Monday, September 27, 2010

உன்னை எப்படி மறப்பேனடி?

உறங்கும்போது காதுவரை போர்த்திவிட்டு
தலைக்கோதும் கனிவு,

நான் பசியாற பார்த்து,
உன் பசி தணிந்த பாசம்,

துயரத்தில் சோர்ந்திருக்கும் வேளையில்
தோள் கொடுக்கும் தோழமை,

அருகிலிருக்கும்போது சண்டையிட்டு
கோபப்படுவதுபோல் நடிக்கும் நடிப்பு,

பிரிந்திருக்கும்போது
துடிக்கும் துடிப்பு.

உடல் நலனில்லாமல் இருக்கும்போது
திருநீறுப் பூசி,
எனக்காக நோன்பிருக்கும்
அக்கறை,
நகக்கணுக்களில் அழுக்கெடுக்கும் பரிவு

இப்படி எத்தனை? எத்தனை?
உன் காதலுக்கு ஈடு செய்ய முடியாதபடி
என்னை தவிக்கவிட்டு...,

என் இரண்டாவது தாயாகவே மாறிய
உன்னை எப்படி மறப்பேனடி?






No comments:

Post a Comment