கு தேவையானதை வாங்கிப்பேன். மார்க்கெட், சூப்பர் மார்க்கெட், கடைகளைவிட விலையும் குறைவு, அளவும் அதிகம்.
Image may contain: sky, tree, outdoor and nature
வயல்வெளிகளில் அறுவடையான கரும்பினை ரோட்டோரத்தில் அடுக்கி வச்சிருப்பாங்க. அந்த பக்கம் போவோர் வருவோர் எடுத்துகிட்டு போனது மிச்சம்தான் விலைக்கு போகும். வண்டிகளில் கரும்பு போச்சுன்னா பின்னாடியே ஓடிப்போய் ஒன்றிரண்டு கரும்பை இழுத்துட்டு வந்தால்தான் திருப்தியே! அப்படி எடுக்குறவங்களை கண்டும் காணாம ஓட்டிக்கிட்டு போய்டுவாங்க. இப்பயும் எங்காவது வண்டி நின்னா கரும்பை எடுத்துக்கிட்டுதான் வருவேன். 
தென்னை மர பிஞ்சில், தென்னை துடைப்பம் குச்சிகளை, படத்திலிருக்குறமாதிரி சொருகி, சுழற்றும்போது டகடகடகன்னு ஒருமாதிரி சப்தம் வரும். பைசா இல்லாமயே பொழுது போனது.. மகிழ்ச்சியோடு...
Image may contain: food and text
அமாவாசை, கிருத்திகை, பண்டிகை நாட்களில் சாமி கும்பிடும்போது யாருக்கும் தெரியாம தேங்காயை ஒரு கடி கடிச்சுட்டு, சத்தம் காட்டாம அப்படியே வச்சிட்டு எலியார்மேல் பழிபோட்டது நான் சின்ன வயசில் செஞ்சது. அதுக்கு பழிவாங்க எலியார் என் கைவிரலை கடிச்சு, அதுக்காக ஊசி போடச்சொல்ல, ஊசிக்கு பயந்து அழுதிக்கிட்டே ஹாஸ்பிட்டலில் அங்குமிங்கும் ஓட, அப்பா அடிக்க, கைவளையல் உடைஞ்சு ரத்தம் வந்து காயமாக, அதுக்கும் சேர்த்து ரெண்டு ஊசியாய் போட்டுக்கிட்டது நான் அனுபவித்தது. 
மஞ்சள், ஆரஞ்ச், பச்சைன்னு பாட்டிலில் இருக்கும் திரவத்தின்மீது அத்தனை ஆசை. எலுமிச்சையை வெட்டி, பிழிஞ்சு, சர்க்கரை தண்ணி, சோடா சேர்த்து, இந்த கலர் தண்ணியை ஊத்தி, சில ஐஸ்கட்டிகளை போட்டு மிதக்கவிட்டு தருவாங்க.  சும்ம்மா சுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு மண்டைக்குள் ஏறி வரும்பாருங்க ஒரு புத்துணர்ச்சி... இருங்க! ஃப்ரிட்ஜ்ல நன்னாரி சர்பத் இருக்கு. ஒரு டம்ப்ளர் போட்டுக்கிட்டு வரேன். 
கொஞ்சம் வளர்ந்தபின் (வளர்ந்துட்டியா?! உடம்பால் சரி, மனசால், அறிவால்ன்னு யாரும் நமுட்டு சிரிப்பு சிரிக்கப்படாது) சபரிமலைக்கு போய்வரும்போது அப்பா வாங்கி வந்த விளையாட்டு சாமான்.  பொழுதன்னிக்கும் இதோடுதான். ரெண்டாவது முறை வாங்கி வரும்போது லைட்டோடு இருக்க மாதிரி வாங்கி வந்தார்., இன்னிக்கு ராத்திரியில்  மொபைலில் ஃபேஸ்புக் நோண்டுறமாதிரி,அன்னிக்கு இதோடு மல்லுக்கட்டிக்கிட்டிருந்தேன். 

மீண்டும் ஒரு நினைவு மீட்டலோடு சந்திக்கிறேன்..

நன்றியுடன்,
ராஜி

Sunday, January 12, 2014

பதிவர்கள்லாம் சேர்ந்துக் கொண்டாடும் சமத்துவ பொங்கல்



பதிவர் சந்திப்பு நடத்தி புத்தகம் வெளியிடுறது, குறும்படம் வெளியிடுறது மட்டும்தானே இத்தனை நாள் நாம செஞ்சோம். வெவ்வேற இடம்,மொழி, கலாச்சாரம், சாதி, மதத்து ஆளுங்கலாம் ஒண்ணு சேர்ந்துதானே எதுவா இருந்தாலும் கூடி கும்மியடிக்கிறோம். அதனால, இந்த பொங்கல் பண்டிகையை எல்லா பதிவர்களும் சேர்ந்து சமத்துவப் பொங்கல் வைக்கலாம்ன்னு ஒரு ஐடியா தோணவே மின்னல் வரிகள் கணேஷ் அண்ணா தலைமைல எல்லோரும் ஒண்ணுக் கூடியாச்சு. 

”மின்னல் வரிகள்”கணேஷ் : ஏம்மா ஆதி! பொங்கல் வைக்கும் இடத்தை சுத்தம் பண்ணி கோலம் போட்டு விடும்மா!

ஆதி வெங்கட்: போங்க கணேஷ் அண்ணா, இப்பதான் டெல்லி, ஸ்ரீரங்கம்ன்னு ரெண்டு இடத்துலயும் வீடு சுத்தம் பண்ணி, கோலம் போட்டதுல உடம்புக்கு முடியல. நீங்க வேற யார்கிட்டயாவது சொல்லிக்கோங்க. 

”மின்னல் வரிகள்”கணேஷ் : ஏம்மா! அமைதியான, அடக்கமான பொண்ணு நீயே செய்யலைன்னா வேற யார் செய்வாங்க!?

ஆதி வெங்கட்: ஏன்? உங்க தங்கச்சி சசிக்கிட்ட சொல்லுங்களேன். 

”மின்னல் வரிகள்”கணேஷ் :எங்கம்மா! அவளுக்கு கிராமத்து பாணில கவிதை எழுத வருமே தவிர, இதெல்லாம் தெரியாதும்மா!  

ஆதி வெங்கட்: சரி, சரி நானே செய்யுறேன். இதுக்கப்புறம் வேற எதும் செய்ய மாட்டேன்.

”மின்னல் வரிகள்”கணேஷ் : சரிம்மா! பானை வாங்க யாரை அனுப்பலாம்.

ஆரூர் மூனா செந்தில்: நான் போறேனே சார்.

”மின்னல் வரிகள்”கணேஷ் : ஒண்ணும் வேணாம். உன்னை அனுப்பினா எப்படி பஸ் ஏறினேன், ஆட்டோக்காரன் இடிச்சது முதற்கொண்டு பானை உடையாம கொண்டு வந்தது எப்படின்னு கதையா சொல்லி சாகடிப்பே. நான் யாரையாவது அனுப்புறேன்.

ஆரூர் மூனா செந்தில்: உங்க சிஷ்யன் சீனுவை அனுப்ப வேண்டியதுதானே!

”மின்னல் வரிகள்”கணேஷ் : ஐயோ! அவனையா!? அப்புறம் பானை விக்குறவங்கக்கிட்ட போய் காதலிப்பது எப்படி? நீங்க லவ் லெட்டர் எழுதுனீங்களா!? கவிதை எழுத வருமா!?ன்னு இம்சை பண்ணிட்டு இருப்பான். 

கோவை நேரம் ஜீவா! நான் போய் வாங்கி வரவா!?

”மின்னல் வரிகள்”கணேஷ் : ஒண்ணும் வேணாம் சாமி! பானை கடைக்கு பக்கத்துல எதாவது ஹோட்டல், திண்பண்டக் கடை இருந்தா நீ பதிவு தேத்தப் போய்டுவே!

கோவை நேரம் ஜீவா! அப்ப ஆவியை அனுப்பலாமா!?

ஆவி: நானே கொலை வெறில இருக்கேன். யாராவது என்னைப் பத்தி பேசினீங்க. என் பேருக்கேத்த மாதிரி மாறிடுவேன்

”மின்னல் வரிகள்”கணேஷ் :என்ன சோகம் ஆவி!

ஸ்கூல் பையன்: ம்ம் அவன் ஆளு நஸ்ரியா நடிச்ச படம் ஏதும் வரலியாம்!! அதான். விடு ஆவி.., தமிழ்ல வராட்டி என்ன!? மலையாளத்துல ஒரு படம் வந்திருக்கு. அதைப் பார்த்து மனசு ஆத்திக்கோ!

ஆவி: ம்க்கும், என்ன இருந்தாலும் தாய் மொழிப்போல வருமா!?

ஸ்கூல் பையன்: அடப்பாவி, உன் மொழிப்பற்றை காட்ட வேண்டிய நேரமா இது!?

”மின்னல் வரிகள்”கணேஷ் : நல்லா வாய்ச்சிருக்கானுங்கப் பாரு எனக்குன்னு. ஏர்ல பூட்டுன எருமைங்க மாதிரி. நீங்கதான் இப்படின்னா, கரும்பு, அரிசி, வெல்லம், நெய்லாம் வாங்கப்போன நம்ம ஆஃபீசர் என்ன ஆனார்ன்னு தெரியலியே! 5 பொருளை வாங்கி வர மூணு மணி நேரமா!?

நாய் நக்ஸ்: பர்ச்சேஸ் பண்ணப் போன இடத்துல கரும்பு, மஞ்சள் எங்க விளைஞ்சது!? வெல்லத்துல ஈ மொய்ச்சதுன்னு சொல்லி கடைக்காரனை ரெய்டு விட்டுக்கிட்டு இருக்கார். இப்பதான் போன்ல சொன்னார்.

”மின்னல் வரிகள்”கணேஷ் : அப்படியா!? பொங்கல் அதுவுமா ஒரு ஆச்சர்யம் நீங்க போன் போட்டு பேசி இருக்கீங்க பாரு நக்ஸ்!!

நாய் நக்ஸ்: நான் போன் போட்டதா சொன்னேனா!? வழக்கம்போல மிஸ்டு கால் விட்டேன். சண்டைக்கு நடுவால ஆஃபீசர் போன் பண்ணி சொன்னார்.

”மின்னல் வரிகள்”கணேஷ் : அதானே பார்த்தேன். நீங்கதான் போன் பண்ணி பேசிட்டீங்களோன்னு!!  பொருட்கள்லாம் வாங்க யாரை அனுப்புறதுன்னு தெரியலியே!

வெங்கட் நாகராஜ்: நான் வேணுமின்னா கடைவீதிக்கு போய் பொருட்கள் வாங்கி வரவா!? 

”மின்னல் வரிகள்”கணேஷ் : நீங்க பொறுப்பானவர்தான். போய் வாங்க. ஆனா, உங்க காதை அங்க இங்க கதைக் கேட்க அனுப்பாம போனமா வந்தமான்னு இருக்கனும். இப்பவே நல்ல நேரம் போய்க்கிட்டு இருக்கு. 

ரூபக் ராம்: எங்களையே வெரட்டிக்கிட்டு இருக்கீங்களே! உங்க ஆசைத்தங்கச்சி ராஜி சும்மாதானே இருக்காங்க. அவங்களைக் கூப்பிட்டு வேலை வாங்குங்களேன்.

ராஜி: ஹலோ! நான் ஒண்ணும் சும்மா இல்ல ரூபக். நீங்கலாம் பொங்கல் வைக்கும்போது எனக்கு செமத்தியான வேலை இருக்கு. அதனால நான் முன்கூட்டியே ரெஸ்ட் எடுத்துக்குறேன்.

மதுரை தமிழன்: எல்லாம் வாங்கி வந்து, மொழுகி, கழுவி நாங்கலாம் பொங்கல் வைக்கும்போது மேடத்துக்கு என்ன வேலை இருக்கு? பதிவு தேத்த போட்டோ எடுக்குறதும், குறிப்பெடுக்குறதும்தானே!

ராஜி:!!!!!!!!!!!!!!!!!??????

”மின்னல் வரிகள்”கணேஷ் : ராஜி வாயை அடைக்க பெரிய அண்ணன் என்னால ஆகலைன்னாலும், சின்ன அண்ணன் மதுரை தமிழ்னால மட்டும்தான் முடியுது...

ராஜா: இப்படியே பேசிட்டு இருந்தே சாயந்தரம் ஆகிடுச்சு. இனி எங்க பொங்கல் வச்சு சாப்புடுறது!? வயத்துக்குதான் ஒண்ணும் கிடைக்கலை. காதுக்காவது பொங்கல் கிடைக்கட்டும். எல்லோரும் சத்தமா சொல்லுங்க பொங்கலோ பொங்கல்!

பொங்கலோ பொங்கல்!!
பொங்கலோ பொங்கல்!!
பொங்கலோ பொங்கல்!!
பொங்கலோ பொங்கல்!!
பொங்கலோ பொங்கல்!!