வீட்டு வரவு செலவு கணக்கை என் மக தூயாக்கிட்ட கூட டிஸ்கஸ் பண்ணுவார் என் அப்பா. ஆனா, என்னை ஆட்டத்துல சேர்த்துக்க மாட்டாங்க. வூட்டுக்காரரோட ஏடிஎம் கார்ட், கிரெடிட் கார்ட் நம்பர் என் பையனுக்கு கூட தெரியும், ஆனா, எனக்கு தெரியும். நானா எதையாவது சமைக்க போனாலும் அதெல்லாம் வேணாம் இன்னிக்கு இட்லியும் , புதினா சட்னி மட்டும் செஞ்சுடு போதும்ன்னு அம்மா சொல்லுவாங்க. ரேங்க் கார்டுல நான் கையெழுத்து போட போனா, நீ போடாதேம்மா, உன் அம்மாக்கு என்ன தெரியும்ன்னு அவங்ககிட்ட வாங்கி வந்திருக்கேன்னு மிஸ் திட்டுவாங்க. அதனால, அப்பா இல்ல தாத்தா போடட்டும்ன்னு சொல்லிடுவாங்க என் புத்திர சிகாமணிகள்.
இப்படி நண்டு, சிண்டு நட்டுவாக்களின்னு யாருமே மதிக்காத என்னை திண்டுக்கல் தனபாலன் அண்ணா தன் முதல் பதிவின் சந்தோசம் ன்ற தொடர் பதிவுக்கு கூப்பிட்டிருக்கார். அவர் மரியாதைக்கு பதில் மரியாதை செஞ்ச மாதிரியும் ஆச்சு. ஒரு பதிவு தேத்துனது மாதிரியும் ஆச்சுன்னு எழுத ஆரம்பிச்சாச்சு!!
எப்பவாவது எல்லாரும் யாராவது கவன மறதியா கவனிக்காத பேப்பரும், பேனாவும் கிடைச்சா எதாவது கிறுக்க ஆரம்பிச்சுடுவேன். அதை படிச்ச என் ஃப்ரெண்ட் நல்லா இருக்கே!! இதை என் பிளாக்குல போடுறேன்னு சொல்லி அடிக்கடி போடுவாங்க. அப்புறம், என் கவிதைக்காக தனியா பிளாக் ஓப்பன் பண்ணி பதிவு போட்டு வந்தாங்க.
அப்போதான், கம்ப்யூட்டர் பழக கிளாசுக்கு போனேன். கிளாசுல தினமலர் மட்டும் படிக்க அனுமதி உண்டு. .சார் இல்லாத டைம்ல என் கவிதைகள் வந்த பிளாக்குக்கு போய் வருவேன். ஒரு பிளாக் ஓப்பன் பண்ணனும்ன்னு நினைச்சு என் ஃப்ரெண்டு கிட்ட கூட உதவி கேக்காம, இந்த பிளாக்கை ஆரம்பிச்சு ஒரு கவிதையை போட்டுட்டு என் ஃப்ரெண்டுக்கு உடனே மெசேஜ் பண்ணிட்டு வீட்டுக்கு வந்துட்டேன்.
என்ன ஆச்சோ!? சரியா வந்ததா?!ன்னு குழப்பத்துலயே மறுநாள் கிளாசுக்கு போனா அங்க சார் இருந்தார். புதுசா கல்யாணம் ஆன ஜோடிலாம் ஆடி மாசம் தொடங்குறதுக்கு முன் ஒரு வாரம் எப்படி பிரியாம இருப்பாங்களோ அதுப்போல கம்ப்யூட்டர் செண்டரை விட்டு இந்த பக்கம் அந்த பக்கம் நகரலை. இப்படியே ரெண்டு நாள் போச்சு. மூணாவது நாளும் வந்து தன் சீட்டுல உக்காந்து கண்ணுல வெளக்கெண்ணெய் ஊத்திக்கிட்டு கிளாசை பார்த்துக்கிட்டு இருந்தார்.
திடீர்ன்னு ஒரு போன்கால். ஒரு பத்து வருசத்துக்கு முந்தி ஆடி மாசம் பிரிஞ்சிருக்குற புருசனை, ஆஃபீஸ் ஹவர்ஸ்ல, ஆஃபீஸ் போன்ல புது பொண்டாட்டி கூப்பிட்டா எப்படி பம்மிக்கிட்டு பேசுவாரோ அதுப்போல ஏதோ குசுகுசுன்னு பேசிட்டு, கொஞ்ச நேரத்துல வந்துடுறேன்னு சொல்லி வெளில போய்ட்டார்.
எல்லாரும் அவ்சர அவசரமா விஜய் போட்டோ கேலரியை பார்க்குறதும், சூர்யா கல்யாண ஆல்பத்தை பார்க்குறதும், அஜீத் பொண்ணை பார்க்குறதுமா பிசியா இருந்தாங்க. நான் பட்டுன்னு என் பிளாக்கை தட்டி பார்த்தா என் ஃப்ரெண்ட் ஆதிரை ”இத்தனையும் நீயே செய்து கவிதை எழுதியது மகிழ்ச்சியா இருக்கு”ன்னு கமெண்ட் போட்டுட்டு போய்ட்டாங்க. அதை பார்த்ததும் ஆவணி மாசம் முதல் சந்தோசப்படுற புது ஜோடி மாதிரி விசில் அடிக்காத குறை.
அப்புறமும், ரொம்ப நாளைக்கு என் பதிவுல ஆதிரை மட்டும்தான் கருத்து சொல்லுவாங்க. அடுத்து “சிரிப்பு போலீஸ்” ரமேஷ் வந்து கருத்து சொன்னதோடு கமெண்ட் மாட்ரேஷன் வைக்காதீங்க. கண்ணை கட்டுதுன்னு ஒரு அட்வைஸ் சொல்லிட்டு போனார். அங்க ஆரம்பிச்சு, கோகுலத்தில் சூரியன் வெங்கட், நாகராஜ சோழன், வெறும்பய, வசந்த், பன்னிக்குட்டி ராமசாமி, அருண்பிரசாத், சிபி சார், நாஞ்சில் மனோ அண்ணா, தமிழ்வாசி பிரகாஷ், சௌந்தர், கருண், மதுரை தமிழன், நண்டு நொரண்டு, விக்கியண்ணா, ராஜா, கோவை நேரம் ஜீவா, திண்டுக்கல் தனபாலன் அண்ணா, கணேஷ் அண்ணா, மோகன் உமார் அண்ணா, மதுமதி, ரமணி ஐயா, சென்னைப்பித்தன் ஐயா! கோமதி அரசு, கூடல் பாலா, கண்ணதாசன், சக்கரை கட்டி, ராஜேஸ்வரி அம்மா, வெங்கட் நாகராஜ், கீதமஞ்சரி, விச்சு, சசி, அருணா, ரூபிகா, எழில், சங்கவின்னு பயணப்பட்டு, ஜீவன் சுப்பு, கோவை ஆவி, ரூபக் குமார் ராஜலட்சுமி பரமசிவம், டி.ஆர்.பி ஜோசப், வரை வந்து நிக்குது.
என் முதல் பதிவான தாயுமான சுவாமி கடவுள் படிச்சு பாருங்க. என்ன காரணம்ன்னு தெரியலை. தோழி ஆதிரையோட கருத்து காணோம். நான் போடுற மொக்கைகளுக்கு தவறாம வந்து போகும் அனைத்து சகோக்களுக்கும் கோடானு கோடி நன்றிகளை இந்த சமயத்துல சொல்லிக்குறேன்.
தொடர்பதிவுன்னா யாரையாவது அஞ்சு பேரை கோர்த்து விடனுமாம் இல்லாட்டி ரம்யா கிருஷ்ணன் சாரி பாதாள பைரவி நைட்டு கனவுல வந்து கண்ணை குத்திடுமாம். அதனால,
அப்போதான், கம்ப்யூட்டர் பழக கிளாசுக்கு போனேன். கிளாசுல தினமலர் மட்டும் படிக்க அனுமதி உண்டு. .சார் இல்லாத டைம்ல என் கவிதைகள் வந்த பிளாக்குக்கு போய் வருவேன். ஒரு பிளாக் ஓப்பன் பண்ணனும்ன்னு நினைச்சு என் ஃப்ரெண்டு கிட்ட கூட உதவி கேக்காம, இந்த பிளாக்கை ஆரம்பிச்சு ஒரு கவிதையை போட்டுட்டு என் ஃப்ரெண்டுக்கு உடனே மெசேஜ் பண்ணிட்டு வீட்டுக்கு வந்துட்டேன்.
என்ன ஆச்சோ!? சரியா வந்ததா?!ன்னு குழப்பத்துலயே மறுநாள் கிளாசுக்கு போனா அங்க சார் இருந்தார். புதுசா கல்யாணம் ஆன ஜோடிலாம் ஆடி மாசம் தொடங்குறதுக்கு முன் ஒரு வாரம் எப்படி பிரியாம இருப்பாங்களோ அதுப்போல கம்ப்யூட்டர் செண்டரை விட்டு இந்த பக்கம் அந்த பக்கம் நகரலை. இப்படியே ரெண்டு நாள் போச்சு. மூணாவது நாளும் வந்து தன் சீட்டுல உக்காந்து கண்ணுல வெளக்கெண்ணெய் ஊத்திக்கிட்டு கிளாசை பார்த்துக்கிட்டு இருந்தார்.
திடீர்ன்னு ஒரு போன்கால். ஒரு பத்து வருசத்துக்கு முந்தி ஆடி மாசம் பிரிஞ்சிருக்குற புருசனை, ஆஃபீஸ் ஹவர்ஸ்ல, ஆஃபீஸ் போன்ல புது பொண்டாட்டி கூப்பிட்டா எப்படி பம்மிக்கிட்டு பேசுவாரோ அதுப்போல ஏதோ குசுகுசுன்னு பேசிட்டு, கொஞ்ச நேரத்துல வந்துடுறேன்னு சொல்லி வெளில போய்ட்டார்.
எல்லாரும் அவ்சர அவசரமா விஜய் போட்டோ கேலரியை பார்க்குறதும், சூர்யா கல்யாண ஆல்பத்தை பார்க்குறதும், அஜீத் பொண்ணை பார்க்குறதுமா பிசியா இருந்தாங்க. நான் பட்டுன்னு என் பிளாக்கை தட்டி பார்த்தா என் ஃப்ரெண்ட் ஆதிரை ”இத்தனையும் நீயே செய்து கவிதை எழுதியது மகிழ்ச்சியா இருக்கு”ன்னு கமெண்ட் போட்டுட்டு போய்ட்டாங்க. அதை பார்த்ததும் ஆவணி மாசம் முதல் சந்தோசப்படுற புது ஜோடி மாதிரி விசில் அடிக்காத குறை.
அப்புறமும், ரொம்ப நாளைக்கு என் பதிவுல ஆதிரை மட்டும்தான் கருத்து சொல்லுவாங்க. அடுத்து “சிரிப்பு போலீஸ்” ரமேஷ் வந்து கருத்து சொன்னதோடு கமெண்ட் மாட்ரேஷன் வைக்காதீங்க. கண்ணை கட்டுதுன்னு ஒரு அட்வைஸ் சொல்லிட்டு போனார். அங்க ஆரம்பிச்சு, கோகுலத்தில் சூரியன் வெங்கட், நாகராஜ சோழன், வெறும்பய, வசந்த், பன்னிக்குட்டி ராமசாமி, அருண்பிரசாத், சிபி சார், நாஞ்சில் மனோ அண்ணா, தமிழ்வாசி பிரகாஷ், சௌந்தர், கருண், மதுரை தமிழன், நண்டு நொரண்டு, விக்கியண்ணா, ராஜா, கோவை நேரம் ஜீவா, திண்டுக்கல் தனபாலன் அண்ணா, கணேஷ் அண்ணா, மோகன் உமார் அண்ணா, மதுமதி, ரமணி ஐயா, சென்னைப்பித்தன் ஐயா! கோமதி அரசு, கூடல் பாலா, கண்ணதாசன், சக்கரை கட்டி, ராஜேஸ்வரி அம்மா, வெங்கட் நாகராஜ், கீதமஞ்சரி, விச்சு, சசி, அருணா, ரூபிகா, எழில், சங்கவின்னு பயணப்பட்டு, ஜீவன் சுப்பு, கோவை ஆவி, ரூபக் குமார் ராஜலட்சுமி பரமசிவம், டி.ஆர்.பி ஜோசப், வரை வந்து நிக்குது.
என் முதல் பதிவான தாயுமான சுவாமி கடவுள் படிச்சு பாருங்க. என்ன காரணம்ன்னு தெரியலை. தோழி ஆதிரையோட கருத்து காணோம். நான் போடுற மொக்கைகளுக்கு தவறாம வந்து போகும் அனைத்து சகோக்களுக்கும் கோடானு கோடி நன்றிகளை இந்த சமயத்துல சொல்லிக்குறேன்.
தொடர்பதிவுன்னா யாரையாவது அஞ்சு பேரை கோர்த்து விடனுமாம் இல்லாட்டி ரம்யா கிருஷ்ணன் சாரி பாதாள பைரவி நைட்டு கனவுல வந்து கண்ணை குத்திடுமாம். அதனால,
“கனவு மெய்ப்பட வேண்டும்” ரூபக்ராம்!











