Thursday, September 02, 2010

தனிமை வேண்டும்

தனியே விடு,
என்னை தனியே விடு,
அழ வேண்டும் நான்,
என்னை தனியே விடு,

பெருஞ்சுமை நெஞ்சில் கனக்கிறது,
ஓர் பிரளயம் என்னுள் நடக்கிறது,
நெருஞ்சியின் மீது நடப்பதுப் போல,
என் நினைவுகள் என்னை வதைக்கின்றது.

உடம்பே வாயாய் அழவேண்டும்,
நான் "ஒ"வென்றலறி விழவேண்டும்.
வடிகால் தேவை.
இல்லையெனில் இவ்வ்வாரிதி என்னை விழுங்கிவிடும்.

ஊற்று மனற்கரைப் போல்
மனம் உருகி வழிந்திட வேண்டும்.
நீற்றுத் துகளெனத் துன்பம்
நீங்கிப் பொடிந்திட வேண்டும்.

வெந்த பசும்புண் போலே- இதயம்,
இந்த அழுகையின்றி மருத்துவத்தால் ஏதும் பயனுண்டோ?
தனியே விடு என்னை.
ஒற்றை சிறிய கிளை- முற்றி உடைந்த
பலாப் பழத்தைப் பற்றியே தாங்கிடுமோ?
தளைகளை விட்டு விடுபடவேண்டும்.
தாங்கும் சுமைகளை இறக்கிட வேண்டும்.

நன்றி,
iyarkai-kathalan.blogspot.com

No comments:

Post a Comment