Showing posts with label மகிழ்ச்சி. Show all posts
Showing posts with label மகிழ்ச்சி. Show all posts

Saturday, January 18, 2014

பிரபல பதிவர்கள் வீட்டு பொங்கல் பண்டிகை ஒரு கண்ணோட்டம் - 500வது பதிவு


தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சமீபத்துலதான் நாம கொண்டாடினோம். பிரபல பதிவர்கள்லாம் அவங்கவங்க வீட்டுல எப்படி கொண்டாடுனாங்கன்னு பதிவா போட்டு இருப்பாங்க. நீங்களும் படிச்சு, பார்த்து ஆஹா, ஓஹோன்னு கமெண்ட் போட்டுட்டு வந்திருப்பீங்க. அதுலாம் பதிவுக்காக கொஞ்சம் மிகைப்படுத்தி இருக்கும்.

அதனால, நம்ம சக பதிவர்கள்லாம் நிஜமாவே எப்படி அவங்க  வீட்டுல எப்படி பொங்கல் கொண்டாடினாங்கன்னு கொஞ்சம் கஷ்டப்பட்டு தகவல் சேகரிச்சதால கொஞ்சம் லேட்டாகிட்டுது.., சாரி..., இனி ஒவ்வொரு பதிவரும் அவங்க வீட்டுல எப்படி கொண்டாடினாங்கன்னு அவங்கவங்க குடும்பத்தார்கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கிட்டது...,

”மின்னல் வரிகள்” கணேஷ் அண்ணா வீட்டில்...,

சரிதா: ஏங்க! பொங்கல் வைக்க டைம் ஆகிட்டுது. எல்லாம் ரெடி.., அடுப்பை  பத்த வச்சு பொங்க பானை வெக்கலாம். வாங்கன்னு கூப்பிட்டா அங்க என்னத்தை தேடுறீங்க?! ஏங்க! ஏங்க!

கணேஷ் அண்ணா: நீ பட்டுப் புடவைக்கும், தங்க வளையலுக்கும் ஏங்குறது தெரிஞ்சும் கண்டுக்காமத்தானே இருக்கேன்..

சரிதா:  நான் கரடியா கத்துறது உங்க காதுல விழலியா?!

கணேஷ் அண்ணா: எனக்கு கரடி பாஷைலாம் தெரிஞ்சா நான் ஏன் இங்க இருக்கேன். சர்க்கஸ்ல போய் ரிங்க் மாஸ்டராகி நல்லா சம்பாதிச்சு வேற பொண்ணை கட்டி நல்லா இருந்திருப்பேனே!

சரிதா: என்னாது அங்க முணுமுணுப்பு??!! 

கணேஷ் அண்ணா: ஒண்ணுமில்லம்மா! சாண்டில்யன் தன்னோட ஒரு நாவல்ல பொங்கல் வைப்பதன் சிறப்பு என்ன? எப்படிலாம் வெக்கனும்ன்னு எழுதி இருக்கார் அதைதான் தேடிக்கிட்டு இருக்கேன்.

சரிதா: ம்க்கும்.., நீங்க எப்போ தேடி நாம எப்போ பொங்கல் வைக்குறது??!!  உங்க பாச மலர்கள்ல ஒண்ணு சசிக்கிட்ட போன் போட்டு கேட்டு பாருங்க...,

கணேஷ அண்ணா: அது பாவம், சின்ன பொண்ணு அதுக்கு ஒண்ணும் தெரியாது..,

சரிதா: அப்படின்னா, அடுத்த பாசமலர் ராஜிக்கிட்ட கேளுங்களேன்.

கணேஷ் அண்ணா: உன்னை கட்டிக்கிட்ட நாள் முதலா இன்னிக்குதான் உருப்படியா ஒரு யோசனை சொல்லி இருக்கே. ராஜிக்கு எல்லாம் தெரியும் அவளை கேட்டுட்டு வரேன்.



அவர்கள் உண்மைகள்” மதுரை தமிழன் வீட்டில்...,

ஹவுஸ் பாஸ்: ஏங்க! பொங்கல் வைக்க, கூட மாட ஒத்தாசை பண்ணாம அங்க என்ன செல்லை நோண்டிக்கிட்டு இருக்கீங்க.

மதுரை தமிழன்: வரேன் இரு.

ஹவுஸ் பாஸ்: ஏங்க, இங்க வந்து ஹெல்ப் பண்ணா சீக்கிரம் சாமி கும்பிடலாமில்ல!!

மதுரை தமிழன்:  பொங்கல் வச்சுட்டேன். ஏழு காய் போட்டு குழம்பு வச்சாச்சு. பூஜை ரூம்ல விளக்குலாம் ஏத்தி ரெடி பண்ணி வச்சுட்டென். நீ கற்பூரம் காட்ட வேண்டியதுதான் பாக்கி! வேற என்ன வேலை பாக்கி இருக்கு நான் உனக்கு ஹெல்ப் பண்ண!?

ஹவுஸ் பாஸ்: என்ன அங்க வாய் நீளுது!? நல்ல நாளும் அதுமா பூரிக்கட்டையை எடுக்கக் கூடாதுன்னு நினைச்சா எடுக்க வச்சுடுவீங்க போல!! இந்த கற்பூரத்தை யார் ஏத்தி தருவாங்க. 10000ல பட்டுச் சேலை எடுத்துக் கட்டி இருக்கேன். அது கசங்கக் கூடாது.

மதுரை தமிழன்: ம்க்கும், புடவை கசங்க கூடாது. ஆனா, புருசனை மட்டும் கசக்கி புழிவா!





” கோவை நேரம்” ஜீவா வீட்டில்..,

ஹவுஸ் பாஸ்: ஏனுங்க! இன்னிக்கு பொங்கல் பண்டிகை. சர்க்கரை பொங்கல் செய்யனும்.., பொங்கல் குழம்பு வைக்கனும்.., கொஞ்சம் மளிகை சாமான் வாங்கி வர்றீங்களா?!

ஜீவா: இதோ பாரும்மா! சர்க்கரை பொங்கல், நம்ம மூணவது தெருவுல இருக்குற -------   ஹோட்டல்ல நல்லா இருக்கும். காலையில  8 மணிக்கு கூட்டம் கம்மியா இருக்கும். அங்க வாங்கிக்கலாம்.பொங்கல் குழம்பு லாங்க் பஜார் ரோடுல இருக்குறா------- ஹோட்டல்ல நல்லா இருக்கும் அங்க வாங்கிக்கலாம். டேஸ்ட் கொஞ்சம் மட்டமா இருந்தாலும் கலர் கலரா அம்மணிகள்லாம் வருவாங்க.

ஹவுஸ் பாஸ்: !@#$%^  +)&^%$ !@#%^&&

ஜீவா: நல்ல நாளும் அதுவுமா, நிம்மதியா  ஒரு பக்கார்டியா  அடிக்க உடுறாளா?! நொய், நொய்ன்னு சே இதுக்கு நான் டூர் இருக்குன்னு வழக்கம்போல எங்கிட்டாவது கிளம்பி போய் இருக்கலாம்.



ஸ்கூல் பையன் வீட்டில்...,

ஹவுஸ் பாஸ்: ஏங்க! பொங்கல் வைக்க அடுப்பு ரெடி பண்ண சொன்னா வரலை. நானே ரெடி பண்ணி, பானை வாங்கி வந்து பொங்கல் வைக்க ரெடி பண்ணிட்டேன். நீங்க கற்பூரம் காட்டவாவது வாங்களேன்.

ஸ்கூல் பையன்: வர மாட்டேன் போடி!

ஹவுஸ்பாஸ்: என்னது போடியா!? 

ஜூனியர் ஸ்கூல் பையன்:: நல்ல நாள் அதுமா அப்பாவை அடிக்காதம்மா!

ஹவுஸ் பாஸ்: பையனுக்காக சும்மா வுடுறேன். நானும் பார்க்குறேன் ஒரு வாரமா நீங்க சரியில்ல. எது சொன்னாலும் எரிஞ்சு எரிஞ்சு விழுறிங்க. முஞ்சை தூக்கி எரவானத்துல வச்சிருக்கீங்க. நல்ல நாளும் அதுமா ஏங்க இப்படி அழிச்சாட்டியம் பண்ணுறீங்க.

ஸ்கூல் பையன்: அடிப்போடி, எனக்கு பிடிச்ச மாதிரி ட்ரெஸ் எடுத்துக் கொடுத்தியா!?

ஹவுஸ்பாஸ்: புரியலை!

ஸ்கூல் பையன்: என் பேர் என்ன!? ஸ்கூல் பையன். என் பேருக்கு தகுந்த மாதிரி  சட்டை, ட்ரவுசர் எடுக்காம வேட்டி ஃபேண்ட் எடுத்திருக்கியே! அதான் கோவம்.

ஹவுஸ் பாஸ்: ம்க்கும். நீங்க எனக்கு அடங்க மாட்டீங்க. இருங்க உங்க அக்கா ராஜிக்கு போன் பண்றேன். அப்பதான் அடங்குவீங்க.

ஸ்கூல் பையன்: அம்மா தாயே! உன்கிட்ட அடிகூட வாங்கலாம். அவங்கக் கிட்ட அட்வைஸ்ன்ற பேர்ல கடிலாம் வாங்கமுடியாது. இதோ வந்துட்டேன்.


கடல் பயணங்கள் சுரேஷ்குமார்....,

ஹவுஸ்பாஸ்: டேய் கண்ணா! உன் அப்பாவை கூப்பிடுடா. சாமி கும்பிடலாம்.

ஜூனியர் சுரேஷ் குமார்: ம்க்கும் உங்க வீட்டுக்காரர் எங்க இருக்கார். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பதிவாக்க காரெடுத்து கிளம்பி ஒரு மணிநேரமாச்சு.

ஹவுஸ் பாஸ்: இந்தாள்கிட்ட இதே ரோதனையாப் போச்சு! 


ஆரூர் மூனா வீட்டில்...,

ஆரூர் மூனா அம்மா: ஏம்மா! அந்த பானையை எடுத்து மஞ்சள் துண்டு கோர்த்து கட்டும்மா

ஹவுஸ் பாஸ்: கட்டிடேனுங்க அத்தை. அரிசி களைஞ்சு வெச்சுட்டேன். குழம்பு வைக்க காய்லாம் கூட கட் பண்ணி வெச்சுட்டேன்.

 ஆரூர் மூனா அம்மா: பொங்க பானை அடுப்புல வெக்கனும் செந்தில் எங்கேம்மா!? கூப்பிடு அவனை!!

ஹவுஸ் பாஸ்: ம்க்கும். உங்க புள்ள எங்கே இங்க இருக்க போறார். இன்னிக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு  12 படம் ரிலீஸ் அதனால, நேத்து நைட்டே பாய், தலைகாணிலாம் எடுத்துக்கிட்டு தியேட்டர் வாசல்லயே போய் படுத்துக்கிட்டார்.

திண்டுக்கல் தனபாலன் வீட்டில்...,

ஹவுஸ் பாஸ்: பொங்கல் பொங்கி வரும் போது எல்லாரும் சத்தமா சொல்லுங்க. பொங்கலோ பொங்கல்ன்னு...,

திண்டுக்கல் தனபாலன்: ஏய்! நீங்க யாரும் சொல்லக்கூடாது, நாந்தான் முதல்ல சொல்லுவேன். சீக்கிரம் பொங்கல் வை. அப்புறம் நமக்கு முன் மத்த வீட்டுலலாம் பொங்க வச்சிட போறாங்க.



  ”காணாமல் போன கனவுகள்” ராஜி மற்றும் வீட்டில் ...

பெரியப்பா: ஏம்மா தூயா! செங்கல் கொண்டு வாம்மா!

தூயா: இந்தாங்க பெரியப்பா.

பெரியம்மா: அந்த அரிசில இருக்குற கல்லு, நெல்லுலாம் பொறுக்கி சுத்தம் பண்ணும்மா.

தூயா: சரி பெரியம்மா. என்ன காய்கறின்னு சொன்னா.., நான் கழுவி நறுக்கி தருவேன்.

ராஜியோட ஹவுஸ் பாஸ்: ஏய் தூயா! நீதான் வேலை செய்யுறே. உங்கம்மா எங்கே?!

தூயா: ம்க்கும் அம்மா என்னிக்குப்பா வீட்டு வேலைகள் செஞ்சு இருக்காங்க?! அதோ பாருங்க பதிவுல போடுறதுக்காக வளைச்சு வளைச்சு போட்டோ எடுக்குறதை..., மனசுக்குள் பிரபல பதிவர்ன்னு நினைப்பு...,

ராஜியோட ஹவுஸ் பாஸ்:     1{@}%:&{)_!?$<>^&*&))()@<>{}][’;./,




டிஸ்கி: இது என்னோட 500 வது பதிவு. என்னையும் ஒரு ஆளாய் மதிச்சு நான் போடும் பதிவையும் படிச்சு ஆதரவு தரும் சகோதரர்கள் அனைவருக்கும் நன்றி! ஆளுக்கொரு கேக் துண்டு எடுத்துக்கோங்க. அமெரிக்காவுல இருந்து நீளும் கை மேல மட்டும் ஒரு கண் வச்சுக்கோங்கப்பா! அது ரெண்டு, மூணு கேக் துண்டு எடுத்துக்கும்.

Wednesday, January 15, 2014

மாட்டுப் பொங்கல்

      மாட்டுப் பொங்கல் அன்னிக்கு மூதாதையர்களுக்கு துணி வச்சு படைக்குறது எங்க ஊர் வழக்கம்.  அதனால அன்னிக்குதான் நாங்க  புது துணிகளை   படைச்சு கட்டுவோம். வீடு வாசல்லாம் மொழுகி, செம்மண் கரை இட்டு பச்சரிசி ஊற வச்சு அரைச்சு, தண்ணி கலந்து, வீடு முழுக்க கோலம் போடுவோம்.
                         
(துணில அந்த மாவு தண்ணியை நனைச்சு அதை லேசா பிழிஞ்சுக்கிட்டே ரெண்டு விரலால கோலம் போடுறதே தனி கலை.)

                            
(வீட்டு வாசல்ல நான் போட்ட கோலம்.......)
                                                            
                                  
     மாட்டுப் பொங்கல் அன்னிக்கு மாலை ஆறு மணிக்கு  விளக்கு வச்ச பின் தான் படைக்குறது வழக்கம். துணிகளை படைச்சு, வீட்டிலிருக்கும் பெரியவங்க, தம்பதி சமேதராய்  எடுத்து குடுப்பாங்க. பெரியவங்கலாம்  தன்னால் முடிந்த அளவு  பணம்  மத்தவங்களுக்கு குடுப்பாங்க.அதுக்காகவும் பசங்க காத்துக்கிட்டு இருப்பாங்க.

   சாம்பார், பொறியல், வடை, பாயாசம், இனிப்பு போண்டா, கொழுக்கட்டை இதெல்லாம் கண்டிப்பா செய்யனும், செய்து சாமிக்கு படையல் போட மணி எட்டாகிடும். பெரியவங்கள்லாம் டி.வி பார்த்துக்கிட்டும் கதை பேசிக்கிட்டும் சாப்பிட்டு முடிக்கும்வரை பிள்ளைகள்லாம் தவிப்பா பார்த்துக்கிட்டும் சீக்கிரம் சாப்பிடுங்க, எதிர்வீடு, பக்கத்துவீட்டுல எல்லாம் பசங்க டிரெஸ் போட்டுட்டாங்கன்னும் கூச்சல் போட்டுக்கிட்டும் இருப்பாங்க.

(7 மணிக்கு படைக்க போற துணிகள் மஞ்சள் தடவி மதியம் மூணு மணிக்கே தயார்...,)
                              

(ஸ் அப்பாடா..., ஒரு வழியா  எட்டு மணிக்கு படைச்சுட்டோம்...)
                               

   நாந்தான் சின்ன பையன் எனக்குதான் முதல்ல டிரெஸ் தரனும்ன்னு கடைக்குட்டி சொல்ல, நாந்தான் மூத்த பெண் எனக்குதான் முதல்ல டிரெஸ்ன்னு பெரிய பொண்ணு வாதிட, அவங்கவங்க பிள்ளைகளுக்கு சப்போர்ட் பண்ணி,  செல்ல  சண்டைக்கு அம்மாக்கள் தயாராக.., யாருக்கு முதல்ல ட்ரெஸ் தரதுன்னு குழம்பிய பெரியவங்களை ஒரு தட்டுல எல்லார் ட்ரெஸ்ஸும் வச்சு எல்லா குட்டீசுக்கும் ஒரே நேரத்துல ட்ரெஸ் குடுக்க வச்சுட்டான் அப்பு

( பிள்ளைகளெல்லாம் தாத்தா, பாட்டி காலில் விழுந்து டிரெஸ்ஸையும்
,அவர்களின் ஆசியையும் வாங்குதுங்க..)

                                 

(பிள்ளைகளுக்கும் சந்தோஷம், பெரியவங்களுக்கும் சந்தோஷம்...,)
  
குழந்தைகளை தொடர்ந்து பெரியவங்க நாங்கலாம் ஜோடியாய் பெரியவங்க  காலில் விழுந்து டிரெஸ் வாங்கிக்குவோம். துணியோடு சேர்த்து அவங்களால் முடிந்த அளவு பணம் தருவாங்க. அதை பிரிச்சுக்குறதுல தகராறு பண்ணிக்கிட்டு இருக்கும்போது, குட்டீஸ்கள் அப்பா, அம்மாவுக்கு இடையில்  சமாதான படுத்துற மாதிரி வந்து பணத்தை அதுங்க அடிச்சுக்கிட்டு போய்டும்ங்க. 

    புது துணி உடுத்திக்கிட்டு  அவங்கவங்க நட்பு வட்டத்தோடு கோயிலுக்கு போவோம்.  வத்தலும், தொத்தலுமா  இருக்கும் ரெண்டே ரெண்டு மாட்டை என்னமோ அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டுல மாட்டை அடக்குற மாதிரி எங்க ஊரு “பிரசாந்த், சிம்பு, தனுஷ்”லாம் பயங்கரமா  சீன் போடுவாங்க. அந்த வீரத்துல  எங்க ஊர் ”தாப்ஸீ, ஹன்சிகா மோத்வானி, கார்த்திகா”லாம்  மயங்கி புது காதல்லாம் பிக்கப் ஆகும்.


                                     (பெரியவங்ககிட்ட ஆசி வாங்கும் ஜோடிகள்...,)


                                 (பிள்ளைகளுக்கு தாத்தா, பாட்டி பணம் குடுக்குறாங்க....,)

                    (மாடுகள் வந்து சேருமிடம்.. நைட்டுல எடுத்ததால் மாடுங்க தெரியல...,)

   காணும் பொங்கலன்று எல்லாரும் கோவிலுக்கு போவோம். கோவிலுக்கு போகும் முன் சின்ன மாமனர், மாமா, சித்தப்பா, அண்ணன்கள் எல்லாரும் எல்லாருக்கும் பைசா குடுப்பாங்க. எப்படியும் பெரியவங்களுக்கு ஆயிரம் ரூபாயும், சின்னவங்களுக்கு 250 ரூபாயும் சேர்ந்துடும் பொங்கல் அன்று. 

    முன்னலாம் 3 கி.மீ நடந்து போவோம். எல்லா உறவுகளும் பேசிக்கிட்டு அரட்டை அடிச்சுக்கிட்டும் கரும்பு, பொரி சாப்பிட்டுக்கிட்டும் போவோம். இப்போலாம் டூவீலர்ல போய்ட்டு வந்துடறோம். நடந்து போய்வந்த போது இருந்த உற்சாகம் இப்போ வண்டில போய் வரும்போது இல்லைன்னு எல்லாரும் உணர்கிறோம்.

    அத்தோடு பொங்கல் கொண்டாட்டம் முடிஞ்சுது. அன்னிக்கு பொங்கல் முடிந்தாலும் அதன் நினைவு பல மாதங்கள் நெஞ்சில் நிற்கும். அடுத்த பொங்கல் எப்போ வரும்ன்னு காத்து கிடப்போம்.

   எங்களுக்குள்ளும் சண்டைகள், சச்சரவுகள் உண்டு. ஆனால், அதெல்லாம் இந்த பண்டிகையின்போது கொஞ்சம் கொஞ்சமா மாறி உறவுநிலை சகஜமா மாறிடுறதை கண்கூடா பலமுறை பார்த்திருக்கேன். பண்டிகைகள் வருவதன் நோக்கமும் அதுதானே!!??

படங்கள் போன வருசத்தியது...,


Tuesday, January 14, 2014

பொங்கலு பொங்கலு வைக்க....,

 வருசம் முழுக்க எத்தனையோ பண்டிகைகள் கொண்டாடிக்கிட்டுதான் இருக்கோம்.  இருந்தாலும் பொங்கல் பண்டிகைன்னாலே மனசுக்கு உற்சாகம் தரும் பண்டிகைப் போல ஏதுமிருக்கான்னு எனக்கு தெரியலை.

      மார்கழி மாசம் பொறந்த உடனே கூட படிக்கும்  பிள்ளைங்கலாம் ஸ்கூல்ல உக்காந்து கோலம் போட்டு பார்ப்போம். அதுக்கு கலர்லாம் செலக்ட் பண்ணிக்குவோம். போகி அன்னிக்கு வீட்டையெல்லாம் சுத்தம் பண்ணி வச்சிடுவோம். நைட் 8 மணிக்கு தெரு வாசல் கழுவி செம்மண் இட்டு கோலம் போட ஆரம்பிப்பேன். நான் ரொம்ப அழகா இருக்குறதால (ஹலோ அழகா? அப்பிடின்னா) ஓக்கே ஓக்கே. நைட் டைம் என்பதால் அப்பா, எதிர்வீட்டு ஐயர் மாமா, கோடிவீட்டு செட்டியார் சித்தப்பா, மாடிவீட்டு கோணார் அண்ணன்லாம் வாசல்ல சேர் போட்டுக்கிட்டு உக்காந்து கதை பேசிக்கிட்டு இருப்பாங்க(ஒரு அழகான பொண்ணுக்கு காவலாம்!!). நான் கோலம் போடுவேன். 

    அம்மா, எதிர்வீட்டு சித்தி, கோடி வீட்டு மாமி, மாடி வீட்டு அண்ணிலாம் கோலத்துக்கு கலர் கொடுப்பங்க. அக்கம் பக்கம் வீட்டில் பெண்குழந்தைகளே கிடையாது. எல்லார் வீட்டுலயும் ஆண் பிள்ளைகளே. அவங்க வீட்டுலலாம் நாந்தான் செல்ல பொண்ணு. அவங்க வீட்டுலயும் நாந்தான் கோலம் போடுவேன். ஆக மொத்தம் 6 வீட்டில் கோலம் போட்டு முடிக்க நைட் 12 மணிக்கு மேல ஆகிடும். நான் கோலம் போடும்போது, நான் தூங்கி வழிய கூடாதுன்னு  காஃபி, பிஸ்கட்டு, ன்னு வாங்கி தந்து பார்த்துப்பாங்க.
                                           
அம்மா அரைச்சு வச்ச மருதாணியை வச்சுக்கிட்டு, தெருவை ஒரு ரவுண்ட் அடிச்சுட்டு வருவேன். யார் வீட்டுல நம்மளைவிட அழகா போட்டிருக்காங்கன்னு பார்த்துட்டு வருவேன். என்னைவிட யாராவது அழகா கோலம்  போட்டிருந்தாலும் எதாவது குறையை கண்டுபிடிச்சு நான் போட்ட கோலம்தான் பெஸ்ட்ன்னு என்னை நானே தேத்திக்கிட்டு வந்து படுப்பேன்.

இதான் பிளையார் மேடை

அப்பா முதல் நாள் நைட்டே ஆற்றங்கரை இல்லைன்னா குளத்தங்கரையில் இருந்து களிமண் கொண்டாந்து, வீட்டு வாசல்ல சாமிக்கு ”பா”ஷேப்புல வீடு கட்டி பிள்ளையார் பிடிச்சு வச்சுட்டு படுப்பார். விடிகாலை ஐந்து மணிக்கு எழுந்து குளித்து மஞ்சள் குங்குமம் வைத்து, கரும்பு, அவரைக்காய், கத்திரிக்காய், பூசணி, உருளை, கருணைக்கிழங்கு, முள்ளங்கி, மொச்சைன்னு கிடைக்கும் காய்கறிலாம் வச்சு படைப்பாங்க. பானையோட கழுத்துல ”பச்சை மஞ்சளை” (மஞ்சள் எப்படி பச்சையா இருக்கும்ன்னு கேட்கப்படாது. உலராத மஞ்சள் தான் ”பச்சை மஞ்சள்”)


        நல்ல நேரம் பார்த்து வாசல்ல களிமண்ணால அடுப்பை உருவாக்கி, அதுல வரிசையா மூணு பானையை  வச்சு,   துவரை மிளாறை விறகா பயன் படுத்துவாங்க. முதல்ல, பானை காய்ந்ததும் நெல் போடுவாங்க. அது பொறிந்ததும் பால் ஊத்துவாங்க, பால்பொங்கி வரும் சமயம் தண்ணி ஊத்தி மடக்கு என்னும் மண்ணால் ஆன தட்டை பானை மேல மூடுவாங்க.  வீட்டுல இருக்கும் நண்டு சிண்டுலாம் ஆளாஆளாக்கு பானைகளை பிரிச்சுக்கிட்டு யார் பானை முதல்ல பொங்குதுன்னு பந்தயம் கட்டிக்கிட்டு வேகவேகமா தீ வைப்பாங்க.
                                       
    பொங்கல் எந்த பக்கம் பொங்கி வருதுன்றதை வச்சு அந்த வருசம் வீட்டுல நல்லது நடக்குமா? கெட்டது நடக்குமான்னு பெருசுங்க ஜோஷியம் சொல்வாங்க. அதுக்காகவே அம்மா, சித்தி, அத்தைலாம் எந்த பக்கம் பொங்கி வந்தால் நல்லது நடக்கும்ன்னு பாட்டி சொல்லுவாங்களோ அந்த பக்கம் லேசா பானையை சாய்ச்சு வைக்கும் கூத்துலாம் நடக்கும். பொங்கல் பொங்கி வரும்போது போங்கலோ பொங்கல்ன்னு சத்தமா போட்டி போட்டுக்கிட்டு கூவுவோம்.                                  


       கொதிக்குற தண்ணியில பச்சரிசி, உப்பு போட்டு  பொங்கல் வச்சு இறக்குவாங்க. பொங்கல் பானை ஃபுல்லா வந்திருந்தா அந்த வருசம் ஃபுல்லா நல்ல விளைச்சல்ன்னும், கொஞ்சம் குறைச்சலா வந்தால் விளைச்சல் கம்மின்னு எங்க பாட்டி சொல்லும். 
   அதே அடுப்புல, வெறொரு பானையை ஏத்தி  நவதான்யங்களை வறுத்து, வேக வைத்து கத்திரிக்காய், முள்ளங்கி, அவரைக்காய், பூசணி, வெள்ளரிக்கிழங்கு, உருளை கிழங்கு, பிடி கருணை, கருணைக்கிழங்கு, வாழைக்காய்லாம் போட்டு மிளகாய்த்தூள், உப்பு போட்டு கொதிக்கவைத்து மிளகாய்தூள் வாசனை போனப்பின் புளிக்கரைசலை ஊத்தி, கடுகு, காய்ந்த மிளகாய், பூண்டுலாம் போட்டு தாளித்து பொங்கல் குழம்பு செய்வாங்க. பொங்கலுக்கு இதுதான் எங்க வீட்டுல ஹைலைட்டே. கூடவே வெந்தய்க்கீரை கடைன்சும், பிடிக்கரணை காரக்குழம்பும் வைப்பாங்க. இந்த மூணும்தான் பொங்கலுக்கு எங்க வீட்டுல பெஸ்ட் காம்பினேஷன்.


காலையில பிள்ளையார் வைத்த இடத்துலயும் அடுப்பாண்டையும் சுத்தம் பண்ணி, தண்ணி தெளிச்சு, செங்கல் பொடியால கோலம் போடுவோம். அப்புறம் பூசணி  இலையை கொண்டுவந்து அதுலதான் பொங்கல் வைச்சு படைப்போம். சூரியனுக்கு காட்டி சாமி கும்பிட்டு சாப்பிடுவோம். அம்மா, அப்பா, சித்தி, சித்தப்பா, பெரியப்பா, பெரியம்மான்னு எல்லரும் உக்காந்து கதை பேசிக்கிட்டு இருப்பாங்க. நண்டு சிண்டு நட்டுவாக்களிலாம் நாங்க கரும்பு தின்னுக்கிட்டு, விளயாடிக்கிட்டு இருப்போம்.
இப்படித்தான் நான் சின்ன பிள்ளையா இருந்தப்போ பொங்கல் கொண்டாடினேன். இன்னிக்கும் என் பிள்ளைகளும் இந்த மகிழ்ச்சியை அனுபவிக்கனும்ன்னும், பாரம்பரியத்தை மறக்ககூடாதுன்னும் இதே முறையில்தான் பொங்கல் வைக்குறேன். இதுல ஒரே ஒரு மாறுதல் பானைக்கு பதில் வெண்கல பானை என்பது மட்டுமே.., பையனுக்கு வேட்டி, சட்டை. பொண்ணுங்களுக்கு  நான் பெற்ற இன்பத்தை என் பிள்ளைகளும் அனுபவிக்கட்டுமே! 

படங்கள்லாம் போன வருசத்திய பொங்கல் கொண்டாட்டத்தின் போது எடுத்தது.

Monday, January 13, 2014

போக்கியா!? போகியா!?

பொங்கல் திருநாளின் முதல் நாள் கொண்டாடப்படும் போகியானது பழையன கழித்து, புதியன புகுத்தும் நாளாக கருதப்படுகிறது. பழயவற்றவையும், உபயோகமற்றவையும் விட்டெறியும் நாளாக கருதப்படுகிறது.  அறியாமை, பொய், பொறாமை, காமம், கோபம், துயரங்களை நெருப்பிலிட்டு பொசுக்கும் இப்பண்டிகை “போக்கி” என்றழைக்கப்பட்டு நாளடைவில் மருவி  “போகி” என்றானது. 

அன்றைய தினம், வீட்டில் தேங்கியிருக்கும் குப்பைகள், தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்திவிட்டு வீடு சுத்தமாக்கப்படும். வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தவறான எண்ணங்களும் அவ்வப்போது நீக்கப்படவேண்டும் என்பதே இப்பண்டிகையின் தத்துவமாகும்.
 பொங்கல் கொண்டாட்டம் என்பது வெறும் மூன்று நாட்கள் மட்டுமல்ல அதற்கான ஆயத்தங்கள் மார்கழி பொறந்த உடனே ஆரம்பிச்சுடும், வீட்டை சுத்தம் பண்ணி, சுண்ணாம்பு அடிப்பது, துணி எடுப்பது, அதை தைக்க குடுத்து, நடையா நடந்து வாங்கிவருவது, சமையல் பொருட்கள் வாங்கி வருவது, விறகை காய வைக்குறதுன்னு பெருசுங்கலாம்  பிசியா இருப்பாங்க.
பொட்டு பொடுசுங்கலாம் என்ன துணி வாங்கலாம், அதை எந்த மாடல்ல எங்க தைக்க குடுக்கலாம்ன்னு பிளான் பண்ணும்ங்க. பொம்பளை பிள்ளைங்கள்லாம் கோலம் போட்டு பழகுறது, மருதாணி கிள்ளி வந்து அரைச்சு வைக்குறதுன்னும் இருப்பாங்க. ஆம்பிளை பசங்க கபடி, கிரிக்கெட், சைக்கிள் போட்டிலாம் எங்கே வைக்கலாம். எந்த நடிகரோட படம் எந்த தியேட்டர்ல ரிலீஸ் ஆகுது? எந்த ஷோ போலாம்?! பாலாபிஷேகம் பண்ண அப்பா சட்டைல இருந்து காச ஆட்டையைப் போடுறது எப்படி!? என்ன பொய் சொல்லி செகண்ட் ஷோ சினிமாக்கு போறதுன்னு பிளான் பண்ணுவாங்க. 

போகி அன்று அதிகாலையில் எழுந்து வீட்டு வாசல்ல குப்பைகள், உபயோகமற்ற பாய், சாக்கு பைலாம் போட்டு எரிச்சு குளிர் காய்வோம். பின்பு, வீட்டை சுத்தம் பண்ணும் அம்மாவுக்கு ஹெல்ப் பண்றேன்னு சொல்லி உபத்திரவம் கொடுப்பேன். பரணை மேல் ஏறி வாடகை கொடுக்காமல் குடியிருக்கும் எலி, கரப்பான் பூச்சி, தேள், பூரான் குடும்பத்தைலாம் வம்படியா காலி பண்ணி அதுங்க சாபத்தை வாங்கிக் கட்டிக்குவேன்.
                 
 3 மாசத்துக்கு முன்னாடி காணாமல் போன அப்பாவின் பல்துலக்கும் பிரஷை கண்டுபிடிச்சு குடுத்துட்டு, அப்பாவின் செண்டிமெண்ட் பேனாவை எங்கேயோக் காணாம போக்குறதும், கேஸ் அடுப்பை கழுவுறேன்னு, நல்லா எரியுற அடுப்பை ரிப்பேர் ஆக்குறது, லைட்லாம் தொடைக்குறேன்னு போட்டு உடைக்குறதும் எனக்கு கைவந்த கலை. அதுக்காக அப்பா அடிக்க துரத்த, பக்கத்துவீட்டு ஃபாத்திமா மாமி வீட்டுல தஞ்சம் புகுவதும் பதிவுல சொல்லக்கூடாதக் கதை.

ராத்திரி சாப்பாட்டை முடிச்சுட்டு, வாசல் தெளிச்சு, கோலம் வந்துக்கிட்டே கோலம் போட்டு, கல்ர் கொடுத்து முடிச்சு, கைக்கு தொப்பி மருதாணி வச்சுக்கிட்டு தெரு முழுக்க ரவுண்ட்ஸ் வருவோம். யார் வீட்டு கோலம் நல்லா இருக்குன்னு பார்க்க.., எப்படியும் என்னைவிட மத்தவங்க நல்லாதான் கோலம் போட்டிருப்பாங்க. இருந்தாலும் நான் போட்ட கோலம்தான் நல்லா இருக்குன்னு என்னை நானே தேத்திக்கிட்டு படுக்க போவேன். அப்பதானே சீக்கிரம் எழுந்து பொங்கல் வேலைகளை பார்க்க முடியும்!! அதாவது அம்மா பொங்கல் வேலைகல்ளைப் பார்க்க..., நான் டிவி பார்க்க முடியும்!?

Thursday, November 21, 2013

எங்கள் வீட்டு கார்த்திகை தீபம் கொண்டாட்டம்

தீபாவளி, பொங்கல் போல எங்க ஊர்ல கார்த்திகைத் தீபத் திருவிழாவும் முக்கியமான பண்டிகை.  முதல் நாளே வீடுலாம் ஒட்டடை அடிச்சு, மொழுகி செம்மண் இட்டு வைப்போம். பொங்கல் பண்டிகைக்காக, வீட்டுக்கு வெள்ளையடிக்குற மாதிரி சில வீடுகள்ல வீட்டுக்கு வெள்ளையடிப்பாங்க. அதுக்கு காரணம், புதுசா கல்யாணம் கட்டிக்கிட்ட ஜோடிங்க தலை தீபாவளின்னு சொல்லி பொண்ணோட அம்மா வீட்டுக்கு போய்டுவாங்க. அந்தக் குறை மறைய தலைக்கார்த்திகைக்கு மாமியார் வீட்டுலதான் இருக்கனும்ன்னு ஒரு வழக்கம். 
மாமியார் தலையில கார்த்திகை மண்டை விளக்கு ஏத்து”ன்னு ஒரு சொலவடையே எங்க ஊர்ல இருக்கு, மாமியார் தலைமையில கார்த்திகைத் தீபத்துக்கு மடக்கு (அகல் விளக்கு போலவே மண்ணால் செஞ்ச கொஞ்சம் பெரிய சைஸ்ல இருக்கும். அதுக்கு பேர்தான் மடக்குன்னு சொல்லுவாங்க.)
கார்த்திகை மாச வரும் வளர்பிறை கிருத்திகை நட்சத்திரமும், பௌர்ணமி யும் சேர்ந்து வரும் அன்னிக்குதான் கார்த்திகை தீபம் கொண்டாடுவாங்க. அன்னிக்கு  மதியம் கிருத்திகைக்கு படைக்குற மாதிரி சாம்பார், ஒரு பொரியல், வடை, பாயாசத்தோடு முடிச்சுக்குவாங்க. 
அன்னிக்கு சாயந்தரம் சரியா 6 மணிக்கு தெருவிலிருந்து விளக்கு கொளுத்திட்டு வருவோம். கோலத்துல சில அகல்விளக்கு. வாசல்படிரெண்டு ஓரத்துல,  வீட்டுக்குள்ள இருக்கும் எல்லா வாசப்படிகள்ல விளக்கு ஏத்தி வைப்போம். மாடில, அரிசிப்பானைல, உப்பு டப்பா, அடுப்படின்னு எல்லா இடத்துலயும் விளக்கு ஏத்தி வைப்போம். 
முன்னலாம் ரேடியோவுலயும், இப்பலாம் டிவிலயும் திருவண்ணாமலை தீபம் ஏத்துற நேரடி ஒளி(லி)பரப்புல தீபம் ஏத்திட்டாங்கன்னு தெரிஞ்சு எங்க வீடுகளில் தீபம் ஏத்துவோம். ராத்திரி ஏழு மணிக்கு மேல மாவளி சுத்துவோம். மாவளி பத்தி விளக்கமா இங்க இருக்கு பார்க்காதவங்க பார்த்துட்டு வாங்க.

மறுநாள் நாட்டு கார்த்திகைன்னு சொல்லிக் கொண்டாடுவாங்க. அன்னிக்கும் வீடு வாசல்லாம் மொழுகி கழுவி வைப்போம். சாயந்தரம் விளக்கு வச்சபின் தான் படைப்போம். சிலர் வீட்டுல அசைவம் செஞ்சுப் படைப்பாங்க. எங்க வீட்டுல வெஜ்தான்.  தீபாவளிக்கு வெடிச்சது போக மிச்சம் மீதி இருக்குற பட்டாசை வெடிப்போம். 
சிலர் வீட்டுல அசைவம் சமைப்பாங்க. எங்க வீட்டுல இனிப்பு போண்டா, வடை, கொழுக்கட்டை மட்டும் செஞ்சு படைப்போம். அன்னிக்கும் வீடு முழுக்க விளக்கேத்தி வைப்போம்.  
நாட்டுக்கார்த்திகை அன்னிக்கும் மாவளி சுத்துவோம். மாவளி சுத்துறதுனால  நம்மை பிடித்திருக்கும் பீடைலாம் விலகும்ன்னு ஒரு ஐதீகம். அந்த கால பட்டாசுன்னு நினைக்குறேன். அழகா தீப்பொறி பறக்குது பாருங்க.


மொபைல்ல எடுத்ததால படங்கள் தெளிவா இல்ல. என் பையன் அப்பு மாவளி சுத்துறான்.  
நான் கொண்டாடிய அத்தனை பண்டிகைகளையும் அதன் பழமை மாறாம என் பிள்ளைகள் அனுபவிக்கனும்ன்னு கொஞ்சம் மெனக்கெட்டு கொண்டாடுறோம்.

Thursday, November 07, 2013

எங்க வீட்டு தீபாவளி கொண்டாட்டம்

தீபாவளின்னாலே மனசுக்குள் ஒரு மகிழ்ச்சிதான். ஓயாத வேலை இருந்தாலும்கூட...., பதினஞ்சு நாளுக்கு முன்னாடியே எல்லோருக்கும் துணி எடுத்தாச்சு! தைக்க கொடுக்க வேண்டியதை தைக்க கொடுத்து வாங்கி வந்தாச்சு!! பொண்ணுங்களுக்கு அதுக்கு மேட்சா வளையல் பொட்டு, செயின் வாங்கி வந்த்தை பார்த்ததும் அப்புக்கு கோவம் எனக்கு ஒண்ணுமே வாங்கி வரலைன்னு!! நீங்களே சொல்லுங்க ஆம்பிள்ளை  பிள்ளைக்கு என்ன வாங்கி தர முடியும்?! அதனால, அவனுக்குண்டான ஷேரை கொடுத்தாச்சு. வழக்கம் போல அவனும் உண்டியல்ல போட்டாச்சு!

காலைல எழுந்ததும் முதல்ல மஞ்சப்பொடில பிள்ளையார் பிடிச்சு அவரை இலைல வச்சு குங்குமம், பூ, பழம் வச்சு.., அவர் எதிர்க்க ஒரு கிண்ணத்துல எண்ணெயும், இன்னொரு கிண்ணத்துல சீயக்காய் பொடியும் வச்சு படைச்சு.., பெண்பிள்ளைகளுக்குதான் முதலில் எண்ணெய் வைப்பது எங்க வீட்டு பழக்கம். எப்பவும் இந்த பாக்கியம் பெரியவ தூயாவுக்கு மிடைக்கும். இந்த வருசம் மேடத்துக்கு லீவ் கிடைக்காததால தீபாவளி மதியம் வந்ததால சின்னவ இனியாக்கு இந்த பாக்கியம் கிடைச்சது.

அக்கா ஸ்தானமும், எண்ணெயோடு கிடைக்கும் 100 ரூபாயை நினைச்சு  வாய் கொள்ளா சிரிப்போடு எண்ணெய் வச்சுக்கிட்டாலும், அக்காவை மிஸ் பண்ணுறதால அவ கண்ணு கலங்கி இருந்துச்சு! எனக்கும் மனசு லேசா கனக்க ஆரம்பிச்சது. அக்கா வராததால சம்பிராயத்துக்கு சில வெடிகளை கொளுத்திட்டு அவளுக்காக காத்திருந்தோம்.




இந்த வருச தீபாவளி சனிக்கிழமை வந்ததால நோ அசைவம். பிள்ளைகளும், அவரும் அம்மா வீட்டுல போய் நான் வெஜ் சாப்பிட்டு வந்துட்டாங்க. காலைல, இட்லி, வடை, ஸ்வீட்ன்னு செஞ்சு சாமிக்கு படைக்கனும். அடுத்து அதை அக்கம் பக்கம் வீட்டுக்காரங்களுக்கு கொடுக்கனும். அப்பும், சின்னவளும் கொண்டுப் போய் கொடுத்துட்டு வந்தாங்க.


லேசா அசந்திருக்கும் வேலைல ஒரு போன் கால். நீங்க ராஜிதானே! தீபாவளி வாழ்த்துகள்ன்னு ஒரு பெண்ணோட குரல். யாருன்னு தெரியாமயே நலம் விசாரிச்சேன். நான் சரவணன் வொய்ஃப். எந்த சரவணன்னு சொல்லுங்க பார்க்கலாம்ன்னு சொன்னாங்க. பொண்ணு வராத ஏக்கத்துல இருந்ததால, சட்டுன்னு மூளைக்கு உறைக்கலை. அப்புறம் அவங்களே பிளாக்கர் ஸ்கூல்பையன் வொய்ஃப்ன்னு சொன்னாங்க. அப்பவும், சும்மா சம்பிரதாயத்துக்கு பேசிட்டு போனை வச்சுட்டேன். அடுத்து ஆவியோட ஃபோன். தீபாவளி வாழ்த்துகள்ன்னு சொல்லி வந்துச்சு. அவர்கிட்டயும் ஏனோ தானோன்னு பேசிட்டு வச்சிட்டேன். பொண்ணு வீட்டிக்கு வந்ததும்தான் புத்திக்கு உறைச்சது..., ஸ்பை வொய்ஃப் பேரை கூட கேக்காதது. அப்புறம் ஃபோன் போட்டு சாரி அந்த தீபாவளி சாரி இல்லீங்க மன்னிப்பு கேட்டு பேரை கேட்டு வச்சாச்சு! இனி அடிக்கடி ஃபோன் போட்டு கலாய்க்கலாம்.

மதியமும் அம்மா வீட்டுல இருந்து எல்லோருக்கும் அசைவ சாப்பாடு வந்திட்டுது. அதனால இந்த வருசம் தீபாவளிக்கு வேலைகள் எனக்கு கொஞ்சம்தான். எங்க வீட்டுல மறு நாள் நோன்பு இருக்கு. அதனால, வீடு வாசல்லாம் கழுவி வச்சாச்சு!



தீபாவளிக்கு மறுநாள் வரும் அமாவாசை அன்னிக்குதான் நோன்பு இருப்போம். கல்யாணம் ஆன பொண்ண்ணுங்க ஒரு பொழுது இருப்பாங்க. கர்ப்பினி பெண்களா இருந்தா இது விதி விலக்கு. முன்னலாம் எச்சில் கூட விழுங்க மாட்டாங்களாம். ஆனா, இப்ப, காஃபி, பழம்ன்னு சாப்பிட்டு விரதம் இருக்கோம்!!

சமையலோடு அதிரசம் செய்யனும். அம்மா வீட்டில், அக்கம் பக்கமிருக்குறவங்களுக்கு கொடுக்க முன் கூட்டியே அதிரசம் செஞ்சு வச்சுப்போம். நோன்புக்கு படைக்க மட்டும் கொஞ்சமா செய்வோம். அதனால, சீக்கிரம் வேலை ஆகிடும். ஆனா, மாமியார் வீட்டு சம்பிரதாயம்  முன்கூட்டியே செய்யும் பழக்கமில்லாததால நிறைய செய்யனும். அதனால பெண்டு நிமிறும்.


எங்க வீட்டுல "எண்ணி வைத்து செய்வது" வழக்கம். அதாவது நோன்பு சட்டிக்குள் 21அதிரசம், 21வெத்திலை, 21பாக்கு, 21 கொம்பு மஞ்சள், 21 நோன்பு கயிறு, கூடவே நோன்பு முடிச்சும் வச்சு படைப்பாங்க. இதையெல்லாம், இதுக்கே உண்டான பித்தளை நோன்பு சட்டில வச்சு பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு போய் அர்ச்சனை செஞ்சுட்டு வீட்டுக்கு வந்து படைப்போம்.. 
போன வருசம் வரை அஞ்சு மகன், அஞ்சு மருமகள், பேரன் பேத்திகள், ரெண்டு தம்பிகள் குடும்பத்தோடு எங்க மாமனார் பூஜை செய்வார்.  வேலை காரணமா வெளில வந்து தங்கிட்ட அவங்கவங்க ஊருல நோன்பு எடுத்து, கொண்டாடுறொம். அது தூயாக்கு பிடிக்கலியாம். தனியா சாமி கும்பிடுறது என்னமோ போல இருக்கும்மா! அடுத்த வருசத்தில இருந்து எப்பவும் போல பெரியப்பா வீட்டுக்கு போய்டலாம்ன்னு சொல்றா! 

சிலர் வீட்டில் “அள்ளி வைச்சு செய்யுறது”ன்னு சொல்வாங்க. அதாவது அதிரசத்தை ரெண்டு கையாலயும் ரெண்டு தரம், மூணு தரம்ன்னு எடுத்து வைப்பாங்க. சிலர் வீட்டில் முறத்துல வச்சு படைப்பாங்க.

சாமி கும்பிட்டதும் நோன்புக்கயிறை கொடுப்பாங்க. ஆம்பிள்ளைங்க வலது கையிலயும், பெண்கள் கழுத்துலயும் கட்டிப்போம். நோன்பு முடிச்சை மூத்த பெண்பிள்ளைகளுக்கு கொடுப்போம். தலைக்கு வைக்கும் எண்ணெயை மிஸ் பண்ணிய தூயா நோன்பு முடிச்சை வாங்கிக்கிட்டா. சாப்பிட்டு முடிச்சதும் அக்கம் பக்கம் பலகாரம் கொடுத்துட்டு வருவோம்.


தீபாவளி முடிஞ்ச பின்னாடி சகோதரர்கள் வீட்டுல இருந்து சகோதரிகள் வீட்டுக்கு பலகாரம் கொண்டு போவாங்க. முன்னலாம் அன்னக்கூடை, தவளை, பக்கெட்டுல அதிரசம், முறுக்கு, வடை, இட்லி, தட்டை இருக்கும். அதை எங்க அம்மா வீட்டு பலகாரம்ன்னு ஊரெல்லாம் கொடுப்பாங்க. அப்படி பலகாரம் கொண்டு வரும் நாத்தனாருக்கு துணிகளும், கறிக்கஞ்சியும் சமைச்சு போட்டு பதில் அன்பு காட்டுவாங்க. கார்த்திகை மாசம் முடியும் வரை பஸ்சுல பார்த்தா சில்வர் தூக்கு, பிளாஸ்டிக் கூடை, சில்வர் டப்பான்னு பஸ்சுல இடம் அடைச்சுக்கிட்டு கண்டக்டர்கிட்டயும், கூட வரும் பயணிகள்கிட்டயும் திட்டு வாங்கிக்கிட்டு சகோதரிகள் வீட்டுக்கு போகும் சகோதரர்களை பார்க்கலாம்.

ஆனா, இப்ப ஸ்டைலா கடைல வாங்கின ஸ்வீட்டும், காரமும் அம்மா வீட்டிலிருந்து வருது. அதை அக்கம், பக்கம் மட்டும் கொடுத்திட்டு விட்டுடுறோம். என்னதான் வசதி, வாய்ப்புகள் வந்தாலும் எதையோ மிஸ் பண்ணுற உணர்வு இருக்கு.

Friday, November 01, 2013

நினைவில் நின்ற தீபாவளிகள்

நம்ம வாழ்நாளில் எத்தனையோ தீபாவளியை கொண்டாடி இருப்போம். இருந்தாலும் ஒரு சில தீபாவளிகள் நம் மனசை விட்டு போகவே போகாது. அப்படி என் மனசில் நின்ன தீபாவளிகள் சில.....,
 கசப்பு தீபாவளி: எனக்கு நினைவு தெரிஞ்ச முதல் தீபாவளி.., என் அத்தையின் தலை தீபாவளிதான். பாட்டியால தனியா சமாளிக்க முடியாதுன்னு நாங்க எங்க அப்பாவோட சொந்த கிராமத்து வீட்டுக்கு போயிருந்தோம். அப்பாவுக்கு ஆண் பிள்ளை இல்லாத காரணத்தால, அப்பா சம்பாத்தியம் மொத்தம் எனக்குதானேன்னு அத்தைக்கு பொருமல் கொஞ்சம். அதனால, என்னை பிடிக்காது. மாமா பட்டாசுகள் நிறைய வாங்கி வந்திருந்தார். சின்ன பிள்ளைதானே! பட்டாசை பார்த்ததும் ஆசை ஆசையாய் கிட்டக்க போனதும், மாமா துப்பாக்கியும், ரோல் கேப்பும் கொடுக்க பட்டாசு வெடிக்க ஆரம்பிச்சேன். இதப் பார்த்த அத்தை, கோவமா என் முதுகுல பட்டாசு வெடிச்சு தலை தீபாவளி கொண்டாடினாங்க. நினைவில் நின்ன முதல் தீபாவளியே கசப்பான தீபாவளியா மாறிடுச்சு.
ஆரம்ப தீபாவளி:  மத்தாப்பு, கம்பி, ஜாட்டி, பாம்பு மாத்திரை, சங்கு சக்கரம், பொட்டு வெடி, கேப், புஸ்வானம்ன்னு வெடிக்காத பட்டாசுகளை மட்டும் வாங்கி வந்ததுமில்லாம,  அதையும் என் கூடவே இருந்து வெடிக்க வச்ச தீபாவளி. பொட்டு வெடியும், கேப் ரோல் வெடிக்க மட்டும் ஃபுல் சுதந்திரம் தந்தார். வீட்டு வேலை டென்சன், கள்ளம் கபடுலாம் இல்லாம கொண்டான தீபாவளி.
தாவணி போட்ட தீபாவளி: அப்பாக்கிட்ட அடம்பிடிச்சு வாங்கிய புத்தம் புது பட்டு பாவாடையில் கொண்டாடிய தீபாவளி. என்னை வளர்த்த பக்கத்து வீட்டு அண்ணா வாங்கி தந்த லட்சுமி வெடி, யானை வெடி, அணுகுண்டு, பாய் பட்டாசுன்னு சொல்லும் லோக்கல்ல தயாரிச்ச பட்டாசுன்னு பெரிய பெரிய வெடிகளை பரிசாய் வாங்கிய தீபாவளி. டிவில பட்டாசு சுட்டு சுட்டு போடட்டுமா!? பாட்டும்..., நான் சிரித்தால் தீபாவளி பாட்டையும் கேட்டுக்கிட்டே பெரிய ஹீரோயின் போல தெருவுல போக வர இருக்கும் எங்க தெரு ஹீரோக்கள் முன்னாடி சீன் போட்ட தீபாவளி.

 தலை தீபாவளி: தாலி சரடின் மஞ்சள் மறையாமயும், முகத்துல கல்யாண களை போகும் முன்னே எங்களுக்கு தலை தீபாவளி. பொண்ணுக்கு பட்டு புடவையா?! சாதாரண சேலையா!? மாப்பிள்ளைக்கு பிரேஸ்லெட்டா!?மோதிரமா? எண்ணெய் தேய்க்க கல்யாண மனையை ஆர்டர் செய்து புதுசு வாங்கலாமா!? இல்ல பழசே போதுமான்னு பட்டி மன்றம் நடத்தாத குறையாய் பார்த்து பார்த்து எல்லாம் செய்யும் அம்மா, அப்பவோடு, தெருவே எங்களுக்காக காத்திருக்க..., எல்லோரையும் பார்க்க இருக்கும் கண்கள் போதாதுன்னு மெட்ராஸ் ஐயை வாங்கிட்டு வந்த என்னவரோடு தலைக்கு எண்ணெய் வைக்காமயே கொண்டாடிய தீபாவளி.
தூயாவின் முதல் தீபாவளி:  இருபது வருசத்துக்கப்புறம் எங்க வீட்டுக்கு புது வரவு. எங்கயோ யார் வீட்டுலயோ கதவை ஓங்கி சாத்தின சத்தம் கேட்டால் கூட அலறி அழுவா. அதனால, என் பாப்பாவுக்காக அக்கம் பக்கம் நாலு வீட்டுக்காரங்களும் வெடி வெடிக்காம சத்தம் வராத பட்டாசுகளை கொளுத்தி பத்தியம் இருந்து பாசத்தை காட்டிய தீபாவளி.


இனியாவின் தீபாவளி: அம்மாவை போலவே தைரியமான குட்டி பாப்பா இனியா. ஒன்பது மாசத்துலயே அம்மாவோடு சேர்ந்து மேடம் மத்தாப்பு கம்பியை பிடிச்சவங்க. பட்டாசு புகை பாப்பாக்கு ஆகாதுன்னு தாத்தா சொன்னதால அமைதியா தூரமா இருந்து பட்டாசுகளை பார்த்தும், கேட்டும் ரசிச்சாங்க.
ஓட்ட தீபாவளி: அப்புக்கு 4 வயசு. பாம்பை கையால் பிடிக்கும் புரியா வயசு. அக்காக்கள் போல பட்டாசை நானே கொளுத்துவேன்னு அடமா நின்னு தீபாவளியை கொண்டாடினவன். சங்கு சக்கரம் கொளுத்த.., பக்கத்துல இருக்கும் மத்தாப்பு பெட்டியை எடுக்க போய்.., சங்கு சக்கரத்தின் சீறும் நெருப்பு பட்டு மத்தாப்பு பெட்டி தீப்பிடிக்க கையில் தீக்காயம் பட்டு கதறி துடிக்க தூக்கிண்டு ஹாஸ்பிட்டல் ஓடிய தீபாவளி. என்னிக்கும் இது மறக்க கூடாதுன்னு அவன் கயில் இன்னமும் தழும்பு.

ஏக்க தீபாவளி: அப்பா, அம்மாவோடு கூட்டாய் இருந்து அம்மா கையால எண்ணெய் தேய்த்து, அப்பா கையால நூறு ரூபாய் வாங்கிய தீபாவளி. அம்மா, அப்பா, குடும்பம்ன்னு கொண்டாடிய குதூகல தீபாவளி. கடைக்கு போகனும், பலகாரம் சுடனும்ன்னு பொறுப்பில்லாம எல்லாமே என் அப்பா அம்மா பார்த்துக்குவாங்கன்னு கொண்டாடிய தீபாவளி. இனி வருமா?ன்னு நினைக்க வைக்கும் ஏக்க தீபாவளி.
பொறுப்பான தீபாவளி: கடைக்கு போய் வேண்டியதை வாங்கி, பலகாரம் சுட்டு, அக்கம் பக்கம் கொடுத்து.., வரவு செலவு பார்த்து...., பொறுப்பான பிள்ளையாய் புது வீட்டில் கொண்டாடும் தீபாவளி..., தூயா எப்ப வருவா?ன்னு வழி மேல் விழி வைத்து பார்த்திருக்க..., கண்காணிக்க அப்பா இல்லாம இந்த பயல் ஆட்டம் போடுவானேன்னு பயத்தோடு பட்டாசு பையின் மேல் ஒரு கண்ணுமாய் பொறுப்பான அம்மாவாய் கொண்டாடும் தீபாவளி.

தலை தீபாவளி கொண்டாடுறவங்களுக்கும்..., தலைக்கு குளிச்சு தீபாவளி கொண்டாடுறவங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.