Monday, September 27, 2010

குறுஞ்செய்தியில் ரசித்தது

"அபராதம்" என்பது
நாம் தவறாக நடந்துக் கொண்டதற்கு
விதிக்கப்படும் "வரி."

"வரி" என்பது,
நாம் சரியாக நடந்து கொண்டதற்கு
விதிக்கப்படும் "அபராதம் "

2. காக்கைக்கு தன் குஞ்சு
பொன்குஞ்சு என்றால்
எல்லா காக்கையும்
நகைக் கடைதானே வைக்கணும்?

3. வாழ்க்கையில் மரணமே
மிகப் பெரிய வலி இல்லை.
அதையும் தாண்டிய மிகப் பெரிய வலி..,
உங்களின் அன்புக்குரியோர்
நீங்கள் உயிருடன் இருக்கும்போதே
உங்களைவிட்டு பிரிந்து போவது.

4. பசங்களோட வாழ்க்கையை புரட்டிப் போடும்
சக்தி வாய்ந்த வார்த்தை..,

"மச்சி அவ உன்னை பார்க்குறாடா"

5. உலகிலேயே மிகவும் உணர்ச்சிகரத் தருணம்
நண்பன் பரிட்சை எழுத
நாம் அறைக்கு வெளியே நிற்கும் தருணம்.

"ஒருவேளை பாஸ் ஆயிடுவானோ"?

6. நீ பிறப்பதற்கு முன்பே
நான் துடிக்க ஆரம்பித்தேன்.
அதனால்தானோ என்னவோ..,
நீ இறப்பதற்கு முன்பே
நான் இறந்துவிடுகிறேன்.
இப்படிக்கு,
உன் இதயம்



1 comment: