Sunday, September 19, 2010

சொல்பேச்சுக் கேட்கும் பிள்ளை

மழை பெய்யும்போது
அதில் நனைந்து பார்
என் கண்ணீர்
துளிகள் அதில் கலந்திருக்கும்..,
உன்னை பிரிந்திருக்கும்
சோகம் எனக்கு
இப்போது இல்லை
தயவு செய்து
கனவில்
வருவதை மட்டும்
நிறுத்திவிடாதே.!



இமைக்காமல் பார்க்கும் உன் கண்கள்
எனக்கு வேண்டும், என் உயிரை
எடுத்துக் கொள், உன் கண்ணில் நான்
இருக்கும்போது இந்த உடல் எதற்கு?


நான்  என்ன சொன்னாலும் நீ கேட்பாய்
என்று தெரியும். ஆனால் இந்த அளவிற்கு
கேட்பாய் என்று தெரியாது,ஏதோ
கோபத்தில் வாய் தவறி
என்னை மறந்துவிடு"
 என்று சொன்னால்,
 இப்படி ஒரேயடியாகவா 
மறந்து விடுவது????





No comments:

Post a Comment