Showing posts with label பாம்பு. Show all posts
Showing posts with label பாம்பு. Show all posts

Friday, October 04, 2013

அருள்மிகு கோரிக்க நாதர் திருக்கோவில், குரண்டி - புண்ணியம் தேடி ஒரு பயணம்

கன்னியாகுமரியில “கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை” அவர்கள்  பிறந்த இடம் இருக்குன்னு அங்க போகலாம் ன்னு பிளான் பண்ணி போகும்போது, பச்சை பசேல்ன்னு வயல் சூழ்ந்து பார்க்கவே ரம்மியமா இருந்துச்சு. சரி, கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கலாமேன்னு வண்டியை விட்டு இறங்கி அக்கம் பக்கம் நோட்டம் விட்ட போது, த்த்த்தூரத்துல இயற்கை கொஞ்சும் இடத்துல  சின்னதா ஒரு கோவில் தெரிஞ்சுது. நீதான் பதிவராச்சே!?  என்னை பத்தி ஊரு உலகத்துக்கு நீதான் அறிமுகப்படுத்தனும்ன்னு கோவில் கெஞ்சுற மாதிரி இருக்கவே,  கோவிலுக்கு போனேன். கேமராவோடு...., 

சுத்தி முத்தியும், ஒரு ஈ, காக்காவை காணோம். துணைக்கு கூப்பிட்டா எங்க வீட்டு நண்டு,. சிண்டு கூட எதும் வரலை. இருந்தாலும், பதிவருக்குண்டான கடமை நம்மை வரவேற்க.., கொஞ்சம் உதறலா இருந்தாலும் பயத்தை மனசுலயும், சிரிப்பை உதட்டுலயும் வச்சுக்கிட்டு கோவிலுக்கு போனேன்......

ஆளே இல்லாத கோவிலில இந்து அறநிலைய துறை சார்பா ஒரு அறிவிப்பு பலகை இருக்கு. அதை பார்த்துதான் சகலமும் தெரிந்து கொள்ளவேண்டியதா இருக்கு.  இந்த கோவிலோட பேரு ”அருள்மிகு கோரிக்க நாதர் திருக்கோவில் ” , குரண்டி இந்த ஊர் தேரூர் பக்கத்தில இருக்கு.

போகும் வழியெங்கும் புதர் மண்டி கிடக்கிறது கவனமா தான் போகனும். சரி வாங்க கோவிலுக்கு கிட்டக்க போய் பார்க்கலாம்

முழு கோவிலும் இடிந்த நிலையில் இருக்கும் இந்த கோவிலில் தென்பக்கமா காலபைரவர் அருள் புரிகிறார்.  அவரை வணங்கிட்டு கோவிலை வலம் வர தொடங்கினோம். அங்க சிலர் பூஜைகள் செய்வது போல தான் தெரியுது.

கோவிலின் முன்னே பலி பீடங்களும்,  வரிசையா அடுத்தடுத்து காணபடுது. அங்க பாதம் போன்ற ஒரு அமைப்பு காணப்படுது.   ஒவ்வொரு பலிபீடங்களிலும் மஞ்சள் கொண்டு அபிஷேகம் செய்ததற்கான தடங்கள் இருக்கு.

கொஞ்சம் பயத்தோடுதான் கோவிலை சுத்தி பார்த்தேன். உள்ள போலாமா?  வேணாமா!?ன்னு மனசுக்குள் ஒரு பயம். ஏன்னா. மேற் கூரைகள் இடிந்து விழும் நிலைல பாழடைந்து இருக்கு இக்கோவில். 

கட்டிட கலை அமைப்பு கூட பல்லவக்காலதது அமைப்புல இருக்கு. ஆனா,  குமரி மாவட்டத்தில் சேர, சோழ,பாண்டியர்கள் தான் ஆட்சி செய்திருக்காங்க. சில நாயக்கர் மன்னர்களும் ஆட்சி செஞ்சிருக்காங்க. இதெல்லாம் யோசித்து கொண்டே கோவிலை சுத்தி வந்தேன்.  

கற்கள் எல்லாம் பெயர்ந்த நிலையில் விரிசல்களுடன் இருக்கு.  கற்சுவர்கள் உள்ளே பாசிப்படர்ந்தும், சுவர்கள்லாம் மரங்களின் வேர்களால் உடைந்து காணப்படுது.  வரிகற்கள்,  மேற்கூரையே இல்லாத கருவறை இதெல்லாம் பார்த்துக்கிட்டே சிவனே நீயே துணைன்னு கோவிலுக்கு போனேன்.

 இரண்டாம் நிலையில் சக்கரம் போன்ற அமைப்பும்,  அபிஷேகம் செய்யும் நீர் வடிந்து செல்லும் அமைப்பும் காணபடுது.  அதைத்தாண்டி போனா கருவறை உள்ள சில நாக சிலைகளும், ஒரு சிவலிங்கமும், அதன் அருகில் கைகூப்பிய நிலையில் ஒரு மன்னருடைய சிலையும் காணப்படுது.

இடப்பக்கமும் ஒரு மன்னர் கும்பிட்ட நிலையிலும்,  ஒரு சிலையும் நடுவே கொன்னை மரமும் வளர்ந்து காணபடுது.   சரி கோவிலின்  வரலாறை தெரிந்து கொள்ளலாம்ன்னு அந்த ஊரில் இருக்கும் பெரியவர்களிடம் கேட்டா யாருக்கும் சரியா சொல்ல தெரியலை.  ஒரே ஒரு வயதான பெண்மணி மட்டும் கோவிலுக்குள்ளயா போனே!?ன்னு  ஆச்சர்யமா கேக்க, ஏன், போனா என்னம்மான்னு நான் கேக்க!?

கோவிலுக்குள்ள,  அங்க பெரிய நாகம் ஒண்ணு இருக்கு, இந்த ஊர்க்காரங்க பார்த்திருக்காங்கன்னு சந்திரமுகி படத்துல சொல்லுற மாதிரி சொல்ல, என்னமோ என் மேலயே பாம்பு ஏறி இறங்குன மாதிரி ஒரு எஃபெக்ட் உடம்புக்குள்ள.. 

கம்ப்யூட்டர் பொட்டிக்குள்ள நெட்டோ!? போல்டோ இருக்காமே! அதுல இது கோரக்கரருடைய சமாதி ன்னு யாரோ சொல்லி, பலர் வந்து இங்க பூஜை பண்ணிட்டு போறங்கன்னு அந்த அம்மா சொன்னாங்க. இந்த கோவில் பத்தி தெரிஞ்சே ஆகனும்ன்னு மண்டை குடைச்சல் எடுக்க இந்த  கோவிலில் ஆண்டு தோறும் வழிபாடு செய்யும் யோகிஸ்வரர் குடும்பதினருக்குதான் இதைபத்தி   முழு விவரமும் தெரியும் என்பதால் அவர்களையும் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்களுக்கும் முழு விவரம் தெரியவில்லை 
வருடத்துக்கு சிலமுறை பூஜை செய்வதற்கு போகும் முன்,ஆட்களை கொண்டு அங்க இருக்குற புதர்களைலாம் வெட்டிட்டு,  2 நாள் கம்பு வச்சி சத்தம் எழுப்பி பின் தான் அங்கேபோவாங்களாம் . ஏன்னா, பாம்பு பயம்.   அதனால, யாரும் இதனுள் பாதுகாப்பு இல்லாம போக வேணாம்ன்னு சொன்னார் ஆனாலும் சிலர் இங்க வந்து பூஜை செய்துட்டு போறாங்களாம்.  இந்த கோவிலை இந்து அறநிலைய துறை புதுப்பித்து கட்ரி தருவதா சொல்லி இருக்காங்களாம். 
இங்கே18 சித்தர்களில் ஒருவரான கோரக்கர் என்னும் சித்தர் வரும்போது எதிரிகள் அவரை தாக்க வந்ததாகவும்,  அப்ப,   கால் காட்டி மறையும் வித்தைகாட்டி தன்னுடைய பாதங்கள் மட்டும் காட்சியாக விட்டு சென்ற இடம் இத்திருத்தலம் எனபது மட்டும் அவர்களுக்கு தெரிந்த வரலாறு . அதுக்கு சாட்சியா இரண்டு பாதங்கள் மட்டும் இங்க காணப்படுது . பூஜையோ, வழிபாடோ இல்லைன்னாலும் அதன் அழகு பார்பதற்கு மனதை கொள்ளை கொள்ளுது .

கால் வைக்க இடமில்லாத கூட்டம், எட்டுகால பூஜை, புனஸ்காரம், அன்னதானம், தேரோட்டம், நித்தம் ஒரு திருவிழான்னு இருக்குற கோவில்ல மட்டும்தான் இறைவன் திருவருள் கிடைக்குமா!? இதுப்போன்ற பூஜையே இல்லா கோவிலில்கூட இறைவன் திருவருள் கிடைக்கும்தானே!? 

அடுத்த வாரம் வேறொரு கோவில் பத்தி புண்ணியம் தேடி போற பயணத்துல பார்க்கலாம். 

Wednesday, January 30, 2013

சின்ன வயசுல நான் இப்படித்தான் இருந்தேனாக்கும்!! ..,

                       

சின்ன பிள்ளையா இருக்கும்போது அழகா இருப்பேன். ப்ளீஸ் பேச்சு பேச்சாதான் இருக்கனும். ஏன், கல்லுலாம் தேடுறீங்க?! சரி சுமாரா இருந்தாலும் அறிவா இருப்பேன்..., ப்ளீஸ், இதையாவது ஒத்துக்கோங்களேன்!!! எப்ப பாரு எதாவது யோசனை பண்ண்கிக்கிட்டே இருப்பேனாம். வருங்காலத்துல பிளாக் எழுதுவேன்னு எனக்கு அப்பவே தெரிஞ்சிருக்கு. அதான் அப்பத்திலிருந்து பதிவை தேத்த யோசனை பண்ணிக்கிட்டு இருந்திருகேன்.

அப்படி என்னதான் என் மண்டைக்குள்ள பல்ப் எறிஞ்சுச்சுன்னு நீங்க தெரிஞ்சுக்க வேணாம்??! அதுக்குதான் இந்த பதிவு...,

1. பென்சில் சீவி வரும் தூளை “சாதம் வடிச்ச கஞ்சி”ல ஊற வெச்சா அழி ரப்பர் வரும்ன்னு நினைச்சுப்பேன்!!??

”2.  சூட்டு கொட்டையை” சூடு பறக்க தேய்ச்சு, பக்கத்துல உக்காந்து இருக்குற புள்ளைங்க தொடையில வெச்சு ரசிச்சு சிரிப்பேன்!!

3. வேப்பங்கொட்டை ஓட்டினை  ரெண்டா உடைச்சு கை விரல் முட்டில வெச்சு ஓங்கி அடிச்சு ரத்தம் வர வெச்சு வீரம் காட்டுவேன்!!??

4. சினிமா தியேட்டர்ல வெட்டி வீசியெரிஞ்ச ஃபிலிமை காசு குடுத்து வாங்கி வந்து, பியூஸ் போன பல்புல தண்ணி நிரப்பி வெளிச்சம் பாய்ச்சி தாத்தாவுக்கு தெரியாம அவர் வேட்டியை கொண்டு வந்து திரையாக்கி படம் காட்டி அலட்டிக்குவேனாக்கும்!!??

5. வாத்தியார் அடிக்குறதுக்காக தினம் ஒரு புது குச்சி உடைச்சு வர்ற பக்கத்து கிளாஸ் பையனுக்கு வாந்தி, பேதி வரனும்ன்னு எல்லையம்மனுக்கு காசு வெட்டி போட்டிருக்கேன்!!??

6. சைக்கிள் கடையில் கிடைக்குற வாஷர்களை கொண்டு போய் பாணியர் காலத்து “ஓட்டை காலணா”ன்னு சீன் போட்டிருக்கேன்!!??

7. ஆத்துல மிதக்குற தலை பிரட்டையை  “மீனு”ன்னு நம்பி வீட்டு கிணத்துல கொண்டு வந்து நிரப்பி கிணத்தை நாசம் பண்ணி செம மாத்து வாங்கியிருக்கேன்!!??

8. நுங்கு சாப்பிட்டு மிச்சம் இருக்குற பனங்கா ஓட்டுல வண்டி செஞ்சு அமெரிக்கா, ஜப்பான்லாம் விசா இல்லாம போய் வந்திருக்கேன்!!??

9. கொட்டான்குச்சியில் நிரப்பி சுட்ட மணல் இட்டிலியும்,  கருவேல இலையில் அரைத்து வைத்த சட்டினியும் பசி போக்கியது அப்போது!!??

10.கண்ணாடி போட்டிருக்குறவங்கலாம் அறிவாளிங்கன்னு நம்பி..., வீட்டுல தலை வலிக்குதுன்னு பொய் சொல்லி கண்ணாடி போட்டுக்கிடு தடுக்கி விழுந்திருக்கேன்!!??

11. குரைக்குற நாய் கடிக்காதுன்னு நம்பி அதுங்கிட்ட வீரத்தை காட்டி கடிப்பட்டிருக்கேன்??!!

12.தீப்பெட்டியில் கயிறு கட்டி டெலிபோனா நினைச்சு, அண்டார்டிக்கா, ஆப்பிரிக்காக்குலாம் பேசினேன்??!!

13. தண்டவாளத்துல சில்லறை காசை வெச்சு அதன் மேல ரயில் ஏறி இறங்குனா, அந்த சில்லறை காசு காந்தமா மாறிடும்ன்னு நம்பி இருக்கேன்??!!

14. குலத்தெய்வத்துக்கு நேர்ந்துக்கிட்டு அம்மா சேர்த்து வெச்ச சாமி உண்டியல்ல இருந்து காசை சுட்டுக்கிட்டு (காசு சேர்ந்ததும் டபுள் மடங்கா போடுறதா சாமிக்கிட்ட சின்ன ஒப்பந்தம் போட்டுக்கிட்டுதான்) போயி கம்ர்கட் வாங்கி தின்னது!!??

15. லெட்டர்லாம் தபால்ல போடாம பாம்புக்கிட்டயும் லெட்டர் குடுத்தனுப்பலாம்ன்னு இராம. நாராயணன் படத்தை பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன்.

Tuesday, May 22, 2012

பேராசை பெரு நஷ்டம்...,


   
ஒரு ஊருல  பெரிய பண்ணையார் ஒருத்தர் இருந்தாராம். அந்த ஊருல  இருக்குற பெரும்பாலான நிலங்கள் அவருக்குத் தான் சொந்தம். அவர் கல்நெஞ்சக்காரராம்.  யாருக்கும் எந்த உதவியும் செய்ய மாட்டார், பணம், பணம்ன்னு பேராசையில் இருக்குறவராம்.


அவர்கிட்ட  நல்லதம்பின்ற உழவர் வேலை பார்த்துக்கிட்டு இருந்தார். அவருக்குக் குடிசை ஒன்னும், கொஞ்சூண்டு  நிலமும் இருந்தன.

பண்ணையாரிடம் வந்த அவர், " ஐயா! எல்லாரும் அவங்கவங்க  நிலத்தில உழுது விதை நட்டுட்டாங்க.  என் நிலம் மட்டும் தான்  இன்னும் தரிசாவே இருக்கு. நீங்க  கொஞ்சம்  விதை குடுத்தாஎன் நிலத்திலும் விதைச்சுடுவேன்.  அது வளர்ந்து அறுவடை செய்ததும், விதைக்குண்டான  பணத்தை குடுத்து டுறேன், மீதி என் புள்ளைக படிப்புக்கு உதவியாக இருக்கும் "ன்னு சொன்னார்.

" என் நிலத்திலேயே உழுது  விவசாயம் பார்.  சொந்தமாலாம் பயிரிட வேணாம். பண்ணையாராகும் ஆசையை விட்டுட்டு. கூலியாளாவே இரு, உன் புள்ளைங்களாம் ஒன்னும் படிக்க வேணாம், அவங்களும் இங்கேயே வேலைக்கு வரச் சொல்லு. அரை வயித்துக் கஞ்சியாவது கிடைக்கும்" ன்னு கோபத்துடன் சொல்லிட்டாரு பண்ணையார்.

சோகத்தோட  வீட்டுக்கு வந்தார் நல்ல தம்பி. தன் பொண்டாட்டிக்கிட்ட " நாம நல்லபடியா உழைச்சு முன்னுக்கு வர்றது பண்ணையாருக்குப் பிடிக்கலை. விதைகள் கொடுக்கமாட்டேன்னுட்டார். நீயும் நம் புள்ளைகளும் எப்போதும் போலப் பட்டினி கிடக்க வேண்டியதுதான், நம் புள்ளைக படிக்க கூட முடியாது போலிருக்குது. இதுதான் நம்ம தலைவிதி" என்று சோகத்தோட  சொன்னார்.

அவங்க குடிசல குருவி ஒன்னு ஏற்கனவே கூடு கட்டி இருந்தது, அந்த குருவிக்கு தினமும் கொஞ்சம் சாப்பாட்டை  நல்லதம்பியும், அவர் பொண்டாட்டியும், குழந்தைகளும் கொடுப்பாங்க.

தங்களோட சின்னஞ்சிறு குடிசைல குருவிக்கும் தங்கறதுக்கு இடம் கொடுத்து சந்தோசப்பட்டாங்க, அந்த கூட்டுல  அந்தக் குருவி நான்கு முட்டைகள் போட்டது. நான்கும் குஞ்சுகளாயின.

அந்த குஞ்சுகளின் சப்தம் இனிமையாக இருந்துச்சு, தினமும் குருவி வெளியே போய்  பூச்சிகளை பிடிச்சுக்கிட்டு வந்து தன்னோட குஞ்சுகளுக்கு கொடுக்கும், ஒரு நாள் சரியான புயல், மழை பெய்தது, வெளியே சென்ற குருவி வீட்டுக்கு வரவே இல்லை.

பாவம் குஞ்சுகள் பசியால் கத்துச்சு, அதைக் கண்ட நல்லதம்பியும், குழந்தைகளும் தங்களோட சாப்பாட்டுல  கொஞ்சம் கொடுத்து, குஞ்சுகளின் பசியைப் போக்கினாங்க.
                                               
திடீர்ன்னு  அந்தக் குருவிக் கூட்டுக்குள் ஒரு பாம்பு நுழைஞ்சுது.. குருவிக் குஞ்சுகளைப் பிடித்துச் சாப்பிட போச்சு, உடனே அங்கு வந்த நல்லதம்பி  பாம்பை அடித்துக் கொன்ன்னுட்டார். கொஞ்ச நேரத்தில் அம்மா  குருவி வீட்டுக்கு வந்துச்சு, குஞ்சுகள் சொன்னதைக் கேட்டது, அம்மாக்குருவி ஆனந்தக் கண்ணீர் விட்டது.

அடுத்த சில நாட்களில் நல்லதம்பியும், அவர் குடும்பத்தினரும் வறுமையில் வாடினாங்க. குஞ்சுகள் வளர்ந்ததும், தாய் குருவியும், குஞ்சுகளும் நல்லதம்பிக்கிட்டயும் அவர்  குடும்பத்தினர்கிட்டயும் நன்றி கூறி வானில் பறந்து போயின.

சில நாட்களில் நல்லதம்பி  வீட்டில சாப்பிட எதுவுமே இல்லை என்ற நிலமை, "இப்படியே அரை வயிறு சாப்பிட்டு எவ்வளவு காலம் வாழ்வது? நமக்கு விடிவே கிடையாதா?" ன்னு சொன்னா நல்லதம்பி பொண்டாட்டி.

அப்போ அவங்க வீட்டுக் கதவை யாரோ தட்டுற சத்தம்  கேட்டுச்சு. கதவை திறந்து பார்த்தார் நல்லதம்பி. அங்கே அவங்க  வீட்டில கூடு கட்டி இருந்த அம்மாக்குருவி இருந்துச்சு. அதோட  வாயில ஒரு விதை இருந்துச்சு. அதை அவர் கையில் வெச்சுச்சு. " இதை உங்க வீட்டுத் தோட்டத்தில நடுங்க. கொஞ்ச நேரத்துல  வறேன்" ன்னு சொல்லிட்டுப் பறந்து போச்சு. கொஞ்ச நேரம் கழிச்சு
மீண்டும் வந்துச்சு அம்மாக்குருவி. இன்னொரு விதையைத் தந்துச்சு. " இதை உங்க வீட்டின் முன்புறத்துல நடு" ன்னு சொல்லிட்டுப் பறந்து போச்சு.

மூணாம் முறையா வந்த அது இன்னொரு விதையைத் தந்தது " இதை சன்னல் ஓரமா  நடுங்க. எங்க மேல காட்டிய அன்புக்கு நன்றி" ன்னு சொல்லிட்டுப் பறந்து போய்டுச்சு.

குருவி சொன்னபடியே மூன்று விதைகளையும் நல்லதம்பி நட்டார் .
மறுநாள் காலையில் அங்கே மூன்று பெரிய பூசனிக் காய்கள் காய்த்து இருந்துச்சு. இதைப் பார்த்து ஆச்சர்யப் பட்டாங்க.
தோட்டத்தில் இருந்த பூசனிக் காயை வீட்டிற்குள் கொண்டு வந்தார். அதை இரண்டு துண்டாக வெட்டினார் நல்லதம்பி.

ஒரே ஆச்சர்யம்! அதுக்குள்ள இருந்து விதவிதமான சாப்பாட்டுப் பொருள்கள் வந்துச்சு. சுவையான அவற்றை எல்லோரும் மகிழ்ச்சியாக சாப்பிட்டாங்க. மீண்டும் அந்தப் பூசனிக் காயை ஒண்ணு சேர்த்தாங்க. பழையபடி அது முழுப் பூசனிக் காயாச்சு.எல்லாரும்சந்தோசப்பட்டாங்க , " இது மந்திரப் பூசனிக் காய். நமக்கு சாப்பாடு தேவைப்படும் போது பிளந்தால் சாப்பாடு கிடைக்கும். மறுபடியும் சேர்த்துட்டா பழையபடி ஆகி விடும். இனி நமக்கு உணவுப் பஞ்சமே இல்லை, நாம் குருவிகளுக்கு செய்த உதவிக்கு இத்தனை பெரிய உதவியாக செய்திருக்கிறது, அவற்றை நாம் மறக்கக்கூடாதுன்னு சொன்னார் நல்லதம்பி.
                                
"வீட்டின் முன் புறத்தில் ஒரு பூசனிக் காய் உள்ளது. அதைக் கொண்டு வாங்க. அதுக்குள்ள  என்ன இருக்குன்னு பார்த்துடலாம்" ன்னு சொன்னாங்க நல்லதம்பி மனைவி.

அந்தப் பெரிய பூசனிக் காயை உருட்டிக்கிட்டு வந்தார் நல்லதம்பி. கத்தியால் அதை வெட்டினார். உள்ளிருந்து அழகான டிரெஸ், விலை உயர்ந்த மணிகள், நவரத்தினங்கள்லாம் கொட்டுச்சு. அதற்குள் அவரது குழந்தைகள் சன்னலோரம் இருந்த மூன்றாவது பூசனிக் காயையும் கொண்டு வந்து கொடுக்க, நல்லதம்பி அதை வெட்டினார். அதுக்குள்ள இருந்து பொற்காசுகள்லாம்  கொட்டுச்சு.

அதன் பிறகு, அவரும் மனைவியும் குழந்தைகளும் நல்ல சாப்பிட்டாங்க. நல்ல ட்ரெஸ் போட்டுக்கிட்டாங்க.  பெரிய வீடு ஒண்ணை  கட்ட ஆரம்பிச்சாங்க.. பெரிய ஸ்கூல்ல அவங்க பிள்ளைகளை  படிக்க வச்சாங்க. . நல்லதம்பி தன்னைப் போல் ஊருல கஷ்டப்படுறவங்களுக்கெல்லாம்  உதவி செய்யத் தொடங்கினார்.

நல்லதம்பி கொஞ்ச நாளுல  பெரிய பணக்காரனாயிட்டார். தன்னை விட நல்லதம்பி பெரிய ஆளாகிட்ட்தை கேள்விப்பட்ட  பண்ணையார்,நல்லதம்பி வீட்டுக்கு  வந்து, " டேய்! நல்லதம்பி! உனக்கு எங்கிருந்து இவ்வளவு செல்வம் கிடைத்துச்சு? உண்மையைச் சொல்லுடா" ன்னு அதட்டி கேட்டார். நல்லதம்பியும்  நடந்ததைலாம் அப்படியே சொன்னார்.

பண்ணையார் தன் மாளிகைக்கு வந்தார் . தன்னை விட நல்லதம்பி பெரிய பணக்காரன் ஆனதை அவரால் ஜீரணிக்கவே  முடியலை, பொறாமை குணம் படைத்த அவர் எப்படியாவது இன்னும் நிறைய  செல்வம் சேர்க்க ன்னு நினைச்சார். வீட்டின் மேற் கூரையில்  குருவிக் கூடு ஒண்ணாஇ  அவரே கட்டினார். குருவிகள் வந்து அதுல அதில் தங்கும் ன்னு அவர் எதிர்பார்த்தார்.

அவர் நினைச்ச மாதிரியே. ஒரு குருவி வந்து அந்தக் கூட்டில் தங்கியது. நான்கு முட்டைகள் போட்டுச்சு. அதிலிருந்து குஞ்சுகள் வெளியே வந்தன.

ஆனா,'பாம்பு வரவே இல்லை. பொறுமை இழந்த அவர் ஊருல  இருந்த பாம்பாட்டியிடம் சொல்லி, பெரிய கருநாகப்பாம்பை வீட்டில் கொண்டு வந்து குருவி கூட்டுக்கு  பக்கத்துல விட்டார், அந்த பாம்போ பசியில் இருந்ததால் ஓடி போய் 3 குஞ்சுகளை சாப்பிட்டு, ஏப்பம் விட்டது.

அய்யோ, நான் நினைச்சது ஒண்ணு, நடந்தது ஒண்ணாகிட்டதே ன்னு ஒரு பெரிய கம்புடன் குருவிக் கூட்டை நெருங்கினார், பாம்பை அடித்து நொறுக்கி வெளியே போட்டார், மீதி இருந்த ஒரு குஞ்சை காப்பாற்றியது போல் நடித்தார். . வேளை தவறாமல் உணவு அளித்தார்.
கொஞ்ச  நாளுல தாய் குருவியும், ஒரு குஞ்சும் கூட்டை விட்டு வெளியேறியது.

"மூன்று விதைகளுடன் குருவி மீண்டும் வரும். அரசனைவிட பெரிய பணக்காரனாகப்போறேன்னு  கர்வத்துல  காத்திருந்தார் அவர்.

அவர் எதிர்பார்த்தபடியே கதவைத் தட்டிச்சு குருவி. பண்ணையார்கிட்ட மூன்று விதைகளைத் தந்து. " ஒண்ணை வீட்டின் பின்புறம் நடு. ரெண்டாவதை வீட்டின் முன்புறம் நடு. மூணாவதைக் கிணற்றோரம் நடு" ன்னு சொல்லிட்டுப் பறந்து போய்டுச்சு குருவி. தான் நினைக்குறதெல்லாம் நடக்குதுன்னு சந்தோசப்பட்டாரு பண்ணையார்.  மூணு விதைகளையும் நட்டார். மறுநாளே மூணு பெரிய பூசனிக் காய்கள் காய்ச்சுச்சு

தோட்டத்தில் இருந்த பூசனிக் காயை வீட்டுக்குள் கொண்டு வந்து வெட்டினார்.அதுக்குள்ள  இருந்து நிறைய பூச்சிகள் வெளிவந்தன. மக்களை ஏமாற்றி சேர்த்து வெச்சிருந்த  வயலில் விளைந்திருந்த பயிர்களை எல்லாம் ஒரு நொடிக்குள் திண்ணுட்டு மறைஞ்சு போச்சு.

வாயிலும் வயித்திலும் அடிச்சுக்கிட்டு . முன்புறத்தில் இருந்த இரண்டாவது பூசனிக்காயை வெட்டினார். அதுக்குள்ள இருந்து  இருந்து நெருப்பு வந்துச்சு. அது அந்த மாளிகையை ஒருநொடிக்குள் சாம்பல் ஆக்கியது. இத்தனை நடந்தும் அந்த பண்ணயார் திருந்தலை.

அய்யோ எல்லாமே போச்சேன்னு, மூணாவது பூசணியிலாவது செல்வங்கள் இருக்கும் ன்னு பேராசைப்பட்ட  பண்ணையார், அதை வெட்ட, அதிலிருந்து கிளம்பிய பெரிய பூதம் அவரை தூக்கிக் கொண்டு பறந்து போய்டுச்சு. அதை கேள்விப்பட்ட அந்த ஊரு மக்கள் எல்லோரும் கொடிய பண்ணையார் ஒழிந்தார் ன்னு சந்தோஒசப்பட்டு, பண்ணையார் ஏமாத்தி புடுங்கிகிட்ட தங்களோட வயல்ல கடுமையா உழைச்சு எல்லாரும் சந்தோசமா இருந்தாங்க.

பணம், பணம் ன்னு  பேராசையால ஏழை மக்களுக்கு துன்பம் உண்டாக்கிய பண்ணையார் இறந்து போனப்பின்பு, நல்லதம்பி ஊர் மக்களுக்கு நிறைய உதவிகள் செய்தார், பள்ளிக்கூடம், ஹாஸ்பிட்டல்ன்னு கட்டிக் கொடுத்தார். அவரும் அவரது குடும்பத்தாரும் எல்லாருக்கும் நன்மைகள் செஞ்சு தானும் நல்லா இருந்தாங்க.