Showing posts with label விடுகதை. Show all posts
Showing posts with label விடுகதை. Show all posts

Monday, February 25, 2019

மரணத்துக்கு பின் உயிர் எங்கு செல்கிறது?! ஐஞ்சுவை அவியல்

உன்னோடுலாம் மல்லுக்கட்ட என்னால் ஆகாது மாமா. இருந்த சுவடே இல்லாம காத்தோடு காத்தாய் கரைஞ்சு போயிரனும்...  

கரைஞ்சு போயிட்டு... அப்புறம் என்னவாகுவியாம்!!??


சொர்க்கமோ நரகமோ அதுக்கு போயிருவேன். எப்படியும் நரகம்தான். ஆனாலும், உன் மூஞ்சியிலேயே முழிக்காம உன் சகவாசமே இருக்காம போயிடுவேனில்ல! அதுபோதுமெனக்கு..


ம்ம்ம் ஒரு உயிர் உடலைவிட்டு பிரிஞ்சதும் உடனே சொர்க்கமோ நரகமோ போறதில்லை. உயிர் உடலிலிருந்து பிரிஞ்சு மூணு  நாள்வரை நீரிலும், அடுத்த மூன்று நாட்களுக்கு நெருப்பிலும், அடுத்த மூன்று நாட்கள் ஆகாயத்திலும் இருக்கும். இந்த 9 நாட்களிலும் ஒவ்வொரு நாளும் தான் இருந்த தன் வீட்டிற்கு என்ன நடக்குது?! யார் அழறாங்க?! யார் மகிழ்ச்சியடையுறாங்கன்னும் துக்கம் கேட்கப்போவோர் வருவோரையும் அட்டெண்டஸ் எடுக்குறமாதிரி வந்து பார்த்துக்கிட்டு வாசலியே நிக்கும். 10வது நாளில் தன் வீட்டிற்குள் அந்த உயிர் வரும். அதனால்தான் பத்தாம் நாள் காரியம் செய்வது முக்கியம்ன்னு சாஸ்திரம் சொல்லுது. ஆனா, இப்பலாம் ஐந்து நாட்களிலேயே காரியம் செஞ்சுடுறாங்க. இது தப்பு.

11,12வது நாளில் நாம் கொடுக்கும் பிண்டத்தை உண்கிறது. 13வது நாளில்தான் எமதூதர்கள் கயிற்றால்  கட்டி உயிரை இழுத்துச்செல்ல,  தன் வீட்டை பார்த்தபடியே நாள் ஒன்றுக்கு 247 காததூரம் பகலிலும் இரவிலும் செல்கிறது. இவ்வாறு நடந்து செல்லும்போது அந்த உயிருக்கு பசி,  தாகம் அதிகம் ஏற்படும்.  பசியோடு நடந்து செல்லும் அந்த உயிர்,  மாதத்தில் ஒருநாள் அதாவது அந்த உயிர் இறந்த திதியன்று ஓரிடத்தில் தங்கி ஓய்வெடுக்க அனுமதி அளிக்கப்படும். அதனாலதான், ஒரு உயிர் இறந்தபின் ஒவ்வொரு மாதமுமம் இறந்த திதியன்று மாசிகாபிண்டம் கொடுத்து அந்த ஜீவனின் பசியை போக்கும் வழக்கம் உண்டானது. இவ்வாறு 12 மாதங்களும் வரக்கூடிய திதியன்று பிண்டம் கொடுத்து அந்த உயிரின் பசியை போக்கனும். இப்படியே ஒரு ஆண்டுக்காலம் நடந்து செல்லும் அந்த உயிர் ஒரு ஆண்டு நிறைவடைந்தவுடன் எமலோகத்தை அடைகிறது. உடலிலிருந்து நீங்கி ஆன்மா எமலோகம் செல்ல  ஓர் ஆண்டுகாலம் பிடிப்பதால்தான் அந்த வீட்டில் ஓர் ஆண்டுக்கு குதூகுலம், கொண்டாட்டம் சுபகாரியம் நடத்தக்கூடாதுன்னு சாஸ்திரம் சொல்லுது. அதுக்கப்புறம்தான் அந்த உயிர் பாவம் செய்திருப்பின் கர்மத்தால் ஆகிய சரீரம் பெற்று எமலோகம் செல்லும். அந்த உயிர் புண்ணியம் செய்திருப்பின் சூரிய மண்டலம் மார்க்கமா பிரம்மலோகம் செல்கிறதுன்னு புராணங்கள் சொல்கிறது. 


சரி சொல்லிட்டு போகட்டும். இதுலாம் மக்களை நல்வழிப்படுத்த சாமி, பூதம், சொர்க்கம், நரகம்ன்னு சொல்லி வச்சது. என்னமோ நீ பின்னாடியே போய் பார்த்தமாதிரியே பேசுறியே!



இதுக்குலாம் பார்க்கனுமா?! எல்லாம் பெரியவங்க சொல்றதுதான்!!  பயத்தால் மட்டும் பணிய வைக்கமுடியாது. எதிராளியை பணிய வைக்க  சாம, தான, பேத, தண்டம்ன்னு நால்வகை தந்திரங்களை  சாணக்கியர் சொல்லிக் கொடுத்திருக்கார். 

சாமம் - இன்சொல் கூறல், சமாதானம் பேசுதல்... எதிராளியோடு போராடுவதற்கு முன்னமயே எதிராளியோடு பேசியோஒ, கெஞ்சியோ, மிரட்டியோ வழிக்கு கொண்டு வரனும். அடுத்ததா, தானம் - தானம் கொடுத்து வழிக்கு கொண்டு வருதல். அவனுக்கு பிடிச்சமாதிரி பொன்,பொருள்,பெண்...இப்படி கிஃப்டா கொடுத்து எதிராளியை மடக்கனும். பேதம் - ஒதுக்கி வைத்தல், மிரட்டல், மற்றும் வேறுபாடு காட்டுதல். நிராகரிப்பு எல்லாரையுமே அசைச்சு பார்க்கும். அதனால் எதிராளியை நிராகரிச்சும், மிரட்டியும் பண்ணியும் பணியவைக்கலம். தண்டம் - தடியால் அடித்துக் கனிய வைக்க, அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பிகளும் உதவமாட்டாங்க. அதனால வெளுத்து கட்டனும்.. 

 இப்படி சாம, பேத,தான, தண்டத்துக்குலாம் மசியாத சில ஜென்மங்க உன்னைய மாதிரி இருக்கே! அதையெல்லாம் என்ன மாமா பண்ணுறதாம்?!

தெரியலியே! அதுலாம் வித்தியாசமான வடிவமைப்புன்னு விட்டுடவேண்டியதுதான்..
முன்னலாம் திருமணம் முடிஞ்சு வீட்டுக்கு வரும் மாப்ளைகளை வரவேற்பதே ஒரு சடங்கு. மச்சினிச்சிகளாம் ஒன்று சேர்ந்து ஆரத்தி எடுப்பாங்க. அவ்வளவு எளிதாய்  மாப்பிள்ளையை வீட்டுக்குள் விடமாட்டாங்க. சினிமாக்கு கூட்டி போ, புடவை வாங்கி தான்னு எதாவது கோரிக்கை வைப்பாங்க. அதுக்கெல்லாம் மாப்ளை மல்லுக்கட்டி, போராடி மச்சினிச்சி காசு கொடுத்தபின்தான் வீட்டுக்குள்ளயே விடுவாங்க. வீட்டுக்குள் வந்தபின்னும் ராக்கிங்க் தொடரும்.. காப்பில உப்பு கலக்குறது, தேள்,பாம்பு பொம்மையை வீசுறதுன்னு கலாட்டா செய்வாங்க. மாப்ளை எந்த நேரத்தில் என்ன நடக்குமோன்னு எச்சரிக்கையா இருக்கனும். நான் சின்ன வயசா இருக்கும்போது ஒருவீட்டில் இப்படிதான்  ஒரு மாப்ளை வீட்டுக்குள் வரும்போது வாசல்படியில் கோணிப்பையை விரிச்சு அதன்கீழ கேழ்வரகை கொட்டி அதில் கால்வச்சு வழுக்கி மாப்ளை விழுந்து அன்னிக்கு கோவிச்சுக்கிட்டு போனவர்தான் அப்புறம் மாமியார் வீட்டுக்கு வந்தாலும் வாசப்படியிலேயே உக்காந்துட்டு அப்படியே திரும்ப போய்டுவார். இந்த வீடியோவை பார்த்தபின் அந்த நினைவுதான் வந்திட்டுது..

ம்ம் இதுக்குலாம்தான் எனக்கு கொடுப்பினை இல்லியே! 
ம்ம் இப்பவும் ஒன்னும் கெட்டுப்போயிடல. மச்சினிச்சி இருக்க வீடா பார்த்து கட்டிக்க...
கூல்.. சும்மா தமாசுக்கு சொன்னேன் புள்ள!

எங்க கூலாய் இருக்கிறது?! 
வெயில்காலம் வந்திட்டுது.. இனிதான் மரங்களோட அருமை எல்லாருக்கும் தெரியவரும்.  அதை சொல்லுறமாதிரி இந்த படம் ட்விட்டர்ல வந்துச்சு மாமா. அதான் சுட்டுக்கிட்டேன்.
இப்பவாவது சுதாகரிக்கலைன்னா இந்த நிலை வருவது உறுதி. 

இன்றைய விடுகதை..
 3 கால் இருக்கும் - நடக்காது..

ரெண்டு தலை இருக்கும் - பேசாது பார்க்காது
அது என்ன மாமா?!

நன்றியுடன்,
ராஜி

Monday, February 11, 2019

பிண்டம் வைக்கும்போது மூன்று தலைமுறை பேர்களை சொல்லி வைப்பது ஏன்?!- ஐஞ்சுவை அவியல்

போன வாரம் தை அமாவாசை பத்தின ஐஞ்சுவை அவியலில் பிண்டம் வைக்குறதை பத்தி சொன்னியே! அப்படி பிண்டம் கொடுக்கும்போது, பிண்டம் கொடுப்பவரின் அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா, என மூன்று தலைமுறையினர் பேர் சொல்லி பிண்டம் கொடுப்பாங்க. குழந்தை பிறக்க மூலகாரணமானது  ஆணிடமிருக்கு '' சுக்கிலம் '' எனச்சொல்லப்படும் விந்து.  இந்த விந்துவில் மொத்தம் 84 அம்சம் இருக்கும்.  அதில் 28 அம்சம் நாம சாப்பிடும் உணவு, நீர்ல இருந்து கிடைக்கும்.  அப்பாக்கிட்ட இருந்து இருபத்தியொரு அம்சமும், தாத்தாக்கிட்ட இருந்து  பதினைந்து அம்சமும், கொள்ளுத்தாத்தா என சொல்லப்படும் மூன்றாம் தலைமுறைக்கிட்ட இருந்து  பத்து அம்சமும்,  நான்காம் தலைமுறையிடமிருந்து ஆறு அம்சமும், ஐந்தாம் மூதாதையிடமிருந்து மூன்று அம்சமும், ஆறாம் மூதாதையிடமிருந்து ஒரு அம்சமும் என ஆறு தலைமுறையிடமிருந்து 54 அம்சம் விந்துவுக்கு கிடைக்கும். .  என்னதான் 4,5,6,7 தலைமுறைகள் தங்களிடமிருந்து தனது அம்சத்தினை கொடுத்தாலும் அதிகப்படியா தருவது முதல் 3 தலைமுறையினரே! அதனால்தான் திவசம், திதி, மாதிரியா நேரத்துல முதல் மூன்று பேர்களை சொல்லி பிண்டம் கொடுப்பது. இங்க அம்சம்ன்னு சொல்லுறது அறிவியல்படி டி.என்.ஏவைதான்.  இந்த காரணத்துக்காகத்தான் அப்பா, தாத்தா, கொள்ளுத்தாத்தா பேரை சொல்லுறமாதிரி, அம்மா, பாட்டி கொள்ளு பாட்டின்னு மூணு தலைமுறை பேரை சொல்லுறது.
DNA (Deoxyribonucleic Acid) - Dunken K Bliths

  டியாக்சிரிபோநியூக்லிக் அமிலம்(deoxyribonucleic acid) என்பதன் சுருக்கமே டி.என்.ஏ. இந்த டி.என்.ஏ நம்ம உடம்பை கட்டமைக்க மூலக்காரணமான குரோமோசோமில் இருக்கு. இந்த டி.என்.ஏவில்தான் நமது குணநலன், உருவ அமைப்பு, திறமைகள் என அனைத்து தகவலும் சேமிக்கப்படுது. இந்த டி.என்.ஏ நான்குவகையாய் பிரிச்சிருக்காங்க. சைட்டொசைன், தைமைன், குவானைன், அடினைன். மனிதர்களின் டி.என்.ஏவோடி சிம்பான்சி குரங்கின் டி.என்.ஏ 95% ஒத்துபோகுது. வாழைப்பழத்தின் டி.என்.ஏ 50% , முட்டோக்கோசின் டி.என்.ஏ 40-50% ஒத்துப்போகுது.  ஒரு கிராம் டி.என்.ஏ வில் 700 டெராபைட்ஸ் தகவல்களை சேமிக்கலாம். ஒரு டெராபைட்ங்குறது 1024 ஜிகாபைட்ஸ்க்கு சமம். உலகில் உள்ள அனைத்து தகவல்களையும் சேமிக்க 2 கிராம் டி.என்.ஏவே போதும்ன்னா டி.என்.ஏவின் பிரம்மாண்டம் உனக்கு புரியும்.
GIF.......DNA........SOURCE TUMBLR.COM..........

ஆத்தாடி இம்புட்டு விசயமிருக்கா மாமா?!

இன்னமும் இருக்கு..  பரிணாம வளர்ச்சியில் இதுவரை 510 டி.என்.ஏ அமைப்புகள் அழிந்து போனதாய் என ஆராய்ச்சி முடிவுகள் சொல்லுது. உலக மனிதர்களின் அனைவரின் உடலில் இருக்கும் எல்லா டி.என்.ஏ வையும் பிரித்து இணைச்சு அளந்தா, 10 பில்லியன் மைல்கள் நீளம் வருமாம்!!! இதன் ஒரு முனை பூமியில் இருந்தால் மற்றொரு முனை சூரியனை தொடக்கூடுமளவுக்கு இருக்குமாம்.  மனிதர்கள் அனைவருக்கும் 99 - 99.9 % டி.என்.ஏ அமைப்புகள் ஒன்றாக இருக்கிறது. மீதமுள்ள 0.1 - 1 % டி.என்.ஏ அமைப்புகள் மட்டுமே ஒருவருக்கொருவர் வேறுபடும். இந்த டி.என்.ஏக்கள்தான் நம்ம பெற்றோர்களை இன்னொரு பெற்றோர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுது. இல்லன்னா ஒரேமாதிரி அச்சில் வார்த்ததாய் இருந்து அடையாளம் தெரியாம குழம்பி தவிச்சிருப்போம்.  இரட்டையர்களாக பிறந்தவர்களின் டி.என்.ஏ 100% ஒத்துபோகும்.  புற்றுநோய்க்கு முக்கியமான காரணமே டி.என்.ஏ அமைப்புகளில் ஏற்படும் குளறுபடிதான். ஒவ்வொரு நாளும் நம்ம உடம்பில் இருக்கும்மரபணுக்கள் அழிந்து, அதற்கு சமமான மரபணு மீண்டும் உருவாகும். அப்படி ஒரு நிகழ்வில் குளறுபடி ஏற்படும்போது புற்றுநோய் உண்டாகும்.  புற்றுநோயை மரபணு மாற்றம் செய்து எளிதில் குணப்படுத்த முடியும். ஆனா, இந்த சிகிச்சை செய்ய  5 லிருந்து  15 இலட்சம் ரூபாய் வரை தேவைப்படும். 

போதும் நிறுத்து மாமா.. இந்த மாதிரி இம்சை கூடாதுன்னுதான் நான்மூணாப்பு படிப்போட நிறுத்திக்கிட்டேன். இங்க வந்து குரோமோசோம் , டி.என்.ஏன்னு பிளேடு போட்டுக்கிட்டு..

அப்படியா?! அப்ப தினத்துக்கும் நீ பார்க்குற, பயன்படுத்துற பொருள் பத்தி கேக்கவா?!

ம்ம்ம் கேளு மாமா.

பொண்ணுங்க ஏன் தலைமுடியை பின்னிக்குறாங்க?!

தலைமுடியை பின்னாம லூஸ் ஹேர் விட்டா தலைமுடி தூசி, வெயில் பட்டு பாழாகும். அதுமில்லாம தலைமுடியை விரிச்சு போடுறது அமங்கலத்துக்கான அறிகுறி. விதவிதமா தலைமுடியை பின்னிக்கிட்டா அழகா இருப்போம். அதனால்தான் பொண்ணுங்க தலையை பின்னிக்குறாங்க.

அதுமட்டும்தான் காரணமா?!

வேறென்ன காரணம் இருக்க போகுது மாமா?!
Image may contain: 1 person, standing

மூன்று பிரிவாய் தலைமுடியை எடுத்து பின்னும் பின்னல் அமைப்பு த்ரிவேணி சங்கமத்துக்கு ஒப்பானது. மூன்று நதிகள் சேரும்போது இரண்டு நதிகள்(கங்கை,யமுனை) கண்களுக்கு தெரியும். ஆனா  சரஸ்வதி நதி நம் கண்ணுக்கு தெரியாது.  அதுமாதிரி பின்னலில் இரண்டு தலைமுடி பாகமே கண்ணுக்கு தெரியும். நடுவில் இருக்கும் பாகம் கண்ணுக்கு தெரியாது. அதுமட்டுமில்லாம தலைமுடியின் வலது பாகம் பிறந்தவீடு., இடப்பக்க பாகம் புகுந்தவீடு, நடுவில் இருக்கும் பாகம் பெண்.  திருமணத்துக்கு பின் தான், தனது என்ற எண்ணம் மறந்து போகுமளவுக்கு உழைப்பு, தியாகம்,  அன்பினால் இரு வீட்டாரையும் இணைக்கனும் என்பதே பின்னலின் தத்துவம்.   தலைமுடியின் நுனி வழியாக ஆத்ம சக்தி வெளியேறுது. நல்ல / தீய உணர்வுகள் (அ) அதிர்வுகள் வந்து செல்வதற்கான கேட் பாஸ் மாதிரியானது தலைமுடியின் நுனி. இதனால்தான்  சந்நியாசிகள் மொட்டை அடிச்சுக்குறாங்க. வெளி உலகிலிருந்து பெற்றுக்கொள்ள எதுவுமில்லை. அதேப்போல தன்னிடமிருந்து உலகத்துக்கு கொடுக்கவும் ஒன்னுமில்லைன்னு அர்த்தப்படுத்தவே மொட்டை அடிச்சுக்குறாங்க. பின்னல் மட்டும் போதாது. தலைமுடி நுனி தெரியாம இருக்க நுனியில் ரிப்பன், குஞ்சலம் வச்சுக்குறது அந்த காலத்துல வழக்கம். துக்க வீட்டில் மட்டுமே தலைமுடி விரிச்சு போட்டுக்கிட்டிருப்பாங்க. உறவின் மீதான பிடிப்பை அறுத்துக்கவே தலைவிரிக்கோலம் உண்டானது. ஆனா, இப்ப பேஷன்ற பேர்ல கல்யாணம், காதுகுத்து, கோவில்ன்னு எல்லா சுபநிகழ்ச்சிகளுக்கும் தலைவிரிகோலமாகிட்டுது வேதனை தருது..
No photo description available.

ம்ம் அப்படி விரிச்சு போட்டுக்கிட்டு சுத்துறதால வீடு முழுக்க தலைமுடியா கிடக்கு மாமா.  அப்படி விழுந்த முடியை எத்தனைதான் பெருக்கினாலும் போகாது. ஒன்றிரண்டு தரையில் கிடக்கும். அதனால் தலைவாரி முடிச்சுதும், கொஞ்சூண்டு செல்லோ டேப்பை விரலில் சுத்திக்கிட்டு தரையில் தேய்ச்செடுத்தா தலைமுடி அத்தனையும் வந்திரும். 
முன்ன ஒருமுறை சுசீலா ராமன்ன்ற பொண்ணு , பாடிய?! பால் இருக்குது.. பழம் இருக்குது.. பழனி மலையிலே.. பாட்டை கேட்டு ரசிச்ச நம்ம சமூகம் இன்னிக்கு ஒரு முருகன் பாட்டை கேட்டு, பார்த்து ரசிக்கட்டுமேன்னு இந்த வீடியோவை அப்லோட் பண்ணு மாமா. அப்படியே என் விடுகதைக்கு பதில் சொல்லு.. அடித்தாலும், உதைத்தாலும் அழமாட்டான்... அவன் யார்?!

மாமா விடுகதை சொல்றதுக்கு முன் சகோ’ ஸ் யார் வேணும்ன்னாலும் பதில் சொல்லலாம். டிடி அண்ணா தவிர்த்து...

நன்றியுடன்,
ராஜி

Monday, February 04, 2019

தை அமாவாசை விரதம் யாரெல்லாம் இருக்கலாம்?! - ஐஞ்சுவை அவியல்

இந்தா புள்ள! இன்னிக்கு அமாவாசை அதுமா அசைவம் சாப்புடுறியே! இதுலாம் சரியா?!

ம்க்கும். எனக்குதான் அம்மா, அப்பா இருக்காங்களே! அப்படி இருந்தா அமாவாசை விரதம் இருக்க தேவையில்லைன்னு சொல்வாங்க மாமா., அதான் சாப்பிடுறேன்.

அம்மா, அப்பா இருந்தாலும் தாத்தா, பாட்டி, கொள்ளு தாத்தா, பாட்டின்னு இருபத்தியொரு தலைமுறை பெரியவங்க, அவங்களோட தாகத்துக்கும், பசிக்கும் உன்னைதான் எதிர்பார்த்து காத்துக்கிட்டு இருப்பாங்க. இது தெரியுமா?!
 இதென்ன புதுக்கதையா இருக்கு?!
No photo description available.
புதுக்கதைலாம் இல்ல. அமாவாசை தினத்தன்னிக்கு நம்முடைய 21 தலைமுறைக்கான முன்னோர்களின் பசியையும், தாகத்தையும் தீர்க்க கறுப்பு எள் கலந்த தண்ணீரைக்கொண்டு தர்ப்பணம் செய்யனும். ஒருவேளை, நம்மைவிட அப்பா, அம்மா, அண்ணன்ன்னு இருந்தால் நாம தர்ப்பணம் கொடுக்கக்கூடாதுன்னுதான் சொல்லி இருக்காங்களே தவிர விரதம் இருக்கக்கூடாதுன்னு சொல்லல. அமாவாசையன்னிக்கு அசைவம், மதுலாம் சாப்பிடக்கூடாது.  காலையில் எழுந்து குளித்து, வீட்டை சுத்தம் பண்ணி, அருகிலிருக்கும் நீர்நிலைகளுக்கு போய் எள்கலந்த சாதத்தை தர்ப்பணம் செஞ்சுட்டு வீட்டில் முன்னோர்களுக்கு பிடித்தமான சாப்பாட்டு வகைலாம் செஞ்சு படைக்கனும். சாப்பாட்டில் வாழைக்காய் அவசியம் இருக்கனும். இப்படி மாதந்தோறும் வரும் அமாவாசையில் விரதமிருந்து முன்னோர்களை வணங்கினால், அவர்களின் தாகம், பசி நீங்கி  ஆசி வழங்குவாங்க என சாஸ்திரம் சொல்லுது.
Image may contain: night and sky
எல்லா அமாவாசையின்போதும் விரதம் இருக்கமுடியாத சூழலில் இருக்கவுங்க, ஆடி, புரட்டாசி, தைமாதத்தில் வரும் அமாவாசையில் விரதமிருந்து வழிப்பட்டால் அந்த வருடம்முழுவதும் விரதமிருந்த பலன் கிடைக்குமென சாச்திரம் சொல்லுது. இந்த மூன்று அமாவாசைக்கும் மஹாளய அமாவாசைன்னு பேரு.   அதுமட்டுமில்லாம மாதந்தோறும் வீட்டிலிருந்தபடியே அமாவாசை விரதம் இருக்கவுங்க, ராமேஸ்வரம், கன்னியாக்குமரி, பவானி, திருச்செந்தூர் மாதிரியான புண்ணிய தலத்திலும், அருகிலிருக்கும் மூன்று ஆறுகள், கூடுமிடத்திலோ அல்லது நீத்தார் கடனுக்குன்னு புகழ்வாய்ந்த திருத்தலத்தில் ஆடி, புரட்டாசி தை அமாவாசையில்  தினத்தில் தர்ப்பணம் கொடுப்பாங்க.  

ஒரு வருடத்தில் ஆடிமாதம் முதல் மார்கழி முடிய உள்ள காலம் தேவர்களுக்கு இரவு நேரம் என்பதால் ஓய்வுக்குச் சென்றுவிடுவார்கள். அந்த நேரத்தில் நம்முடைய முன்னோர்கள் நம்மைக் காப்பாற்றுவதற்காக பித்ருலோகத்தில் இருந்து வரவேண்டும் என்பதற்காக நாம் அவர்களுக்கு ஆடி அமாவாசையன்று தர்ப்பணம் கொடுக்கிறோம். நம்முடைய தர்ப்பணத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு பித்ருலோகத்திலிருந்து புறப்படும் நம் முன்னோர்கள் புரட்டாசிமாத மகாளய அமாவாசையன்று பூமிக்கு வர்றாங்க. எனவே, புரட்டாசி மாதம் நாம் அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கனும். பிறகு தைமாதம் அவர்கள் மறுபடியும் தங்களுடைய லோகத்துக்குத் திரும்புகிறார்கள். தேவர்களின் ஓய்வுக் காலத்தில் பூமிக்கு வந்து நம்மை ஆசிர்வதித்து காப்பாற்றியதற்காக அவர்களுக்கு நன்றி சொல்லி வழியனுப்பும் விதமாக தை அமாவாசையன்னிக்கு  தர்ப்பணம் கொடுக்கனும்ன்னு சொல்லுது சாஸ்திரம்.

இந்நாளில் தீர்த்த தலங்களுக்கு சென்று எள், தண்ணீர் இறைத்து அவர்களின் தாகத்தை தீர்க்கவேண்டும். இவ்வாறு செய்தால் அவர்கள் செய்த பாவங்கள் நீங்கி, அவர்களுக்கு முக்தி பேறு கிட்டுமென்பது ஐதீகம். மேலும் அன்றைய தினம் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம், துணி தானம் செய்யலாம்.  நம்ம முன்னோர்கள்  காகத்தின் வடிவில்  நம்ம வீட்டுக்கு வருவதாக ஐதீகம். அதனால் காகத்துக்கு சாப்பாடு வைப்பது முக்கியம். அன்று காலை ஆறு, கடல் போன்ற நீர் நிலைகளுக்கு சென்று நீராடி தர்ப்பணம் கொடுக்கனும். காலை 6.30 மணிக்குள் தர்ப்பணம் கொடுக்கனும்.  ராகுகாலம், எமகண்டம் ஆகியவை தர்ப்பணத்துக்கு பொருந்தாது. மதியவேளை தர்ப்பணம் செய்ய மிகவும் உகந்தது. தர்ப்பணம் கொடுக்கும்போது தங்களின் கோத்திரம், குலதெய்வம், மூன்று தலைமுறையின் பெயர்களை தெரிஞ்சு வச்சுக்கிட்டு அவற்றை சொல்வது மிக முக்கியம். 
Image may contain: one or more people, people sitting and food
தர்ப்பணம் செய்தபின்னர் வீட்டுக்கு திரும்பி வந்து மறைந்த முன்னோர்களின் படத்தை சுத்தம் செய்து, வடக்கு கிழக்கு திசையில் வைத்து சந்தனம், குங்குமம் இட்டு துளசி மாலை சாத்த வேண்டும். முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களை வைத்து குத்து விளக்கு ஏற்ற வேண்டும். முன்னோர்களுக்கு பிடித்தமான இனிப்பு, காரம், பழ வகைகளை படைக்க வேண்டும். கோதுமை தவிடு, அகத்திக்கீரை போன்றவற்றை முன்தினமே ஊறவைத்து பசுவிற்கு தானமாக கொடுக்கலாம். முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளைக்கூட  ஒத்திவைப்பது நல்லது. தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய பூஜைகளை செய்யலாம். சாமி பூஜையையே அமாவாசை வழிபாட்டுக்காக தள்ளி வைக்கும்போது. சுபநிகழ்ச்சிகளில் மனம் ஈடுபட்டால் விரதம் கெடும்ன்னுதான் அமாவாசையன்னிக்கு சுபநிகழ்ச்சிகள் செய்விக்க தடை விதிக்கப்பட்டிருக்கு. அமாவாசை தினங்களில் மாமிசம் சாப்பிடக்கூடாது. வெங்காயம், பூண்டு, முள்ளங்கி, சோம்பு மாதிரியான வாசனை பொருட்களை சமையலில் தவிர்க்கனும். 
Image may contain: 1 person, on stage
 தர்ப்பணம் செய்யும் போது கறுப்பு எள்ளை, மற்றவர்களிடம் இருந்து கடன் வாங்கக்கூடாது. நீரில் இருந்துக்கொண்டு கரையில் தர்ப்பணம் செய்யக்கூடாது. அதைப்போல் கரையில் இருந்துக்கொண்டு நீரிலும் தர்ப்பணம் செய்யக்கூடாது. தர்ப்பணத்தை எப்போதும் கிழக்கு முகமாக பார்த்தபடி தான் கொடுக்கனும்.  இப்படி ஏகப்பட்ட விதி இருக்கு. இந்நாளில்தான் அபிராமி பட்டர் வாய் தவறி சொன்ன சொல்லை காப்பாற்ற அன்னை அபிராமி  தனது மூக்கு புல்லாக்கை கழட்டி வீசி அமாவாசையை பௌர்ணமிதினமா மாற்றினது. இன்னிக்குதான் சூரியபகவானுக்கு திருமணம் நடந்தது. திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் லட்சதீபம் ஏற்றப்படும். 
ஸ்ஸ்ஸ்ஸ் அபா! போதும் மாமா இப்பவே எனக்கு கண்ணை கட்டுது. நான் செத்து போயிட்டா எனக்கு நீ இதுலாம் செய்வியா?! இல்ல  இம்சை ஒழிஞ்சுதுன்னு அக்கடான்னு இருப்பியா?!

யாருக்கு யார் செய்றதுன்னு இறைவன் வகுத்திருப்பான். அதுப்படிதான் நடக்கும். அப்படி இருக்க தேவையற்ற பேச்சு ஏன்?!

சரி தேவையான பேச்சுக்களையே பேசுறேன்.. என் விடுகதைக்கு பதில் சொல்லு பார்க்கலாம்... 

காலையில் தலையை இழக்கும்... இரவில் தலை மீண்டும் முளைக்கும் அது என்ன?!

விடுகதைக்கு பதில் யோசிக்குறேன். நீ அதுக்குள் வாட்ஸ் அப்ல வந்த இந்த ஜோக்கையும், இந்த வீடியோவையும் பாரு..



உடை, தோற்றத்தை வச்சுதான் இந்த உலகம் நம்மை எடைப்போடும்ன்றதுக்கு இந்த படமே சாட்சி.. பார்க்க எத்தனை கஷ்டமா இருக்குன்னு பாரு. ஏற்றத்தாழ்வு இல்லா சமுதாயம் மலரும் நாள் என்னிக்கு வரும்ன்னுதான் தெரில மாமா. மாமோய்! விடுகதைக்கு விடை யோசிச்சுட்டியா?!

எனக்கு தெரில! இன்னும் கொஞ்சம் டைம் கொடேன்...

மாமா யோசிச்சு சொல்றதுக்குள் நீங்க விடைகளை சொல்லுங்க சகோ! டிடி அண்ணா தவிர யார் வேணும்ன்னாலும் பதிலை சொல்லலாம்..

நன்றியுடன்,
ராஜி

Monday, September 24, 2018

பாம்புக்கு பால் வார்ப்பது ஏன் - ஐஞ்சுவை அவியல்

என்ன மாமா டல்லா இருக்கே?!


என்னன்னே தெரில ரெண்டு நாளாய் விக்கல் எடுத்துக்கிட்டே இருக்கு. எதையும் சாப்பிட முடில. சாப்பிட்டா விக்கல் வந்துடுமோன்னு ஒரு பயம். சாப்பிடாததால் டல்லா தெரியுறேன். அம்புட்டுதான். 


ம்ம்ம் ஊருக்கு போயிருந்த நான் உன் நினைப்பாவே இருந்தேனா?! அதான் உனக்கு விக்கல் எடுத்திருக்கு.  

ம்ம்ம் அப்புறம்?!

ம்ம் விழுப்புரம்..  நிஜமாதான் சொல்றேன் மாமா. நான் உன்னையே நினைச்சுட்டு இருந்தேனா?! அதான் உனக்கு விக்கல் எடுத்துச்சு. போன வாரம்லாம் நீ ஊருக்கு போயிருந்தியே! எனக்கு விக்கல் எடுக்கவே இல்ல, நீதான்  என்னை நினைக்கவே இல்லியே! அப்புறம் எப்படி எனக்கு விக்கல் எடுக்குமாம்?!


அடியேய்! இந்த டக்கால்டி வேலைலாம் என்கிட்ட வேணாம்.


நான் நினைக்கும்போதெல்லாம்
உனக்கு விக்கல் எடுப்பதென்றால்
இந்நேரம் நீ விக்கியே
செத்திருப்பாய்!!!

-ன்னு எனக்கு கவிதையாய் பேசத்தெரியும். ஆனா, எதார்த்தம் அதுவல்ல.   விக்கல் எடுப்பதும், புரை ஏறுவதும் எதுக்குன்னு எனக்கு தெரியும்.  நமது வயிற்றையும், மார்புப் பகுதியையும், ‘டயபரம்’ என்கிற உதரவிதானம் பிரிக்குது.  சிலநேரங்களில், அதன் தசைநார்கள் திடீரென்றும், தன்னிச்சையாகவும் சுருங்கி விரிந்து செயல்படும்போது விக்கல் உண்டாகுது. 



சாதாரணமா நாம் சுவாசிக்கும்போது காற்றை உள்ளுக்குள் இழுப்போம். அப்ப மார்புத் தசைகள் விரியும். மார்புக்கும் வயிற்றுக்கும் இடையில் நுரையீரலை ஒட்டியுள்ள உதரவிதானமும் அப்ப விரியும். உடனே, தொண்டையில் உள்ள குரல்நாண்கள் திறக்கும். அப்ப நுரையீரலுக்குள் காற்றின் அழுத்தம் குறையும். . அந்த நேரத்துல நுரையீரலுக்குள் காற்று செல்ல அதிக இடம் கிடைக்கும். இதனால் நாம் சுவாசிக்கும் காற்று, திறந்த குரல்நாண்கள் வழியாகத் தங்கு தடையின்றி நுரையீரல்களுக்குள் நுழைந்துவிடும். இது எப்பவுமே நாம சுவாசிக்கும்போது நடக்குறது. 

ஆனா சிலநேரத்தில், மார்புப் பகுதியில் உள்ள நரம்புகள் உதரவிதானத்தை எரிச்சல்படுத்தினால், அது மூளைக் கட்டுப்பாட்டையும் மீறி, தன்னிச்சையாகத் திடீர் திடீரென்று சுருங்க ஆரம்பிக்கும். அப்ப,  குரல்நாண்கள் சரியாகத் திறக்காது. அந்த மாதிரி நேரங்களில் நாம் சுவாசிக்கும் காற்று குரல்நாண்களின் குறுகிய இடைவெளி வழியாகத்தான் நுரையீரல்களுக்குள் சென்று திரும்பனும். உள்ளுக்குள் நுழைஞ்ச  காத்து, புல்லாங்குழலில் காற்று தடைபடும்போது இசையொலி உண்டாவதைப் போல, தொண்டையில் ‘விக்... விக்...' ன்ற மாதிரியான ஒரு விநோத ஒலியை எழுப்பும். அதுதான் ‘விக்கல்'.
வேக வேகமா சாப்பிடுவது, ரொம்ப சூடா சாப்பிடுவது, தேவையான அளவுக்குத் தண்ணீர் குடிக்காததுதான் விக்கலுக்கு முக்கியக் காரணங்கள். வலிநிவாரணி மாத்திரைகள், ஸ்டீராய்டு மாத்திரைகளைச் சாப்பிட்டாலும் விக்கல் வரும். இரண்டு நாட்களுக்கு மேல் விக்கல் தொடர்ந்தால், அது நோய்க்கான அறிகுறி. உதாரணத்துக்கு, இரைப்பையில் அல்சர் இருக்கும்போது, சிறுநீரகம் பழுதாகி ரத்தத்தில் யூரியா அளவு அதிகரிக்கும்போது விக்கல் வரும். உதரவிதானத்தில் நோய்த்தொற்று, கல்லீரல் கோளாறு, நுரையீரல் நோய்த்தொற்று, குடல் அடைப்பு, மூளைக் காய்ச்சல், கணைய அழற்சி, பெரினிக் நரம்புவாதம் போன்றவற்றாலும் விக்கல் வரும். விக்கல் வந்தால், மூச்சை நன்றாக உள்ளிழுத்து . 20 எண்ணும் வரை மூச்சை வெளியில் விடாமல் அடக்கிக்கனும்  பிறகு மூச்சை வெளியில்விட வேண்டும். இப்படி 5 முறை செய்தால் விக்கல் நின்றுவிடும். வேகமாக ஒரு சொம்பு குளிர்ந்த தண்ணீர் குடித்தால், விக்கல் நின்றுவிடும். ஒரு தேக்கரண்டி சர்க்கரையை நாக்கில் வைத்து அதைத் தானாகக் கரையவிட்டால், விக்கல் நிற்கும். ஏதேனும் ஒரு வகையில் தும்மலை உண்டாக்கினால், விக்கல் நிற்கும்.  ஒரு பிளாஸ்டிக் பைக்குள் மூச்சை விட்டு. பிறகு அந்தக் காற்றையே மீண்டும் சுவாசிக்கனும். இந்த மாதிரி 20 முறை செஞ்சா, ரத்தத்தில் கார்பன் டை ஆக்சைடு அதிகரித்து, விக்கல் நின்னுடும். பொதுவா ஒருவர் நிமிடத்திற்கு நான்கு முதல் 60 தடவைகள் விக்கலாம். குறைந்தளவு நேரம் மட்டும் நீடிக்கும் அத்தகைய விக்கல்களுக்கு எவ்வித மருத்துவ சிகிச்சையும் தேவையில்லை. ஆனா, விக்கலின் அளவு நீண்டுக்கிட்டே போனால் அவசியம் டாக்டரை பார்க்கனும்.  சில நிமிடங்கள் நீடிக்கும் விக்கலுக்கே பயந்துபோகிறோம். அமெரிக்காவில் சார்லஸ் ஆஸ்பார்ன் என்பவர் 68 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து விக்கல் எடுத்துக் கின்னஸ் ரிக்கார்டு செய்திருக்கிறார்ன்னா பார்த்துக்க. 

ம்க்கும். அப்படியா! என்னைதான் நினைச்சுக்கிட்டிருந்தியா?! நானும் உன்னைதான் நினைச்சுக்கிட்டிருந்தேன்னு ஃபார்மாலிட்டிக்குகூட சொல்லாத மனுசன்கூட அல்லாடனும்ன்னு என் தலையில் எழுதி இருக்கு. என்னதான் பாம்புக்கு  பால் வார்த்து வளர்த்தாலும் அது நேரம் வரும்போது கொத்தத்தான் செய்யும்..

ஏய்! இரு! இப்ப எதுக்கு இந்த டயலாக். பாம்பு பால் குடிக்கும்ன்னு யார் சொன்னது?!  பாம்பினுடைய நாக்கு பிளவுபட்டு இருக்குறதால பாம்பினால் பால் குடிக்க முடியாதுன்னு விஞ்ஞான ரீதியாக சொல்றாங்க. ஆதி காலத்தில் மனிதனுக்கு பெரிய பிரச்சனையாக இருந்தது பாம்புகள், அப்பலாம்  மனிதர்களைவிட பாம்புகள்தான்  அதிகம் இருந்தன. ஒரு உயிரினத்தை கொல்லும் உரிமை இந்து சமயத்தை பின்பற்றும் மக்களுக்கு இல்லை. அதனால், அதனை கொல்லாமல் அதன் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த பாம்புக்கு பால் ஊற்றினாங்க. பாலுக்கும் பாம்பின் இனப்பெருக்கத்துக்கும் என்ன காரணம்ன்னு பார்த்தால், பாம்புகள் இனப்பெருக்கம் மேற்கொள்வது மிகவும் வித்தியாசமான முறையில். பெண் பாம்பு தன்  உடலில் இருந்து ஒரு வித வாசனைத் திரவத்தை வெளிப்படுத்தும். அதனை நுகர்ந்து ஆண் பாம்பு பெண் பாம்பைத் தேடி வரும். இப்படி ஆண் பாம்பு, பெண்பாம்பை தேடி வராம தடுக்க, பெண் பாம்பில் இருந்து வரும் வாசனையைக்  கட்டுப்படுத்தும் வேலைக்காக, பாம்பு புத்தில் பால் முட்டையை ஊத்துனாங்க. பால் ,முட்டையிலிருந்து வரும் வாசனை பெண் பாம்பின் வாசனையை  தடுக்கும். எனவே, அதனால் இனப்பெருக்கம் செய்ய முடியாதுன்றதுதான் உண்மையான காரணம். அதைவிட்டு, நாகராஜா பால் கேட்டாரு, மாரியாத்தா முட்டை கேட்டால்ன்னு சொல்லிக்கிட்டு... 

முட்டைன்னு சொன்னதும்தான் எனக்கொரு சந்தேகம் வருது மாமா.  கோழியால் மட்டும் எப்படி பத்து, பதினைஞ்சு நாளுக்கு தினத்துக்கு ஒரு முட்டை போட முடியுது?! அதுமாதிரி மத்த எந்த மிருகமும் தொடர்ந்து தினத்துக்கு முட்டையோ குட்டியோ போடுவதில்லையே! இப்படி தினத்துக்கு ஒரு முட்டை போட்டால் அந்த கோழி உடம்பு என்னத்துக்கு ஆகும்?!

ஒரு மனித பெண் உடலில் 4 லட்சம்  வரை கருமுட்டைகள் உருவானாலும், அதில் முழு வள்ர்ச்சியடைய தகுதியான 400 மட்டுமேன்னு அறிவியல் சொல்லுது.   கரு முட்டை தானம் செய்யும் பெண்களுக்கு ஒரு விசேச ஹார்மோன் ஊசி போட்டு அதிக முட்டைகள் எடுப்பாங்க. அதேமாதிரிதான், நாட்டுகோழியில் ஒரு முறை கருவுறும் போது அதில் 10ல் இருந்து 15 முட்டை மஞ்சள் கரு உருவாகும்.  உண்மையில் அதுதான் முட்டை, அதை சுற்றி இருக்கும் வெள்ளை கரு, மஞ்சகரு கோழியாக உருவெடுக்கும் பொழுது அதற்கு இருக்கும் உணவு பொருள். அந்த மஞ்சள் கருவை சுற்றி கால்சியம் ஓடு அமையும் பொழுது அது முட்டையாக வெளி வரும், அவை தொடர்ச்சியாக 15 நாட்களுக்கு நாட்டு கோழிக்கு நடக்கும். பிராய்லர் கோழிக்கு இயற்கையான உடல் உறவு மூலம் முட்டை உருவாவது இல்லை, முன்னர் மனித பெண் கரு தானம் பெற விசேச ஹார்மோன் ஊசி போடுவார்கள்ன்னு சொன்னேனே!  அதேமாதிரிதான் பிராய்லர் கோழிக்கு ஊசி போடப்படும், அந்த கோழி தன் வாழ்நாளில் உருவாகும் முட்டையைவிட இரு மடங்கு முட்டையை தொடர்ச்சியாக வெளியேற்றும்.  முட்டை நின்றதும்  அதன்பின் அந்த கோழியால் பயனில்லை. அதனால், அதை இறைச்சுக்குன்னு வித்துடுவாங்க. ஒரு முட்டை ஈன்று 24 மணி நேரத்தில் மற்றொரு முட்டை  உருவாக தேவையாக அனைத்து சத்து பொருட்களும் கோழியின் உடம்பில் இருக்கு. அதில் ஏதேனும் குறைபாடு ஏற்பட்டால் அதனால் அப்படி தொடர்ச்சியாக முட்டையிட முடியாது, அதனால் தான் முட்டை கோழிகளுக்கு விசேச உணவு கொடுக்கப்படுகிறது. 

ரொம்ப பேசிட்டே. இந்த மீம்சை பார்த்து கொஞ்சம் ரிலாக்சாகிட்டு நான் கேட்கும் விடுகதைக்கு பதில் யோசிச்சு வை. அதுக்குள் உனக்கு விக்கல் நிக்க சர்க்கரையும், தண்ணியும் கொண்டாரேன். 

 மாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன ?


நன்றியுடன்,
ராஜி

Monday, July 23, 2018

பெண் சம்பந்தமானது.. ஆண்களும் தெரிஞ்சுக்கலாம் - ஐஞ்சுவை அவியல்

நான் வந்ததுகூட தெரியாம அம்புட்டு இண்ட்ரஸ்ட்டா எப்.பில என்ன  பார்த்துக்கிட்டு இருக்கே?!

அது ஒன்னுமில்ல மாமா!  மாதவிடாய் பத்தி ஒரு டிவி நிகழ்ச்சில நெறியாளர் ஒருத்தங்க பேசப்போயி அது பெரிய பஞ்சாயத்தாகிட்டுது. அதான் அதுலாம் படிச்சுக்கிட்டிருக்கேன்.

தீட்டு, பீரியட், த்ரீ டேஸ், வீட்டு விலக்கு மாதவிலக்குன்னு பலபேரால் சொல்லப்படும்  மாதவிடாய்ன்னா என்னன்னு முதல்ல தெரிஞ்சுக்க.  இது பொண்ணுங்க பிரச்சனைதான். ஆனா, இதுப்பத்தி பொண்ணுங்களுக்கே தெரியாது. என்னமோ கெட்ட ரத்தம் வழியும், இடுப்பு, வயிறு வலிக்கும், உடல் சோர்வு, பூஜை அறைக்கு போகக்கூடாது. வெளில போனா பேய் பிடிச்சுக்கும். யாரையும் தீண்டக்கூடாதுன்னு இதுமட்டும்தான் பொண்ணுங்களுக்கு தெரியும்.

உனக்குதான் எல்லாம் தெரியும்ன்னு நினைக்காத மாமா. எனக்கு கொஞ்சம் கொஞ்சம் தெரியும். மாதவிடாய் சுழற்சின்னா உடல் ரீதியான இயற்கையான வளர்ச்சி முறை. இச்சுழற்சி பெண்கள் வயதுக்கு வந்தவுடன் தொடங்குது.  முன்னலாம் 14 வயதிலிருந்து இந்த சுழற்சி ஆரம்பிச்சது. ஆனா, உணவில் ரசாயணம் கலந்ததால் இப்பத்திய பிள்ளைகள் 10 வயசுலயே வந்திடுதுங்க. இது முறையாகவும், குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ச்சியாக வருவதனால் இதனை மாதவிடாய் சுழற்சின்னு சொல்றோம்.  மாதவிடாய் வருவதற்கு 2 வாரங்களுக்கு முன்னர் ஒரு பக்க கருமுட்டைப்பையில் ஒரு முட்டை உருவாகி முதிர்ச்சி அடைகிறது. அது சினைக்குழாயின் வழியாக வரும்போது கருப்பையை அடைகின்றது. முட்டை கருப்பையை அடைஞ்சதும் கருப்பை விரிவடையுது.  அந்த கருமுட்டை உயிரணுவோடு சேரலைனா, ஹார்மோனின் காரணமாக கருப்பை சுருங்க ஆரம்பிக்குது. அப்படி சுருங்கும்போது அதன் உட்சுவரில் உள்தோல் பகுதியாகிய என்டோமெடரியம் சிறு சிறு துண்டுகளாக பிரிக்கப்பட்டு உதிரும். அப்போது அதோடு தொடர்புடைய ரத்த நாளங்களும் துண்டிக்கப்படுவதால் இரத்தமும், கருவுறாத முட்டையும், உட்சுவராகிய சளிச்சவ்வும் வெளியே தள்ளப்படுது.இதுதான் மாதவிடாயின் நிகழ்வு.

மாதவிடாய் அவரவர் உடல்நிலையை பொறுத்து 3 முதல் 6 நாட்கள் வரை தொடரும்.  இந்த நாட்களில் பெண்கள் சோர்வாகவும், சோம்பலாகவும், கலகலப்பின்றியும் இருப்பது இயற்கை. இதற்கு காரணம் உடலில் நிகழும் இரசாயன மற்றும் ஹார்மோன்களின் மாற்றங்களே. இளம் பெண்களுக்கு மாதவிடாய் ஆரம்பித்த தொடக்கக்காலத்தில் ஹார்மோன்களின் சுரக்கும் தன்மை மாறுபடும். அதனால் இரத்தப் போக்கும் மாறுபடும். சில சமயங்களில் மாதவிடாய் தள்ளி போகவோ அல்லது அடிக்கடி வரவோ செய்யலாம். ஆனால் இது 16-18 வயதிற்குள் சரியாகிவிடும். அதே பிரச்சனை மாதவிடாய் நிற்கும் பருவத்திலும் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த மாதவிடாய் சுழற்சி சிலருக்கு 27-28 நாட்களுக்கு ஒரு முறையும் சிலருக்கு 35 நாட்களுக்கு ஒரு முறையும் ஏற்படும். தினத்துக்கு இரண்டு ஸ்பூன் அளவு ரத்தம் வெளியேறுவது இயற்கை. அதுக்கு அதிகமா போனாலோ இல்ல குறைவா போனாலோ கவனம் கொள்வது அவசியம். மாதைவிலக்குக்கு முந்தைய நாட்களில் கருப்பை விரிவடைஞ்சிருப்பதால்  கிட்னி, கல்லீரல்லாம் அழுத்தம் கொடுப்பதால் வயிறு வலி, இடுப்பு வலி என்பது சாதாரணம். தாங்கிக்கொள்ளும் வலியென்பது சாதாரணம். வலி அதிகமானால் கவனிக்கனும். மன அழுத்தம், திடீரென எடை குறைப்பது, அளவுக்கதிக உடற்பயிற்சி  போன்றவற்றின் காரணமாக மாதவிலக்கு வராமல் இருக்கலாம். கர்ப்பத் தடை மாத்திரைகளின் விளைவாலும் அப்படி நிகழலாம். எப்போதும் சுழற்சி முறையாக இருந்துவிட்டு, திடீரென தடைப்பட்டால்  டாக்டரை பார்க்கனும். மாதவிலக்கில் மிளகு அளவிலான கட்டிகள் வருவது இயல்பு, அதை தவிர்த்து ரத்தக்கட்டிகள் அதிகமா இருந்தா டாக்டர்க்கிட்ட போகனும். இல்லன்னா நாளடைவில் கருப்பை கோளாறுகள் வரும்.

முன்னலாம் பெண்களை தனியா இருக்க வச்சதுக்கான காரணம் பெண்கள் சுலபத்தில் தொற்றுக்களால் பாதிக்கப்படுவாங்க. அதுமாதிரி நோய்தொற்றுக்களால் பாதிக்கப்படாமல் இருக்கவும், அந்நேரத்தில் பெண்களின் உடல் மிகவும் பலவீனமாக இருக்கும். அதனால் அவர்களுக்கு போதிய அளவிலான ஓய்வு அவசியம். அவர்கள் ஓய்வா இருக்கனும்ன்னுதான் தனியா விட்டாங்க. அதேமாதிரி, இந்த மாதிரியான நேரங்களில் பெண்கள் உடம்பிலிருந்து நேர்மறையான அதாவது நெகட்டிவ் அலைகள் உருவாகும். அது மத்தவங்களை பாதிக்காம இருக்கனும்ன்னுதான் தனியா இருக்க வச்சாங்க. ஆனா, இந்த காலத்தில் பெண்கள் பெண்ணியம், மூட நம்பிக்கைன்னு பேசி தனக்கு சாதகமான விசயத்தைக்கூட அவாய்ட் பண்ணி அவஸ்தைப்படுறாங்க.

இந்நாளில் சத்தான உணவுகளை சாப்பிடுவது அவசியம். தோல் நீக்காத உளுந்தை உடைச்சு களி செஞ்சு சாப்பிடலாம். முதல் நாள் இரவு எள் ஊற வச்சு அதிகாலையில் அந்த தண்ணிய குடிச்சு வந்தால் மாதவிலக்கு பிரச்சனை தீரும். கடுக்காய், ஆவாரம்பூ, மருதம்பட்டையை சம அளவு எடுத்து காய வச்சு பொடி செஞ்சு 5கிராம் எடுத்து கசாயமாக்கி குடிச்சு வந்தால் தடைப்பட்ட மாதவிலக்கு சீராகும், ரத்தப்போக்கு அதிகமா இருந்தால் குணமாகும். கருஞ்சீரகத்துடன், பனைவெல்லம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தடைப்பட்ட மாதவிலக்கு சரியாகும். கீழாநெல்லிவேரை இடிச்சு பாலோடு கொதிக்க வச்சு வடிகட்டி சாப்பிட்டாலும் மாதவிலக்கு ஒழுங்காகும். பப்பாளி, பேரீச்சை, பாதாம்லாம் சேர்த்துக்கலாம்.. இம்புட்டுதான் இந்த “அந்த”மேட்டர். அதைவிட்டு பேய், பூதம், தீட்டுன்னுலாம் ஒதுக்க தேவையில்ல.

 பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும்ன்னு சொல்ற மாதிரி என்னோடு சேர்ந்து உனக்கும் புத்தி வந்திட்டுது. இதோ இந்த படத்திலிருப்பது என்னன்னு சொல்லு...

ஏதோ பாக்டீரியா, வைரஸ் மாதிரியானதுன்னு மட்டும் புரியுது, ஆனா அது எதுல இருக்குறதுன்னுதான் தெரில.

நீ சொன்னது சரிதான், நாம குடிக்கும் குடிநீரின் ஒரு சொட்டு தண்ணில இருக்கும் நல்ல, கெட்ட நுண்ணுயிரிகள்தான் இது.

இந்த மாதிரி ஆளுங்களால தமிழ் மட்டுமில்ல எல்லா மொழியுமே மெல்ல சாகும்.. இது வாட்ஸ் அப்ல வந்துச்சு மாமா.
உன் அறிவாளித்தனத்தை டெஸ்ட் பண்ண ஒரு விடுகதை கேக்குறேன்.
கடலைக் கலக்குது ஒரு குருவி..,
கடலோரம் போகுது ஒரு குருவி..,
செடியைத் தின்பது ஒரு குருவி..,
செடி ஓரம் போகுது அடுத்த குருவி..,
இதுக்கு விடை சொல்லு பார்க்கலாம்...
நான் யோசிச்சு வைக்குறதுக்குள்ள ஒரு கப் காபி போட்டுட்டு வாங்களேன்.. ப்ளீச்.

நன்றியுடன்,
ராஜி

Monday, April 30, 2018

பிள்ளைகளுக்கு கொண்டாட்டம், பெற்றோருக்கு திண்டாட்டம் - ஐஞ்சுவை அவியல்


ஐயையே! பகல்ல கொஞ்ச நேரம் தூங்கமுடியுதா?! ஸ்கூல், காலேஜ் லீவ் விட்டாலும் விட்டாங்க. கத்தியே கூப்பாடு போடுதுங்க. இல்லன்னா டிவி பார்த்துக்கிட்டு இம்சை பண்ணுதுங்க.  ச்ச்சை...

நம்ம வீட்டு பசங்களும் இப்படிதானே கொட்டமடிக்கும்?! அதை நினைச்சு பாரு புள்ள. ஈசியா எடுத்துக்க. லீவ் நாளில்தானே அதுங்க நிம்மதியா இருக்க முடியும்.

ஆமாம் மாமா. லேட்டா எழுந்து, பிடிச்சதை சாப்பிட்டு டிவி பார்த்துக்கிட்டு ஹோம் வொர்க் இல்லாம நல்லா எஞ்சாய் பண்ணுதுங்க.  

பிள்ளைகளை அந்தமாதிரி லேட்டா எழுந்துக்க விடுறது தப்பு. எப்பயும்போல, அதேநேரத்துக்கு எழுப்பிவிட்டுடனும். இல்லன்னா, ஸ்கூல் திறக்கும்போது பிள்ளைகள்தான் கஷ்டப்படும். நமக்கு கோவம் வரும். கத்துவோம். பிள்ளைகளை அடிப்போம். அதேமாதிரி, வீட்டில் பொருட்கள் இறைஞ்சு கிடக்க விடக்கூடாது, அந்தந்த இடத்துல அந்தந்த பொருட்களை வைக்கனும்ன்னு ஸ்ட்ரிக்டா சொல்லிடனும். பழைய புத்தகத்தை தேவைப்படுறவங்களுக்கு கொடுக்க சொல்லனும். வெங்காயம், பைசாக்கு ஆசைப்பட்டு எடைக்கு எடை போட்டுட கூடாது. அக்கம்பக்கத்து வீட்டாளுங்களுக்கு எதாவது கொடுக்கனும்ன்னா பிள்ளைங்கக்கிட்ட கொடுத்தனுப்பனும். அப்பதான் அக்கம்பக்கத்தாரோடு குழந்தைகளுக்கு ஒரு அன்னியோன்யம் பிறக்கும். பகிர்ந்துண்ணுதலும் என்னன்னு புரியும்.
செடிக்கு தண்ணி ஊத்துறது, மாடு ஆடு கோழின்னு இருந்தா அதுகளுக்கு தீவனம் போட சொல்லனும். பக்கத்திலிருக்கும் வயல்வெளிக்கு கூட்டி போய் வேலை செய்யுறதை காட்டலாம். அப்பதான் விவசாயிங்க கஷ்டம் தெரியும். உணவின் மதிப்பு புரியும். மார்க்கெட், உழவர் சந்தை மாதிரியான இடங்களுக்கு கூட்டி போகனும். பொருட்களை வாங்க குழந்தைகளை பழக்கனும். ட்ராபிக் போலீஸ், போஸ்ட்மேன் மாதிரியான ஆட்கள் எப்படி வேலை செய்யுறாங்கன்னும், அவங்க படும் கஷ்டத்தை புரிஞ்சுக்க அவங்களோடு பழக விடனும். ஆண், பெண்ணென இரு குழந்தைக்கும் சின்ன சின்ன அத்தியாவசியமான சமையல்களை பழக்கலாம். அப்படியே வீட்டு வேலைகளையும் பழக்கலாம். அந்த தெரு பிள்ளைகள் முழுக்க சேர்ந்து தெருவினை சுத்தம் பண்ணலாம். கிராம சபா, பஞ்சாயத்துகளுக்கு போய் அங்கிருக்கும் நடைமுறைகளை தெரிஞ்சுக்கலாம். கொஞ்சம் வளர்ந்த பிள்ளைங்க, பேங்க், போஸ்ட் ஆஃபீஸ், ஆர்.டி.ஓ ஆபீஸ்களுக்கு போய் உதவி தேவைப்படுறவங்களுக்கு உதவி செய்யலாம்.
ட்ராயிங்க் கிளாஸ், ப்ரெஞ்ச், சீனமொழி கிளாசுக்குதான் போகனும்ன்னு இல்ல, நீச்சல், ட்ரைவிங்க், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ரிப்பேர், மாதிரியான கிளாசுக்கும் போகலாம். அப்பா, அம்மாவோடு அவங்க ஆஃபிசுக்கு போய் அவங்க படும் கஷ்டத்தை தெரிஞ்சுக்கலாம். அம்மாவோடு கிச்சனில் ஹெல்ப் பண்ணலாம்.
சொந்தக்காரங்க வீட்டுக்கு கூட்டி போகனும். அப்படி போகும்போது அவங்கக்கிட்ட பர்மிஷன் கேட்டுட்டு போகனும், அங்க போய் அதிகாரம் செய்யக்கூடாது. அவங்க வீட்டு வேலைகளில் ஹெல்ப் பண்ணனும். முதியோர் இல்லம், கருணை இல்லம் மாதிரியான இடங்களுக்கு கூட்டி போகனும். அப்பதான் நாம எவ்வளவு வசதி வாய்ப்புகளோடு இருக்கோம்ன்னு தெரிஞ்சுக்கிட்டு கடவுளுக்கு, பெத்தவங்களுக்கு நன்றி சொல்வாங்க. படிப்பறிவு மட்டும் வெற்றியை தேடி தந்திடாது. பட்டறிவுதான் சரிப்பட்டு வரும். வெற்றியை தரும்.
நம்ம திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த, கலசப்பாக்கம் ஊராட்சியில் சின்னக்கல்லந்தல் பகுதியை சார்ந்த ஆடுமேய்க்கும் வீட்டில் பிறந்த பி.யுவராஜ் படிச்சு ஐ.ஏ.எஸ் ஆகி இருக்கார். முதல்ல அரசு பள்ளியில் படிச்ச இவரு சிவில் இஞ்சினியரிங்க் படிச்சுட்டு சகாயம், இறையன்பு மாதிரியான கலெக்டராகனும்ன்னு சொல்லி கஷ்டப்பட்டு படிச்சு இந்திய அளவில் 751 வது இடமும், தமிழக அளவில் 74வது இடமும் பெற்றார். இவர் கலெக்டரானால், ஆறு, குளம் மாதிரியான நீர்நிலைகளை தூர்வாரி, ஆக்ரமிப்பை அகற்றி நீர் சேகரிக்க ஏற்பாடு பண்ணுவாராம். அதான் அவரோட லட்சியம்ன்னு பேட்டியில் சொல்லி இருக்கார்.
நல்ல விசயம்தான் மாமா. இணையத்துல ஒரு கல்யாண இன்விடேஷன் உலாவுது. அதை புதைச்சு வச்சா செடி முளைக்குமாம். நல்ல முயற்சிதானே?!

ஆமாம். இனி இதுமாதிரியான எதாவது செஞ்சாதான் பூமியை காப்பாத்த முடியும்.   பகையாளி குடும்பத்தை உறவாடி கெடுன்ற  பழமொழிக்கு அர்த்தம் தெரியுமா மாமா?!
பகையாளி வீட்டுல போய் உறவாடி அவனை கெடுக்கனும்ன்னு அர்த்தமில்ல. பகையாளி வீட்டுல உறவாடி அவன் மனசுல இருக்கும் பகை உணர்ச்சியை போக்கி அவனையும் நல்லவனா மாத்தனும். இதான் அர்த்தம். நான் சொன்னது சரியா புள்ள?!

சரிதான் நான் கேட்கும் விடைக்கு பதில் சொல்லு பார்க்காலாம்...
காட்டில் பச்சை... கடையில் சிவப்பு... வீட்டில் சிவப்பு... அது என்ன?!
பதில் யோசிச்சு வை. நான் வெளில போய்ட்டு வந்து பதிலை கேட்டுக்குறேன்...

நன்றியுடன்,
ராஜி

Monday, September 18, 2017

ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் சரியா திட்டமிட கத்துக்கோங்கப்பா. - ஐஞ்சுவை அவியல்

(படங்கள் செல்போன்ல எடுத்தது. கொஞ்சம் அப்படி இப்படிதான் இருக்கும்)
சிவன் கொடுத்த சாபத்திலிருந்து நிவர்த்தி பெற, சிவனின் ஆலோசனைப்படி காவிரி நதியின் தென்புறத்தில் பார்வதி மயில் ரூபம்கொண்டு தவமிருக்கிறாள். அவள் தவத்தினை கண்டு மெச்சிய சிவன் ஆண் மயில் உருவங்கொண்டு, பெண்மயிலாய் இருக்கும் பார்வதியுடன் நாட்டியம் ஆடியக்காரணத்தால் மயிலாடிய காவிரித்துறைன்னு பேர் உண்டாச்சு. கொஞ்ச நாளைக்கு முன்னாடி வரை இந்த ஊருக்கு மாயவரம். திருமுறைல மயிலாடுதுறைன்னு பேர் இருக்குறதை சொல்லி எம்.ஜி.ஆர் மயிலாடுதுறைன்னு பேர் வச்சாராம்.
மயிலாடுதுறையில் இருக்கும் புண்ணிய தீர்த்திற்கு காவிரி துலாக்கட்டம்ன்னு பேரு. ஒவ்வொரு ஐப்பசி மாசமும் காவிரி தீர்த்தவாரி இங்க நடக்கும். கங்கையில் தினமும் குளிப்பதுக்கு நிகரான புண்ணியம் இந்நாளில் இங்கு நீராடினால் கிடைக்கும் என்பது ஐதீகம். இக்கரையில் நடக்கும் காவிரி தீர்த்தவாரி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். காவிரிக்கரையில் இருக்கும் சிவன் ஆலயங்களில் இருக்கும் நந்திகளில் இரண்டு மட்டுமே மேற்கு நோக்கி இருக்கு. ஒன்று கர்நாடகாவில், மன்றொன்று இங்கொன்று. காவிரியின் நடுவே தனிச்சன்னிதியில் நந்தி பகவான் அருள்பாலிக்கிறார்.

புஷ்கரம் என்பது நதிகளுக்குண்டான விழாவாகும். புஷ்கரம்ன்னா ஆதி குருன்னும் அர்த்தம்.. குருப்பெயர்ச்சியின்போது, குருபகவான் ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்கு இடம்பெயரும்ப்போது அந்தந்த ராசிக்குரிய நதிகளில் நடைப்பெறும் விழாவே புஷ்கரமாகும்... மும்மூர்த்திகளும், முப்பத்து முக்கோடி தேவர்களும், மூவுலகில் இருக்கும் அனைத்து புண்ணிய நதிகளும் வாசம் செய்யும் இந்நாளில் நீராடுவதால் அனைத்து ஜென்மத்து பாவங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை. மகா புஷ்கர விழாவினை முன்னிட்டு செப் 12லிருந்து மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் மகா சுதர்ஷ்ண யாகம் நடத்தப்பட்டது. இந்த யாகம் செய்வதால் கண் திருஷ்டி விலகும், எதிரிகளால் உண்டாகும் தொல்லை நீங்கும்.
அன்றிலிருந்து தினம் ஒன்றாக 27 நட்சத்திரங்களை குறிக்கும் விதமாக 27 பெண்குழந்தைகளை அலங்கரித்து அமரவைத்து அவrகளுக்கு அணிவித்து உடைகள், மங்களப்பொருட்கள் கொடுத்து ஆரத்தி எடுத்து வழிபடும் கன்னிகா பூஜை உட்பட நடத்துறாங்க. எல்லாம் சரி, லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்த்தவங்க அதுக்குண்டான ஏற்பாடுகளை சரிவர செய்ய தவறிட்டாங்க. உடை மாற்ற மறைவிடம், கழிவறைன்னு செய்ய தவறிட்டாங்க. பக்தர்கள் ரொம்ப அவஸ்தைப்பட்டதை கண்கூடாக பார்க்க நேர்ந்தது. ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் சாமானியர்களை நினைவில் கொண்டு சரியா திட்டமிட கத்துக்கோங்கப்பா. .
முகநூலில் பார்த்ததும் பயந்தது....



முகநூலில் பார்த்ததும் கான்டானது....

நாலு மூலைச் சதுரப் பெட்டி, அதன் மேல் ஓடுமாம் குதிரைக் குட்டி அவர்கள் யார்?
யோசிச்சு பதில் சொல்லுங்க... ஊர் சுத்தின அலுப்பு. தூங்கிட்டு வாரேன்..

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1472005
நன்றியுடன்,
ராஜி.

Monday, August 21, 2017

மரம் மனுசனுக்கு மட்டுமே சொந்தமா?! ஐஞ்சுவை அவியல்

மாமோய்!  டிஃபன்  எடுத்து வச்சிருக்கேன். சாப்பிடுங்க. 


இதென்ன புதுப்பழக்கம்?! வா சேர்ந்து சாப்பிடலாம்..

ம்க்கும். உன்ன்ன்னாக்கூட ரொம்ப இம்சை மாமா. இன்னிக்கு திங்கக்கிழமை.. சோமவார விரதம் நான் இருப்பேங்குறது மறந்துடுச்சோ!

அட, ஆமாம்ல்ல.. மறந்துட்டேன். சரி காஃபி போட்டு தரேன். சேர்ந்து சாப்பிடலாம் வா. 

ம்ம்ம் மாமா சோமவார விரதம்ன்னா என்னன்னு உனக்கு தெரியுமா?! இந்த விரதத்தை ஏன் இருக்காங்கன்னு தெரியுமா?!

ம்ம்ம் சோமவாரம்ன்றது வார நாட்களில் திங்கட்கிழமையை குறிக்குது. பெரும்பாலும் இந்த விரதம் இருக்க ஆரம்பிக்குறவங்க கார்த்திகை மாசம் முதல் திங்கட்கிழமைதான் ஆரம்பிப்பாங்க. . ஒருவேளை அப்படி ஆரம்பிக்க வாய்ப்பு கிடைக்காதவங்க ஆவணி முதல் திங்கள்கிழமைல இருந்து ஆரம்பிக்கலாம்.. 


சிவனும், பார்வதியும் பேசிக்கிட்டிருக்கும்போது பேச்சு சோமவார விரதத்தின் பக்கம் போனது. சோமவார விரதம் இருப்பவர்கள் எனக்கு பிடித்தவர்கள். என்னிடத்தில் அவர்களுக்கு இடம்கொடுப்பேன்னு சிவன் சொல்லி விரதம் எப்படி இருக்குறதுன்னும் சிவனே பார்வதிதேவிக்கிட்ட சொல்லி இருக்கார்..  விரதம் இருப்பவர் விரதநாளில் அதிகாலையில் நீராடி தினசரி கடமைகளை முடித்து சிவபூஜை செய்யனும்.  தினமும் சிவபூஜை செய்யும் அந்தணரையும், அவரது மனைவியையும் அழைத்து அவர்களை சிவன், பார்வதிதேவியாய் நினைத்து அவர்களுக்கு முடிஞ்சளவுக்கு தானம் செய்யனும். விரதநாளில் பகல் முழுவதும் உண்ணாவிரதமிருந்து இரவு வரும்முன் ஒருவேளை மட்டும் உணவருந்தி சிவசிந்தனையோடு இருந்து வீட்டிலும் சிவபூஜை செய்யனும்.  வீட்டில் சூழ்நிலை சரியா இல்லைன்னா கோவிலுக்கு போய் அடியவர்களுக்கு அன்னதானம் செஞ்சு விரதத்தை முடிக்கனும்..  சோமவாரம் விரதம் இருப்பவர்கள் கையால் உணவு வாங்கி உண்பதும் மிக்க புண்ணியம். சோமவார விரதமிருந்து சந்திரன் சிவப்பெருமானின் தலையில் இடம்பெற்றதையும், அருந்ததி என்ற கற்புக்கரசி நட்சத்திரமானதையும்  ராஜி விரிவா பதிவு போட்டிருக்கா. போய் பாரு. குறைஞ்சது 16 வாரம் இந்த விரதம் இருக்கனும். அப்படி இருந்தா பிரிந்த தம்பதிகள் சேர்வர், குழந்தை பாக்கியம் கிட்டும். களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் நீங்கும். சகல சௌபாக்கியமும் கிட்டும்ன்றது நம்பிக்கை. 



சரி மாமா...  விரதம் பத்தியும், விரதம் இருக்க வேண்டிய முறை பத்தியும், இருந்தா என்னென்ன கிடைக்கும்ங்குறதையும் தெரிஞ்சுக்கிட்டேன். அதேமாதிரி, மரம் வெட்டுறதால என்னென்ன தீமை நடக்கும்ன்னு நிறைய படிச்சிருக்கேன், டிவி, ரேடியோவுலலாம் சொல்லி கேட்டிருந்தாலும் புரியாத எனக்கு இந்த படத்தை புரிஞ்சுக்கிட்டேன். மனசும் கனத்து போச்சு மாமா.  இனி மரம் நட்டு வளர்க்குறதுல ஆர்வம் காட்டுவேன். நீங்களும் இந்த படத்தை பாருங்க.


ஐயோ! பார்க்கும்போதே கொடுமையா இருக்கு. மரம் மனுசனுக்கு காய், பழம், காத்து, நிழல் மட்டும் கொடுக்கலை. எத்தனையோ உயிர்களின் இருப்பிடமாவும் இருக்குங்குறதை என்னிக்குதான் புரிஞ்சுக்கபோறோமோ?! ஒருத்தருக்காக எத்தனை நாள் காத்திருக்கலாம்?! ஒரு வாரம், மாசம்... இல்ல வருசம்.. ஆனா ஒருத்தர் இங்க உயிர் போறவரை காத்திருந்திருக்காராம்.. நம்புற மாதிரியாவா இருக்கு இதுலாம்?!


ம்க்கும் எல்லாத்துக்கும் கற்பூர வாசனை தெரியுமாக்கும். உன்னைலாம் கட்டிக்கிட்டு நான் படுற பாடு இருக்கே! 


இதை பார்த்து சிரிச்சுட்டு.. நான் சொல்லும் விடுகதைக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்...

மாரி இல்லாமல் ஆமைக்கெட்டது, ஆமை இல்லாமல் சீமை கெட்டது அது என்ன?!

இதுக்கு விடை யோசிக்கிட்டே இருங்க. நான் போய் பதிவு போட்டுட்டு வரேன்.

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை..


நன்றியுடன்,
ராஜி.