Showing posts with label தூயா. Show all posts
Showing posts with label தூயா. Show all posts

Thursday, July 19, 2018

நீளட்டும் உன் வெற்றிப்பாதை...

எனக்குப்பின், பல வருடங்கள் கழித்து வீட்டில் சின்னஞ்சிறு பாதம் பதியப்போகுதுன்னு  ஏகப்பட்ட எதிர்பார்ப்ப்பை மனதில் சுமந்தபடி  நானும், என் பெற்றோரும்..., வயிற்றில் குழந்தையின் அசைவை உணராமல், அருகிலிருக்கும் டாக்டர்க்கிட்ட ஓட, என்ன கடுப்பில் இருந்தாரோ டாக்டர், பாப்பா செத்து போச்சுது. நீங்க  ஸ்கேன் செய்து பார்த்துட்டு   வந்தால் ஆப்ரேஷன் செஞ்சு எடுத்துடலாம்ன்னு சொன்னதைக் கேட்டு,  அலறி அடிச்சுக்கிட்டு சி.எம்.சி ஆஸ்பிட்டலுக்கு போனதும்,  குழந்தை பூரண நலம். பனிக்குடத்தில் நீர் குறைஞ்சதால அசைவில்லை. அட்மிட் ஆகிடுங்கன்னு சொல்லி இரு நாட்கள் நார்மல் டெலிவரிக்கு காத்திருக்க, முடியாத பட்சத்தில், ஆப்ரேஷன் தியேட்டருக்கு கொண்டு போனாங்க. 
சின்ன வயசிலிருந்தே எனக்கு ஊசின்னா பயம், அதிலும் வயத்துல யாராவது ஆப்ரேசன், தழும்புன்னு பார்த்தா மயங்கிடும் ஆள் நான். விதியை நொந்துக்கிட்டு, ஆஃப்ரேஷனை எண்ணி பயந்து அழுதுக்கிட்டு இருக்கும் வேளையில், பிரசவ வலி எதுமில்லாம அஞ்சே நிமிசத்துல பிறந்தவ என் பெரிய பொண்ணு.
அன்றைய நாளைத்தவிர அவளால் நான் எதற்கும் பதறி நின்றதில்லை. அவ்வளவு பக்குவமாய் நடந்துக்குவா. என் கண்ணை பார்த்தே, என் மனசுல உள்ளதை புரிஞ்சு நடந்துப்பா. அவளின் ஒரே பார்வையில்,  என் உலகமகா கோவத்தை கரைக்கும் உத்தி தெரிந்தவள். நான் சொல்வதற்கெல்லாம் எதிர்வாதம் செய்வா. ஆனா, சொல்பேச்சை தட்டாதவ. சில சமயம் யார் அம்மா?! யார் மக?!ன்னு தெரியாத அளவுக்கு எங்க சேட்டை இருக்கும். எங்க ரெண்டு பேரையும் ஒண்ணா பார்த்தவங்க, எங்க அரட்டையை பார்த்து அம்மா, மகள்தானா?!ன்னு கேப்பாங்க. அந்த அளவுக்கு நாங்க ஃப்ரெண்ட்ஸ். 
அம்மா செல்லம்ன்னு அத்தனை பேரின் கண் பட்டதோ என்னமோ, தனது எதிர்காலத்தை தீர்மாணிக்கும் உரிமை தனக்கே என தன் அறிவுக்கும், திறமைக்கும் ஒத்து வராத பாதையை தீர்மாணிக்க, முட்டிக்கிச்சு ஆத்தாளுக்கும் மகளுக்கும் சண்டை...
பிரசவ வலியைவிட பெரிதான மனவலியை தர,  போராடி இன்னிக்கு அவள் திறமைக்கு, விருப்பத்துக்கும் ஏத்த வேலையில் பழைய பிரியங்காவாய் அம்மா செல்லமாய் புதுசா பிறந்து புதுசா வந்திருக்கா... அவ நுனி நாக்கு ஆங்கிலத்துக்கும், நினைவாற்றலுக்கும் ஐ.ஏ.எஸ் ஆக்கனும்ன்னு எனக்கு ஆசை. அவ உயரம், உடலமைப்புக்கு அட்லீஸ்ட் ஐ.பி.எஸ் ஆக்கனும்ன்னு ஆசை. 
அவ தப்பே பண்ணி இருந்தாலும், கோவமா திட்ட போறவங்களையும் பேசி சமாதானப்படுத்தும் பேச்சாற்றல் உண்டு. அதனால் வக்கீலுக்கு படிக்க வைக்கனும்ன்னு அவ அப்பாக்கு ஆசை. என் அம்மாக்கு டாக்டராக்கனும்ன்னு ஆசை. ஆனா, அவளுக்கு மீடியாதான் கனவு. அவ பேச்சாற்றலுக்கு தகுந்தபடி இன்னிக்கு ஹலோ எஃப்.எம் வேலூர் பிராஞ்சின் ரேடியோ ஜாக்கி.

நாளெல்லாம் காத்திருந்து
என் மகளாய் எனக்கு நீ பிறந்தாய்!
ஊருக்கே விருந்து வைத்து
உச்சம் குளிர நான் மகிழ்ந்தேன்.

கற்கண்டு சாதத்தோடு
அ,ஆ சொல்லித்தர..
அழகாய் பயின்று இன்று
ரேடியோ ஜாக்கியானாய்.

மெல்ல செய்யும் செல்லக்குறும்புகள்
உடனுக்குடன் கொள்ளும் பெருங்கோபம்
சொல்லுக்கடங்கா பெருஞ்செயல்கள்
புரியாமல் மறுத்து பேசும் மடத்தனம்... 

அழுது செய்யும் ஆர்ப்பாட்டங்கள்
அவ்வப்போது சில அர்ப்பணிப்புகள்
தேவையறிந்து நடக்கா பொறுப்பின்மை
ஆசையுடன் பேசும் அன்பு வார்த்தை
மொத்தத்தில் என்னின் 
மறு உருவம் நீ!!

அன்புக்கொண்ட பெரியோர்களின் அறிவுரை கேட்டு
இனிமையுடன் தொடங்கட்டும் உன் முன்னேற்றம் 
கல்லெறிபவர்கள்
எறியட்டும்.. 
நீ காய்த்துக்கொண்டே இரு. 
நீளட்டும் உன் வெற்றிப்பாதை...
ஆன்றோர்களே! சான்றோர்களே! என் சகோதர சகோதரிகளை என் மகளை வாழ்த்துங்கள் வளரட்டும், 
நன்றியுடன்,
ராஜி

Monday, July 02, 2018

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் - ஐஞ்சுவை அவியல்


இந்தா புள்ள! உனக்கு பிடிச்ச ரசகுல்லா... உனக்கு பிடிக்குமேன்னு நல்ல ஒசத்தியான கடையில் வாங்கி வந்திருக்கேன்.

எந்த கடையில் வாங்குனாலும், நல்லா இருக்குன்னு நாம சொன்னாலும், கொல்கத்தா ரசகுல்லாவுக்கு ஈடாகுமா?!  குழந்தைகள்ல இருந்து பெரியவங்க வரை விரும்பி உண்ணும் இனிப்புகளில் ஒன்றான ரசகுல்லா யாருக்கு சொந்தம்ன்னு மேற்கு வங்காளத்துக்கும்,  ஒடிசாக்கும் இடையே போட்டி நிலவி வந்தது. இந்த ரசகுல்லா கடந்த 1868ம் ஆண்டுதான் முதன்முதலா மேற்கு வங்காளத்தில்  கொல்கத்தாவில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. கொல்கத்தா நகரின் வடக்கு பகுதியை சேர்ந்தவரான நொபின் சந்திர தாஸ் என்பவர்தான் ரசகுல்லாவை அறிமுகப்படுத்தினார். பாலில் தயாரிக்கப்படும், வெள்ளை நிறத்தில் பஞ்சு போன்ற மென்மையான இந்த ரசகுல்லாவை நொபினின் வாரிசுகள் இன்றும் வடக்கு கொல்கத்தா நகரில் கடையில் விற்பனை செய்றாங்க. ஒடிசாவின் பூரி நகரில் உள்ள உலக பிரசித்தி பெற்ற ஜெகன்னாதர் கோயிலில் இறைவனுக்கு தினமும் ரசகுல்லா படைக்கப்படுது.  அதனால் ரசகுல்லா தங்களது மாநிலத்திற்கு சொந்தம்ன்னு  ஒடிசா ரசகுல்லாவுக்கு உரிமை கோரி ரசகுல்லாவிற்கான புவிசார் குறியீடு தங்களுக்கே கொடுக்கனும்ன்னு மேற்கு வங்காளத்துடன் போட்டி போட்டது.  2015ல இருந்து பிரச்னை தொடர்ந்து வந்த நிலையில் யாருக்கு புவிசார் குறியீடு சான்றிதழ் வழங்குவது என குழப்பம் நீண்டது. மேற்கு வங்காளத்தில்  2011ல மம்தா பானர்ஜி அரசு பொறுப்பேற்றபின் ரசகுல்லா, சீதாபோக் மற்றும் மிஹிதனா என மூன்று இனிப்புகளுக்கு புவிசார் குறியீடு சான்றிதழ் பெறுவதற்கு முயற்சிகள் எடுத்தார்.  தொடர் முயற்சியின் பலனாய் மேற்கு வங்காளத்திற்கு ரசகுல்லா உள்பட மூன்று இனிப்புகளுக்கு புவிசார் குறியீடு சான்றிதழ் வழங்கப்பட்டது. 
என்னதான் திருநெல்வேலி அல்வா, மணப்பாறை முறுக்கு, திருச்செந்தூர் அச்சுவெல்லம், கோவில்பட்டி வேர்கடலை உருண்டை,  ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவான்னு அந்தந்த நேட்டிவிட்டி பலகாரம் நம்மூர்ல செஞ்சாலும் அந்த ருசி வருவதில்லையே ஏன்?! மாமா

பலகாரத்தின் ருசி வெறும் மளிகை சாமானில் மட்டுமில்ல. சமைக்க பயன்படும் தண்ணி, சுற்றுச்சூழல் இதுலாம்தான் காரணம். அதுமில்லாம,பாரம்பரியமா சமைக்குறவங்களுக்குதான் எந்த பொருளை எப்ப?! எப்படி எந்த பதத்தில் சேர்க்கனும்ன்னு தெரியும். அதான் பலகாரத்தின் ருசிக்கு காரணம். 

எல்லாம் சரி, புவிசார் குறியீடுன்னா என்ன மாமா?!

புவிசார் குறியீடுன்ற வார்த்தைக்கு  Geographical indicationன்னு இங்கிலீஷ்ல சொல்வாங்க. அதை சுருக்கமா, GI  ஒரு குறிப்பிட்ட இடத்தையோ, நாட்டையோ சார்ந்த தனித்தன்மை வாய்ந்த பொருட்களுக்குன்னு கொடுக்கப்படும் குறியீடு இது. குறிப்பிட்ட உற்பத்தி பொருள் முறையாக பாரம்பரிய ரீதியில் தயாரிக்கப்பட்டதற்கும், தரத்தை காப்பதற்குமான சான்றாகக்கூட இதை எடுத்துக்கலாம். இதனால போலியான தயாரிப்புகள் உருவாவதை தடுக்க முடியும். விஞ்ஞான வளர்ச்சியில் எல்லா ஊர்களிலும் எல்லாத்தையும் தயாரிக்கமுடியும். ஆனா, ஒவ்வோரு ஊருக்குன்னு ஒரு ஷ்பெஷல் இருக்கும்ல அதை வேற எங்கயும் தயாரிக்கமுடியாது. தயாரிக்க கூடாது. இந்த குறியீடு இருந்தால் போலிகளின் வரவை தடுக்கலாம்.  உற்பத்தியாளர்களுக்கு நல்ல விலை கிடைக்கும், இந்த குறியீடு இருந்தால் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும்போது, விலையை நாமளே நிர்ணயிக்க முடியும்.

புவிசார் குறியீடுன்னா என்னன்னு தெரிஞ்சுக்கிட்டேன். சனிக்கிழமை பதிவுல  நம்ப   பாலசுப்ரமணியன் அப்பா  கன்னா, பின்னா, மன்னா, தென்னான்னு என்னவோ கன்னா, பின்னான்னு எழுதி இருந்தார். அது என்னது மாமா?! 

அதுவா?! குலோத்துங்க சோழன்   தமிழார்வம் கொண்டவன், சிறந்த கொடையாளி.  ரொம்ப வறுமையில் வாழ்ந்து வந்த விறகுவெட்டி ஒருவனின் மனைவி, எத்தனை நாளைக்குதான் நாம இப்படி வறுமையில் இருக்குறது?! அதனால,  அரசனை புகழ்ந்து பாடி பரிசு வாங்கி வாங்கன்னு டார்ச்சர் பண்ணா.   படிப்பு வாசனை இல்லாத அவன், என்ன எழுதுறதுன்னு தெரியாம முழி பிதுங்கி காட்டு வழியா போய்க்கிட்டு இருந்தான். அப்ப காக்கா, கா.. கா..ன்னு கத்துச்சு.. உடனே அதையே  "காவெனக் கரைவதும்" அப்படின்னு எழுதிகிட்டான்.. இன்னும் கொஞ்சம் தூரம் போனா ஒரு குயிலு. கூன்னு கூவிகிட்டு இருந்ததா அதைக் கேட்டதும் "கூவெனக் கூவுவதும்" ன்னு எழுதிக் கிட்டான். அப்படியே கால் போன போக்கில போனா,  அங்க பெருமாள் கோயில் இருந்தது, அங்க பிரசாதத்துக்கு ஒரு பெருச்சாளி வந்தது.. அந்தக் கோயில் பூசாரி அடங்கொப்பன் கோயில் பெருச்சாளின்னு ஒரு கல்லைத் தூக்கிப் போட "உங்கப்பன் கோவில் பெருச்சாளி"ன்னு எழுதிகிட்டான். அப்புறம் அந்த ஊரில் இருந்த தன்னோட நண்பனைப் போய்ப் பார்த்தான். அந்த நண்பன்கிட்ட தன் கதையைச் சொல்ல "கன்னா பின்னா தென்னா மன்னா" ன்னு எதையாவது எழுதிகிட்டுப் போ அப்படின்னு அவன் நக்கலாச் சொன்னான்.. அதையும் எழுதிகிட்டு அவன் வீட்டுக்கு வரும்பொழுது அரசவையில் இருக்கும்  புலவர்  ஒருத்தர் வந்தார். அவர்கிட்ட மூணுவரியையும் காட்டி இப்படி ஒரு கவிதை எழுதி இருக்கேன்னு சொன்னான். அவர் பார்த்துட்டு இரண்டாமடியில் இன்னொரு வார்த்தை வேணும் "தான" அப்படின்னு சேர்த்துக்கோ.. அப்புறம் நாலடி இருக்கணும் அதனால சோழரங்கப் பெருமானே அப்படின்னு எழுதிக்கோன்னு சொல்லிட்டு போயிட்டார்.

காவெனக் கரவதும் கூவெனக் கூவுவதும் 
உங்கப்பன் கோவில் பெருச்சாளி - தானக்
கன்னா பின்னா தென்னா மன்னா
சோழரங்கப் பெருமானே!ன்னு பாடினான். 
அவன்  பாடி முடிச்சதும், அரசவையில் ஏளன சிரிப்பு எழுந்தது. மன்னனும் கூடவே சேர்ந்து சிரிச்சான். விறகு வெட்டி வீட்டுக்கு போன புலவர், அமைதின்னு சொல்லி, அரசவையை பார்த்து , விறகுவெட்டி பாடிய பாடலின் அர்த்தம் புரியாம சிரிக்காதீங்கன்னு சொல்லி,  அந்த பாடலுக்கு விளக்கம் சொன்னார். 
காவெனக் கரைவதும் எங்களை  நீங்கள்தான் காப்பற்ற (ஆள) வேண்டும் என்று மக்கள் அழைப்பதும், கூவெனக் கூவுவதும் அதை மறுக்கக் கூடாது ஒப்புக்கொள்வதாகக் கூறுங்கள் கூறுங்கள் எனக் மக்கள் ஆர்பாட்டம் செய்வதும், உங்கப்பன் கோ வில் பெரு சாளி - அதாவது உன் தந்தையாகிய, பெரிய அரசன் வில் வித்தையில் பெரிய சிங்கம் போன்ற வீரமுள்ளவரைப் பார்த்து, அதாவது மக்கள் மிகப்பெரிய வில்வீரனான உன் தந்தையை வேண்டி, தங்களை ஆண்டு வாழவைக்க வேண்டும் என விருப்பத்துடன் ஆட்சியில் அமர்த்தினர். 

தானக் கன்னா - தானத்தில் மிகச்சிறந்த கர்ணனே,
பின்னா - அவனுக்குப் பின் பிறந்த நீதி வழுவாத தர்மனே,
தென்னா - தென்னாட்டை ஆளுபவனே,
மன்னா - எங்கள் மன்னனே
சோழரங்கப்பெருமானே - இவ்வளவும் சொல்லி இப்பாடல் சோழ மன்னனுக்கு எழுதப்பட்ட பாடல் எனபதையும் சொல்லி இருக்கிறார் எனச் சொல்ல எல்லாரும் மறுப்பேச்சு பேசாமல் அந்த பாடலை சிறந்த பாடலென கூற, மன்னனும் பரிசுகளை அள்ளிக்கொடுத்தார். 
விறகு வெட்டியின்  கிறுக்கலுக்கும்கூட சிறந்த அர்த்தம் சொல்லி பரிசுகளை பெற்றுத்தந்தவர் தமிழ்புலவராம் கம்பர்தான்.  கம்பன் வீட்டு கட்டுத்தறியே பாட்டு பாடும்போது, விறகு வெட்டி பாட்டுக்கா அர்த்தம் கொடுக்க வைக்க முடியாது?!

போதும் பதிவு ரொம்ப நீண்டு போரடிச்சுடும். இத்தோடு பேச்சை நிறுத்திக்கலாம் புள்ள.

என்கிட்ட பேச்சை நிறுத்திக்குறதுன்னா உனக்கு வெல்லமாச்சுதே!
இப்படியே போய்க்கிட்டு இருந்தா கடைசி காலத்துல நம்ம நிலைமை இப்படிதான் ஆகப்போகுது பார்த்துக்க... 

என் ஃப்ரெண்ட் ராஜி இருக்காளே! அவ பொண்ணு க.பிரியங்கா,  ஹலோ எஃப்.எம் வேலூர் கிளையில் ஆர்.ஜேவா செலக்ட் ஆகி இருக்கா. நேத்து (1/7/2018)ல இருந்து வேலூர்ல ஹலோ எஃப்.எம் தனது ஒலிப்பரப்பை துவக்கி இருக்கு

91.5 அலைவரிசையில் காலை 7 முதல் 8 மணிவரை, சில்லுன்னு ஒரு காலை. நிகழ்ச்சியும், மதியம் 2 முதல் 4மணி வரை, மேட்னி மெலோடீஸ்ன்னும் நிகழ்ச்சியை என்ற பொண்ணு நேரலை நிகழ்ச்சியை வழங்குறாங்க.. வேலூர் சுத்து வட்டாரத்தில் 50கிமீ கேட்கும்.
 நிகழ்ச்சியில் கலந்துக்க நினைக்குறவங்க  0416 - 660 66 66. இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க.  வாய்ப்பு கிடைக்குறவங்க நிகழ்ச்சியை கேட்டுட்டு, நிறை குறைகளை சொல்லுங்க. 
வாழ்த்துங்கள் வளரட்டும்.
நன்றியுடன்,
ராஜி

Wednesday, July 19, 2017

மூத்த மகளை என்ன சொல்லி வாழ்த்த?!

தூயா பிறந்து 20 நாட்களில் என் உறவினர் வீட்டு கல்யாணத்திற்கு போனபோது எடுத்த படம்.  என் அப்பாக்கு தெரிந்ததும் ஃபோட்டோ எடுத்தா ஆயுசு குறைவு, அதுலயும் குழந்தை தூங்கும்போது எடுத்திருக்கியே!! அறிவில்லையா உனக்குன்னு புலம்பித் தீர்த்துட்டாரு.

20 வருசங்கழிச்சு எனக்கப்புறம் பிறந்த குழந்தைன்றதால மேடம்க்கு ரொம்ப மரியாதை, கவனிப்பு. அவ இருக்கும் இடத்தில் ஃபேன் ஓடிட்டே இருக்கனும். எப்பவாவது கரண்ட் நின்னுட்டா ஆள் மாத்தி ஆள் விசிறிக்கிட்டே இருப்போம். தன்னோட எட்டாவது மாசத்தில் என் ஃப்ரெண்ட் கல்யாணத்தின் போது... வேர்த்துக் கொட்டி கசகசன்னு இருக்குன்னு என் அம்மாக்கிட்ட சொல்லுது..,


முதல் பிறந்த நாளின் போது.., வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் தன் அப்பாவோடு...,  மேடம் அப்பதான் நடக்க ஆரம்பிச்சாங்க. அதனால, ஒரு நிமிசம் கூட நிக்காம ஓடிட்டே இருப்பாங்க. இந்த ஃபோட்டோவை நான் எடுக்கப் பட்டப் பாடு இருக்கே! ஸ் அபா!

 ஒரு சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் போது, அவ அப்பா சட்டையில் குத்தியிருந்த தேசியக்கொடியை பார்த்து தனக்கும் வேணுமின்னு அடம்பிடிச்சு தன் மார்பில் குத்திக்கிட்டா. எனக்குதான் குண்டூசி குத்திடுமோன்னு பயம்.

பேத்தியை ஈ, எறும்பு மொய்த்தால்கூட கலங்கும் என் அப்பா, காது குத்தி வலியில் அழும்போதும் சிரித்தப்படி.. பெரியவ பொறந்த சமயத்துல என் அப்பாவோட பங்காளி வீட்டுல யாரோ இறந்துட்டாங்க. அதனால,  அவ பேர் சூட்டும்போது புது துணியும், தங்கமும் சீர் செய்யக்கூடாது. குழந்தையோட மூணாவது மாசம் செய்தால் போதும்ன்னு என் மாமியார் சொல்லிட்டாங்க. முதல் பேத்தி கழுத்துல எதுமில்லாதது என் அப்பா கண்ணை உறுத்த, புதுசுதானே போடக்கூடாதுன்னு, என் அம்மா தாலிக்கொடியிலிருந்த கால்காசை எடுத்து ஒரு சிவப்பு கலர் கயிறில் கோர்த்து பாப்பா கழுத்தில் போட்டுவிட்டார்.

மூணாவது மாசம் கொலுசு, மோதிரம், செயின்லாம் போட்ட பிறகு, அந்த சிவப்பு கயிற்றை கழட்டி பீரோ லாக்கர்ல வச்சுக்கிட்டார். நான் என் வீட்டுக்குப் போனப்பின், பேத்தி நினைவு வரும்போதெல்லாம் அந்தக் கயிற்றை வாசம் பிடிச்சுப்பார். குழந்தைக்குண்டான வாசனை, சோப்பு, பவுடர், பாப்பாவோட வேர்வைலாம் சேர்ந்து கலவையா ஒரு வாசனை அந்தக் கயிற்றில் இருக்கும். அதைத்தான் வாசம் பிடிப்பார். ரொம்ப நாளாய் இருந்துச்சு. வீடு மாத்தும்போது அந்தக் கயிறு மிஸ்ஸிங். அதுக்கு எனக்கும், என் அம்மாவுக்கும் விழுந்த டோஸ் இருக்கே! அப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா அதை சொல்லி மாளாது.


அக்காவும், தங்கையும் எப்பவும் திக் ஃப்ரெண்ட்ஸ். ஒண்ணை ஒண்ணு பிரியாது. அவங்களுக்குள் எதும் மறைச்சுக்கவும் மாட்டாங்க. அவங்க இருவர் உலகத்துக்குள்ளும் என்னாலயே நுழைய முடியாது.

தூயாக்கு தம்பின்னா கொள்ளை இஷ்டம்..., ஆனா, அப்புதான் அக்காவோடு மல்லுக் கட்டுவான் காரணம் அவனுக்கு அவள்மீது கொள்ளை அன்பு மட்டுமல்ல. எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்குவா. சின்ன அக்கா மாதிரி திருப்பி அடிக்காத காரணமும்கூட..., ஆனா இப்ப எலியும் பூனையும் போல....


விளையாட்டு பிள்ளையாய் இத்தனை காலம் கடத்தினாய்...... போனது போகட்டும்... இனியாவது பொறுப்பான பெண்ணாய் அப்பாவுக்கும், தாத்தா, பாட்டி, சுற்றத்தார் மெச்ச வாழனும்ன்னு வைராக்கியம் கொண்டு அதன்படி செல்..... 

நன்றியுடன், 
ராஜி. 

Saturday, July 19, 2014

முதன் முதலாய் அன்னையென பட்டம் தந்தவளின் பிறந்த நாள் இன்று!!

தூயா பிறந்து 20 நாட்களில் என் உறவினர் வீட்டு கல்யாணத்திற்கு போனபோது எடுத்த படம்.  என் அப்பாக்கு தெரிந்ததும் ஃபோட்டோ எடுத்தா ஆயுசு குறைவு, அதுலயும் குழந்தை தூங்கும்போது எடுத்திருக்கியே!! அறிவில்லையா உனக்குன்னு புலம்பித் தீர்த்துட்டாரு.

20 வருசங்கழிச்சு எனக்கப்புறம் பிறந்த குழந்தைன்றதால மேடம்க்கு ரொம்ப மரியாதை, கவனிப்பு. அவ இருக்கும் இடத்தில் ஃபேன் ஓடிட்டே இருக்கனும். எப்பவாவது கரண்ட் நின்னுட்டா ஆள் மாத்தி ஆள் விசிறிக்கிட்டே இருப்போம். தன்னோட எட்டாவது மாசத்தில் என் ஃப்ரெண்ட் கல்யாணத்தின் போது... வேர்த்துக் கொட்டி கசகசன்னு இருக்குன்னு என் அம்மாக்கிட்ட சொல்லுது..,


முதல் பிறந்த நாளின் போது.., வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் தன் அப்பாவோடு...,  மேடம் அப்பதான் நடக்க ஆரம்பிச்சாங்க. அதனால, ஒரு நிமிசம் கூட நிக்காம ஓடிட்டே இருப்பாங்க. இந்த ஃபோட்டோவை நான் எடுக்கப் பட்டப் பாடு இருக்கே! ஸ் அபா!

 ஒரு சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் போது, அவ அப்பா சட்டையில் குத்தியிருந்த தேசியக்கொடியை பார்த்து தனக்கும் வேணுமின்னு அடம்பிடிச்சு தன் மார்பில் குத்திக்கிட்டா. எனக்குதான் குண்டூசி குத்திடுமோன்னு பயம்.

பேத்தியை ஈ, எறும்பு மொய்த்தால்கூட கலங்கும் என் அப்பா, காது குத்தி வலியில் அழும்போதும் சிரித்தப்படி.. பெரியவ பொறந்த சமயத்துல என் அப்பாவோட பங்காளி வீட்டுல யாரோ இறந்துட்டாங்க. அதனால,  அவ பேர் சூட்டும்போது புது துணியும், தங்கமும் சீர் செய்யக்கூடாது. குழந்தையோட மூணாவது மாசம் செய்தால் போதும்ன்னு என் மாமியார் சொல்லிட்டாங்க. முதல் பேத்தி கழுத்துல எதுமில்லாதது என் அப்பா கண்ணை உறுத்த, புதுசுதானே போடக்கூடாதுன்னு, என் அம்மா தாலிக்கொடியிலிருந்த கால்காசை எடுத்து ஒரு சிவப்பு கலர் கயிறில் கோர்த்து பாப்பா கழுத்தில் போட்டுவிட்டார்.

மூணாவது மாசம் கொலுசு, மோதிரம், செயின்லாம் போட்ட பிறகு, அந்த சிவப்பு கயிற்றை கழட்டி பீரோ லாக்கர்ல வச்சுக்கிட்டார். நான் என் வீட்டுக்குப் போனப்பின், பேத்தி நினைவு வரும்போதெல்லாம் அந்தக் கயிற்றை வாசம் பிடிச்சுப்பார். குழந்தைக்குண்டான வாசனை, சோப்பு, பவுடர், பாப்பாவோட வேர்வைலாம் சேர்ந்து கலவையா ஒரு வாசனை அந்தக் கயிற்றில் இருக்கும். அதைத்தான் வாசம் பிடிப்பார். ரொம்ப நாளாய் இருந்துச்சு. வீடு மாத்தும்போது அந்தக் கயிறு மிஸ்ஸிங். அதுக்கு எனக்கும், என் அம்மாவுக்கும் விழுந்த டோஸ் இருக்கே! அப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா அதை சொல்லி மாளாது.


அக்காவும், தங்கையும் எப்பவும் திக் ஃப்ரெண்ட்ஸ். ஒண்ணை ஒண்ணு பிரியாது. அவங்களுக்குள் எதும் மறைச்சுக்கவும் மாட்டாங்க. அவங்க இருவர் உலகத்துக்குள்ளும் என்னாலயே நுழைய முடியாது.

தூயாக்கு தம்பின்னா கொள்ளை இஷ்டம்..., ஆனா, அப்புதான் அக்காவோடு மல்லுக் கட்டுவான் காரணம் அவனுக்கு அவள்மீது கொள்ளை அன்பு மட்டுமல்ல. எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்குவா. சின்ன அக்கா மாதிரி திருப்பி அடிக்காத காரணமும்கூட...,
முதல் மகளாய் பிறந்தாய்
முதன்முதலாய் “அம்மா”வென்னும்
புதுப்பட்டம் பெற்றேன் உன்னால்...,
அன்றையத் தினத்தை
நினைத்துப் பார்க்கிறேன்...,
ஆடிமாதம், முற்காலை வேளையில்
வெண்துகிலுக்கிடையில்
சிவப்பு ரோஜாவான உன்னைக் கண்டதும்..,
வலியும், சோர்வும், மயக்ககடலில்
இருந்த எனக்கு சிறந்த களைப்பாறல்!!

சின்னஞ்சிறு பொன்மலர்,
செம்பவழ வாய், வெள்ளிக்காசின்
இரைச்சலாய் உன் அழுகை, இதுவரை
பழகியிறாமலே ஆராரோ பாடியது
மனமும்.., வாயும்...,

பேர் வைக்கும் நாளன்று.., 
பட்டுத்துணி விரிப்பில்
தங்கம் போல் ஜொலித்த உன்னைக் 
கண்டு பொன்னே வெட்கியது!!
உறவினர்கள் தேன் தடவி வாழ்த்த...,
எனக்கோ பூரிப்போடு கவலையும்!!!!
எவர் கண்படுமோவென்று!!!

”ங்கா” பேசி மயக்கிய நீ
“அம்மா”வென அழைத்து
என்னை உன் சேவகி ஆக்கிவிட்டாய்!!
கவிழ்தல், முட்டிப்போடுதல்
நடைப்பயில்தல், உண்ணுதல்
போன்ற இயல்பான விசயங்களுக்குக் கூட
சிறகடித்துப் பறந்தேன்.

காலண்டர் படி பத்தொன்பது முடிந்து,
 இருபதாம் வயதாம் உனக்கு!!
ஆனால், முதள் நாள் கண்டு பூரித்த,
அதே குழந்தைதான்  இன்றும் நீ எனக்கு!!
நாளாக, நாளாக
வயது மட்டும்
கூடினால் நலமா!?
இனி, கழியும் ஒவ்வொரு நாளும்
உன் சரித்திரத்தில் நன்னாளாய்
பொரிக்கப்பட வேண்டும்...,

போட்டாப் போட்டி, பொறாமை,
சூது, சண்டைகள்லாம் பொதுவாய் உள்ள உலகில்,
போராட..., மனவலிமை, முயற்சி, உழைப்பு
மட்டும் போதாதம்மா!!
சோர்வு தரா, உடல்வலிமையும்
வேண்டுமென நினைவுக் கொள்.

பருவத்துக்கே உண்டான குறும்பு, துடுக்குத்தனம்,
வேண்டாத ஆசைகளை நீக்கி
விடாமுயற்சியோடு, பயிற்சியும்
எந்நாளும் தொடர்ந்தால் எழுச்சி
காண்பாய். எழுச்சியோடு...,
வேகமும், விவேகமும் 
சேர்ந்தால் “வளர்ச்சி” கைக்கூடும்.
வளர்ச்சியினால் எந்நாளும் உன்வாழ்வில்
மலர்ச்சி உண்டாகும்.

உன் வாழ்வில் என்றும் மாறா மலர்ச்சி 
உண்டானால்......, உனை
நினைந்துருகும்
தாய் மனசு குளிர்ந்து

பார் போற்ற வாழ்ந்திடுவாய்.
அந்நிலையில்  உன்னைக்
காணுகின்ற நாளில் 
உன் அன்னையின் துயரம் 
மறந்தல்ல.. பறந்தே போகும்!!

Thursday, December 05, 2013

நூறாண்டு காலம் வாழ்க!! நோய் நொடி இல்லாம வளர்க!!

நண்பர்களின் வேண்டுதல், உறவுகளின் அலட்சியம் தாண்டி இரண்டு பெண் பிள்ளைகளுக்குப் பின் கடவுள் அருளால் பிறந்த ஆண்பிள்ளை. 6.12.1999 அன்னிக்கு அவன் பிறந்தப்போ ஹஸ்பிட்டலே அல்லோகலப்பட்டது என் அப்பாவின் சந்தோஷத்தால்!! அப்பா, அம்மா, நண்பர்கள் வேண்டுதலுக்காக திருச்செந்தூர் தொடங்கி, திருப்பதி வரை நேர்த்திக் கடன் செய்தே ஓய்ந்துப்போனோம். இன்னமும் சில வேண்டுதல் நிறைவேத்தலை!!


(தன் தம்பிக்காக தூயா ஆர்டர் செய்த கேக்)

அக்காக்களுக்கு அவன் செல்லம், நான் கூட சில சமயம் கோவம் வந்து அடிச்சுடுவேன். ஆனா, பெரியவ அவனை தாங்குவா! ஆனா, என்னதான் மனசுக்குள் பாசம் இருந்தாலும், சின்னவ தன் தம்பியோடு சண்டைப் போடுவா!

(அப்புக்காக கேக் ரெடி!!)
அக்காக்களோடு சண்டைப் போட்டாலும் அளவுக்கடந்த பாசம் வச்சிருக்கான். வெளியே எங்காவது போகும்போது, பெரிய மனுசன் போல அவங்க அக்காக்களை பாத்துப்பான். அவங்களுக்கு உடம்புக்கு முடியாட்டி சாமிக்கிட்ட வேண்டிப்பான். பெரியவளுக்கு உடம்புக்கு ரொம்ப முடியாம ஹாஸ்பிட்டலில் இருந்தப்போ 3 கோவிலுக்கு நேர்ந்துக்கிட்டு மொட்டை அடிச்சுக்கிட்டான்.
தன் தம்பிக்கு ஆசையாய் ட்ரெஸ் வாங்கி வந்தா பெரியவ, உன் இஷ்டத்துக்கு ட்ரெஸ் வாங்கி வந்தா நான் போட்டுக்கனுமா!?ன்னு சண்டை போட்டு ஸ்கூல் யூனிஃபார்ம்லயே கேக் வெட்டியாச்சு!! ஆனா, ஹோட்டலுக்கு போகும்போது மட்டும் புது ட்ரெஸ்ல! டேய் அப்பு! உன்னை புரிஞ்சுக்க தனியா எனக்கொரு மூளை வேணும் போல!!

தாத்தா, பாட்டி செல்லம். ஆனா, தாத்தாக்கிட்ட எப்பவும் சண்டை போடுவான். சின்ன சின்ன எலக்ட்ரிக் வேலை நல்லா செய்வான்.  கடைக்கு போறதுன்னு பொறுப்பா நடந்துப்பான். வீட்டுல எல்லார்க்கிட்டயும், எப்பவும் சண்டை போட்டுக்கிட்டே இருப்பான். ஆனா, வெளில போய்ட்டாலோ பொட்டி பாம்பாகிடுவான். ஒருவேளை அங்கயே விட்டுட்டு வந்துட்டா என்ன செய்யுறதுன்னு நினைக்குறானோ என்னமோ!! 

(பெரிய அக்கா தன் சம்பாத்தியத்தில் பொம்மை, கேக், ட்ரெஸ் வாங்கித்தர, சின்ன அக்கா தான் சேர்த்து வச்ச காசுல flair பேனா வாங்கி தந்தாள்)

ஒருநாள் நைட் எல்லோரும் சாப்பிட்டுக்கிட்டு இருக்கும்போது, தூயா! உனக்கு 23 வயசாகும்போது மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் செஞ்சுடனும். அதுதான் பெண்களுக்கு கல்யாணத்துக்கு சரியான வயசு. அங்கிருந்து 4 வருசம் கழிச்சு இனியாக்கு கல்யாணம் பண்ணனும். ஏன்னா, உனக்கும், பாப்பாக்கும் 4 வருசம் இடைவெளி, அதனாலயும், 4 வருசத்துல உன் கல்யாணத்துக்கு செஞ்ச செலவுலாம் அப்பாவல ஈடுக்கட்டி, பாப்பா கல்யாணத்துக்கு காசு சேர்க்க  முடியும்.

அங்க இருந்து நாலு வருசம் கழிச்சு தம்பிக்கு கல்யாணம் கட்டி வச்சுட்டா, எங்க கடமைலாம் தீர்ந்துடும்ன்னு சொன்னேன். உடனே..., அப்பு, 

இரு, இரு, தூயாக்கும், இனியாக்கும் 4 வருசம் கேப் அதனால நாலு வருசம் கழிச்சு கல்யாணம் பண்றே. அது ஓக்கே. எனக்கும் இனியாக்கும் 2 வயசுதானே வித்தியாசம்!! நீ ஏன் நாலு வருசம் கழிச்சு கல்யாணம் பண்ணுவேன்னு சொல்றே! உன் பொண்ணுங்களுக்கு ஒரு நியாயம். எனக்கு ஒரு நியாயமா!?ன்னு கேட்டான். நிஜமாவே பதில் சொல்ல முடியல :-(
(தூயா தன் தம்பிக்கு கிஃப்டா தந்த பொம்மை...,)

வீட்டுல அடங்கி உக்காந்து படிக்க மாட்டான். ஆனா, மார்க் மட்டும் சுளையா o grade ல வந்து நிக்கும். ஆனா, அவன் கையெழுத்து, டாக்டர்களுக்கு கூட புரியாது.அப்படி இருக்கும். என்ன எழுதி இருக்கான்னு புரியாமயே மார்க் போட்டுடுறாங்க அவன் டீச்சர்ன்னு சின்ன பொண்ணு கிண்டலடிக்கும். கிராஃப்ட், சயின்ஸ் மினியேச்சர் செய்யுறதுல படு கெட்டி.  சாதாரண அட்டைல செஞ்ச ஃபேன், சோலார் ப்ளேட்னால ஓடும் கார்ன்னு அவன் செய்யும் பட்டியல் நீளும்..,

(ஹோட்டல்ல சின்னதா ஒரு பார்ட்டி)

,ஒரு ஐஸ்கட்டியைப் போல!!
மெல்ல மெல்ல என்னை உருக 
,வைத்துக்கொண்டிருக்கிறது,
என் மடியினில் உறங்கும் இந்த
குட்டி சூரியன்.


தொட்டால் உறக்கம் தெளிந்திடுமென
கரங்களால் தீண்டாமல்
கண்களால் வருடிக் கொண்டிருக்கிறேன்
அவன் அழகை!!

நரி பயங்காட்டியதோ!
இல்லை எறும்பு கடித்ததோ!
”அழுதுடுவேன்”ன்னு என்னைப்
பயங்காட்டிக் கொண்டிருக்கிறான்!!

வேதனை நீங்கி, புன்சிரிப்பொன்று
அவன் இதழில்.
நடிகர் திலகம் போல நொடிக்கொரு
பாவம் அவன் முகத்தில்!!

பிள்ளை வாசம் உணர
அவனை உச்சி மோர்கையில்
அவன் உயிர் சுவாசம், என் சுவாசக் கூட்டில்
இடம் மாறுகிறது!!

குட்டி தாமரை உருக்கொண்ட 
வயிற்றை தொட்டு தடவிப் பார்க்கிறேன்!
எந்த மொழி வார்த்தையாலும், என்
பூரிப்பையும், அவன் மீதான
என் பாசத்தையும் விளங்க வைக்க முடியாது!!

காதல், காமம், வேலை,
சம்பாத்தியம், குடும்பப்பொறுப்பு
என எந்தக் கவலையுமில்லாமல்
உறக்கம் அவன் விழிகளில்!!

அவன் உறங்கட்டும்!
ஆணுக்குண்டான பொறுப்புகள் 
அவனை உறங்க விடாமல் 
செய்யலாம்!

அதனால், இப்பவே உறங்கி, சக்தியை 
சேமித்துக் கொள்ளட்டும்.
தன் முதுகில் நீர் சுமக்கும்
ஒரு ஒட்டகத்தைப் போல!

டிஸ்கி: நாளைக்குதான் அவன் பிறந்த நாள். ஆனா, அவன் அக்காக்கு நாளைக்கு லீவ் கிடைக்காததால் ரெண்டு நாள் முன்னமயே நேத்தே கொண்டாடியாச்சு!!  




Friday, November 01, 2013

நினைவில் நின்ற தீபாவளிகள்

நம்ம வாழ்நாளில் எத்தனையோ தீபாவளியை கொண்டாடி இருப்போம். இருந்தாலும் ஒரு சில தீபாவளிகள் நம் மனசை விட்டு போகவே போகாது. அப்படி என் மனசில் நின்ன தீபாவளிகள் சில.....,
 கசப்பு தீபாவளி: எனக்கு நினைவு தெரிஞ்ச முதல் தீபாவளி.., என் அத்தையின் தலை தீபாவளிதான். பாட்டியால தனியா சமாளிக்க முடியாதுன்னு நாங்க எங்க அப்பாவோட சொந்த கிராமத்து வீட்டுக்கு போயிருந்தோம். அப்பாவுக்கு ஆண் பிள்ளை இல்லாத காரணத்தால, அப்பா சம்பாத்தியம் மொத்தம் எனக்குதானேன்னு அத்தைக்கு பொருமல் கொஞ்சம். அதனால, என்னை பிடிக்காது. மாமா பட்டாசுகள் நிறைய வாங்கி வந்திருந்தார். சின்ன பிள்ளைதானே! பட்டாசை பார்த்ததும் ஆசை ஆசையாய் கிட்டக்க போனதும், மாமா துப்பாக்கியும், ரோல் கேப்பும் கொடுக்க பட்டாசு வெடிக்க ஆரம்பிச்சேன். இதப் பார்த்த அத்தை, கோவமா என் முதுகுல பட்டாசு வெடிச்சு தலை தீபாவளி கொண்டாடினாங்க. நினைவில் நின்ன முதல் தீபாவளியே கசப்பான தீபாவளியா மாறிடுச்சு.
ஆரம்ப தீபாவளி:  மத்தாப்பு, கம்பி, ஜாட்டி, பாம்பு மாத்திரை, சங்கு சக்கரம், பொட்டு வெடி, கேப், புஸ்வானம்ன்னு வெடிக்காத பட்டாசுகளை மட்டும் வாங்கி வந்ததுமில்லாம,  அதையும் என் கூடவே இருந்து வெடிக்க வச்ச தீபாவளி. பொட்டு வெடியும், கேப் ரோல் வெடிக்க மட்டும் ஃபுல் சுதந்திரம் தந்தார். வீட்டு வேலை டென்சன், கள்ளம் கபடுலாம் இல்லாம கொண்டான தீபாவளி.
தாவணி போட்ட தீபாவளி: அப்பாக்கிட்ட அடம்பிடிச்சு வாங்கிய புத்தம் புது பட்டு பாவாடையில் கொண்டாடிய தீபாவளி. என்னை வளர்த்த பக்கத்து வீட்டு அண்ணா வாங்கி தந்த லட்சுமி வெடி, யானை வெடி, அணுகுண்டு, பாய் பட்டாசுன்னு சொல்லும் லோக்கல்ல தயாரிச்ச பட்டாசுன்னு பெரிய பெரிய வெடிகளை பரிசாய் வாங்கிய தீபாவளி. டிவில பட்டாசு சுட்டு சுட்டு போடட்டுமா!? பாட்டும்..., நான் சிரித்தால் தீபாவளி பாட்டையும் கேட்டுக்கிட்டே பெரிய ஹீரோயின் போல தெருவுல போக வர இருக்கும் எங்க தெரு ஹீரோக்கள் முன்னாடி சீன் போட்ட தீபாவளி.

 தலை தீபாவளி: தாலி சரடின் மஞ்சள் மறையாமயும், முகத்துல கல்யாண களை போகும் முன்னே எங்களுக்கு தலை தீபாவளி. பொண்ணுக்கு பட்டு புடவையா?! சாதாரண சேலையா!? மாப்பிள்ளைக்கு பிரேஸ்லெட்டா!?மோதிரமா? எண்ணெய் தேய்க்க கல்யாண மனையை ஆர்டர் செய்து புதுசு வாங்கலாமா!? இல்ல பழசே போதுமான்னு பட்டி மன்றம் நடத்தாத குறையாய் பார்த்து பார்த்து எல்லாம் செய்யும் அம்மா, அப்பவோடு, தெருவே எங்களுக்காக காத்திருக்க..., எல்லோரையும் பார்க்க இருக்கும் கண்கள் போதாதுன்னு மெட்ராஸ் ஐயை வாங்கிட்டு வந்த என்னவரோடு தலைக்கு எண்ணெய் வைக்காமயே கொண்டாடிய தீபாவளி.
தூயாவின் முதல் தீபாவளி:  இருபது வருசத்துக்கப்புறம் எங்க வீட்டுக்கு புது வரவு. எங்கயோ யார் வீட்டுலயோ கதவை ஓங்கி சாத்தின சத்தம் கேட்டால் கூட அலறி அழுவா. அதனால, என் பாப்பாவுக்காக அக்கம் பக்கம் நாலு வீட்டுக்காரங்களும் வெடி வெடிக்காம சத்தம் வராத பட்டாசுகளை கொளுத்தி பத்தியம் இருந்து பாசத்தை காட்டிய தீபாவளி.


இனியாவின் தீபாவளி: அம்மாவை போலவே தைரியமான குட்டி பாப்பா இனியா. ஒன்பது மாசத்துலயே அம்மாவோடு சேர்ந்து மேடம் மத்தாப்பு கம்பியை பிடிச்சவங்க. பட்டாசு புகை பாப்பாக்கு ஆகாதுன்னு தாத்தா சொன்னதால அமைதியா தூரமா இருந்து பட்டாசுகளை பார்த்தும், கேட்டும் ரசிச்சாங்க.
ஓட்ட தீபாவளி: அப்புக்கு 4 வயசு. பாம்பை கையால் பிடிக்கும் புரியா வயசு. அக்காக்கள் போல பட்டாசை நானே கொளுத்துவேன்னு அடமா நின்னு தீபாவளியை கொண்டாடினவன். சங்கு சக்கரம் கொளுத்த.., பக்கத்துல இருக்கும் மத்தாப்பு பெட்டியை எடுக்க போய்.., சங்கு சக்கரத்தின் சீறும் நெருப்பு பட்டு மத்தாப்பு பெட்டி தீப்பிடிக்க கையில் தீக்காயம் பட்டு கதறி துடிக்க தூக்கிண்டு ஹாஸ்பிட்டல் ஓடிய தீபாவளி. என்னிக்கும் இது மறக்க கூடாதுன்னு அவன் கயில் இன்னமும் தழும்பு.

ஏக்க தீபாவளி: அப்பா, அம்மாவோடு கூட்டாய் இருந்து அம்மா கையால எண்ணெய் தேய்த்து, அப்பா கையால நூறு ரூபாய் வாங்கிய தீபாவளி. அம்மா, அப்பா, குடும்பம்ன்னு கொண்டாடிய குதூகல தீபாவளி. கடைக்கு போகனும், பலகாரம் சுடனும்ன்னு பொறுப்பில்லாம எல்லாமே என் அப்பா அம்மா பார்த்துக்குவாங்கன்னு கொண்டாடிய தீபாவளி. இனி வருமா?ன்னு நினைக்க வைக்கும் ஏக்க தீபாவளி.
பொறுப்பான தீபாவளி: கடைக்கு போய் வேண்டியதை வாங்கி, பலகாரம் சுட்டு, அக்கம் பக்கம் கொடுத்து.., வரவு செலவு பார்த்து...., பொறுப்பான பிள்ளையாய் புது வீட்டில் கொண்டாடும் தீபாவளி..., தூயா எப்ப வருவா?ன்னு வழி மேல் விழி வைத்து பார்த்திருக்க..., கண்காணிக்க அப்பா இல்லாம இந்த பயல் ஆட்டம் போடுவானேன்னு பயத்தோடு பட்டாசு பையின் மேல் ஒரு கண்ணுமாய் பொறுப்பான அம்மாவாய் கொண்டாடும் தீபாவளி.

தலை தீபாவளி கொண்டாடுறவங்களுக்கும்..., தலைக்கு குளிச்சு தீபாவளி கொண்டாடுறவங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

Thursday, October 03, 2013

என் நிலை!?



என் நிம்மதியின் விலாசம்
அவள்!
நிம்மதி தர சொத்து சுகம் 
ஏதும் தர தேவையில்லை
அவளுக்கு!!


கொஞ்சம் அன்பு, கொஞ்சம் சண்டை..,
கொஞ்சம் கெஞ்சல், கொஞ்சம் மிரட்டல்
என தந்தாலே போதும்!!
என் கைகளுக்குள் அடைக்கலமாகிவிடும்
இந்த தாவணி குழந்தை!!

பல்முகம் காட்டி 
வீடு முழுக்க ஓடி
கண்ணாமூச்சி ஆடுகின்றாள்
கைக்கெட்டாமல் நிழலாய்!!

நிஜம் எங்கோ என்னை பிரிந்திருக்க,
இந்த நிழலும்..,
இல்லை என்றால்,
என் கதி?? அதோ கதிதான்!!