Saturday, October 19, 2013

காத்திருக்கிறோம்.....,


என் விழி அசைவு சொல்லாத
காதலை..,
என் இதழ் சிந்தும் வார்த்தைகள் 
சொல்லிவிடப்போகிறது!!??

காற்றில் கரைந்து போகும்
என் வார்த்தைகளை விட,
ஆயிரம் அர்த்தங்கள் நிறந்த, என் 
மௌனத்தை வாசித்து பார்!!
என் காதலின் ஆழம் புரியும்!!

வார்த்தைகளால் சொல்லித்தான்
என் காதல் உனக்கு 
புரிய வேண்டுமென்றால்,
அது,
என்னிடமே இருக்கட்டும்!!

என்றாவது என் மனது உனக்கு
புரிய வரும்.., அந்நாள் வரை....,
நானும், என் காதலும்..,
காத்திருக்கிறோம்!!

16 comments:

  1. வணக்கம்
    கவிதையின் வரிகள் அழகு ரசித்தேன்.வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. #மௌனத்தால் சொல்ல முடியாவிட்டால்
    மைக் போட்டும் சொல்லமுடியாது
    காதலை .!#இது கடந்த ஆண்டு நான் எழுதியது...உங்கள் கவிதைப் போன்றே 'அருமையாய் 'இருக்கா ?
    த.ம.2

    ReplyDelete
  3. அருமை... மௌனம் சொல்லாத வார்த்தைகள் இல்லை தான்...

    வாழ்த்துக்கள் சகோதரி...

    ReplyDelete
  4. புரிந்தால் காதல்

    ReplyDelete
  5. காதல் கௌரவிக்கப்படுகிறது... ஏற்றுக்கொள்ளும்போது... புரிதலோடு ஏற்றுக்கொள்ளும்போது... நம்பிக்கையுடன் ஏற்றுக்கொள்ளும்போது.... கோபதாபங்கள், செல்ல ஊடல்கள் அவசியம் தான் காதலை உற்சாகப்படுத்த.. ஆனால் புரியப்படவில்லை என்றால் அந்த காதலுக்கு ஒரு அர்த்தமே இல்லை என்றே சொல்லலாம்... அற்புதம் ராஜி கவிதை வரிகள் சொல்லும் அர்த்தங்கள் ஒரு கோடி.. மௌனத்திலும் விஷயம் இருக்கிறது. காத்திருப்பு தொடரட்டும் நம்பிக்கையுடன்...

    த.ம.3

    ReplyDelete
  6. காதலில் மௌனம் ஏற்படுத்தும் தாக்கமும் காத்திருத்தலும் அற்புதமான விஷயங்கள்...
    கவிதையின் கருவும், வார்த்தை நடையும் யதார்த்தமாய், மிக அருமையாய் ரசிக்கும்படி இருந்தது....

    ReplyDelete
  7. "காற்றில் கரைந்து போகும் வார்த்தைகளை விட,
    ஆயிரம் அர்த்தங்கள் நிறைந்த, என்
    மௌனத்தை வாசித்து பார்!! என் காதலின் ஆழம் புரியும்!" அருமை .

    ReplyDelete
  8. கண்களால் சொல்ல முடியாததை இதழ்கள் சொல்ல முடியாது என்பதை சொல்கிறது கவிதை ரசித்தேன்.

    ReplyDelete
  9. விழி மொழின் வலிமையை தமிழ் மொழியில் பதிவிட்டிருப்பது அருமை...

    ReplyDelete
  10. காதல் வார்த்தைகளால் மட்டும் வருவது இல்லை! உண்மைதான்! அருமையான படைப்பு! நன்றி!

    ReplyDelete
  11. மௌனத்தைப் புரிந்து கொண்டால் சரி.

    ReplyDelete
  12. இனிதான ஆக்கம்..

    என் உள்ளுணர்வை
    மதிக்கத் தெரிந்தவன் நீ
    என் மௌனத்தின்
    மொழியும் புரியுமல்லவா
    ===
    மௌனமொழி எவ்வளவு சக்தி வாய்ந்தது..
    சொல்லாத ஒரு சொல்லிற்கு பொருள் ஆயிரம்...
    ==
    அழகான படைப்பு சகோதரி..
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  13. //
    வார்த்தைகளால் சொல்லித்தான்
    என் காதல் உனக்கு
    புரிய வேண்டுமென்றால்,
    அது,
    என்னிடமே இருக்கட்டும்!!//


    அருமையா இருக்கு அக்கா... செம்ம லைன்ஸ்..

    ReplyDelete