Tuesday, April 24, 2018

இன்னும் ஓர் இரவு



காலடி சத்தம் எழும்பும் வரை
குப்பை மேட்டில் படுத்திருந்தேன்
கடைசியாய் சிரித்தது எப்போது
ஞாபகம் இல்லை இப்போது

நதியில் விழுந்த இலைகளுக்கு
மரங்கள் அழுவது கிடையாது
வேரில் தீயை வைக்கும் வரை
வேதனை அதற்குப் புரியாது


உயிருடன் இருப்பது இப்போதெல்லாம்
வலித்தால் மட்டும் தெரியும்
உன்னுடன் நானும் இல்லை என்பது
விழித்தால் மட்டுமே புரியும்.

No comments:

Post a Comment