Showing posts with label வண்டி. Show all posts
Showing posts with label வண்டி. Show all posts

Wednesday, March 27, 2013

மறந்துப்போன காதலனுக்கு கடிதம்

     உனக்கு கடிதம் எழுத வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசை. ஆனால், அந்தகடிதத்தை எப்படி எழுதி , யாரிடம் தந்து அனுப்புவது..இதோ ஒரு வழியாக கடிதம் எழுதிவிட்டேன் . எப்படியோ அது உன்னிடமும் வந்து சேர்ந்தும் விட்டது.., உனக்கான கடிதத்தை ஆரம்பிக்கையிலேயே எனக்கு குழப்பம்.., எப்படி ஆரம்பிப்பது அன்புள்ள என்றா? அல்லது பாசத்துடன் என்றா? அன்பும், பாசமும் இல்லாத உன்னை எப்படி, அப்படி விளிப்பது ஆகவே, எதையும் சொல்லாமலே இக்கடிதத்தை ஆரம்பித்துவிட்டேன்.., 
    என்னை எப்படியடா மறந்தாய்? உனக்கும் எனக்குமான நட்பு ஒன்றிரண்டு ஆண்டுகளா என்ன? நான் உனக்கு அறிமுகமாகி சுமார் பதினோறு ஆண்டுகள்ஆச்சே.
       எனக்கு நன்றாய் நினைவில் இருக்கிறது நமக்கான நட்பு அரும்பிய முதல் நாள்..., ஒரு மதிய நேரத்தில் நீ உன் வீட்டில் ஒய்வெடுத்துக் கொண்டு இருந்தபோது வேறொருவன் சொந்தமாக உன் வீட்டில் அடியெடுத்து வைத்தேன். அன்றே உனக்கும் எனக்குமான நட்பு விதை ஊண்றப் பட்டதோ என்னவோ யார் கண்டது?
 
உன் கண்ணில் அடிக்கடி பட்டதாலும், எனது ஸ்பரிசம் உன் மீது பட்டதாலோஎன்னவோ? என் மீதான உன் வேட்கை அதிகமானதா? பிறிதொரு நாளில் என்னை நீயே விரும்பி ஏற்றுக் கொண்டாய். அன்றிலிருந்து இருவரின் விடியலும் அடுத்தவர் முகத்தில், இருவரின் தூக்கமும் பிரிவின் விளிம்பில் ஆற்றொனா துயரத்தில் தொடங்கும்!!??

  மீண்டும் பொழுதுப்புலர்ந்ததும் என்னைக் காண புன்னகையுடன் ஓடி வருவாய். என்னை வாஞ்சையுடன் தடவிக்கொடுத்தப் பின்தான் உனக்கு சோறே உள்ளிறங்கும்...,
அதன்பின் உனது பொழுதுகள் என்னோடு விளையாட, உண்ண, பால்வாங்க, குளிக்க செல்ல, இப்படி ஒவ்வொரு மணித்துளியும் என்னோடு தான் கழிப்பாய்..,ஒரு தாயின் பரிவோடு என்னைக் கவனித்துக் கொள்வாய் , ஒரு தந்தையின் அக்கறையோடு எனக்கான தேவைகளை பூர்த்தி செய்வாய்..,
   நீ முதுகலைப் பட்டம் பயில வெளியூர் செல்ல நேர்கையில் என் பிரிவை எண்ணி உன் கண்ணில் கண்ணீர் அரும்பியதே மறந்துவிட்டாயா? பின்வந்த நாட்களில் தொலைப்பேசியில் நான் எப்படி உள்ளேன் என, உன் வீட்டாரிடம் நலம் விசாரிப்பாயே அதாவது நினைவிருக்கிறதா
  பின் வேலைத்தேடி நீ நகரத்திற்கு சென்ற பின்னும் உன் நலம் விசாரிப்புகள் தொடர்ந்ததே.., நான் கூட அச்சமயங்களில் நினைத்ததுண்டு.., என்னைத்தவிர உன்னை யாரும் நெருங்க முடியாதென்று இருமாந்திருந்ததுமுண்டு..,
 
பின் எப்படி, எங்கே விரிசல் விட்டது நமது உறவில்!!??
   ஆங்ங்ங்க் நினைவிற்கு வந்துவிட்டது உனது திருமணத்தின்போதுதான்..,உன்திருமணத்திற்கு பேசும்போது நானும் உடனிருந்தேன். நூறு பவுன் நகை, ஐம்பதுகிலோ வெள்ளி, "புதுவண்டி" என பேரம் பேசுகையில் என் வயிற்றில் புளியைக்கரைத்தது. ஓரக்கண்ணால் உன்னைக் கவனித்தேன். நீ சம்மதிக்க மாட்டய் என.., ஆனால், நீ சம்மத்துவிட்டாய்!!
 
     உன் நண்பர்கள் கூடகேட்டார்கள்.., எப்படிடா இதை பிரிவாய், நீ வேற எதையும் "ஓட்டி"ப் பழக்கமில்லையே என.., நீ அதற்கு, இல்லடா நான் கல்லூரியில்படிக்கும்போது வேறவேறவற்றை "ஓட்டி" பழகியிருக்கிறேன் என்றாய்..,
   மெல்ல, மெல்ல எனை மறந்து உன் புது உறவின்மேல் நாட்டம் கொள்ளஆரம்பித்தாய்..,நீ உன் புதுமனைவியுடன் வெளியில் செல்லும்போது சத்தியமாய் பமையுடன் நெஞ்சம் கனத்து ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருப்பேன் .நீ என் நில பற்றியறியாமல் , என்னெதிரிலேயே உன் நண்பனிடம் உன் புது உறவைபற்றி....,
 
    "சூப்பர் வண்டிடா மாப்ளே, ஹோண்டா கம்பெனியோடது, சூப்பர் கலர், பெட்ரோல் அதிகமா குடிக்கலை, பராமரிப்பு செலவும் கம்மி, குலுங்கவே இல்லடானு" புகழ்ந்து பேசுவாய் ....,எனக்கு எப்படி இருக்கும் என சிறிதாவது யோசித்தாயா? ,இதற்கு நீ என்னை அழித்ே  போட்டிருக்கலாம்
இப்படிக்கு,
உன் பிரிவை எண்ணி வாடும்
உன் மிதிவண்டி
           

   சே என்ன கனவுடா இது என்று சலித்துக் கொண்டவாறே தூக்கத்திலிருந்துதிடுக்கிட்டு எழுந்தான் கண்ணன். ஏன் இப்படி கனவு வந்தது எனயோசிக்கையில்.., 
    காலையில் அலுவலகம் செல்லும்போது, மிதிவண்டியில் வந் ஒருவனைதெரியாமல் தன் புது வண்டியில் இடிக்க,மிதிவண்டியில் வந்தவனுக்கு அவ்வளவாக அடிபடவில்லை. ஆனால், மிதிவண்டிக்கு மட்டும் பலத்த சேதம்.
 
  அவன் நல்லவன் போல, மற்றவர்களைப்போல் சண்டையிடாமல், தவறு தான் மீதும் உள்ளதெனக் கூறி, அவனே கூட்டத்தினரை விலக்கியும்விட்டான்.
மருத்துவமனை செலவுக்கும், புது மிதிவண்டி வாங்கிக்கொள்ள சொல்லி கண்ணன் ஐந்தாயிரம் நீட்ட, அவனோ ஐநூறை மட்டும் எடுத்துக் கொண்டு "இந்தமிதிவண்டி, என்னோட பத்து வருசமா இருக்கு, அதைவிட்டு வேறோரு வண்டிவாங்க என்னால் முடியாது. அதை பழுதுப் பார்க்க இந்த ஐநூறு போதுமென' கூறி சென்றது நினைவுக்கு வந்து மூளையில் உறைத்தது.., .
 
காலையில் முதல் வேலையா எழுந்து "ஷெட்டுல இருக்குற தன்னோட பழைய மிதிவண்டியை போய் பார்க்கனும்" னு நினைத்துக் கொண்டே உறங்கிப்போனன்.



Monday, October 01, 2012

மனைவியை மாத்த சூப்பர் சான்ஸ் ..., ஐஞ்சுவை அவியல்.

                                      
நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே ..

என்னங்க மமோய் பாட்டுலாம் பலமா இருக்கே. சும்மாதான் புள்ள இந்த பாட்டுன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்ன்னு உனக்கு தெரியாதா?!

தெரியும். ஆனா, அந்த பாட்டு பத்தி சில விஷயங்கள் சொல்றேன்.

பார் மகளே பார்ன்ற படத்துல வர்ற பாட்டு இது. சிவாஜி, சௌகார் ஜானகி நடிச்சது. இந்த பாட்டை காலைலதான் டிவி பொட்டில பார்த்தேன் மாமா. அதுல, புதுசா பொறந்த தன் குழந்தைகளை தொட்டில்ல போட்டு தாலாட்டு பாடுற மாதிரி இந்த பாட்டு...,

அந்த பாட்டுல  சிவாஜி குட்டி பசங்க தூங்குற தொட்டிலுக்கு பக்கத்துல வரும்போது வெள்லை பீடி புடிச்சிக்கிட்டு வருவார் மாமா. பச்ச புள்ளைங்க இருக்குற வூட்டுல இப்ப இருக்குற அப்பாக்களே வெள்ளை பீடி பிடிக்குறதில்லை. அப்போ எப்படி?! இதை எப்படி சென்சார்ல விட்டாங்க மாமா.

விடு புள்ள, உன்னை போல யாரும் கேள்வி கேப்ப்பாங்கன்னு நினைச்சிருக்க மாட்டாங்க.

ம்க்கும் என்னை கிண்டல் பண்ணாம பொழுது போகாதே உங்களுக்கு..

 விருது நகர்ல ஒரு காமெடி புள்ள..,

என்னங்க மாமா?!

                                                     

                                                    
கலக்டர் ஆஃபீசு எதிர்க்க ஒரு பெட்ரொல் பங்க்ல சாயந்தரம் 7 மணிக்கு கரண்ட் கட். அப்போ ஒரே மாதிரி  ஹெல்மெட் போட்டுக்கிட்டு ரெண்டு பேர் தங்களோட வண்டிக்கு பெட்ரோல் போட வந்திருக்காங்க. பெட்ரோல் போட்டுக்கிட்டு ஒரு ஜோடி கிளம்பிடுச்சு. கொஞ்ச தூரம் போனதும் .., என்னங்க நாம தாதம்பட்டிக்கு போகனும்.., நீங்க சாத்தூர் பக்கம் போறிங்களேன்னு குரல் கேட்ட பின்னாடி திரும்பி பார்த்தா வேற ஒரு பொண்ணு உக்காந்திருக்குறதை பார்த்து அதிர்ச்சியாகி...,

என்ன? ஏதுன்னு விசாரிச்சு மீண்டும் பெட்ரோல் பங்குக்கே போய் அவங்கவங்க பொண்டாட்டிகளை கூட்டிக்கிட்டு போய் இருக்காங்க.

ஹா ஹா நீங்க பார்த்து நடந்துக்கோங்க மாமா.

ம்க்கும் எனக்குலாம் அந்த மாதிரி ஒரு சாய்ஸ் கிடைக்காது.

என்ன சொன்னீங்க? ஒண்ணுமில்லை தாயி! ரொம்ப பசிக்குது. போய் டிஃபன் கொண்டுவா.

இருங்க மாமா கடைக்கு போய் இட்லி மாவு பாகெட் வாங்கி வந்து தோசை ஊத்தி தரேன்.

நில்லு புள்ள! நீ மாவரைக்கலையா?

இல்ல மாமா! அதான் 20ரூபாய்க்கு 4 பேர் சாப்புடுற மாதிரி மாவு தர்றீங்களே அப்புறம் ஏன் மாமா வீடுல மாவரைக்கனும்...



 அது தப்பு புள்ள! நாம சாப்புடுற பொருளுக்குலாம் ஐஎஸ்ஐ  முத்திரை இருக்கு. நீ வாங்கி வர்ற மாவு பாக்கட்ல அது இருக்கா?!

இல்லியே மாமா..,

அது மட்டுமில்ல புள்ள. மாவு சீக்கிரம் புளிக்காம இருக்கவும், புளிச்ச வாசனை வராம இருக்கவும்  போரிங் பவுடரும், ஆரோட் மாவும் சேர்க்குறாங்க. அதுமட்டுமில்லாம மாவு பொங்கி வராம இருக்கவும் ஒரு வித கெமிக்கல் பவுடரையும் சேர்க்குறங்க.

ஐயோ!

நம்ம வீட்டுல அரைக்குற மாவு 4 மணிநேரம் கழிச்சு லேசா ஒரு மாதிரி புளிச்ச வாசனை வரும். அது வந்தால்தான் நல்ல மாவு. அது நல்ல பேக்டீரியாவோட வேலை. போரிங் பவுடர்ன்னா என்னன்னு தெரியுமா?!

ம்ஹூம் தெரியாது மாமா

கேரம் போர்டுல காயின்ஸ் ஈசியா நகரதுக்கு போடுற பவுடர்.

ஓ ஓ அப்பிடியா?!

அவசரப்படாத.  மாவு அரைக்குற கிரைண்டர் கமர்சியல் ரகமில்லை. வீட்டுல அரைக்குற சாதரண மிஷிந்தான் தொடர்ந்து 12 இல்ல 14மணிநேரம் ஓடினால் மெஷின் சூடாகி, மாவும் சூடாகும். ரொமம்ப நேரம் ஓடுறதால கல்லு தேஞ்சு மாவுல கலக்கும். அது நம்ம கிட்னில போய் உக்காந்து அடைச்சிக்கும்.

எல்லாத்துக்கும் மேலா, மாவு அரைக்குறவங்க சுத்தமான தண்ணிதான் சேர்க்குறாங்கன்னு என்ன நிச்சயம்? அவங்க கைவிரல் நகம்லாம் ஒழுங்கா வெட்டி சுத்தமாதான் இருப்பாங்கன்னு அந்த ஆண்டவனுக்குதான் வெளிச்சம்..

 கொஞ்சம் சோம்பேறித்தனம் பட்டுக்கிட்டு உடம்பை கெடுத்துக்க கூடாது புள்ள.

ஆகட்டும்ங்க மாமா, இனி நானே வீட்டுல அரைச்சுக்குறேன். ஆமா, உங்களுக்கு இதெலாம் யாரு சொன்னது?

நம்ம மின்னல்  வரிகள் கணேஷ் அண்ணாதான்,. ராஜேஷ் குமார் நாவல்ல படிச்சதா என்கிட்ட சொன்னார்.

ம் ம் ம் இம்புட்டு அறிவா பேசுறீங்களே?! ஒரு கேள்வி கேட்கவா மாமா?!

ம் கேளு புள்ள.

                                                     

தெற்கே ஓடுற நாயோட வால் எந்த திசையை பாக்கும்?!


அது வந்து., இருங்க நம்ம ராஜி பிளாக் படிக்க வர்ற புத்திசாலிங்களுக்கு தெரியுதான்னு பார்க்கலாம்.

ம் ம் ம் ஓக்கே. நான் ஒரு ஜோக் சொல்லவா?

சொல்லுங்க மாமோய்..,

சன் டிவிங்களா? பெப்சி உமாவா பேசுறது?! எனக்கு சிவகாசில இருந்து ஒரு பாட்டு போடுங்க.

சாரிங்க சார். நான் சென்னைல இருக்கேன்.

ஹா ஹா சூப்பர் ஜோக் மாமா. போதும் மாமா. நான் போய் ரவை வாங்கி வந்து உங்களுக்கு உப்புமா கிண்டி தரேன்.