Showing posts with label ஜோக். Show all posts
Showing posts with label ஜோக். Show all posts

Monday, April 07, 2014

தேர்தலும், கிரிக்கெட்டும் கோடைக்காலத்தில் நடத்துவதன் மர்மம் - ஐஞ்சுவை அவியல்

ஏனுங்க மாமா! ராத்திரி இம்புட்டு நேரமாச்சே! இப்பதான் வீட்டுக்கு வர வழித்தெரிஞ்சுதா!?  

கட்சி மீட்டிங் நடந்துக்கிட்டு இருந்துச்சு. அங்கப் பேசுறது கேட்டுக்கிட்டு இருந்ததால டைமாகிடுச்சு.

இப்ப பத்தாவது பரிட்சை நடக்குது. மத்த பசங்களுக்கும் பரிட்சை நடந்துக்கிட்டு இருக்கு. இந்த நேரத்துல, நேரம் கெட்ட நேரத்துல கட்சிப் பாடல்களை சத்தமா பாட விடுறதும், கோஷம் போட்டுக்கிட்டு தெருத் தெருவா சுத்துறதும் நல்லாவா இருக்கு. தேர்தல் ஆணையமும், அரசியல் கட்சிகளும் ஏன் இதை யோசிக்க மாட்டேங்குறாங்க. எனக்கு ரொம்ப நாளாய் ஒரு டவுட்டு மாமா! அதெப்படி பள்ளி பொதுத் தேர்வு வரும்போது எலக்‌ஷனும் நடக்குது. கிரிக்கெட் மேட்சும் நடக்குது. அதுக்கான காரணம் என்ன மாமா!?

எனக்கும் சரியா தெரியல புள்ள. ஒரு வேளை கோடைக்காலம்ங்குறதால வெயில் கொடுமைத் தெரியாம இருக்க ஒரு பொழுது போக்கா இருக்கட்டுமேன்னு நல்ல எண்ணத்துல வைக்குறாங்களோ என்னமோ!!?? 

அப்படியும் இருக்கலாம் மாமா.  மாமா ரெண்டு நாளைக்கு முன்னாடி எதிர்த்த வீட்டு ரேவதி தன் ஒன்றரை வயசு குழந்தையை இடுப்புல வச்சுக்கிட்டு தெருவுல நின்னு வேற ஒருத்தர்கிட்ட கதைப்பேசிக்கிட்டிருந்திருக்கா. குழந்தை கையிலிருக்கும் பிஸ்கட்டை நாய் பிடுங்கி இருக்கு. நாய் பிஸ்கட்டை மட்டும் பிடிங்காம குழந்தை கையையும் சேர்த்து கடிச்சிடுச்சு. நல்ல வேளை அதிகமா காயம் எதும் படல. லேசா பல்தடம் பதிஞ்சதோட சரி. குழந்தை கத்துனதை கேட்டுதான் என்ன நடந்துச்சுன்னு ரேவதி புரிஞ்சுக்கிட்டு இருக்கா. 

இப்படியா! கதை பேசுவீங்க. கைவிரலை கடிச்சு துண்டாக்கி இருந்தா என்ன செய்யுறது. டாக்டர்கிட்ட கூட்டிப் போனாங்களா!?

இல்ல மாமா. லேசா பல்தடம் பட்டதுக்கு எதுக்கு டாக்டர்கிட்டப் போகனும்ன்னு விட்டுட்டாங்க.

என்ன ஒரு இருநூறு ரூபாய் செலவாகுமா!? டாக்டரைப் பார்த்துட்டு வரச்சொல்லு.

ம்ம்ம் சொல்றேன் மாமா. ராஜி பையன் சின்ன வயசுல சாமிக் கும்பிடும்போது சாமி! பெரிய அக்காவை காப்பாத்து, சின்ன அக்காவை காப்பாத்து, எனக்கு கோவம் வரக்கூடாது, 3 வண்டி வாங்கி நாங்க மூணு பேரும் ஸ்கூல் போகனும்.  நான் வேலைக்குப் போய் அம்மா, அப்பாவைக் காப்பாத்தனும், பெரிய வீடுக்கட்டி அம்மாவுக்கு ஒரு ரூம், அப்பாவுக்கு ஒரு ரூம், எங்க மூணு பேருக்கும் ஒரு ரூம் வச்சு வீடுக்கட்டனும்ன்னு சாமிக் கும்பிடுவான். 

ஏண்டா, உங்க மூணு பேருக்கும் ஒரு ரூமா!? அது நல்லா இருக்காதேடா, ஆளுக்கொரு ரூம் கட்டிக்கோங்கன்னு ராஜி சொன்னா, ஆளுக்கொரு ரூம் கட்டினா தனித்தனியா படுக்கனும். அப்புறம் நான் உச்சாப் போறதை நீங்க கண்டுப்பிடுச்சுடுவீங்கனு சொல்வான்.



ஆஹா! நல்ல ஐடியாதான் சரி உனக்கொடு படம் காட்டுறேன். அதுல எத்தனை கறுப்பு புள்ளி, வெள்ளைப் புள்ளி இருக்குன்னு சொல்லுப் பார்க்கலாம்.

இருங்க உங்களுக்கொரு ஜோக் சொல்லிட்டு அப்புறம் விடை சொல்றேன். 

கிளினிக்கில் எதுக்கு 12 ராசிகளின் பெயர்களை டாக்டர் எழிலன் சார்
எழுதி வெச்சிருக்கிறாரு?

ராசியில்லாத டாக்டர்னு யாரும் சொல்லிடக் கூடாது
பாருங்க, அதான்!

ஹா! ஹா! இதும் நல்ல ஐடியாதான். விடைச் சொல்லுப் பார்க்கலாம்.

இருங்க வரேன்....,

Monday, March 03, 2014

பெண்கள் பாதுகாப்பு சட்டம் குடும்பத்தை சிதைக்குதா!? ஐஞ்சுவை அவியல்


வாங்க மாமா! எங்கப் போய் வர்றிங்க!? மூணாவது தெரு முனியனுக்கும் அவன் பொஞ்சாதிக்கும் சண்டை. அந்தப் புள்ள பொசுக்குன்னு போய் போலீஸ்ல பிராதுக் கொடுத்துட்டு வந்துருச்சு. இப்ப முனியன் ஜெயில்ல. அதான் என்ன ஏதுன்னு விசாரிச்சு அவனை வெளில கூட்டி வரலாம்ன்னு போனோம்.

ஏன் என்னாச்சு!? முனியன் அண்ணா ரொம்ப நல்லவராச்சே! அதிர்ந்துக் கூட பேச மாட்டாரே!!

ம்ம் அதான் நிஜம். முனியன் பொண்டாட்டி செல்வி தன்னோட நகைகளை தன் அண்ணன்கிட்ட கொடுத்திருக்கு. தன்கிட்ட சொல்லிட்டு கொடுத்திருக்கலாமில்ல! இது என்ன உன் அப்பா சம்பாதிச்சுக் கொடுத்ததான்னு முனியன் கேட்டிருக்கான். ரெண்டுத்துக்கும் சண்டை வந்திருக்கு. உடனே, போலீஸ்ல போய் வரதட்சனை கேட்டு கொடுமைப் படுத்துறான்னு சொல்லி அழுதிருக்கு. பொம்பளைக் கண்ணீரைப் பார்த்ததும் என்ன ஏதுன்னு விசாரிக்காம முனியனை தூக்கி உள்ள வச்சுட்டாங்க.

இப்பலாம் யாரையாவது பழைவாங்கனும்ன்னு நினைச்சா உடனே ஈவ் டீசிங், பாலியல் கொடுமை முயற்சி, வரதட்சணைக் கொடுமைன்னு பிராது கொடுக்குறதுதான் பேஷனாப் போச்சு!! மகளிர்க்காக மகளிர் காவல் நிலையம் வந்தாலும் வந்தது பொய் புகார்கள் அதிகமாப் போச்சு!!

ம்ம்ம்ம்ம் நீங்கச் சொல்றதும் சரிதான் மாமா!  சென்னைல உமான்னு ஒரு பொண்ணு கொலையாகிப் போச்சு! தெரியுங்களா!?

ம்ம்ம் கொலையானதும் தெரியும், கொலையாளிகளைப் பிடிச்சதும் தெரியும்.அதுக்கு முன்ன நடந்த கலாட்டாக்களும் தெரியும். வழக்கத்தை விட முன்கூட்டியே அலுவலகத்தை விட்டு உமா ஏன் கிளம்புனாங்க!? வீட்டுக்கு தெரியாத உமாக்கு எதாவது மறுபக்கம் இருக்கான்னு!? ஆயிரம் கேள்விகள்.

டெல்லி நிர்பயா விசயத்துல ராத்திரில, ஆண் நண்பரோட போனதுதான் காரணம்ன்னு வாய் கிழிய பேசினவங்க இப்ப என்ன சொல்லுவாங்க. உமா நடுராத்திரில போகலை, உடல் தெரிய உடை அணியலை!! ஆண் நண்பருடனும் செல்லலை!ஆனாலும் உமாவின் சிதைவுக்கு என்னக் காரணம்!? ஆரம்பத்துல இருந்தே நம்ம வீட்டுல ஆணை விட பொம்பளை பிள்ளைங்க மட்டம்ன்னு சொல்லிச் சொல்லி வளர்க்குறதுதான் காரணம். பெண்ணுக்கும் உணச்சி, மனம்  உண்டுன்னு பசங்களுக்கு சொல்லி வளர்க்குறாமா!? இல்லியே!!  எளியோரை வலியோர் வதைப்பது நம்ம சமூகத்துல சகஜம். தன்னைவிட எளியவரான பெண்ணை, ஆண்கள் வதைப்பதும் சகஜம்தான்னு நினைச்சு நடந்துக்குறாங்க.

நீங்க சொல்றதுலாம் சரிதான் மாமா! ஆனா, பெண்களும், எங்கப் போனாலும் வீட்டுல உண்மையான தகவலைச் சொல்லிட்டுப் போகனும், தனிமையான இடத்துக்குப் போக நேரும்போது கொன்ச நேரம் காத்திருந்து அந்தப் பக்கம் போகும் ஆட்கள் துணையோடு போகலாம். காதலன், உறவினரே ஆனாலும் தனிமையில் போறதை தவிர்க்குறது நல்லது. முடிஞ்ச அளவுக்கு எதாவது தற்காப்புக் கலையைக் கத்துக்குறதும் நல்லது.

நீ சொல்லுற பாயிண்டும் நல்லாதான் இருக்கும் புள்ள.
சீரியசான விசயமாவேப் பேசிட்டோம். என் ஃப்ரெண்ட் ராஜி வீட்டுக்குப் போயிருந்த சமயம். ராஜியோட பையன் அப்புக்கு அப்ப 5  இல்ல ஆறு வயசிருக்கும், நான்  போன நேரம் ராஜி வீட்டுக்கு அவங்க வீட்டுக்கு பக்கத்து வீட்டு பாட்டி வந்திருந்தாங்க. ராஜி அந்தப் பாட்டிக்கிட்ட நாங்க இந்த வீட்டுக்கு குடி வந்து ஒரு வருசமாகப் போகுது. இன்னும் தாத்தா பேர் தெரிஞ்சுக்கல. தாத்தா பேர் என்னன்னு கேட்டா.

அதுக்கு அந்த பாட்டி தாத்தா பேரு ரெண்டுப் பேரும்மான்னு சொன்னாங்க. உடனே, அப்பு என்னாது!!?? உங்க வீட்டுல தாத்தா ரெண்டு பேரான்னு கேட்டதும், பாட்டி ஒரு நிமிசம் திகைச்சாலும் உடனே பாட்டி சிரிச்சுட்டாங்க.

உன் ஃப்ரெண்டை போலவே அவ பையனும் எகணை மொகனையாவே சிந்திக்குறான் பாரு. சரி நான் ஒரு ஜோக் சொல்லவா புள்ள!!??
சொல்லுங்க மாமா!

டீச்சர்: உலகம் ஒரு நாடக மேடை. அதில் நாம் அனைவரும் நடிகர்கள்.

மாணவி: சார்! சார்!! அப்போ எனக்கு விஷால ஜோடியா போடுங்க சார்!
டீச்சர்: !!!!!!!!!!????????
நீங்க ஜோக் சொன்னீங்க. நான் ஒரு விடுகதை கேக்குறேன் அதுக்குப் பதில் சொல்லுங்க பார்க்கலாம்!!


நெஞ்சிலே ஒரு கல், வீட்டிலே ஒரு கல், வானத்திலே ஒரு கல் - அதெல்லாம் என்ன கல்!?
வெயில்ல அலைஞ்சது தலை வலிக்குது! ஒரு காஃபி போட்டு கொண்டு வா! அப்புறம் பதில் சொல்றேன்.

விடை தெரியலைன்னாலும் சமாளிக்குறதுல ஒண்ணும் குறைச்சல் இல்ல மாமா! இருங்க காஃபி போட்டு கொண்டாறேன். 

Monday, November 04, 2013

என்று மாறும் இந்த மீடியாக்கள்!? - ஐஞ்சுவை அவியல்


என்ன புள்ள!? என்ன படிக்குறே! எதாவது கதை புஸ்தகமா!?

இல்ல மாமா!! புதுச்சேரியை மாநிலம், கூடப்பாக்கத்தை சேர்ந்த வெங்கடபதி என்ற விவசாயிக்கு பத்மஸ்ரீ விருது கிடைச்சிருக்கு. தன்னோட 19 வது வயசுல விவசாயத்தில் ஈடுபட ஆரம்பிச்சு. தன் வாழ்நாளில் கனகாம்பரம், சவுக்குல நூறு புதிய ரகத்தை உருவாக்கி இருக்கார். அதுமட்டுமில்லாம, தன்னோட நிலத்தில் இயற்கை உரத்தை மட்டுமே பயன்படுத்தி, மத்தவங்களைவிட அதிக மகசூலை பெற்று சாதனை புரிஞ்சிருக்கார். 4 தலைமுறையா விவசாயம் மட்டுமே செய்யும் குடும்பத்தை சேர்ந்தவர். இப்படி சாதனை பண்ணிய இவர் வெறும் நாலாவது வரை மட்டுமே படிச்சிருக்காராம்.

இப்படிப்பட்ட ஒரு நல்ல நிகழ்ச்சியை சில பத்திரிகை மட்டுமே வெளியிட்டிருக்கு. மத்ததுலாம் இந்த நியூசை கண்டுக்கவே இல்லியாம்!

ம்ம்ம் அவங்களுக்கு இதுக்கெல்லாம் ஏது நேரம்!? கொலை, கொள்ளை, சினிமா, நடிகைகள் பேட்டி எடுத்து போடவே நேரம் சரியா இருக்கு!! 

அப்புறம் இன்னிக்கு நம்ம தெருவுல, நம்ம வீட்டு கிட்டக்க ஒரு நாய் பஸ்சுல அடிப்பட்டு செத்து போச்சு!! நம்ம தெருக்காரங்க யாரும் அதை எடுத்து தூர கொண்டுப் போய் போட முன் வரல்;ஐ. என்னையும் சேர்த்துதான். அது போற வர்ற வண்டில பட்டு கொஞ்சம் கொஞ்சமா சிதைஞ்சு வந்துச்சு.

அப்ப, அந்த வழியா டூவீலர்ல வந்த ஒரு 25 வயசு பையன், அந்த நாயை, பக்கத்தில் இருந்த காலி மனையில் இழுத்து போய் போட்டவர்,  தெருவில பக்கத்து வீட்டுக்கு போய் ஒரு மண்வெட்டி வாங்கி வந்து, சரசரன்னு பள்ளம் வெட்டி, அந்த நாயை அதுக்குள்ள போட்டு புதைச்சுட்டு மண்வெட்டியை திருப்பி கொடுத்திருக்கார். நீங்க யாரு? ன்னு கேட்டதுக்கு, தான் ஒரு சாஃப்ட்வேர் இஞ்சினியர்ன்னும் தீபாவளி லீவ் முடிஞ்சு சென்னைக்கு போய்க்கிட்டு இருக்குறதாவும் சொன்னாராம். 

ஏன் இப்படி பண்ணுறீங்க? உங்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலைன்னு கேட்டதுக்கு, அடிப்பட்டு ஒரு உயிர் போயிருக்கு, அந்த உயிருக்குண்டான மரியாதையை நாம செய்ய வேண்டாமா!? அதுமில்லாம, அது ஒரு தெரு நாய். கண்டிப்பா அதுக்கு தடுப்பூசிலாம் போட்டிருக்க மாட்டாங்க, ஒருவேளை அது உடம்புல நோய்க்கிருமிகள் இருந்து அது காத்து வழியா பரவி இங்க இருக்குறவங்களுக்கு பரவிட போகுதுன்னுதான் செஞ்சேன்ன்னு சொல்லிட்டு போய்ட்டாராம். இதை கேட்டு அசிங்கமா போச்சு எனக்கு. நம்ம வீட்டை போலவே வீட்டை சுத்தியும் சுத்தமா வச்சுக்கனும்ன்னு தோணலியே! இனிமேல் பட்டாவது இதுப்போல நடக்காம பார்த்துக்கனும் மாமா!!

ம்ம்ம் அந்த புள்ள சொன்னது சரிதான்.  நாய் உடம்புல இருந்து நோய் கிருமிகள் எதாவது பரவலாம். சரி, ரெண்டுமே சீரியசா பேசிட்டோம். ஒரு ஜோக் சொல்லவா!?  

ம்ம் சொல்லுங்க! 

டாக்டர் : தினமும் குளுக்கோஸ் சாப்பிடுங்க
மாயான்டி மாமா : அது கிடைக்கலேன்னா முட்டை'கோஸ்' சாப்பிடலாமா?

சிரிப்பே வரலை. இதெல்லாம் ஒரு ஜோக்கா!? ஒரு முறை ராஜி வீட்டுக்கு போய் இருந்தேன். அன்னிக்கு அமாவாசை. சாமிக்கு படைச்சுட்டு, ஒரு இலையில சாதம் வச்சு, ராஜியோட சின்ன பொண்ணுக்கிட்ட கொடுத்து, இதை கொண்டு போய் காக்காக்கு வச்சுட்டு வான்னு சொன்னா.

அதுக்கு இனியா, ஏன் இதுப்போல சாதம் வைக்கனும்ன்னு கேட்டுச்சு. அமாவாசை விரதம் செத்து போன தாத்தாக்கள், பாட்டிக்களுக்கு படைக்குறது. அப்படி படைச்சு சாதம் கொண்டு போய் வச்சா, அவங்கலாம் காக்கா உருவுல வந்து சாப்பிடுவாங்கன்னு ஒரு ஐதீகம்டா கண்ணுன்னு சொன்னா! உடனே, இனியா, அப்ப அரிசி, பருப்பு, வத்தல்லாம் காய வைக்கும்போது காக்கா வந்தா கம்பெடுத்து அடிச்சு வெரட்டுறே! நீ உங்க தாத்தா, பாட்டியையே அடிக்குறியே! உனக்கு பாசமே இல்ல. போம்மா!ன்னு அலுத்துக்கிச்சு. ராஜி முகம் வெளக்கெண்ணை குடிச்ச மாதிரி ஆகிடுச்சு!


ஹா! ஹா! நல்லா வேணும். அவ ஊரெல்லாம் வாயாடுறா. ஆனா, அவ வீட்டுல அவளால வாயை திறக்க முடியுதா!?

சரி ஒரு விடுகதை சொல்றேன் விடை சொல்லு பார்க்கலாம்!!

ம்ம்ம்ம் சொல்லுங்க!! 

அச்சு இல்லாத சக்கரம், அழகு கூட்டும் சக்கரம், விதவித வண்ணச் சக்கரம், விலைக்குக் கிடைக்கும் சக்கரம்! அது என்ன!? சொல்லு பார்க்கலாம்.

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்..., 

Monday, October 07, 2013

நவராத்திரி விரதம் கொண்டாடுவது ஏன்!? - ஐஞ்சுவை அவியல்

ஏனுங்க மாமா! பக்கத்து வீட்டக்கா, நவராத்திரிக்காக கொலு வச்சிருக்காங்க, என்னை கூப்பிட்டாங்க. நாமளும் நம்ம வீட்டுல கொலு வைக்கலாமா?!

சரி புள்ள! ஆனா, நவராத்திரி ஏன் கொண்டாடுறங்கன்னு தெரியுமா!?

தெரியாதே மாமா!!

ஒரு விசயத்தை செய்யும் முன் ஏன் எதுக்குன்னு யோசனை பண்ணி அதுக்கான காரணத்தை புரிஞ்சுக்கிட்டு செய்யனும் புள்ள. சரத்ருது  (புரட்டாசி, ஐப்பசி), வசந்த ருது (சித்திரை) காலங்களில்தான் நவராத்திரி கொண்டாடனும்ன்னு பஞ்சாங்கம் சொல்லுது. இந்த மாசங்கள மட்டும் குறிப்பிட்டி சொல்ல என்ன காரணம்ன்னா..., இந்த மாசம்லாம் எமனின் கோரைப்பற்கள்ன்னு நம் புராணங்கள்ல சொல்றாங்க. 
நவக்கிரகங்களின் சஞ்சாரத்தை கோள்சாரம்ன்னு சொல்றாங்க. . இதுல  சூரியனுக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. இவர் புரட்டாசி மாசத்துல புதனுக்குரிய கன்னிராசியில இருப்பார். புதன் கல்வி,கலைகளுக்குரியவராகவும், புத்திசாலித்தனம், நல்ல குணத்துக்குரியவரா சொல்றாங்க,  அதனால் தான் கல்வி, கலைகளுக்குரிய கலைமகளை இம்மாசத்தில் வழிபாடு செய்கிறோம். இசை, நடனம், விளையாட்டு போன்ற கலை பயில்பவர்களும், அட்சர அப்யாசம் என்னும் முதல் படிப்பு சடங்கு செய்பவர்களும் புரட்டாசியில் வரும் விஜயதசமி நாளிலேயே தொடங்குறாங்க. புரட்டாசியில் வரும் இந்நவராத்திரியை சரஸ்வதியின் பெயரை இணைத்து சாரதா நவராத்திரி ன்னும் அக்காலத்தில் சொல்லி இருக்காங்க. . சரஸ்வதிக்கு சாரதா என்ற பெயரும் உண்டு. கல்வி மட்டுமல்லாமல் செல்வம், தைரியமும் மனிதனுக்கு அவசியம். அதனை பெறாவே கலைமகள், அலைமகள், மலைமகள்ன்னு மூணு பேரையும் இந்த நாட்களில் வணங்குறோம்.

. இந்த மாசங்கள்ல உயிரினங்களுக்கு கடுமையான உயிரை பலிவாங்க கூடிய  நோய்கள்ல்லாம் வரும்.  இதிலிருந்து மீளனும்ன்னா சண்டிகை பூஜை செய்யனும்,  அதனால, பதினெட்டு கைகளையுடையவளாகவும், ஆயுதம் தரித்தவளாகவும் அம்பாளை அலங்கரித்து வழிபடும் வழக்கம் வந்துச்சாம். வடமாநிலங்களில் துர்கா பூஜையாக நவராத்திரி கொண்டாடப்படுது. நம்மோட வாழ்க்கையில நான்கு வகையான வசதிகளை வேணும்ன்னு நினைக்குறவங்க, நவராத்திரி பூஜையை  அவசியம் செய்யனுமாம். அந்த நாலு வசதிகள் என்னன்னா, கல்வியில் சிறந்து விளங்க நினைப்பவர்கள், எந்தச் செயலிலும் வெற்றி பெற விரும்புபவர்கள், அரசியலிலும் ஆட்சியிலும் தொடர எண்ணுபவர்கள்,  சுகமான வாழ்வு வேண்டுபவர்ககள்ல்லாம் நவராத்திரி விரதம் அனுஷ்டிச்சா கிடைக்குமாம்.

 இவங்க அவங்க வீட்டுல. அவங்கவங்க வசதிக்கேற்ப சக்திதேவி சிலை அல்லது படத்துக்கு நவராத்திரியின் ஒன்பது நாட்களும் மலர் மாலைகள் அணிவித்து, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நைவேத்யம் படைத்து வணங்கனும். மேலும், இவர்கள் ஏழைகளுக்கு தானமும் செய்யனும்ன்னு ஐதீகம்.. நவராத்திரியை மூணு, மூணு நாளா பிரிச்சு கொண்டாடுறாங்க.

முதல் மூணு நாள் லட்சுமி தேவிக்கும், அடுத்த மூணு நாட்கள் சக்திக்கும், கடைசி மூணு நாட்கள் சரஸ்வதிக்கும் என விழா எடுத்து கொண்டாடுறோம். அது ஏன்ன்னா, வாழ்க்கைக்கு தேவை பணம் பிற வசதிகள். அந்த பணத்தை தர வேண்டி லட்சுமியை முதலில் கும்பிடுறோம். பணமிருந்தால் போதுமா? அதைப் பாதுகாப்புடன் வைக்கனுமே! அதற்குரிய தைரியத்தையும் வழிமுறையையும் வேண்டி சக்தியாகிய துர்க்கை, காளி இன்னும் பிற காவல் தெய்வங்களை வணங்குறோம். பாதுகாப்புடன் கூடிய செல்வம் மட்டும் போதுமா! அதை என்னென்ன பயனுள்ள காரியங்களுக்கு பயன்படுத்தனும் ன்னு தெரியனுமே! அதுக்குத்தான் கல்வி. இது மாதிரியான காரணத்துலதான் நவராத்திரி விரதத்தை கொண்டாடுறாங்க.
                                    
விரதம்லாம் சரி. ஆனா, ஏன் மாமா கொலு வைக்குறாங்க!?

 தேவி ஆதிபராசக்தி இப்பூவுலகம்ஆட்சி செய்கிறாள்.  புல், பூண்டு, புழு, மரம், பசு, புலி, மனிதர் ன்னு எல்லாவித உயிர்களுமா விளங்குகிறாள் பராசக்தி. ஆக, அனைத்து உயிர்களிலும், பொருள்களிலும் அவளை பார்க்கனுன்றாதே கொலு வைப்பதன் நோக்கம். இதனால்தான் கொலுவிற்கு சிவை ஜோடிப்பு என்றும் பெயருண்டு. சிவை என்றால் சக்தி. சக்தியின் வடிவே பொம்மை அலங்காரமாகச் செய்யப்படுது. எனவே, கொலு வைத்தால் மட்டும் போதாது. எல்லா உயிர்களையும் தன்னுயிர் போலக் கருதும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளனும். மொத்தத்தில் இந்தப் பண்டிகை முழுக்க முழுக்க பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பண்டிகை. மாலை வேளையானதும் முருகன், கிருஷ்ணன், ராமன், கணபதி, ராதை, அம்மன் ன்னு குழந்தைகளுக்கு வேசம் போட்டு கொலு வச்சிருக்கும் வீட்டுக்கு போவாங்க. அந்த கடவுளே குழந்தைகள் ரூபத்துல அந்த வீட்டுக்குள் வர்றதா நினைச்சுப்பாங்க. இதான் கொலு வைக்குறதுக்கான காரணம்.
நவராத்திரி விரதம் பத்தி புரிஞ்சுக்கிட்டேன் மாமா!  நேத்து டிவில எதோ ஒரு சினிமா ஃபங்கஷன் போட்டாங்க. 

ம்ம் நானும் பார்த்தேன். டிவி பக்கம் அதிகமா போகாத நீயே, பொறுமையா உக்காந்து பார்த்துட்டு இருந்தியே என்னது!?

ம்ம்ம் நான் ஒண்ணும் நிகழ்ச்சியை ரசிச்சு பார்க்கல, மனசு கொந்தளிச்சு போய் பார்த்துட்டு இருந்தேன். கோடி, கோடியாய் சம்பாதிக்கும் நடிகைகள் அத்தனை பேரும் அங்கங்க கிழிஞ்ச ட்ரெஸ் போட்டுக்கிட்டு, அதுலயும் கமல் மகள் ஸ்ருதி போட்டுட்டு வந்து விருது வாங்குன ட்ரெஸ் இருக்கே. ஓங்கொ ஒரு அப்பு அப்பலாம்ன்னு தோணுச்சு, அதுமட்டுமில்லாம எல்லோரும் தலையை பப்பரப்பான்னு விரிச்சு விட்டுக்கிட்டு வந்துச்சுங்க. 24 மணி நேரமும் அந்த தலைமுடியை ஒதுக்கிவிட்டுக்கிட்டே இருக்காங்களே! அதைவிட ஒரு அஞ்சு நிமிசம் செலவு பண்ணி ஒரு க்ளிப் மாட்டிக்கிட்டு வந்தா நல்லா இருக்குமே!

ம்ம் யோசிக்க வேண்டிய விசயம்தான் புள்ள! ஒரு ஜோக் சொல்றேன் கேளு
நாட்டாமை: என்ரா... பசுபதி...எக்ஸாம்’க்கு பெவிகால் எடுத்துட்டுப் போற?
பசுபதி: அய்யா.. கொஸ்டின் பேப்பர் லீக் ஆகிப் போச்சாம்..
நாட்டாமை: என்ர தம்பி சிங்கம்டா.. சிங்கம்டா..... சிங்கம்டா..


ஹா! ஹா! ஜோக் நல்லாதான் இருக்கு நான் கேக்குற விடுகதைக்கு விடை சொல்லுங்க பார்க்கலாம்...,

வாயில்லை, பல் இல்லை, ஆனா கடிக்கும்! அது என்ன?
கை இல்லை, விரல் இல்லை, ஆனா அடிக்கும்! அது என்ன?
கால் இல்லை, சிறகில்ல, ஆனா ஓடும்! அது என்ன?
அது வந்து.., எனக்கு வயக்காட்டுக்கு போகனும். டைமாச்சு.
இந்த டபாய்க்குற வேலைலாம் வேணம். முதல்ல பதிலை சொல்லுங்க. எனக்கும் பதில் தெரியும். ஆனா, உன் அண்ணன், தம்பிலாம் செம புத்திசாலின்னு சொல்லி பெருமையடிப்பியே!! அவங்கள்ல யாராவது சொல்லட்டும் நான் அப்புறமா விடை சொல்றேன்.
என் சகோதரர்கள்கூட போட்டி போடுறீங்களா!? யார் மூக்கு உடையுதுன்னு பார்க்கதானே போறேன்!!

Monday, June 24, 2013

பூ பூக்கும் ஓசை - ஐஞ்சுவை அவியல்

  




என்ன மாமா செய்யுறீங்க?!

ஒண்ணுமில்ல புள்ள! நம்ம சின்ன மண்டையன் படிக்குற இஸ்கோலுல பெற்றோர் ஆசிரியர் கூட்டம் கூடப்போகுது அதுக்கு தலைமை தாங்க என்னை கூப்பிட்டு இருக்காங்க. அதான், என்ன பேசலாம்ன்னு யோசனை பண்ணிட்டு இருக்கேன்..,

ம் ம்ம்  நீங்கதான் அடுத்தவங்க பேசுறது, நடக்குறதை  வச்சே உங்களுக்கு தேவையான பாய்ண்ட்ஸ் பிடிச்சுப்பீங்களே! ஆமா, அந்த மாதிரி திறமை எப்படி வந்துச்சு மாமா!

எல்லாத்தையும் உன்னிப்பா கவனிக்கனும் கண்ணு.., அப்போ நமக்கு தேவையானதுலாம் தானா நமக்கு புரியும்.., 

அதான் எப்படி மாமா?! உங்களால முடியுது.., என்னால முடியலை..,

அது பழக்கத்துனால வற்றது புள்ள! ஒருத்தன் தான் நல்லா படிச்சி பெரிய மேதையா வரனும்ன்னு, காட்டுல இருக்குற துறவிக்கிட்ட  குருகுலம் போய் சேர்ந்தான். அந்த  துறவி, சீடனைத் தினமும் காட்டிக்கு போய், அங்க நடக்குறதைலாம் பார்த்து வான்னு அனுப்பினார்.  அவனும் நாம பாடம் படிக்க வந்தா இவரு நம்மளை வேடிக்கை பார்க்க அனுப்புராரேன்னு நினைச்சுக்கிட்டே  தினமும் காட்டுக்கு போய்  வந்தான். 

ஃபர்ஸ்ட் நாள் போகும்போது  பயமா  இருந்துச்சு. ஒரு வாரத்துல காட்டு;ல இருக்குறது எல்லாம் என்ன? ஏது?ன்னு தெரிஞ்சு போனதால காட்டை பற்றிய பயம் போய்டுச்சு.., அப்புறம், வேண்டா வெறுப்பா காட்டுக்கு போனவன் ஆசையா போக ஆரம்பிச்சான்.., அங்க இருக்குற, செடி கொடி,  விலங்குகளை பார்த்துட்டு வந்து எல்லாத்தை பத்தியும் தன் குருக்கிட்ட சொல்வான்.

 இன்னும் காட்டை பற்றி நீ தெரிஞ்சுக்க வேண்டியது நிறைய இருக்கு.., போய் வான்னு குரு சீடனை காட்டுக்கு அனுப்பினார்.  ஒருநாள் சீடன் ஒரு மரத்தோட நிழலில் உக்காந்திருந்தான். காட்டு நீரோடை சலசலத்து ஓடிக்க்கிட்டு இருந்துச்சு.., பறவைகள் பாடிக்கிட்டு இருந்துச்சு.தன்னை சுத்தி என்ன நடக்குதுன்னு ஷார்ப்பா பார்க்க ஆரம்பிச்சான்..


விலங்குகளின் சப்தம், பறவைகளின் ஒலி காதுல  விழுந்ச்சு. இன்னும் கொஞ்சம் கவனிச்சான். வண்டுகளின் ரீங்காரம் கேட்டது. தான் பார்த்ததை குருவிடம் போய் சொன்னான்.  குரு.., ரொம்ப மகிழ்ச்சிப்பா! இன்னும் நல்லா பார்த்து வான்னி தட்டி கொடுத்து அனுப்பினார்..,

அப்படி பார்க்கும்போது..,   காட்டுல,   நடக்குற ஒரு விசயம் அதிசயமா அவன் காதுக்கு கேட்டுச்சு..,    தன்னுடைய காது தானா?ன்னு அவனுக்கு  சந்தேகம் வந்துச்சு..,  பூக்கள் பூக்கும் மெல்லிய ஓசையைக் கேட்டு தன்னை மறந்தான்.  குருவைத் தேடி ஓடி போய்..,  குருவே! என்ன சீடனே! இதுவரை நடக்காத அதிசயத்தை கண்டவாறு  இப்படி ஓடி வந்துள்ளாயே! அப்படியென்ன அதிசயம் காட்டிலே கண்டாய்?!ன்னு கேட்க ஆரம்பிச்சார்..,அவனும் ந டந்ததைச் சொன்னான்.  அதுக்கு, குரு சீடனே உனக்கு ஆழ்ந்த கவனம் கைவந்தது. நாளைல இருந்து நாம பாடம் ஆரம்பிக்கலாம்ன்னு சொன்னார். அதுப்போலதான்   ஆழ்ந்த கவனம் என்பது ”மனிதனுக்கு ஒருநாளில் வருவதல்ல. ஆர்வமும், முயற்சியும் இருந்தால் மட்டுமே சாத்தியம்”ன்னு புரிஞ்சுக்கிட்டியா?!

ம்ம்ம்ம் நல்லாவே புரிஞ்சுக்கிட்டேன்..., நீங்க மேதாவிதான் ஒத்துக்குறே. எங்கே? என்னோட இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க பார்ப்போம்??!!
                                            
கேளு புள்ள!

உங்க கிட்ட பத்து தென்னங்கன்னுங்க கொடுக்குறேன்.  அஞ்சு  வரிசையில் வைக்கனும். ஆனா,  ஒவ்வொரு வரிசையிலும் நாலு தென்னங்கன்னுங்கதான்  இருக்கனும். அப்படின்னா, எப்படி வைப்பிங்க!?

ப்ச்ச்ச்ச்ச் சூ இதானா?! விடை சொல்லவா?!

இருங்க.., இருங்க.., ”அவங்க ”லாம் பதில் சொல்றாங்களான்னு பார்க்கலாம்.., அதுக்குள்ள ஒரு ஜோக் சொல்லுங்க மாமா!

                                       

ம்ம்ம்ம்ம்  ஒரு குடிகாரன் கிளினிக் போறான்.., அங்க..,

டாக்டர்: நீங்க ரொம்ப குடிப்பீங்களோ! அதான் உங்க  கைலாம் நடுங்குதோ?!
குடிகாரன்: டாக்டர்!  நீங்க வேற! இந்த கை நடுக்குத்துல டம்பள்ர்ல இருக்குற பாதி சரக்கு கொட்டிடுது.., மீதி இருக்குற கொஞ்சத்தைதான் குடிக்க வேண்டியிருக்கு!!
டாக்டர்: ????!!!!!

ஹா! ஹா! ஹா! ஜோக் நல்லா இருக்கு.., இந்த ஜோக் கேளுங்க மாமா! என் ஃப்ரெண்ட் ராஜி இருக்காளே, அவளோட ரெண்டாவது பொண்ணு இனியா இருக்கே! அதுக்கு அப்போ 5 வயசிருக்கும்.., ஃபர்ஸ்டோ! இல்ல செக்கண்டோ படிக்குது.., ராஜி அவளை  டியூசன் சேர்த்து விட்டா..,

அதுவரை அவளை ராஜி தனியா வெளில் எங்கும் போக விட்டதில்லை. அன்னிக்கு தனியா அனுப்ப வேண்டிய சூழ்நிலை.., அதனால, இனியா! டியூசன் போகும்போது பார்த்து கவனமா போம்மான்னு சொல்லியிருக்கா..

ம்ம் உன் ஃப்ரெண்ட் எப்பவாவதுதான்  இதுப்போல சரியா பேசுவான்னு எனக்கு தெரியுமே!!

போதுமே அவளை வாருனது.., அதுக்கு அந்த சின்ன பொண்ணு.., சரிம்மா! ஆனா, வரும்போது பார்த்து, கவனமா வர வேணாமான்னு கேட்டு ராஜியை வாயடைக்க வச்சிருக்கா!

இப்படியாவது உன் ஃப்ரெண்ட் கொஞ்ச நேரத்துக்கு வாய் மூடி இருந்தா நல்லதுதான்.., 
 


 ம்க்கும் எப்ப பாரு அவளை கிண்டல் பண்ணுறதே பொழப்பா போச்சு..., 

சரி சரி, உன் ஃப்ரெண்ட் பத்தி சொன்னா உனக்கு கோவம் பொத்திக்குக்கிட்டு வருமே! ஆமா, பொங்கல் ல ஏண்டி இப்படி சீரகத்தை கொட்டி வச்சிருக்கே! சீரகம் உங்கப்பனா வாங்கி தரான்?

ம்க்கும் இத்தனை வருசம் கழிச்சும் எங்கப்பா வாங்கித்தரனுமா உங்களுக்கு?! நம்ம உடம்புல இருக்குற எல்லா பார்ட்டையும் சீராக்கி ஹெல்த்தியா வச்சுக்குறதுனாலதான் அதுக்கு சீரகம்ன்னு பேரு..., சமையலுக்கு மணத்தையும்.., உடலுக்கு ஆரோக்கியத்தையும் சீரகம் தருது...,  

* நெஞ்சு எரிச்சலுக்கு வெல்லத்துடன் கலந்து சாப்பிட்டா சரியாகும்..,

* அகத்தி கீரயுடன் சீரகம், சின்ன வெங்காயமும் சேர்த்து கஷாயமாக்கி  சாப்பிட்டா மன நோய் குணமாகும்..,  

* சீரகத்தை எலுமிச்சை சாறுல ஊற வச்சு,  காய வச்சு பொடியாக்கி மோரில் கலந்து சாப்பிட்டு வந்தா மார்பு வலி போகும்..,

* சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி சம அளவு எடுத்து தூளக்கி தேனில் கலந்து சாப்பிட்டா உடல் உறுப்புகள் சீராகி உடல் ஆரோக்கியமா இருக்கும்..,

* சீரகத்துடன், கீழானெல்லி அரைத்து எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டு வந்தா கல்லீரல் நோய் குணமாகும்..,

* நல்லா காய்ச்சிய நல்ல எண்ணெய், அரிசி, தும்பைப்பூ, சீரக, மிளகு, பூண்டு. இஞ்சி, சாம்பிராணி க்லந்து தலைக்கும், உடலுக்கும் தேய்த்து வந்தால் உடம்பு மிணுமிணுப்பதோடு சுறுசுறுப்பா இருக்கும்..,இதை வாரம் ஒரு முறை இல்லாட்டி மாசம் ஒரு தரம் செஞ்சு வந்தால் நோய் அண்டாது..,

ம்க்கும் இதெல்லாம் எங்கம்மா பாட்டி செஞ்சாங்க.., நீதான் டிவி பொட்டி முன்னாடியும், ஊர்க்கதையும் பேசி பொழுதை வீணடிக்குறே. இதெல்லாம் செஞ்சு புருசனை நல்லா வச்சுக்கனும்ன்னு உனக்கெங்க தெரியப்போகுது?!

ஓ அப்படியா! சரி வர்ற சனிக்கிழமை கொதிக்குற எண்ணேயை அப்படியே தலையில் கொட்டி எண்ணெய் தேச்சு விடுறேன்.., சரியா மாமா!

என்னை கொல்ல பாக்குறாளேளேளேளேளேளே!!!

Monday, June 17, 2013

ராவணனின் பத்து தலைக்கான காரணம் -ஐஞ்சுவை அவியல்


  ஏ புள்ள! மணி பத்தாச்சு.., டிவி பொட்டியை போடு.., ராமாயணம் போட்டிருப்பாங்க பார்க்கலாம்..,

என்ன மாமா திடீர்ன்னு இதெல்லாம் பார்க்க ஆரம்பிச்சுட்டீரு? சரி, அந்த புராணத்துல ராவணனுக்கு ஏன் பத்து தலை வந்துச்சுன்னு தெரியுமா?

அது, கடவுளோட திருவிளையாடல்.., அதுமில்லாம கோவம், காமம், பொய்ன்னு எதாவது பத்து கெட்ட பழக்கத்தை பத்து தலையாக்கி அதை கடவுள் அழிக்குறதா கதை வரும்ன்னு நினைக்குறேன் சரியா புள்ள?!

அதான் இல்ல மாமா! அந்த காலத்துல விச்ரவசு மகரிஷின்னு ஒரு சாமியார் இருந்தாரு. அவரோட பையந்தான்  குபேரன்..

(ஏழுமலையான் கல்யாணத்துக்கு கடன் குடுத்தாரே அவர்தானே?

ஆமா மாமா!இவன், பிரம்மாவுக்கு கொள்ளுப்பேரன். தனது தாத்தா பிரம்மாவை நினைச்சு  தவமிருந்து சகல செல்வங்களையும் பெற்றான். அதுல முக்கியமானது நவரத்தினங்களால் ஆன புஷ்பக விமானம். அதுல  நினைச்ச இடத்துக்குப் பறந்து போய், செல்வத்தைக் கொண்டு வந்து குவிச்சு. உலகிலேயே பெரும் பணக்காரனான். 

சுமாலின்ற அசுரன் இதைக் கவனிச்சான்.  தனக்கும் குபேரனைப் போல ஒரு பையன்  இருந்தா, உலகையே கட்டி ஆளலாம்ன்னு கணக்குப் போட்டான். தன் மகள் கைகனிக்கிட்ட, மகளே! அசுரர் குலம் தழைக்க, நீ விச்ரவசு முனிவரை கல்யாணம் கட்டிக்கிட்டு சீக்கிரம் குழ்ந்தைப் பெத்துக்கோ அந்தக் குழந்தை மூலம் நம்ம வம்சம்  சாகாவரம் பெற்று, உலகையே ஆட்டிப்படைகனும்ன்னு சொன்னான். கைகனியும் சம்மதிச்சு..,காட்டிலிருந்த விச்ரவசு முனிவரை போய் பார்த்தா..,

ரொம்ப அழகான   அவளை பார்த்ததும் அவர் மயங்கிட்டாரு.  தன்னை  கல்யாணம்  செய்யும்படி அவளே கேட்டதால அவரும்  சம்மதிசாரு. அந்த நேரமே தன்னோடு உறவு  கொள்ளும்படி அவ கேட்டுக்கிட்டா.  அதுக்கு, அந்த சாமியாரு.., கைகனி! இது அந்திக் கருக்கல் நேரம். இந்நேரத்தில் யார் உறவு கொள்கிறார்களோ, அவர்களுக்கு விகாரமானதாகவும், குறையுள்ளதாகவும் குழந்தை பிறக்கும், அதனால, ராத்திரி வரை பொறுன்னு சாமியார் சொன்னாரு.

எங்கே சாமியாரு மனம் மாறிடுவாரோ! அப்பாவோட வாக்கை காப்பாத்த முடியாம போய்டுமோன்னு பயந்து.., இப்பவே குழந்தை வேணும்ன்னு அடம்பிடிச்சா. அந்த சாமியாரும் வேற வழியில்லாம   உறவு கொள்ளவே, அவ கர்ப்பமானா.  பேறு காலம் வந்துச்சு.., ஆண்குழந்தை பொறந்துச்சு. ஆனா,  பத்து தலைகள், இருபது கைகள், பயங்கர விழிகள் கொண்ட ஒழுங்கற்ற  வடிவத்துல பிறந்தது. குழந்தையை பார்த்து அம்மாவே பயந்துட்டா. சாமியார் பேச்சைக் கேட்காம போனதுக்காக  மன்னிப்பு கேட்டா. அவரது தவ வலிமையைப் பயன்படுத்தி குழந்தைக்கு  ஒற்றைத்தலை வேணும்ன்னு  கேட்டா கைகனி! அது நடக்காத காரியம். ஆனா, என் தவ வலிமையினால, அழகற்ற இவனை அழகாக மாத்துறேன். இவனது பத்து முகங்களும் அழகா இருக்கும். ஆனால், தலைகளை குறைக்க முடியாது. இவன் வஜ்ரம் பாய்ந்த உடல்,கைகளுடன் பலவானாக இருப்பான்னு சொன்னார்..,

பத்துமுகம் கொண்ட அவனுக்கு தசமுகன்ன்னு பேர் வெச்சார். . தசம் ன்னா பத்து. தசமுகன், ஒருமுறை கைலாயம் போனான். தன்னால, எதையும் சாதிக்க முடியும்ன்ற எண்ணத்துல கைலாய மலையை தூக்கிப் பார்க்க ஆசைப்பட்டு மலையை தூக்கும்போது..,  சிவன் தன் கால் கட்டை விரலால், மலையை அழுத்த அவனது பத்து கைகளும் மலைக்கு அடியில் மாட்டிக்கிச்சு. . அவன் வலி தாங்காம ஓன்னு கதறி அழுதான். அந்த அலறல் உலகம் முச்சூடும் கேட்டுச்சு. அப்போ அங்க வந்த வாகீச முனிவர், தசமுகா! சிவனைப் பணிந்து பாடு. அவர் உன்னை  மன்னிப்பார்ன்னு சொன்னார்.  தசமுகனும் சிவனுக்குப் பிடித்த சாமகானப் பாடல்களைப் பாடினான். 

அதுகேட்டு மகிழ்ந்த சிவன் அவனை விடுவித்து.., தசமுகா! நீ வலி தாங்காமல் உலகமே நடுங்க அழுததால் ராவணன் என அழைக்கப்படுவாய். அந்தப்பெயரே உனக்கு நிலைக்கும். நீ புகழ் பெற்று நீண்ட காலம் வாழ்வாய், என்று ஆசிர்வதித்தார். ராவணன் என்ற சொல்லுக்கு ”விடாமல் அழுபவன்”ன்னு அர்த்தம் . ராவணன் இலங்கைக்கு அரசனா ரொம்ப நாள் நல்ல பேரோட  ஆட்சி செய்தான்.,  விருப்பமில்லாத பொண்ணை அதும் அடுத்தவன் பொண்டாட்டியை தொட்ட பாவம்தான் அவனை கெட்டவனாக்கியது..,

ம் ம் ம் தன் பொண்டாட்டினாலும் பிரச்சனை.., அடுத்தவன் பொண்டாட்டினாலும் பிரச்சனை.., ஆக மொத்தம் பொண்டாட்டின்னாலே ஆம்பிளைங்களுக்கு பிரச்ச்னைதான் புள்ள..,

என்ன மாமா! பேச்சு ஒரு மாதிரியா போகுது..,

அதொன்னுமில்ல புள்ள!  என் ஃபோனுக்கு ஒரு மெசேஜ் வந்திருக்கு..,

பெண்: டாக்டர்!  ஒருத்தருக்கு ஹார்ட் அட்டாக் வந்தா என்ன முதலுதவி பண்ணனும்..,
டாக்டர்: குட்.., இப்படிதான்மா எல்லாத்தையும் தெரிஞ்சுக்கனும்.., 
பெண்: நீங்க வேற! பட்டுசேலை வாங்கி வந்திருக்கேன். அந்த பில்லை என் வீட்டுக்காரர்க்கிட்ட காட்டனும்..,அதான் கேட்டேன்..,

ம்க்கும்.., எப்ப பாரு பொண்டாட்டிங்களை குறை சொல்லி சிரிக்குறதே பொழப்பா போச்சு உங்களுக்குலாம்..,

ம் ம் ம் ராஜி வீட்டுக்கு போய் இருந்தியே! எப்படி இருக்கா உன் ஃப்ரெண்ட்? பசங்கலாம் எப்படி இருக்காங்க? அப்பு எப்படி இருக்கான்?

எல்லாரும் நல்லா இருக்காங்க மாமா.., அப்பு இந்த வருசம் 9 வது வகுப்பு போறான்.., 

அப்படியா! அம்புட்டு பெரிய ஆளாகிட்டானா?! இப்போதான் நடந்தது போல இருக்கு..,  அப்புக்கு ஒரு மூணு இல்ல நாலு வயசிருக்கும்.., காது வலின்னு அழுதுட்டு இருந்தான்.., அப்போ,  ராஜி அவனை எவ்வளவோ சமாதான படுத்தி பார்த்தா., முடியலை.., அப்பு அழுதிக்கிட்டே இருந்தான்.

அப்போ ராஜியோட அம்மா,  ஒரு கிண்ணத்துல எண்ணெய் கொண்டு வந்து அவன் காதுல ஊத்துனாங்க,, ஒரு ரெண்டு நிமிசம் போய் இருக்கும்.., இன்னும் பெருசா கத்த ஆரம்பிச்சான்.., ஏன்னு கேட்டதுக்கு.., பாட்டி, இப்போ என் காதுல திரி போட்டு விளக்கேத்த போறாங்கன்னு அழுதான்.., எனக்கு ஒண்ணும் புரியாம கேட்டதுக்கு.., பாட்டி டெய்லியும் சாமி படத்துக்கு முன்னாடி ஒரு விளக்குல எண்ணெய் ஊத்தி, திரி போட்டு விளக்கேத்துவாங்க.., இப்போ என் காதுல எண்ணேய் ஊத்தி இருக்காங்க.., இனி திரி போட்டு விளக்கேத்துவாங்கன்னு அழுதான்..,

அப்படி புரியாம அழுத புள்ள இன்னிக்கு 9வது வகுப்பு போறானா? பலே! பலே!

ஆமா  மாமா! நல்லாதான் வளார்ந்திருக்கான்.., என்கிட்ட ஒரு விடுகதைக்கு விடை கேட்டான்.., நான் ரொம்ப நேரம் முழிச்சிக்கிட்டு இருந்தேன். அப்புறம் அவனேதான் சொன்னான்..,
                                       
நீதான் எல்லாத்துக்கும் முழிச்சுக்கிட்டு நிப்பியே! சரி, சரி  முறைக்காத என்ன கேட்டான் சொல்லு.., என்னால முடியுதான்னு பார்க்குறேன்..,

ஓடும் சங்கிலி,
 ஒதுங்கும் சங்கிலி,
 பள்ளத்தப் பாத்தா பதுங்கும் சங்கிலி 
அது என்ன சங்கிலி?
இதான் கேட்டான் மாமா!

ம் ம் ம் இரு யோசிச்சு சொல்றேன்.

கடைக்கு போகனும் மாமா! சீக்கிரம் சொல்லுங்க..,

சொல்றேன் இரு.., கடைக்கு போகும்போது என்னென்ன கவனிக்கனும்ன்னு தெரியுமா?

பை, பணம் எடுத்துக்கிட்டு, வீட்டு கதவை பூட்டிட்டு போனா போதாதா?!

           
அது மட்டும் போதாது.., வீட்டுலயே என்னென்ன பொருள் வாங்கனும்ன்னு லிஸ்ட் போட்டு எடுத்து போய்ட்டா அவசியமான பொருளை மறக்கவும் முடியாது.., அவசியமற்ற பொருளை வாங்கவும் முடியாது..,

ஹெல்மெட் கொண்டு போகக் கூடாது.., வண்டிலயோ இல்ல பாதுகாப்பான இடத்துல வச்சிட்டு போகனும் இல்லாட்டி வாங்க வேண்டிய பொருளை எடுத்து பார்த்து வாங்குறது சிரமம்..,

ட்ரெஸ் வாங்கும்போது, இப்போ இருக்குற அளவுக்கே வாங்கனும்.., டயட்ல இருக்கேன் இன்னும் சில நாள்ல மெலிஞ்சுடுவேன் இல்ல குண்டடிச்சுடுவேன்னு.., அப்புறம் அது உடம்புக்கு சேராம   காசை வேஸ்ட் பண்ண வேணாம்.

கூட்டம் அதிகமில்லாத கடையா பார்த்து போகனும்.., குழந்தைகளுக்கான பொருட்களை வாங்கலைன்னா அவங்களை கூட்டி போக வேணாம்.., வீட்டுலயோ இல்ல ஸ்கூல் விட்டு வர்றதுக்குள்ள ஷாப்பிங் முடிச்சுட்டு வந்துடனும்..,அவங்க வந்தா உடம்புக்கு ஒத்துக்காத நொறுக்கு தீனிகளை கேப்பாங்க.., பொம்மை, ஐஸ்ன்னு கேட்டு அடம்பிடிச்சு வாங்கி தேவை இல்லாம காசு செலவாகும்..,

வயசு பசங்க தனியா ஷாப்பிங் போறேன்னு சொன்னா  தனியா போக விடாம பெரியவங்க யாராவது கூட போகலாம்.., அவங்களுக்கு பணத்தோட அருமை தெரியாது.., அதனால வேண்டாத பொருளை அவங்க வாங்காம தவிர்க்கலாம்..,  வாங்க வேண்டிய அளவுக்கு கட்டை பையோ இல்ல மஞ்சப்பையோ அசிங்கம்  பாக்காம எடுத்து போனா கொஞ்சம் பிளாஸ்டிக் கவர்ங்க குப்பைக்கு போறது குறையும். எதோ நம்மால முடிஞ்ச அளவு பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்கலாமே!

ம்ம் சரி மாமா! வாங்க கிளாம்பலாம்..., இப்பவே போய் வாங்கிட்டு சின்ன மண்டையன் இஸ்கோலுல இருந்து வர்றதுக்குள்ளே வந்துடலாம்..,

ம்ம்ம் நீ கடைக்குள்ளாற போனா எப்போ வருவியோ தெரியாது. அதனால, எதாவது சாப்பிட்டு வரேன். இல்லாட்டி பசி மயக்கத்துல அங்க வந்து எரிச்சல் பட்டு தேவை இல்லாத பொருளை வாஙகவோ இல்ல தேவையான பொருளை வாங்கமயோ வரப்போறேன்..

சரி மாமா! வாங்க உப்புமா கிண்டி தரேன்..,

நீ செஞ்சிக்கிட்டே இரு..  அதுக்குள்ள ராஜி ஒரு லிங்க் அனுப்பி இருக்கா பார்த்துட்டு வரேன்..

என்னது மாமா?!

தந்தையர் தினம் பத்தி அவளுக்கு முதல்யே தெரியாதாம்.., தெரிஞ்சிருந்தா எதாவது கிறுக்கி இருப்பாளாம். அதனால, போன வருசம் அவ அப்பா ரிட்டைய்ர்மெண்ட்க்கு போட்ட போஸ்ட்டை பார்க்க சொல்லி எனக்கு அனுப்பி இருக்கா. அதான் பார்த்துட்டு வரேன். நீயும் இங்க போய் படிச்சு பாரு..,