Showing posts with label சிரிப்பு. Show all posts
Showing posts with label சிரிப்பு. Show all posts

Monday, June 19, 2017

இதுக்காகவாவது மரத்தை வெட்டாதீங்கப்பா ப்ளீஸ் - ஐஞ்சுவை அவியல்

என்ன புள்ள நாள் கிழமை இல்லாம தலைக்கு குளிச்சிருக்கே?!
Tamil girl to get drinking water
நம்ம பக்கத்து தெருவுல இருக்கும் ஹரின்ற குட்டி பையனை பாம்பு கடிச்சு ஹாஸ்பிட்டலில் இருந்தான்ல. அவன் இறந்துட்டான். அதான் அவனுக்கு அஞ்சலி செலுத்த போய் வந்து தலைக்கு குளிச்சேன். தூங்கும்போது பாம்பு கடிச்சு ஹாஸ்பிட்டல்ல அவஸ்தை பட்டு போய் சேர்ந்துட்டான். அவன் அம்மா பாவம். ஒத்தை பிள்ளை அவளுக்கு. அவ அழுவுறதை பார்க்க சகிக்கல. நட்ட நடு ராத்திரிங்குறதால முதலுதவி செய்ய முடியல. பகல்பொழுதா இருந்தா யாராவது கட்டு போட்டு விசத்தை வாயால உறிஞ்சு எடுத்திருப்பாங்க.
Related image
அதுலாம் தப்பு. அப்படிலாம் செய்யக்கூடாது. பாம்பு கடிச்சா என்ன செய்யனும்?! என்ன செய்யக்கூடாதுன்னும் தெரிஞ்சுக்கோ. பாம்பு கடிச்சதும் கடிப்பட்ட இடத்துக்கு மேல டைட்டா கட்டு போடுறது காலங்காலமா நடக்குற விசயம். அப்படி செய்யக்கூடாது. டைட்டா கட்டினா விசம் அந்த இடத்துலயே நின்னு அந்த இடம் அழுகி போகிட வாய்ப்புண்டு. அதனால, லேசா கட்டுப்போட்டா போதும். சிலர் கடிப்பட்ட இடத்தை கீறி ரத்தத்தை வெளில எடுக்க பார்ப்பாங்க. அப்படி செய்யுறதும் தப்பு. வாயால ரத்தத்தை உறியுறதும் தப்பு. அது விசத்தை இன்னொருத்தர் உடம்புல பாய வாய்ப்பிருக்கு. அதுமட்டுமில்லாம கடிப்பட்ட இடத்துல பாக்டீரியாவை அதிகரிக்க செய்யும். ஐஸ்பேக்லாம் வைக்கக்கூடாது. பாம்பு கடிப்பட்டவரை பதட்டமடைய விடாம ஆறுதலா பேசி ரிலாக்சா வச்சிருக்கனும். இது கொஞ்சம் கஷ்டம்தான். ஆனா இப்படி செய்யுறது அவங்க ரத்த ஓட்டத்தை குறைக்க உதவும். இதனால விசம் உடம்புல பாயும் நேரம் குறைக்க உதவும். கடிப்பட்டவரை தூக்கிட்டு ஓடக்கூடாது. அலுங்காம, குலுங்காம பச்சை குழந்தை மாதிரி கொண்டு போகனும்.. கடிப்பட்ட இடத்திலிருந்து ரத்தம் வந்தால் அப்படியே வடிய விடனும், ரத்தத்தை கட்டுப்படுத்த முயற்சிக்க கூடாது. ஏன்னா, விசம் ஏறிய ரத்தம்தான் முதலில் வெளிய வரும். கடிப்பட்ட இடத்தை நிறைய தண்ணியும் சோப்பும் கொண்டு கழுவனும். ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு போகும்போது படுக்க வெச்சுதான் கொண்டுபோகனும். பாம்பு முதலான விசக்கடிக்கு கவர்ன்மெண்ட் ஹாஸ்பிட்டலே நல்லது. தனியார் ஹாஸ்பிட்டலுக்கு கொண்டுபோறதா இருந்தா முதல்லியே போன்ல விவரம் சொல்லி பாம்புக்கடிக்கு ட்ரீட்மெண்ட் தருவாங்களான்னு கேட்டுடுறது நல்லது. இது வீண் அலைச்சலை தடுக்கும். பாம்பு கடிப்பட்டவர்கிட்ட கடிச்ச பாம்பு எப்படி இருந்துச்சுன்னும் என்ன பாம்புன்னும் முதல்லியே கேட்டு தெரிஞ்சுக்குறது நல்லது. அப்பதான் டாக்டர் சீக்கிரமாவும், சரியாவும் ட்ரீட்மெண்ட் கொடுக்க வசதியா இருக்கும்.

How to Identify a Venomous Snake By Its Bite  You’re camping and need to start a fire, so you go looking for wood. You pick up a branch and feel a sharp pain in your hand. A snake slithers away into tall grass.  You won’t always be able to identify the type of snake that bit you.
நாகபாம்பு இல்ல கருநாகம் கடிச்சிருந்தா பல்தடத்துக்கிடையில் ஒரு அங்குலம் இடைவெளி இருக்கும். விரியன் கடிச்சிருந்தா ஒன்னு இல்ல ரெண்டு மூணு பல்தடம் இருக்கும். வரிசையா கடிச்சி வச்சிருந்தா விசப்பாம்பா இருக்காது. அப்படியே விசப்பாம்பு கடிச்சிருந்தாலும் தோலை மட்டுமே கடிச்சிருக்க வாய்ப்புண்டு. என்ன இருந்தாலும் ஹாஸ்பிட்டல் கொண்டு போய் பார்த்துடுறது நல்லது. ஹாஸ்பிட்டல் தூரமா இருந்தா வாழைச்சாறை குடிக்க கொடுக்குறதும். கொம்பு மஞ்சளை தீயில் காட்டி சூட்டோடு சூடாய் கடிவாய்ல வைக்குறதும் விசம் பரவும் வேகத்தை கொஞ்சம் குறைக்கும். கடிப்பட்டவருக்கு வேப்பிலை சாப்பிட கொடுத்து அவருக்கு கசப்பு சுவை தெரிஞ்சா விசம் பரவலைன்னு முடிவு பண்ணிக்கலாம். தும்பை பூவும் இலையும் சேர்த்து இடிச்சு சாறெடுத்து குடிக்க கொடுக்கலாம். நல்ல பாம்பு கடிச்சா ரத்தம் சட்டுன்னு உறைஞ்சு, கண் இமை சுருங்கும், பேச்சு குழறும், கட்டுவிரியன் கடிச்சா கடிப்பட்ட இடத்தோடு வயிறும் சேர்ந்து வலிக்கும். கண்ணாடிவிரியன் கடிச்சா கடுமையான வலியும், வீக்கமும், மூச்சுத்திணறலும், வாந்தி சோர்வும், சிறுநீர், மலத்தோடு ரத்தம் வெளியேறும்.

ம்க்கும்.... வாரா வாரம் வரும் ராகு காலத்தையே நினைவுக்கு வச்சுக்க முடில. இதுல பாம்புக்கடிச்சா என்ன செய்யனும்ங்குறதுதான் நினைவுக்கு வருமாக்கும்...
Mohini-murti beheads the Rahu demon. Artist: Jadurani devi dasi.
அதுக்கு ஈசியான வழி சொல்றேன் பாரு. ரெண்டே ரெண்டு வரியை நினைவு வச்சுக்கிட்டா போதும்.. ராகு காலம், எமகண்டத்தை ஈசியா நினைவுல வச்சுக்கலாம்.

ராகுகாலத்தை நினைவில் வச்சுக்க... திருவிழா சந்தையில் வெளியே புறப்பட்டு விளையாட செல்வது ஞாயமா?

ஒவ்வொரு வார்த்தையின் முதல் எழுத்தை கொண்டு கிழமைய கணக்கிடனும்.  முதல் நாள் மட்டும் ராகு காலம் ஆரம்பிக்கும் நேரமான 7.30 to 9.00ன்னு மட்டும் நினைவு வச்சுக்கிட்டா போதும். அடுத்தடுத்த ஒன்றரை மணிநேரத்தை கணக்குல வச்சுக்கலாம்.. 
திருவிழா திங்கள் 7.30 to 9.00, சந்தையில் சனி 9.00 to 10.30, வெளியே வெள்ளி 10.30 to 12.00, புறப்பட்டு புதன் 12.00 to 1.30, விளையாட வியாழன் 1.30 to 3.00, செல்வது செவ்வாய் 3.00 to 4.30, ஞாயமா? - ஞாயிறு 4.30 to 6.00ன்னு நினைவு வச்சுக்கலாம்.
அடுத்து எமகண்டத்தை நினைவு வச்சுக்கும் வரியை சொல்றேன். விளையாட்டாய்  புண்ணியம்  செய்தாலும்  திருவருளும், ஞானமும், சத்தியமும் வெளிப்படும்.... முதல் நாள்  எமகண்டம் காலை 6.00 to 7.30ல ஆரம்பிக்குது. அதை நினைவில் வச்சுக்கிட்டு அடுத்தடுத்த ஒன்றரை மணிநேரத்தை கணக்கிட்டுக்கலாம்... 

விளையாட்டாய் - வியாழன் 6.00 to 7.30..., புண்ணியம் - புதன்  7.30 to 9.00... செய்தாலும் - செவ்வாய்  9.00 to 10.30...., திருவருளும் - திங்கள் 10.30 to 12.00... ஞானமும் - ஞாயிறு  12.00 to 1.30.... சத்தியமும் - சனி  1.30 to 3.00.... வெளிப்படும் - வெள்ளி  3.00 to 4.30..., இந்த வழியாவது ஈசியா இருக்காப்பாரு.. 

ம்ம்ம்ம்ம்ம்ம் இந்த வழியை ட்ரை பண்ணி பார்க்குறேன்...  இதை நினைவுல வச்சுக்குறது மட்டும் போதாது மாமா.  எத்தனையோ மூட நம்பிக்கை இருக்குற மாதிரி மரம் வெட்டுனா புள்ள பொறக்காதுன்ற மாதிரி ஒரு மூட நம்பிக்கை இருந்தால் நல்லா இருக்கும்ல்ல.

என்னடி திடீர்ன்னு சுற்றுசூழல் மேல அக்கறை?!

அக்கறைலாம் ஒன்னுமில்ல மாமா. இருக்குற மரத்தைலாம் வெட்டிட்டா அப்புறம் எப்படி பிள்ளையார், நாகர், அம்மன்னு  சாமி கும்பிடுறதாம்?! இந்த படத்துல இருக்குற மாதிரிதான் சாமி கும்பிடனும்... 

அடிப்பாவி...  சின்ன புள்ளைலாம் என்ன புத்திசாலித்தனமா பேசுது?! யோசிக்குது?! நீ மட்டும் இப்படியே உளறிக்கிட்டு திரி...  இந்த குட்டிப்பையன் என்னமா பதில் சொல்லுறான் பாரு.... 
என்னை மட்டம் தட்டுறதே பொழப்பா போச்சு உங்களுக்கு...   இரவு நேரங்களில் மலரும் பூக்களுக்குன்னு இருக்கும்  சிறப்பு என்ன? இதுக்கு பதில் சொல்லுங்க பார்ப்போம்....

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை தெரியாதவங்களுக்கு....
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1463844
paintings by shri shashikant dhotre
நன்றியுடன், 
ராஜி. 

Monday, April 17, 2017

தீரன் சின்னமலை - ஐஞ்சூவை அவியல்

என்ன புள்ள! உம்முன்னு உக்காந்திட்டிருக்கே?!

ரொம்ப நாளாச்சு மாமா நாம உக்காந்து கதைப்பேசி... என்னாச்சு நமக்குள்ள.. இப்பலாம் உனக்கு எம்மேல ஆசையே இல்ல. அப்பிடி ஊர்கதை பேச  மனசு ஏங்குது. அதான். 

அதுவா புள்ள. ஆண்ட்ராய்டு போன் வாங்குனாலும் வாங்குனேன். இந்த மூஞ்சிபுக்கை ஓப்பன் பண்ணதுல அங்கனயே உக்காந்துட்டேன். அப்புறம்  கொஞ்சம் கோவில் குளம்ன்னு போய் வந்தேன். அதான் உன்கிட்ட பேசமுடில. இனி பேசலாம்.

கவனிச்சேன் மாமா. நீ கோவில் குளம்ன்னு சுத்தினதுல எங்க சாமியாரா போயி என்னை மறந்திடுவியோன்னு நினைச்சேன்.  சரி ஸ்மார்ட் போன் வாங்குனியே! அதை எப்படி பத்திரமா பார்த்துக்கனும்ன்னு தெரியுமா?!

ம்ஹூம் தெரியாது புள்ள. உனக்கு தெரியுமா?! 


சரி நான் சொல்றேன். கேட்டுக்கோ.  மொபைலை வாங்கினதும்  *#06#ன்ற நம்பரை அழுத்தி அது சொல்லும் ஒரு நம்பரை  (International Mobile Equipment Identity no ) டைரில குறிச்சு வச்சுக்கனும்.  மொபைலோட கேரண்டிக்கும், மொபைல் தொலைஞ்சி போய்ட்டாலோ இந்த நம்பர் யூஸ் ஆகும். தொடர்பு எல்லைக்கு வெளியே போய்ட்டா மொபைலை ஆஃப் பண்ணுறது நல்லது. இல்லன்னா பேட்டரி வேஸ்ட்டாகும்.   மொபைல்  லிக்விட் கிறிஸ்டல் டிஸ்பிளே (LCD)ஐ லேசா தொட்டா போதும். ரொம்ப அழுத்தினா நாளடைவில் ஸ்க்ரீன் பாழாகிடும். மொபைலோடு சில்லறை காசு, வண்டிச்சாவி மாதிரியான பொருட்களை வைக்காதீங்க. ஸ்க்ரீன்ல கீறல் விழும். மொபைலுக்குண்டான பவுச் இல்லன்னா போம் கவர்ல போட்டு வைங்க.  போனில் சிக்னல் குறைவா இருக்கும்போது ரேடியேஷன் அதிகமா இருக்கும். கூடவே பேட்டரியும் அதிகம் செலவாகும். அதனால, சிக்னல் குறைவா இருக்கும்போது பேசுறதை குறைச்சுக்கோங்க.  

ஆத்தாடி இம்புட்டு விசயம் இருக்கா?!

இன்னும் இருக்கு மாமா. சொல்லவா?!

வேணாம்டி.  இதுவே நினைவில் வச்சுக்க முடியாது. இன்னிக்கு யாரோட பொறந்தநாள்ன்னு தெரியுமா?! 

ம்ம்ம் பாய்ஸ், அரண்மனை 2 படத்துலன் நடிச்ச சித்தார்த்தோட பொறந்த நாள். அப்புறம் நம்ம ஸ்பையோட பிறந்த நாள். 
உன் தம்பியோட பொறந்த நாளையும், சினிமாக்காரன் பொறந்தநாளையும் நினைவு வச்சுக்கிட்ட உனக்கு  விடுதலை போருக்கு முதன்முதலாய் வித்திட்ட தீரன் சின்னமலையோட பிறந்தநாளை தெரியலியே!.  தீரன் சின்னமலையோட பேரு தீர்த்தகிரி சர்க்கரை கவுண்டர். அப்பா பேரு ரத்னசாமி கவுண்டர், அம்மா பேரு பெரியாத்தா. 1756 ஏப்ரல் மாசம் 17 ந்தேதி ஈரோடு சென்னிமலைல பாளையக்காரர் பரம்பரைல  பிறந்தார்.  சின்ன வயசுலயே மல்யுத்தம், தடி வரிசை, வாள், வேல் போர்ப்பயிற்சி, சிலம்பாட்டம் மாதிரியான் வீரவிளையாட்டுகளை சிவந்தாரையர் என்பவரிடம் கற்று தேர்ந்தார். மைசூர் அரச குடும்பத்தின் ஆதிக்கத்தின் கீழிருந்த கொங்குநாட்டின் வரிப்பணம் சங்கக்கிரி வழியாக மைசூர் அரண்மனைக்கு சென்றது. வரி கொண்டு சென்ற வரி தண்டல்காரரிடம் ’சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாகச் சொல்’ என்று சொல்லி வரிப்பணத்தை  அபகரித்து ஏழை மக்களுக்கு கொடுத்தார்.  அன்றுமுதல் தீர்த்தகிரி சின்னமலையானார்.

The Sepoy Mutiny (1857) was a mistrust and cultural differences between the British and Indians led to violent conflict. Causes: 1. Increase of British power in India 2. A growing distrust of British 3. British disrespect of Indian religions and culture. Effects: End of the Mogul Empire, Beginning of direct British rule in India, and India nationalist movement:
ஆங்கிலேயர் ஆட்சி இந்தியாவில் காலூன்ற ஆரம்பித்தபோது அதை தடுக்க விரும்பிய சின்னமலை, கேரளத்திலும் கொங்குநாட்டின் சேலம் பகுதியிலும் கிழக்கிந்திய கம்பெனி வேரூன்ற பெரும் தடையாய் இருந்தார்.  டிசம்பர் 7, 1782 இல் ஐதர் அலியின் மறைவிற்குப் பின் திப்பு சுல்தான் மைசூர் ஸ்ரீரங்கப்பட்டணத்தில் ஆட்சிக்கு வந்து கிழக்கிந்தியக் கம்பெனியிரை எதிர்த்துக் கடும்போர் செய்து வந்தார். மாவீரன் சின்னமலை ஆயிரக்கணக்கான கொங்கு இளைஞர்களைத் திரட்டி மைசூர் சென்றார். சின்னமலையின் கொங்குப்படை சித்தேசுவரம், மழவல்லி, ஸ்ரீரங்கப்பட்டணம் போர்களில் திப்புவின் வெற்றிக்குப் பெரிதும் உதவினார். குறிப்பாக 40,000 வீரர்களோடு மழவல்லியில் போரிட்ட வெள்ளையர் படைகளுக்கு பெரும் தலைவலியாய் இருந்தார்.
British Bush Fighting on the Cape Frontier:
திப்புசுல்தான் மறைவுக்கு பின், ஆட்களை தேர்ந்தெடுத்து சிவன்மலையில் வைத்து போர்பயிற்சி கொடுத்தார். 1801ல  ஈரோடிலும், 1802 ல ஓடாநிலையிலும், 1804 ல அறிச்சலூர்ல நடப்பெற்ற போர்களில் சின்னமலையே வென்றார்.  கள்ளிக்கோட்டையிலிருந்து பெரும் பீரங்கிப்படையோடு வந்த வெள்ளைக்காரங்களை எதிரித்து நின்றார். ஆனால், போரில் சின்னமலையால் ஜெயிக்கமுடியாது என்பதை உணர்ந்த சுபேதார் வேலப்பன்  சின்னமலையை தப்புவித்து பழனிமலைத்தொடரிலிருக்கும் கருமலைக்கு அனுப்பி வைத்தார்.  நேருக்கு நேர் நின்னு சின்னமலையை ஜெயிக்க முடியாத வெள்ளைக்காரர்கள்  சூழ்ச்சி செஞ்சு பிடிச்சு 1805 ஜூலை 31   சின்னமலையையும், அவரின் தம்பி, படைத்தலைவர்களையும் தூக்குல  போட்டாங்க.

ம்ம்ம் இத்தனை போராடி சுதந்தரம் வாங்கி என்ன பிரயோஜனம் மாமா?! ஊழல், பொய், களவுன்னு நாடு சீரழிஞ்சு போய் கெடக்குதே. 

ம்ம்ம் இந்தமாதிரியான கதையெல்லாம்  பசங்களுக்கு பெரியவங்க நாமதான் சொல்லி புரிய வைக்கனும். அதைவிட்டு எப்பப்பாரு சினிமா, சீரியல், மூஞ்சிப்புக்குன்னு அரட்டைல இருந்தா எப்பிடி புள்ள?!

என்னை மட்டம் தட்டுனது போதும்.  உனக்கு அறிவிருக்குன்னு ஒத்துக்குறேன். இப்ப நான் ஒரு கணக்கு கேக்குறேன். பதில் சொல்லு பார்ப்போம். 0 லிருந்து 9க்குள் ஒரு நம்பர் அதை எட்டு முறை மட்டும் யூஸ் செஞ்சு  கூட்டல் மட்டுமே செஞ்சு 250ன்னு விடை வரனும். எப்பிடின்னு சொல்லு பார்க்கலாம். 

இரு யோசிக்குறேன். அதுக்குள்ள இந்த மீம்சை பார்த்துக்கிட்டிரு. 

சின்ன வயசுல சப்போட்டாவுக்கும் உருளைக்கும் வித்தியாசம் தெரியாது மாமா. சரி.  கணக்குக்கான விடையை யோசிச்சீங்களா?! 

ம்ம்ம் கொஞ்சமிரு. யோசிச்சுக்கிட்டேயிருக்கேன்.  உனக்கு முடிக்கொட்டுதுன்னு சொன்னேல்ல. அதுக்கு வேப்பிலை 6, கொட்டையுடன் கூடிய 4 வேப்பம்பழத்தையும் வேப்பங்குச்சியையும் சேர்த்து அரைச்சு  தலையில் பேக் போட்டு கொஞ்ச நேரம் ஊற வெச்சு அலசு. ஈறு, பேன், பொடுகுலாம் இல்லாம போறதோடு முடியும் உதிராது. அடிக்கடி இப்படி செய்ய முடியாதவங்க சீயக்காய்ல இதுலாம் போட்டும் அரைச்சு வச்சுக்கலாம். 

ஓ. ஆன்சரை சொல்லு மாமா. 

விடமாட்டியே!  222+22+2+2+2 = 250  இதான் ஆன்சர் சரியா?!

உனக்கு எல்லாமே தெரியுது மாமா. யு ஆர் பிரில்லியண்ட்..
..
மீண்டும் வேறு ஒரு பதிவில்  சந்திப்போம் அதுவரை சிந்திப்போம்.நன்றியுடன்,
.தேங்க் யூ....  தேங்க் யூ.

Monday, June 17, 2013

ராவணனின் பத்து தலைக்கான காரணம் -ஐஞ்சுவை அவியல்


  ஏ புள்ள! மணி பத்தாச்சு.., டிவி பொட்டியை போடு.., ராமாயணம் போட்டிருப்பாங்க பார்க்கலாம்..,

என்ன மாமா திடீர்ன்னு இதெல்லாம் பார்க்க ஆரம்பிச்சுட்டீரு? சரி, அந்த புராணத்துல ராவணனுக்கு ஏன் பத்து தலை வந்துச்சுன்னு தெரியுமா?

அது, கடவுளோட திருவிளையாடல்.., அதுமில்லாம கோவம், காமம், பொய்ன்னு எதாவது பத்து கெட்ட பழக்கத்தை பத்து தலையாக்கி அதை கடவுள் அழிக்குறதா கதை வரும்ன்னு நினைக்குறேன் சரியா புள்ள?!

அதான் இல்ல மாமா! அந்த காலத்துல விச்ரவசு மகரிஷின்னு ஒரு சாமியார் இருந்தாரு. அவரோட பையந்தான்  குபேரன்..

(ஏழுமலையான் கல்யாணத்துக்கு கடன் குடுத்தாரே அவர்தானே?

ஆமா மாமா!இவன், பிரம்மாவுக்கு கொள்ளுப்பேரன். தனது தாத்தா பிரம்மாவை நினைச்சு  தவமிருந்து சகல செல்வங்களையும் பெற்றான். அதுல முக்கியமானது நவரத்தினங்களால் ஆன புஷ்பக விமானம். அதுல  நினைச்ச இடத்துக்குப் பறந்து போய், செல்வத்தைக் கொண்டு வந்து குவிச்சு. உலகிலேயே பெரும் பணக்காரனான். 

சுமாலின்ற அசுரன் இதைக் கவனிச்சான்.  தனக்கும் குபேரனைப் போல ஒரு பையன்  இருந்தா, உலகையே கட்டி ஆளலாம்ன்னு கணக்குப் போட்டான். தன் மகள் கைகனிக்கிட்ட, மகளே! அசுரர் குலம் தழைக்க, நீ விச்ரவசு முனிவரை கல்யாணம் கட்டிக்கிட்டு சீக்கிரம் குழ்ந்தைப் பெத்துக்கோ அந்தக் குழந்தை மூலம் நம்ம வம்சம்  சாகாவரம் பெற்று, உலகையே ஆட்டிப்படைகனும்ன்னு சொன்னான். கைகனியும் சம்மதிச்சு..,காட்டிலிருந்த விச்ரவசு முனிவரை போய் பார்த்தா..,

ரொம்ப அழகான   அவளை பார்த்ததும் அவர் மயங்கிட்டாரு.  தன்னை  கல்யாணம்  செய்யும்படி அவளே கேட்டதால அவரும்  சம்மதிசாரு. அந்த நேரமே தன்னோடு உறவு  கொள்ளும்படி அவ கேட்டுக்கிட்டா.  அதுக்கு, அந்த சாமியாரு.., கைகனி! இது அந்திக் கருக்கல் நேரம். இந்நேரத்தில் யார் உறவு கொள்கிறார்களோ, அவர்களுக்கு விகாரமானதாகவும், குறையுள்ளதாகவும் குழந்தை பிறக்கும், அதனால, ராத்திரி வரை பொறுன்னு சாமியார் சொன்னாரு.

எங்கே சாமியாரு மனம் மாறிடுவாரோ! அப்பாவோட வாக்கை காப்பாத்த முடியாம போய்டுமோன்னு பயந்து.., இப்பவே குழந்தை வேணும்ன்னு அடம்பிடிச்சா. அந்த சாமியாரும் வேற வழியில்லாம   உறவு கொள்ளவே, அவ கர்ப்பமானா.  பேறு காலம் வந்துச்சு.., ஆண்குழந்தை பொறந்துச்சு. ஆனா,  பத்து தலைகள், இருபது கைகள், பயங்கர விழிகள் கொண்ட ஒழுங்கற்ற  வடிவத்துல பிறந்தது. குழந்தையை பார்த்து அம்மாவே பயந்துட்டா. சாமியார் பேச்சைக் கேட்காம போனதுக்காக  மன்னிப்பு கேட்டா. அவரது தவ வலிமையைப் பயன்படுத்தி குழந்தைக்கு  ஒற்றைத்தலை வேணும்ன்னு  கேட்டா கைகனி! அது நடக்காத காரியம். ஆனா, என் தவ வலிமையினால, அழகற்ற இவனை அழகாக மாத்துறேன். இவனது பத்து முகங்களும் அழகா இருக்கும். ஆனால், தலைகளை குறைக்க முடியாது. இவன் வஜ்ரம் பாய்ந்த உடல்,கைகளுடன் பலவானாக இருப்பான்னு சொன்னார்..,

பத்துமுகம் கொண்ட அவனுக்கு தசமுகன்ன்னு பேர் வெச்சார். . தசம் ன்னா பத்து. தசமுகன், ஒருமுறை கைலாயம் போனான். தன்னால, எதையும் சாதிக்க முடியும்ன்ற எண்ணத்துல கைலாய மலையை தூக்கிப் பார்க்க ஆசைப்பட்டு மலையை தூக்கும்போது..,  சிவன் தன் கால் கட்டை விரலால், மலையை அழுத்த அவனது பத்து கைகளும் மலைக்கு அடியில் மாட்டிக்கிச்சு. . அவன் வலி தாங்காம ஓன்னு கதறி அழுதான். அந்த அலறல் உலகம் முச்சூடும் கேட்டுச்சு. அப்போ அங்க வந்த வாகீச முனிவர், தசமுகா! சிவனைப் பணிந்து பாடு. அவர் உன்னை  மன்னிப்பார்ன்னு சொன்னார்.  தசமுகனும் சிவனுக்குப் பிடித்த சாமகானப் பாடல்களைப் பாடினான். 

அதுகேட்டு மகிழ்ந்த சிவன் அவனை விடுவித்து.., தசமுகா! நீ வலி தாங்காமல் உலகமே நடுங்க அழுததால் ராவணன் என அழைக்கப்படுவாய். அந்தப்பெயரே உனக்கு நிலைக்கும். நீ புகழ் பெற்று நீண்ட காலம் வாழ்வாய், என்று ஆசிர்வதித்தார். ராவணன் என்ற சொல்லுக்கு ”விடாமல் அழுபவன்”ன்னு அர்த்தம் . ராவணன் இலங்கைக்கு அரசனா ரொம்ப நாள் நல்ல பேரோட  ஆட்சி செய்தான்.,  விருப்பமில்லாத பொண்ணை அதும் அடுத்தவன் பொண்டாட்டியை தொட்ட பாவம்தான் அவனை கெட்டவனாக்கியது..,

ம் ம் ம் தன் பொண்டாட்டினாலும் பிரச்சனை.., அடுத்தவன் பொண்டாட்டினாலும் பிரச்சனை.., ஆக மொத்தம் பொண்டாட்டின்னாலே ஆம்பிளைங்களுக்கு பிரச்ச்னைதான் புள்ள..,

என்ன மாமா! பேச்சு ஒரு மாதிரியா போகுது..,

அதொன்னுமில்ல புள்ள!  என் ஃபோனுக்கு ஒரு மெசேஜ் வந்திருக்கு..,

பெண்: டாக்டர்!  ஒருத்தருக்கு ஹார்ட் அட்டாக் வந்தா என்ன முதலுதவி பண்ணனும்..,
டாக்டர்: குட்.., இப்படிதான்மா எல்லாத்தையும் தெரிஞ்சுக்கனும்.., 
பெண்: நீங்க வேற! பட்டுசேலை வாங்கி வந்திருக்கேன். அந்த பில்லை என் வீட்டுக்காரர்க்கிட்ட காட்டனும்..,அதான் கேட்டேன்..,

ம்க்கும்.., எப்ப பாரு பொண்டாட்டிங்களை குறை சொல்லி சிரிக்குறதே பொழப்பா போச்சு உங்களுக்குலாம்..,

ம் ம் ம் ராஜி வீட்டுக்கு போய் இருந்தியே! எப்படி இருக்கா உன் ஃப்ரெண்ட்? பசங்கலாம் எப்படி இருக்காங்க? அப்பு எப்படி இருக்கான்?

எல்லாரும் நல்லா இருக்காங்க மாமா.., அப்பு இந்த வருசம் 9 வது வகுப்பு போறான்.., 

அப்படியா! அம்புட்டு பெரிய ஆளாகிட்டானா?! இப்போதான் நடந்தது போல இருக்கு..,  அப்புக்கு ஒரு மூணு இல்ல நாலு வயசிருக்கும்.., காது வலின்னு அழுதுட்டு இருந்தான்.., அப்போ,  ராஜி அவனை எவ்வளவோ சமாதான படுத்தி பார்த்தா., முடியலை.., அப்பு அழுதிக்கிட்டே இருந்தான்.

அப்போ ராஜியோட அம்மா,  ஒரு கிண்ணத்துல எண்ணெய் கொண்டு வந்து அவன் காதுல ஊத்துனாங்க,, ஒரு ரெண்டு நிமிசம் போய் இருக்கும்.., இன்னும் பெருசா கத்த ஆரம்பிச்சான்.., ஏன்னு கேட்டதுக்கு.., பாட்டி, இப்போ என் காதுல திரி போட்டு விளக்கேத்த போறாங்கன்னு அழுதான்.., எனக்கு ஒண்ணும் புரியாம கேட்டதுக்கு.., பாட்டி டெய்லியும் சாமி படத்துக்கு முன்னாடி ஒரு விளக்குல எண்ணெய் ஊத்தி, திரி போட்டு விளக்கேத்துவாங்க.., இப்போ என் காதுல எண்ணேய் ஊத்தி இருக்காங்க.., இனி திரி போட்டு விளக்கேத்துவாங்கன்னு அழுதான்..,

அப்படி புரியாம அழுத புள்ள இன்னிக்கு 9வது வகுப்பு போறானா? பலே! பலே!

ஆமா  மாமா! நல்லாதான் வளார்ந்திருக்கான்.., என்கிட்ட ஒரு விடுகதைக்கு விடை கேட்டான்.., நான் ரொம்ப நேரம் முழிச்சிக்கிட்டு இருந்தேன். அப்புறம் அவனேதான் சொன்னான்..,
                                       
நீதான் எல்லாத்துக்கும் முழிச்சுக்கிட்டு நிப்பியே! சரி, சரி  முறைக்காத என்ன கேட்டான் சொல்லு.., என்னால முடியுதான்னு பார்க்குறேன்..,

ஓடும் சங்கிலி,
 ஒதுங்கும் சங்கிலி,
 பள்ளத்தப் பாத்தா பதுங்கும் சங்கிலி 
அது என்ன சங்கிலி?
இதான் கேட்டான் மாமா!

ம் ம் ம் இரு யோசிச்சு சொல்றேன்.

கடைக்கு போகனும் மாமா! சீக்கிரம் சொல்லுங்க..,

சொல்றேன் இரு.., கடைக்கு போகும்போது என்னென்ன கவனிக்கனும்ன்னு தெரியுமா?

பை, பணம் எடுத்துக்கிட்டு, வீட்டு கதவை பூட்டிட்டு போனா போதாதா?!

           
அது மட்டும் போதாது.., வீட்டுலயே என்னென்ன பொருள் வாங்கனும்ன்னு லிஸ்ட் போட்டு எடுத்து போய்ட்டா அவசியமான பொருளை மறக்கவும் முடியாது.., அவசியமற்ற பொருளை வாங்கவும் முடியாது..,

ஹெல்மெட் கொண்டு போகக் கூடாது.., வண்டிலயோ இல்ல பாதுகாப்பான இடத்துல வச்சிட்டு போகனும் இல்லாட்டி வாங்க வேண்டிய பொருளை எடுத்து பார்த்து வாங்குறது சிரமம்..,

ட்ரெஸ் வாங்கும்போது, இப்போ இருக்குற அளவுக்கே வாங்கனும்.., டயட்ல இருக்கேன் இன்னும் சில நாள்ல மெலிஞ்சுடுவேன் இல்ல குண்டடிச்சுடுவேன்னு.., அப்புறம் அது உடம்புக்கு சேராம   காசை வேஸ்ட் பண்ண வேணாம்.

கூட்டம் அதிகமில்லாத கடையா பார்த்து போகனும்.., குழந்தைகளுக்கான பொருட்களை வாங்கலைன்னா அவங்களை கூட்டி போக வேணாம்.., வீட்டுலயோ இல்ல ஸ்கூல் விட்டு வர்றதுக்குள்ள ஷாப்பிங் முடிச்சுட்டு வந்துடனும்..,அவங்க வந்தா உடம்புக்கு ஒத்துக்காத நொறுக்கு தீனிகளை கேப்பாங்க.., பொம்மை, ஐஸ்ன்னு கேட்டு அடம்பிடிச்சு வாங்கி தேவை இல்லாம காசு செலவாகும்..,

வயசு பசங்க தனியா ஷாப்பிங் போறேன்னு சொன்னா  தனியா போக விடாம பெரியவங்க யாராவது கூட போகலாம்.., அவங்களுக்கு பணத்தோட அருமை தெரியாது.., அதனால வேண்டாத பொருளை அவங்க வாங்காம தவிர்க்கலாம்..,  வாங்க வேண்டிய அளவுக்கு கட்டை பையோ இல்ல மஞ்சப்பையோ அசிங்கம்  பாக்காம எடுத்து போனா கொஞ்சம் பிளாஸ்டிக் கவர்ங்க குப்பைக்கு போறது குறையும். எதோ நம்மால முடிஞ்ச அளவு பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்கலாமே!

ம்ம் சரி மாமா! வாங்க கிளாம்பலாம்..., இப்பவே போய் வாங்கிட்டு சின்ன மண்டையன் இஸ்கோலுல இருந்து வர்றதுக்குள்ளே வந்துடலாம்..,

ம்ம்ம் நீ கடைக்குள்ளாற போனா எப்போ வருவியோ தெரியாது. அதனால, எதாவது சாப்பிட்டு வரேன். இல்லாட்டி பசி மயக்கத்துல அங்க வந்து எரிச்சல் பட்டு தேவை இல்லாத பொருளை வாஙகவோ இல்ல தேவையான பொருளை வாங்கமயோ வரப்போறேன்..

சரி மாமா! வாங்க உப்புமா கிண்டி தரேன்..,

நீ செஞ்சிக்கிட்டே இரு..  அதுக்குள்ள ராஜி ஒரு லிங்க் அனுப்பி இருக்கா பார்த்துட்டு வரேன்..

என்னது மாமா?!

தந்தையர் தினம் பத்தி அவளுக்கு முதல்யே தெரியாதாம்.., தெரிஞ்சிருந்தா எதாவது கிறுக்கி இருப்பாளாம். அதனால, போன வருசம் அவ அப்பா ரிட்டைய்ர்மெண்ட்க்கு போட்ட போஸ்ட்டை பார்க்க சொல்லி எனக்கு அனுப்பி இருக்கா. அதான் பார்த்துட்டு வரேன். நீயும் இங்க போய் படிச்சு பாரு.., 

Tuesday, June 04, 2013

உன் கோவத்தை அறிமுகப்படுத்தேன்..., ப்ளீஸ்!!

   

என்னவளே!
திக்குமுக்காட வைக்கும் உன் முத்தங்களும்..,
மென்சாரல் போன்ற உன் அணைப்புகளும்...,
மனக்காயத்துக்கு ஒத்தடம் கொடுக்கும் உன் புன்சிரிப்பும்...,
என்றும்......, அலுக்காததுதான் எனக்கு.

இருந்தாலும்,
இவையெல்லாம் பழக்கமாகிவிட்ட என் காதலுக்கு....,
உன் உதாசீனம், வெறுப்பு, அலட்சியம், வெகுளி போன்றாவற்றை..,
என்னவென்று நான் அறிய!!
எனக்கு அறிமுகப்படுத்த மாட்டா??!!

Monday, May 27, 2013

இறைவனுக்கு பலி கொடுப்பது இறைவனுக்கு விருப்பமா? - ஐஞ்சுவை அவியல்

ஆன்மீகம்...,                                           


 பண்டிகை வரப்போகிறது. அதற்கு பலி கொடுப்பதற்கு தான் இந்த ஆட்டை கூட்டிச் செல்கிறேன்” என்று ஒரு கூயவன் ஜென் குருவிடம் சொன்னான்.



பலியா?” குரு வியப்புடன் கேட்டார்.

ஆமாம் சாமி. தெய்வத்துக்கு திருவிழா அன்றைக்குப் பலி கொடுத்தால் விசேஷம். தெய்வம் மகிழ்ந்து வரம் கொடுக்கும். எல்லாம் சுபீட்சமாகயிருக்கும்

இதைக்கேட்ட குரு எழுந்தார். அந்த குயவனின் மண் பானையை எடுத்து ஓங்கித் தரையில் அடித்தார். பானை துண்டு துண்டாகச் சிதறியது.

குயவன் கோபத்துடன் துறவியைப் பார்த்தான்.

துறவி நிதானமாகக் கீழே குனிந்தார். சிதறிய ஓட்டாஞ் சில்லுகளை ஒன்றுவிடாமல் அடுக்கினார். குயவனிடம் நீட்டினார்.

என்ன இது?” என்றான் குயவன் கோபமாக.

உனக்குப் பிடிக்குமே, அப்பா?” என்றார் குரு.

என்ன உளறுகிறீர்கள். நான் கஷ்டப்பட்டு செய்த பானையை உடைத்து விட்டு அது எனக்கு பிடிக்கும் என்று என்னிடமே நீட்டுகிறீர்கள். கேலியா? கிண்டலா? உங்களுக்கு பித்தா?” என்று ஆத்திரப்பட்டான் குயவன்.

அப்படியெல்லாம் எதுவும் இல்லையப்பா. உண்மையான அன்புடன் தான் செய்தேன்.என்று குரு சிறிதும் பதட்டப்படாமல் சொன்னார்.

நான் செய்த அந்தப் பானையில் என் உழைப்பு முழுவதும் அடங்கியிருக்கிறதே! அதை உடைக்க நான் எப்படிச் சம்மதிப்பேன்? இது எனக்குப் பிடிக்கும் என்று யார் உமக்குச் சொன்னது?”

நல்லது. ஆண்டவன் படைத்த ஓர் உயிரை கதறக் கதற வெட்டிக் கொன்று பலியிடலாம் என்று உனக்கு யார் சொன்னது? இதை இறைவன் மகிழ்ந்து ஏற்றுக்கொண்டு வரம் தருவான் என்று நீ எப்படி நம்புகிறாய்? எந்தத் தாய் தன் குழந்தை கதறுவதைக் கேட்டு சகிப்பாள்? எந்தத் தகப்பன் தன் குழந்தை கொல்லப்படுவதை விரும்புவான்?” என்று குருவிடமிருந்து அடுக்கடுக்காகக் கேள்விகள் பிறந்தன.

குயவன் நிதானமாக ஆட்டின் கழுத்திலிருந்த கயிற்றை அவிழ்க்கத் தொடங்கினான்.

குட்டீஸ் கார்னர்: 
                    

எங்க ஃப்ரெண்ட் வீட்டுக்கு போய் இருந்தேன்.  நான் போனதிலிருந்து ஃப்ரெண்டோட,  2 வயது மகன், நான் போனதிலிருந்து  என்னை “பெரியம்மா, பெரியம்மா”ன்னு விடாம் சுத்திக்கிட்டு இருந்தான். அவன் பொம்மைகளை காட்டுறதும், அவங்கஅம்மா சமைச்சு தர்றதை என்கிட்ட கொண்டு வந்து கொடுக்குறதும்ன்னு ரொம்ப ஒட்டிக்கிட்டான். அவன் பேர் ”வெற்றிமாறன்”.

ஒரு மதியான வேளை...,  என் ஜூஸ் கலந்து, எல்லாரும் சாப்பிடலாம்ன்னு முடிவு பண்ணி சாத்துக்குடில ஜூஸ் போட்டேன். ஐஸ் கலந்ததால  வெற்றிக்கு பாதி கிளாஸும் , எங்களுக்கும் முழு கிளாசும் ஊத்தி  குடிக்க ஆரம்பிச்சோம். அவன் முதல்ல குடிச்சுட்டான். இன்னும் வேணும்ன்னு கேட்டு ”தூயா” கிளாசை அடம்பிடிச்சு வாங்கிக்கிட்டான். என்னன்னமோ சொல்லியும் திருப்பி கொடுக்கலை. வீடு ஃபுல்லா ஓடி கீழ கொட்ட ஆரம்பிச்சுட்டான்..,

நான் பிரமாதமா ஐடியா பண்றதா எல்லாரையும் ஏளனமா ஒரு பார்வை பார்த்துட்டு,  அவனோடு கூடவே போய்,   ”வெற்றி” இங்க வா, இங்க பாரு பெரியம்மாக்கு கம்மியா இருக்கு பாரு, எனக்கு கொஞ்சம் ஊத்துன்னு சொன்னேன்.., கிட்ட வந்தவன், என் கிளாசையும், அவன் கிளாசையும் சில விநாடி உத்துப்பார்த்தவன் என் கிளாசுல அதிகமா இருக்குறதை புரிஞ்சுக்கிட்டு இதை கேட்டு அழ ஆரம்பிச்சு எனக்கு பல்ப் குடுத்து அசடு வழிய வச்சுட்டான் . 

டிப்ஸ்.., டிப்ஸ்...,

                           


பீன்ஸ், பட்டாணி, முட்டை கோஸ் போன்ற காய்கறிகள் நன்றாக குழைய வேகவைக்க வேண்டுமா? முதலில் உப்புப் போடாமல் வேகவைத்து, வெந்தபிறகு உப்பு சேர்க்கவேண்டும். 

 பன்னீர் மசாலா செய்யும்போது பன்னீரை வறுத்த உடன் உப்புத் தண்ணீரில் சிறிது நேரம் போட வேண்டும். பன்னீர் பஞ்சு போல மிருதுவாக இருக்கும்.

 சப்பாத்திக்காக கோதுமை பிசையும்போது வெண்ணெய் சேர்த்துப் பிசைந்து கொஞ்ச நேரம் ஊறவைத்து பிறகு சப்பாத்தி செய்தால் மென்மையாக பூப்போல இருக்கும்.

 சுவர்களில் ஆணி அடித்திருப்போம். அது தேவையில்லை எனில் அதை எடுத்து விட்டு சுவரின் வண்ணத்திற்கு ஏற்ப, வண்ணக் கலவையை பற்பசையில் கலந்து ஓட்டை போட்ட இடத்தில் அடைத்துவிட்டால் ஓட்டை தெரியாமல் மறைந்துவிடும்.

புதிர்...,

ஒரு பூட்டிய அறையில் நான்கு சகோதரர்கள் இருக்கின்றார்கள்.., அவர்கள் ஒவ்வொரும் ஒவ்வொரு உயரமுடையவர்கள். அவர்களின் சராசரி உயரம் 76 அங்குலங்கள்(inches). முதல் மூன்று சகோதரர்களும் 2 அங்குல வித்தியாசங்களை உடையவர்கள். 3வது சகோ்தரத்திற்கும் அவரது தம்பிக்கும் இடையிலான உயர வித்தியாசம் 6 அங்குலங்கள். அப்படின்னா, ஒவ்வொருவரதும் உயரங்கள் என்ன?

ஜோக்ஸ்...,
                                   

அப்பா: மகனே பரிட்சையில் எத்தனை கேள்வி வந்தது ?
மகன்: ஐந்து கேள்விப்பா
அப்பா: நீ எத்தனை கேள்வி விட்டுட்டே ?
மகன்: முதல் மூணும் கடைசி இரண்டும்
அப்பா:???!!!!!
ஒரு பூட்டிய அறையில் நான்கு சகோதரர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு உயரமுடையவர்கள். அவர்களின் சராசரி உயரம் 76 அங்குலங்கள் (inches). முதல் மூன்று சகோதரர்களும் 2 அங்குல வித்தியாசங்களை உடையவர்கள். 3 ஆவது சகோத‌ரத்திற்கும் அவரது தம்பிக்கும் இடையிலான உயர வித்தியாசம் 6 அங்குலங்கள். கேள்வி : ஒவ்வொருவரது உயரங்களும் என்ன?...

மூலம் : http://edu.tamilclone.com

ஒரு பூட்டிய அறையில் நான்கு சகோதரர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு உயரமுடையவர்கள். அவர்களின் சராசரி உயரம் 76 அங்குலங்கள் (inches). முதல் மூன்று சகோதரர்களும் 2 அங்குல வித்தியாசங்களை உடையவர்கள். 3 ஆவது சகோத‌ரத்திற்கும் அவரது தம்பிக்கும் இடையிலான உயர வித்தியாசம் 6 அங்குலங்கள். கேள்வி : ஒவ்வொருவரது உயரங்களும் என்ன?...

மூலம் : http://edu.tamilclone.com
ஒரு பூட்டிய அறையில் நான்கு சகோதரர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு உயரமுடையவர்கள். அவர்களின் சராசரி உயரம் 76 அங்குலங்கள் (inches). முதல் மூன்று சகோதரர்களும் 2 அங்குல வித்தியாசங்களை உடையவர்கள். 3 ஆவது சகோத‌ரத்திற்கும் அவரது தம்பிக்கும் இடையிலான உயர வித்தியாசம் 6 அங்குலங்கள். கேள்வி : ஒவ்வொருவரது உயரங்களும் என்ன?...

மூலம் : http://edu.tamilclone.com
ஒரு பூட்டிய அறையில் நான்கு சகோதரர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு உயரமுடையவர்கள். அவர்களின் சராசரி உயரம் 76 அங்குலங்கள் (inches). முதல் மூன்று சகோதரர்களும் 2 அங்குல வித்தியாசங்களை உடையவர்கள். 3 ஆவது சகோத‌ரத்திற்கும் அவரது தம்பிக்கும் இடையிலான உயர வித்தியாசம் 6 அங்குலங்கள். கேள்வி : ஒவ்வொருவரது உயரங்களும் என்ன?...

மூலம் : http://edu.tamilclone.com

Thursday, February 07, 2013

கம்ப்யூட்டர்னா என்னான்னு தெரியுமா?!- ஐஞ்சுவை அவியல்

                   
ஆல, அஞ்சலை, கன்னியப்பா, முனியம்மா, கிரி, கஜா, மணி எல்லாத்துக்கும் ெள்ளிக்கிழமாலை வணக்கம்ங்க.  நாம  எவ்வளவு நாளா  ”கம்ப்யூட்டரை” யூஸ் பண்றோம். இருந்தாலும், எல்லாருக்குமே ”COMPUTER"ன்ற ஆங்கில வார்த்தைல வர்ற எழுத்துக்களோட விரிவாக்கம் என்னன்னு தெரியலை. (என்னைப் போல சிலறிவாளிகள் சில பேர் தவிர...,) தெரியாதவங்கலாம் தெரிஞ்சுக்கோங்க ப்ளீஸ்.., டியூசன் பீஸ் அனுப்பனும்ன்னு நினைக்குறவங்கலாம் மெயில்ல காண்டாக்ட் பண்ணா அக்கவுண்ட் நம்பர் தரேன்.  
C- Common, 
 O- Oriented, 
M-Machine,   
P-Particularly,   
 U  - Used for, 
 T-Trade,  
 E  - Education,  
 R - Research. 
 COMPUTER - Common Oriented Machine Particularly Used for Trade Education and Research.)

*************************************************

ஏழு கை வாச்ச!!?? ஆனா, பாரங்க எனக்க Pull ற்றும் Push" ந்தெண்டத்ுக்கும் இன்னிக்கைக்கம் குழப்பம்ான். இத்ைக்கும் வீட்டிலிரந்ு ோகும்பத இங் pushன்னு இருக்கும் ள்ளும், இங்க  pullன்னு இருக்கும் இழுக்கும்ன்ன(நான் சொல்றிான?!) முக்குள்ள சொல்லிக்கிட்டே போயும் சப்புவேன். அேப்போலான் Escalatorும் பப்பாம ஏறு இல்ல. ஏன்னும் புரிய. எனக்கு மட்டும்ான் இப்பியா?! இல்ல, எல்லாருக்கும உள்ளுக்குள்ளே இருக்கா?ன்னு சொல்லங்கேன் ப்ளீஸ்..., சொன்னங்கன்னா யாராவு பில்லி சூனியம் வெச்சிரந்தா எடுக்கியா இருக்கும்.

**************************************

 எல்லாரும்ாழைஇலையில் சாப்புடோம். ா, எந்தாப்பாட்டொருட்கை,  எங்கைக்கும்ன்னக்கெரியத. ந்த ாப்பாட்டு பொருளை எங்கைக்கும்ன்ன ஒரு விிமுறையை பெரியங்கத்ிருக்கங்க. அன்பி இப்படத்தில் உள்ளப்படி இலையில் வைக்கவேண்டிய பலகாரப் பட்டியல் வருமாறு.
1) உப்பு, 2) ஊறுகாய், 3) சட்னிப் பொடி, 4) கோசும்பரி, 5) கோசும்பரி, 6) ுவையல். 7) பீன்.. பல்யா,     8) பலாப்பழ உண்டி,     9) சித்ரண்ணம்,     10) அப்பளம்   (பப்படம்)
11) கொரிப்பு, 12) இட்லி, 13) சாதம், 14) பருப்பு, 15) தயிர் வெங்காயம், 16) இரசம், 17) பச்சடி, 18)  பக்கோடா, 19) கூட்டு, 20) பொரியல், 21) அவியல், 22) கத்ரிக்காய் , 23) இனிப்பு,  24) வடை,  25)  இனிப்பு  சட்னி,  26) கிச்சடி,    27) காரப்பொரியல், 
28) பாயசம், 29) தயிர், 30) மோர், 31) பலகார வகைகள்

***************************************
 
 பேஷண்ட்„ ……டாக்டர், என்னோட தலைமுடி கொஞ்சம் கொஞ்சமா உதிருது. என்ன செய்யுறது?
டாக்டர்„ ……உதிர்ந்த முடியை வச்சிக்கிட்டு என்ன செய்ய முடியும். தூர எறிஞ்சிடுங்க...,
ண்ட்: !!!????
                       
***************************
how darken the colour mehendi
இரவில் படுக்கும் போது மருதாணி இலை அல்லது ஹென்னாவை வெதுவெதுப்பான நீரில் ஊற வைக்க வேண்டும். அதிலும் டீ டிக்காசனில் ஊற வைத்தால், நன்கு நிறம் பிடிக்கும். 
 * காப்பி பவுடரை வைத்து நிறம் வர வைக்கலாம். அதற்கு இரவில் ஹென்னாவை ஊற வைக்கும் போது, அவற்றில் ஒரு டேபிள் ஸ்பூன் காப்பி பவுடரை சேர்த்து ஊற வைத்தால், மறுநாள் அதனை வைக்கும் போது நல்ல நிறத்தில் பிடிக்கும். 
* எலுமிச்சை சாற்றில் சர்க்கரையை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் கைகளில் மருதாணி அல்லது ஹென்னாவை வைத்தப்பின்பு, அது காய்ந்ததும், அதன் மேல் இந்த எலுமிச்சை கலவையை வைத்து, அது காய்ந்ததும் கழுவிப் பார்த்தால், நல்ல நிறம் பிடித்திருக்கும். 
 * மெஹந்தி அல்லது மருதாணியை கைகளில் வைத்தால், குறைந்தது ஆறு மணிநேரமாவது வைத்திருக்க வேண்டும். அவ்வாறு ஆறு மணிநேரம் ஆனப் பின்பு தான் அந்த எலுமிச்சை கலவையை வைக்க வேண்டும். 
 * அடுப்பில் வாணலியை வைத்து, அதில் கிராம்பை போட்டு வறுக்க வேண்டும். பின் அதனை இறக்கி, அந்த வாணலியிலிருந்து 4 இன்ச் மேலே கைகளை நீட்டி, சற்று நேரம் ஆவி பிடிக்க வேண்டும். அதன் பின் மெஹந்தியை வைத்தால், நிறம் நன்கு டார்க் ஆகும்.
 * இது ஒரு பழைய முறை. அதாவது, வலி நிவாரணியை கைகளில் தடவினால் நிறம் பிடிக்கும். அது எப்படியெனில் மெஹந்தியை கைகளில் வைத்து காய்ந்ததும், அதன் மேல் வலி நிவாரணியை தேய்த்தால், நிறம் பிடிக்கும். எப்படியெனில் அந்த வலி நிவாரணி சருமத்தின் மேல் படும் போது ஒருவித வெப்பத்தை உருவாக்கும். இதனால் மெஹந்தி நல்ல நிறத்தில் இருக்கும்.
.