Showing posts with label வெங்காயம். Show all posts
Showing posts with label வெங்காயம். Show all posts

Tuesday, April 23, 2019

குழம்பு வடகம் செய்வது எப்படி?! - கிச்சன் கார்னர்

கோடைக்காலம் தொடங்கிட்டாலே வெயில்,   வியர்வை, பிள்ளைகளின் லீவுன்னு பல இம்சைங்க வெசனப்பட்டுக்கிட்டு இருப்பேன் நான், ஆனா என் அம்மாவோ வத்தல், வடாம், வடக, ஊறுகாய் வத்தல் போடுறதுலயும், புளி வாங்கி உடைச்சு சுத்தம் செய்து சேமிச்சு வைக்குறதுலயும் பிசியாகிடும்.  இந்த வருசத்துக்கான வத்தல், வடகம்லாம் போட்டு எடுத்து வச்சாச்சு. 

தாளிப்பு வடகம்  செய்வது எப்படின்னு பார்க்கலாமா?!

தேவையான பொருட்கள்...
வெங்காயம் - 1கி
பூண்டு - 1/4 கி
உ.பருப்பு - 1/4கி
கடுகு - 1/4கி
கடலை பருப்பு - 100 கி
வெந்தயம் - 50கிராம்
மஞ்சப்பொடி 
கறிவேப்பிலை
விளக்கெண்ணெய்

சின்ன வெங்காயம் அல்லது பெரிய வெங்காயம் இதுல எது வேணும்ன்னாலும் எடுத்துக்கலாம். எங்க ஊரில் சின்ன வெங்காயம் அதிக விலைன்றதால பெரிய வெங்காயத்தில்தான் செய்வோம். வெங்காயத்தை சுத்தம் செய்து ரொம்ப சின்னதா வெட்டிக்கனும். சாப்பரோ இல்ல ஃபுட் பிராசரோ இருந்தா அதுலயும் வெட்டிக்கலாம். ஒன்னுப்போல வெங்காயம் வெட்டுப்படும்.  பூண்டை மிக்சில போட்டு ஒரு சுத்து சுத்திக்கனும்.  முழு  உளுத்தம்பருப்பா இருந்தால் ஊற வச்சு ஒன்னு ரெண்டா அரைச்சு சேர்த்துக்கலாம். உடைச்ச உளுத்தம்பருப்பா இருந்தால் அப்படியே சேர்த்துக்கலாம், 



வெட்டி வச்ச வெங்காயம், நசுக்கிய பூண்டு, ஊற வச்ச உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு, வெந்தயம், கடுகு, சுத்தம் செய்த கறிவேப்பிலை, மஞ்சப்பொடி, உப்பு சேர்த்து நல்லா கலந்து மூடி வைக்கனும். 


மறுநாள் காலையில் சுத்தமான காட்டன் துணியை விரித்து கொஞ்சம் வடகத்தை பரப்பி..
அதன்மீது பிள்ளையார் பிடிச்சு வைக்கனும்..
அதன்முன் வெற்றிலை பாக்கு வைத்து, கறிவேப்பிலை ஒருவாரம் தாக்குபிடிக்கும்.  வெங்காயம் பூண்டு ஓரிரு மாசம் தாக்குப்பிடிக்கும்.  பருப்புகள் ஆறு மாசம் வரை தாக்கு பிடிக்கும். அதுக்கு மேல போனலால் வெங்காய்ம் பூண்டு அழுகிடும், பருப்புகள் வண்டு வச்சிடும். ஆனா இதையெல்லாம் சேர்த்து வடகமா உன்னை நம்பி பிடிச்சு வைக்கிறேன். இது வருசக்கணக்கில் தாக்கு பிடிக்கனும். இதை சாப்பிடும் யாருக்கும் எந்த உடல் உபாதையும் வரக்கூடாதுன்னு வேண்டிக்கிட்டு...
வெங்காயம், பூண்டு, பருப்பு கலவையில் உப்பு போட்டிருப்பதால் அதில் நீர் விட்டிருக்கும். அதை மொத்தமா பிழிஞ்சுடாம வடகம் பிடிச்சு வைக்கனும். 
மாலையில் எடுத்து வைக்கும்போது அழுத்தி பிடிச்சு வைக்கனும் பிள்ளையாரா பிடிச்சு வச்ச கலவையையும் உருண்டையா பிடிச்சு வைக்கனும்
இரண்டாவது நாள் மாலையில் கைகளில் கொஞ்சம் விளக்கெண்ணெயை குழைச்சுக்கிட்டு  காய்ந்த வடகத்தினை நல்லா அழுத்தி உருண்டை பிடிக்கனும். காலையில் காய வைக்கும்போது அழுத்தினால் உருண்டை உடைஞ்சுடும். அதனால் மாலையில் எடுத்துவைக்கும்போது அழுத்தி பிடிச்சு வைக்கனும்... 
இப்படியே நாலு இல்ல ஐந்து நாள் வெயிலில் நல்லா காய வச்சு எடுத்து வச்சால் இரண்டு வருசம்கூட வடகம் நல்லா இருக்கும். ஆறு மாசத்துக்கொரு முறை மீண்டும் வெயிலில் எடுத்து வச்சா பூச்சி பிடிக்காது..  வடகம் பிடிக்குற அன்னிக்கு வீட்டு விலக்காகி இருந்தால்  பாட்டி யாரையும் தொட விடாது. கேட்டா சாப்பாடு தெய்வ அம்சம்ன்னு சொல்லும். 

கீரைக்குழம்பு, காரக்குழம்பு, சாம்பார், மீன்குழம்புக்குலாம் வடகம் போட்டு தாளிக்கலாம். எங்காவது டூர் போய்ட்டு ஊர் சுத்தி ஹோட்டல் சாப்பாட்டினால்  நாக்குலாம்  மரத்து போயி வீட்டுக்கு வரும்போது து. பருப்பு+ காய்ந்த மிளகாய்+ பூண்டு+தக்காளி சேர்த்து வேக வச்சு உப்பு, புளி சேர்த்து கடைஞ்சு, அடுப்பில் பாத்திரத்தை வச்சு எண்ணெய் ஊத்தி காய்ஞ்சதும் வடகம் போட்டு பொரிஞ்சதும் கடைஞ்ச சாம்பாரை ஊத்தி சூடு படுத்தி சாப்பிட்டா நாக்குக்கு உயிர் வந்திடும்.  பருப்பு ரொம்ப குழைஞ்சுடக்கூடாது. அதான் இதில் முக்கியம்.  நான்லாம் குழம்புக்கு வடகம் தாளிக்கும்போது தனியா கொஞ்சம் எடுத்து வச்சி சாப்பிடுவேன். 

உங்க வீட்டு செய்முறையை நீங்க சொல்லுங்க... 

நன்றியுடன்,
ராஜி

Tuesday, August 29, 2017

சத்தான முருங்கக்கீரை, கேழ்வரகு அடை - கிச்சன் கார்னர்

சிப்ஸ், கேக், பானிப்பூரி, பிஸ்ஸா, பர்கர்,சாக்லேட்ஸ் நான் சின்ன புள்ளையா இருந்தபோதுலாம் இவ்வளவு நொறுக்குத்தீனி இருந்துச்சான்னு தெரியலை. சம்பளத் தினத்தன்னிக்கு இனிப்பும், காரமும் வாங்கி வருவார். எப்பவாவது வீட்டுக்கு வரும் விருந்தாளிங்க இனிப்புலயும் காரத்துலயும் கால் கிலோவும் வாங்கி வருவாங்க. யாருக்காவது கல்யாணம் ஆனா, காராசேவு, மோட்டாசேவு, லட்டு, பாதுசா, ஜாங்கிரி,மிக்சர், அதிரசத்துல நம்ம அதிர்ஷ்டத்துக்கு ஏத்த மாதிரி கிடைக்கும்.

அப்பா கொடுக்கும் கைச்செலவு காசுல பொம்மை பிஸ்கட், தேன் மிட்டாய், கலர் அப்பளம், கொய்யாப்பழம், ஐஸ் இதெல்லாம் வாங்கலாம். எதாவது பண்டிகைன்னா முறுக்கு, தட்டைன்னு அம்மா செஞ்சு  கொடுப்பாங்க.  அது தவிர ஸ்கூல்ல இருந்து வந்ததும் தட்டுல சாதம் போட்டு தருவாங்க. மழை நேரத்துல எதாவது செஞ்சுத் தருவாங்க. அதுல உப்புமா, கோதுமை வடை, கேழ்வரகு அடை, கேழ்வரகு புட்டுன்னு எதாவது இருக்கும்.

நாம சின்ன வயசுல சாப்பிட்ட கேழ்வரகு அடை எப்படி செய்யுறதுன்னு இன்னிக்கு கிச்சன் கார்னர்ல பார்க்கலாம்.

தேவையானப் பொருட்கள்:
கேழ்வரகு மாவு : ஒரு டம்ப்ளர்
முருங்கைக் கீரை - ஒரு இணுக்கு
காய்ஞ்ச மிளகாய் -2
பூண்டு - பத்து பல்
பெரிய வெங்காயம் - 1
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் -தேவையான அளவு
ஒரு பாத்திரத்துல கேழ்வரகு மாவை நல்லா சலிச்சுக்கிட்டு, அதுல சுத்தம் செஞ்ச முருங்கைக்கீரையை போடுங்க.
கழுவி பொடியா நறுக்கின வெங்காயத்தைப் போடுங்க. 
பூண்டையும், மிளகாயையும் மிக்ஸில போட்டு அரைச்சு சேருங்க.
தேவையான அளவு உப்பு சேருங்க.
கொஞ்சம், கொஞ்சமா தண்ணி சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு மாவு பிசைஞ்சுக்கோங்க.
ஒரு பிளாஸ்டிக் பேப்பர்ல லேசா எண்ணெய் தடவி, பிசைஞ்சு வச்சிருக்கும் மாவுல கொஞ்சம் எடுத்து வட்டமா தட்டிக்கோங்க. மாவு தண்ணியா இருக்குற மாதிரி இருந்தா துணில தட்டிக்கலாம். நான் துணிலதான் தட்டிக்கிட்டேன்.

அடுப்புல, தோசைக்கல் சூடானதும், வட்டமா தட்டின மாவைப் போட்டு லேசா எண்ணெய் ஊத்தி ரெண்டுப் பக்கமும் சிவக்க விட்டு எடுங்க.
கேழ்வரகு அடை ரெடி! சூடான அடைக்கு வெல்லம் சேர்த்துக்கிட்டா நல்லா இருக்கும். சிலர், கடலைப் பருப்பு, உளுத்தம்பருப்பு போட்டு வெங்காயம், கீரைலாம் லேசா வதக்கியும் சேர்ப்பாங்க. ப.மிளகாய் கூட சேர்த்துக்கலாம்.

மாலை நேரத்துல அதிகம் எண்ணெய் சேர்க்காத பாரம்பரிய உணவு சாப்பிட்ட மாதிரியும் ஆச்சு. வெல்லத்தில் இருக்கும் இரும்பு சத்து ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும்,  முருங்கைக் கீரையில் இருக்கும்  வைட்டமின் ஏ, பி, சி சத்துக்களும், சுண்ணாம்புச்சத்து, புரதம், இரும்பு, கந்தகம், குளோரின், தாமிரம், கால்சியம், மெக்னீஷியம், தாது உப்புகளும் உடம்பில் சேர்ந்த மாதிரியும் ஆச்சு!

கேழ்வரகு அடையை ஸ்கூல்ல இருந்து வந்ததும் என் பசங்க விரும்பி சாப்பிடுவாங்க. மாசம் ஒரு தரமோ இல்ல ரெண்டு தரமோ செஞ்சுக் கொடுப்போம். 

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...

நன்றியுடன்
ராஜி. 

Tuesday, March 11, 2014

வேர்க்கடலை அரைச்சு விட்ட கத்திரிக்காய் காரக்குழம்பு - கிச்சன் கார்னர்

பத்தாவது படிச்சிக்கிட்டு இருந்த பக்கத்து வீட்டு பொண்ணு இந்தக் குழம்பை செய்வா. அதன் ருசி பசங்களுக்குப் பிடிச்சுப் போகவே அவக்கிட்ட கேட்டு அதே மாதிரி சில மாற்றங்களுடன் நான் செய்ய ஆரம்பிச்சேன். தூயா எப்போ வீட்டுக்கு வந்தாலும் இந்தக் குழம்பு கண்டிப்பா அவளுக்குச் செஞ்சு கொடுத்துடனும்.

தேவையானப் பொருட்கள்:
சின்ன சின்னதான பிஞ்சுக் கத்திரிக்காய்- 4
வேர்க்கடலை - ஒரு கைப்பிடி
சீரகம் - சிறிது
கடுகு - சிறிது
எண்ணெய் - 2  டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 1
தக்காளி - 1
புளி - எலுமிச்சை அளவு
மிளகாய் தூள் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப

வெங்காயம், தக்காளியை கழுவி பொடியா வெட்டிக்கோங்க, புளியை ஊற வைங்க. கத்திரிக்காயை முழுசா இருக்குமாறு நீள வாக்குல வெட்டி தண்ணில போட்டுக்கோங்க. இல்லாட்டி கத்திரிக்காய் கறுத்துடும். வேர்க்கடலையை அப்படியே மிக்சில போட்டு தண்ணி விட்டு கொஞ்சம் கரகரப்பா அரைச்சுக்கோங்க.

வாணலில ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊத்தி கத்திரிக்காய்களை வதக்கி எடுத்து வச்சுக்கோங்க.


மீண்டும் வாணலில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊத்தி காய்ஞ்சதும், கடுகு, சீரகம் போட்டு பொரிய விடுங்க.

வெட்டி வச்சிருக்கும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமா வதக்குங்க.

தக்காளி சேர்த்து வதக்குங்க.

தேவையான அளவு உப்பு சேர்த்து தக்காளி மசியும் வரை வதக்குங்க.

அரைச்சு வச்சிருக்கும் வேர்க்கடலை விழுதை சேர்த்து லேசா வதக்குங்க.


மிளகாய்தூள் சேர்த்து லேசா வதக்குங்க.


மிளகாய்தூள் வதக்கித் தேவையான அளவு தண்ணி, கத்திரிக்காய் சேர்த்து நல்லா கொதிக்க விடுங்க.



மிளகாய் தூள் வாசனை போனதும் புளிக்கரைசலை ஊத்தி, கறிவேப்பிலை சேர்த்து நல்லா கொதிக்க விடுங்க.


கத்திரிக்காய் காரக்குழம்பு ரெடி. இது கொஞ்சம் திக்கா இருந்தாதான் நல்லா இருக்கும். தேவைப்பட்டா பூண்டு சேர்த்துக்கலாம்.

கோடைக்காலம் வந்திடுச்சே! கஞ்சி வத்தல்லாம் விட்டு வச்சுக்கிட்டா உபயோகமா இருக்கும்ல. அதனால, கஞ்சி வத்தல் செய்யுறது எப்படின்னு பார்க்கலாம்.

Tuesday, February 18, 2014

கடலைப் பருப்பு அரைச்சு விட்ட குருமா- கிச்சன் கார்னர்

காலைல காரசாரமா சட்னி வச்சா வூட்டுக்காரருக்குப் பிடிக்குறதில்ல. சாம்பார் வச்சா சப்புன்னு இருக்குன்னு பசங்களுக்குப் பிடிக்க மாட்டேங்குது! டெய்லியும் இட்லிக்கு தொட்டுக்க என்னதான் செய்யுறதுன்னு மண்டையைப் பிச்சுக்காதக் குறைதான்! குருமா செய்யலாம்ன்னு நினைச்சா பட்டாணி ஊற வைக்க மறந்திருப்போம்!

என் ஓரகத்தி இந்தக் குருமாவைச் செஞ்சாங்க. நல்லா இருந்துச்சு. நானும் அதேப்போல செய்ய ஆரம்பிச்சுட்டேன்.

தேவையானப் பொருட்கள்:
கடலைப்பருப்பு - கைப்பிடி
வெங்காயம் - 2
தக்காளி - 2
ப.மிளகாய் - 2
கறிவேப்பிலை, கொத்தமல்லி - கொஞ்சம்
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 5 பல்
தேங்காய் - கொஞ்சம்
சோம்பு -கொஞ்சம்
பட்டை- ஒரு துண்டு
கிராம்பு- 2
எண்ணெய் -2 தே.கரண்டி
கடுகு -கொஞ்சம்
மிளகாய் தூள் - தேவைக்கேற்ப
உப்பு -தேவைக்கேற்ப

வெங்காயம், தக்காளி, இஞ்சி, தேங்காயைக் கழுவி வெட்டி வச்சுக்கோங்க.



வாணலியை அடுப்பில் வச்சு சூடானதும் எண்ணெய் ஒரு டீஸ்பூன் ஊத்தி கடலைப்பருப்புப் போடுங்க.

பட்டை, சோம்பு, கிராம்புலாம் போட்டு லேசா வறுங்க. கடலைப்பருப்பு பொன்னிறமாகனும்ன்னு அவசியமில்ல.

வெட்டி வச்சிருக்கும் வெங்காயத்தில் பாதி போட்டு லேசா வதக்குங்க.

பச்சை மிளகாயை போட்டு வதக்குங்க.


வெட்டி வச்சிருக்கும் தக்காளில முக்கால் வாசி சேர்த்து ரெண்டு நிமிசம் வதக்குங்க. 

வெட்டி வச்ச இஞ்சி சேர்த்துக்கோங்க.

பூண்டு சேர்த்துக்கோங்க, தோல் உரிக்கனும்ன்னு அவசியமில்ல.

அடுத்து தேங்காய் சேர்த்து லேசா வதக்கி, அடுப்பிலிருந்து இறக்கி சூடு ஆறினதும், மிக்சில போட்டு கரகரப்பா அரைச்சுக்கோங்க.

வாணலில ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊத்தி காய்ந்ததும் கடுகுப் போட்டு பொரிய விடுங்க.
மிச்சமிருக்கும் வெங்காயத்தை போட்டு பொன்னிறமா வதக்கிக்கோங்க.

மிச்சமிருக்கும் தக்காளி சேருங்க.


உப்பு சேர்த்து தக்காளி வேகும் வரை வதக்கிக்கோங்க.

கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து வதக்குங்க.

தேவையான அளவு மிளகாய்த்தூள் சேர்த்து வதக்குங்க.



கொஞ்சம் தண்ணி ஊத்தி, மஞ்சப்பொடி சேர்த்து நல்லா கொதிக்க விடுங்க.


மிளகாய் தூள் வாசனை போகும் வரை கொதிக்க விட்டு அரைச்சு வச்சிருக்கும் கடலைப்பருப்பு விழுதை சேர்த்துக் கொதிக்க விடுங்க.


கொஞ்ச நேரம் கொதிக்க விட்டு இறக்கிடுங்க. இட்லி, தோசைக்கு நல்ல மேட்சா இருக்கும்..

டிப்ஸ்: கடலைப்பருப்புலாம் வறுத்ததால ரொம்ப நேரம் கொதிக்க விடனும்ன்னு அவசியமில்ல. ஒரு ரெண்டு நிமிசம் கொதிச்சாலே போது. சாம்பார் போல தண்ணியா இல்லாம, குருமா போல கெட்டியா இல்லாம இருந்தா நல்லா இருக்கும். க்டலைப்பருப்பு கொஞ்சமா சேர்த்துக்கோங்க. அதிகமா சேர்த்தா ரொம்ப கொழகொழன்னு இருக்கும். அரைக்கும்போது கரகரப்பா அரைச்சுக்கோங்க.

மீண்டும் அடுத்த வாரம் ஈசியான ரெசிபியோட சந்திக்கலாம்.

இங்க மட்டுமில்லாம இன்னொரு இடத்துலயும் தற்காலிகமா ஒரு வாரத்துக்கு நம்ம கடை ஓப்பன் பண்ணி இருக்கு. அங்க வந்து உங்க ஆதரவு தருமாறு கேட்டுக் கொல்கிறேன்.

Tuesday, February 11, 2014

கேழ்வரகு அடை - கிச்சன் கார்னர்

சிப்ஸ், கேக், பானிப்பூரி, பிஸ்ஸா, பர்கர்,சாக்லேட்ஸ் நான் சின்ன புள்ளையா இருந்தபோதுலாம் இவ்வளவு நொறுக்குத்தீனி இருந்துச்சான்னு தெரியலை. சம்பளத் தினத்தன்னிக்கு இனிப்பும், காரமும் வாங்கி வருவார். எப்பவாவது வீட்டுக்கு வரும் விருந்தாளிங்க இனிப்புலயும் காரத்துலயும் கால் கிலோவும் வாங்கி வருவாங்க. யாருக்காவது கல்யாணம் ஆனா, காராசேவு, மோட்டாசேவு, லட்டு, பாதுசா, ஜாங்கிரி,மிக்சர், அதிரசத்துல நம்ம அதிர்ஷ்டத்துக்கு ஏத்த மாதிரி கிடைக்கும்.

அப்பா கொடுக்கும் கைச்செலவு காசுல பொம்மை பிஸ்கட், தேன் மிட்டாய், கலர் அப்பளம், கொய்யாப்பழம், ஐஸ் இதெல்லாம் வாங்கலாம். எதாவது பண்டிகைன்னா முறுக்கு, தட்டைன்னு அம்மா செஞ்சு  கொடுப்பாங்க.  அது தவிர ஸ்கூல்ல இருந்து வந்ததும் தட்டுல சாதம் போட்டு தருவாங்க. மழை நேரத்துல எதாவது செஞ்சுத் தருவாங்க. அதுல உப்புமா, கோதுமை வடை, கேழ்வரகு அடை, கேழ்வரகு புட்டுன்னு எதாவது இருக்கும்.

நாம சின்ன வயசுல சாப்பிட்ட கேழ்வரகு அடை எப்படி செய்யுறதுன்னு இன்னிக்கு கிச்சன் கார்னர்ல பார்க்கலாம்.

தேவையானப் பொருட்கள்:
கேழ்வரகு மாவு : ஒரு டம்ப்ளர்
முருங்கைக் கீரை - ஒரு இணுக்கு
காய்ஞ்ச மிளகாய் -2
பூண்டு - பத்து பல்
பெரிய வெங்காயம் - 1
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் -தேவையான அளவு

ஒரு பாத்திரத்துல கேழ்வரகு மாவை நல்லா சளிச்சுக்கிட்டு, அதுல சுத்தம் செஞ்ச முருங்கைக்கீரையை போடுங்க.

கழுவி பொடியா நறுக்கின வெங்காயத்தைப் போடுங்க. 

பூண்டையும், மிளகாயையும் மிக்ஸில போட்டு அரைச்சு சேருங்க.

தேவையான அளவு உப்பு சேருங்க.

கொஞ்சம், கொஞ்சமா தண்ணி சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு மாவு பிசைஞ்சுக்கோங்க.

ஒரு பிளாஸ்டிக் பேப்பர்ல லேசா எண்ணெய் தடவி, பிசைஞ்சு வச்சிருக்கும் மாவுல கொஞ்சம் எடுத்து வட்டமா தட்டிக்கோங்க. மாவு தண்ணியா இருக்குற மாதிரி இருந்தா துணில தட்டிக்கலாம். நான் துணிலதான் தட்டிக்கிட்டேன்.


அடுப்புல, தோசைக்கல் சூடானதும், வட்டமா தட்டின மாவைப் போட்டு லேசா எண்ணெய் ஊத்தி ரெண்டுப் பக்கமும் சிவக்க விட்டு எடுங்க.

கேழ்வரகு அடை ரெடி! சூடான அடைக்கு வெல்லம் சேர்த்துக்கிட்டா நல்லா இருக்கும். சிலர், கடலைப் பருப்பு, உளுத்தம்பருப்பு போட்டு வெங்காயம், கீரையை லேசா வதக்கியும் சேர்ப்பாங்க. ப்.மிளகாய் கூட சேர்த்துக்கலாம்.

மாலை நேரத்துல அதிகம் எண்ணெய் சேர்க்காத பாரம்பரிய உணவு சாப்பிட்ட மாதிரியும் ஆச்சு. வெல்லத்தில் இருக்கும் இரும்பு சத்து ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும்,  முருங்கைக் கீரையில் இருக்கும்  வைட்டமின் ஏ, பி, சி சத்துக்களும், சுண்ணாம்புச்சத்து, புரதம், இரும்பு, கந்தகம், குளோரின், தாமிரம், கால்சியம், மெக்னீஷியம், தாது உப்புகளும் உடம்பில் சேர்ந்த மாதிரியும் ஆச்சு!

கேழ்வரகு அடையை ஸ்கூல்ல இருந்து வந்ததும் என் பசங்க விரும்பி சாப்பிடுவாங்க. மாசம் ஒரு தரமோ இல்ல ரெண்டு தரமோ செஞ்சுக் கொடுப்போம். 

மீண்டும் அடுத்த கிச்சன் கார்னர்ல ஈசியான ரெசிபியோடு சந்திக்கலாம்.